Saturday, April 30, 2011

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம் : சுகுமால் சென்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலைமை கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை உரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிட, தனியார் நிறுவனங்களுக்கு நடைமுறையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எட்டு மணி நேர வேலை என்பதும், நாளின் மீதமுள்ள 16 மணி நேரம் ஓய்வு, மனமகிழ் நிகழ்வுகள் மற்றும் குடும்பத்தாரு டன் மகிழ்வுடன் இருப்பதற்கு என்கிற விதி படிப்படியாக அரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற் றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, உலகில் கடைப்பிடிக் கப்படும் நவீன தாராளமய உலகமயக் கொள் கைகளின் காரணமாகவும், உலக முதலா ளித்துவ நெருக்கடியின் விளைவாகவும் சுமார் ஐந்து கோடி தொழிலாளர்கள் வேலை களை இழந்துள்ளார்கள்.

கொள்ளை லாபமீட்டுவதே

கொள்கையாகிப் போனது

நவீன தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆட்சிகளினுடைய, லாப மீட்டும் கொள்கை மனித சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தோற்றத்தையே மாற்றிவிட் டது. அதனால்தான் எட்டு மணி நேர வேலை குறித்தோ, வேலையில் இருப்பவர் கள் வேலை யிலிருந்து வெளியேற்றப் படுவது குறித்தோ ஆட்சியாளர்கள் கவ லைப்பட வில்லை.

நவீன தாராளமயக் கொள்கை கடைப் பிடிக்கப்படும் ஓர் ஆட்சியில், வணிகம் நன்று, அரசாங்கங்கள் தீது. பெரும் வணிகம் மிகவும் நன்று, பெரும் அரசாங்கங்கள் மிக வும் தீது. பணக்காரர்கள் மீதான வரிகள் தீது, ஏழைகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற் கும் சமூக நலத் திட்டங்களுக்குச் செல விடுவதென்பது மிக மிகத் தீது. சமூகத்தில் மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு அதிகரிப் பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அவசியமானதும் கூட. சமூகத்தில் பணக்காரர்களாக இருப்பவர் கள் மேலும் பணக்காரர்களாகக்கூடிய வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் முதலீடுகளை அதிகரிப்பதற்கு அவை தூண்டுகோலாக அமையும். அதே போன்று ஏழைகள் கடின உழைப்பினை மேற்கொள்ள எப்போதும் ஆர்வத்துடன் முன்வரவேண்டும். சந்தைகள் தவறிழைக் காது. மனித சமூகத்தை ஒழுங்குபடுத்தும் உயர்ந்த மார்க்கம், சந்தைகள்தான். இவை தான் அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படையாகும். அரசாங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் மூலமாக இதில் தலை யிடுவது - அது என்னதான் நல்ல நோக்கத் துடன் இருந்தபோதிலும் - நீண்டகால ஓட்டத்தில் விஷயங்களை அவை மிகவும் மோசமாக்கிவிடும். ஏனெனில், இவை சந்தைத் தீர்விலிருந்து பிரச்சனைகளை வேறு வழிகளில் இழுத்துச் சென்று விடு கின்றன. சுதந்திர சமூகத்தில் அரசாங்கம் என்பது சந்தையின் அதிகாரத்தை உயர்த் திடவே முன்வர வேண்டும். சமூகத்தில் உள்ள எவரும் தங்கள் சொத்துக்களை எந்த விதத்தில் வேண்டுமானாலும் - அது நேர்மையாக வேண்டுமானாலும் இருக்க லாம் அல்லது மிகவும் இழிவான முறையில் வேண்டுமானாலும் இருக்கலாம் - பெருக் கிக்கொள்ள சுதந்திரம் உண்டு. இந்த வகை யில்தான், நவீன தாராளமயக் கொள்கை என் பது மூலதனத்திற்கு ஆதரவாக கூச்ச நாச்சமின்றி வாதிடுகிறது.

நவீன தாராளமயக் கொள்கை 1980 களில் ரீகன் - தாட்சர் காலத்தில் தலை தூக்க ஆரம்பித்தது. 1990களின் முந்தைய ஆண்டுகளில் சோசலிச நாடுகளில் பின் னடைவு ஏற்பட்ட சமயத்தில் இக் கொள்கை வேகமாக வளரத் தொடங்கியது. அப்போது, ‘‘வரலாறு முடிந்துவிட்டது என்று கூறி முதலாளித்துவம் புளகாங்கிதம் அடைந்தது. மார்கரெட் தாட்சர், ‘‘இனி மாற்று எதுவுமில்லை என்று கொக்கரித்தார்.

நவீன தாராளமயத்தின் தத்துவம்

நவீன தாராளமயத்தின் தத்துவமானது வசதிபடைத்தவர்கள் கைகளில் அதிகா ரத்தை ஒப்படைப்பதை நியாயப்படுத்து கிறது. ஆயினும் நவீன தாராளமயத்தின் திவாலாகிப்போன தன்மையும், முரண் பாடுகளும் 1990களின் இறுதியில் வெட்ட வெளிச்சமாயின. உலகமயத்திற்கு எதிரான இயக்கம், உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் களில் நவீன தாராளமயக் கொள்கைகள் மிகவும் விரிவான வகையில் நிராகரிக்கப் பட்டன. அதிலும் குறிப்பாக லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ‘‘வரலாறு முடிந்துவிட்டது’’ என்று கொக் கரித்தவர்களின் கூற்றுக்களைத் தரைமட் டமாக்கின. இந்த சமயத்தில்தான் முதலா ளித்துவம் பொதுவாகவும், ஊடக அமைப் புகள் குறிப்பாகவும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களைப் பெரும் அளவில் சார்ந் திருக்க வேண்டும் என்பதனைப் புரிந்து கொண்டன. நவீன தாராளமயம் அரசின் பாத் திரத்தை அழிப்பதற்கு முயலவில்லை. மாறாக அரசு என்பது முதலாளித்துவத்தின் நலன்களுக்கு அல்லது ஊடக கார்ப்ப ரேஷன்களின் நலன்களுக்கு மட்டுமே முழுமையாகச் செயல்பட வேண்டும் என்கிற முறையில் நவீன தாராளமயம் தன் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தகைய தத்துவார்த்தக் கண்ணோட்டத்துடன் ஊட கங்களின் அரசியல் பொருளாதாரம் புத்துயிர் பெற்றன. இந்த அடிப்படையில் அமெரிக் காவிலும், இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் ஊட கங்களால் பெருமளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டன. இன்றைய கால கட்டத் தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சிப் போக்காகும்.

ஊடகங்களின் பங்கு
நவீன தாராளமய சமூகத்தில் கார்ப்பரேட் டுகளின் ஊடகங்கள் முதலாளித்துவத் திற்கு மாற்று சாத்தியமே இல்லை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் நம்பும் அள விற்கு எடுத்துச் சென்றுள்ளன.

சர்வதேச மூலதனத்திற்கு சேவகம்
இன்றைய தினம் அமெரிக்காவில் மட் டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்கள் தங் கள் ஆளுகையை விரிவாக்கி இருக்கின் றன. அதீத அளவில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடக்கூடிய விதத்தில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மாறி யிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தாராளமயவாதிகள், தங்கள் சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்வதற்காக வகைதொகையின்றி ஊடகங்களுக்கு லஞ் சம் தர தயாராக இருக்கின்றனர்.

1880களில் சிகாகோவில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றபோது உலக முத லாளித்துவத்தின் நிலைமை வேறாக இருந் தது. அதன்பின்னர் உலக முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடைந்து, இன்றைய காலகட்டத்தில், நவீன தாராள மய உலகமயமாக உருவெடுத்து, மிக உக்கி ரமான வடிவத்தினைப் பெற்றுள்ளது.

உலக அளவில், இன்றைய தினம், தொழிலாளர் வர்க்கம் மிகவும் வஞ்சிக்கப் பட்ட வர்க்கமாக, பல்வேறு உரிமைகள் பறிக் கப்பட்ட வர்க்கமாக மாறியிருக்கிறது. பணக் காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத் தங்கள் உழைப்புச் சக்தியைக் கட்டாயமாகக் குறைந்த கூலிக்கு அளிக்கக்கூடிய அள வுக்கு மிகவும் மோசமானதாகத் தொழிலா ளர் வர்க்கம் மாறியிருக்கிறது. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்திருக்கிறது. ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பதென்பதும், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, குறைந்த கூலிக்கு வேலை செய்வ தென்பது போன்ற மே தின சகாப்தத்திற்கு முந்தைய நிலைமை இப்போது ஏற்பட்டி ருக்கிறது.

உலக அளவில், ஊடகங்களின் வெறித் தனமான பிரச்சாரங்கள், மக்களின் சிந்த னைகளையும் செயல்பாடுகளையும் மழுங் கடித்து வருகின்றன. அமெரிக்காவும், பல முதலாளித்துவ நாடுகளும் மிகவும் மோச மான முறையில் பொருளாதார நெருக்க டிக்கு ஆளாகிய பின்னர், அவை தொழிலா ளர் வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்தன. இருபதாம் நூற்றாண்டில் சமூக உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங் களை நடத்தி பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்த தொழிலாளர் வர்க்கம் படிப்படி யாக அவற்றை இழக்கக்கூடிய நிலை ஏற் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையிலிருக்கும் தொழிலாளர்களையும் கடுமையான முறையில் பாதித்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூல மாக பெற்றிட்ட எண்ணற்ற உரிமைகள் ஒவ் வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின் றன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமானது, வேலை இழப்புகள், வேலையிலிருப்போரை அதிக மணி நேரத் திற்கு வேலை வாங்குதல், பணிப் பாது காப்பின்மை, நியமனங்களில் ஒப்பந்தமுறை அமல், தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப் படுதல் போன்ற நிலைமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

சோசலிசத்திற்காக

போராடுவது ஒன்றே மாற்று

இன்றைய தினம் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட் டுள்ள விளைவுகளை முற்றிலுமாகத் துடைத்தெறியக் கூடிய வகையில் அணி திரளாமல், துண்டு துண்டான சில அற்பக் கோரிக்கைகளுக்காக நடத்திடும் போரா ட்டங்களால் மட்டும் வலுவடைந்து விடாது.

தொழிலாளர் வர்க்கம், தன்னுடைய புரட்சிகர லட்சியத்தையும் (ளவசயவநபல) அதனை அடைவதற்கான உத்திகளையும் (வயஉவiஉள) அறிந்திருந்தால் மட்டுமே அத னால் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறிட முடியும்.

இல்லாவிடில், இவர்களது போராட்ட அனுபவங்கள் அப்போதைக்கு அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள முதலாளித் துவக் கழிசடை சித்தாந்தங்களின் செல் வாக்கால் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களை சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாத நிலைகளை எடுக்க வைத்திடும். முதலா ளித்துவ அமைப்பை, தொழிலாளர்களுக்கு ஆதரவான ஓர் அமைப்பாக சீர்திருத்தி டவோ அல்லது நவீனப்படுத்திடவோ முடி யாது. முதலாளித்துவ அமைப்பு முறையா னது சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத சக்திகளின் கூட்டணிகளோடு தனக்குச் சாதகமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும். ஆயினும், முதலாளித்துவ அமைப்பு முறையை உறுதியாகவும் விடாப் பிடியாகவும் ஆதரிக்கும் ஒரு முதலாளித் துவ அரசாங்கத்தைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, தொழிலாளர்கள் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மீதுள்ள பிரேமைகளை அகற்றிட வெளிப்படையாக வும், ஒளிவுமறைவற்ற முறையிலும், நடை முறை நடவடிக்கைகளுடன் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட் டத்திற்கு மாற்று இல்லை என்பதை உறுதி யுடன் ஏற்றுக்கொண்டு, அதனை அடை வதற்கான போராட்டத்தில் தன்னை முழு மையாக இணைத்துக் கொள்ள தொழிலாளர் வர்க்கம் முன்வர வேண்டும். அது ஒன்று தான் வீரம் செறிந்த மே தினத் தியாகிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் மே தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடிட தொழிலாளர் வர்க்கத்திற்குப் பொருத்தமான செயலாக அமைந்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, April 20, 2011

இடதுமுன்னணிக்கு பெருகும் ஆதரவு -பிரகாஷ் காரத்

தற்சமயம் நாட்டில் நடைபெறும் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களைப் பொறுத்த வரை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெறும் தேர்தல்கள் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறேன். அவற்றின் வெற்றி நாடு முழுதும் உள்ள இடதுசாரிகள் தேசிய அளவில் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகப் பாதையில் முன்னேறுவதற்கு உதவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

கொல்கத்தாவில், தேர்தலையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள cpimwb.org/vote இணையதளத்திற்கு பிரகாஷ் காரத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

* தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்கள் குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?

கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் ஏற் கனவே முடிந்துவிட்டன. அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தி யில் கசப்புணர்வு வலுவாக இருப்பதை தெளி வாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது. அஸ்ஸாமில், காங்கிரஸ் கட்சியானது போடோ மக்கள் முன் னணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டி ருக்கிறது. கேரளாவில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. குறிப் பாக, கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான போக்கு (யவேi-inஉரஅநெnஉல வசநனே) எதுவும் இல்லை. எனவே மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே அமையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வாக் குப் பதிவு முடிந்தபின் உள்ள நிலைமைகள், அஇஅதிமுக தலைமையிலான முன்னணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்ஸாமில் சென்ற முறைகூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திடவில் லை. இந்தத் தடவையும்கூட அதேபோன்று எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் தேர்தல் முடிவுக்குப்பின் அமையும் கூட்டணியைச் சார்ந்தே ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன்.

* சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தட வை லஞ்சஊழலும் விலைவாசி உயர் வும் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறி யிருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் தாக்கம் கேரளாவில் எப்படி இருந்தது?

லஞ்சஊழலும் பணவீக்கமும் தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவற்றின் விளைவுகளை நன்றாகவே காண முடிந்தது. உண்மையில், இவ்விரண்டு பிரச்சனைகளும் மக்கள் மத்தி யில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் அனு கூலமான முறையில் நிலை கொண்டிருக் கிறது. லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை, காங் கிரசின் சித்திரம் (iஅயபந), அதிலும் குறிப் பாக மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக் கிருந்த மதிப்பு, பல்வேறு பெரும் லஞ்ச ஊழல் களினால் மிகவும் தாழ்ந்து போய் கிடக்கிறது.

* மேற்கு வங்கத்திலும் இப்பிரச்சனைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று கருதுகிறீர்களா?

விலைவாசி உயர்வும் லஞ்ச ஊழலும், மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கத்தை ஏற் படுத்திடும். ஏனெனில் நாடு முழுதும் மக்கள் ஊழலின் காரணமாக விளைந்துள்ள கேடு கெட்ட விளைவுகளை நன்கு உணர்ந்திருக் கிறார்கள். அதிலும் குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு சுதந்திரம் பெற்றபின் நடைபெற் றுள்ள ஊழல்களிலேயே பிரம்மாண்டமான ஊழலாகும். உதாரணமாக, தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஆண் - பெண் - குழந்தை கள் என அனைவரும் 2ஜி ஊழல் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். வங்கத்திலும் கூட, லஞ்ச ஊழல் சம்பந்தமாக நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் பதை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நிச் சயமாக நான் நம்புகிறேன். இங்குள்ள இடது முன்னணியும் லஞ்ச ஊழல் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் குறித்தும், அதில் ஓர் அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் வங்க மக்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருது கிறேன்.

* வங்கத்தில் ஆட்சியிலிருந்த ஏழாவது இடது முன்னணி அரசாங்கம் அதிக மாக ஒன்றும் சாதித்திடவில்லை என் றும், குறிப்பாக நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் அதன் ஆட்சிமீது களங்கத் தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குறைகூறப்படுகிறதே, அவ்வாறு குறைகூறுகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மேற்கு வங்க ஏழாவது இடது முன்னணி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சாதனைக ளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், இடது முன்னணி அரசாங்கமானது நிலமற்ற விவசா யிகளுக்கு 20 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களை மறுவிநியோகம் செய்திருக்கிறது. விவசாய வளர்ச்சியையும் தொடர்ந்து உறுதியாக மேற் கொண்டு வந்திருக்கிறது. அகில இந்திய மட் டத்தில் விவசாய வளர்ச்சி என்பது தேக்க நிலையை அடைந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் என்பது தேசிய சராசரியைவிட பன்மடங்கு அதிகமாகும்.

* மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான் மை இனத்தவரின் வளர்ச்சிக்கு இடது முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பங்கள் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கும் நிலத்தை விநி யோகம் செய்திருக்கின்றன. இவற்றில் முஸ் லிம் இனத்தவரும் அடங்குவர். வங்கத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங் களில் 18 விழுக்காடு முஸ்லிம் குடும்பங் களுக்குச் சென்றிருக்கிறது. முஸ்லிம் சிறு பான்மை இனத்தவருக்கு வேலைகளில் ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று ரங்க நாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந் துரைகளை அமல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் பெரிய அள வில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கி றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட் டில் உள்ள சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு களை எல்லாம் கணக்கில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கிறோம். முஸ்லிம் சிறு பான்மை இனத்தவரில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக் கீடு அளித்திருக்கிறோம். இதன் மூலம் மாநி லத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 1 கோடியே 72 லட்சம் மக்கள் பயன் அடைந் திருக்கிறார்கள். இவ்வாறு வேறெந்த அரசாங் கமும் - மத்திய அரசாங்கமும் சரி அல்லது வேறெந்த மாநில அரசாங்கமும் சரி - நடவடிக்கை எடுத்திட வில்லை.

* திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவர் வங்கத்தில் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்களில் சிலவும் மற்றும் அறிவு ஜீவிகளில் சிலரும் கருதுகிறார்களே, இதனை எவ்வாறு நீங்கள் விளக்கு கிறீர்கள்?

வங்கத்தில் இது தொடர்பாக ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கு முன்பும்கூட பலதடவை கள், அதிதீவிர இடதுசாரிகள் பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கைகோர்த் தது உண்டு. மேற்கு வங்கத்தில் இந்த நிலை மை வருவதற்குப் பிரதானமான காரணம், இங்கே இடதுசாரிகள் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதேயாகும். வலதுசாரி சக்தி கள், இடதுசாரிகளை முறியடிக்க சூழ்ச்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் இடது அதி தீவிரவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள் கிறார்கள். மீண்டும் அதேதான் இப்போதும் நடைபெற்றிருக்கிறது. திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்டுகளுடனும், மாவோ யிஸ்ட்டுகள் திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர் மத்தியில் பிரதிபலிக்கிறது.

* மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்த லில் நாட்டின் பிரதான தேசியக் கட்சி களான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் பங்களிப்பு என்ன வென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மிகவும் வலுவாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றாகக் குவிவதைப் பார்க்க முடியும். இதனை வெகு காலமாகவே கேரளாவில் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில், கேரளா வில், பாஜக-வினர் தங்கள் வாக்குகளை விற் கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றுவதில்லை, மாறாக உண்மையில் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயகக் முன்னணிக்கு விற் கிறார்கள். இங்கே, மேற்கு வங்கத்திலும் கூட, கிராமப்புறங்களில் விவசாயிகள் வர்க்க ரீதியாக அணிசேர்ந்திருப்பதன் காரணமாக பிற்போக்கு சக்திகளும் முன்னாள் நிலவுடை மையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார் கள். இவர்களில் சிலர் காங்கிரசில் இருக் கிறார்கள், சிலர் பாஜக-வில் இருக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் வருவதை விரும்ப வில்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத சக்திகள் இடதுசாரிகள் தலைமையில் அணிசேருவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இடது முன்னணியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கை கோர்ப்பது உசிதமானது என்பதே பாஜக-வினரின் அரசியலாகும். நரேந்திர மோடி இங்கே வந்திருந்தபோது அவர் மம்தா பானர்ஜியை வானளாவப் புகழ்ந் ததிலிருந்து இதனை நாம் பார்க்க முடிந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, இடது முன்னணிக்கு மாற்றாக பாஜக குறிப்பிடத் தக்க பங்கு எதனையும் ஆற்றப் போவதில் லை. எனவே அது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஆற்றிய உரைகளிலிருந்து பார்த்தோம்.

* கடந்த ஈராண்டுகளில் மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங் களின் பின்னணியில், இடது முன் னணி அமைதியைக் கொண்டுவர எவ் வாறு திட்டமிட்டிருக்கிறது?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சில இடங்களில் இடது முன்னணிக்குப் பின் னடைவு ஏற்பட்டதைக் கண்ட வலதுசாரி எதிர்க்கட்சிகள், இடதுசாரிகளைப் பின்னுக் குத் தள்ளிவிட வாய்ப்பு உண்டு என்று கருதி, வன்முறைகளில் ஈடுபட்டன. மிகவும் ஜன நாயக விரோதமாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட் டனர். இவ்வாறு நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வன் முறைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட வேண் டியவைகளாகும். இந்தத் தேர்தலின்போதும், இந்தக் கும்பல் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாம். இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், பின், மாநிலத்தில் அமைதியை மீள ஏற்படுத்துவ தும் இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை நடைபெற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை யை மீள ஏற்படுத்துவதும் எளிதாக இருந்திடும்.

* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் வாய்ப்பு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? 2009-இல் இருந்த நிலைமையைவிட மாற்றம் இருக்கிறதா?

2009-இல் இருந்த நிலைமையுடன் ஒப் பிடும்போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் 2009இல் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஆனால், இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் நிலைமைகள் மாறி இருக்கின்றன. நான் முன்பே கூறியதுபோல, மக்களை இன்றைய தினம் கடுமையாகப் பாதித்துள்ளவை விலைவாசி உயர்வு போன்ற பிரதான பிரச்சனைகளாகும். இவ்வாறான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரசும் - காங்கிரசும் நேரடியான காரணங்களாகும். இது ஓர் அம்சம். மற்றொன்று, 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் - ஸ்தாபன அம்சங்களி லும், அரசாங்கத்திலும் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு கடந்த ஈராண்டுகளில் அவை சரி செய்யப்பட்டிருக் கின்றன. எனவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது இருந்த நிலைமைகள் மாறும். இடது முன் னணி மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கை யைப் பெற்று வரவிருக்கும் தேர்தல் முடிவிலும் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.

* தேர்தலுக்குப்பின்னர் உள்ள நிலை மைகள் எப்படி இருக்கும்? தேசிய அளவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் தேர் தல்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டோமானால், இவற்றில் மேற்கு வங்கமும் கேரளமும் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமானவை களாகும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் வெற்றி என்பது தேசிய அளவில் இடது ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல் வதற்கான போராட்டப் பாதையில் இடதுசாரி களுக்கு உதவிடும். இவ்வாறு மேற்கு வங்கம் மற்றும் கேரள தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உத் வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந் திடும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் ஐமுகூட்டணி அரசாங்கம் இப்போது பிரதிநிதித்துவப்படுத் தும் நவீன தாராளமய - ஊழல் இடையே யான தொடர்பு மீது நேரடியான சம்மட்டி அடி யாக அது அமைந்திடும். ஊழல் தொடர்பு, தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமை யிலான மாநில அரசாங்கத்தில் நேரடியாகவே பிரதிபலித்தது. எனவே, தமிழ்நாட்டு முடிவும் தேசிய அளவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, April 17, 2011

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைக் கேலி செய்வதை அனுமதிக்க முடியாது



அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மற்றும் லோக்பால் சட்ட முன்வடிவு ஆகியவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு இருந்து வந்த முட்டுக்கட்டை கடைசியாக நீங்கி விட்டதுபோல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் வரைவுச் சட்ட முன்வடிவை ஏற்படுத்துவதற்காக, கூட்டுக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தபோதிலும், சமீப காலங்களில் மாபெரும் மெகா ஊழல்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இவை ஏற்படுத்தியுள்ளன.

லோக்பால் சட்டத்திற்கான கருத்தாக்கம் 1969இல் மறைந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவால் பரிந்துரைக்கப் பட்டது. மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா நிறுவனங்களுடன் இது இணைக்கப்படுவதாக இருந்தது. ஆயினும், பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் வந்த நிலையில் இச்சட்டமுன்வடிவானது மிக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

1996இல் தேவகவுடா தலைமையில் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் அதனை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்தன. இதற்கான ஒரு சட்டமுன்வடிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் அது பல அம்சங்களில் முழுமையாக அமையாமல் இருந்தது. மிகவும் ஆட்சேபத்திற்குரிய அம்சம், இதன் அதிகார வரம்பெல்லைக்குள் பிரதமரின் அலுவலகத் தையும் சேர்க்காமல் இருந்ததாகும். பிரதமரின் அலுவலகத்தையும் சேர்த்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆயினும், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களின் ஸ்திரமற்ற தன்மைகளின் காரணமாக, இந்தச் சட்டமுன்வடிவானது வெளிச்சத்திற்கு வரவேயில்லை. பின்னால் ஆறாண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் இதன்மீது நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டமுன்வடிவைக் கொண்டு வராமல் நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைத்தது.
மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, ‘‘லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதிமொழி, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கத்திற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், ஒரு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகளுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டது. ஆயினும் இதுவும் கூட திருப்திகரமாக அமைந்திடவில்லை. ஒரு பொருள்பொதிந்த சட்டமாக இதனை மாற்றக்கூடிய விதத்தில் பல முக்கியமான ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதே சமயத்தில், பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு ஜன் லோக்பால் சட்டமுன்வடிவு என்கிற ஒரு வரைவினை உருவாக்கினார்கள். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு இவ்வரைவுதான் அடிப்படையாக அமைந்திருந்தது. இப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வரைவுக் குழுவானது இவ்விரு சட்டமுன்வடிவுகளின் வரைவுகளையும் நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், குறைந்தபட்சம் சமீப காலத்தில் முன்வந்துள்ள இரு முக்கிய அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்திட வேண்டியதும் அவசியமாகும்.

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடமான நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஏன் நுழையவில்லை என்று அண்ணா ஹசாரேயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர், மக்களை மிகவும் கேலி செய்யும் விதத்தில் மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்திருக்கிறார். அதாவது, தான் ‘‘எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்றும், தான் ‘‘போட்டியிட்டால், ஜாமீன்தொகையை இழந்துவிடுவேன்’’ என்றும், ஏனெனில், ‘‘சாதாரண வாக்காளர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள்’’ என்றும், ‘‘அவர்கள், வேட்பாளர்கள் அளித்திடும் நூறு ரூபாயையோ அல்லது ஒரு பாட்டில் மதுவையோ அல்லது ஒரு புடiவையோ பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குரிமையை அவர்களுக்கு அளித்துவிடுவார்கள்’’ என்றும் கூறி சாமானிய மக்களை அவமதித்திருக்கிறார். வாக்காளர்கள் மீதான இத்தகைய ஏளனமான வசவுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை அவர் அவமதித்திருப்பதானது உண்மையில் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும்.

நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புக்கு ஆபத்து ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், இதே வாக்காளர்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடித்து, நவீன இந்தியாவின் மாண்பினைக் கண்ணின் கருவிழியைக் காப்பதுபோல் காத்து நின்றிருக்கிறார்கள். இந்திராகாந்தியின் அவசரகால ஆட்சியைத் தோற்கடித்து, நாட்டில் ஜனநாயகத்தை வீறார்வத்துடன் மீண்டும் நிறுவியது இதே வாக்காளர்கள்தான். மக்கள் மத்தியில் உள்ள இத்தகைய ஜனநாயக உணர்வானது
இந்தியாவின் எதார்த்த நிலைமைகளுடன் பின்னிப்பிணைந்ததாக இப்போது மாறியிருக்கிறது. இவ்வாறான ஜனநாயக அமைப்புமுறைதான் நாட்டில் சமூக ஆர்வலர்கள் செயல்படுவதற்கும், இவ்வாறு உண்ணாவிரதங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
நமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயத்தில், 2004இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் அவர்களால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட ‘‘ஒளிரும் இந்தியா’’ என்கிற கருத்தாக்கத்தை இதே வாக்காளர்கள் தரைமட்டமாக்கி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள். இத்தகைய வாக்காளர்கள் இன்றி, இன்றைய இந்தியா நிச்சயமாகக் கிடையாது. இவர்கள்தான் நாட்டில் மகத்தான போராட்டங்களும் உண்ணா விரதங்களும் நடைபெறுவதற்கு உந்துசக்தியாக இருந்து வருகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட நெடிய விவாதங்களின்போது, நவீன இந்தியாவின் மூலவர்கள் இந்தியாவானது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் மூலம் ஆளப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்மூலம் அவர்கள் ‘‘ஒரு நபர் - ஒருவாக்கு, ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’’ என்னும் விதியை உருவாக்கினார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தின் மையக்கருவாகவே அமைந்திருக்கிறது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, ‘‘இந்திய மக்களாகிய, நாம்,...’’ என்று தொடங்கி, ‘‘இதன்மூலம் நாமே இயற்றி, சட்டமாக்கி, நமக்கு நாமே அளித்துக்கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம்’’ என்று மிகவும் செம்மாந்து வரையறுத்துள்ளது. இதன்மூலம் பிரகடனப் படுத்தப்படும் முக்கியமான செய்தி என்ன வெனில், நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்திற்கும் மேலானவர்கள், முதன்மையானவர்கள் மக்கள்தான் என்பதேயாகும். இத்தகைய மக்களை ஏளனமாகக் குறிப்பதும், அவமதிப்பதும் நம் அரசியலமைப்புச் சட்டத்தையே கீழறுக்கும் அபாயங்களுக்கு இட்டுச்செல்லும். இதனை அனுமதித்திட முடியாது.

அண்ணா ஹசாரே இவ்வாறு மக்களை மட்டமாகக் கருதி கருத்துக்கூறியுள்ள அதே சமயத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சரோ லோக்பால் சட்டமுன்வடிவிற்கு எதிராக அதற்கிணையாக ஏளனமான கருத்து ஒன்றினை உதிர்த்திருக்கிறார். ‘‘ஓர் ஏழைக் குழந்தை கல்விக்காக எவ்விதமான வசதியும் இல்லாதிருந்தால், பின் அதற்கு லோக்பால் சட்டமுன்வடிவு எவ்விதத்தில் உதவிடும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டுள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்டிருந்தால், நம் நாட்டில் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கக்கூடிய விதத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க முடியும். உண்மையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் இதுதான். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் மத்திய மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தங்களிடம் போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லையென்று கூறிவருவதால் இது எவ்வித அசைவுமின்றி நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே வெறும் தாளாகவே இன்னமும் இருந்து வருகிறது.

கல்விக்கான திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய நிலையம், நம் நாட்டில் தேவையான பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கும், மதிய உணவு, பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்குவதற்கும் ஓராண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விதத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செலவிட வேண்டி யிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுத்தி நிறுத்தியிருந்தோமானால், நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்க முடியும். நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை சிறந்த முறையில் ஏற்படுத்த முடியாத வண்ணம் நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அவர்களின் வாழ்க்கையையே கொள்ளை கொண்டு விட்டன.

இதேபோன்றுதான், தேசிய ஆலோசனைக் கவுன்சில், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் - வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துக் குடும்பத்தினருக்கும் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தான்யங்களை கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய் வீதம் அளித்திட வேண்டுமானால் அரசுக்குக் ஓராண்டிற்குக் கூடுதலாக 88 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறது. (காங்கிரஸ் கட்சியானது சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, உணவு தான்யங்களை கிலோ ஒரு ரூபாய் என்ற வீதத்தில் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது வேறு விஷயம்.) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தடுத்து நிறுத்தப் பட்டிருக்குமாயின், அரசுக்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படாமல் சரிசெய்யப்பட்டிருக்குமாயின், பின்னர் அடுத்த ஈராண்டுகளுக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி இருக்க முடியும். இவ்வாறு ஊழல்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட்டிருந்தால் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கியிருக்க முடியும்.
ஆயினும், லோக்பால் சட்டமுன்வடிவிற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு தன் வரைவை நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டங்களை உருவாக்கும் இடம் நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். லஞ்ச ஊழல்களை அனைத்து முனைகளிலும் தடுக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான சட்டத்தை நிறைவேற்றிட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபூண்டிருக்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

Friday, April 15, 2011

கேரளம் மற்றும் தமிழகத்தின் தேர்தல்கள் --பிரகாஷ்காரத்



கேரளம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 13 அன்று தங்கள் மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களில் வாக்களித்துள்ளார்கள். இவர்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். இரு வாரங்களுக்கே நடைபெற்றதென்ற போதிலும் அவ்விரு வாரங்களும் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சரம் இரு மாநிலங்களிலும் நடைபெற்றதைப் பார்த்தோம். இரு மாநிலங்களிலும் நான் ஒருசில நாட்கள் இக்கால கட்டத்தில் செலவழித்தேன். தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பல்வேறுபட்ட தேர்தல் கூட்டணிகள் அவற்றின் வாய்ப்புகள் குறித்தும் ஒருசில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
பிரதானமான பிரச்சனைகள் நாட்டைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வும் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழலும் இரு மாநிலங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போதும் பிரதான பிரச்சனைகளாக மக்களின் முன் வைக்கப்பட்டன. நகர்ப்புறமாக இருந்தாலும் சரி அல்லது கிராமப்பகுதிகளாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும், மக்கள் இவ்விரு பிரச்சனைகள் குறித்தும் இவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் கவலைப்பட்டார்கள். கேரளாவில், விலைவாசி உயர்வுப் பிரச்சனை, பொது விநியோக முறையோடு நேரடியாக இணைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வராத குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அரிசி கிலோ 2 ரூபாய் வீதம் அளித்திடக்கூடிய வகையில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அத்திட்டத்தை விரிவாக்கியது. மாநில அரசாங்கம் தம் வசம் உள்ள அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கக்கூடிய விலைகளில், நியாய விலைக் கடைகள், மாவேலி ஸ்டோர்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விநியோகிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றார்கள். இதற்கு நேர்மாறாக, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காதது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளித்தது.

உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள லஞ்ச ஊழல்கள் கேரள மக்கள் மத்தியில் கடுமையாக எதிரொலித்தன. சமீபத்தில், முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, ஆர். பாலகிருஷ்ண பிள்ளை, சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது கீழமை நீதிமன்றம் அளித்திருந்த தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இவர் முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானது என்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண பிள்ளை மீது தொடுத்த மனு மீதான விசாரணையில்தான் இவ்வாறு அவருக்கு லஞ்சஊழலுக்கான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணியின் உறுதியான நிலைப்பாட்டை இது அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்றும் சமீபகாலங்களில் அடுக்கடுக்காக வெளிவந்துள்ள பல்வேறு ஊழல் வழக்குகள் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீதான சித்திரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் லஞ்ச ஊழல் மிகுந்தது என்று கூறிய குற்றச்சாட்டை, மக்கள் சட்டைசெய்யவே இல்லை. காங்கிரஸ் ஆதரவாளர்கள்கூட இதனைப் பெரிதுபடுத்தவில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பதன் பொருள், லஞ்சலாவண்யம் மிக்க ஓர் அரசாங்கத்தை, தற்போது மத்தியில் உள்ளது போன்று லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியலமர்த்துவதே என்கிற இடது ஜனநாயக முன்னணியின் பிரச்சாரம் மக்களிடம் வலுவாகச் சென்றடைந்தது.

உயர் மட்ட அளவில் ஊழலுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடுங்கோபம், ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலுவான பெருவிருப்பம், நிச்சயமாக இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வேலை செய்தது. முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டதானது இதனை அங்கீகரிப்பதாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம் மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சத்தையும் வெளிப் படுத்தியது. இதனை இடது முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஊடகங்களாலேயே கூட மறைக்க முடியவில்லை. ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பொதுவாக இருந்திடும் கசப்புணர்வு (யவேi-inஉரஅநெnஉல கநநடiபேள), இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இல்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

இடது ஜனநாயக முன்னணியின் சாதனை

அடுத்து கேரளத்தில் வளர்ச்சிப் பணிகள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைமையும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும்தான் கேரளாவில் வளரச்சித் திட்டங்களை உருவாக்கியதாகவும், அதனை இடதுஜனநாயக முன்னணி தொடர்ந்து மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் கூறினார்கள். மத்திய அரசு அளித்த நிதிகளையும், திட்டங்களையும் இடது ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் சுமத்தினார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் கேரளம் முதலீடுகளைக் கவர்ந்திடவும், வளர்ச்சியை உத்தரவாதப் படுத்திடவும் தவறிவிட்டது என்று குறை கூறினார்கள். இதற்கு இடதுசாரிகளின் பத்தாம்பசலித்தனமான சித்தாந்தமே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன என்பதை இடதுசாரிகள் அங்கீகரிக்க மறுத்தார்கள்’’ என்றும், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை’’ என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். இதன் பொருள் என்ன? காங்கிரஸ் கட்சியையும் ஐமுகூ அரசாங்கத்தையும் பொறுத்தவரை, ‘‘வளர்ச்சிக்கான அடிப்படைகள் மாறியிருக்கின்றன’’ என்பதன் பொருள், நவீன தாராளமய, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதேயாகும். மத்திய அரசின் நாசகரமான விவசாயக் கொள்கைகள்தான் விவசாயிகளின் அவல நிலைக்கும், அவர்கள் கேரளாவில் தற்கொலைகளை மேற்கொள்ளத் தள்ளியதற்கும் காரணங்களாக இருந்தன. உலகச் சந்தையுடன் விவசாயத்தை இணைத்ததும், அவர்களுக்கு அளித்து வந்த மான்யங்களை இல்லாது ஒழித்ததும்தான் இவர்களின் வளர்ச்சிப் பாதையின் பகுதிகளாகும். இவர்களது நவீன தாராளமய அணுகுமுறைக் கண்ணோட்டத்தின்படி, கேரள அரசாங்கம் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரளித்ததும், அவற்றை லாபகரமானதாக மாற்றியதும் வெறுக்கப்பட வேண்டியவை களாகும். உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் விரிவாக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள், பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக மாற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல சமூகப் பாதுகாப்பு உதவிகளை உத்தரவாதப் படுத்தியமை போன்றவை பிரதமரின் பார்வையில், ‘‘சாமானியர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்கள்’’ இல்லை என்பதாகும். ஆனால் இவைதான் கேரள அரசு மீது மக்களுக்குக் கசப்புணர்வு ஏற்படாமல் இருந்ததற்குக் (anti-incumbency feelings) காரணங்களாகும்.
மத்தியில் ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய அணுகுமுறைக்குச் சவால் விடக்கூடிய வகையில் மாற்று வளர்ச்சிப் பாதையை இடது ஜனநாயக முன்னணியின் கொள்கை முன்வைத்தது. அதைத்தான் பல விமர்சகர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டித்தார்கள், கண்ணீர் விட்டார்கள். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பதைப்போன்று, கேரள அரசும் சட்டவிரோத முதலாளித்துவ (உசடிலே உயயீவையடளைஅ)பாதையைப் பின்பற்ற வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதித்திட வேண்டும், பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் இடையேயான கள்ளத் தொடர்பை, கயமைத் தொடர்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே அவர்களது விருப்பங்களாகும்.

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் ஆழமான முறையில் அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாதீய மற்றும் வகுப்புவாத அமைப்புகளின் ஆதரவைப் பெற முடிவுசெய்தது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கேரளாவில் பணமும், மதுவும் ஆறாக ஓடியதையும் பார்க்க முடிந்தது. பிரச்சாரம் முடிவுற்ற சமயத்தில், எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கிய துர்ப்பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பொடிப்பொடியாக்கி, இடது ஜனநாயக முன்னணி மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறியதைப் பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டின் நிலைமைகள்

தமிழ்நாட்டிலும் கூட, லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனைகiளாக முன்னுக்கு வந்தன. ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச்சனை என்பது பிரம்மாண்டமான அளவில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுக-வினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சியில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்பதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - திரைப்படத் துறை, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளிலும் - ஆதிக்கம் செலுத்துவது ஜனநாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அஇஅதிமுக பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா, இப்பிரச்சனையைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடும் விலைவாசி உயர்வு, மிகவும் விரிவான அளவில் இருந்த மின்வெட்டு, திமுக-வினர் மஃபியா கும்பலுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு ஆகிய பிரச்சனைகளும் மக்களைத் திமுக அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியும் கூட அருவருப்பான ஒன்றாகவே அமைந்திருந்தது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டிச் சண்டைகளும், மக்கள் மத்தியில் திமுக குறித்து வெளிப்படையாகவே அதன் தலைவர்கள் பலர் வெளிப்படுத்திய கருத்துக்களும் நிலைமைகளை அவ்வாறு ஆக்கி இருந்தன.

தமிழ்நாடு, நவீன தாராளமயக் கொள்கைகளின் முழுமையான விளைவுகளை அனுபவித்த மாநிலமாகும். சமீப ஆண்டுகளில் வேறெந்தவொரு மாநிலமும் தேர்தலில் இந்த அளவிற்கு சட்டவிரோதமாகச் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரியிறைத்ததில்லை. திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அனுபவத்தை அடுத்து, சென்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது என்பது மிகவும் விரிவான முறையில் நடைபெற்றிருந்தது. தேர்தல் ஆணையம் சட்டவிரோத பணப் புழக்கத்தைத் தடுத்திட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற பல சோதனைகளில் சுமார் 50 கோடி ரூபாய் வரை ரொக்கமாகவும், பல்வேறு பொருள்களாகவும் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் ஒரு ஆம்னி பஸ்ஸின் மேல் உச்சியிலிருந்து மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆயினும் இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் வாரியிறைக்கப் பட்ட பல்லாயிரம் கோடி ரூபாயில் ஒரு சிறு துளிதான். நகர்ப் புறங்களில் வாக்காளர்களுக்கு 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், பிரச்சாரத்தின்போது மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தடவை ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக கொட்டியிருந்த போதிலும் அதனால் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளில் முதல் அதிகாரபூர்வமான மாநிலக் கட்சியாக விளங்கியது. சமூக நீதி மேடையிலிருந்து உதித்த வெகுஜன தளத்தையும் ஸ்தாபனக் கட்டமைப்பையும் மிகவும் வலுவாகக் கொண்டிருந்த ஒரு கட்சியாக திமுக இருந்தது. மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகளுக்குக் குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கிய ஒன்று. அத்தகைய பாரம்பர்யம் கொண்ட ஒரு கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறி, சட்டவிரோத மூலதனத்தால் (crony capitalism) கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

திமுக இத் தேர்தலில் தூக்கி எறியப்பட்டால், அவ்வாறு அதன் விதி முடிவது முழுமையும் சாலப் பொருத்தமானதேயாகும். ஊழலில் அதன் கூட்டாளியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் இதேபோன்றதொரு மோசமான முடிவையை எதிர்கொள்ள விருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, April 14, 2011

சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவோம்! முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக உலகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்! உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளன

ஏதென்ஸ், ஏப். 14-

முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிராகவும், சுரண்டலற்ற உலகத்தை உருவாக்குவதற் காகவும், உலகத் தொழி லாளர்களை அணிதிரட்டு வோம் என கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற உலகத் தொழிற் சங்கங்கள் சம்மேளனத்தின் 16ஆவது மாநாடு அறை கூவல் விடுத்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16வது மாநாடு கிரீஸ் தலை நகர் ஏதென்ஸில் கடந்த ஏப் ரல் 6 புதனன்று எழுச்சி யுடன் துவங்கியது. மாநாடு 10ஆம் தேதி வரை நடை பெற்றது.

உலகம் முழுவதுமிருந்து 881 பிரதிநிதிகளும் பார்வை யாளர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர். உல கில் நான்கு துணைக் கண் டங்களில் உள்ள 105 நாடு களில் இருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றார் கள். மாநாட்டுப் பிரதிநிதி களில் 32 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தலைமையில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அபி மன்யு, அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லாகான் உட்பட 20 பேரும், அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனம் சார்பில் ஆர்.முத்துசுந்தரம், சுகுமால் சென், ஆர்.ஜி.கார்னிக் உட் பட 6 பேரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் அசௌஸ் எம். சபான், பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் ஆகியோர் மாநாட்டைத் துவக்கி வைத் தனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஹேமலதா மற்றும் தென் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் உட்பட 35 பேர் கொண்ட மாநாட்டுத் தலைமைக்குழு தேர்வு செய் யப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல்களை எதிர்த்து, எண்ணற்ற போராட் டங்களை நடத்திய, உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் பொதுச் செயலாளரும் கிரேக்கத் தொழிற்சங்கத் தின் வீரஞ்செறிந்த தலைவ ருமான பாமே, மாநாட் டைத் துவக்கி வைத்தார்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ், ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க் கம் ஒன்றுபட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத் தினார். இந்தத் திசைவழியில் தான் கடந்த ஐந்தாண்டு களாக சம்மேளனம் செயல் பட்டு வருவதாகத் தெரி வித்தார்.

கிரேக்க நாடாளுமன்றத் தின் முதல் உதவித் தலைவர், கிரேக்க நாடாளுமன்றத் தின் சபாநாயகர், ஏதென்ஸ் மற்றும் பெய்ரஸ் நகரின் மேயர்கள் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

பிரதிநிதிகள் மாநாடு
மாநாட்டின் பிரதிநிதி கள் அமர்வு 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

மாநாட்டில் முதல் அமர் வுக்கு சிஐடியு தலைவர் ஏ.கே. பத்மநாபன் உள்ளிட்டோர் தலைமையேற்றனர்.

மாநாட்டுப் பிரதிநிதி களின் விவாதத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி யின் தாக்கம் பிரதானமாக இடம்பெற்றது. இதன் விளைவாக உலக அளவில் அதிகரித்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தில் இழப்பு ஏற் பட்டுள்ளமை, சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடும் தொகை வெட்டிக் குறைக் கப்படுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் பெரும் முதலாளிகள் மற்றும் பன் னாட்டு முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தொழிலாளர் வர்க் கம், ஏழை விவசாயிகளை யும், சுயதொழில் புரிபவர் கள் மற்றும் வர்த்தகர்களை யும் அணிதிரட்ட வேண்டி யதன் அவசியத்தையும் மாநாடு சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் உழைக்கும் பெண்களுக்கு உள்ள பிரச் சனைகள் குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

பெண் பிரதிநிதிகளைக் கொண்டு தனி அமர்வு ஒன் றும் 7ஆம் தேதியன்று நடை பெற்றது. இதில் உழைக்கும் பெண்களின் பிரச்சனை களை மையப்படுத்தி சர்வ தேச அளவில் தனி மாநாடு ஒன்று நடத்தவும் தீர்மா னிக்கப்பட்டது.

இளம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க விழிப்புணர்வு குறைவாக இருப்பதை மாநாடு சுட்டிக் காட்டியது.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் சிரியா வைச் சேர்ந்த அசௌஸ் எம்.சபான், தலைவராகவும், ஜார்ஜ் மாவ்ரிகோஸ், பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்வு செய்யப் பட்டனர்.

சிஐடியு சார்பில் ஏ.கே. பத்மநாபன், ஸ்வதேஷ் தேவ் ராய் உட்பட 40 உறுப்பி னர்களைக் கொண்ட புதிய தலைமைக் கவுன்சில் உரு வாக்கப்பட்டது. இக்கவுன் சில் ஏ.கே. பத்மநாபனை, உலகத் தொழிற்சங்க சம்மே ளனத்தின் துணைத் தலைவ ராகவும், ஸ்வதேஷ் தேவ் ராயை செயற்குழு உறுப்பி னராகவும் தேர்வு செய்தது.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அடுத்த மாநாடு நடைபெறும் சம யத்தில் சம்மேளனத்தின் 70ஆம் ஆண்டைக் கொண் டாடும் விதமாக, புதிய தொழிற்சங்க ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை வளர்த்தெடுத்திடவும், வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்திடவும், வருங் கால சந்ததியினருக்கு சுரண் டலற்றதோர் உலகத்தை அளித்திடவும் உறுதி மேற் கொண்டுள்ளது.

Thursday, April 7, 2011

ஊழல் பேர்வழிகளைத் தோற்கடிப்பீர்




இந்த இதழ் வாசகர்களின் கைகளை அடையும் சமயத்தில், அநேகமாக நாட்டில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கும். அஸ்ஸாமில் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.
மிகப் பெரும்பாலோரால் எதிர்பார்க்கப்பட்டபடி, ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக பிரச்சனைகளுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சாரத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரசின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அன்பளிப்புத் திட்டங்கள் (உண்மையில் 50 விழுக்காட்டுக் குடும்பத்தினருக்குக் கூட இவை போய்ச் சேரவில்லை) திமுக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒவ்வொரு குடும்பத்தினரின் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. தமிழ் நாட்டு அளவில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களுடன், ஊழல்களில் அரசியாகத் திகழும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலானது, உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களை மையக் கருவாகக் கொண்டு வந்திருக்கிறது.

ஆயினும், ஊழல் என்பது தமிழ்நாட்டோடு மட்டும் சுருங்கிவிடவில்லை. சமீப காலத்தில் வெளிப்பட்டுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஸ் வீட்டுவசதி சங்க ஊழல், ஆன்ட்ரிக்ஸ்-ஐஎஸ்ஆர்ஓ ஊழல், வாக்காளர்களுக்குப் பணம் தருதல், சட்டவிரோதமாகக் கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் போன்று அடுக்கடுக்காக நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தை உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல் பேர் வழிகளுக்குப் பாதுகாப்பு அளித்திடும் ஒன்றாகக் குறைத்து விட்டது. இவர்களின் கேவலமான செயல்பாடுகள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைத் தான் நமக்கு நினைவு படுத்துகின்றன. ஆயினும், தற்போதைய சூழ்நிலைக்கும் அக்கதைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அலிபாபா இல்லாத நிலையில் 40 திருடர்களும் வெறித்தனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஊழல் பேர்வழிகள் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய நலத்திட்டங்கள் பலவற்றை முடக்கியது மட்டுமல்லாமல், இப்போது தேர்தல் சமயத்தில் அவ்வாறு தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு அதே மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களது வாக்குகளை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேவலமான செயல் தமிழ்நாட்டில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய டெலிகாம் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு திமுக தலைவரும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பணபலத்தைப் பயன்படுத்துவதில் பேர்போன இவர், எங்கே தான் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற ஐயுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. உண்மையில், தேர்தல் ஆணையமானது, காவல்துறை வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அதனைத் தடுத்து நிறுத்திட உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சமீபத்தில், ஒரு தனியார் ஆம்னி பஸ்ஸில் பல கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதைக் கைப்பற்றி இருக்கிறார்கள். நம்பிக்கை இழந்த நிலையில் உள்ள திமுக தேர்தல் வெற்றியை எந்த வகையிலாவது வாங்கிட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான வேலைகளிலும் வெறித்தனமாக இறங்கி யிருக்கிறது.

இவ்வாறு ஊழல் என்பது நம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கே கடும் பாதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் தாங்கள்அளிக்கும் வாக்குக்குப் பணம் கொடுப்பதன் மூலம், ஊழல் வாக்காளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாய்ப்பைச் சீர்குலைக்கிறார்கள். நாட்டின் உயர் மட்ட அளவில் ஊழலுக்குத் துணை போகிறவர்கள் திமுக-வினர் மட்டுமல்ல, காங்கிஸ் கட்சியினரும்தான் ஆவார்கள். எனவே இவ்விரு கட்சியினருமே நடைபெற விருக்கும் தேர்தல்களில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் களாவர்.

மேலும் இதில் ஒரு முக்கிய அம்சம் அடங்கியிருக்கிறது. இவ்வாறு உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒரு நாடு எப்படித் தடுத்திட முடியும்? ஊழலைத் தடுப்பது என்பது ஓர் அறநெறிப் பிரச்சனை மட்டுமல்ல. இது மாபெரும் ஒழுக்கக்கேடு என்பது உண்மைதான். இவ்வாறு கேவலமாக சேர்க்கப்பட்ட செல்வமும், சட்டவிரோதமான கறுப்புப் பணமும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கைப்பற்றி நம் நாட்டு மக்களுக்குத் தரமான வாழ்க்கையைத் தரக்கூடிய வகையில் செலவிட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையிடப்பட்ட தொகை மட்டுமே நம் நாட்டில் (வறுமைக் கோட்டிற்குக் கீழும், வறுமைக் கோட்டிற்கு மேலும் உள்ள அனைத்துக்) குடும்பங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முழுமையாக உணவுப் பாதுகாப்பினை அளித்திடப் போதுமானவை என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அல்லது, இந்தத் தொகையை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு செலவளித்திட முடியும் என்றும் எழுதியிருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்திட ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு, நாடு முழுதும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காகவும், புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும், மதிய உணவுத் திட்டத்திற்காகவும் செலவு செய்திட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இவ்வாறு மாபெரும் அளவில் ஊழல்கள் புரிந்ததன் காரணமாக, இவையனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், ஊழல் புரிவதற்கு இதற்கு முன்னெப்போதும் இல்லாத பல்வேறு வழிகளை, ‘சட்டவிரோத முதலாளித்துவத்தின்’ (`crony capitalism) மூலமாக வகுத்துத் தந்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தரமான வாழ்க்கைத் தரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் வளங்கள் நிறைந்த நாடுதான் நம் நாடு. ஆயினும், சாமானிய மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்க முடியாத வகையில் ஆட்சியாளர்களின் ஊழல்கள் இந்த வளங்கள் அனைத்தையும் கொள்ளை கொண்டுவிட்டது. ஆட்சியாளர்களின் லஞ்ச லாவண்யங்கள், நாடு தன்னிடம் உள்ள அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு முடக்கிவிட்டது.

நம்முடைய அமைப்பில் புரையோடிப் போயுள்ள இந்தக் கேடுகெட்ட நிலைமையை எப்படிச் சரி செய்வது என்கிற முக்கியமான கேள்வியை நம்முன் கொண்டு வந்திருக்கிறது. நாற்பது திருடர்களின் கொட்டத்தை அடக்கக்கூடிய விதத்தில் அலிபாபா என்னும் நிர்வாக எந்திரத்தை உருவாக்கிட வேண்டியிருக்கிறது. மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தப்பிவிடக் கூடாது. ஊழலில் திளைக்கும் இழிபிறவிகளுக்கு அதற்கான தண்டனைகளை அளிக்காமல் தப்ப விடக்கூடாது. மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மனோபாவத்தையே சமூக ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தற்போது நடத்தி வரும் கிளர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. அத்தகையதோர் நிர்வாக எந்திரமான லோக்பால் குறித்த உள்ளடக்கம் தொடர்பான விவாதங்கள் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து ஊழல்கள் குறித்த குற்றப் பொறுப்புக்களையும் விசாரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மீளவும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளிலிருந்து திசைதிருப்பக் கூடிய வகையில் இது அமைந்துவிடக் கூடாது. லஞ்ச ஊழல்கள் மூலம் கொள்ளையடித்த வர்களையும், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பத்திரப்படுத்தியுள்ளவர்களையும் கடுமையாகத் தண்டித்திட வேண்டும் என்று தனியே கூறத் தேவையில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றிட வேண்டும். அதற்கு முன்னதாக அது தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மிகவும் முக்கியமாக மக்கள் மத்தியில் விரிவான வகையில் ஒரு பொருள்பதிந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)