Tuesday, November 30, 2010

குறைந்தபட்ச ஊதியம் ரூ.200 வழங்கு-விவசாயத் தொழிலாளர்கள் பேரணி







புதுதில்லி, நவ. 30-
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரி செய்யுமாறும், எந்த மாநிலத்திலும் குறைந்தபட்ச ஊதியம் 200 ரூபாய்க்குக் குறையாமல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் செவ்வாய் அன்று காலை தலைநகர் புதுதில்லியில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2009 ஜனவரி 1 அன்று மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் 6(1)ஆவது பிரிவினை துஷ்பிரயோகமாகப் பயன்படுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்து வந்த குறைந்தபட்ச ஊதியத்தைக் குறைத்து விட்டது. மூலச் சட்டத்தில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் அளிக்க வேண்டும் என்றிருந்த ஷரத்துக்கு முற்றிலும் விரோதமாக இவ்வாறு அரசு செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதன் பின்னணியில் குறைந்தபட்ச ஊதியமாக 200 ரூபாய் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆண்டிற்கு குறைந்தது 150 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று கோரியும், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தக் கோரியும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வேலைகளின் தன்மைகளை விரிவாக்கக் கோரியும், வனப்பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழான பணிகளை அமல்படுத்தக்கோரியும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் குழுக்களில் அனைத்து மட்டங்களிலும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று மத்திய சட்டம் கொண்டுவரக் கோரியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இம்மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரணி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு அலுவலக வளாகம் இருந்திடும் அசோகா சாலையிலிருந்து புறப்பட்டு, ஜன்பத் வழியாக நாடாளுமன்ற வீதியை அடைந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ராமையா, பொதுச் செயலாளர் விஜயராகவன், மற்றும் நிர்வாகிகள் சுனீத் சோப்ரா, ஹன்னன் முல்லா, சாரங்தார் பஸ்வான், வெங்கட், கோவிந்தன் மாஸ்டர், பானுலால் சஹா, குமார் சிரால்கர் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பேரணியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. மணி வந்திருந்தார்.
பின்னர் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி.சி. ஜோசியைச் சந்தித்து மனு அளித்தனர்.
(ச. வீரமணி)

Sunday, November 28, 2010

தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய காரணம் சி.சுப்பிரமணியம் -தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் ப.சிதம்பரம் புகழாரம்







தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய காரணம் சி.சுப்பிரமணியம்
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் ப.சிதம்பரம் புகழாரம்
புதுதில்லி, நவ. 29-
தமிழ் மொழியில், கலைக் களஞ்சியம் உருவாவதற்கு முக்கிய காரணம் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் என்று மைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
மைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் நினைவு அஞ்சல் தலை, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.
பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா ஞாயிறு அன்று மாலை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
பின்னர் விழாவிற்குத் தலைமை வகித்த மைய உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் கூறியதாவது:
‘‘ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்து, பத்தாண்டுகளுக்கு முன் நம்மைவிட்டு நீங்கிய பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்கள் நூற்றாண்டு விழா இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆகின்றன. பொது வாழ்க்கையில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டு 15, 16 ஆண்டுகள் ஆகின்றன. தீவிரமான அரசியலிலிருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இன்றும் அவரைப்பற்றிய நினைவுகள் நம் மத்தியிலே பசுமையாக இருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றார் வள்ளுவர். எச்சம் என்பது பிள்ளைகளையும் குறிக்கும், எச்சம் என்பது அவர்கள் செய்த நிலைத்த செயல்பாடுகளையும்குறிக்கும். அந்த வகையிலே திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையிலே ஆற்றிய பணிகள் மிக மிகப் பெரிய பணிகளாகும். நாம் இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மகத்தான காரியங்கள் அவர் காலத்தில் அவருடைய முயற்சியால் அவருடைய திறமையால் அவருடைய தீர்க்கதரிசனத்தால் அவருடைய உழைப்பால் ஏற்பட்டன என்பதை இந்த நேரத்திலே நாம் நினைவுகூர வேண்டும்.
தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழிலும் அவர் ஆற்றிய அரிய செயல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக பசுமைப் புரட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறோம்.
பஞ்சாப் மாநிலமும், அர்யானா மாநிலமும் தமிழ்நாடு, ஆந்திராவை விட கூடுதலாக நெல்லை உற்பத்தி செய்யும் மாநிலங்களாக மாறியிருக்கின்றன. அந்த மாநிலங்களிலே வசிக்கின்ற மக்கள் அதிகமாக உண்பது கோதுமை. ஆனால் அவர்கள் நெல்லை உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அதை நாம் இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம் என்றால், இந்தியாவிற்குத் தேவையான அரிசியும், கோதுமையும் நம் நாட்டிலே உற்பத்தி செய்ய முடியும் என்பதை இயல்பான செயல்களாக ஏற்றுக்கொள்கிறோம் என்றால் 1970களில் அவர் செய்திட்ட பசுமைப் புரட்சியே அதற்குக் காரணமாகும்.
இவ்வாறு 1970களில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் சி.எஸ். அவர்கள். என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவுகூர வேண்டும்.
சி.சுப்பிரமணியம், சிவராமன், சாமினாதன் என்ற மூன்று ‘எஸ்’-கள்தான் பசுமைப் புரட்சிக்கு முக்கியமான காரணமாகும். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதில் நமக்கெல்லாம் பெருமை உண்டு. ஒருவர் அமைச்சர், நிர்வாகி. இன்னொருவர் நிர்வாகத் துறையிலே புகழ் பெற்றவர். மூன்றாமவர் விஞ்ஞானி. இந்த மூவரும் இணைந்து ஒரு மகத்தான புரட்சியை இந்தியாவிலே 1970களில் ஏற்படுத்தினார்கள்.
அதற்கு முன்னால் என்ன நிலைமை? கோதுமையை, நெல்லை வெளிநாடுகளிலிருந்து பணம் கொடுத்தும் பல நேரங்களில் கடனாகவும் பெற்றோம். கையிலிருந்து வாய்க்கு என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. இந்தியாவுக்கு கோதுமை கப்பலில் வந்ததால் இந்த ஆங்கிலப் பழமொழியை மாற்றி கப்பலிலிருந்து வாய்க்கு என்று கிண்டலாகச் சொல்வார்கள். அந்த அளவிற்கு பற்றாக் குறை நிலைமை இந்தியாவிலே இருந்தது. அப்படி இருந்த நிலைமையை மாற்றியவர் சி.எஸ். அவர்கள்.
இப்போது என்ன நிலைமை? விளைந்த கோதுமையை, விளைந்த நெல்லை வைப்பதற்கு கிடங்குகள் இல்லை. இவ்வாறு சரியாகப் பாதுகாக்காமல் வீணாக்குகிறீர்களே என்று உச்சநீதிமன்றம் தலையிலே குட்டுகிறது. இவ்வாறு பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் திரு. சி.எஸ். என்பதை மறந்துவிடக் கூடாது.

அதேபோன்று இன்னும் பல மகத்தான காரியங்களை திரு.சி.எஸ். செய்தார். இந்தியா முழுவதும் இன்று 13 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்து பரிமாறப்படுகிறது. உலகத்திலேயே இந்த அளவிற்கு வேறெந்த நாட்டிலும் கிடையாது. மதிய உணவுத் திட்டத்தின் கர்த்தா காமராசர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மத்திய உணவு நம் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் பெரும் தலைவர் காமராசரிடம்தான் முதன்முதலில் வந்தது.
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தால், அதனைச் செயல்படுத்த வேண்டுமே, யார் செயல்படுத்துவது? எப்படி செயல்படுத்துவது? அதற்கான அரிசியை எப்படிக் கொள்முதல் செய்வது? எங்கே சமைப்பது? யார் சமைப்பது? எப்படி பரிமாறுவது?
இந்தப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று காமராசர் யோசித்தார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். அதேபோன்று இப்பணியை திரு சி.எஸ்.-இடம் காமராசர் ஒப்படைத்தார்.
மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டிலே துவங்கப்பட்டது. அவருக்குப் பெரும் துணையாக இருந்த இன்னொரு பெரியவர், திரு.என்.டி. சுந்தரவேலு அவர்கள். திரு.சி.எஸ்.-உம் திரு. என்.டி.சுந்தரவேலும் இன்னும் பல பெரியோரும் இணைந்து மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார்கள். மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டிலேதான் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. பிறகு சில மாநிலங்களில் பரீட்சார்த்தமாக அதனை நிறைவேற்றினார்கள். பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகுதான் இன்று நாடு முழுவதும் 13 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
திரு.சி.எஸ். ஓர் அரிய மனிதர், வழக்கறிஞர், அரசியல்வாதியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலவாதிகள் அறிஞர்களாக மாற முடியாது. அறிஞர்கள் அரசியலுக்கு வரமுடியாது. ஆனால் திரு. சி.எஸ். அவர்கள் தன் சொந்த முயற்சியால் தொடர்ந்து கற்றதால், தொடர்ந்து அறிஞர்கள் சூழ்ந்திருந்ததால், அவர் அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மிகப்பெரிய அறிஞர் என்ற நிலைக்கு அவர் தன்னைத் தானே மாற்றிக் கொண்டார். அவருடைய அரிய சிந்தனையிலே தோன்றிய பல நிறுவனங்கள் இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.
உதாரணமாக இந்திய உணவுக் கழகம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், சிஎஸ்ஐஆர் மூலமாக பல ஆராய்ச்சி நிறுவனங்கள். இவை எல்லாம் திரு.சி.எஸ். அவர்கள் பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தபோது ஏற்பட்டவைகளாகும்.
அவர் உணவு அமைச்சர், நிதி அமைச்சர் என்ற வகையிலேதான் நமக்குத் தெரியும். தமிழ்நாட்டிலே கல்வி அமைச்சராக இருந்தார். இந்திய அரசிலே கனரகத் துறை அமைச்சராக இருந்தார், எஃகுத் துறை அமைச்சராக இருந்தார். பிறகு திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். கொஞ்ச காலம் ராணுவ அமைச்சராகவும் இருந்தார். அவர் தொடாத துறையே கிடையாது. எந்தத் துறையை அவர் எடுத்துக் கொண்டாலும், அதை அறிவுபூர்வமாக அணுகினார். அரசியல்வாதியினுடைய அரசியல் சாணக்கியம், அரசியல் திறமை, ஒரு துறையை நடத்துவதற்கு மிகவும் அவசியம். ஆனால் அந்தத் துறையைப் பற்றி எதுவுமே தெரியாமல் அந்தத் துறையினுடைய இலக்கணங்கள் எதுவுமே தெரியாமல் ஒரு துறையை நடத்த முடியாது. ஒவ்வொரு துறையிலும் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அந்தத் துறையைப் பற்றி ஆழமாகப் படித்தார், ஒரு மாணவனைப் போல மிக மிக ஆழமாகப் படித்து அந்தத் துறையினுடைய அனைத்து நுணுக்கங்களையும் கற்றார். பிறகுதான் அந்தத் துறையிலே மாறுதலைக் கொண்டு வந்தார். ஆகவேதான் எந்தத் துறையை அவர் கையிலே கொடுத்தாலும், அந்தத் துறையின் பணிகளை மிகவும் திறமையாக செய்து முடித்தார் திரு சி.எஸ். அவர்கள்.
இளம் வயதிலேயே பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அன்பினைப் பெற்றவர். ஒரு புகழ் பெற்ற புகைப்படம் உண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் சிஎஸ் அவர்களின் தோளிலே கை போட்டு அவருடன் உரையாடுகிறார். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் ஏறத்தாழ 21. ஜவஹர்லால் நேரு 1889இலே பிறந்தார். சிஎஸ் 1910இலே பிறந்தார். இருவருக்கும் இடையிலே 21 வயது வித்தியாசம். 21 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் ஒருவர் பாரதத்தின் பிரதமர், இன்னொருவர் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர். என்றாலும் தோளிலே கை போட்டு அவருடன் பேசினார். அந்த அளவுக்கு அவர் அன்பையும் நன்மதிப்பையும் பிறந்தார். பிறகு, அன்னை இந்திரா காந்தியினுடைய உற்றத் தோழராக விளங்கினார். அவருடைய ஆலோசகராக விளங்கினார், அவருடைய அமைச்சரவையிலே முக்கிய அமைச்சராக இருந்தார்.
அரசியலிலே தீவிர ஈடுபாடு குறைந்தபிறகு, பல நிறுவனங்களை அவர் வழிநடத்தினார். அதிலே பாரதிய வித்யா பவனும் ஒன்று. பாரதிய வித்யா பவனின் உலகம் தழுவிய அனைத்து அமைப்புகளுக்கும் தலைவராக சில ஆண்டுகள் இருந்தார், துணைத் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார்.
இவ்வாறு புதிய புதி முயற்சிகள், புதிய புதிய எண்ணங்கள், புதிய புதிய சிந்தனைகளிலே தீவிரமாக ஆர்வம் காட்டினார். அவர் எல்லாப் பொறுப்புக்களிலிருந்தும் விலகி. சென்னைக்குத் திரும்பி வந்த பிறகு, தமிழ் வளர்ச்சிக்கு மிகப் பெரிய துணையாக இருந்தார். தமிழிலே கலைக் களஞ்சியம் உருவாவதற்கு அவர் மிக முக்கியமான காரணம் என்பது பலருக்கும் தெரியாது. ஒரு மொழியிலே முதன்முதலாக கலைக் களஞ்சியம் கொண்டுவருவது என்பது சாதாரண காரியம் அல்ல. அவினாசி லிங்கம் செட்டியார் அவர்கள் பெருமுயற்சி எடுத்தார்கள். பிறகு பேரறிஞர் பெரியசாமி தூரன் அவர்களை ஆசிரியர் குழுத் தலைவராகப் போட்டு, கலைக் களஞ்சியம் உருவாக்கும் பணி துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டது. அதற்கெல்லாம் மிகப் பெரிய துணையாக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருந்தவர் திரு.சி.எஸ். அவர்கள். தமிழிலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தமிழ் வழிக் கல்வியிலே மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தமிழ்நாட்டிலே ஆட்சி மொழியாகத் தமிழ் வந்ததற்கு திரு. சி.எஸ். மிக ப்பெரிய காரணம். தமிழ்நாட்டிற்குத் தமிழ் நாடு என்று பெயர் வைத்தது அவர் காலத்திலேதான் என்பதை மறந்து விடக் கூடாது. அவரை இப்போது பலர் கொண்டாடினாலும், பல விஷயங்கள் காலம் உருண்டோடுவதிலே மறந்து போனாலும் இவற்றையெல்லாம் நினைவுபடுத்துவது என்னுடைய கடமை என்பதற்காகவே சொல்கிறேன்.
திரு. சி.எஸ். நூற்றாண்டு விழாவை எங்களால் இயன்ற அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். கோவையிலே அவருடைய திரு உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது. இந்திய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் வந்து அந்த நாணயத்தை வெளியிட்டார். பின்னர் அங்கு மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திரு. சி.எஸ். அவர்களுக்கு கோவையிலே விரைவிலே சிலை அமைப்பற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலே சிலை அமைக்கப்படும் பணிகள் முடிந்து சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. சி.எஸ். அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஒரு முறை அவர் சொன்ன ஒரு சம்பவத்தை உங்களிடையே நினைவுகூர விரும்புகிறேன்.
அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்திலே, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடுகிறார். நீதிபதி தீர்ப்புச்சொல்கிறபோது குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதி என்று கூறி அவரை விடுவித்து விடுகிறார். சி.எஸ்.-க்கு மகிழ்ச்சி. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் மட்டும் தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டிலேயே நிற்கிறார். சி.எஸ். அவரிடம் போய் உன்னை நிரபராதி என்று சொல்லிவிட்டார்கள், உன்னை விடுவித்து விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனாலும் அவர் தலை நிமிரவே இல்லை. மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறார். பிறகு சி.எஸ். அவரிடம் ஏதோ சொல்கிறார். நீதிபதிக்கு ஒன்றுமே புரிய வில்லை.
“ஆச. ளுரசெயஅயni, ஐ hயஎந யஉளூரவைவநன லடிரச உடநைவே. றுhல ளை hந ளவயனேiபே in வாந யஉஉரளநன bடிஒ றiவா வாந hநயன bடிறநன னடிறn.”
“லுடிரச hடிnடிரச, ஐ hயஎந உடிnஎinஉநன லடிர வாயவ அல உடநைவே ளை innடிஉநவே. க்ஷரவ ஐ உயn’வ உடிnஎinஉந அல உடநைவே வாயவ hந ளை innடிஉநவே”
நீதிமன்றமே சிரிப்பில் மூழ்கியது.
அவர் அமைச்சராக இருந்த காலத்திலே, நான் பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது அரசியலைப் பற்றி ஓரளவுக்குத்தான் தெரியும்.
ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்திலே, திரு. சி.எஸ். அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் நடந்த விவாதங்கள் மிகச் சிறந்த விவாதங்களாக இருந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதும் நாம் நாடாளுமன்றத்திலே விவாதம் நடத்துகிறோம். 11.00 மணிக்குத் தொடங்கி 11.05க்கு முடித்து விடுகிறோம். ஐந்து நிமிடங்களில் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விடுகிறோம்.
திரு. சி.எஸ். அவர்கள் மிகச் சிறந்த ஜனநாயகவாதி, மிகுந்த நேர்மையாளர், அப்பழுக்கற்ற தேச பக்தர். தமிழின் மீது தீவிர ஈடுபாடு உடையவர். கல்வி, அறிவியல், ஆராய்ச்சி - இவைதான் நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற திடமான நம்பிக்கை உள்ளவர். எனவே அறிவார்ந்த சமுதாயமாக - மnடிறடநனபயடெந ளடிஉநைவல - ஆக நாட்டை மாற்ற வேண்டும், மாற்ற முடியும் என்று எண்ணியவர்.
அரசியல்வாதிகள் - அறிஞர்கள் - விஞ்ஞானிகள் எல்லோரும் இணைந்து செயல்பட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். பல நிறுவனங்களை நிறுவியவர். பல துறைகளைக் கண்டவர். அவருடைய நூற்றாண்டு விழா இன்று தில்லியிலே கொண்டாடப்படுவது நமக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த விழாவிலே அவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு இசைவு தந்த அஞ்சல் துறைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய நண்பர் திரு கபில் சிபல் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று துயர நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட் அவர்கள் அஞ்சல் தலையை வெளியிட உடனடியாக இசைந்தார்கள். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பின்னர் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் அவர்கள் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள் அஞ்சல் தலையை வெளியிட்டு, உரையாற்றினார். தொடர்ந்து கோயம்பத்தூர் பாரதி வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சக்தி பெருமாள் நன்றி கூறினார்.
--

Thursday, November 25, 2010

பாஜகவின் இரட்டை வேடம்



அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டு பாஜக-வின் இரட்டை வேடம்தான். எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு எதிராக உற்றார் உறவினர்களுக்கு அவர் சலுகைகாட்டியுள்ளார் என்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்த போதிலும் பாஜக அவரையே தொடர்ந்து முதல்வராக நீடிக்க அனுமதித்திருப்பதிலிருந்து இதனைக் கூறமுடியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில், பாஜக-வானது அறநெறி (அடிசயடவைல) தொடர்பான அனைத்துப் பாசாங்குகளையும் கைகழுவி விட்டது. பாஜகவின் தலைவர், ‘‘கட்சியின் மூத்த தலைவர்களையும் மாநிலத் தலைவர்களையும் கலந்தாலோசனை செய்த பின், கர்நாடக மாநில முதல்வராக பி.எஸ். எடியூரப்பாவையே தொடரச் செய்வதென கட்சி தீர்மானித்திருக்கிறது’’ என்று பாஜகவின் தலைவர் அறிவித்திருக்கிறார்.

‘சாதிய சலுகைகளைப் புறந்தள்ளிவிட்டு, வளர்ச்சித் திட்டங்களினாலேயே’ வெற்றி கிடைத்தது என்று பீகார் தேர்தல் முடிவுகள் கூறப்படும் அதே சமயத்தில், கர்நாடகாவைப் பொறுத்தவரை, பாஜக அங்கே முழுமையாக சாதி சலுகைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் செய்திருக்கிறது. கர்நாடக முதல்வர் தன் லிங்காயத் இனத்தினரைத் தனக்குப் பின்னால் அணிசேர்த்திருப்பது நன்கு தெரியக் கூடிய நிலையில், அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தால், அதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் அமைந்துள்ள தன் முதல் மாநில அரசையும் அது இழக்க வேண்டியிருக்கும் என்பதை பாஜக நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான், நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் பாஜக, தன்னுடைய மாநில அரசைக் காப்பாற்றுவதற்காக அரசியல் அறநெறியை முற்றிலுமாகக் காற்றில் பறக்க விட்டுவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக, புலனாய்வு செய்திட கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று கோரும் பாஜக, எப்படி கர்நாடகாவில் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வரை ஆதரிக்கிறது என்று ஊடக செய்தியாளர் கேட்டபோது, பாஜகவின் தலைவர்களில் ஒருவர் மிகவும் வெளிப்படையாகவே பதிலளித்துள்ளார். அதாவது, ‘‘கர்நாடகாவில் முதல்வரை நீக்குவதனால் ஏற்படும் அரசியல் இழப்புகள் குறித்து கட்சி சீர்தூக்கிப் பார்த்தது’’ என்றும், ‘‘முதல்வரை ராஜினாமா செய்யச் சொன்னால், அரசாங்கத்தையே இழக்க வேண்டியதிருக்கும் என்று தெரிய வந்தது’’ என்றும், கூறியிருக்கிறார்.

பாஜகவின் தேசியத் தலைவர், கர்நாடகா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன், முதல்வரின் கட்டளையின்படி அங்கு நடைபெற்ற மாபெரும் நில ஊழல்கள் குறித்த புகார்களை விசாரித்திடும் என்று கூறியிருக்கிறார். பல வாரங்களுக்கு முன்பே, கர்நாடக மாநில அமைச்சரவை, இத்தகைய கடுமையான புகார்கள் குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும் என்று தீரமானித்திருந்தது. அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீதிவிசாரணை செய்திடும் நடுவர் ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குதொடுக்க அதிகாரம் அற்றது என்பதால் இது ஒரு கண்துடைப்பு வேலையே என்று கூறியது. இப்போதும் அதேபோன்றதொரு விசாரணையைத்தான் பாஜக-வின் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடக முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக எழுந்துள்ள ஊழல் புகார்கள் உண்மையில் மிகவும் நீண்டவைகளாகும். அவற்றில் ஒரு சிலவற்றை இப்பகுதியில் நாம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் பல அமைச்சர்களும் பதவி இழச்கக வேண்டியிருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறோம்.

இப்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகளிலும், முதல்வரின் புதல்வர்கள் மற்றொரு நில ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகி இருக்கின்றன. 2006இல் எடியூரப்பா துணை முதல்வராக இருந்த சமயத்தில் அவர்கள் அரசாங்க நிலத்தை 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றனர். 1991ஆம் ஆண்டு கர்நாடகா நில மாற்றல் தடைச் சட்டத்தின்படி எவரொருவரும் பங்களூர் வளர்ச்சிக் குழுமம் அறிவிக்கை செய்துள்ள நிலம் எதையும் மாற்றலோ ( transfer), பிறிதொரு காரியத்திற்காகப் பயன்படுத்துதலோ (alienation) அல்லது அடமானம் (mortgage) வைத்தலோ மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடிய கிரிமினல் குற்றமாகும். ஆயினும், 2008 நவம்பர் 3 அன்று, எடியூரப்பா முதல்வராக வந்தபின் அந்த நிலங்களை பங்களூர் வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிக்கையிலிருந்து விடுவித்து (னநnடிவகைல) ஓர் ஆணை பிறப்பித்திதிருக்கிறார். அந்த நிலமானது 2010 நவம்பர் 22 திங்கள் கிழமையன்று ஒரு கனிமவள நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 24, 2010). பதவி பறிபோகலாம் என்கிற அச்சம்தான், முதல்வரின் புதல்வர்களை மேற்படி நிலத்தை மிகப்பெரிய லாபத்திற்கு விற்கச் செய்திருக்கிறது.

‘ஆபரேஷன் லோடஸ்’ என்ற பெயரில் மிகவும் அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகள் மூலம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற எடியூரப்பா அரசாங்கம் என்னவெல்லாம் செய்தன என்பதை இப்பகுதியில் இதற்கு முன்பும் நாம் விவரித்திருக்கிறோம். இப்போதும்கூட, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றால் அதற்கு, அது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி யிழக்கச் செய்ததுதான் காரணமாகும். அனைவரும் வாக்களித்திருந்தால், எடியூரப்பா அரசாங்கம் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியாது. மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில், பாஜகவின் பலம் வெறும் 106 மட்டுமேயாகும்.
உத்தர்காண்ட் மாநிலத்திலும் இதேபோன்றதொரு ஊழலில் பாஜக சிக்கியுள்ளது. அதன் உயர்மட்டத் தலைவர்களில் பலர், பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியா நிசாங்க் நீக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். அவற்றில் இரு பெரிய ஊழல் புகார்கள் மாநிலத்தையே குலுக்கி வருகின்றன. இவற்றில் 56 நீர் மின்சாரத் திட்டங்கள் ( hydro electric projects) மற்றும் ரிசிகேஷில் 400 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் முனைவர்களுக்கு (real estate developers) வெறும் 3 கோடி ரூபாய்க்கு கைமாற்றிக் கொடுத்திருப்பது போன்ற இரு பெரிய முறைகேடுகள் முக்கியமானவைகளாகும்.

இவ்வாறு, மிகப்பெரிய அளவில் ஊழல் செய்வதிலும் நாட்டைப் பிரம்மாண்டமான அளவில் கொள்ளையடிப்பதிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்கும், பாஜகவிற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, நாட்டின் வளங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, இவர்கள் அடிக்கும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, November 23, 2010

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமாநாடு மாணிக் சர்க்கார் அழைப்பு







அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா - 22வது மாநாடு ஏழைகளின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! காப்பீட்டு ஊழியர்களுக்கு மாணிக் சர்க்கார் அழைப்பு
புதுதில்லி, நவ. 21-

ஆட்சியாளர்களின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முறைசாராத் தொழிலாளர்களையும் ஈடுபடுத் திட, அணிதிரட்டப்பட்ட தொழி லாளர் வர்க்கத்தில் மிகவும் கூர் மையான வர்க்கப்பார்வையைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல் விடுத்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, சனிக்கிழமையன்று மாலை புது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் உரை யாற்றினார்.

அப்போது அவர் கூறிய தாவது:

நாட்டின் நலன்களைப் பாது காப்பதில் இன்சூரன்ஸ் துறை மிகுந்த முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக் குப் பல வழிகளில் அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

நமது நாட்டில் இன்சூரன்ஸ் வணிகம் 1880களில் துவங்கியது. அவற்றில் பெரும்பாலான நிறு வனங்கள் கல்கத்தாவில்தான் தங்கள் வணிகத்தை ஆரம்பித் தன. அவை அனைத்தும் தனி யார் நிறுவனங்களாக இருந்த தால் அவை மக்களின் நலன்கள் குறித்தோ, மக்களுக்கு உதவ வேண்டும் என்றோ கவலைப்பட வில்லை. எனவே நாட்டில் ஜன நாயக எண்ணம் கொண்ட மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களையடுத்து இந் திய அரசு அவற்றை தேசியமய மாக்க முடிவு செய்தது. 1956இல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, ஆயுள் இன் சூரன்ஸ் சங்கம் உருவானது. பின் னர் 1972இல் பொது இன்சூரன்ஸ் துறை அமைக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட் டன.

இன்சூரன்ஸ் துறை நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் அடிப் படை உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதில் மிக வும் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. 2008-09இல் மட்டும் இன்சூரன்ஸ் துறையானது நாட் டின் பல்வேறு பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மாக வழங்கி இருக்கிறது.

ஆனாலும் இன்றைய பரிதாப நிலை என்ன? ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியபின், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மீது, நாட் டின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கி இருக்கி றது. குறிப்பாக ஆயுள் இன்சூ ரன்ஸ் துறையை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகள் காரணமாக சாமானிய மக்கள் கடும் துன் பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சாமானிய மக்களின் பிரச்சனை களை மிகவும் ஆழமாக நாம் பரிசீலிக்காமல் போனால், இன் சூரன்ஸ் துறையில் உள்ள பிரச் சனைகளும் கடும் சோதனை களுக்குள்ளாகும் என்று அஞ்சு கிறேன். எனவே, சாமானிய மக் களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்து முறியடிக்க இன்சூ ரன்ஸ் ஊழியர்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.

அதிலும் முக்கியமாக விலை வாசி உயர்வு. நம்முடைய கோரிக்கை, விலைவாசி உயர்வு கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசு அதனைச் செய்ய மறுக்கிறது. விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த நாம் பல ஆலோசனைகளை அரசுக்குச் சொல்லி இருக்கிறோம். நாட்டில் பொது விநியோக முறையை வலுப்படுத்தி, அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்துமாறு கோரினோம். நியாய விலைக்கடைகளின் மூல மாக அத்தியாவசியப் பொருட் களை மானிய விலையில் அளித் திட வேண்டும் என்று கோருகி றோம். ஆனால் அதனைச் செய்ய அரசு மறுக்கிறது. மாறாக கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வணிகர்களையும் கொழுக்கச் செய்யக்கூடிய விதத்தில் அரசு சாமானியமக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. சரியாகச் சொல்வ தென்றால் செயற்கைப் பற்றாக் குறையை இத்தகைய பேர்வழி கள் உருவாக்கி விலைவாசியை உயர்த்திடும்போது, அதை அரசு கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்கிறது. நாடாளுமன் றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்கு உதவிடும் கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வர்த்தகப் பேர்வழிகளையும் கொழுக்கச் செய்வதில் உள்ள அக்கறை, சாமானிய மக்களின் மீது இல்லை. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத் திடாவிட்டால், மத்திய அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொள் ளாது.

மத்திய அரசு இவ்வாறு மக் கள் விரோதக் கொள்கைகளைத் தான் கடைப்பிடிப்பதோடு மட்டு மல்லாமல், மாநில அரசுகளையும் அவ்வாறே நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மத்திய அரசு நாட்டில் பெரும்பகுதியாக உள்ள இளைஞர்களுக்கு வேலையளித் திட எவ்விதமான திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப அது தயாராக இல்லை. மேலும் புதிதாக பணியிடங்களை யும் அது உருவாக்கவில்லை. தான் செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு அது கட்ட ளையிடுகிறது. ஆனால் இடது சாரி அரசாங்கங்களான மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரபுரா மாநில அரசுகள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. நாங்கள் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம். புதிய பணி யிடங்களையும் ஏற்படுத்தி வரு கிறோம். இதன்மூலம் இளைஞர் களை நாட்டின் முன்னேற்றத் திற்கான திட்டப் பணிகளைச் செய்திட ஏற்பாடுகளைச் செய் துள்ளோம்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங் களால், குறிப்பாக தொலைக் காட்சிகளால், தவறான முறை யில் வழிநடத்தப்படுகின்றனர். இவ்வாறு தவறான வழியில் நடத்தப்படும் அவர்களை வென் றெடுத்திட வேண்டும். நாட்டில் பெரும்பான்மையினர் முறை சாராத் தொழிலாளர்கள்தான். அவர்களிடம் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, ஸ்தாபன ரீதியாகத் திரண்டுள்ள உங்களைப்போன்ற அமைப்புகளால்தான் முடியும்.

எனவே நாட்டிலேயே மிகச் சிறந்த முறையில் ஸ்தாபனரீதி யாகத் திரட்டப்பட்டு, தங்கள் துறையினை அரசின் அழிவுக் கொள்கைகளிலிருந்து பாது காத்து வந்துள்ள நீங்கள், நாட்டில் கடும் துன்பத்திற்கு ஆளாகி யுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களையும், அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் பிரச்சனை களையும் தீர்த்து வைக்க அவர் கள் போராடும்போது அவர்க ளுக்கு உற்ற துணையாக நிற்க வேண்டும்.

இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென்






இன்சூரன்ஸ் பொதுத்துறை நிறுவனமாக இருந்ததே பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பியதற்குக் காரணம்: இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென் பேச்சு
புதுதில்லி, நவ. 23-

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் திவாலாகிப்போன நிலையில் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை பாதிக்கப்படாததற்கு அது பொதுத்துறையில் நீடித்ததே காரணம் என்று இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச்செயலாளர் தபன்சென் கூறினார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, புதுதில்லியில் சனிக்கிழமையன்று துவங்கியது. முன்
னதாக, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் சங்கத்தின் செங்கொடி மற்றும் செம்பதாகைகளை ஏந்திய வண்ணம் புதுதில்லி, கன்னாட் பிளேஸ், ஜீவன் பாரதி கட்டிடத்தின் முன்பிருந்து மாபெரும் பேரணியாக, ‘பொதுத் துறையைப் பாதுகாப்போம்’, ‘பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்போம்’, ‘நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்போம்’ என்று முழக்கமிட்டவாறு, பொது மாநாடு நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வந்தனர்.

மாநாட்டுப் பந்தலின் முன்பு சங்கத்தின் கொடியினை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் அமானுல்லா கான் ஊழியர்கள் மற்றும் பிரதி
நிதிகளின் பலத்த முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

மறைந்த தோழர்கள் ஜோதிபாசு, ஹர்கிசன்சிங் சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாநாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.கே. ரைனா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை, திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் வாழ்த்திப் பேசியதாவது:

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அமெ ரிக்காவில் இருந்த அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங் களும் திவாலாகிப் போயின. அமெ ரிக்க அரசாங்கம் அவற்றைக் காப்பாற்ற பல மில்லியன் டாலர்கள் அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவால் சிறிதும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவை பொதுத்துறையாக நீடிப்பதேயாகும். அவ்வாறு பொதுத்துறையாக நீடிப்பதற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய போராட்டங்களின் வெற்றியே காரணமாகும்.அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் துறையானது, பல லட்சம் கோடி ரூபாய்களை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசுக்
குக் கொடுத்து உதவி வருகிறது. ஆனாலும்கூட இன்றும் இந்திய அரசு, இன்சூரன்ஸ் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தபன்சென் கூறினார்.

ஆர். முத்துசுந்தரம்

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் தன் வாழ்த்துரையில், பொதுத்துறை நிறுவனங்களான ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு வந்தபோதிலும், தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்சை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இதற்கு எதிராக மாநில அரசு ஊழியர்கள் போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கன்வீனர் வி.ஏ.என். நம்பூதிரி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதிப் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பொது மாநாட்டில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் என்.எம்.சுந்தரம், ஆர். கோவிந்தராஜ், டேவிட், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஞாயிறன்று காலை பிரதிநிதிகள் மாநாடு புதுதில்லி, ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் துவங்கியது. மாநாட்டில் நாடு முழுதுமிருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுவாமிநாதன், கோட்டங்களின் காப்பீட்டு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி , சுரேஷ்குமார் , ஆர். புண்ணியமூர்த்தி, வீ. சுரேஷ் , ஆர். தர்மலிங்கம் , எஸ். ராமன் , எஸ். ரமேஷ்குமார், மனோகரன் ஆகியோர் தலைமையில் 55 பிரதிநிதிகளும் 80 பார்வையாளர்களும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாடு புதன்கிழமை வரை நடைபெறுகிறது

Sunday, November 21, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பிரதமரின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறதா?



புதுதில்லி, நவ. 21-

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதாக காங்கிரஸ் எழுப்பியுள்ள புகாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. பதில ளித்தார்.

புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலு வலகமான ஏ.கே.கோபாலன் பவனில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேவையில்லாமல் பிரதமரின் பெயர் இழுக்கப்படுவதாக இப்போது ஒரு முறையீடு காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக் கும், பிரதமருக்கும் நன்கு தெரியும் என்பதற்கு பல ஆதாரங்களை உங்கள் முன் சமர்ப்பித்தி ருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் தொலை தொடர்பு அமைச்சகத்தின் சார்பாக ஓர் உறுதிவாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பக்கம் 45-ல் தொலைதொடர்பு அமைச்சகத்தில் எடுக்கப்பட்டுள்ள அத்தனை முடிவுகள் குறித்தும் பிர தமருக்கும், பிரதமர் அலுவலகத்திற் கும் தெரியும் என்றும், பிரதமர் அலு வலகத்திற்கும் அமைச்சகத்திற்கும் இடையே இதில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனவே, தேவையில்லாமல் பிரதமரின் பெயரை இழுக்கிறார்கள் என்று கூறுவதில் அர்த்தம் எதுவுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ. ராசாவும் பிரதமருக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார். பிரதமரும் ஆ.ராசாவுக் குக் கடிதம் எழுதியிருக்கிறார். 2007 நவம்பர் மற்றும் டிசம்பரில் கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு இதில் பிரதமர் சம்பந்தப் பட்டிருப்பது தொலைதொடர்பு அமைச்சகத்தால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுதி வாக்கு மூலத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக் கிறது.

சிஏஜி அறிக்கை மீது பொது கணக்கு குழு விசாரணை நடந்தால். ஆனால் அது வெறும் கணக்குக் குழு தான். அதனால் ஊழல் குறித்தோ அதன் பின்னணி குறித்தோ எதுவும் கூற முடியாது. எனவே பொதுக் கணக் குக் குழு மட்டும் போதுமானதல்ல.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர் பாக என்ன செய்ய வேண்டும்? அரசு கஜானாவிற்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசின் கஜானா விற்கு வராமல் தடுக்கப்பட்டது எப் படி? மிகப் பெரும் ஊழல் நடைபெற் றது எப்படி? இவ்வாறு பெரும் ஊழல் கள் எதிர்காலத்தில் நடைபெறாவண் ணம் தடுத்திட என்ன செய்ய வேண் டும்?

இவற்றிற்கான வழிகாட்டும் நெறி முறைகளைத் தயாரிக்க வேண்டியிருக் கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் அடையாளம் காண வேண்டியிருக் கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. எதிர் காலத்தில் இதுபோன்று நடைபெறா மல் தடுக்க வேண்டியிருக்கிறது. இதனைச் செய்வதற்காகத்தான் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக் கப்பட வேண்டும் என்று கோருகி றோம்.

கூட்டு நாடாளுமன்றக் குழு மூல மாக புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதனைத் தனி நபர் எவரும் செய்துவிட முடியாது. கூட்டு நாடாளுமன்றக் குழுதான் செய்திட முடியும்.

எனவேதான், கூட்டு நாடாளு மன்றக் குழு அமைத்திட அரசு முன் வர வேண்டும், நாடாளுமன்றத்தை இயங்கவும் செய்திட வேண்டும் என் கிறோம்.

பிரதமரின் நேர்மை குறித்து எவ ரும் வினா எழுப்பவில்லை. அவரது பிழையாத்தன்மை குறித்துத்தான் அனைவரும் வினா எழுப்புகிறார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

ஐ.மு.கூ. அரசின் வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்கள்; பாஜக அரசின் கனிமக்கொள்ளையால் நாட்டின் வளங்கள் சூறை ஊழலை எதிர்த்து பிரச்சாரம் பிரகாஷ்

புதுதில்லி, நவ. 21-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரலாறு காணாத ஊழல்களை அம்பலப்படுத்தவும், கர்நாடக பாஜக அரசின் கனிமக்கொள் ளையையும், அனைத்துவிதமான ஊழல் களின் மையமாக எடியூரப்பா அரசே செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்தவும் நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் 11ம் தேதி வரை மாபெரும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுமாறு கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத் துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் நவம்பர் 19 - 21 தேதிகளில் புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி ஞாயிறு மாலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பிரகாஷ் காரத் கூறிய தாவது:-

மத்திய குழு கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட பிரச்சனைகளில் மிகவும் முக்கிய மானது நாட்டையே உலுக்கியுள்ள வரலாறு காணாத ஊழல்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்த வரை, மார்க்சிஸ்ட் கட்சி 2008 பிப்ரவரியி லேயே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. சீத்தாராம் யெச்சூரி, 2008 பிப்ரவரி யிலேயே ஒரு கடிதம் பிரதமருக்கு இது தொடர்பாக எழுதியிருக்கிறார். அப்போ திருந்து இப்பிரச்சனையைத் தொடர்ந்து நாங்கள் எழுப்பி வந்திருக்கிறோம். இப் போது மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை வெளிவந்த பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி கூறிய அனைத் தும் அதில் உறுதி செய்யப்பட்டபிறகு, அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால் பிரச்சனை இத்துடன் நின்று விடவில்லை. 2ஜி ஊழலில் ஓர் அமைச் சரோ அல்லது ஓர் அமைச்சகம் மட்டுமோ சம்பந்தப்படவில்லை. நடைபெற்றிருக்கிற நிகழ்வுகளிலிருந்து, பிரதமர், நிதி அமைச் சகம், சட்ட அமைச்சகம் அனைத்திற்கும் இது தொடர்பாக தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - கார்ப்பரேட் நிறுவனங் கள் ஆகியவற்றிற்கு இடையே மிகப்பெரும் கூட்டு இருந்திருப்பதையே இது தெளி வாகக் காட்டுகிறது. உச்சநீதிமன்றம் பல் வேறு கோணங்களில் இதனை ஆராய்ந்து வருகிறது. எனவேதான், 2ஜி ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியு றுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண் டும். அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எப்படி என்பதை அவர் விளக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங் கம், கூட்டு நாடாளுமன்றக் குழு அமைத் திட தயாராயில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழ லுக்குக் காரணமான அமைச்சர் மட்டு மல்ல, அதற்கு உடந்தையாக இருந்த அதி காரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.

ஐமுகூ அரசாங்கமானது இதில் சம்பந் தப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மன்னித்து விட தயாராயிருக்கிறது என்பது அமைச்சர் கபில் சிபல் கூற்றுக்களி லிருந்து தெரிய வருகிறது. டிராய் நிறுவன மானது, இழப்பு ஏற்பட காரணமாக இருந்த கம்பெனிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிற அதே சம யத்தில் அமைச்சர் அது தேவையில்லை என்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களில் நடைபெற்றுள்ள ஊழல். இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே இது தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் குழுவும் மற்றும் இருக்கின்ற புலனாய்வு அமைப்புகளும் நேரடியாக விசாரணை செய்திட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு மட் டத்திலும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

பாஜக விதிவிலக்கு அல்ல

ஊழல் தொடர்பாக நாம் பேசும்போது, கர்நாடகாவில் நடைபெற்றுள்ள ஊழல் களை நாம் விட்டுவிட முடியாது. ஊழலில் கர்நாடக மாநில அரசும், பாஜகவும் ஒரு ‘ரிக்கார்ட்’ ஏற்படுத்திவிட்டன. அரசாங் கமே கனிமக்கொள்ளை மாஃபியாவாக மாறியிருக்கிறது. மாநில அரசாங்கமே சட்டவிரோதமான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பாஜக தலைமை ஏன் இதுகுறித்து ஒன்றுமே சொல்ல வில்லை என்பது புரியவில்லை.

ஊழல் புரிவதில் காங்கிரசுக்கும் பாஜக விற்கும் வித்தியாசம் இல்லை என்பதையே கர்நாடக ஊழல்கள் காட்டுகின்றன.

எனவேதான் நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களைத் திரட்டி விரிவான வகையில் பிரச்சாரங் களை மேற்கொள்வது என்று தீர்மானித் திருக்கிறோம். டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் ஊழலுக்கு எதிராக, ஐ.மு.கூட்டணி அர சின் மிகப்பெரும் ஊழல்களை அம்பலப் படுத்தி, கர்நாடக பாஜக அரசின் கனிம ஊழல்களை அம்பலப்படுத்தி கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர் ணாக்கள் என்ற வகையில் பிரச் சாரங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

Friday, November 19, 2010

2ஜி ஊழலை விசாரணை செய்து இழப்புகளைப் பெற்றிடுக



மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில், அதனை விசாரிப்பதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டுமென்கிற கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலை எப்படித் தீர்வு செய்யப்பட்டாலும், நாடு சட்டவிரோத முதலாளித்துவத்தின் (crony capitalism) ஆழமான பகுதிக்குள் மேலும் மேலும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

சட்டவிரோத முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம், லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரிப்பின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளும் சற்றே வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பும். அவ்வாறு அவை வளைந்து கொடுக்காவிட்டால் அவற்றை மீறும். ஒப்பந்தங்களை அளிப்பதில் உற்றார் உறவினர்களுக்கு உதவுவது, (உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் மும்பை, ஜூஹூ, செண்டார் ஓட்டலை, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தமை, போன்று) நாட்டின் பொதுச் சொத்துக்களை இதயத்திற்கு இதமானவர்களுக்குத் தர முன் வருவது, பணத்தைப் பன்மடங்கு பெருக்குவதற்காக சட்டவிரோத வழிவகைகளைக் கண்டறிவது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவது முதலியன சட்டவிரோத முதலாளித்துவத்தின் ஒருசில வடிவங்களாகும். முதலாளித்துவ அரசு, முதலாளிகள் சரிசமமாக போட்டிபோட்டுக்கொண்டு இயங்குவதற்காக, ஒருசில விதிமுறைகளையும் அவற்றை செயல்படுத்தும் நிறுவன ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. ஆயினும், சிறிய மீன்களை பெரிய மீன்கள் தின்பதைப் போன்ற அடிப்படையிலேயே இயற்கை குணத்தைக் கொண்டுள்ள முதலாளித்துவம், இத்தகு விதிமுறைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் வீசி எறிந்துவிடுகிறது. முதலாளித்துவம் என்பது இயல்பாகவே சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில், உலக முதலாளித்துவம் தாமதமாக நுழைந்தபோது, (குறிப்பாக அவை உலகமயம் என்னும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவிக்கொண்ட பின்பு,) இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் ஊடுருவிப் பரவின. உண்மையில் ஒட்டுமொத்த அரசாங்கமே அவ்வாறு மாறிப்போனது,

உச்ச நீதிமன்றம் பிரதமரையும் அவரது அலுவலகத்தையும் கூண்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அதன் வெளிப்பாடுதான்.
சட்டவிரோத முதலாளித்துவம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது, எப்படிச் செயல் பட்டிருக்கிறது என்பதைச் சற்றே விளக்கிடலாம்.
2008 ஜனவரியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வெளியிடுவதற்கான உரிமங்களை அளிப்பதற்கு, மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகமானது, முற்றிலும் விந்தையான, எவருக்கும் விளக்கமுடியாத ஒரு விதியைக் கையாண்டது. அதாவது, ‘முதலில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற முறையைக் கொண்டு வந்தது. அதுமட்டுல்ல, அந்த 2ஜி உரிமங்களை, 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே தருவது என்றும் முடிவு செய்தது. நுகர்வோருக்கு ஸ்பெக்ட்ரம் அதிக விலையுள்ளதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்தது. ஆனால், உரிமங்கள் அளிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலமாக இவற்றை உத்தரவாதம் செய்திடவில்லை. விளைவு, உரிமங்களைப் பெற்ற நபர்கள், இவற்றை மிகவும் கொள்ளை லாபத்திற்கு விற்றனர்.

ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட்-இற்கும், பம்பாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கும் இடையேயான பேரம் மிகவும் பிரம்மாண்டமான தொகைக்கு நடைபெற்றிருக்கிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனமானது 13 மாநிலங்களுக்கு (circles) உரிய உரிமங்களை வெறும் 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பின்னர், இதில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதியையும் செய்யாமலேயே, இவற்றில் 45 விழுக்காட்டினை எடிசலாட் நிறுவனத்திற்கு 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு) விற்றுவிட்டது. எனவே, இவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையின் அப்போதைய சந்தை விலையாக சுமார் 2 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்வான் கொடுத்த விலை வெறும் 300 மில்லியன் டாலர்களேயாகும். தற்போதைய பரிவர்த்தனை விகிதாசாரத்தின்படி, இதன் பொருள் என்னவெனில், ஸ்வான் நிறுவனம் 2008 ஜனவரியில் கொடுத்த தொகைக்கு, அதைவிட 5.9 மடங்கு அதிக மதிப்புள்ள அலைக்கற்றைகளைப் பெற்றிருக்கிறது என்பதாகும். இவ்வாறு ஸ்வான் நிறுவனம் தான் பெற்ற உரிமங்களைச் செயல்படுத்த ஒரு காசு கூட செலவழிக்காமல், கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அரசாங்கம் தான் பெற வேண்டிய தொகையில் ஆறில் ஒரு பங்கினை மட்டும் பெற்றது. இவ்வாறு அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகையில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இழப்பு என்பது இதோடு நின்றுவிடவில்லை. இந்த இழப்பு கூட குறைந்த மதிப்பீடுதான். இதனை இதற்கு அடுத்து நடைபெற்றுள்ள யூனிடெக் - டெலினார்(நார்வே) பேரத்துடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும். யூனிடெக் நிறுவனமும், ஸ்வான் நிறுவனம் போன்றே, உரிமத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை.

யூனிடெக் நிறுவனம் தான் பெற்ற 23 மாநிலங்களுக்கான உரிமங்களுக்கும் வெறும் 1651 கோடி ரூபாய் உரிமக் கட்டணமாகக் கொடுத்திருந்தது. பின்னர் இது டெலினார் நிறுவனத்திற்கு தான் பெற்றதில் 60 விழுக்காட்டு பங்குகளை மட்டும் 6,120 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இவ்வாறு யூனிடெக் நிறுவனம் அரசுக்கு அளித்ததைவிட ஏழு மடங்கு அளவிலான தொகையைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறு, ‘முதலில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற அடிப்படையில் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் உண்மையில் டெலிகாம் வணிகத்துடன் தொடர்புள்ளவைகள் அல்ல. இவை இதற்கு முன் அறியப்படாத அல்லது பெயரளவிலான நிழல் நிறுவனங்களாகும். இதுவும் இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மைகள் (bடியே கனைநள) குறித்து ஐயங்களை எழுப்பின.

எனவேதான் நாட்டின் நலன் கருதி, இவ்வாறு நடைபெற்றுள்ள இமாலய அளவு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறோம். அதற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிறோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவானது, இக் கூட்டுக் கொள்ளையில் பங்கு கொண்டுள்ள கயவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத்தரவும் வேண்டும். மேலும், இவ்வாறு இமாலய அளவில் ஊழல் நடைபெற்ற முறையை நன்கு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாதிருக்க எவ்விதத்தில் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் அது கூறிட வேண்டும். இவ்வாறு செய்வதானது, எதிர்காலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் பருமனைக் குறைத்திட உதவிடும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று கோருவது நாட்டின் அரசியல் அறநெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இதில் நடைபெற்ற ஊழல் காரணமாக அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு மற்றுத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டிருக்கிறார். நாம் இந்த ஊழல் காரணமாக சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இப்பகுதியில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் தொகையை மீளப் பெறக்கூடிய வகையில் விசாரணைஅமைந்திட வேண்டும். அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றவர்கள் உரிய தொகையினை அரசுக்குச் செலுத்திட வேண்டும். இதற்கு, தற்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமிட்ட தொகையினை ஓர் அளவுகோலாக (நெnஉhஅயசம) வைத்துக் கொள்ளலாம். இதனை ஏற்க மறுத்திடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, அந்த உரிமங்களைப் புதிதாக ஏலமிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித லஜ்ஜையுமின்றி, மிகவும் கேடுகெட்ட முறையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள பொதுச் சொத்துக்களை மீளப் பெறுவதன் மூலம், பொது அறநெறியை (யீரடெiஉ அடிசயடவைல) மீள உறுதிசெய்வது மட்டுமல்ல, இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை, நாட்டு மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மிகவும் தேவையான ஒன்றுமாகும். உதாரணமாக, உணவுப் பாதுகாப்பை எடுத்துக் கொள்வோம். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் / வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும்) உணவு தான்யங்களை கிலோ 3 ரூபாய் என்ற விலையில் அளித்திட்டால், அதன் மூலம் கூடுதலாக 84 ஆயிரத்து 399 கோடி ரூபாய் உணவு மான்யம் அளிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளையோடு ஒப்பிடும்போது இது அதில் பாதி அளவுத் தொகையேயாகும். எனவே இத்தொகையை மீளக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த மடியும். அதேபோன்று, நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டிற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் தேசிய நிலையம் (National Institute for Educational Planning and Administration (NIEPA)) மதிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள தொகையைவிட இது குறைவேயாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரத் திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ஆறு மடங்கு அதிகமாகும்.

ஆட்சியாளர்கள் இப்போதும் தாங்கள் சாமானியர்களுக்காகவே ஆட்சி செய்வதாக நாடகமாடுவது தொடர்கிறது. இவர்கள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தவர் களிடமிருந்து அவற்றை மீளக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட நிர்ப்பந்தத்திட வேண்டும். மேலும், இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தொகையினை அரசு மீண்டும் கைப்பற்றி, அவற்றை மிகவும் தேவைப்படும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்திட ஒதுக்கிட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி)

Monday, November 15, 2010

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அனுமதியோம் -தில்லி பேரணியில் அபிமன்யு சங்கநாதம்





புதுதில்லி, நவ. 15-
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் அனுமதியோம் என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் (நம்பூதிரி) பொதுச் செயலாளர் அபிமன்யு கூறினார்.
தலைநகர் தில்லியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் உரையாற்றுகையில் அபிமன்யு கூறியதாவது:
‘‘இந்தப் பேரணி என்பது, பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். மத்திய அரசின் தவறான கொள்கைகள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான கொள்கைகள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரணங்களாகும். கடந்த ஐந்தாண்டுகளாகவே அரசாங்கம், புதிய உபகரணங்களை வாங்குவதற்கான அனுமதியை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தர மறுத்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் 45 மில்லியன் லைன்கள் பெற்றிட டெண்டர் வெளியிட்டிருந்தோம். அதனை அரசாங்கம் ரத்து செய்தது. பின்னர் 93 மில்லியன் லைன்கள் பெற டெண்டர் விட்டிருந்தோம். அதனையும் அரசாங்கம் ரத்து செய்தது. இப்போது சமீபத்தில் 5.5 மில்லியன் லைன்களுக்கான டெண்டரும் விட்டிருந்தோம். இதனையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் ஒவ்வோராண்டும் புதிதாக உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்து வருகிறது. இதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமாகும். இதனை நாம் அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களில் சேவை செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்று வந்தது. ஒவ்வோராண்டும் ஆறாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய் இவ்வாறு பெற்று வந்தது. இதனைத் தரவேண்டாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு மூலம் அரசு கூறிவிட்டது. இத்தகைய பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான அரசின் கொள்கையை நாம் அனுமதிக்க முடியாது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆர்டர்களைப் பெற ஒரு டெண்டரை இறுதிப்படுத்தியிருந்தது. ஆனால்இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தரவில்லை. சர்வதேச எல்லையில் அப்பணிகள் நடப்பதால் அதற்கு அனுமதி தரப்படவில்லை என்று காரணம் கூறியிருந்தது. ஆனால் அதே சீன நிறுவனமானது ரெலயன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. தனியாருக்கு என்றால் ஒரு கெரள்கை, பிஎஸ்என்எல்க்கு என்றால் வேறொரு கொள்கையா? இத்தகைய பிஎஸ்என்எல்-க்கு எதிரான அரசின் கொள்கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருகிறது.
அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனப் பங்குகளில் 35 விழுக்காட்டைத் தனியாருக்குத் தந்திட முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பிடவும் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே.
இதனை நாங்கள் அனுமதியோம். இதனை எதிர்த்துத்தான் வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தம் செய்திட வுள்ளோம்.
இவ்வாறு அபிமன்யு கூறினார்.
(ச.வீரமணி)


பிஎஸ்என்எல் ஊழியர்கள் டிசம்பர் 1 - 3 தேதிகளில்
72 மணிநேரம் வேலை நிறுத்தம்

புதுதில்லி, நவ. 15-

பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் தனியாருக்கத் தாரை வார்க்கும் விதத்தில் மத்தியஅரசு நடந்துகொண்டு வருவதைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திடவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் - அதிகாரிகள் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதிகள் வரை 72 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று புதுதில்லியில் பிஎஸ்என்எல் ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற பேரணியில் அறிவிக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் (நம்பூதிரி), என்எப்டிஇ, எப்என்டிஓ, தொமுச உட்பட அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் சங்கமும் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணி புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நாடாளுமன்ற வீதி நோக்கி வந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேரணி/ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி உரையாற்றினார். அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் (நம்பூதிரி) சங்கத்தின் பொதுச் செயலாளர் அபிமன்யு உட்பட அனைத்து சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினார்கள். பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாத்திடவும் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதிகள் வரை 72 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டது.
(ச.வீரமணி)

Sunday, November 14, 2010

மெகா ஊழல்: விரைவாக விசாரணை தேவை



அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் தொடர்பான ஆட்டபாட்டங்கள் அடங்குவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடரில் புயல் வீசத் தொடங்கி விட்டது. அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மெகா ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி கள் வெளியானதைத்தொடர்ந்து இவையே உறுப்பினர்களின் பிரதான விவாதப் பொரு ளாக மாறின. டெலிகாம் அமைச்சகத்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவ ரின் (சிஏஜி) அறிக்கையானது, கடந்த மூன் றாண்டுகளாக 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையே என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறது. மும் பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீடு கட் டும் சங்க ஊழல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்கள் தொடர்பாகவும் முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற் றப்பட வேண்டும். இவை ஊழல்களின் பட்டி யலில் கடைசியாகச் சேர்ந்துள்ள ஊழல்களா கும். இதற்கு முன்பே கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஊழல் வெளியாகியுள்ளது.

நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத் தங்களின் கீழான சட்டவிரோத முதலாளித் துவ (crony capitalism) வளர்ச்சியின் வெளிப்பாடே இத்தகைய ஊழல்கள். வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்களை அளிப்பதும், பொதுச் சொத் துக்களைத் தங்கள் இதயத்திற்கு இதமானவர் களுக்கு வாரி வழங்கி அவர்களைப் பெரும் பணக்காரர்களாக மாற்றுவதும் சட்டவிரோத முதலாளித்துவத்தின் வடிவங்களில் சிலவா கும். பிரதமர் அவர்களே, சட்டவிரோத முத லாளித்துவம் இந்தியாவை ஆட்டிப்படைக் கிறது என்று பதிவு செய்திருக்கிறார். ஆயினும் அவரது சொந்த அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் மீதே சட்டவிரோத முதலாளித் துவம் மூலமாக ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டுக்கள் வந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ள கடுங் கோபத் தீயைத் தணிக்க வேண்டும் என்பதற் காக நாடாளுமன்றம் புதனன்று துவங்குவ தற்கு முன்பே, காங்கிரஸ் கட்சி தன்னுடைய மகாராஷ்ட்ர முதல்வரை நீக்கிவிட்டது. மும் பை ஆதர்ஷ் வீடு கட்டும் சங்கத்தில் நடை பெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான நபர் களை நீக்கியதன் மூலம் நிலைமைகள் சரி யாகிவிடும் என்று அது நம்பியது. ஆனால் உண்மையில் நிலைமைகள் மேலும் மோச மாக மாறின. அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டதாலேயே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்களையும் மூடி மறைத்துவிட முடியாது.

இவை அனைத்திற்குப் பிறகும் கூட, தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, 2ஜி ஸ்பெக்ட் ரம் விற்பனையில் டெலிகாம் அமைச்சகத் தின் முடிவால் அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளிப் படுத்திய பின்னரும் கூட, டெலிகாம் அமைச் சர் பதவியில் தொடர்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2008 பிப்ரவரியிலி ருந்தே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர். இப்போது குடியரசுத் தலைவருக்கு சிஏஜி அளித்துள்ள அறிக்கையிலிருந்தும், இந்த விஷயம் முழுமையாகப் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும், தேவைப்பட்டால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து அதன் மூலமாக விசாரணை நடத்திட வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஊழல்கள் மக்கள் மத்தியில் பரவ லாகப் பேசும் பொருளாக மாறியுள்ளது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்புக் குழு தற்சமயம் தேசிய நாளேடு கள் அனைத்திலும் ஏராளமாக முழுப்பக்க விளம்பரங்கள் அளித்து வருகின்றன. அவற் றில் தாங்கள் செலவழித்த அனைத்தும் நியா யமானதே என்றும் தங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவும் தூய்மை யாகவும் நடைபெற்றன என்றும் கூறிவரு கிறது. ஆயினும், காமன்வெல்த் விளையாட் டுப் போட்டிகளுக்கான இணைய தளத்தில் அப்போது காணப்பட்ட விவரங்களைக் கண் ணுறும் எவரும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் காணப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை புனரமைத்திட அதீத மான அளவிற்கு அதாவது 961 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அதில் கூறப்பட்டி ருந்தது. அதேபோன்றுதான் இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு 669 கோடி ரூபாயும், தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்திற்கு 262 கோடி ரூபாயும், கர்னி சிங் துப்பாக்கி சுடும் மையத் திற்கு 149 கோடி ரூபாயும் செலவழித்திட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத் தத்தில் 44 ஆயிரத்து 459 கோடியே 48 லட்சம் ரூபாய் புனரமைப்புக்காக செலவழிக்கப்பட்டி ருக்கிறது. நாக்பூரில் மிக நவீன வசதிகளு டன் புதிதாக ஒரு ஸ்டேடியத்தைக் கட்டுவ தற்கே 84 கோடி ரூபாய்தான் செலவாகியிருக் கிறது. லஞ்ச ஊழல் தொடர்பாக முன்வைக் கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக புலன் விசாரணைக்கு உட்படுத் தப்பட வேண்டும். இவ்வாறு கோடிக்கணக் கான ரூபாய் கையாடல்கள் செய்துள்ள கய வர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். இக்குற்றச்சாட்டுக்களில் பலவற்றைக் குறித்து பல்வேறு ஏஜன்சிகள் ஏற்கனவே புலனாய்வைத் தொடங்கிவிட்டன. ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமும் பல் இல்லாத ஒரு கமிட்டி யை இவற்றை விசாரிப்பதற்காக நியமித்திருக் கிறது. இது கயவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களைத் தப் பிக்க வைத்து, விஷயத்தை மூடி மறைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இக்குற் றச்சாட்டுக்களுக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போன்ற ஏஜன்சி கள் மூலம் விரைந்து புலனாய்வினைச் செய்து, குற்றம் புரிந்தோருக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை விரைவுபடுத்திட அரசாங் கம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.

ஆதர்ஷ் வீடுகட்டும் சங்க ஊழலானது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், மகாராஷ் டிரா மாநில உயர் அதிகார வர்க்கத்தினர் மற் றும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகிய வர்கள் ஒருவர்க்கொருவர் மிகவும் அற்பத்தன மான முறையில் உடந்தையுடன் செயல்பட்டி ருப்பதைக் காட்டுகிறது. மும்பையில் கொலாபா மாவட்டத்தில் மிகவும் பிரதானமான நிலப் பகுதியில் கார்கில் யுத்தத்தில் இறந்தவர்க ளின் குடும்ப விதவைகளுக்கு ஒதுக்கீடு செய் வதற்காக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் இந்தக் கும்பல் 31 மாடிகள் கொண்ட குடியி ருப்பு அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டியிருக் கிறது. நம் நாட்டைப் பாதுகாத்திட உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் அளித்தி டும் இத்தகைய மரியாதையைப் பார்க்கும் போது எவ்வளவு வெட்கமாக இருக்கிறது? மிகவும் அடிமாட்டு விலைக்கு, இந்த அபார்ட் மெண்ட்டுகளை தங்களுக்கு மிகவும் வேண் டிய உற்றார், உறவினர்களுக்கு அளித்துள்ள னர். முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டதாலேயே ஊழலை முற்றிலும் மூடி மறைத்துவிடலாம் என்று கருதிவிடக் கூடாது. ராணுவத்தின் ஒரு சில பிரிவுகளும், மகாராஷ்டிரா அரசாங்கமும் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், மத்திய அரசின் ஏஜன்சி ஒன் றின் மூலம் உயர்மட்ட விசாரணை நடத்தப் பட்டு, ஊழல் புரிந்தோர் அடையாளம் காணப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

இப்போது வெளிவந்துள்ள ஊழல்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன் வெளியாகி யுள்ள சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளை போனது போன்றவை மீது இன்ன மும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் படாமல் இருக்கின்றன. பிரதமர் சட்டவிரோத முதலாளித்துவம் குறித்து எள்ளிநகையாடி யுள்ள அதே சமயத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கமோ தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை கண்மூடித் தனமாகக் கடைப்பிடிப்பதன் மூலம், இத்தகைய சட்ட விரோத முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்து வருகிறது.

‘டிரான்பரன்சி இண்டர்நேஷனல்’ (Transparency International) என்னும் அமைப்பு உல கில் உள்ள நாடுகளில் 2010இல் உயர்மட்ட அளவில் ஊழல்கள் இருப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 87ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதிக ஊழல் புரிந்த நாடு 0 என்றும், ஊழலே இல்லாத நாடு 10 என்றும் ஓர் அளவுகோலை வைத்து ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டதில் இந்தியா 3.3 என்ற இலக்கைப் பெற்றிருக்கிறது. இத் தகைய நிலைமையை அனுமதிக்க முடியாது. நம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் ஊட்டச்சத்துக்குறைவால், பசி, பஞ்சம், பட்டி னியால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். நம்முடைய மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள் ளை போவதற்கு உதவிடும் சட்ட விரோத முத லாளித்துவத்தை ஊட்டி வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர் கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் பணக்காரர்களை, மேலும் பணக்காரர்களாக மாற்றக்கூடிய விதத்தில் இந்தியா பணக்காரர் களுக்கான நாடு என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. நாட் டை நல்வழியில் செலுத்துவதற்கு மட்டு மல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலானவர்க ளின் வாழ்க்கையை மேம்படுத்திடவும் உயர் மட்டத்தில் உள்ள லஞ்சஊழலை ஒழிப்பது என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

வரவிருக்கும் காலங்களில், நாடாளுமன் றம் மேற்குறிப்பிட்ட ஊழல்கள் தொடர்பாக செயல்படவிருக்கும் அதே சமயத்தில், வலு வான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, ஊழல் புரிந்திட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வைத்திட இந்த அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஏற் படுத்தவேண்டியதும் அவசியம்.

தமிழில்: ச.வீரமணி

Monday, November 8, 2010

இந்தியாவை வாங்க முயற்சிக்காதே-பராக் ஒபாமா வருகையை யொட்டி- இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்





புதுதில்லி, நவ.8-
இந்தியாவை வாங்க முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்காதே என்றும் கண்டன முழக்கத்துடன் தலைநகர் தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திங்கள் அன்று தலைநகர் தில்லி வந்துள்ளார். மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அதிபர் ஒபாமா வருகையையொட்டி, அவருக்கு இடதுசாரிக் கட்சிகள் சார்பில் புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில், ஜந்தர்மந்தர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் அபனிராய் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் இறையாண்மை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் போர்த்தந்திரக் கூட்டணி வைத்திருக்கிறோம் என்ற பெயரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா கடைப்பிடித்திட வேண்டும் என்று அதனை நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும், தெரிவித்தார்கள்.
மேலும், போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், டவ் கெமிகல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திடவும், தொழிற்சாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தித்தரவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும், அமெரிக்கா, விசாரணையை எதிர்கொள்வதற்காக வாரன் ஆண்டர்சனை அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்தியாவின் அயல்துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலதனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவப் பங்காளியாக மாற்ற வகை செய்யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு வடிவமைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 50 ஆயிரம் துருப்புக்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறும் வரை அதற்கு அளித்திடும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக் கோரியும் வலியுறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே. வரதராசன், எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, மத்தியக்குழு உறுப்பினர்கள் சுனீத் சோப்ரா, நூருல் ஹூடா, தபன்சென், பாசுதேவ் ஆச்சார்யா, ஹன்னன்முல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
(ச.வீரமணி)

Sunday, November 7, 2010

நவம்பர் புரட்சியும் சோசலிஸ்ட் உணர்வும்--சுகுமால் சென்



1917 அக்டோபர் 17இல் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, பின்னர் திருத்தப்பட்ட ரஷ்ய காலண்டரின்படி நவம்பர் 7இல் நவம்பர் புரட்சி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவின் முதல் சோசலிஸ்ட் புரட்சி, உலகையே குலுக்கிய நிகழ்வாகும். அதன் முக்கியத்துவம் இன்றைய உலகில் - அதாவது உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள இன்றைய உலகில் - பெரிய அளவில் பொருளாதார மந்தம் மற்றும் கொடூரமான முறையில் ஏகாதிபத்தியத் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய உலகில் - மேலும் மேலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியானது, செப்டம்பர் 15 அன்று தன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஏழை மக்கள் மீதும் தாங்க முடியாத அளவிற்கு அது தாக்குதல்களை ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் களுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு, உலக முதலாளித்துவம் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கக்கூடிய இன்றைய சூழல் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சிக்கு மேலும் அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் அதன் நாசகர யுத்த நடவடிக்கைகள் இன்றைய தினம் மிகவும் கூர்மையடைந்து, உலகம் முழுவதையும் தன் மேலாதிக்கக் கருவிகளின்மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திட்ட நவீன தாராளமயப் பொருளாதார முறை, உலகச் சந்தையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தையும் சாமானிய மக்களையும் ஒட்டச் சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தோழர் லெனின் விளக்கியதுபோல், ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் ஒரு பின்தங்கிய நாடாக விளங்கிய ரஷ்யாதான், 1917இல் முதலாளித்துவ சங்கிலியின் ‘‘பலவீனமான கண்ணியை’’ உடைத்து நொறுக்கி, முதலாளித்துவ உலகில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவிய முதல் நாடாக வெற்றி பெற்றது. ரஷ்ய சோசலிஸ்ட் புரட்சியின் மிக முக்கியமான அம்சம், முதலாளித்துவத்தின் சுரண்டும் வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டிய முதல் உலகப் புரட்சி இதுவே என்பதாகும்.

இறுதியாக, 1991இல் பல்வேறு காரணங்களால் சோவியத் சோசலிஸ்ட் அரசு முடிவுக்கு வந்தது. சோசலிசத்தின் புரட்சிகரத் தத்துவத்தை பெரிய அளவில் திரித்ததும், விலகிச் சென்றதும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், இது குறித்து உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் இன்னமும் தனியே ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
சோசலிஸ்ட் உணர்வு உருவாதல்

சோவியத் சோசலிஸ்ட் புரட்சியானது, தன்னுடைய நிகழ்ச்சிநிரலில் சோசலிஸ்ட் உணர்வினைப் பிரதானமாக முன்வைத்தது. ஆனாலும், இதனை எய்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தொடர் போராட்டம் அவசியம். உலகிலேயே மிகவும் முக்கியமான பொக்கிஷம், மனித இனமேயாகும். ஆயினும், வரலாற்றுரீதியாகப் பார்த்தோமானால், மனிதகுலத்தின் பெரும்பகுதி பகைமையுடனான சமூக வர்க்கங்களின் ஆளுகைகளின் கீழேயே, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இத்தகைய நிலைமைகள் - அதாவது தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தனிநபர்வாதம் (heightened individualism), அதீத நுகர்வோரியம் (hyper-consumerism), தற்பெருமை (egotism), இரக்கமின்மை (apathy), பகைமையுணர்வு (alienation), பேராசை (greed), வெறுப்பு மனப்பான்மை (cynicism) ஆகிய அத்துணை குணங்களும் சோசலிசத்தைக் கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான அனுகூலமானவை என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவம் மற்றும் புரட்சிக்கு எதிரான சிந்தனையாளர்களில் பலர் இத்தகைய குணங்கள் மக்களிடம் இருப்பது இயல்பானவைகளே என்றும் இதற்கு மேல் மக்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது, கூடாது என்றும் வாதிடுகிறார்கள். ஆயினும் இது ஒரு நம்பிக்கையே யொழிய, அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. இதேபோன்றுதான் ஒவ்வொருவரின் ‘‘திறமை’’ (ability) மற்றும் ‘‘புத்திசாலித்தனம்’’ (intelligence) ஆகியவையும் வெவ்வேறானவை என்றும், ஒரு சில தனிநபர்கள் வரலாற்றையோ, கலாச்சாரத்தையோ அல்லது சுற்றுச்சூழலையோ தீர்மானிப்பதில் எவ்விதப் பங்கும் ஆற்றவில்லை என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு மாறாக, தனிநபர்கள் நிலையானவர்கள், மாற்ற இயலாதவர்கள் என்கிற எண்ணத்தைப் பொய்ப்பிக்கக்கூடிய விதத்தில் அறிவியல் சான்றுகள் உண்டு. மனித இனம் மாற்றங்களுக்கு - சமூகப் பின்னணியுடன் சம்பந்தப்பட்ட மாற்றங்களுக்கு - உட்பட்டவையே. இவ்வாறு மனித குலத்தின் மகத்தான சக்தியை எவரும் அறுதியிட்டுக் கூறிட முடியாது.

இன்றைய சிக்கல் நிறைந்த மற்றும் முரண்பட்ட பின்னணியில், அதிலும் குறிப்பாக, பல வளர்முக முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நவீன தாராளமய உலகமயக் கொள்கையானது, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மற்றும் முதலாளித்துவம் என்னும் அடிப்படையில் வெவ்வேறான இரு உலகக் கண்ணோட்டங்களுக்கு இடையே ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இரு கண்ணோட்டங்களுமே மக்களது சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை, கருத்துக்களைத் தங்கள் கண்ணோட்டங்களின்பால் ஈர்ப்பதற்கு முயல்கின்றன. உதாரணமாக, இன்றைய தினம் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் அவற்றைத் தீர்த்திட சிறந்த வழி எது என்பது குறித்தும் இரு கண்ணோட்டங்களும் இரு கருத்துக்களை முன்வைக்கின்றன. ‘‘மகிழ்ச்சி’’ என்பதற்கான அளவுகோலைக் கூட இரண்டும் இரு விதங்களில் அளிக்கின்றன. வலுவான முறையில் இயங்கிடும் ஏகாதிபத்திய சக்திகள், மக்கள் மத்தியில் சுயநலத்தையும், புதிய புதிய பொருள்களின்மேல் அளவிடற்கரிய ஆசைகளையம் உருவாக்கி, வளர்த்திடக்கூடிய வகையில் பிரச்சாரத்தை செய்துவருகின்றன. இவை அளிக்கும் நிர்ப்பந்தங்களில் பல மிகவும் பசப்பலானவைகளாகும்: மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கானவைகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவை படு பிற்போக்கானவைகளாகும்.

நவீன தாராள உலகமயக் கட்டத்தில், பல்வேறுபட்ட சமூக நலன்களும், அது உற்பத்தி செய்த வர்க்க முரண்பாடுகளும், மக்கள் மத்தியில் வேலைவாதம் (Careerism, சந்தர்ப்பவாதம், ஒருமைப்பாடின்மை (lack of solidarity), மற்றும் சோசலிசத்தைக் கட்டுவதில் ஆர்வமின்மை ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன. உதாரணமாக, நகர்ப்புறங்களில் வேலைபார்க்கும் அதிக ஊதியம் வாங்கும் ஊழியர்களின் சுகபோக வாழ்க்கையானது தொழிற்சாலைகளிலும் கிராமப்புறங்களிலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களிடமிருந்தும், குறைந்த சலுகைகளுடன் வாழ்பவர்களிடமிருந்தும், சொந்த ஊர்களில் வாழும் பெற்றோர்களிடமிருந்தும், ஓய்வூதியதாரர்களிடமிருந்தும் அவர்களைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டது. மூலதனம் - அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல - தன் அதிகாரத்தையும் அதன் விரிவடையும் தன்மையையும் குறைத்து மதிப்பிடுவது எவ்வாறு தவறோ அதேபோன்று, தத்துவார்த்த சிந்தனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் போன்ற அதன் எதிர்மறை விளைவுகளையும் குறைத்து மதிப்பிடுவது மாபெரும் தவறாகும். புரட்சிகர உணர்வு மட்டம்
சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற போதிலும் கூட, சோசலிசத்தைக் கட்டியமைத்திட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலானது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அது தொடரும். சோசலிசத்தைக் கட்டியமைத்து, அதனை நிலைநிறுத்துவதற்கு, உலகளாவிய அளவில் சுத்தமான காற்று மற்றும் தண்ணீர், சுத்தம், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் உட்பட பொதுவான நலன்களுக்காக உண்மையுடன் கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் பெற வேண்டியது அவசியம். அதே சமயத்தில், சமூகத்தை, ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிஸ்ட் சமூகமாக மாற்றியமைத்திட இத்தகைய கண்ணோட்டங்களை உடைய முன்னணி ஊழியர்கள் தேவை. புரட்சிகர உணர்வும் தேவை. இது சோசலிசத்தின் கீழ் உருவாக்கப்படும். மார்க்சும், ஏங்கெல்சும் பின்னர் லெனினும் சமூக நிலைமைகளில் மாற்றம் மற்றும் மக்களிடையே சோசலிஸ்ட் கல்வி மற்றும் சோசலிஸ்ட் நடைமுறை ஆகியவற்றின் மூலம் மக்களின் மனமாற்றம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவுகள் குறித்து விளக்கி இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் சோசலிசத்தை எய்துவது என்பது அதிகமான அளவில் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். புரட்சிகர உணர்வு என்பதே ஒரு குறிப்பிட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டியபின்னர்தான் ஏற்படும். ஒரு முறையான அரசியல் கட்சி அதிகாரத்தில் இருந்து, சோசலிஸ்ட் சமூகத்தைக் கட்டுவதற்கு அது வழிகாட்டினால், பின்னர் முதலாளித்துவ சமூகத்தின் நாசகரமான முரண்பாடுகளை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
உற்பத்தியில் சோசலிஸ்ட் உறவுகள் அல்லது சோசலிஸ்ட் உணர்வு இல்லாவிட்டாலும்கூட அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரிவாக்கிட முடியும் என்று வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் சோசலிசம் உருவாவதற்கான பொருளியல் அடித்தளம் (material foundation) அமைந்துள்ள போதிலும், சோசலிசத் தத்துவ வளர்ச்சி என்பது அந்நாட்டில் மிகமிக அரிதாகும். சமூக வாழ்க்கைதான் உணர்வை உருவாக்குகிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், உற்பத்திக்கான சமூக உறவுகளை நடைமுறைப்படுத்த நம்மால் முடியவில்லை. சோசலிஸ்ட் உணர்வு என்பது, உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்களிலிருந்து சோசலிஸ்ட் உணர்வு என்பதும் தாமாகவே வரும் என்ற கருத்து தவறாகிவிட்டது. உற்பத்தியின் புதிய உறவுகள் சாத்தியக்கூறுகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறதேயொழிய நிச்சயமாக சோசலிஸ்ட் உணர்வு உறுதியாக உருவாகும் என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுதல் என்பது திட்டமிட்டு நடைபெறுவதாகும். அதாவது, தாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நன்கு புரிந்துகொண்டுள்ள மக்களால் திட்டமிட்டு நடைபெறுவதாகும். என்ன செய்ய வேண்டும் என்னும் நூலில் லெனின், தொழிலாளர் வர்க்கம் எப்படி வர்க்க உணர்வைப் பெறுகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு இது அவசியம் என்று அவர் கூறுகிறார். தற்போது இருந்து வரும் சமூகப் பொருளாதார அமைப்பை, பெருவாரியான மக்களின் நலன்களுக்கானதாக, ஒவ்வொருவரும் தன் ஆற்றலை முழுமையாக உணரச் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திடுவதற்கு, புரட்சிகர, அறிவியல்பூர்வமான உணர்வு அவசியம் என்று லெனின் வாதிடுகிறார். ஒருவர் சோசலிஸ்ட் உணர்வைப் பெறுவதென்பது நீண்ட கால நடைமுறையாகும். ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தை எய்தும் வரை இந்நிலையினை எய்திட முறையான கவனம் செலுத்தி வரவேண்டும். மக்கள்திரளிடம் அவர்கள் ஆற்றலை உணரச் செய்து, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களை முன்னேற்ற வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சோசலிஸ்ட் கொள்கைகளை எய்திடத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய முன்னணி ஊழியர்களை அதிகரிப்பதிலும் சிரமங்கள் உண்டு. இவ்வாறு, சோசலிசத்தைக் கட்டுவதற்கு, பொருளாதாரத்தை வளர்ப்பது அவசியமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வழியாக சோசலித்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், வர்க்கப் போராட்டத்தில் தத்துவத்தின் முக்கிய பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை மாற்றும் அனைத்துக் கட்டங்களிலும் அதன் விமர்சனரீதியான முக்கியத்துவத்தையும் கிரகித்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். சோசலிஸ்ட்டாக மாற்றியமைத்தல்
ஒருவரை சோசலிஸ்ட்டாக மாற்றியமைப்பதற்கு, ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தைத் தந்திருந்தால் மட்டும் போதுமானதல்ல, பெற்றிட்ட சோசலிஸ்ட் ஆதாயங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அவற்றை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதிலும் அது அடங்கியிருக்கிறது. சோசலிஸ்ட் ஆதாயங்களை அடைவதும், மேலும் மேலும் தொடர்ந்து அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்வதும் மிகவும் கடினமான, நீண்ட, நெடிய, அடிக்கடி ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும். வரலாறு இவ்வாறுதான் நமக்குக் கற்பிக்கின்றது. புதிய கொள்கைகள், சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியவை புதிய (மற்றும் பழைய) முதலாளித்துவ, திருத்தல்வாத மற்றும் பல்nறு எதிரான சக்திகளின் செல்வாக்கிற்கு தொடர்ந்து இழுக்கப்படுகின்றன. எனவே நம் முயற்சிகள் என்பவை தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஏவக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். இதன் பொருள், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மக்களின் பெரும்பான்மையோர் நலன்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கக் கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதையும், தொழிலாளர் வர்க்கம் தன் அரசியல் செயல்பாடுகளைச் செம்மையாகச் செய்திட ஆதரவையும், வழிகாட்டுதலையும் செய்வதையும் குறிக்கோளாகாக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்களின் ஆட்சி அமைவது என்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர வேறெந்தக் குழுவாலோ அல்லது வேறெவராலுமோ அல்ல. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை தொழிலாளர் வர்க்கம்தான் வலுவாக நடைமுறைப்படுத்திட முடியும். உண்மையில், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சமூகத்தைச் சரியானத் திசைவழியில் செலுத்திடத் தன் பங்களிப்பினைச் செய்யும்போதுதான், ஜனநாயகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது. சாமானிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக அரசு செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால் அதற்கு சமூகத்தின் ஸ்தல மட்டத்திலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியாகத் தொழிலாளர் வர்க்கம் பரந்துபட்ட அளவில் பங்கேற்பது அவசியமாகும். துல்லியமான கோரிக்கைகளின் மீது வெகுஜனப் போராட்டங்கள், குறிப்பாக அவை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வழிநடத்தப்படும் பொழுதும், அவ்வாறு பெரும்பான்மையோர் நலன்களுக்கு உதவிடும் பொழுதும், அரசு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, பெரும்பான்மை மக்களுக்கு நீதி கிடைத்திடச் செய்திட முடியும். தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஸ்தல மட்டங்களில் தொழிலாளர் ஸ்தாபனங்கள் அமைக்கப்படுதல், அதன் தலைவர்கள் மக்களோடு இருந்து, அவர்கள் உணர்வுமட்டத்தை உயர்த்திட உதவுதல், உண்மையான வெற்றிகளைக் பெற்றிட வழிகோலலாம், விரிவான அளவிலும் நீடித்து நிலைக்கக்கூடிய விதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த அது உதவிட முடியும். மக்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது கனவுகளை நனவாக்கிட, அவர்களுடன் இணைந்து நின்று போராடிட வேண்டும். இதன் மூலம் தத்துவார்த்தப் போராட்டத்தை, தத்துவார்த்த மட்டத்தில் மட்டுமல்லாது நடைமுறை வேலைகளின் மூலமும் வென்றிட முடியும்.

தத்துவார்த்த நிலையை உயர்த்திட அனைத்து மட்டத்திலும் போராட்டம்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி ஊழியர்கள் நாள்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்கள் மூலம்தான் கற்றுக்கொண்டு முன்னேற முடியும், தங்களுடைய சமூக உணர்வினை தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வாக வளர்த்தெடுக்க முடியும். புரட்சிகர தத்துவார்த்த வளர்ச்சி என்பது அநீதிகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அநீதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவம் ஆகியவற்றின்மூலம் அனுபவங்களிலிருந்து கற்பது என்பதும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளிப்பதற்கும் கற்பது என்பதும் அவற்றின் மூலமாக நாசகர சமூகப் பதட்ட நிலைமைகளைக் குறைப்பது என்பதும், மக்களைத் தங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுவித்திடக் கூடிய வகையில் தீர்மானங்களை உருவாக்கிடும் இயக்கங்களில் பங்கேற்கச் செய்வதென்பதும் சாத்தியமாகின்றன.
புரட்சி என்பது பழையனவற்றை அழிப்பது மட்டுமல்ல, புதியனவற்றை விதைப்பதுமாகும். ‘‘புரட்சியாளன்’’ என்பவன் ‘‘விஷயங்களை அவற்றின் வேர்களிலிருந்து கிரகித்துக்கொள்பவன்’’ என்று மார்க்ஸ் கூறுகிறார். அதாவது சமூகப் புரட்சியின்போது பழையனவற்றை அழித்து அவ்விடத்தில் புதியனவற்றை விதைப்பது என்பதாகும். இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்கும் மார்க்சின் சித்தாந்தம் பொருந்தக்கூடியதே.

1991இல் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தத் தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டது. உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீண்டு எழவில்லை. இதன் விளைவு, சில கட்சிகள் வர்க்க சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன, வர்க்க மோதலை எதிர்க்கின்றன, ‘‘ஒளிரும் முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனித முகத்துடன் கூடிய உலகமயம்’’ ஆகியவற்றின் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் புரட்சிகர வளர்ச்சியைத் தடுக்கின்றன, இறுதியாக மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றன. அதுவும் உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இவை இவ்வாறு கருதிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு, இன்றைய உலகில் நவம்பர் தினத்தின் படிப்பினையாக நாம் கொள்ள வேண்டியது என்னவெனில் சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சித்தாந்தத்தைக் கிஞ்சிற்றும் தடுமாற்றமின்றி நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுமேயாகும். நம்முடைய வரலாற்று இலட்சியத்தை ஈடேற்ற, சோசலிஸ்ட் உணர்வைத் தொழிலாளி வர்க்கம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வைத்திடுவோம். இன்றைய இன்றியமையாத தேவை என்பது இத்தகைய சோசலிஸ்ட் உணர்வு பெற்ற தொழிலாளர்களேயாவர்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, November 6, 2010

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தொடர்புகள்


ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட்கள் பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப் பட்டிருப்பது வெளியுலகத்திற்குத் தெரிய வருவது அதிகரித்திருக்கும் சூழலில், ஆர்எஸ்எஸ் இயக்கமானது ‘தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாக்குதல்’ (‘Offence as the best form of defence’) கொள்கையைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருக்கிறது. அது நவம்பர் 10 அன்று அதன் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பான விவரங்களைப் பின்னர் தருவோம்.

2007 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற ஆஜ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான இந்த்ரேஷ் குமார் மட்டும் அல்ல என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2010 அக்டோபர் 22 அன்று குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஹகூளு-ஹவேi-கூநசசடிசளைஅ ளுளூரயன), குற்ற அறிக்கையில் இந்த்ரேஷ் குமார் ஒரு சதிகாரர் (உடிளேயீசையவடிச) என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவரை எதிரியாக (யஉஉரளநன) குற்ற அறிக்கையில் சேர்க்கவில்லை. அவர் அல்லாது, குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற ஐந்து எதிரிகளில், நான்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்று பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சதியுடன் தொடர்புடைய ஆறாவது முக்கியமான நபர் இறந்து விட்டதால் எதிரியாக சேர்க்கப்படவில்லை. அவ்வாறு இறந்த நபரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ளவரென்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகான் பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதலுக்கு, ஒருசில வாரங்களுக்குப்பின், மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, பலரைக் கைது செய்தது. அவற்றில் ஒரு ராணுவ அதிகாரியும், இந்துத்வா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமியாரிணியும் உண்டு. தேச விரோத பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டமைக்காக இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலங்களில் இது முதல் தடவையாகும். இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மேற்கொண்ட புலனாய்வுகளின் அடிப்படையில் தற்போதைய குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆஜ்மீர் தாக்குதல் மற்றும் ஹைதராபாத்தில் 2007 மே 18 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இடையேயும் தொடர்புகள் இருப்பதாகப் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. 2007 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற தில்லி - லாகூர் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலிலும் இந்த எதிரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றவுடனே, 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் கவனத்திற்குக் கீழ்க்கண்ட சம்பவங்களைக் கொண்டுவந்தது. ‘‘நாடு முழுதும் நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது இதர ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2003இல் பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம், 2006இல் நாண்டட் சம்பவம், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம், கான்பூரில் 2008 ஆகஸ்ட்டில் நடைபெற்ற சம்பவம், மற்றும் பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டிருந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இவற்றிற்குக் காரணமான கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது.
ஆரம்பத்தில், மாலேகான் கைதுகளுக்குப் பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ‘கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கேயுரிய பாணியில் பதிலளித்துக் கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார பிரமுகர், மன்மோகன் வைத்யா, அப்போது ஊடகங்களுக்கு, ‘‘சங்பரிவாரத்தின் சித்தாந்தங்களிலிருந்து அவர்கள் உத்வேகம் பெற்றிருந்திருக்கலாம், ஆயினும் அவர்கள் சங் பரிவாரத்தின் செயலாற்றும் உறுப்பினர்கள் அல்ல’’ என்று கூறியிருந்தார். இவ்வாறு இவர் கூறுவதும் ஒரிஜினல் அல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நாதுராம் கோட்ஷே குறித்து சொல்லப்பட்ட வாசகங்கள்தான் இவைகள். ஆயினும் கோட்ஷேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்திட்ட நேர்காணலில் தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று பதிவு செய்திருக்கிறார். வேறு சிலர், இந்து அடிப்படைவாதத்தின் உதிரி அமைப்புகள் சில, பொறுமையிழந்து, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். இதே தொனியில், வேறு சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும்கூட, ‘இயக்கத்திலிருந்து விலகிச்சென்ற சிலர்’ வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என்று ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், அதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக பயங்கரவாத அமைப்பு என்று கூறுவது சரியல்ல என்று வாதிட்டார்கள். இதுவும் மகாத்மா காந்தியின் கொலை வழக்கு நடைபெற்ற சமயத்தில் ஆர்எஸ்எஸ் கூறியவைதான். இத்தகைய அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் அன்றும், ‘‘பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியது.

ஆயினும், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கைகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகள் நன்கு வெளிப்பட்டுள்ளன. எனவேதான் ஆர்எஸ்எஸ் தன் உத்தியை மாற்றிக்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறாகக் கூறப்பட்டிருப்பதாகக் கூறி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற அதன் அகில பாரதீய கார்யகாரி மண்டல் (Akhil Bharatiya Karyakari Mandal) மாநாட்டில் கடைசி நாளான அக்டோபர் 31 அன்று இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடைபெறும் என்றும், லக்னோவில் அதன் தலைவரும், ஹைதராபாத்தில் அதன் பொதுச் செயலாளரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதன் பொதுச் செயலாளர் மிரட்டும் தொனியில், பயங்கரவாதத்துடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடர்புபடுத்தியிருப்பதற்கு எதிராக ‘‘இந்து சமூகம் சீற்றம் அடைந்திருக்கிறது’’ என்றும், ‘‘தேசியவாத’’ ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நற்பெயரைக் கெடுத்திட மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார். இத்தகைய எதிர்ப்புகள், அரசாங்கங்களையும், புலனாய்வு அமைப்புகளையும் மேலும் இதில் தொடரா வண்ணம் தடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் என்பது தெளிவு.
பயங்கரவாதம் என்பது தேச விரோதம் என்றும், அதற்கு எதிராக நாடு கிஞ்சிற்றும் சகிப்புத் தன்மை காட்டக்கூடாது என்றும் நாம் அடிக்கடியும் தொடர்ந்தும் இப்பகுதியில் கூறிவந்திருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. அனைத்து விதமான பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன, அதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்க முயற்சிக்கின்றன. எனவே, தற்போதைய புலனாய்வுகள் எவ்விதமானத் தடங்கலுமின்றி நடைபெற்று, நாட்டின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றுத் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, November 5, 2010

பராக் ஒபாமா இந்தியப் பயணம்:பிரகாஷ் காரத்



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு நவம்பர் முதல்வாரத்தில் வருகை தருகிறார். சென்ற முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வந்திருந்த போது, நாடு முழுதும் விரிவான அளவில் அவரது வருகைக்கு எதிராக எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. அவரது பயணத்தின்போது பிரதானமாக இராக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது பயணத்திற்கு எதிராக உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், புஷ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதும் உலகம் முழுதும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்த்தப் பட்டது. அமெரிக்க செனட் சபையில் இராக்கில் நடைபெறும் யுத்தத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்த ஆப்ரிக்க-அமெரிக்கரான இளம் அதிபர் பராக் ஒபாமாவிடம் மக்களுக்குப் பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. புஷ் சகாப்தத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே உலகம் பார்த்தது. ஒபாமா நிர்வாகத்தின் சுமார் ஈராண்டு கால ஆட்சியானது, அவ்வாறான எதிர்பார்ப்புகளில் பெரும்பாலானவற்றைப் பொய்ப்பித்து விட்டன. ஆட்சி புரியும் விதம் மாறியிருக்கிறது என்றபோதிலும், அமெரிக்க அயல்துறைக் கொள்கையின் சாராம்சத்தில் பெரிய அளவிற்கு மாற்றம் எதுவும் இல்லை.
இராக்கில் போரிட்டுக் கொண்டிருக்கும் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருந்தபோதிலும், 50 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்களும் மற்றும் இதர கூலிப் படையினரும் இன்னமும் இராக்கிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத் தலங்கள், அமெரிக்க நலன்களை மேற்பார்வையிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் அந்நாட்டின் எண்ணெய் வளங்களில் ஒரு பெரும் பங்கினைக் கைப்பற்றுவதுதான். ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து ஈரானை, அணுசக்திப் பிரச்சனையில் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை நான்காவது முறையாகப் பெறுவதற்கான விஷயத்தில் முன்னணியில் நிற்கிறது. பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கிட உறுதிமொழி அளித்திருந்தபோதிலும், ஒபாமா நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. ஏனெனில் அது அமெரிக்காவில் வலுவாக விளங்கிடும் யூதர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப வில்லை. அது தொடர்ந்து இஸ்ரேலின் சட்டவிரோதமான ஆட்சியையும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அதன் விரிவாக்கத் திட்டங்களையும் கவனிக்காதது போலிருப்பது தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானத்தில், ஒபாமா 30 ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்களை அனுப்பியிருக்கிறார். அப்பிராந்தியத்திற்காக ‘‘ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்’’ போர்த்தந்திரத்தை (‘‘Af-pak’’ strategy)த் திட்டமிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க-நேட்டோ படையினரால் தாலிபான்களை நசுக்க முடியவில்லை, மாறாக ஆப்கான் மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒபாமா நிர்வாகம் கியூபாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள சட்டவிரோத பொருளாதாரத் தடை தொடர்கிறது. கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டுமானால், அங்கு ‘‘ஜனநாயகத்திற்காக’’ நடைபெறும் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமாம்.
ஒபாமா எடுத்திருக்கிற உருப்படியான நடவடிக்கை என 2009இல் பிரேக்கில் ஆற்றிய உரையைக் கூறலாம். அப்போது அவர் உலகம் முழுதும் முற்றிலுமாக அணுஆயுதங்களை ஒழித்திட அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் அது போர்த்தந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (Strategic Arms Reduction Treaty (START III)) செய்து கொண்டது. இதன்படி இரு நாடுகளும் தங்களுடைய அணுஆயுதங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் சரியென்று ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டிய திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்குப் பின், ஒபாமா நிர்வாகம் ஒன்றை உறுதிப்படுத்திவிட்டது. அது, ஆட்சியிலிருப்பவர்கள் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக உலக அளவிலான போர்த்தந்திர நடவடிக்கைகளிலும், அயல்துறைக் கொள்கைகளிலும் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவர மாட்டார்கள் என்பதுதான்.
அமெரிக்கப் பொருளாதாரம் இன்னமும் மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்தான், வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 9.6 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கக்கூடிய நிலையில்தான், ஒபாமா இந்தியாவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலைமையானது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த ஆதரவைக் குறைத்திருக்கிறது. இது சமீபத்தில் அங்கே நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களில் டெமாக்ரடிக் கட்சி கடும் இழப்பினை அடைந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. எனவே, ஒபாமாவின் பயணம் இந்தியாவின் சந்தைகளை மிக அதிக அளவில் அமெரிக்காவின் பக்கம் திறந்திடவும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையிலும் வேளாண்துறையிலும் அதிக அளவில் முதலீடு செய்திட அனுமதிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒபாமா நிர்வாகம் இந்தியாவுடன் ‘அவுட்சோர்சிங்’ வர்த்தம் வைத்துக்கொள்வதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

ஒபாமாவின் விஜயம் இந்தியாவில் பல்வேறுவிதமான சிந்தனைப் போக்குகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆள்வோர் மத்தியில் அதிக அளவில் அமெரிக்க ஆதரவு மனப்பாங்கு இருப்பதால், இவ்வாய்ப்பை அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியை (strategic alliance) வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ராணுவத்துறையில் மேலும் விரிவான அளவில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் புதிய துறைகளில் அமெரிக்காவின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்திடவும் ஒப்புக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, வலதுசாரிகளில் ஒரு பிரிவினரும், கார்பரேட் ஊடகங்களும் சீனாவிற்கு எதிராகச் சரியான போட்டியை அளித்திட வேண்டுமானால் இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கிளிண்டன் நிர்வாகத்தின்போது வாஜ்பாய் அரசாங்கத்தால் ‘‘ஜனநாயகங்களின் சமூகம்’’ (“Community of Democracies”) என்ற பெயரில் அமெரிக்கா வானளாவப் புகழப்பட்டதையெல்லாம் கடந்த காலத்தில் நாம் பார்த்தோம்.

இந்தியாவில் இன்றும் கூட, பலர் புஷ் சகாப்தம் மீது நாட்டம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே இந்தியாவிற்கு மிகவும் சிறந்தவராக ஜார்ஜ் புஷ் இருந்திருக்கிறார் என்று அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் ரொனென் சென் கூறியிருக்கும் வாசகங்களே இதற்குச் சான்று. அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதற்காக ஏங்குபவர்கள் புஷ் சகாப்தத்தை இழந்துவிட்டதற்காக மிகவும் கவலைப் படுகிறார்கள். இந்தியா, அமெரிக்காவின் நம்பகமான போர்த்தந்திரக் கூட்டணி நாடாக மாறும்பட்சத்தில், இந்தியாவை ஒரு மாபெரும் வல்லரசாக உருவாக்க முடியும் என்று உறுதிமொழி அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. ஆயினும், புஷ்சும்கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்புநாடாக இந்தியா வருவதை ஏற்க மறுத்துவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, புஷ்சிற்கும் ஒபாமாவிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அங்கீகரிக்கிறோம். அதே சமயத்தில், ஒபாமா நிர்வாகமும் உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் அடிப்படை அணுகுமுறையின் தொடர்ச்சியே என்பதையும் நாம் அறிவோம். அதனால்தான் ஒபாமாவின் பயணத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் தலையீடுகளுக்கு நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்திடுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தீர்மானித் திருக்கிறோம். நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திட அமெரிக்க அரசாங்கம் அளித்திடும் நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்ளுக்கு நாட்டின் கேந்திரமான துறைகளான வேளாண்மை, சில்லரை வர்த்தகம் மற்றும் உயர் கல்வித்துறைகளைத் திறந்துவிட வசதிசெய்து தருவதற்கும் மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான சிறிய கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய விதத்தில் நாட்டிற்குள் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதித்திட ஒபாமா பயணம் பயன்படுத்தப் படக்கூடாது. மத்திய வர்த்தக அமைச்சரும் (Commerce Minister) ஐமுகூ அரசாங்கத்தின் ஒருசில பிரிவுகளும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வகைசெய்திடும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2005இல் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புத்துறை கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (Indo-US Defence Framework Pact) கீழ் அமெரிக்கா மேலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. அவற்றின்படி இந்திய ராணுவம், அமெரிக்க பெண்டகனின் துணைப்படை போல் மாறிவிடுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்துதான் ஆயுதங்களைப் பெரிய அளவில் வாங்க வேண்டும் என்பதில் ஒபாமா மிகவும் குறியாக இருக்கிறார். ஏற்கனவே, இந்தியா சி-17 ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கிட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. அமெரிக்கர்கள் மேலும் 126 போர் விமானங்களை இந்தியாவை வாங்க வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவற்றின் மதிப்பு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு வைத்திருப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இத்தகைய ஒத்துழைப்பானது நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையையும், போர்த்தந்திர சுயாட்சி (strategic autonomy)யையும் கடுமையாகப் பாதிக்கும்.

போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உத்தவாதப்படுத்தப்படுவதற்கு அதிபர் ஒபாமா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட வேண்டும். உலகில் நடைபெற்றுள்ள மிகமோசமான தொழிற்சாலைப் பேரிடர் விபத்துக்கு ஓர் அமெரிக்க நிறுவனம்தான் பொறுப்பாக இருந்திருக்கிறது. வளைகுடாக் கடற்கரையில் எண்ணெய்க் கசிவினை சுத்தம் செய்வதற்காக பல பில்லியன் டாலர்களை ஒபாமாவால் பெற முடியும் என்றால், போபால் நச்சுக் கசிவுக்குக் காரணமான டவ் கெமிகல்ஸ் (Dow Chemicals) நிறுவனத்திடமிருந்து இழப்புகளுக்கு ஈடான தொகை அவரால் ஏன் பெற முடியாது?

அமெரிக்க அரசு, கடந்த நாற்பது ஆண்டு காலமாக அரபு நாட்டின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல் அரசுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன. அதேபோன்று கியூபா மீதான பொருளாதாரத் தடையை நிறுத்த வேண்டும் என்றும், நிர்ப்பந்த நடவடிக்கைகள் எதுவும் எடுத்திடாது அணுசக்திப் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் கோருகிறார்கள்.

நவம்பர் 8 அன்று நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் அவர் உரையைக் கேட்பார்கள். அதே நாளன்று, நாடு முழுதும் இந்திய மக்களின் எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்படும். அவற்றை அதிபர் ஒபாமாவும் கேட்டிட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)