Tuesday, December 29, 2015

கோவில் அரசியல்


ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் ராமர் கோவில் நிகழ்ச்சிநிரலை மீண்டும் முன்னிலைப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறது. சென்ற வாரம், ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்திக்கு ராஜஸ்தானிலிருந்து இரு டிரக்குகளில் செங்கற்கள் (ளயனேளவடிநே) வந்திருக்கின்றன.கோவில்கட்டுமானப் பணிகளுக்காக, விசுவ இந்து பரிசத் நடத்திடும் தொழிற்சாலை ஒன்றில் இந்தக் கற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர், அயோத்தியில் இக்கற்கள் சாஸ்திரசம்பிரதாயங்களுடன் பெறப்பட்டிருக்கின்றன.
மோகன் பகவத்தின் கட்டளை
விசுவ இந்து பரிசத்தின் கீழ் உள்ள அறக்கட்டளையான ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பாளர்கள் கூற்றின்படி, கோவில் விரைவில் கட்டப்படும் என்றுசாதகமான சமிக்ஞைகள்’’ அவர்கள் பெற்றிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், ஒருசில நாட்களுக்கு முன், “எப்பொழுது மற்றும் எப்படி கோவில் கட்டப்படும் என்று எவராலும் சொல்ல முடியாது,’’ என்று கூறியுள்ள அதே சமயத்தில் எனினும், “நாம் தயாரிப்புப்பணிகளை மேற்கொள்வதுடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டியதும் தேவை,’’ என்றும் கூறியிருக்கிறார். இவைதான் மேற்படிசாதகமான சமிக்ஞைகளாக’’ இருக்க முடியும். அவர் மேலும், “கோவில் என் வாழ்நாளுக்குள் கட்டப்பட்டுவிடும்’’ என்றும் சொல்லி இருக்கிறார்.
விசுவ இந்து பரிசத் அயோத்தியில் தன் வேலைகளைப் புதுப்பித்திருப்பதைப் பார்க்கும்போது, ஓர் அரசியல் குறிக்கோளுடன் கோவில் பிரச்சனையை விசுவ இந்து பரிசத் தன் கையில் எடுத்துக்கொண்டு தயாரிப்புப் பணிகளில் இறங்கி இருப்பதாகவே தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 2017 ஆரம்பத்தில் நடக்க இருக்கின்றன. இதனையொட்டி ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரத்திற்கு மதவெறித் தீயை விசிறிவிடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால், அதனை அவை மிகவும் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளும். பீகார் தேர்தலுக்குப்பின்னர், பாஜகவின் ஆதரவுத்தளத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுவருவதை அடுத்து, அதிலிருந்து மீள ஆர்எஸ்எஸ் தன்னுடைய கொட்டடியிலிருந்து மதவெறி ஆயுதங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நீதித்துறை கட்டளையை மீறும் செயல்
அயோத்தி தாவா உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக தற்போதைய நிலை நீடித்திட வேண்டும் என்பதே நீதித்துறையின் கட்டளையாகும். ஆனால், அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது என்பது, நீதித்துறையின் கட்டளைகளை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினரை அறிவுறுத்தி இருக்கிறார். இதுபோதுமானதல்ல. உத்தரப்பிரதேச அரசாங்கம் அயோத்திக்குக் கற்களை வரவழைப்பது போன்ற செயல்பாடுகளை நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்குக் கட்டளையிட வேண்டும். தற்போதைய நிலையினை மாற்றுவதற்கு நடைபெறும் எந்தச் செயலும் நடைபெறக் கூடாது. இதனைச் சீர்குலைத்திட நடந்துவரும் நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். -
டிசம்பர் 23, 2015
தமிழில்: .வீரமணி


Saturday, December 26, 2015

பாரிக்கர் பயணம் யாருக்காக?


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கரின் வாஷிங்டன்னுக்கான முதல் பயணம் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு முன்முயற்சிகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. இவற்றில் மிகவும் ஆழமான மற்றும் சங்கடத்தை உருவாக்கக்கூடிய அம்சம், அமெரிக்கா, இந்தியாவில் உள்ள ராணுவத் தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அமைச்சர், இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாகும். இந்திய அரசாங்கம், அமெரிக்காவுடன் ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் செய்து கொள்வதில் திறந்த மனதுடன் இருப்பதாக, மனோகர் பரிக்கர், அமெரிக்க அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்டன் கார்டரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
இடதுசாரிகள் எதிர்ப்பால்ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை
2005 ஜூன் மாதத்தில் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, இந்தியாவை அமெரிக்காவுடனான ராணுவரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் கையெழுத்திட வற்புறுத்தி வந்தது. இடதுசாரிக் கட்சிகள் இந்தியா, அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்திலும் மேற்கண்ட இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதைக் கடுமையாக எதிர்த்தன.
ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தத்தின்மூலம் அமெரிக்க ராணுவப் படைகள் இந்தியாவின் விமானத் தளங்கள் மற்றும் கப்பற்படைகளின் துறைமுகங்களைத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள இட்டுச் செல்லும். மற்றொரு ஒப்பந்தமான போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தமானது இரு நாட்டின் ராணுவப் படைகளின் போக்குவரத்து வலைப்பின்னல்களை இணைத்திடும். இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டால், பின்னர் இந்தியா அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு முழுமையான கூட்டணி நாடாக மாறிவிடும். ஐமுகூ அரசாங்கம் இறுதியில் இவ்விரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடாமல் இருந்துவிட்டது. இது தொடர்பாக அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுத்தார்.
இந்தியாவுக்கு ராணுவ கருவிகள் விற்பதில் அமெ.தான் முதலிடம்
பாஜக அரசாங்கமானது, அமெரிக்க ராணுவக் கூட்டணியில் சேர மிகவும் ஆர்வம் காட்டுவதுபோல் தோன்றுகிறது. இந்தத் திசைவழியில் அது சென்றுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகைபுரிந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை கையெழுத்தானது. அதன்படி, ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் போர்த்தந்திர நடவடிக்கைகளின் கீழ் இயங்கும் ஒரு நாடாக இந்தியா மாறிவிட்டது. கடல்வழிப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்திய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது. ஹவாய் தீவில் இயங்கிக் கொண்டிருக்கும் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் ராணுவத்தளத்திற்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்தான். இந்தியாவிற்கான ராணுவ உபகரணங்களை வழங்குவதில் அமெரிக்காதான் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
இறையாண்மை - ராணுவ நலனில் சமரசம்
இந்திய-அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா, மேற்கண்டவாறு ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களுடன் மேலும் அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்னும் மூன்றாவது ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட நிர்ப்பந்தித்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்திடவும், இந்தியா திறந்த மனதுடன் இருக்கிறது என்றும் மனோகர் பரிக்கர் ஒத்துக்கொண்டிருப்பது என்பது, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதற்கான ஓர் அபாய அறிகுறியாகும். இந்த இரு ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடாவிட்டால், உயர் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு மூலங்களை இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது என்ற நிலைபாட்டினை அமெரிக்கா எடுத்திருக்கிறது. மோடி அரசாங்கம், பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்வதற்குக் காட்டும் ஆர்வத்தின்காரணமாக, நாட்டின் இறையாண்மையையும், நம் ராணுவத்தின் சீரிய நிலையையும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு அமெரிக்காவிடம் நயமாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
பலவீனப்படுத்தும் நடவடிக்கை
இந்தியா இதுவரை எவ்விதமான ராணுவக் கூட்டணியுடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் ஒரு சுயேச்சையான நிலைபாட்டினை மேற்கொண்டு வந்தது. ஆனால் தற்போது அமெரிக்க ராணுவத்தை நம்முடைய கப்பற்படை துறைமுகங்கள் மற்றும் விமானப்படையின் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளவும், எரிபொருள்களை நிரப்பிக்கொள்ளவும், தங்கள் படைகளை நிலைநிறுத்திப் பராமரித்துக்கொள்ளவும் அனுமதிப்பதன் மூலம், இத்தகைய நிலைபாட்டிலிருந்து தீவிரமான முறையில் முறிவினை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறது. இவை அனைத்தும், அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் இந்தியாவின் ராணுவப் படையினரைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளேயாகும். பாஜக அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய, நம் சுயேச்சையான ராணுவ நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தக்கூடிய, அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றக்கூடிய இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது.
- தமிழில்: ச.வீரமணி


Sunday, December 20, 2015

அமெரிக்காவிடம் சரணாகதி


மோடி அரசாங்கம் ஆசியாவில் அமெரிக்காவின் போர்த் தந்திர நடவடிக்கைகளுக்கு சேவை செய் திட தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டது என்பது, ஜப்பான் பிரதமர் சின்சோஅபே வருகையின் மூலம் உறுதியாகி விட்டது. அவரது வருகையின்போது, எண்ணற்ற ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன. இவை அனைத்தும் ஜப்பானுடன் மிகவும் நெருக்கமான முறையில் ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை நிறுவியிருக்கின்றன. ஆசிய-பசிபிக்பிராந்தியத்தில் இரு நாடுகளும் இரு தூண்களாகும் என்பதால் இரு நாடு களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்பியது.
அமெரிக்கா வற்புறுத்தியதன் விளைவாகத்தான் 2014 செப்டம்பரில் ஜப்பா னுக்கு மோடி விஜயம் செய்தபோது, முத் தரப்பு பாதுகாப்புக் கூட்டணி உருவானது. ஜப்பான் பிரதமர் அபே வருகை தந்தபோது, இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாகராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய் திடவும் மற்றும் ராணுவத் தகவல்களை இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்துகொள்வதைப் பாதுகாத்திடவும் இரு பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தா யின.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம்
மேலும், மலபார் கப்பல்படை பயிற்சிகளின் ஒரு நிரந்தர உறுப்பினராக ஜப் பானும் மாறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுவரை, மலபார் கப்பல்படையில் நடைபெற்ற பயிற்சிகள் இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒன்றாகத்தான் இருந்து வந்தன. ஜப்பான் இரண்டு அல்லது மூன்றுதடவைகள்மட்டும்தான் அவற்றில் பங் கெடுத்துக் கொண்டது. இப்போது இது மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு கப்பல்படை பயிற்சியாக மாறி யிருக்கிறது. இவ்வாறு மிகவும் நெருக்கமான முறையில் ராணுவம் மற்றும் போர்த்தந்திர உறவுகளை மேற்கொண்டிருப்பதன் அடிப்ப டையில்தான், ஜப்பான் இந்தியாவுடன் ஓர் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கொள்கையளவில் செய்துகொள்ளவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமும் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கிய மான ஒன்றாகும்.
ஏனெனில் ஜப்பானில் உள்ள தோஷிபா, ஹிட்டாச்சி போன்ற கம்பெனிகள் அமெரிக்க கம்பெனிகளான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் போன்றவற்றிற்கு, கேந்திரமான சாதனங்களை அளிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுமதி அளித்தால்தான் அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவிற்கு அணுஉலைகளை அளித்திட முடியும்.
அமைதி வழியிலிருந்து விலகும் ஜப்பான்
இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜப்பான் நாடாளுமன்றத்தால் ஏற்பளிப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஜப்பான் மக்கள் மத்தி யில் இதுபோன்றதொரு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ஃபுகு ஷிமா அணுஉலை பேரிடர் இப்போதும் மக்களின் மனதில் நிலைத்து நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஹிரோ ஷிமா, நாகசாகி நிகழ்வுகளுக்குப் பின்னர்அணு ஆயுதங்களுக்கு எதிரான மன நிலையிலேயே ஜப்பானிய மக்கள் இப் போதும் இருந்து வருகிறார்கள். இந்தியா போன்ற அணு ஆயுதங் கள் வைத்திருக்கக்கூடிய நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச்செல்ல அவர்கள் விரும்ப வில்லை.
ஆனால், சின்சோ அபேயின் வலதுசாரி அரசாங்கம் நாட்டை மீண்டும் ராணுவமயமாக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்காக வெளி நாடுகளில் ராணுவ நடவடிக்கையைத் தடை செய்துள்ள ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தையே திரித்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு ராணுவ சாதனங்களை விற்பனை செய்வது என்பது ஜப்பான் இதுநாள்வரை பின்பற்றிவந்த அமைதி வழிக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதன் சமிக்ஞையேயாகும்.மோடி அரசாங்கம் முந்தைய மன்மோகன்சிங் அரசாங்கம் போன்றே மிகப்பெரிய அளவில் அணு உலைகளை இறக்குமதி செய்திடும் கொள்கையையே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆபத்தை விளைவிப்பவைகுஜராத் மாநிலத்தில் மிதி விர்தி என்னு மிடத்திலும், ஆந்திரப் பிரதேசத்தில் கொவ் வாடா என்னுமிடத்திலும் அமெரிக்க அணு உலைகளை நிறுவும் செயல்கள் அதிக செலவு பிடிக்கக்கூடியவை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மக்களின்பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையுமாகும்.
பிரெஞ்சு அணு உலைகள் நிறுவப்பட இருக்கும் ஜெய்தாபூர்திட்டத்திற்கும் இவை பொருந்தக் கூடியதேயாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது கையெழுத்தான ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement on Asia-Pacific and Indian Ocean)யைப் போன்றே, இப்போது இந் தியா - ஜப்பான் இடையே கையெழுத்தா கியுள்ள தொலை நோக்கு அறிக்கையும் போர்த்தந்திரம் மற்றும் உலக அளவிலான ஒத்துழைப்பு குறித்துப் பேசுவதுடன், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக் காவின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா,ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அணிசேர்க்கை ஏற்பட்டிருப்பதையே இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கு சேவை செய்யவே
ஜப்பான், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் காலங்காலமாகவே முதலீடுகளைச் செய்து வந்திருக்கிறது. எனவே, ஆசியாவில் உள்ள இரு பெரிய நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகள் விரிவடைவது என்பது இயற்கையானது மட்டுமல்ல, அவசியமுமாகும். ஆனால், இது இந்தியாவை ஆசியாவில் ஓர் அணிக்குள் தள்ளி அதனை சுருக்கிவிடக்கூடிய ஒருபோர்த்தந்திர உறவாக இருந்திடக்கூடாது. (But this should not entail a strategic relationship which confines India to one bloc in Asia.)
இப்போது உருவாகியிருக்கிற அமெ ரிக்க, ஜப்பானிய, இந்திய ராணுவ - பாதுகாப்பு அணிவரிசை சீனாவைக் கட்டுக்குள் வைத்திட அமெரிக்கா மேற்கொண் டுள்ள திட்டங்களுக்கு சேவை செய்வதற்கேயாகும்.
நிச்சயமாக இது இந்தியாவின் நலன்களுக்கானதாக இருந்திட முடியாது. பிரதமர் சின்சோ அபேயின் கீழ் உள்ள ஜப்பான், சீனாவிற்கு எதிராக ஒரு அதிதீவிர தேசவெறி நிலைப்பாட்டை (ultra nationalist posture) பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
மோடி அரசாங்கத்தின் குறுகிய பார்வையே அதனை அமெரிக் காவின் சூழ்ச்சித் திட்டங்களுக்கு இரை யாக்கி இருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, December 13, 2015

இந்திய-பாக். பேச்சு: முன்னெடுத்துச் சென்றிடுக



பாகிஸ்தானுடன் பேச்சுவார்த் தைகள் நடத்துவது தொடர்பாக மோடி அரசாங்கம் இதுநாள்வரை எடுத்து வந்த நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக, இந்திய -பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அயல்துறை செய லாளர்கள் சந்திப்பும் அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இஸ்லாமாபாத்திற்கு பயணம் செய்திருப்பதும் நடந்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த மாற்றம் என்றுகூறக்கூடிய அதே சமயத்தில், பாகிஸ்தானுடனான இந்தியத் தூதரக உறவுகளில் அதுமுன்னுக்குப்பின் முரணின்றி ஒரு சீரானநிலையினை எடுக்க முடியாமல் திண்டாடுவதையும், ஏற்ற இறக்கத்தையும் கூட தெளிவாகக் காட்டுகிறது.
மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே, பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்பாக அது ஒரு மோதல் போக்கைப் பின்பற்றி வந்தது. 2014 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த அயல்துறை செயலாளர்களின் பேச்சு வார்த்தைகளை முறித்துக் கொண்டது. இதற்கு இந்தியத்தரப்பில் கூறப்பட்ட சாக்குப்போக்கு என்னவெனில், பாகிஸ்தான்அயல்துறை அமைச்சர் ஜம்மு - காஷ் மீருக்குவருகை தந்த போது ஹூரியத் தலைவர்களையும் சந்திக்கப் போகிறார் என்பதாகும். அதன்பின்னர் சுமார் ஓராண்டு கால இடைவெளிக்கிடையே, இருநாட்டின் பிரதமர்களும் ரஷ்யாவில் உஃபா என்னுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.
அப்போது அவர்களிருவரும் இரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இரு நாட்டின் எல்லைகளிலும் இருக்கின்ற துணை ராணுவப் படைத் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்திடத் தீர்மானித்தனர். இவை சம்பந்தமாக நிகழ்ச்சிநிரல் தயாரிக்கும்போது, இந்தியா பயங்கரவாதம் குறித்து மட்டும்தான் விவாதிக்க வேண்டும் என்றும் அது மட்டும்தான் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தது. ஆனால், பாகிஸ்தானோ காஷ்மீர் மற்றும் நிலுவையில் உள்ள இதர அனைத்துபிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கக் கூடிய விதத்தில் நிகழ்ச்சிநிரல் தயாரித் திட வேண்டும் என்று கூறியது. இவ் வாறு இவை சம்பந்தமாக தயாரிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல் குறித்து, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதன் விளைவாக, இப்பேச்சுவார்த்தைகளும் நடைபெறாமல் தோல்வி அடைந்து விட்டன. பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹூரியத் தலைவர்களைச் சந்திப்பது குறித்து இந்தியா தரப்பில் ஆட்சேபணை எழுப்பப்பட்டது.தலைகீழ் மாற்றம்மோடி அரசாங்கம் மற்றும் பாஜக இந்தசமயத்தில் பயங்கரவாதம் குறித்துத்தான்முதலில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்திருந் தது. அதே சமயத்தில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, தொடர்ந்து வெடிகுண்டு தாக்கு தல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. ஜம்மு - காஷ்மீருக் குள்ளும் ஃபிடாயீன் குழு எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல்கள் தொடுப்பது அதிகரித்தன.
பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவல் செய்வதை நிறுத்தாதவரையிலும், பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகளைப் பேச முன் வராத வரையிலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருந்தது. பிரதமர் மோடி இந்த ஆண்டு நவம்பரில்ஸ்ரீநகருக்கு பயணம் செய்தார். அப்போது ஜம்மு - காஷ்மீர் அரசியல் வட்டாரங்களின் மத்தியில், அவர் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து சிலஅறிவிப்புகளைச் செய்திடுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படி எதுவும் நடந்திடவில்லை. எனவே, இப்போது இந்திய அரசாங்கத் தின் பக்கத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்,ஒரு தலைகீழ் மாற்றமாகவே தோன்று கிறது. பாரீசில் பூமி வெப்பமயமாதல் குறித்து உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தசமயத்தில், இரு நாட் டின் பிரதமர்களும் தனியே, ஒருசில நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். அதன் விளை வாக, 2015 டிசம்பர் 6 அன்று பாங்காக்கில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டி னன்ட் ஜெனரல் நசீர் ஜான்ஜூவா ஆகிய இருவருக்கும் இடையே ரகசியக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடன் இரு நாட்டின் அயல்துறை செயலாளர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள். இச் சந்திப்பிற்குப்பின் வெளியாகியுள்ள அறிக்கையில், “அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் இரு நாடுகளின் எல்லைக் கோட்டில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற் றன,’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனைமேலும் முன்னெடுத்துச் செல்வது என்றும்கூட அப்போது தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த் தைகளை வாபஸ் வாங்கி நான்கு மாதங்கள்கடந்த பின்னர், இந்தியா, பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமல்லாமல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் விவாதித்திட ஒப்புக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைகள் அனைத் துமே முன்பு சர் கிரீக் தாவாவின்போதும், சியாச்சின் பனிப்பகுதியில் படைகளை அனுப்பியபோதும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது விவாதிக்கப் பட்டவைகளேயாகும். தனிமைப்பட்டது...மோடி அரசாங்கம், பாகிஸ்தானுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தமாட்டோம் என்று பிடிவாதமாகவும், எவரும் ஏற்கமுடியாத அளவில் கார ணங்கள் சொல்லிக்கொண்டிருந் ததிலிருந்தும் இப்போது திடீரென்று தலைகீழாக மாறியிருப்பதற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுடனான பேச்சுவார்த் தைகளைத் தொடர முட்டுக் கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்கிற பிரச்சனை என்று கூறிவந்ததை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திட இந்தியா முயற்சித்ததில் தோல்வி கண்டுவிட்டது.
அமெரிக்கா, பாகிஸ் தானுக்கு ராணுவ உதவிகளை அதிகப் படுத்தி இருக்கிறது. இது இந்தியாவை ஆத்திரப்படுத்தியுள்ள போதிலும், அதனால் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும்சொல்ல முடியவில்லை. வாஷிங்டன்னுக்கு நவாஸ் ஷெரிப் சென்றிருந்த போது, தலிபான் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திட பாகிஸ்தானுக்கு இருக்கும் கேந்திரமான பங்கினை அமெரிக்கா மீண்டும் உறுதி செய்தது. `சார்க்’ நாடுகளுக்குள் கூட, தனிமைப்படுத்தப் பட்டு விட்டதை இந்தியா உணரத் தலைப் பட்டிருக்கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை நம்பாதுகாப்புப் படையினரால் உறுதியாகஎதிர்த்து முறியடித்திட முடியும், அதன் மூலம் பாகிஸ்தானை இப்பிரச்சனைமீது பேச வருவதற்குக் கட்டாயப்படுத்திட முடியும் என்கிற இந்தியாவின் நிலைபாடு மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திடாமல், அதனுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளாமல், பயங்கரவாத வன்முறைப் பிரச்சனையை சமாளித்திட முடியாது என்பதை இந்திய அரசு இப்போது உணர்ந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் தன்னுடைய வெறித்தன மான நிலைபாட்டை இந்தியா கைவிட்டி ருக்கிறது.
அமெரிக்காவை மீற முடியவில்லை
சர்வதேச அளவில், பிரதானமாக அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த் தைகளைத் தொடர வேண்டும் என்று இந்தியாவிற்குத் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வந்தன. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள மோடி அரசாங்கம், இந்த நிர்ப்பந்தத்தைத் தடுத்திட முடியவில்லை. இறுதியாக, ஆப்கானிஸ்தானுடனான மோதலில் இந்தியா தனிமைப்படக்கூடிய சூழல்உருவாகி இருப்பதையும்.
இப்பிராந் தியத்தில் உள்ள நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதில் பாகிஸ்தான் கேந்திரமான பங்கினை வகித்திடும் எதார்த்த நிலையையும் இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. சுஷ்மா சுவராஜ் “ஆசியாவின் இதயம்’’ மாநாட்டில் கலந்து கொள்வது இதனை அங்கீகரித்ததன் விளைவேயாகும். மோடி அரசாங்கம், பாகிஸ்தான் தொடர்பாக மேற்கொண்டிருந்த கொள்கை படு தோல்வி அடைந்து விட்டதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.
மோடியின் ஆசிர்வாதத்துடன் பாகிஸ்தானுடன் மோதல் போக்கை ஏற்படுத்தும் விதத்தில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மிகவும் மிகைப்படுத்தி தேசியவெறியுடன் உருவாக்கிய வெறித்தன மான கொள்கை இவ்வாறு படுதோல்வி அடைந்துவிட்டது.
இந்திய அரசின் கொள்கையில் இவ் வாறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்ப துடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் பாஜகவிலும் இருக்கின்ற வெறிபிடித்த தீவிரவாதிகள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், மோடி அரசாங்கம், பாகிஸ்தானுடனான தூதரக உறவில் இவ்வாறு படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்பு வோம். சுஷ்மா சுவராஜின் பயணத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ள அறிவிப் பினை எவ்விதப் பின்வாங்கலும் இன்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)



Monday, November 16, 2015

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக!





நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக!

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது. மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக, ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள் பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.
நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.
அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)

Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு



பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு
பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு கடும் தோல்வியினை ஏற்படுத்தி இருக் கிறது. ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ஆட்சிக்குவந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியலில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த இருக்கின் றன. பாஜக, மக்களவைத் தேர்தலின்போது மேற்கொண்ட அதே உத்தியை - அதாவது வளர்ச்சி குறித்துப் பேசிக்கொண்டே, மதவெறித் தீயை விசிறிவிடுவது - இப் போதும் பின்பற்றியது. மக்களவைத் தேர்தலின்போது மதவெறித் தீயை மக்களிடம் கொண்டு சென்ற நூற்றுக்கணக் கான ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், பீகார்தேர்தலின்போதும் இறக்கிவிடப்பட்டார் கள். உச்சகட்டமாக, நரேந்திர மோடியும், அமித்ஷாவும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியை உமிழ்ந்தார்கள். மோடி பேசியஇடங்களில் எல்லாம், ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் “தலித்துகள், மகா தலித்துகள், பிற்படுத்தப் பட்டோர், பொருளாதார ரீதியாக பிற் படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 5 சதவீத இடங்களை ஒரு குறிப் பிட்ட இனத்தினருக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்,’’ என்று மக்களை எச்சரித்தவண்ணம் இருந்தார்கள்.
இதே கருத்தைத் தாங்கி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் செய்தார்கள். பாஜகவின் தலைவர் அமித் ஷா பேசுகையில், பாஜ கவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று பொருள்படும்படி, பாஜகவின் தோல்வி, பாகிஸ்தானில் வெடிகள் வெடித்துக் கொண்டாடப்படும் என்று பிரகடனம் செய்தார். தேர்தல் பிரச் சாரத்தின்போது, “பசுக்களும்’ ’ பயன்படுத்தப்பட்டு, “பசுக்களுக்கு அச்சுறுத்தல்’’ என்று விளம்பரங்கள் செய்யப் பட்டன.பாஜக, மக்களின் மனோநிலை குறித்து, முழுமையாகத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டது. மத்தியில் ஆட்சி செய்தபாஜக-வின் 18 மாத கால ஆட்சி, “வளர்ச்சி’’ குறித்துப் பேசினாலும், அது முற்றிலும் மாயை என்பதை மக்களுக்குப் புரிய வைத்துவிட்டது. பருப்புகளின் விலைகிலோ ரூ.200க்கும் அதிகமாக உயர்ந்து விட்டன. பாஜக, உயர்சாதியினர், பொரு ளாதார ரீதியில் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளை ஒன்றிணைப்பதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என கனவுகண்டது. ஆனால் பாஜகவின் கனவை,ஆர்ஜேடி - ஐக்கிய ஜனதா தளத்தின்ஒற்றுமை சுக்கு நூறாக உடைத் தெறிந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரி சீலனை செய்யப்படும் என்று அறைகூவல் விடுத்தது,
மக்கள் மத்தியில் பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் உயர்சாதியி னரைத் தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவா கொள்கைதான் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இன்றைய சூழ்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றன. மோடி அரசாங்கம் பத விக்கு வந்ததிலிருந்தே, ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெ டுத்துச் செல்ல வெறித்தனமாகப் பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டு வந்தன. சிறுபான் மையினர் மீதான தாக்குதல்கள், பசுவதைபோன்ற பிரச்சனைகளை வைத்து அவர் களைக் குறிவைத்துத் தாக்குதல், இதன்விளைவாக தாத்ரியில் முகமது இக்லாக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்கள் தெள்ளத்தெளிவாக்குகின்றன. மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத்தான் பன்சாரே மற்றும் கல்புர்கி கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர வையில் உள்ள அமைச்சர்களிலிருந்து, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அடிமட்ட ஊதுகுழல்கள் வரை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளத்தை அகற்ற வேண்டும் என்ப திலேயே குறியாக இருந்தார்கள்.
பீகார்தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இத்தகைய மோசமான பிரச்சாரம் அவர்களால் உமிழப் பட்டன. மோடி அரசாங்கத்தின் பதினெட்டு மாத கால ஆட்சியில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் கடும் தாக்குதல்கள், சமூக நலத்திட்டங்கள் கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய வலது சாரி பொருளாதார மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரலைத்தான், பீகார் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆறு இடதுசாரிக் கட்சிகள் சட்ட மன்றத் தேர்தலில் ஒன்றுபட்டு நின்று போட்டியிட்டன. பிரதான கூட்டணி களுக்கு இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இடதுசாரிகள் சுமார் 4 சதவீதவாக்குகளையும், சிபிஐ(எம்-எல்-லிப ரேசன்) கட்சிமூலம் மூன்று இடங்களையும் பெற முடிந்திருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் புரிந்துணர்வு மிகவும் தாமதமாகத்தான் உருப்பெற்றது. தேர்தல்கள்அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 7 அன்றுதான் அனைத்து இடதுசாரிக் கட்சி களின் கூட்டு சிறப்பு மாநாடே நடந்தது. தொகுதி ஒதுக்கீட்டிலும்கூட முழுமை யான அளவில் அனைத்துக்கட்சிகளும் ஒத்துப்போகவில்லை. மாநில அளவில் தீவிரமான அளவில் கூட்டுப் பிரச்சாரமும் நடைபெறவில்லை. இவ்வளவு பலவீனங் கள் இருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமை மாநிலத்தில் ஒரு வலு வான இடது ஜனநாயக கூட்டணியை கட்டிஎழுப்பிட முடியும் என்பதைக் காட்டி இருக் கிறது. இதற்கு வரவிருக்கும் காலங்களில் இடதுசாரிக்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டும். பீகார் தேர்தல் வெற்றி, மோடி அரசாங்கத்தின் வலதுசாரிப் பொருளா தாரக் கொள்கைகள், ஆர்எஸ்எஸ்-பாஜககூட்டணியின் மதவெறி நிகழ்ச்சிநிரல், வளர்ந்துகொண்டிருக்கும் எதேச்சதி காரம் ஆகியவற்றிற்கு எதிராக நடைபெற் றுக் கொண்டிருக்கும் அகில இந்தியப் போராட்டங்களுக்கு உதவிடும். வலதுசாரி தாக்குதலின் இம்மூன்று அம்சங்களுக்கு எதிராக வலுவான இயக்கங்கள் மற் றும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட, மேடை அமைக்கப் பட்டுவிட்டது.
நவம்பர் 10, 2015 தமிழில்: ச. வீரமணி

Wednesday, October 7, 2015

தசரத் தேவ் பிறந்தநாள் நூற்றாண்டு:அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது--கவுதம் தாஸ்



 தசரத் தேவ் 

புதுதில்லியில், நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவைக்கு 1952இல் தேர்வுசெய்யப்பட்ட  உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதத்தில், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி எம்பியாகத் தேர்வுசெய்யப்பட்ட புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர் மெக்னாத் ஷாஹா சிவப்பாகவும் அழகாகவும் இருந்த பழங்குடி இளைஞர் ஒருவரைச் சுட்டிக்காட்டி சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தார். அவர் தசரத் தேவ். திரிபுராவில் கிழக்கு திரிபுரா (பழங்குடியினர் தொகுதி)யிலிருந்துகம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், இப்போதும் அவர் காவல்துறையினரால், பிடியாணைகளுடன் (அரஸ்ட் வாரண்டுகளுடன்) வேட்டையாடப் பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தலைமறைவாக இருக்கும் காலத்திலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.’’ இவ்வாறு கூறிய டாக்டர் ஷாஹா பின்னர் சபாநாயகர் பி.ஜி, மாவலங்காரிடம், தசரத் தேவுக்கு எதிராக உள்ள பிடியாணைகளை ரத்து செய்திட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்  என்று உறுதி அளித்த சபாநாயகர் மாவலங்கார், பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பார்த்து, தசரத்தேவ் மீதான பிடியாணைகளை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டார். பிரதமர் ஜவஹர்லால் நேரு, தசரத்தேவ் மீதும் மற்றும் கண முக்தி பரிஷத் தலைவர்கள்மீதும் இருந்த பிடியாணைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திரிபுரா மாநில அரசாங்கத்திற்கு கட்டளை பிறப்பித்தார். அதன்பின்னர்தான் பழங்குடியினர் பகுதிகளில் இருந்த ராணுவமும் போலீசும் விலக்கிக்கொள்ளப்பட்டன.  கணமுக்தி பரிஷத் தலைவர்கள் மீண்டும் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சுமார் ஐந்தாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தசரத் தேவ் அதிலிருந்து வெளியே வந்தார்.
மன்னராட்சியின்கீழ் அடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியின மக்களை  அடிமைத்தளையிலிருந்து விடுவித்திடவும், பழங்குடியின மக்களுக்கும் இதர இனத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதிலும், தலைமைப்பாத்திரம் வகித்த மாபெரும் கம்யூனிஸ்ட்டாக தோழர் தசரத் தேவ் விளங்கினார்.
தோழர் தசரத் தேவ் 1916 பிப்ரவரி 2 அன்று திரிபுரா மாநிலத்தில் கோவாய் உட்கோட்டத்தின்கீழ் அம்புராவில் குக்கிராமம் ஒன்றில் ஏழை பழங்குடியின விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 1943இல் அகர்தலாவில் உமாகந்தா பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி அடைந்தார். பின்னர்  (தற்போது வங்கதேசத்தில் உள்ள) ஹபிகஞ்ச்சில் 1945இல் பட்டப்படிப்பை முடித்தார்.  பின்னர்  முதுகலைப்படிப்பைத் தொடர்வதற்காக  கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார்.  ஆயினும் அவர் சக நண்பர்கள் சிலர் திரிபுரா பழங்குடியினர் வாழும் கிராமங்களில் `மக்கள் எழுத்தறிவு இயக்கத்தைதொடங்கியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் திரிபுராவிற்கு அழைக்கப் பட்டார்.
மன்னராட்சியின்கீழ் கிராமத்தின் மகாஜனங்களால் காலங்காலமாய் எழுத்தறிவு மறுக்கப்பட்டு, அடிமைகளாய் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களை இந்நிலையிலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு `மக்கள் எழுத்தறிவு இயக்கம்தொடங்கப்பட்டது. 1945 டிசம்பர் 27 அன்று மக்கள் எழுத்தறிவு இயக்கம் (ஜனசிக்சா சமிதி) அமைக்கப்பட்டு,  தசரத் தேவ் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஓராண்டுக்குள்ளேயே மாநிலம் முழுவதும் 488 பள்ளிகள் இதன்கீழ் நிறுவப்பட்டன.  இவ்வியக்கத்தினை முளையிலேயே கிள்ளி எறிய மன்னராட்சி முயற்சிகளை மேற்கொண்டது. ஆயினும் அவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, மக்கள் எழுத்தறிவு இயக்கம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
மக்கள் எழுத்தறிவு இயக்கத் தலைவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, மாநிலத்தில் ஜனநாயகபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் அமைந்திட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பத் தொடங்கினார்கள். இயற்கையாகவே இது மன்னராட்சியின் கோபத்திற்கு ஆளானது. எனவே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வியக்கத்தினை நசுக்கிட,  அடக்குமுறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு மன்னராட்சியின் போலீசாரும், ராணுவத்தினரும் அனுப்பப்பட்டனர்.  கிராமம் கிராமமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. உணவு தானியங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எழுத்தறிவு இயக்கத் தலைவர்கள் வலைவீசித் தேடப்பட்டனர். கிராமத்தினர் எவரும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மன்னராட்சியின் அடக்குமுறை வெறியாட்டங் களுக்குப் பயந்து ஆண்கள் காடுகளுக்குள் சென்று பதுங்கி வாழ்ந்தார்கள். பெண்களை போலீசாரும், ராணுவத்தினரும் மானபங்கப்படுத்தி, முரட்டுத்தனமாக இழுத்துச் சென்றார்கள்.
இத்தகைய மிகவும் கொடூரமான பின்னணியில்தான், மன்னராட்சியின் ஏவல்நாய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக,  கண முக்தி பரிஷத் (GMP) அமைப்பு 1948இல் உருவாக்கப்பட்டது. இதே சமயத்தில் திரிபுராவை இந்தியாவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.  1950இல் திரிபுரா மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, திரிபுரா எல்லை கவுன்சில் அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தது. இவ்வாறு மன்னராட்சியின் கீழிருந்த நிர்வாகம் காங்கிரஸ் நிர்வாகமாக மாற்றப்பட்டது. எனினும் கண முக்தி பரிஷத் மீதான அணுகுமுறையில் ஆட்சியாளர்கள் எவ்விதமாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை.  பழங்குடியின மக்கள் மீதான அடக்குமுறை காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் முன்பைவிட மிகவும் மோசமானமுறையில் காட்டுமிராண்டித் தனமாக கிராமத்தினர்மீது அடக்குமுறையை அவர்கள் ஏவினார்கள். தசரத் தேவ் உட்பட கணமுக்தி பரிஷத் தலைவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.
1952இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, கிழக்கு திரிபுரா தொகுதியிலிருந்து தசரத் தேவ் தலைமறைவாக இருந்து கொண்டே போட்டியிட்டார். தேர்தலில் பெரும் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற தசரத் தேவ், தில்லியில் நாடாளுமன்றத்திற்குள் ரகசியமாகவே பிரவேசித்தார். அதன்பின் மக்களவையில் நடந்தவற்றைத்தான் முதல் பத்தியிலிலேயே தெரிவித்திருக்கிறோம்.
1950இல் தோழர் தசரத் தேவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  1951இல் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர் 1952இல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் பிரிவினருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபோது, தசரத் தேவ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.  கட்சியின் மத்தியக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதிலிருந்து 1998இல் உடல் நலிவடைந்த சமயத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திரிபுரா மாநிலத்தில்  பட்டினியால் வாடிக்கொண்டிருந்த மக்களுக்கு உணவுக்காகவும், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இன்றைய வங்க தேசத்திலிருந்து) அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த மக்களுக்கு முறையான புனர்வாழ்வுக்காகவும், நடைபெற்ற அலை அலையான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக 1978இல் நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி அரசாங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. தசரத் தேவ், நிருபன் சக்ரவர்த்தி, பிரன் தத்தா ஆகியோர் அளப்பரிய தலைவர்களாக உருவானார்கள்.
இடது முன்னணி அரசாங்கம் அமைந்தபின், வரலாறு படைக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தியது. இவற்றில் திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது மொழியாக கோக் பாரோக் என்னும் பழங்குடியின மொழியை அங்கீகரித்தது, கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகளைக் கறாராக அமல்படுத்தியது, கிராமப்புற ஏழைகளுக்கு `உணவுக்கான திட்டத்தைஅறிமுகப்படுத்தியது, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போருக்கு நில வரியை ரத்து செய்தது, பழங்குடியினரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் பழங்குடியினருக்கே வழங்கியது, பழங்குடியினர் பகுதிகளில் சுயாட்சி கவுன்சில் அமைத்தது, ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தது, ஆகியவைகளாகும்.
இடது முன்னணியின் செல்வாக்கைச் சீர்குலைப்பதற்காக பிற்போக்கு சக்திகள் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர்கள் இடையே மிகப்பெரிய அளவில் வகுப்புத்துவேஷத்தை உருவாக்கிட 1980 ஜூனில் வன்முறைகளைக் கட்டவிழ்த்தவிட்டன. தசரத் தேவைக் கொலை செய்திட வங்க வெறியர்களும், பழங்குடியின வெறியர்களும் தேடி அலைந்தனர். அவர் பல சமயங்களில் அவர்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
1978 முதல் 1988 வரை திரிபுரா மாநில முதல்வராக நிருபன் சக்ரவர்த்தி இருந்த சமயத்தில் அவரது அமைச்சரவையில் தசரத் தேவ் கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.  காங்கிரஸ் - திரிபுரா உபசாதி ஜூபசமிதி கூட்டணி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
தோழர் தசரத் தேவ் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர் இடையே நல்லிணக்கத்தையும் நட்புறவையும் வலுப்படுத்துவதில் பாலமாக விளங்கினார். அவர் ஒருசிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த நாடாளுமன்றவாதியும், தலைசிறந்த நிர்வாகியுமாவார். அவரது முயற்சியின் காரணமாகத்தான் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த கோக் போராக் மொழிக்கு எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது.  அவரது திரிபுரா மக்கள் இயக்கம் - என் நினைவுகள்’’ (The history of mass movement in my memory)என்ற நூலும், “கணமுக்தி பரிஷத் வரலாறு’’ (History of Mukti Parishad) என்னும் நூலும் திரிபுரா மாநில வெகுஜன இயக்க வரலாற்றின் மதிப்பிடற்கரிய ஆவணங்களாகும்.
2015 பிப்ரவரி 2இலிருந்து தசரத்தேவ் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திரிபுரா மாநிலம் முழுதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  பிறந்த நாள் விழாக் குழு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என இலக்கு நிர்ணயத்திருந்தது, ஆனால் அதனை ஏற்கனவே விஞ்சி, ஒரு லட்சத்து 70 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.
தோழர் தசரத் தேவ் வரலாறு படைத்திட்ட மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை  நிறுவனத் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், திரிபுராவில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயகஇயக்கம் அமைத்திட்டவர்களின் ஒருவர் என்ற முறையில் திரிபுரா மக்களால் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
(தமிழில்: ச.வீரமணி)