Wednesday, March 30, 2011

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர்?



‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்து அளித்துள்ள பத்திரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கில் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?

‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாளிரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். மாதக் கடைசி என்பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப்போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனமதில் இருந்த சுமை இறங்கியது.’’

சகாயம்,ஐஏஎஸ். நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்பத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என்றால்,அப்போது என் கட்டுப்பாட்டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந்தார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிறதில் ஒரேயொரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். — தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயிடுவோம்னு படிச்சேன், ஆயிட்டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ, கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது,. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலாக நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டுவிட்டோம். அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபிசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுதும் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும்.

இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு.க.அழகிரி குற்றம்சாட்டுகிறார்.

---

Sunday, March 27, 2011

Asianage cartoon ridiculing election manifesto of DMK

அதிசயம் ஆனால் உண்மை

அதிசயம் ஆனால் உண்மை
புதுதில்லி, மார்ச் 27-

நமது நாட்டு ரயில்கள் பல்வேறு கார ணங்களால் சரியான நேரத்திற்குச் சென்ற டைவதில்லை. தில்லியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமானால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அல்லது ஜி.டி. எக்ஸ்பிரஸ் என்னும் ரயில்களைத்தான் மக்கள் அதிகம் விரும்புவார்கள். கார ணம், அதிகாரபூர்வமான ரயில்வே கால அட்டவணைப்படி அவை காலையில் சென்னை போய்ச் சேர வேண்டும். எவ் வளவு கால தாமதமானாலும் பகல் நேரத் தில் சென்னையை அடைந்துவிடலாம் என்பதாலும் அதன்பிறகு தங்கள் சொந்த வீடுகளுக்கோ அல்லது வேறு ரயில் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்வ தற்கோ அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதை விடுத்து கரீப் ரதம், துரந்தோ ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்று ஏதேனும் ரயில்களில் அவர்கள் ஏறி விட்டால், தொலைந்தார்கள். இரவு எட்டு மணியளவில் போய்ச்சேர வேண் டிய அவை, பத்து அல்லது 11 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தால், தொலைந்தார் கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்வதற்குள் அநேகமாக கசப் பான அனுபவங்களை அவர்கள் பெற்று விடுவார்கள்.

இதுதான் வழக்கமான நிலைமை. ஆனால், இது தேர்தல் நேரமாயிற்றே. அதிலும் குறிப்பாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி எந்த வழியிலாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண் டிருக்கும் சமயமாயிற்றே. இப்போது என்ன நிலைமை.

இதேபோன்று மேற்கு வங்கத்தில் கந்தாரி எக்ஸ்பிரஸ் என்னும் ரயில் ஹவுரா ஸ்டேஷனுக்கு இரவு 9.40 மணிக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வாறு போய்ச் சேராமல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குப் போய்ச் சேர்ந் திருக்கிறது. ஆனால் என்ன ஆச்சரி யம்? ரயில்வேயைச் சேர்ந்த மூத்த அதி காரிகள் இவர்களது ரயிலின் வருகைக் காகக் காத்துக் கொண்டிருந்திருக் கிறார்கள்.

வண்டி நிலையத்தை வந்து அடைந் ததும், பயணிகள் அவர்களின் இருப்பி டத்திற்குப் போய்ச் சேர்வதற்காக டாக்சி ஏற்பாடு செய்து அனுப்பி இருக்கிறார் கள். இவ்வாறு 300 பயணிகளுக்கு 52 டாக்சிகள் 13 ஆயிரம் ரூபாய் செலவில் அன்று ஓரிரவு மட்டும் ஏற்பாடு செய்தி ருக்கிறார்கள்.

காரணம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? ரயில்வே யின் அமைச்சர் மம்தா பானர்ஜி. இப் போது அவரது கட்சி மேற்கு வங்கத்தில் எப்பாடு பட்டாவது இடது முன்ன ணியை ஆட்சியிலிருந்து அகற்றிட வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

சரி, இவ்வாறு மம்தா பானர்ஜி, நாடு முழுவதும் கால தாமதமாக வரும் அனைத்து ரயில்களுக்கும் ஏற்பாடு செய்வாரா?

இவ்வாறு மேற்கு வங்கத்தில் மட் டும் தேர்தலுக்காக அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? (ச.வீ)

Saturday, March 26, 2011

விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் : அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்த மன்மோகன் அரசு! -- பிரகாஷ் காரத்

ந்தியாவில் இருக்கின்ற அமெ ரிக்கத் தூதரக அதிகாரிகள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள கேபிள்கள் வெளியாகி இருப்பது, ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான குறிப்பிடத் தக்கதொரு தாக்குதலேயாகும். ஒரே வரி யில் சொல்வதென்றால், இவை வெளிப் படுத்தியுள்ள விவரங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் காலத்திலேயும் சரி, அதற்கு முன்பிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காலத்திலேயும் சரி, இரு நாடுகளுக்கும் இடையிலிருந்த உறவு முறையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர கத்தால் அனுப்பப்பட்டுள்ள கேபிள்களை தி இந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் மூலமாகத் தற்சமயம் வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறது. இதுவரை அது வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் மிகுந்த மோசமான சித்திரத்தை அளித்துள்ளன. அமெரிக்கா, நம் நாட்டின் ராணுவ விவகாரங்கள், அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள் கைகளின் மீது செல்வாக்கான நிலைப்பாட் டினைக் கொண்டிருப்பது அவற்றிலிருந்து தெரிய வருகிறது. அமெரிக்காவானது நம் நாட்டின் அதிகாரவர்க்கம், ராணுவம், பாது காப்புத்துறை மற்றும் உளவுப் பிரிவுகளின் அனைத்து மட்டங்களிலும் மிகவும் வெற்றி கரமாக உள்நுழைந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளது இவற்றிலி ருந்து நன்கு வெளிப்படுகிறது. கேபிள்கள் பிரதானமாக 2005 முதல் 2009 வரையி லான கால கட்டத்தினை உள்ளடக்கி இருக் கிறது. பொதுவாக இக்காலகட்டமானது ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட காலமாகும்.

அயல்துறைக் கொள்கை: தலைகீழ் மாற்றம்

மன்மோகன் சிங் அரசாங்கமானது, சுயேச்சையான அயல்துறைக் கொள் கைப் பின்பற்றப்படும் என்று தன்னுடைய குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறியிருந்ததிலிருந்து பின்வாங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். இவ்வாறு அரசாங்கம் அயல்துறைக் கொள்கையில் பின்வாங்கியவுடன் அத னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்க வேண்டிய தாயிற்று. இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசாங் கம் பின் வாங்கியபின், அவை எப்படி அமல்படுத்தப்பட்டன என்பது அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களில் இருந்தும், புஷ் நிர்வாகத் தின் உயர்மட்ட அதிகாரிகளின் செயல்பாடு களிலிருந்தும் நன்கு தெரியவருகிறது. 2005 செப்டம்பரில் சர்வதேச அணுசக்தி முகமை (ஐஹநுஹ-ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல) முன்பு ஈரானுக்கு எதிராக மன்மோ கன் சிங் அரசாங்கம் வாக்களித்ததானது அதன் கொள்கைகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றா கும். இவ்வாறு அரசாங்கத்தின் கொள்கை களில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு எப்படியெல்லாம் அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்தம் அளித்தது என்பதை விக்கி லீக்ஸ் கேபிள்கள் தெளிவுபடுத்துகின்றன. ஈரானுக்கு எதிராக உறுதியான நிலைப் பாட்டினை இந்தியா மேற்கொள்ளவில் லை என்றால் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றாது என்று இந்திய அரசாங்கத்திற்குக் கூறப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் ஐ.நா. பொது சபையின் அமர்வு நடைபெற்ற சமயத்தில் செப்டம்பர் 13 அன்று புஷ்சுக்கும் மன்மோகன் சிங் கிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னர், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் மீது கடுமையான நிர்ப்பந்தம் கொண்டு வரப் பட்டிருந்தது. மன்மோகன்சிங்கிற்கும் புஷ்சிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத் திற்குப் பின்னர்தான், வியன்னாவில் இருந்த இந்தியத் தூதருக்கு சர்வதேச அணுசக்தி முகமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகும்படி அறி வுரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சர்வ தேச அணுசக்தி முகமையில் வாக்கெடுப்பு நடைபெற்றபின் அமெரிக்கத் தூதர் அனுப்பியுள்ள ஒரு கேபிளில் இந்தியா வின் நிலை குறித்துக் குறிப்பிடுகையில், ‘‘ஒரு வலுவான அமெரிக்க - இந்திய உறவு முறையைக் கட்டமைப்பதற்காக ஐ.மு.கூட்டணி அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மிக முக்கியமான சமிக்ஞையை இது அளித்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி அமெரிக்க அரசாங்கம் இந்தி யாவை நேபாளம், இலங்கை மற்றும் வங் கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து சென்றிட வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பல கேபிள்கள் வெளிப்படுத்துகின்றன. அமெ ரிக்காவின் வழிகாட்டுதலின்கீழ் இஸ்ரேலு டன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத் திக் கொண்டுள்ளதையும் அவை நன்கு புலப்படுத்துகின்றன.

‘இந்திய அதிகாரிகள் இந்தியாவும் அமெரிக்காவும் அயல்துறைக் கொள்கை களில் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கியபோதிலும்’ அமெரிக்காவின் அயல்துறைக் கொள் கையுடன் ‘‘முழுமையாக ஒத்துப்போகக் கூடிய’’ வகையில் இந்தியாவின் அயல் துறைக் கொள்கை முழுமையாக மாற்றி யமைக்கப்படுவதில் வெற்றி பெற்றுவிட்ட தாக, தூதரகத்திலிருந்து அனுப்பப்பட் டுள்ள கேபிள் ஒன்று புளகாங்கிதம் அடைந்து தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் ஒத்துழைப்பு
அமெரிக்காவின் செல்வாக்கு, அடுத்து அதிகமான அளவில் இடம்பெற்றுள்ள பகுதி ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை களில் ஏற்பட்டுள்ள கூட்டுறவாகும். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2005 ஜூனில் அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (குசயஅநறடிசம ஹபசநநஅநவே டிn னுநகநnஉந ஊடிடியீநசயவiடிn) கையெழுத்திட்டுள்ளது. அப்போது இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வாஷிங்டன்னுக்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களிடம் தெரிவிக்கையில், ‘‘இது வெறும் ஓர் ஆய்வுப் பயணம்தான்’’ என்று குறிப்பிட்டார். ஆனால் இது தொடர் பாக அமெரிக்கத் தூதர், அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பெல் டுக்கு அனுப்பியுள்ள கேபிள் அவரது நிகழ்ச்சிநிரலைத் தெளிவாகத் தெரிவித் துள்ளது. அப்போதுதான் மேற்படி பாது காப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தா கியது. இந்தியா மற்றொரு நாடுடன் இத் தகைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடு வது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பின் முழுப் பரி மாணத்தையும் இது தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்க அர சாங்கத்தின் ராணுவ மையமான பென்ட கனும் இவ்வாறு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒப்பந்தம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை யும் திட்டமிடலையும் மேற்கொண்டு வந் திருக்கிறது.

உளவுப்பிரிவுகளிலும் ஒத்துழைப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக் குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறைகளில் உயர்நிலை அள வில் வளர்ந்து வந்த ஒத்துழைப்பினை கேபிள்கள் தெளிவு படுத்துகின்றன. அப் போது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் அமெரிக்க அரசால், அந்நாட்டின் உளவுப் பிரிவுக ளான எப்பிஐ (FBI) மற்றும் சிஐஏ (CIA) போன்ற நிறுவனங்களுடன் மிக உயர்ந்த அளவிற்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முக்கிய நபராகப் பார்க்கப்பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் உளவு அமைப்புகளி லும், பாதுகாப்புத்துறை அமைப்புகளிலும் எந்த அளவிற்கு அமெரிக்கர்கள் ஊடுருவி யிருக்கின்றனர் என்பதை அனுப்பப்பட் டுள்ள கேபிள்களை மேலோட்டமாகப் பார்த் தாலே தெரிந்துகொள்ள முடியும். பிரிட்டிஷ் நாளேடான தி கார்டியன், முதலில் 40 கேபிள்களை வெளியிட்டது. அவற்றில் இரண்டு கேபிள்கள் முறைகேடான தொடர் புகள் குறித்தவைகளாகும். ஒன்றில், நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோச னைக் குழு உறுப்பினர் ஒருவர், அமெரிக் கத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்தித்து, இந்தியாவில் ஈரானியர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியத் தக வல்களை அளிக்கிறார். அதற்குப் பிரதி பலனாக அவர் அமெரிக்காவிற்குப் போய் வர ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மற் றொன்றில், நம் நாட்டில் உள்ள பயங்கர வாதம் தொடர்பான தகவல்களை அதிகாரப் பூர்வமாகப் பெறுவதை விட, தில்லி காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரியிடமிருந்து நேரடியாகவே பெற் றுக் கொள்ளலாம் என்று தூதரகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள கேபிள் களில் ஒன்று, 2006இல் நடைபெற்ற மத் திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர் பானது. இதில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ‘கெயில்’ (GAIL) நிறுவனத் தில் பணிபுரியும் ‘‘நம் தொடர்பாளர்’’ என்று ஒருவர் குறித்து குறிப்பிடுகிறது. இவ்வாறு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களிலிருந்து அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிலிருந்து மட்டுமல்ல, அரசின் பல்வேறு அமைச்சகங்களிலிருந்தும் மற் றும் நிர்வாக எந்திரங்களிலிருந்தும் தக வல்களைப் பெற்றிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

ஊடுருவலும் ஒற்றாடலும்

இரு நாடுகளுக்கும் இடையிலான உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ப தானது அமெரிக்கர்கள் ஊடுருவலுக்கு நன்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. அமெ ரிக்காவிற்காக ஐந்தாம்படை வேலை பார்த்த இரு ஒற்றாடல்கள் தெரிய வந் திருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிக்காலத்தில், ரவீந்தர் சிங் என்கிற நபர், அமெரிக்காவின் சிஐஏவால் நம் நாட்டின் ‘ரா’ (RAW)அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அமெ ரிக்காவுடனான தொடர்பு அம்பலமானவு டன், சிஐஏ-இன் உதவியுடன் அமெரிக்கா விற்குப் பறந்தோடி விட்டார். அதேபோன்று ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் பணி யாற்றிய விஞ்ஞானி (SYSTEMS ANALYST) ஒருவரும், சிஐஏ-ஆல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவைச் சார்ந்திருப்பது என்பது 2005-2008 கால கட்டத்தில் அதிகரித் திருப்பதை கேபிள்கள் தெளிவாக்குகின் றன. அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத் தின் மூலம் தன் நாட்டின் அனைத்து நலன்களையும் இந்தியாவை ஏற்க வைப் பதற்கு, அரசாங்கத்தின் ஒவ்வொரு கண் ணியையும் பயன்படுத்திக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரா னுக்கு எதிராக 2005 செப்டம்பரிலும் அத னைத் தொடர்ந்து 2006 பிப்ரவரியிலும் வாக்களித்தபின், 2006இல் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டம் ஒன்று, அமெரிக்கா விரும் பியதைப் போல துர்க்மெனிஸ்தான் - ஆப் கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தில் இணைந்து கொள் ளத் தீர்மானித்தது. அமெரிக்கர்களால் கோரப்பட்டதுபோல் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தை குப் பைத்தொட்டியில் தூக்கிப் போடுவதற்கான தொரு தெளிவான சமிக்ஞையாக இது அமைந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் நம் நாட்டின் ராணுவத்திலும் மற்றும் பல் வேறு பாதுகாப்பு அமைப்புகளிலும் இரு நாடுகளும் கூட்டாகப் பயிற்சிகள் மேற் கொள்வது குறிப்பிடத்தக்க அளவில் அதி கரித்தது. அமெரிக்காவின் கப்பல் படை யைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் நம் நாட்டின் துறைமுகங்களிலும் விமானத் தளங்களிலும் வந்து எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவும், அவற்றை இயக்கிக் கொள்ளவும், மற்றும் பல்வேறு பணி களைச் செய்துகொள்ளவும் அனுமதித்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதையும் கேபிள் கள் தெளிவுபடுத்துகின்றன. மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்பந்தத்திற் கான வரைவு தாக்கல் செய்யப்படுகையில், இடதுசாரிக் கட்சிகள் இதனைக் கடுமை யாக எதிர்த்தன.

காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துதல்

2006இல் மத்திய அமைச்சரவை விரி வாக்கம் செய்யப்பட்ட சமயத்தில், தனக்குச் சாதகமான நபர்களை அமைச்சர்களாக் கிடக்கூடிய வகையில் காங்கிரஸ் கட்சியின் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி யதை மற்றொரு கேபிள் வெட்டவெளிச்ச மாக்குகிறது. அமைச்சரவை மாற்றியமைக் கப்படுவது தொடர்பாக அமெரிக்கத் தூதர் மதிப்பிட்டிருப்பதாவது: ‘‘அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபின் அமைந்துள்ள அமைச்சரவையானது, இந்தியாவிலும் (ஈரானிலும்) அமெரிக்காவின் குறிக்கோள் களை நிறைவேற்றக் கூடிய வகையில் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது.’’ அந்த அறிக்கையில் மிகவும் வலுவான அமெரிக்க ஆதரவு அமைச்சர்கள் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. முரளி தியோரா, கபில் சிபல், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகிய ஐவருமே அவர்களாவார்கள். மாற்றியமைக்கப்பட் டுள்ள அமைச்சரவை குறித்து இடதுசாரி கள் சீற்றம் அடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை சரியாகக் குறிப்பிட்டிருக் கிறது. மேலும் அந்த அறிக்கையில், ‘‘இவ் வாறான அமைச்சரவை மாற்றம், அமெ ரிக்கா பக்கம் அரசு சாய்ந்துகொண்டிருப்ப தையே காட்டுகிறது என்று கூறி இடது சாரிகள் காங்கிரசிடம் கொண்டிருந்த நட்புற வினை முறித்துக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மேலும் ஐ.மு.கூட்டணி அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களையும் அயல்துறைக் கொள்கை தொடர்பான முன்முயற்சிகளையும் எதிர்க் கத் தொடங்கிவிட்டார்கள். அவை வர விருக்கும் காலங்களில் அரசியல் வான வேடிக்கைகளை அளித்திடும்’’ என்றும் உய்த்துணர்ந்திருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றியமைக் கப்பட்டு, அவருக்குப் பதிலாக முரளி தியோரா அமர்த்தப்பட்டது தொடர்பாக தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க அமெரிக்கத் தூதர் தயங்கவில்லை. மணி சங்கர் ஐயர் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய்வழித் திட்டத்திற்கு முன்முயற்சிகள் எடுத்ததும், சீனத்திற்குச் சென்று வந்ததும்தான் அமெ ரிக்காவின் கோபத்திற்குக் காரணமாகும். மாறாக அவரது இடத்தில் அமெரிக்க ஆதர வாளரும், பெரும் முதலாளிகளுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவருமான முரளி தியோரா அமர்த்தப்பட்டது வெகு வாகப் புகழப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், அரசின் ஒவ்வொரு துறையிலும் செல் வாக்கு செலுத்தவும், ஊடுருவிடவும் அமெ ரிக்கர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டி ருக்கின்றன. இவ்வாறு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டமைக்காக அமெரிக்கர்களைக் குறைகூறுவதில் பயனில்லை. மிகவும் சரி யாகச் சொல்வதென்றால், ஐ.மு.கூட்டணி அரசாங்கம்தான் 2007இல் தேர்வு செய் யப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அமெரிக் காவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழ கங்களில் பயிற்சித் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி யுள்ளது. அவர்கள் சிவில் ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது ராணுவத்தின் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனை வரும் அமெரிக்கா சென்று பயிற்சி எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

அரசியலில் ஊழல்

இந்தியாவின் அரசியலமைப்பு முறை யில் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்களை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவ தைப் பல கேபிள்கள் படம்பிடித்துள்ளன. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கு, மிகப் பெரிய அளவில் பணம் பயன்படுத்தப்பட் டது தொடர்பான கேபிளானது அமளி ஏற் படக் காரணமாக அமைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு மன்மோகன்சிங் அரசாங்கம் எதை வேண் டுமானாலும் செய்திட வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏனெனில் அப்போதுதான் அணுசக்தி ஒப் பந்தத்தை செயல்படுத்திட முடியும். எந்த வழிமுறையாக இருந்தாலும் - அது நேர் மையானதா அல்லது நெறிபிறழ்ந்ததா என்பது பற்றி - அமெரிக்காவிற்குக் கவ லையில்லை. அனைத்தும் அதற்கு ஏற்பு டையதுதான். சென்னை தூதரக அலுவல கத்திலிருந்து சென்றுள்ள ஒரு கேபிள், திமுக, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போதும், மதுரை மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்த லின்போதும் எப்படி எல்லாம் வாக்காளர் களுக்குப் பணம் விநியோகித்தது என் பதை மிகவும் துல்லியமாக அனுப்பியிருக் கிறது. இவ்வாறு நம் நாட்டின் அரசியலில் ஊழல் அரசியல்வாதிகள் யார் யார் என் பதையும் அவர்களை எப்படியெல்லாம் வாங்கிட முடியும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறிந்து வைத்திருந்தது.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக விருந்த சமயத்தில் நாட்டில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் எந்த அள விற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டின என் பதை பல கேபிள்கள் தெளிவாக்குகின்றன. அணுசக்தி ஒப்பந்தமானது நம் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, அமெ ரிக்காவின் நலன்களையே அதிகமான அளவில் முன்னெடுத்துச் செல்லும் என்ப தால் அது எப்படியும் கையெழுத்தாகிவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த தற்குப்பிறகு ஏற்பட்ட மாபெரும் விஷய மாக அணுசக்தி ஒப்பந்தத்தை பிரதமர் மன் மோகன் சிங்கும் அவரைச் சுற்றியுள்ள கும்பலும் பார்த்தன. அணுசக்தி ஒப்பந்த மானது, தன் நாட்டின் ஒருசில பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டக்கூடிய வெறும் வணிகப் பயன்பாடாக மட்டும் அமெரிக்கா பார்க்கவில்லை, மாறாக இந்தியாவை தன் னுடைய கேந்திரமான ராணுவக் கூட்டாளி யாகவும் மாற்றிடக் கூடிய ஒன்று என்பதை பல கேபிள்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

பிரதமரும் காங்கிரஸ் தலைமையும் நாட்டை அடகு வைத்து இவ்வாறு ஒப்பந் தம் செய்துகொள்கிறோமே என்று கொஞ் சம்கூட கூச்சநாச்சம் எதுவுமின்றி இந்த ஒப்பந்தத்தைச் செய்திட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள், அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்தக் கேபிள்கள் சரிபார்க்கத்தக்கதல்ல என்றும் அவற்றை அதிகாரப்பூர்வமான தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய அயல் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கேபிள்கள் கசிவு குறித்து எச்சரித்திருப்பதோடு, அவற் றால் ஏற்படக்கூடிய தர்மசங்கடமான நிலை மைகள் குறித்தும் பேசியிருப்பதிலிருந்து இது ஒரு பரிதாபகரமான சாக்குப்போக்கு தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை நாட்டை எந்த அளவிற்கு அமெ ரிக்காவின் காலடியில் வைத்திருக்கிறது என் பதை மிகவும் துயரார்ந்த முறையில் விக்கி லீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, March 23, 2011

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி - ஹர்கிசன்சிங் சுர்ஜித்





நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங் புரிந் திட்ட தியாகம், எனக்குத் தனிப்பட்ட முறை யில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பகத் சிங்கின் உச்சபட்ச தியாகத்தால் உத்வேகம டைந்து, நான் கல்வி கற்பதைக் கைவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகக் குதித்துவிட்டேன். பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்குமேடையில் வெளிப்படுத் திய வீராவேசம் மட்டுமல்ல, அவர்கள் புதி தாகப் பின்பற்றத் தொடங்கிய விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் இதற்குக் காரண மாகும். விஞ்ஞான சோசலிச சிந்தனைகள் அந்த சமயத்தில் அனைவரையும் வேகமாக ஈர்த்து வந்தன. அக்டோபர் புரட்சி மற்றும் அதன் சிந்தனைகள் 1922இல் லாகூரிலிருந்து வெளிவந்த “இன்குலாப்”, 1923இல் ஜலந்தரி லிருந்து வெளிவந்த “தேஷ் சேவாக்”, 1926இல் அமிர்தசரசில் இருந்து வெளிவந்த “கிர்திக்” (தொழிலாளி) போன்ற வெளியீடு களில் அவை தெளிவுபடுத்தப்பட்டன. இந்த இதழ்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக் கள், பகத்சிங் மீது அழிக்கமுடியாத அளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பகத்சிங், தில்லி நாடா ளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோது, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட தன் மூலமாக, அம்முழக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசென்று விட்டார். “நான் எந்தத் தனிப்பட்ட நபரையும் குறி வைத்து இந்த வெடிகுண்டை வீசவில் லை. மாறாக, 1919 மாண்ட்போர்ட் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடாளு மன்றத்திற்கு எதிராகவே இதனைப் பயன் படுத்துகிறேன்” என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தார். ஒரு ஜனநாயக முறையில் செயல்படும் நாடாளுமன்றம் என்று பகட்டான முறையில் பிரிட்டிஷார் சொல்லிக் கொண்டி ருந்தாலும், உண்மையில் அது “சுரண்டல் பேர்வழிகளின் குரல் வளையை நெரிக்கும் அடையாளச் சின்னம்” என்று பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் தங்களுடைய அறிக் கையில் கூறினார்கள். தொழிற்சங்க இயக்கத் தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்டதற்கு (மீரட் சதி வழக்கு தொடர் பாக கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட தற்கு) எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி டும் ‘தொழில் தகராறு சட்டமுன்வடிவிற்கு’ எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக் கையில் இறங்கினோம் என்று தங்கள் அறிக் கையில் அவர்கள் மேலும் பிரகடனம் செய் தார்கள்.

இந்த இளம் புரட்சியாளர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது அறிக்கையிலி ருந்து மிகத் தெளிவாக உலகுக்குத் தெரிய வந்தது. “ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசி யம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழி லாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீ கரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன் னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப் படுவதேயாகும்,” என்று அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, காந்தி இப்புரட்சியா ளர்களின் வீரஞ்செறிந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்மறையான அணுகுமுறையைக் கையாண்டார். ஆயினும், பகத்சிங் மேற் கொண்ட வழிகளைக் கண்டிப்பதற்காக, காங் கிரசாரை அணி திரட்டுவதற்கு அவர் மேற் கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமாகவே இருந்தன.

பகத்சிங், நாட்டுப்பற்றும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாமா அஜீத்சிங், 1905ஆம் ஆண்டு காலனிமய சட்டத்திற்கு (ஊடிடடிnளையவiடிn ஹஉவ) எதிராகப் போராடிய முன்னோடி. இதன் காரணமாக நாடு சுதந்திரம் அடையும் வரை யில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். அப்போ தும் அவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பகத்சிங் தந்தையும், தேச விடுத லைக்கான போராட்டத்தில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டவர்தான். இத்தகைய பாரம்பரியம்தான் இயற்கையா கவே பகத்சிங்கிடமும் வீரத்தை விளைவித் திருந்தது. மாணவப் பருவத்திலேயே அவர் புரட்சியாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட் டார். அக்டோபர் புரட்சி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்தரப்பிரதேசம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பல கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தன.

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதுபோல, சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பரப்பிடும் வகையில் ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கி இருந்தன. பகத்சிங், ‘‘கிர்த்தி’’ (தொழிலாளி) இதழுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இதழ் கதார் கட்சி சார்பாக அமிர்தசர சில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர் பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பகத்சிங், இம்மாத இதழின் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளின் ஆசிரியர்களான சோஹன் சிங் ஜோஷ் மற்றும் ஃபெரோசிதீன் மன்சூர் ஆகி யோருடன் இணைந்து பணியாற்றினார். இதன் வாயிலாக மார்க்சிசம்-லெனினிசத் தை மேலும் ஆழமாகக் கற்றிட பகத்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது,. அதன் காரணமாக, இந்தி யப் புரட்சியின் பாதை மார்க்சிச - லெனினிச வழியிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பகத்சிங் முடிவுக்கு வந்தார்.

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கி யங்கள் மிகவும் குறைவு. மார்க்ஸ் தேர்வு நூல் கள் சிலவற்றின் பிரதிகளைத் தவிர, கம்யூ னிச சித்தாந்தம் குறித்த மங்கலான தெளி வற்ற சில வெளியீடுகளே வெளிவந்திருந்த காலம். பகத்சிங் மாணவராகப் பயின்று கொண் டிருந்த தேசியக் கல்லூரி, இந்த சிந்தனை களைப் பரப்பிடும் மையமாக அப்போது திகழ்ந் தது. இக்கல்லூரியின் முதல்வர் சபிலிதாஸ். இவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இவர் சோசலிசம் பற்றி எழுதிய பல பிரசுரங்கள் புகழ்பெற்றவைகளா கும். இப்பிரசுரங்களில், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறை காணப்படவில்லை எனினும், சோசலிச சிந்தனையை நோக்கி மக்களைக் கவர்ந் திழுக்கும் பங்கினை இவையாற்றின.

இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத் திருக்கக் கூடிய அளவிற்கு, அபரிமிதமான அளவில் கம்யூனிச நூல்கள் கிடைக்காத அந் தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்க ளும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்டுகள் அள விற்கு மார்க்சிச- லெனினிச அறிவியல் மற் றும் சித்தாந்தம் குறித்து ஞானம் பெற்றிருப்பார் கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது, எதிர் பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்திட்ட குறைந்த அளவிலான நூல் களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ் சாநெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந் தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலி ருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர் களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. இது தான், அவர்கள் வீரமரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் புகழடைய வைத்திருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவு களை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்ட சமயத்தில், நாடு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தி யில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. மக்கள் மத்தியில் வெளிப்பட்ட இத்தகைய ஆவேச உணர்ச்சி அலை காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களைத் திருட்டுத்தனமாக அப்புறப்படுத்தி எரியூட்டினர்.

அவர்களது வீரச் செயல்கள் நாடு முழுவ தும் அலை அலையாகப் பிரதிபலித்தது. வீரத் தியாகிகளின் லட்சியத்தின் மீது மக்கள் மத்தி யில் பற்று ஏற்பட்டது. சோசலிசம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண் டும் என்கிற அவா வளர்ந்தோங்கியது. மக்களின் உணர்வு வெளிப்பாடு காங்கிரஸ் கட்சிக்குள் ளும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விவாதங்களின்போது, கட்சியில் கணிசமான பகுதியினர் பகத்சிங் மற்றும் தோழர்கள் கொல் லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது வீரமரணமும், அவர்கள் நீதிமன் றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரச்சாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின.

பகத்சிங் எழுத்துக்களை நுணுகி ஆராயும் போது, பகத்சிங் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெ டுத்தபின், தனக்குக் கிடைத்த அனுபவங்க ளின் அடிப்படையில், நாட்டில் தன் முன்னி ருந்த யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதையும் அதன் தொடர்ச் சியாக அரசியல் மற்றும் சித்தாந்தத் தெளிவு பெற்று, சோசலிச லட்சியத்திற்காகத் தன் னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என் கிற நிலைக்கு வந்தார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இன்று தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்

(தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், 14.11.1995இல் எழுதிய கட்டுரை)

தமிழில்: ச.வீரமணி

Sunday, March 20, 2011

யாருக்காக ஆட்சி செய்கிறார்கள்?

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்துள்ள வருமான வரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழலில் இவர்கள் அடித் தக் கொள்ளையைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாகும். ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களிடமிருந்து வசூலிக்கும் தொகை யை வசூலிக்காமல் தள்ளுபடி செய்வது என்பது ஒவ்வோராண் டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2005-06ஆம் ஆண் டில் இவர்கள் தள்ளுபடி செய்த தொகை 34 ஆயிரத்து 618 கோடி ரூபாய்களாகும். இப்போது சமர்ப் பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் இவ்வாறு இவர்கள் தள்ளுபடி செய்திருப்பது, 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள். 155 விழுக்காடு உயர்வு. அதாவது ஆட்சியாளர் கள், சராசரியாக நாளொன்றுக்கு 240 கோடி ரூபாய் தொகையைக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கி றார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள் என்பது கார்ப்பரேட் முதலாளிகள் தரவேண்டிய வருமான வரியை வசூலிக்காமல் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே. இதில் அவர் களிடமிருந்து வசூலிக்க வேண் டிய வருவாய் தொகைகள், வசூ லிக்காமல் கைவிட்ட தொகை (சநஎநரேந கடிசநபடிநே) சேராது. தங் கம், வைரம் போன்றவைகள் மேல் வசூலித்து வந்த சுங்கத் தீர் வையை அரசாங்கம் கைவிட்டி ருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 48 ஆயிரத்து 798 கோடி ரூபாய் களாகும். இதில் பாதி அளவுத் தொகையை செலவு செய்தாலே, நாட்டில் உள்ள மக்கள் அனை வருக்குமான பொது விநியோக முறையை வெற்றிகரமாக அமல் படுத்திட முடியும். கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் ஆட்சியா ளர்கள் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களுக்கு விதித்து வந்த சுங்கத் தீர்வையைத் தள்ளுபடி செய்திருப்பதன் மதிப்பு என்பது 95 ஆயிரத்து 675 கோடி ரூபாய் களாகும்.

ஆனாலும் மக்களை மடையர் கள் என்று நினைத்துக் கொண்டு இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் சொல்லும் விளக்கம் என்ன தெரி யுமா? இவை எல்லாம் ஏழைகள் நலமுடன் வாழ மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளாம். தங்கத் திற்கும் வைரத்திற்கும் இவ்வாறு பெரிய அளவில் சுங்கத் தீர்வை தள்ளுபடி செய்திருப்பதற்குக் காரணம், உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட் டுள்ள ஏழைத் தொழிலாளர் களைக் காப்பதற்காகவாம். என்னே கரிசனம்? சூரத்தில் தங் கம் மற்றும் வைர நகைக ளைச் செய்து வந்த ஒரியா தொழிலாளர் கள் வேலையிழந்து தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விட்டார்கள். வேலையிழந்த பலர் தற்கொலைப் பாதையைத் தேர்ந் தெடுத்துள்ளார்கள். இவர்களில் ஒருவரைக்கூட அரசின் இந்நட வடிக்கை காப்பாற்றியதாகத் தெரி யவில்லை. இவ்வாறு ஆட்சியா ளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் முதலாளி களுக்கு சலுகை அளிப்பது 2008 இலேயே தொடங்கிவிட்டது. ஆயி னும் கடந்த மூன்றாண்டுகளில் இம்மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 1800 பேர் வேலை யிழந்து வருகிறார்கள்.

இவை மட்டுமல்ல, வேறு எந்தெந்த விதங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் முத லாளிகளுக்குச் சேவகம் செய்கி றார்கள் என்று பார்ப்போம். கார்ப்ப ரேட் முதலாளிகள் நடத்தி வரும் அதிநவீன மருத்துவமனை களுக்கு இறக்குமதி செய்யப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மட்டும் இவ்வாறு 1 லட்சத்து 74 ஆயிரத்து 418 கோடி ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து விலக்கு அளிக்கப்பட்டி ருக்கிறது.

அதேபோல் கலால் வரியிலும் 1 லட்சத்து 98 ஆயிரத்து 291 கோடி ரூபாய்கள்அளவிற்கு வர வேண்டிய வருவாய் வசூலிக்கப் படாமல் கைவிடப்பட்டிருக்கி றது. சென்ற ஆண்டு இத்தொகை 1 லட்சத்து 69 ஆயிரத்து 121 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறாக ஆட்சியாளர்கள் 2005-06ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் கார்ப் பரேட் முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் ரத்து செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 21லட்சத்து 25 ஆயிரத்து 023 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மூலம் அடித்த தொகை யைப் போல் 12 மடங்கு. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே இந்த அளவிற்கு அரசின் கஜா னாவிற்கு வரவேண்டிய தொகை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள் ளித்தரப்பட்டிருக்கிறது.

நாட்டின் அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவுத் தேவையை உத்தர வாதப்படுத்து என்று கோரினால், அதற்குப் பணத்திற்கு எங்கே போவது என்று புலம்பும் ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களுக்கு கடந்த ஆறு ஆண்டு களில் அள்ளித்தந்துள்ள தொகை 21 லட்சம் கோடி ரூபாய்கள்.

ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம் என்று கூறு பவர்களும், சாமானியர் களுக்காகவே ஆட்சியில் இருக் கிறோம் என்று கூறுபவர்களும் உண்மையில் யாருக்காக ஆட்சி யில் இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விவரங்களிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா?

-ஆதாரம்: பி. சாய்நாத், நியு ஏஜ் வார இதழில் எழுதிய கட்டுரை

ச.வீரமணி

குற்றவாளிக் கூண்டில் மன்மோகன் அரசு

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 அரசாங்கம், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஜூலையில் தன்னிச் சையாக முடிவெடுத்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எம்.பி.க்களின் வாக்குகளை வாங்குவ தற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் மேற் கொண்ட இழி செயல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப் படுத்தி இருக்கிறது.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள விபரங்கள் ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கமானது, எந்தஅளவிற்கு மிகவும் ஆழ மாக அமெரிக்க அரசாங்கத்தின் ‘‘ராணு வக் கூட்டாளி’’யாக இந்தியா மாறு வதை உத்தரவாதப்படுத்தக்கூடிய அள விற்குப் பணிந்து போயிருக்கிறது என் பதை ஏராளமான ஆதாரங்களுடன் சுட் டிக்காட்டி இருக்கின்றன. இந்த விப ரங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறது என்பதையும், அதன் கேடுகெட்ட அரசியல் சந்தர்ப் பவாதத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நம் நாட்டிலும் மற்றும் உலகம் முழுதும் பார்த்திட்ட மக்கள், எந்த அளவிற்கு நம் நாடாளுமன்ற ஜன நாயகம் மோசமாகிக் கொண்டிருக் கிறது என்பதைக் கண்டனர். அப்போது மக்களவையின் சபாநாயகராக இருந்த வர், இவ்வாறு ‘எம்.பி.க்களின் வாக்கு களைப் பெற பணம்’ வந்த விபரங்கள் குறித்துப் புலனாய்வு செய்திட ஒரு குழுவை நியமித்தார். அக்குழுவும் தன் அறிக்கையை அவையில் தாக்கல் செய் தது. அதில் கிரிமினல் நடவடிக்கை களில் ஈடுபட்ட பேர்வழிகள் மீது உரிய அமைப்புகள் மூலம் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும் என்று பரிந் துரைத்திருந்ததாக நம்பகமான தக வல்கள் மூலம் தெரியவருகிறது. ஆயி னும், இதுவரை இதன்மீது உருப்படி யான நடவடிக்கை எதுவும் மேற்கொள் ளப்படவில்லை.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள உண்மைகள், இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரு மகனும் முழுமையாக சம்பந்தப்பட் டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. மேலும் அவற்றில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும், சோனியா காந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட’’ ஒரு காங்கிரஸ் எம்.பி., குறித்தும் நேரடியாகப் பல விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, இந்த நிகழ்வு தொடர்பாக முறையாகப் புலனாய்வு நடைபெற்றிருந்தால், ஆளும் கட்சியும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி களும் மிகவும் சங்கடத்திற் குள்ளாகி இருக்கும். அதனால்தான் நாடாளு மன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரை கள் மீது உரிய நடவடிக் கைகள் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தால் எடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.

பிரதமரும் ஐ.மு.கூட்டணி அர சாங்கமும் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நாடா ளுமன்ற ஜனநாயகத்தை ஊனப்படுத் தியுள்ள இந்த இழி செயல்களில் ஈடு பட்ட - இப்போது விக்கிலீக்ஸ் வெளிப் படுத்தியுள்ள - பிரதான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குற்றச் செயல்கள் குறித்துப் புலனாய்வு மேற்கொள்ள உடனடியாக அரசு முன் வர வேண்டும். கிரிமினல் நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்களைக் குற்ற வாளிக் கூண்டிற்குக் கொண்டுவரு வதன் மூலம், நம் நாட்டின் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் உயரிய மாண் பினை மீட்டெடுத்திட குறைந்தபட்சம் இதனைச் செய்திட வேண்டியது அவ சியமாகும்.

- தமிழில்: ச.வீரமணி

Wednesday, March 16, 2011

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைப் புனரமைப்பு செய்திட-போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்:மக்களவையில் பி.ஆர். நடராஜன் கோரிக்கை

புதுதில்லி, மார்ச் 16-
இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையைப் புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
‘‘தமிழ்நாட்டில் ஊட்டியில் இருக்கின்ற இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை எக்ஸ்ரே பிலிம்கள் உட்பட பல மிகவும் கேந்திரமான போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். 1991களில் இதன் ஊழியர் எண்ணிக்கை 4500 ஆகும். இப்போது 800ஆக சுருங்கி விட்டது. இவர்களில் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள் மற்றும் பழங்குடியினராவார்கள். மேலும் இந்நிறுவனம் பல்வேறு வழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்நிறுவனம் நலிவடையும் நிலைக்கத் தள்ளப்பட்டுவிட்டது. இதனை இயற்கையாக சவக்குழிக்கு அனுப்பிட அரசு உத்திகளை மேற்கொண்டு வருவதா நான் கருதுகிறேன்.

பட்ஜெட் மீது நிதியமைச்சர் உரையாற்றுகையில் எச்பிஎப் நிறுவனத்தை தமிழக அரசுடன் கலந்து பேசி புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளபோதிலும், அதற்காக கடந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ள போதிலும், 2011-12ஆம் ஆண்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாதிருக்கிறார். நிதி ஒதுக்கீடு சுத்தமாக இல்லாமல் புனரமைப்பு எப்படிச் சாத்தியம் என்று புரியவில்லை. எனவே போதிய நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு எச்பிஎப் நிறுவனத்தை புனரமைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

20 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு இல்லாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிக்கும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசுமுன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
--

(ச.வீரமணி)

மக்களைப்பற்றிக் கவலைப்படாத மிகவும் கொடூரமான பட்ஜெட்: ப்ரண்ட்லைன் தலையங்கம்

தொடர்ந்து மெகா ஊழல்களில் சிக்கிக் கறைபடித்துள்ளதோர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் முன் பெரும் சவாலாக உருவாகியுள்ள பண வீக்கத்தைக் கட்டுப்படுத்திடுவதிலோ, பெரும்பகுதி மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்திடவோ முற்றிலுமாகத் தவறிவிட்டது. வருவாய் தொடர்பான முன்மொழிவுகளில் அரசு, வசதி படைத்தோருக்கு, குறிப்பாக கார்பரேட் துறையினருக்கு, குறிப்பிடத்தக்க அளவில் வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்வதற்காக, பணவீக்கம் என்னும் தீயை மேலும் கொழுந்துவிட்டெரியச் செய்திடும் வகையில், மறைமுக வரிகளை அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள்கள் மீது அளித்து வந்த மான்யங்களை வெட்டிக் குறைத் திருக்கிறது. மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் வகைசெய்துள்ளது. இத்துடன் 2009 ஏப்ரலுக்கும் 2011 மார்ச்சுக்கும் இடையே தனியாருக்குத் தாரை வார்த்த பங்குகளையும் சேர்த்தால் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரும். மேலும் 2010-11 ஆம் ஆண்டுடன் 2011-12 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்காக இருக்கக்கூடிய நாட்டுப்புற ஏழை மக்களின் வளர்ச்சிக்காக விவசாயம், பாசனவசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து வந்த மத்தியத் திட்டச் செலவினங்கள் உண்மையான ரூபாயின் மதிப்பில் குறைந்திருப்பதையும் காண முடியும்.
பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2011-12ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய்களாகும். சென்ற 2010-11ஆம் ஆண்டில் இது 12 லட்சத்து 16 ஆயிரத்து 576 கோடி ரூபாய்கள். இவ்வாறு வெறும் 3.3 விழுக்காடு அளவிற்கே உயர்வு. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டமில்லா செலவினங்களுக்கான பட்ஜெட் தொகை 8 லட்சத்து 16 ஆயிரத்து 182 கோடி ரூபாய்கள். இது 2010-11ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் செலவினத் தொகையை விட 5 ஆயிரத்து 370 கோடி ரூபாய்கள் குறைவு. முக்கியமான மான்யங்கள் பலவற்றைப் பெருமளவில் வெட்டிக் குறைத்ததன் காரணமாகவே இந்தக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்து வந்த மான்யம் 14 ஆயிரத்து 746 கோடி ரூபாய் அளவிற்கும், உரங்களுக்கான மான்யத் தொகை 4 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கும், உணவு மான்யங்கள் 27 கோடி ரூபாய் அளவிற்கும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கியது தவிர திட்டமில்லா மூலதனச் செலவினம் 14 ஆயிரத்து 484 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக்கிறது. இது 2010-11 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினத்தைவிட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையாகும்.

அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையும் 50 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டிலிருந்த வருவாய் செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2011-12இல் அது 6 ஆயிரம் கோடி ரூபாய்களாக வெட்டப்பட்டிருக்கிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டச் செலவினத்தில், 2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 12.36 விழுக்காடு உயர்வு காணப்பட்டபோதிலும்கூட, இன்றைய பணவீக்கத்தின் காரணமாக ரூபாயின் உண்மை மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு என்பதும் உண்மையில் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில், அரசின் ஒட்டுமொத்த செலவினம் என்பது 2010-11ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படியான 15.4 விழுக்காட்டிலிருந்து, 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதீப்பீட்டில் 13.7 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

விவசாயத் துறைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் தனிக் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது மிகவும் விந்தையாக இருக்கிறது. உண்மையில் மத்தியத் திட்டச் செலவினங்களில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் மற்றும் பாசனவசதிக்கும் மிகச் சிறிய அளவிலேயே தொகை அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் வருவாய் செலவினத்தில் 70 ஆயிரத்து 213 கோடி ரூபாய்களாக இருந்தது, இப்போது 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 70 ஆயிரத்து 597 கோடி ரூபாய்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரூபாயின் உண்மை மதிப்பில் இது கணிசமான அளவிற்கு குறைவானதாகும். எனவே விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுவதில் பொருளேதுமில்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையை, அவர் சமர்ப்பித்துள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை (எகனாமிக் சர்வே)யுடன் சேர்த்துப் பார்த்தோமானால், கிடைத்திடும் முடிவு வேறாக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதற்கு உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் சந்தை அமைப்பிலும் உள்ள குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்த்துள்ள நிதி அமைச்சர், இதற்குப் பிரதான காரணம் சில்லரை வர்த்தக வலைப் பின்னல்தான் என்றும்கூறி, இதற்குத் தீர்வு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதே வழி என்கிற வரைக்கும் சென்றிருக்கிறார். கார்பரேட் நிறுவனங்களுக்குப் பிரியமான நிகழ்ச்சிநிரலை இவ்வாறு நிதி அமைச்சர் கூறியிருப்பதால்தான் கார்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஊடகங்களும் பட்ஜெட்டை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

மேலும் நிதி அமைச்சர் அவர்கள், ‘‘...மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதன் காரணமாக அவர்கள் வாங்கும் உணவுப் பொருள்களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருப்பதால்’’ என்றும் குறிப் பிட்டிருக்கிறார். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அரசின் திட்டங்களால் கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் உணவுப் பணவீக்கத்தின் விகிதமும் உயர்ந்துவிட்டதாகவும் எந்தவிதக் கூச்சநாச்சமுமின்றிக்கூறி வரும் அரசின் குரலையே நிதி அமைச்சர் அவர்களும் இவ்வாறு பிரதிபலிக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால்தான் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு அனுபவரீதியாக அர்த்தமேதுமில்லை. இவர்கள் பொருள்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையே பார்க்க மறுக்கிறார்கள். அரசாங்கமானது விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கும், உற்பத்தியாகும் பொருள்களை சேமித்து வைத்திட, பதப்படுத்திட, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து வசதிகளைச் செய்துதருதல் உட்பட கிராமப்புறத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வேலைகளை எல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்பரேட் துறையிடம் அளித்திட முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இதற்காக அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தொகைகளை அளித்திட உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பட்ஜெட் உரையில், உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமான ஊக வர்த்தகம் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித்திருக்கிறது.

தற்போதைய மக்களவை 2009இல் அமைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, தற்போதையக் குடியரசுத் தலைவர் அவர்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து ஓர் உறுதிமொழியினை அளித்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த உறுதிமொழி இன்னமும் உறுதிமொழியாகவே நீடிக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குளிர்பதன அறையில் வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. 2010-11 வருவாய் செலவினத்துடன் 2011-12 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் உணவு மான்யத்தில் கடுமையான அளவிற்கு குறைவு காணப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கு 2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசாங்கத்தில் சில குரல்கள் இதற்கெதிராக எழுந்துள்ள போதிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ்வாறு வசதிபடைத்தோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகள் 2009-10ஆம் ஆண்டில் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டிற்கு 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்களாக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது மிகச் சிறிய அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு நாயைக் கொன்று தொங்கவிடுவதற்கு முன் அது குறித்து மோசமாகக் கூறிடவேண்டும் என்பது ஒரு தந்திரம். அதேபோன்று வசதிபடைத்தோருக்கு அளித்தால் அது ஊக்குவிப்பு நடவடிக்கைகள். ஆனால் உணவுக்காகவும், எரிபொருள் களுக்காகவும் ஏழைகளுக்கு அளித்தால் அதன்பெயர் மான்யங்கள்.

நிறைவாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வரி வருவாயில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என்றும், 2010-11ஆம் ஆண்டைவிட 2011-12ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். நிதி அமைச்சரின் மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் கூர்மையாக உயர இருக்கின்றன. இதனால் முன்னெப்போதையும்விட கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாமர மக்கள்தான். இவ்வாறு மத்திய பட்ஜெட்டானது நாட்டில் வறிய நிலையில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரப் போவதில்லை.

(தமிழில்: ச.வீரமணி)

மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல-இடது ஜனநாயக முன்னணியை மீண்டும் வெற்றிபெறச் செய்திடுவோம்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் மேற்கு வங்கத்தில் அமைந்த இடது முன்னணியும் கேரளாவில் அமைந்த இடது ஜனநாயக முன்னணியும் தற்போதுள்ள முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசாங்கத்தின் கீழேயே, அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டே சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு எண்ணற்ற சாதனைகளைப் புரிந்திருக்கின்றன. ஆயினும் ஆளும் வர்க்கங்கள் தங்கள் சுரண்டலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை வேண்டுமென்றே மறைத்து வைத்திருக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள் உயர்த்திப் பிடித்துள்ள அரசியல் அறநெறி மற்றும் உயர்ந்த அளவிலான அவற்றின் தரம் இதர பகுதிகளில் ஆளும் வர்க்கங்கள் நம் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு முற்றிலும் எதிரான முறையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவ்விரு அரசாங்கங்களும் நாட்டில் ஜனநாயக இயக்கத்தின் வழிகாட்டிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், வேறெங்கும் நடைபெறாததொரு மகத்தான வரலாற்றைக் கேரள மக்கள் உருவாக்கி இருந்தார்கள். 1957இல் கேரள மாநிலம் உருவானபின், நடைபெற்ற முதல் தேர்தலில் மக்கள் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, ஆளும் வர்க்கங்கள், மக்களின் பேராதரவுடன் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் தலைமை தாங்கப்படும் ஒருஅரசாங்கத்தை சகித்துக் கொள்ளமுடியாது, ஜனநாயக விரோதமாக டிஸ்மிஸ்செய்தபோதிலும், இடதுசாரி அரசாங்கம் கடைப்பிடித்த மக்கள்நலஞ் சார்ந்த மாற்றுக் கொள்கையானது கேரளத்தின் அரசியலிலும் வளர்ச்சியிலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு, உண்மையில் இந்தியா பூராவிற்குமே, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரள மாநிலமானது, மனித வள வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள மாநிலமாகும், சில அம்சங்களில், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளைவிட முன்னேறியுள்ள பகுதியாகும். கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமானது மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. முறைசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிப் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு மாத மகப்பேறு விடுப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், நீண்டுகாலம் நீடித்துள்ள நோய்களுக்குக்கூட இலவச சுகாதாரக் காப்பீடு போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பொது விநியோக முறையில் மட்டுமல்லாது, ஒரு மிக விரிந்த அளவிலான வகையில் நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் 13 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித விலை உயர்வும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அமல்படுத்தப்பட்டு வரும் இஎம்எஸ்வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 50 லட்சம் வீடுகள் கட்டப்படுவது முழுமை யடைந்துவிட்டால், கேரளாவில் எந்தவொரு குடும்பமும் வீடில்லாமல் இருக்காது. கேரளாவில் 1957இல் அமைந்த இஎம்எஸ்அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவல் திட்டம் அங்கே ஜனநாயகத்தை நன்கு வலுப்படுத்தி இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் நடவடிக்கைகள் கேரள மக்களுக்கு விரிவான முறையில் பயனளித்திருக்கிறது.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் கடைப்பிடித்த மாற்றுக் கொள்கைத் திசைவழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசாங்கம் லாபம் ஈட்டும் பொதுத்துறைகளைக் கூடத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வெற்றி நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைக் கூட புனரமைத்து வலுவடைய வைத்திருக்கின்றன. 2005-06ஆம் ஆண்டில் 90 கோடி ரூபாய்கள் நட்டத்தில் இயங்கிய தொழில் பிரிவுகள் 2009-10ஆம் ஆண்டில் 240 கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கக் கூடியவைகளாக மாறி யிருக்கின்றன. இந்த உபரித் தொகை நடப்பில் உள்ள பொதுத் துறை தொழில் பிரிவுகள் விரிவாக்கத்திற்காக மீண்டும் முதலீடு செய்யப்பட்டு, புதிதாக எட்டு தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அநேகமாக நாட்டில், கேரளாவில் மட்டுமே இக்காலத்தில் புதிதாக பொதுத்துறை தொழில் பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சி அளித்துள்ள குறைந்தபட்ச அதிகார வரம்புக்குள்ளேயே கூட, மக்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை, மக்கள் நலஞ்சார்ந்த திட்டங்களை, மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை கேரள இடது ஜனநாயக முன்னணி மெய்ப்பித் திருக்கிறது. இதனால்தான் சமீபத்தில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் பல, கேரளாவில் ஆட்சிக்கு எதிரான உணர்வு (யவேi-inஉரஅநெnஉல) மக்கள் மத்தியில் இல்லை என்று தெரிவிக்கின்றன. கேரள மாநிலத்தில் ஒருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், மறுமுறை காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என்ற நிலை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த போதிலும், இந்த முறை நாம் மேலே விவரித்த காரணங்களால் அதனை மாற்றி அமைத்திட வேண்டும். கேரள மக்கள் இதுநாள்வரைப் பெற்று வந்த முக்கியமான ஆதாயங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும், அவை மேலும் விரிவான அளவில் எடுத்துச் செல்லப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு சொல்லும் அதே சமயத்தில், நம்மக்களுக்குச் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மாற்றுக் கொள்கைத் திசைவழியில் அகிலஇந்திய அளவிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறத் தேவையில்லை.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, March 1, 2011

உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தர்ணா photos







உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தில்லியில் மார்ச் 1 அன்று தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள். போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மனாபன், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா, சிபிஎம் கோவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அதிமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் செம்மலை மற்றும் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தில்லியில் தர்ணா








புதுதில்லி, மார்ச் 1-
ஊதியத் திருத்தம் கோரி, உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தலைநகர் தில்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ஊட்டியில் இருக்கின்ற இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை எக்ஸ்ரே பிலிம்கள் உட்பட பல மிகவும் கேந்திரமான போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். 1991களில் இதன் ஊழியர் எண்ணிக்கை 4500 ஆகும். இப்போது 800ஆக சுருங்கி விட்டது. இவர்களில் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். மேலும் இந்நிறுவனம் பல்வேறு வழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்நிறுவனம் நலிவடையும் நிலைக்கத் தள்ளப்பட்டுவிட்டது. இதனை இயற்கையாக சவக்குழிக்கு அனுப்பிட அரசு உத்திகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைக் கண்டித்தும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத் திருத்தம் அளிக்கக் கோரியும், இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எச்பிஎப் நிறுவனத்தைப் பாதுகாக்கும் குழு சார்பாக தில்லி நாடாளுமன்ற வீதியில் செவ்வாயன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆர். மோசஸ் மனோகரன் தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பீமன், சபி அகமது முன்னிலை வகித்தனர். இமகதகைஙள சங்கம், ஐஎன்டியுசி, ஏடிபி, சிஐடியு, எல்பிஎப் உட்பட அனைத்து சங்கங்களிலுமிருந்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மனாபன், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா, சிபிஎம் கோவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அதிமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் செம்மலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏ.கே.பத்மனாபன் வாழ்த்துரை வழங்குகையில், பட்ஜெட் மீது நிதியமைச்சர் உரையாற்றுகையில் எச்பிஎப் நிறுவனத்தை தமிழக அரசுடன் கலந்து பேசி புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளபோதிலும், அதற்காக சென்ற ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ள போதிலும், வரவிருக்கும் ஆண்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாதிருப்பதைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு இரட்டை வேடம் போடுவதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து எச்பிஎப் நிறுவனத்தை புனரமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
(தொகுப்பு: ச.வீரமணி)