Tuesday, August 2, 2016



ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம்
அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார்?
மாநிலங்களவையில் தபன்சென் ஆவேசம்
புதுதில்லி, ஆகஸ்ட் 3-
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம். அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் சிஐடியுவின் அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கேட்டார்.
ஊழியர்களின் வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை அவர்களுக்குத் தராமல் பங்குச்சந்தையில் ஈடுபடுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் செவ்வாய் அன்று கொண்டு வரப்பட்டது. அதில் பங்கேற்று தபன்சென் பேசியதாவது:
இந்தப் பிரச்சனை மிகவும் ஆழமான பிரச்சனையாகும். ஊழியர்களின் வருமான வைப்பு நிதிக்கு ஒன்றுமாற்றி ஒன்று என பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.
முதலில் இதற்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். பின்னர் இதில் தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். இது தொழிலாளர்களின் சொந்தப் பணம். இதை அவர்கள் திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?
அவர்கள் திரும்பப் பெறுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைத் விதித்தீர்கள். இவ்வாறு செய்வதற்கு யார் நீங்கள்? தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்தபின் அதைத் திரும்பப் பெற்றீர்கள்.
இவ்வாறெல்லால் செய்யாதீர்கள் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. ஆனால் அதன்பின் உங்களுக்குக் கேட்கக்கூடியவாறு, நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக்  கேட்க வைத்தார்கள்.
தொழிலாளர்கள் பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் கூறுவதற்கு அவர்கள் சொல்லத் தயங்குவதே இல்லை.
இப்போது அவர்களின் பணத்தை மிகவும் நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறீர்கள்அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்கு உங்கள் வாதம் என்ன? சிறந்த ஆதாயம் (நெவவநச சநவரசn) கிடைக்கும் என்பதாகும். இது விவாதத்திற்குரிய ஒன்றாகும். ஆனால் ஒரு விஷயம் விவாதத்திற்கு உரியது அல்ல.
மத்திய அறங்காவலர் குழு (கூh ஊநவேசயட க்ஷடியசன டிக கூசரளவநநள), தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒரே குரலில் உங்களிடம், “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று கூறியிருக்கிறார்கள். எவ்விதமான ஊசலாட்டமுமின்றி மிகவும் தெளிவான முறையில் அவர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின், ஏன் நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், தலையிடுகிறீர்கள்?
இது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன? ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லாமல் விட்டது என்னவெனில், முதல் பத்து மாதங்களில் உங்கள் நஷ்டம்  400 கோடி ரூபாய்க்கும் மேலாகும் என்பதாகும். நீங்கள் அதை இங்கே சொல்லாமல் இருக்கிறீர்கள். எப்படியோ நீங்கள் சமாளித்துக் கொள்கிறீர்கள்.
ஒரு விஷயத்திற்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். இதனை அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழிலாளர்களுக்குச் சொந்தமானதாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் கொடுபடா ஊதியமே (னநகநசசநன றயபந) ஆகும். கொடுபடா ஊதியமும் தொழிலாளர்களையே சாரும். அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ  கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம். தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்,’’ என்கிறார்கள்.
இதைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ ஊக சந்தையில்  முதலீடு செய்யுங்கள் என்கிற சிந்தனையை அவர்கள் மத்தியில் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது ஐந்து சதவீதமாக இருக்கிறது. ஆனால் இது பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும். ஆனாலும் ஐந்து சதவீதத்தைக்கூட  எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தயவுசெய்து இத்திட்டத்தை இப்போதே கைவிடுங்கள்.
உலக அனுபவம் என்ன சொல்கிறது?
தனி நபர் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்பது வேறு. அவர் லாபம் ஈட்டுவதையோ அல்லது நஷ்டம் அடைவதையோ புரிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் இதுபோன்று ஓய்வூதியம் மற்றும் பொதுப் பணத்தை இவ்வாறு ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான். இதுதான் உலக அனுபவமாமகும். நீங்கள் எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என்று எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்தப் பாருங்கள்
அந்த நாடுகளில் சமாளிக்கமுடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?
அவ்வாறு எவ்வித உத்தரவாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்?
தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் - அவர்கள் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்துள்ள தொகையுடன் - விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்.
சூதாட்டத்தின் மூலம் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. உங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது. அங்கே கவனம் செலுத்துங்கள். தொழிலாளர்களின் சொந்த சேமிப்புடன் விளையாடாதீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள்.
இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்நீங்கள் விரும்பும் மொழியில் அவர்கள் உங்களுக்கு இதனைப் புரிய வைப்பார்கள்.’’
இவ்வாறு தபன்சென் பேசினார்.
(.நி.)


   

No comments: