Saturday, April 24, 2010

ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் முழு வெற்றியாக்கிடுவோம்!-பிரகாஷ் காரத்




இடதுசாரிக் கட்சிகள் உட்பட 13 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் - அதா வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அஇஅதிமுக, பிஜூஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகியன - நாளும் ஏறும் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஏப்ரல் 27 அன்று நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. கடந்த ஆறு மாத காலமாக விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்து வரும் இயக்கத் தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக் கையாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட் டுக்கான தொகைகளை ஒதுக்குவதற் காகக் கொண்டுவரப்படும் நிதிச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டிய தருணத்தில் இவ்வாறான அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கையும் வருகிறது. இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் சமயத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் உர விலைகளை வரிகள் மூலம் உயர்த்தி இருப்பது தொடர் பாக அவற்றைத் திரும்பப் பெறக்கோரி வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வருவ தன் மூலம், இப் பதின்மூன்று எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கி ணைந்து செயல்படவும் தீர்மானித் திருக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே இவ் வாறு எதிர்க்கட்சிகளால் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மற்றும் யூரியா மற்றும் பல்வேறு உரங் களின் விலை உயர்வுகளையும் ரத்து செய் திட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத் தம் நடைபெறவிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 12 அன்று நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகர்களிலும் தலைநகர் தில்லியி லும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங் களை நடத்தின. தில்லியில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஏப்ரல் 8 அன்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறையேக வேண்டும். இதில் 25 லட்சத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இடதுசாரிகளின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் நடைபெற்ற இவ்வியக் கத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக் கள் மிகவும் ஆவேசத்துடன் கலந்து கொண்டு நாளும் ஏறிவரும் விலைவா சிக்கு எதிராகத் தங்கள் ஆவேசத்தை வன்மையுடன் காட்டிக் கைதானார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் விலைவாசி உயர் வுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்பு நடவ டிக்கைகளை பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நடத்தி வரு கின்றன.

ஆனால், விலைவாசி உயர்வால் மக் கள் மீது கடுமையாகச் சுமைகளை ஏற் றியுள்ள மத்திய ஐ.மு.கூட்டணி அரசாங் கம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மத்திய பட்ஜெட்டின் காரணமாக பெட் ரோல் - டீசல் விலைகளை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருப்பதிலிருந்தே, காங் கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இரக்கமற்ற கொடூரத் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசாங்கம் செய்ததெல்லாம், விலைவாசி உயர்வுக்கு எதிராக விவா திப்பதற்காக முதலமைச்சர்கள் கூட்டத் தைக் கூட்டியதுதான். அந்தக் கூட்ட மானது, விலைவாசியைக் கட்டுப்படுத்து வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள பத்து முதலமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவது என்று முடிவு செய்தது. இரண்டு மாதங்கள் கழித்து, ஏப்ரல் 8 அன்று, முதலமைச்சர்களின் குழு, பிரதமர் மற்றும் பல மத்திய அமைச் சர்களின் பங்கேற்புடன் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் உரைகள், விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எந்த அளவிற்கு சொரணையற்று இருக்கிறார்கள் என்ப தைக் காட்டின. இக்கூட்டத்திற்குப்பின் இது தொடர்பாக மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், உணவுப் பொருள்களின் விலைகள் சரிந்துள்ளன என்று அறிவித் தார். ஆயினும், இடதுசாரிக் கட்சிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய தினம்கூட, உணவுப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பான பணவீக்கத்தின் விவரங்கள் (டயவநளவ கபைரசநள கடிச கடிடின iகேடயவiடிn) அறிவிக் கப்பட்டன. அதன்படி, மார்ச் 27 அன்று முடிவடையும் வாரத்திற்கான உணவுப் பொருள்களின் பணவீக்கத்தின் அளவு 17.7 விழுக்காடாக - அதாவது அதன் முதல்வாரத்தின் அளவைக் காட்டிலும் 1 விழுக்காடு கூடுதலாக உயர்ந்திருந்தது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர் வைக் குறைத்திட நடவடிக்கைகள் மேற் கொள்ள பிடிவாதமாக மறுத்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது. உணவுப் பொருள்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய அது மறுக்கிறது. இந்திய உணவுக் கார்ப்பரே ஷன் கிடங்குகளில் இந்த ஆண்டு அமோக விளைச்சலின் காரணமாக எப்போதும் கொள்முதல் செய்யப்படும் 200 லட்சம் டன்களுக்குப் பதிலாக, 474.65 லட்சம் டன்கள் கொள்முதல் செய்திருந்தும், அதனை மக்களுக்கு விநியோகிக்க அரசு தயாராக இல்லை. அதுமட்டுமல்லாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறி, மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூடு தல் ஒதுக்கீடுகளை அரிசிக்கு கிலோ 15 ரூபாய் என்ற விலையில் அளிக்க முன்வந்திருக்கிறது. பொது விநியோக முறை மூலமாக இதனை விநியோகிக்க முடியாது என்று நன்கு தெரிந்தே மத்திய அரசு இவ்வாறு செய்திருக்கிறது.

மதச்சார்பற்ற கட்சிகள், நாடாளுமன் றத்தில் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வரவிருக்கும் முடிவைக் கேள்விப் பட்டபின், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த முறையிலேயே செயல் பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள், மதவெறி பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்ட தாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கள் மீது பாய்ந்திருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளு வார்கள் என்பது நிச்சயம். மக்களைப் பாதித்திருக்கக்கூடிய மிகவும் மோசமான ஒரு பிரச்சனை, விலைவாசி உயர்வாகும். பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக் கும் காரணமாகத் திகழும் அரசின் தவ றான கொள்கைகளை எதிர்க்கத் தவறி னால், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையிலி ருந்து தவறியவர்களாகிவிடுவார்கள். நாடாளுமன்றத்திற்குள், யார் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்து அதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. அரசாங்கம் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தியுள்ள வரிகளைத் திரும்பப் பெறப் போகிறதா, இல்லையா என்பது தான் பிரச்சனையாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்குள்ளே நடத்திடும் போராட்டம் என்பது அரசாங் கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக் கத்துடன் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறிக் கொள்கி றோம். ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத் துவதற்கும், அதன் படுபிற்போக்கான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வ தற்கும் நடத்தப்படும் அரசியல் போராட் டத்தின் ஒரு பகுதியே இது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள் கிறோம்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத் திடவும், பொது விநியோக முறையை வலுப்படுத்திடவும் அரசாங்கத்தை உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வலி யுறுத்திடவும், விலைவாசி உயர்வுக்கு எதி ரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவ தைத் தவிர வேறு வழியில்லை. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்து வதற்காகவும், உணவுப் பாதுகாப்பிற்காக வும் 2009 ஆகஸ்டில் இப்பிரச்சனை களுக்காக தேசிய அளவில் நடத்திய சிறப்பு மாநாட்டிலிருந்தே மிகவும் சுறு சுறுப்பாக இயக்கங்களை முன்னெடுத் துச் சென்றன. இதன் பின்னணியில்தான் மார்ச் 12 பேரணியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏப்ரல் 8 சிறைநிரப்பும் போராட்டமும் மகத்தான வகையில் வெற்றி பெற்றன.

இதேபோன்று வரும் ஏப்ரல் 27 அகில இந்திய பொது வேலைநிறுத்தமும் மகத் தான வெற்றி பெற்றிட, கட்சி அணியினர் முழுமையாகக் களத்தில் இறங்கிட வேண்டும். ஏப்ரல் 8 அன்று உருவாகி யுள்ள வேகம் கொஞ்சமும் குறையாது, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால், கட்சி மக் கள் மத்தியில் சென்று, பொது வேலை நிறுத்தத்திற்கான செய்தியை விளக்கிட வேண்டும். மற்ற இடதுசாரிக் கட்சிகளுட னும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு ஏப்ரல் 27 எதிர்ப் பியக்கத்தினை காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக ஓங்கி ஒலித்திடச் செய்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, April 22, 2010

தோழர் லெனின் வழிகாட்டும் துருவநட்சத்திரம் - பிரகாஷ்காரத்



2010 ஏப்ரல் 22 தோழர் லெனின் 140ஆவது பிறந்த தினமாகும். காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய தத்துவத்தை புரட்சித் தோழர் லெனின் மேலும் செழுமைப்படுத்தினார். தோழர் லெனின், உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனின் சிருஷ்டிகர்த்தா ஆவார்.

லெனின் வாழ்வையும் பணியையும் நாம் போற்றிப் பாராட்டிக் கொண்டாடும்போது, உலகின் முதல் சோசலிசப் புரட்சியை வழிநடத்திய மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் நாம் அதனைக் கொண்டாடவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்சுக்குப் பின், லெனின் அளவிற்கு வேறெவரும் மார்க்சிய சித்தாந்தத்திற்குப் பங்களிப்பினைச் செய்ததில்லை. தொழிலாளி வர்க்கஇயக்கம், தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி அறிவியல்பூர்வமாக சோசலிசத் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் லெனினது அனைத்துத் தத்துவார்த்தப்பணிகளும் அமைந்திருந்தன.
லெனின், 20ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் குணங்களைப் பகுப்பாய்ந்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித்தவத்தின் உச்சகட்டம் என்பதை லெனின் பறைசாற்றினார். முதலாளித்துவ முறை தொடர்பான மார்க்சின் ஆய்வுகளை லெனின் ஆக்கபூர்வமான முறையில் வளர்த்திட்டார். இன்றையதினம் இன்றைய ஏகாதிபத்தியம் குறித்தும் உலக முதலாளித்துவம் குறித்தும் ஆய்வு செய்திடும் எவரும், லெனினால் ஏகாதிபத்தியம் குறித்துப் பகுப்பாய்வு செய்து அளிக்கப்பட்டுள்ள ஆய்வினைத் தொடாது எதுவும் செய்திட முடியாது. லெனினிஸ்ட் ஆராய்ச்சிமுறையிலன்றி வேறெந்த விதத்திலும் இன்றைய தினம் முற்றியுள்ள உலக நிதி மூலதனம் மற்றும் அதன் உலகமயக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஏகாதிபத்தியம் தொடர்பான லெனினிஸ்ட் புரிந்துணர்வுதான், உலக முதலாளித்துவத்தை அதன் பலவீனமான கண்ணியில் உடைத்து நொறுக்கப்பட வேண்டும் என்பதையும் அதிலிருந்து ரஷ்யாவில் சோசலிஸ்ட் புரட்சிக்கான போர்த்தந்திரத்தையும் அதற்கான உத்திளையும் உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை கேந்திரமான பங்கினை வகித்திடும் என்றும் முடிவு கண்டார். இதற்கிணையான மற்றொரு லெனினிஸ்ட் புரிந்துணர்வு என்பது, தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகளை, உலகப் புரட்சியின் போர்த்தந்திரம் மற்றும் அதற்கான உத்திகளோடு இணைப்பது தொடர்பானதாகும். இது, இதற்கு முன் பிரபல்யமாயிருந்த ஐரோப்பிய மார்க்சிஸ்ட்டுகளின் புரிந்துணர்வுகளிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றாகும். காலனியாதிக்க நாடுகளில் நடைபெறும் தேச விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதையும், இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சக்திகள் சோசலிசத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளிகள்தான் என்றும் லெனின் தெளிவுபடுத்திக் காட்டினார். 20ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகள் காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைப் போராட்டங்களின் வெற்றிக்கு இட்டுச் சென்றதும், சீன, வியட்நாமிய, கொரிய மற்றும் கியூபா புரட்சிகளும் லெனினிஸ்ட் போர்த்தந்திரத்தை வெற்றிகரமாக ஏவியதன் மூலமாகக் கிடைத்திட்ட சாதனைகளேயாகும்.

லெனினது மற்றுமொரு முக்கிய பங்களிப்பு என்பது அரசு மற்றும் அதன் வர்க்கக் குணம் குறித்து லெனினது புரிந்துணர்வாகும். இதுதான் உலகிலிருந்த அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் தாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அடிப்படையாக மாறியிருந்தன. வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதாரப் பிரச்சனைகள் மீதான போராட்டம் மட்டுமல்ல, மாறாக சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் அரசு அதிகாரத்திற்கு சவால் விடுத்து அதனை வெற்றிகொள்வது என்பதுமாகும்.

லெனின், எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் ஸ்தாபனம் தொடர்பான புரட்சி விதிகளையும் வகுத்தளித்திருந்தார். தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் உருக்கு போன்று உருவாக்கி வழிநடத்திக் செல்லக்கூடிய வகையில் புதியதொரு பாணியில் ஒரு கட்சியைக் கட்டுவதற்கு லெனினிஸ்ட் பங்களிப்பு மகத்தானது. உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்த ஜனநாயக மத்தியத்துவக் கொள்கை, கடுமையான கட்டுப்பாடு, விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகியவை தொழிலாளர் வர்க்கத்திற்கு புது வகையான ஸ்தாபனத்தைக் கொடுத்தது. இது முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஸ்தாபன முறைகளுக்கு முற்றிலும் எதிரானது. பின்னர் புரட்சியை நடத்திய ஒவ்வொரு கட்சியும், புரட்சி இயக்கத்தை மேலும் வளர்த்து முன்னெடுத்துச் செல்ல, லெனினிய வடிவமும் கட்சி ஸ்தாபன அமைப்பு முறையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை என்பதை உணர்ந்தன. லெனினிய ஸ்தாபனக் கோட்பாடுகளை கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும், இடதுசாரி அமைப்புக்குள்ளேயே இருக்கின்ற மற்ற பகுதியினரும் கடுமையான முறையில் தாக்கினர். ஆனால், லெனின் ‘‘முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் உள்ள ஒரே ஆயுதம், அதன் ஸ்தாபனம்தான் என்பதை மிகவும் உறுதியாக உயர்த்திப்பிடித்தார். இந்தியாவிலும் பல்வேறுவிதமான சூழ்நிலைகளின்கீழ் கட்சியைக் கட்டிய நமது அனுபவமும் ஸ்தாபனம் தொடர்பான லெனினது கொள்கையை உறுதி செய்தது.

லெனின், 1917 புரட்சிக்குப்பின்னர் ஆறு ஆண்டுகள் மட்டுமே சோவியத் யூனியனின் தலைவராக வாழ்ந்தார். இக்காலத்தில், மிகவும் சுக்குநூறாக நொறுங்கிப்போயிருந்த பழைய சமூகத்திலிருந்து புதிய சமூகத்தை உருவாக்கும் பிரம்மாண்டமான பணியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். புரட்சிக்குப்பின் அவர் உயிருடன் இருந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள், நடைபெற்றுக்கொண்டிருந்த கசப்பான உள்நாட்டு யுத்தத்திலிருந்து நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. யுத்த காலத்திலிருந்து புதிய பொருளாதாரக் கொள்கை காலம் வரை, லெனின் சோசலிசத்தைக் கட்டுவதற்கான ஒரே குறிக்கோளுடன் கொள்கைகளைத் தொடர்ந்து மாற்றி, சரி செய்து கொண்டிருந்தார். லெனின், சோசலிசத்திற்கான பாதை மிகவும்நீண்ட நெடிய ஒன்று என்பதையும் மிகவும் கடினமான ஒன்று என்பதையும் நன்கு அறிந்திருந்தார்.

‘‘மிகவும் நெளிவுசுழிவுகளுடன் கூடிய வரலாற்றைக் கொண்டுள்ள மிகவும் பிற்பட்ட ஒரு நாட்டில், பழைய முதலாளித்துவ உறவுகளிலிருந்து, சோசலிச உறவுகளுக்கு மாறிச் செல்வதென்பது, மிகவும் கடினமான ஒன்று என்பதை நிரூபித்தது,’’
என்று லெனின் கூறினார்.

லெனின் மேலும் சில காலம் வாழ்ந்திருந்தாரானால், சோவியத் யூனியன் சோசலிசத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கும் என்று இப்போது ஊகம் செய்து பார்ப்பது வீண் என்ற போதிலும், ஒரு வளர்ச்சியடையாத பின் தங்கிய நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கான பாதையை லெனின் எப்படி ஏற்படுத்தித் தந்தார் என்பது குறித்த படிப்பினைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

லெனின் மறைந்தபின் சுமார் எழுபதாண்டுகள் கழித்து, சோவியத் யூனியன் சிதறுண்டது. அதன்பிறகு, கடந்த இருபதாண்டுகளில், வரலாறு திருப்பி எழுதப்பட வேண்டியிருந்தது. லெனினிசத்தின் புரட்சிகர உள்ளடக்கம் முழுமையாக மறுதலிக்கப்பட்டது. லெனினின் தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்று அதுநாள்வரை கூறி வந்த முதலாளித்துவ விமர்சகர்களில் ஒரு பிரிவினர், இப்போது மேலும் ஒருபடி சென்று, அது ரஷ்யாவிலும் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அனைத்து விதமான முதலாளித்துவ தத்துவவாதிகள் மற்றும் சிந்தனாவாதிகள் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பதையே மறுக்கிறார்கள். இவர்களில் சிலர் தாராளமயமான முதலாளித்துவம் என்பது அழியாதது என்று கூட வாதிடுகிறார்கள். மார்க்சிசம் என்பதும் லெனினிசம் என்பதும் அவர்கள் காலத்திய உற்பத்திப் பொருள்கள் என்றும், பின்நவீனத்துவ உலகில் அவை அர்த்தமற்றதாகிப் போய்விட்டன என்றும் கூறுகின்றனர்.

வரலாறு முடிந்துவிட்டது என்கிற இவ்வாறான இவர்களின் பசப்புரையும், முதலாளித்துவமே சாசுவதமானது என்ற இவர்களது களியாட்டமும் திடீரென்று முடிவுற்று விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் ஒருமுறை முதலாளித்துவத்தின் குணத்தையும் அதன் கொள்ளையடிக்கும் குணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இப் பூமண்டலத்தில் உள்ள எழுநூறு கோடி மக்களில் பாதி ஏழைகள், 102 கோடி மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பவர்கள். ஏகாதிபத்தியம் தன்னுடைய யுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் இப்பூமண்டலத்தில் உள்ள வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமானால், பூமியின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விடும்.

மார்க்சிசம் ஒன்றுதான் விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருப்பதும், இன்றைய தினம் உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைமைகளைப் போக்கி, முரண்பாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான செயலுக்கான வழிகாட்டியுமாகும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்துத் தந்த தத்துவம் மற்றும் நடைமுறையை லெனின் மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தியதைப்போல, இன்றையதினம் லெனின் வகுத்துத் தந்த அடிப்படையில் மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் மேலும் வளப்படுத்தி விரிவாக்கிட வேண்டும். மார்க்சியம் ஒரு செயலற்ற வறட்டுத் தத்துவமல்ல என்று லெனினே சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனை மேலும் செழுமைப்படுத்தி, வளப்படுத்துவது இன்றைய தேவையாகும்.

‘‘மார்க்சியத் தத்துவமானது நிரந்தரமானது மற்றும் எந்தக்காலத்தும் மாறாத ஒன்று என்று நிச்சயமாக நாம் கருதவில்லை. மாறாக, அது அறிவியலுக்கான அடித்தளத்தைப் போட்டுத் தந்திருக்கிறது என்பதிலும், அதன் மீது நின்று சோசலிஸ்ட்டுகள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதிலும் நாம் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.’’

மார்க்சியத்தை மேலும் வளப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் நம் முயற்சிகள் அனைத்திற்கும், லெனின் துருவநட்சத்திரமாக இருந்து நமக்கு என்றென்றும் வழிகாட்டுவார்.

(தமிழில்: ச.வீரமணி)

Monday, April 19, 2010

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும்பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்-நாடாளுமன்றத்தில் பி.ஆர். நடராஜ

புதுதில்லி, ஏப். 19-
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 2010 ஏப்ரல் 20இலிருந்து நாடு தழுவிய அளவில் கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே. ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று. அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து. மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு. பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் நிறுவனமானது, மத்திய அரசிங்ன டெலிகாம் சர்வீசஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டின் ‘நம்பர் ஒன் டெலிகாம் கம்பெனி’யாக அதனை விரிவுபடுத்தினர். இது 2006 வரையிலும் தொடர்ந்தது. இப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4.5 கோடி மொபைல் லைன்களைத் தரப்படாததால், மொபைல் லைன்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மொபைல் லைன்களை அதனால் தர இயலவில்லை. இதனால் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் விரிவாக்கமும், வருமானமும் கணிசமாகக் குறைந்தது. 2008-09இல் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதுநாள் வரையிலும் தக்கவைத்திருந்த முதல் நிலையை இழந்துவிட்டது. மொபைல் லைன்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டித் தந்த பிஎஸ்என்எல் நிறுவனம், 2008-09இல் வெறும் 574 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

அரசுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தந்த பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு அதன் பழைய நிலையை மீட்டுத்தர, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசு, பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. மத்திய அரசின் விருப்பத்தற்கேற்ப இக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 30 விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை சுய ஓய்வு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிடவேண்டும் என்றும் கேபிள்கள் அமைக்கும் பணியை அவுட்சோர்சிஸ் முறையில் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரானவைகளாகும். மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட இழிவான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 ஏப்ரல் 20இலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. கோரிக்கைகளை ஆராயும் எவரும் ஊழியர்கள் தங்களை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாதுகாத்திடவும், அதனை விரிவுபடுத்திடவுமே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், பிஎஸ்என்எல் ஊழியர்களையும் பாதுகாத்திட மத்திய அரசாங்கம் போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

Thursday, April 15, 2010

ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் - முழு வெற்றியாக்கிடுவோம் : பிரகாஷ் காரத்

இடதுசாரிக் கட்சிகள் உட்பட 13 மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் - அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அஇஅதிமுக, பிஜூஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதிக் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகியன - நாளும் ஏறும் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஏப்ரல் 27 அன்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. கடந்த ஆறு மாத காலமாக விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்து வரும் இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட்டுக்கான தொகைகளை ஒதுக்குவதற்காகக் கொண்டுவரப்படும் நிதிச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டிய தருணத்தில் இவ்வாறான அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கையும் வருகிறது. இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் சமயத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் உர விலைகளை வரிகள் மூலம் உயர்த்தி இருப்பது தொடர்பாக அவற்றைத் திரும்பப் பெறக்கோரி வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வருவதன் மூலம், இப் பதின்மூன்று எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படவும் தீர்மானித்திருக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே இவ்வாறு எதிர்க்கட்சிகளால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மற்றும் யூரியா மற்றும் பல்வேறு உரங்களின் விலை உயர்வுகளையும் ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறவிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகள் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 12 அன்று நாடு முழுதும் மாவட்ட, வட்டத் தலைநகர்களிலும் தலைநகர் தில்லியிலும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தில்லியில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஏப்ரல் 8 அன்று நாடு முழுதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறையேக வேண்டும் இதில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இடதுசாரிகளின் அறைகூவலை ஏற்று நாடு முழுதும் நடைபெற்ற இவ்வியக்கத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் ஆவேசத்துடன் கலந்துகொண்டு நாளும் ஏறிவரும் விலைவாசிக்கு எதிராகத் தங்கள் ஆவேசத்தை வன்மையுடன் காட்டிக் கைதானார்கள். மற்ற எதிர்க்கட்சிகளும் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நடத்தி வருகின்றன.

ஆனால், விலைவாசி உயர்வால் மக்கள் மீது கடுமையாகச் சுமைகளை ஏற்றியுள்ள மத்திய ஐமுகூ அரசாங்கம் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மத்திய பட்ஜெட்டின் காரணமாக பெட்ரோல் - டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருப்பதிலிருந்தே, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இரக்கமற்ற கொடூரத் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசாங்கம் செய்ததெல்லாம், விலைவாசி உயர்வுக்கு எதிராக விவாதிப்பற்காக முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டியதுதான். அந்தக் கூட்டமானது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள பத்து முதலமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவது என்று முடிவு செய்தது. இரண்டு மாதங்கள் கழித்து, ஏப்ரல் 8 அன்று, முதலமைச்சர்களின் குழு பிரதமர் மற்றும் பல மத்திய அமைச்சர்களின் பங்கேற்புடன் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் உரைகள் விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எந்த அளவிற்கு சொரணையற்று இருக்கிறார்கள் என்பதைக் காட்டின. இக்கூட்டத்திற்குப்பின் இது தொடர்பாக மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், உணவுப் பொருள்களின் விலைகள் சரிந்துள்ளன என்று அறிவித்தார். ஆயினும், இடதுசாரிக் கட்சிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய தினம்கூட, உணவுப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பான பணவீக்கத்தின் விவரங்கள் (டயவநளவ கபைரசநள கடிச கடிடின iகேடயவiடிn) அறிவிக்கப்பட்டன. அதன்படி, மார்ச் 27 அன்று முடிவடையும் வாரத்திற்கான உணவுப் பொருள்களின் பணவீக்கத்தின் அளவு 17.7 விழுக்காடாக - அதாவது அதன் முதல்வாரத்தின் அளவைக் காட்டிலும் 1 விழுக்காடு கூடுதலாக உயர்ந்திருந்தது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர்வைக் குறைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள பிடிவாதமாக மறுத்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது. உணவுப் பொருள்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய அது மறுக்கிறது. இந்திய உணவுக் கார்பரேஷன் கிடங்குகளில் இந்த ஆண்டு அமோக விளைச்சலின் காரணமாக எப்போதும் கொள்முதல் செய்யப்படும் 200 லட்சம் டன்களுக்குப் பதிலாக, 474.65 லட்சம் டன்கள் கொள்முதல் செய்திருந்தும், அதனை மக்களுக்கு விநியோகிக்க அரசு தயாராக இல்லை. அதுமட்டுமல்லாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறி, மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூடுதல் ஒதுக்கிடுகளை அரிசிக்கு கிலோ 15 ரூபாய் என்ற விலையில் அளிக்க முன்வந்திருக்கிறது. பொது விநியோக முறை மூலமாக இதனை விநியோகிக்க முடியாது என்று நன்கு தெரிந்தே மத்திய அரசு இவ்வாறு செய்திருக்கிறது.

மதச்சார்பற்ற கட்சிகள், நாடாளுமன்றத்தில் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டுவரவிருக்கும் முடிவைக் கேள்விப்பட்டபின், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த முறையிலேயே செயல் பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள், மதவெறி பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்திருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பது நிச்சயம். மக்களைப் பாதித்திருக்கக்கூடிய மிகவும் மோசமான ஒரு பிரச்சனை, விலைவாசி உயர்வாகும். பணவீக்கததிற்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணமாகத் திகழும் அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கத் தவறினால், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையிலிருந்து தவறியவர்களாகிவிடுவார்கள்.
நாடாளுமன்றத்திற்குள், யார் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டு வந்து அதற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை. அரசாங்கம் பெட்ரோல், டீசல் மீது உயர்த்தியுள்ள வரிகளைத் திரும்பப் பெறப் போகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சனையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்குள்ளே நடத்திடும் போராட்டம் என்பது அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம். ஆளுங்கட்சியைத் தனிமைப்படுத்துவதற்கும், அதன் படுபிற்போக்கான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் நடத்தப்படும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியே இது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும், பொது விநியோக முறையை வலுப்படுத்திடவும் அரசாங்கத்தை உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கோரி வலியுறுத்திடவும், விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதற்காகவும், உணவுப் பாதுகாப்பிற்காகவும் 2009 ஆகஸ்ட்டில் இப்பிரச்சனைகளுக்காக தேசிய அளவில் நடத்திய சிறப்பு மாநாட்டிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றன. இதன் பின்னணியில்தான் மார்ச் 12 பேரணியும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏப்ரல் 8 சிறைநிரப்பும் போராட்டமும் மகத்தான வகையில் வெற்றி பெற்றன.
இதேபோன்று வரும் ஏப்ரல் 27 அகில இந்திய பொது வேலைநிறுத்தமும் மகத்தான வெற்றி பெற்றிட, கட்சி அணியினர் முழுமையாகக் களத்தில் இறங்கிட வேண்டும். ஏப்ரல் 8 அன்று உருவாகியுள்ள வேகம் கொஞ்சமும் குறையாது, முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால், கட்சி மக்கள் மத்தியில் சென்று, பொது வேலைநிறுத்தத்திற்கான செய்தியை விளக்கிட வேண்டும். மற்ற இடதுசாரிக் கட்சிகளுடனும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு ஏப்ரல் 27 எதிர்ப்பியக்கத்தினை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக ஓங்கி ஒலித்திடச் செய்திட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, April 14, 2010

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஏன் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்?

-வி.ஏ.என். நம்பூதிரி,
பொதுச் செயலாளர்,
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 2010 ஏப்ரல் 20இலிருந்து நாடு தழுவிய அளவில் கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்கள். 2010 மார்ச் 26 அன்று நடைபெற்ற ஒருநாள் தர்ணா போராட்டம் கோரிக்கைகள் குறித்த கவனத்தை பொது மக்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் வெற்றிகரமாக வெளிப்படுத்தியது.
கோரிக்கைகள் என்ன?

2010 மார்ச் 23 அன்று பிஎஸ்என்எல் நிரிவாகத்திற்கு, கூட்டமைப்பால் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேலைநிறுத்த அறிவிப்பைக் கண்ணுறும் எவரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து ஜீவித்திருப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும் அவை எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர முடியும்.
(1) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
(2) ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே.
(3) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று.
(4) அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.
(5) டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து.
(6) மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு.
(7) பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்.
பின்னணி
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் நிறுவனமானது, மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக, நாளடைவில் தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசிங்ன டெலிகாம் சர்வீசஸ் துறையிலிருந்து தனியே உருவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தாலும், பன்னாட்டு நிதி நிறுவனங்களாலும், பல்வேறு தனியார் கம்பெனிகளாலும் பல்வேறுவிதமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோதிலும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவை அத்தனையையும் முறியடித்து, நாட்டின் ‘நம்பர் ஒன் டெலிகாம் கம்பெனி’யாக அதனை விரிவுபடுத்தினர். இது 2006 வரையிலும் தொடர்ந்தது. இதனை பிற்போக்கு சக்திகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மத்திய அரசாங்கமும், தனியார் டெலிகாம் கம்பெனிகளும் சேர்ந்து பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4.5 கோடி மொபைல் லைன்களைத் தராமல் முடக்கினர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னிடம் மொபைல் லைன்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மொபைல் லைன்களைத் தர இயலவில்லை. இதனால் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் விரிவாக்கமும், வருமானமும் கணிசமாகக் குறைந்தது. 2008-09இல் முதன்முதலாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதுநாள் வரையிலும் தக்கவைத்திருந்த முதல் நிலையை இழந்துவிட்டது. மொபைல் லைன்களில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டித் தந்த பிஎஸ்என்எல் நிறுவனம், 2008-09இல் வெறும் 574 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

அரசுக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தந்த பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு அதன் பழைய நிலையை மீட்டுத்தர, தேவைமயான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அரசு, பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. டெலிகாம் துறையின் செயலர் பி.ஜே. தாமஸ் மற்றும் எச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் ஆகிய இருவரும் இக்குழுவின் இதர உறுப்பினர்கள்.

மத்திய அரசின் விருப்பத்தற்கேற்ப இக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 30 விழுக்காடு தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை சுய ஓய்வு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிடவேண்டும் என்றும் கேபிள்கள் அமைக்கும் பணியை அவுட்சோர்சிஸ் முறையில் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரானவைகளாகும். மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட இழிவான நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளாகும்.

இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 ஏப்ரல் 20இலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. கோரிக்கைகளை ஆராயும் எவரும் ஊழியர்கள் தங்களை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் பாதுகாத்திடவும், அதனை விரிவுபடுத்திடவுமே இவ்வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

(1) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.
சாம் பிட்ரோடா குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடப் பரிந்துரைத்திருப்பது தேவையற்ற ஒன்று. இது பொதுத்துறை மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு விரோதமான ஒன்று. இது அரசின் நவீன தாராளமய ஊழியர் விரோதக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையே தவிர வேறல்ல. இவ்வாறு பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதால் தேவையான நிதி கிடைத்திடும் என்று கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை. ஏனெனில் தற்போதுள்ள நிலைமையிலேயே பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்குச் சொந்தமான 35 ஆயிரம் கோடி ரூபாய்களை பல்வேறு வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறது. மேலும், இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் வரும் பணமானது நேரடியாக அரசாங்கத்திற்குத்தான் செல்லப்போகிறதேயொழிய, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வரப்போவதில்லை. 2006 ஜனவரியில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சார்பில் ‘‘பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது அல்லது அதன் பங்குகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட மாட்டாது’’ என்று எழுத்து பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. அரசாங்கம் இவ்வாறு ஊழியர்களுக்கு எழுத்து மூலமாக அளித்திட்ட உறுதிமொழியினை நேர்மையுடன் அமல்படுத்திட முன்வர வேண்டும். பொதுச் சொத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் இழி நடவடிக்கைகளில் இறங்கிடக் கூடாது.

2.ஊழியர்கள்/அதிகாரிகளைக் குறைக்காதே, எவரையும் சுய ஓய்வு என்று பெயரைக் கூறி வெளியேற நிர்ப்பந்திக்காதே.
சாம் பிட்ரோட குழுவானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றுவோரில் ஒரு லட்சம் பேரை வீட்டிற்கு அனுப்பிடக்கூடிய முறையில் சுய ஓய்வுத் திட்டத்தை (ஏசுளு-ஏடிடரவேயசல சுநவசைநஅநவே ளுஉhநஅந) அமல்படுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. தன் பரிந்துரையை நியாயப்படுத்துவதற்காக இக்குழு, பார்தி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களில் 35 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. ஆனால் இக்குழுவானது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இவ்வாறு ஊழியர்கள் இருந்து வருவதற்கான வரலாற்றுக் காரணங்களை அது வசதியாக மறந்துவிட்டது. தற்போதுள்ள தொழில்நுட்ப மாற்றத்தை மட்டும் அது குறிப்பிடுகிறது. நாட்டின் லட்சக்கணக்கான கிராமங்களை இணைக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையையும் அது மறந்துவிட்டது. மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் ஊழியர்கள் இயல்பாக ஓய்வு பெறுவார்கள் என்பதையும் அது மறந்துவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் வனப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும், ஆறுகள் மற்றும் பாலைவனங்கள் என மிகக் கடினமான அனைத்துப் பகுதிகளிலும் டெலிபோன் லைன்களை நிறுவியது இத்தகைய ஊழியர்கள்தான் என்பதையும் இக்குழு வசதியாக மறந்துவிட்டது. வெகு காலம் தற்காலிக ஊழியர்களாக இருந்தபின்னர்தான் இத்தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டார்கள். பல்வேறு சிரமங்களுக்கிடையே சகதிகளிலும், சேறுகளிலும் நின்று கேபிள்களைப் போட்ட ஊழியர்கள் இவர்கள். அக்கேபிள்களில் ஏதேனும் குறைகள் வரும்போது மீண்டும் அவற்றை அதேமாதிரி சிரமத்திற்கிடையே சென்று பணியாற்றி சரி செய்பவர்கள். அத்தகைய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திடவோ, பணியிறக்கம் செய்திடவோ எந்த ஒரு அரசின் குழுவிற்கும், எந்த ஒரு நிர்வாகத்திற்கும் சட்டரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ உரிமை கிடையாது. தாஸ்மகாலை உருவாக்கிய வல்லுனர்களைக் கொன்ற மன்னன் ஷாஜகான் போன்று இவர்கள் நடந்திட முடியாது.

அரசாங்கமும் நிர்வாகமும் இதற்கு முன்பும் இருமுறை - 2005இலும் 2008இலும், முறையே 50 ஆயிரம் ஊழியர்களையும் 20 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பிட - முயற்சித்தது. ஆனால் அவ்விருமுறையும் ஊழியர்கள் தங்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக அவற்றை முறியடித்தார்கள். இப்போதும் அரசின் இத்தகைய தாக்குதலை வெற்றிபெற அனுமதித்திட மாட்டார்கள்.

எந்த ஒரு அமைப்புக்கும் அதன் ஊழியர்கள் அதன் சொத்துக்களாவார்கள். தன் ஊழியர்களைத் திறம்படவும் இலாபகரமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அதன் நிர்வாகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். பிஎஸ்என்எல் சங்கங்கள் இது தொடர்பாக எண்ணற்ற யோசனைகளை நிர்வாகத்திற்கு அளித்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றைப் பரிசீலித்திட நிர்வாகம் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் குறியெல்லாம் ஊழியர்களை எப்படிக் குறைப்பது என்பதுதான்.

(3) பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவைமயான கட்டமைப்பு வசதிகளை மேலும் காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்று.
கட்டமைப்பு வசதிகளுக்கான ஒயர்களை பிரதான கேபிள்களுடன் இணைப்பது என்பது மிகவும் முக்கியமான பணியாகும். இதன்மூலம்தான் வாடிக்கையாளர்களுக்குத் தேவைமயான பிராண்ட்பாண்ட் இணைய வசதிகளை அளித்திட முடியும். பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கான காப்பர் ஒயர்களைப் பெற்றிருக்கிறது. வேறெந்தத் தனியார் கம்பெனிகளுக்கும் இத்தகைய வசதிகள் கிடையாது. இந்தத் தனியார் கம்பெனிகள், பிஎஸ்என்எல்/எம்டிஎன்ல் நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த காப்பர் ஒயர்களைத் தங்களுக்குப் பகிர்ந்தளித்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வருகின்றன.

பிஎஸ்என்எல் அமைப்புக்குச் சொந்தமான இத்தகைய கட்டமைப்பு வசதிகளைத் தனியார் கம்பெனிகளுக்குஒருபோதும் அனுமதியோம். இவ்வாறு அளித்திட்டோமானால், அது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேரழிவினை ஏற்படுத்திடும்.

(4) அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலைகளை தனியாரிடம் கொடுத்து வாங்காதே.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் மிகவும் திறமையான தொழில்நுட்ப ஊழியர்கள் இருந்தபோதிலும், நிர்வாகம் பல பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் கொடுத்து செய்து வருகிறது. இப்போது பிட்ரோடா குழு இதனைக் கடுமையாக அமல்படுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. புதிய நிலைமைகளுக்கேற்ப ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம்தான் பணிகளைச் செய்திட வேண்டுமேயொழிய, இவ்வாறு அவுட்சோர்சிங் முறையில் வேலைகளைத் தனியாரிடம் தாரை வார்ப்பதல்ல.

(5) டெலிகாம் துறையிலிருந்து வந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்குமான பணிநிலைமைகளை முறைப்படுத்து.
மத்திய அரசின் டெலிகாம் துறை ஊழியர்களைக் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 2000 அக்டோபர்1 அன்று உருவானது. ஒருசிலரைத் தவிர பெரும்பகுதி அதிகாரிகளும், ஊழியர்களும் விருப்பம் அளித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆனால், இந்தியன் டெலிகாம் சர்வீசஸ்-ஐச் சேர்ந்த குரூப் ‘ஏ’ அதிகாரிகள் சுமார் 1500 பேர் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல், ‘டெபுடேசன் அடிப்படையில்’ பணியாற்றி வந்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாமல் நீடிக்கிறது.

ஐடிஎஸ் அதிகாரிகள் என்போர் பிஎஸ்என்ல் நிர்வாகத்தின் டிஜிஎம், ஜிஎம், சிஜிஎம் போன்ற உயர்மட்ட அதிகாரிகளாவார்கள். இவர்கள்தான் நிறுவனத்தை விரிவாக்கிடவும், வளர்த்திடவும் திட்டமிடுபவர்கள். அவற்றை அமல்படுத்திட உத்தரவாதப்படுத்துபவர்கள். ஆனால் அவர்கள் சொந்தப் பிரச்சனை தீர்க்கப்படாதிருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சியையை கடுமையாகப் பாதிக்கிறது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாகமும் டெலிகாம் துறையும் எண்ணற்ற தடவைகள் வாக்குறுதிகள் அள்ளிவீசியுள்ள போதிலும் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. 2009 டிசம்பர் 31க்கு முன் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதியாக உறுதிமொழி கூறப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறாதது மட்டுமல்ல, நிலைமைகள் மேலும் மோசமாகியுள்ளன.
இப்பிரச்சனை மேலும் காலதாமதம் எதுவும் செய்யப்படாமல் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். பிஎஸ்என்எல் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித்ர திட்டம் வலுவான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

(6) மொபைல் லைன்களை உடனடியாகக் கொள்முதல் செய்திடு.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மொபைல் லைன்கள்அளிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசாங்கம் ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி இதனைச் செய்ய மறுக்கிறது. தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு 20 லட்சம் மொபைன் லைன்களுக்கு மேல் அளித்திடும் அதே சமயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பத்து லட்சம் இணைப்புகள் கூட அளிக்கத் தயாரில்லை. இதன்விளைவாக வணிக ரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவையான மொபைல் லைன்களை போதுமான அளவில் அளித்திட அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அதன்மூலம் நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்திட வேண்டும் என்றும் கோருகிறோம். இல்லையெனில் நிறுவனத்தின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாததாகிவிடும்.

(7) பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோருக்கு, ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்.
பிஎஸ்என்எல் கார்பரேஷன் உருவான சமயத்தில், அதன் ஊழியர்களுக்கு மத்திய அரசின் டெலிகாம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டடிது. அதன்படி பிஎஸ்என்எல் இலிருந்து ஓய்வு பெற்றோர் ஓய்வூதியம் பெற்று வந்தார்கள்.

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியத்தை 1.1.2006 முதல் மாற்றி அமைத்திருக்கிறது. ஊழியர்களும் அத்தேதியிலிருந்து நிலுவைத் தொகைகளைப் பெற்றிருகிகிறார்கள். பிஎஸ்என்எல்-இல் பணிபுரியும் அதிகாரிகள் 1.1.2007இலிருந்து திருத்தப்பட்ட ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள். ஊழியர்களுக்கும் ஊதியம் அத்தேதியிலிருந்து திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியம் மட்டும் திருத்தப்படவில்லை. இது மாபெரும் அநீதியாகும். இது சரிசெய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. மூன்று லட்சம் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுரு வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது. போட்டி என்ற பெயரில் தனியார் துறையையும் பன்னாட்டு நிறுவனங்களையும் கொழுக்க வைத்திடவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழித்திடவும் அரசுக்கோ அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கோ எவ்வித உரிமையும் கிடையாது.

நாட்டின் நலனையும் நாட்டு மக்களின் நலனையும் நம் ஊழியர்களின் நலனையும் பாதுகாத்திட நாம் கடுமையாகப் போராட வேண்டிய தருணம் இது. இவ்வுயரிய குறிக்கோளுடன், பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் ஏப்ரல் 20 அன்று களம் இறங்குகிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திட மக்களின் முழு ஆதரவினையும் கோருகிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, April 1, 2010

கட்டைப்பஞ்சாயத்துக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:
அர்யானா மாநிலம், கர்னால் அமர்வு நீதிமன்றம், ‘‘கருணைக் கொலை’’ என்ற பெயரில் கட்டைப் பஞ்சாயத்து நடத்தி, இளம் ஜோடிகளை மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொன்ற ஐவருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் அளித்துத் தீர்ப்பளித்திருப்பதானது, அர்யானா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆழமான முதல் நடவடிக்கையாகும். 2007 ஜூனில் திருமணம் செய்து கொண்ட மனோஜ் மற்றும் பாப்லி என்னும் இரு இளம் ஜோடிகள் மிகவும் கொடூரமான முறையில் கொலையுண்ட வழக்கில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் மூலம் வந்துள்ள இந்நடவடிக்கையானது, பத்தாம்பசலித்தனமான சமூகப் பழக்க வழக்கங்களையும் சாதிய நடைமுறைகளையும் உதறித் தள்ளும் இளம் தம்பதியினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொலைபாதக மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட, அர்யானா மாநில அரசாங்கத்தையும் அதன் நிர்வாகத்தையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டிடும் என நம்புவோம். இத்தகைய ‘கருணைக் கொலைகள்’ அர்யானா மாநிலத்திற்குள் மட்டும் நடைபெறவில்லை. மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு பரிமானங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சாதிய ரீதியாக நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துக்கள் இளம் தம்பதிகளை அவர்கள் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொண்டால், அத் திருமணம் சகோதரர்களுக்கிடையே நடைபெற்றதாகக் கருதி, அவர்கள் சமூகக் கட்டமைப்பை மீறி விட்டார்கள் என்று கூறி அவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றன. இத்தகைய திருமணங்கள் தலித் மற்றும் உயர்சாதியினருக்கிடையே எனில், இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்கள் அளித்திடும் தண்டனைகள் மேலும் கொடூரமான முறையில் அமைகின்றன. இத்தகைய ‘கருணைக் கொலைகளை’ ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் மேற்கொள்வதில்லை. இந்து - முஸ்லீம் இடையிலான திருமணம் கூட மிகவும் கொடூரமான முறையில் எதிர்கொள்ளப்பட்டதை, 2007 ஜூலையில் மீரட் நகரில், அஃப்சனா என்னும் முஸ்லீம் பெண், மனோஜ் என்னும் இந்து ஆணைத் திருமணம் செய்த வழக்கில் பார்த்தோம். அவர்கள் இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் கொன்று போட்டனர்.

சாதிவெறி மற்றும் மதவெறியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், பெண்கள் குறித்த மோசமான அணுகுமுறையின் விளைவாகவே நடைபெறு கின்றன. பெண்கள், குடும்பத்தில், சாதியில் மற்றும் இனத்தில் வெறும் சொத்துக் களாகவே பார்க்கப்படுகிறார்கள். பெண்களுக்குத் தங்கள் உடம்பு குறித்து அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்களின் ‘‘புனிதம்’’ (உhயளவவைல) என்பது அப் பெண் பிறந்த இனத்தின் ‘‘கௌரவம்’’ (“hடிnடிரச”)ஆகக் கருதப்படுகிறது. இத்தகைய தந்தை வழிச் சமுதாய, மகளிர் விரோத கண்ணோட்டமானது குடியரசு இந்தியாவில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், அனைத்து மாண்புகளுக்கும் எதிரானதாகும்.
இத்தகைய நிலப்பிரபுத்துவ கண்ணோட்டமும், காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளும் நாட்டின் தலைநகரின் ஒருசில கிலோ மீட்டர் தூரத்திலேயே இன்னமும் தொடர்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சியோ, அதன் விளைவாக கிராமப்புறங்களில் பணக்காரர்கள் அதிகமாகியுள்ளதோ இத்தகைய சாதி வெறியர்களின் கட்டைப் பஞ்சாயத்துக் களின் செல்வாக்கைக் குறைத்திட வில்லை. காவல்துறையும், நிர்வாகமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும்கூட உடந்தையாக இருந்து இவர்களின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். அர்யானாவில் பிரதான கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக் தளமும் கட்டைப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராக நிலைப்பாட்டினை எடுக்க மறுத்து வருகின்றன. ஏனெனில் ஆதிக்க சாதியினரைப் பகைத்துக்கொள்ள அவை விரும்பவில்லை.
இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்கள் சட்டவிரோதமானவை என்று அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என்றும், இவ்வாறு ‘‘கருணைக் கொலைகள்’’ (hடிnடிரச மடைடiபேள) புரிவோர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மீது மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்திட வில்லை. சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ‘‘கருணைக் கொலைகளுக்கு’’ எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித் திருக்கிறார். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
கட்டைப் பஞ்சாயத்துக்களின் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அர்யானா மாநிலப் பிரிவு மிகவும் துணிச்சலுடன் போராட்டங்ளை மேற்கொண்டது. மனோஜ் மற்றும் பாப்லி கொல்லப்பட்ட சம்பவங்கள் மீது உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அக்குடும்பத்தினருடன் இணைந்து மாதர் சங்கம் தொடர்ந்து போராடியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்யானா மாநிலப் பிரிவும் மற்ற கட்சிகள் போல் ஒதுங்கி நின்று விடாது, கட்டைப் பஞ்சாயத்துக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியுடன் நின்றது.

இத்தகைய கட்டைப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராகவும், ‘‘கருணைக் கொலைகளுக்கு’’ எதிராகவும் உரிய சட்டம் இயற்றவேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் கட்டைப் பஞ்சாயத்துக்களைச் சட்டவிரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் கோர வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான மற்றும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தங்கள் விருப்பம்போல் திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகளின் உரிமைகளைப் பாதுகாத்திட அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக்களின் கொடுங்கோன்மை செயல்பாடுகள், படுபிற்போக்குத்தனமான, மகளிர் விரோத சமூகப் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் இத்தகைய சமூக இழிவுகளுக்கு எதிராக மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பும் விதத்தில் விடாது பிரச்சாரம் செய்திட முன்வர வேண்டியது அவற்றின் கடமையாகும்.

(தமிழில்: ச. வீரமணி)