Sunday, April 29, 2012

பி.சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு - நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர்: -பிரகாஷ் காரத்


2012 மே 1 அன்று முதல் பி. சுந்தரய்யா பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்குகிறது. நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி.சுந் தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட இது ஒரு சந்தர்ப்பமாகும். பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட பி.சுந் தரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கங்களின் ஊடே உருவான ஒப்பற்ற தலைவராவார். தன்னு டைய 17 வயதிலேயே விடுதலைப் போராட் டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சுந்தரய்யா, தன்னுடைய அரசியல் பய ணத்தை ஒரு காங்கிரஸ் செயல்வீரராக ஆரம் பித்து, உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக நிறைவு செய்தார். கம்யூனிஸ்ட்டுகளாக மாறிய வீரஞ் செறிந்த விடுதலைப்போராளிகள் பலரைப் போன்று சுந்தரய்யாவும் சாதியமைப்புக்கு எதி ராகக் கிளர்ச்சி செய்தார். சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நட வடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்கு முறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணா விரதம் மேற்கொண்டதாகும். தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் கம்யூனிஸ்ட்டான அமீர் ஹைதர் கான் மூலம், தோழர் சுந்தரய்யா, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் மாணவனான சுந்தரய்யாவிடம் புரட்சியாள னுக்கான ஆற்றல் அளப்பரிய அளவில் இருந் ததை அவர் பார்த்தார். அப்போதிருந்து பி.எஸ்-ஸின் அனைவரும் வியக்கத்தக்க புரட்சிகரப் பாதை தொடங்கியது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், பி.எஸ். கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர் களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருப் பதை அறிய முடியும். 24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அது இருந்தது. தென்னிந்தியாவில் கட்சி யைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந் தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். அவ ருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிர தேசத்தில், கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார். அதன் மூலம் தேசிய இயக்கத்திற்குள் ளிருந்த இளம் புரட்சிகர சக்திகளைக் கவர்ந் தார். அவருடைய முன்னோடியான மற்றும் கடின உழைப்பின் காரணமாகத்தான் ஆந் திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற் கான அடித்தளம் அமைக்கப்பட்டது. பி.எஸ். தமிழ்நாட்டிலும் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டு களின் முதல் குழுவினருடன் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் சென்னை மாகாணம் என்பது ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகள் சிலவற்றை யும் உள்ளடக்கியிருந்தது. பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை அமைப்பதில் பி.எஸ். முக்கியமான பங் கினை ஆற்றினார். 1964இல் கட்சி உருவான ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சி யின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய் யப்பட்டார். பன்னிரண்டு ஆண்டு காலம் பி.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். அந்த சமயத்தில் அவர் கட்சியை ஒரு மார்க்சிச - லெனினிச அமைப் பாக உருவாக்குவதற்காகத் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டார். 1967இல் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ (‘கூயளம டிn ஞயசவல டீசபயnளையவiடிn’) என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. பி. சுந்தரய்யா, விவசாயப் புரட்சிக்கான போர்த்தந்திரங்களை வளர்த்தெடுப்பதில் பெருமளவில் பங்களிப்பினைச் செய்திருக் கிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறு வனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப் போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயத் தொழி லாளர்களை அணிதிரட்டுவதன் முக்கியத்து வத்தையும், நாட்டுப்புறத் தொழிலாளர் வர்க்க மாக அவர்களது பங்கினையும் அங்கீகரித்த முன்னவர்களில் அவரும் ஒருவர். வீரஞ் செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத் திற்கு அவரது தலைமை காலத்தால் அழி யாதது. ‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். பின்னர் அவர் விவசாய நிலைமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், நாட்டுப்புறத்தில் வளர்ந் துள்ள வர்க்கங்கள் குறித்தும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். எழுபதுகளின் மத்தியவாக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத் தில் உள்ள கிராமங்கள் குறித்தும் அங்குள்ள நிலங்கள், நிலவுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் குறித்தும் ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வினை அவர் மேற் கொண்டார். ஏழை விவசாயிகளையும், விவ சாயத் தொழிலாளர்களையும் விடுதலை செய் யக்கூடிய விவசாயப் புரட்சி இல்லாமல், நம் நாட்டில் ஜனநாயகப் புரட்சி முழுமை அடையாது என்பதில் அவர் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தார். தோழர் பி.எஸ். மார்க்சிச - லெனினிச சித் தாந்தம் மற்றும் கொள்கைகளில் தீவிரமான ஆர்வமுடையவராக இருந்தார். கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்த திருத்தல்வாதத் திற்கு எதிராகப் போராடினார். அதேபோன்று அதற்கு இணையாக ‘அதிதீவிர இடதுசாரி’ திரிபுகளுக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார். வீரத் தெலுங்கானா விவசாயிகள் கொரில்லா யுத்தத்தை முன்னின்று நடத்திய போராளி என்பதால் அவரால் நக்சலிச இயக் கத்தின் இடது - அதிதீவிரவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ வாதத்தை மிக எளி தாக உய்த்துணர முடிந்தது. தோழர் பி. சுந்தரய்யாவின் மற்றுமொரு மாபெரும் குணம், கட்சி மற்றும் இயக்கத்தின் முன்னணி ஊழியர்களை நன்கு பேணி வளர்த்தெடுக்கும் பண்பாகும். அவர் கட்சியின் பல்வேறு நிலைகளில் தலைமைப் பொறுப் பில் இருந்திருக்கிறார். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அறிவாற்றல் மிக்க ஊழியர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை சரியாக மதிப் பிட்டு, அவர்களைத் தெரிவுசெய்தபின், நன்கு பேணி வளர்த்திடுவார். தோழர் பி.எஸ். - ஸின் இத்தகைய உன்னதமான திறமையின் விளை வாகத்தான் எண்ணற்ற கம்யூனிஸ்ட் ஊழியர் கள் வழிவழியாக வார்த்தெடுக்கப்பட்டு செயல் பட்டு வருகிறார்கள். தோழர் பி.எஸ். தலைமுறையில் எண் ணற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைத்து வகையான தியாகம் புரிந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டிருக்கிறார்கள். ஆயி னும், தோழர் சுந்தரய்யாவின் எளிமை, தியாகம் மற்றும் முழு ஈடுபாடு அவர்களின் மத்தி யிலும் அவரைத் தனித்து, கம்பீரமாக நிறுத்தி யது. தோழர் சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத் தின் கிராமப் பகுதிகளுக்குள் பல மைல்கள் சைக்கிளிலேயே சென்றிருக்கிறார், தெலுங் கானாவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல நாட்கள் பல்வேறு சிரமங்களுடன் நடந்து சென்றிருக்கிறார், சிறைக்குள் பல ஆண்டு கள் மிகவும் கட்டுப்பாட்டுடனான வாழ்க்கை யைக் கழித்திருக்கிறார். உடல் உறுதியிலும் கடுஞ்சிரமங்களையும் புன்னகையுடன் ஏற்கும் மனோதிடத்துடனும் அவருக்கு இணையாக வெகு சிலர்தான் இருந்திருக் கிறார்கள். எல்லோரும் அவரை ஒரு முன் மாதிரியாகக் கொள்ளக்கூடிய விதத்தில் கட்சி யில் எவ்வித சுயநலமுமின்றி செயல்பட்டார். இத்தகைய அவரது எளிமை மற்றும் தியாக வாழ்வுதான் ஆந்திராவில் கட்சிக்கு அப்பால் உள்ள பலர் மத்தியிலும் அவரை ஒரு ‘‘கம்யூ னிஸ்ட் ரிஷி’’ என்று அழைக்க வைத்தது. கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, தோழர் பி.சுந்தரய்யாவின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டிற்கு அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக் கிறது. இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டங் களை, கட்சியைக் கட்டுவதற்கும் வலுப் படுத்துவதற்குமான ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்து அரசியல் தலைமைக் குழு விரைவில் அறிவித்திடும். - தமிழில்: ச.வீரமணி

Monday, April 23, 2012

கார்ப்பரேட் ஊடகங்களின் கட்டுக்கதைகள் - a commentator


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு தொடர்பாக செய்திகள் வெளியிட்ட சில கார்ப்பரேட் ஊடகங்கள், மாநாடு குறித்து கட்டுக்கதைக ளையும், உண்மைகளைத் திரித்தும், பொய் மூட்டைகளையும் தங்கள் இஷ்டம் போல் கட்டவிழ்த்துவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, 2008இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதிலிருந்தே பெரும் வர்த் தக நிறுவனங்களின் சில ஊடகங்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ் வாறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இருந்து பாரம்பரியமாக வெளி வரும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு செய்தித்தாள்கள் இதில் முன்னணியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் ‘ஆனந்த பசார் ’‘பத்தி ரிகா குழுவிலிருந்து வெளிவரும் சில ஊட கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே, மாநாடு குறித்து, புத்ததேவ் பட்டாச்சார்யா கட்சியின் மத்தியத் தலைமையுடன் மகிழ்ச் சியுடன் இல்லை என்றும், எனவே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மறுத்துக் கொண்டிருந்தார் என்றும் எழுதின. மாநாடு தொடங்கிய நாளன்று, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் தொலைக்காட்சி மற்றும் செய் தித்தாள் ஊடகங்கள் ‘‘புத்ததேவ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அதில் அவர் தன்னை அர சியல் தலைமைக்குழுவிலிருந்தும், மத்தியக் குழுவிலிருந்தும் விடுவித்திடுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும்’’ வெளியிட்டன. தன் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனக்கு மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு அவர் எழுதியிருந்த கடிதம் குறித்து கட்சி யின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவித் திருந்த நிலையிலும், மத்தியக்குழுவிலும் அர சியல் தலைமைக் குழுவிலும் அவர் இருக்க மாட்டார் என்கிற ஊகங்களை அவை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தன. கட்சித் தலைமையில் ஆழமான பிரிவுகள் இருப்பதாகச் சித்தரிக்க வேண்டும் என்பதே அத்தகைய பிரச்சாரத்தின் நோக்கமாகும்.கட்சியின் அகில இந்திய மாநாடு என்பது கட்சியின் பிரதானமான கொள்கை மற்றும் நடைமுறை உத்திகள் குறித்து விவாதிக்கப் படும் கட்சியின் ஓர் உயர்மட்ட அமைப்பாகும். கட்சியின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் எழுப்பப்படும் விமர்சனரீதியான கருத்துக்களை இத்தகைய ஊடகங்கள் வெளிப்படுத்தலாம் என்றுதான் ஒருவர் எதிர்பார்க்க முடியும். ஆனால் இவை அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல், மாநாட் டில் அளிக்கப்படும் தகவல்களைத் திரித்தும், பொய்களை உண்மைகளைப்போல் மாற்றியும் வெளியிட்டன. உண்மைகளைக் கண்ட றிந்து, அவற்றைச் சரிபார்த்து, அவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து சரியான முடிவு களுக்கு வர வேண்டும் என்கிற ஊடகவிய லின் அடிப்படைக் கொள்கையைக்கூட, மாநாடு குறித்து செய்திகள் அனுப்பிவந்த செய்தியாளர்களில் சிலர் கண்டுகொள்ளா ததையும் காண முடிந்தது. இவை தொடர்பாக சில உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும். ஆனந்த பசார் குழு விலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘தி டெலிகிராப்’ பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதில் அனைத்துப் பத்திரி கைகளையும் விஞ்சி நின்றது. மாநாடு குறித்து ஏப்ரல் 9 அன்று ஒரே நாளில் இரு கதைகளை முதல் பக்கத்திலேயே அது கட்டவிழ்த்து விட்டது. முதலாவது கதை, மாநாட்டில் தத்து வார்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான வாக்களிப்பு குறித்தாகும். தத்து வார்த்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் தவிர்த்திட்டார்கள் என்று இரு பிரதிநிதி களின் பெயர்களை அது குறிப்பிட்டிருந்தது. அது குறிப்பிட்ட அவர்களின் பெயர்கள் தவ றானவை. எந்தவிதத்தில் பார்த்தாலும், அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மொத்தம் உள்ள 727 பிரதிநிதிகளில் ஒரு பிரதிநிதி தீர்மானத்திற்கு எதிராக வாக் களித்தார் என்றும், மூன்று பிரதிநிதிகள் தீர் மானத்தின் மீது வாக்களிப்பதிலிருந்து, தங் களைத் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் முன்னதாகவே கூறப்பட்டுவிட்டது. இவ் வாறு பிரதிநிதிகள் வாக்களிப்பு எதிர்பாராத ஒன்று அல்ல, அல்லது, இயல்புமீறிய ஒன்று மல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பிரதிநிதிகள் தங் கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப் பது என்பது இயல்பான ஒன்று. அதேபோன்று கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் முடிவுகள் எதன் மீதும் தாங்கள் விரும்பிய வண்ணம் வாக்களிப் பதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு. அரசியல் தீர்மானத்திலும் கூட, தீர்மானத் திற்கு எதிராக இரு பிரதிநிதிகள் வாக்களித் துள்ளார்கள், இரு பிரதிநிதிகள் வாக்களிக் காமல் தங்களைத் தவிர்த்துக்கொண்டுள் ளார்கள். ஆனால், ‘தி டெலிகிராப்’ மற்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகள் இவற் றைக் கட்சியில் இரு தலைவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் வெளிப்பாடு போலச் சித்தரிக்கும் இழிசெயல்களில் ஈடு பட்டன. அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப் படும் ஒரு தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட தலைவரின் கருத்துக்களையும் பிரதிபலிக் காது, மாறாக அது மத்தியக் குழுவின் கருத் தாகும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நடை முறையை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். அது, வரைவு அரசியல் தீர்மானமாக இருந்தாலும் சரி, அல்லது வரைவு தத்து வார்த்தத் தீர்மானமாக இருந்தாலும் சரி - அவை மத்தியக்குழுவில் விவாதிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் ஒரு பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் உருவான வைகளாகும். அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதிகள் மத்தியில் வேறுபாடுகளுக்கான எந்த அடிப் படையையும் காண முடியாததால், சில ஊட கங்கள் இத்தகைய வேறுபாடுகளை உற் பத்தி செய்ய முனைந்தன. ‘தி டெலிகிராப்’ வெளியிட்ட மற்றொரு முதல்பக்க செய்தியின் தலைப்பு, ‘‘பொரு ளாதார மேதை வெளியேறினார்’’ என்பதாகும். பிரபாத் பட்நாயக், ‘‘அகில இந்திய மாநாட்டில் ஆறு நாட்களும் கலந்துகொண்டு அதன் பின் னரே தில்லி செல்வதற்குத் திட்டமிட்டிரு ந்தும்’’ மாநாட்டின் நான்காவது நாளே ‘‘வெறுப்புற்று’’ வெளியேறினார் என்று அந் நாளேடு அதில் குறிப்பிட்டிருந்தது. ஒரு பிரதி நிதி அவரை விமர்சித்ததாகவும் மற்றும் தலை மையின் அணுகுமுறையால் அவர் மனம் நொந்துபோய் விட்டதாகவும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டிருந்தது. முன்பு குறிப்பிட்ட தலைப்புச் செய்தியை எழுதிய அதே செய்தி யாளர்தான் இக்கதையையும் முழுமையாகப் புனைந்திருந்தார். தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் நலிவுற்றிருந்ததால் அவரைப் பார்ப் பதற்காக மாநாடு முடிவதற்கு முன்பே செல் வதற்கு, மாநாடு தொடங்குவதற்கு முன்பே, பொதுச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருந்த தாக, பிரபாத் பட்நாயக் அப்பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் விளக்க வேண்டியிருந்தது. இவ்வாறு கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவதில் தானும் எவ்விதத்திலும் சளைத்த தல்ல என்று காட்டக்கூடிய விதத்தில் கேர ளாவிலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்தி ரிகைகளில் ஒன்றான மலையாள மனோர மாவும் நடந்து கொண்டது. மாநாடு முடிவுற்ற பின்னர் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு அறி விக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பட்டியலில் அரசியல் தலைமைக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் எப்படியெல் லாம் கீழிறக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறு பத்தி (column) தலைப்புச் செய்தி ஒன்றை அது வெளியிட்டிருந்தது. அவரது பெயர் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த தாக அது குறிப்பிட்டிருந்தது. அறிவிக்கப் பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் பட்டியல், அவர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகச் சேரும் காலத்தை வைத் தும், அவர் கட்சியில் சேர்ந்த காலத்தை வைத் தும் கணக்கிடப்படுகிறது. சென்ற அகில இந்திய மாநாட்டில் எந்தவிதத்தில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவோ அதே வரிசை யில்தான் இந்த மாநாட்டிலும் குறிப்பிடப் பட்டது. ஆனால் மலையாள மனோரமா பத்தி ரிகை கட்சியில் கூர்மையான கருத்து வேறு பாடுகள் இருப்பதுபோல் காட்டுவதற்காக இவ்வாறு இழிநடவடிக்கையில் இறங்கி யிருக்கிறது.ஒரு பொதுவான தத்துவார்த்தப் புரிந்து ணர்விற்கு வருவதற்கும், கட்சியின் எதிர் காலத் திசைவழியை அளிப்பதற்கும் அடிப் படையாக விளங்கக்கூடிய, கட்சியின் அர சியல் - நடைமுறை உத்திகளை நிறை வேற்றுவதில் ஓர் உயர்ந்த அளவிலான ஒற்று மையையும், உறுதிப்பாட்டையும் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வெளிப் படுத்தியது.மாநாட்டின் இத்தகைய வெற்றிகரமான வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள சில கார்ப் பரேட் ஊடகங்களால் முடியவில்லை போலி ருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பாக எவருக்கும் எவ்விதமான கருத் துக்கள் இருந்தாலும், ஒருவர், மாநாட்டின் நிகழ்வுகளை அளிக்கும்போது, நடந்துள்ள வைகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பாரபட்சமின்றி அளித்திட வேண்டும் என் பதை ஊடகவியலின் அடிப்படை அம்ச மாகக் கொள்ள வேண்டும். (தமிழில்: ச.வீரமணி)

Thursday, April 19, 2012

சவால்களைச் சந்தித்திட சபதம்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 2012 ஏப்ரல் 4 முதல் 9ம் தேதி வரையில், 727 பிரதிநிதிகள் மற்றும் 74 பார்வை யாளர்களின் பங்கேற்புடன் ஆறு நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றது. வரைவு அரசியல் தீர்மானம், சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம், மற்றும் அரசியல் - ஸ்தாபன அறிக்கை ஆகிய முக்கிய மூன்று ஆவ ணங்கள் மீது விவாதங்கள் நடத்தி அவற்றை நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் உள்கட்சி ஜனநாயக நடைமுறைக்கிணங்க, முதல் இரு ஆவணங்களின் நகல்களும் மாநாட்டிற்கு இரு மாதங்களுக்கு முன்பே கட்சி அணி களுக்கு வெளியிடப்பட்டுவிட்டன. கட்சி யின் இணையதளத்திலும் அவை வெளி யிடப்பட்டன. அதனை அடுத்து அவற் றின் மீது 3 ஆயிரத்து 713 திருத்தங்கள் மாநாட்டிற்கு முன்பே வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் அரசியல் தீர்மானத்தின் மீது வரப்பெற்ற 163 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. அதே போன்று, தத்துவார்த்தத் தீர்மானத்தின் மீதும் 1,014 திருத்தங்கள் வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் 38 திருத் தங்கள் ஏற்கப்பட்டன. கூடுதலாக, மாநாட் டின் பிரதிநிதிகள் அரசியல் தீர்மானத்தின் மீது 349 திருத்தங்களையும், தத்துவார்த் தத் தீர்மானத்தின் மீது 235 திருத்தங் களையும் முன்மொழிந்தனர். மாநாடு அவை ஒவ்வொன்றையும் உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்வாறு மிகவும் ஆழ மான மற்றும் வலுவான விவாதங்களின் வெளிப்பாடாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானங்கள், கட்சிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பின்பற்ற வேண் டிய அரசியல்-நடைமுறை உத்திகளை வகுத்துத் தந்திருக்கின்றன. 1930களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தத்தைவிட மிக மோச மான அளவில் இன்றைய தினம் உலகப் பொருளாதார முதலாளித்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில்தான் கட்சி யின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இது, முதலாளித்துவம் என்பது எந்தக்காலத்திலும் மனிதனைச் சுரண்டாத மற்றும் நெருக்கடிகளுக்கு ஆளாகாத ஓர் அமைப்பாக இருக்க முடி யாது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிச-லெனினிசப் புரி தலை மிகவும் உரத்து மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. முந்தைய சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் தகர்ந்தபின் கடந்த இருபதாண்டுகளில் முதன் முதலாக, முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ள உலக மக் களின் பெரும்பான்மையினர், முதலாளித் துவ அமைப்பை கேள்விக்கு உட்படுத்த வும், இதற்கு மாற்று தேவை என்பதை உரத்துக்கூறவும் தொடங்கியிருக் கின்றனர். அதேபோன்று இந்தியாவிலும், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப் படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விளைந் துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சிகளும் போராட் டங்களும் இவற்றைப் பிரதிபலிக்கின்றன. மனித சமுதாயம் உருவாக்கியுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும், மனித குலம் முழுமைக்கும் சென்றடைய வேண் டும், அதனை மனிதகுலத்தின் ஒருசிலர் மட்டும் பறித்திடக் கூடாது என்கிற, மனிதகுல சுரண்டலமைப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கிற, சோசலிச அமைப்பு மட்டுமே அதற்கு மாற்றாக இருக்க முடியும் என்கிற மார்க்சிச-லெனினிசப் புரிந்து ணர்வை, மக்கள் தங்கள் சொந்த அனுப வங்களின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்கு உணர்ந்துகொண்டு விட்டார்கள். முதலாளித்துவத்திற்கு எதிராக இத் தகைய மாற்றுக்கான தேவை உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து கொண் டிருக்கிறது. ஆயினும், நம் முன்னுள்ள முக்கிய பிரச் சனை என்ன? மார்க்ஸ் கூறிய புகழ் பெற்ற வாசகமான, இன்றைய உலக நிலைமை குறித்துப் பல்வேறு விதங் களில் வியாக்கியானம் செய்தால் மட்டும் போதாது, அதனை எப்படி மாற்றப் போகிறோம் என்பதேயாகும். கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டில் பிர தானமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனை இதுவேயாகும்: ‘‘இந்தியாவில் உள்ள துல் லியமான நிலைமைகளில், முதலாளித்து வத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை எப்படி வலுப்படுத்தப் போகி றோம்?’’ அத்தகையதோர் மாற்றை வலுப்படுத் துவது என்பது, இந்தியாவில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப் படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும். இதனை எப்படி எய்த வேண்டும் என்பதே அரசியல் தீர்மானத்தின் சாராம்சமாகும். அடுத்த மூன்றாண்டுகளுக்கு - அதாவது அடுத்த அகில இந்திய மாநாடு வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் - நடைமுறை உத்திகளின் பிர தானத் தலையீடு (main thrust) என்பது தற் போது ஆளும் வர்க்கங்களால் கடைப் பிடிக்கப்பட்டு வரும் சமூகப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாக வளர்ந்துவரும் துன்பதுயரங்களுக்கு எதிராக வலுவான முறையில் மக்கள் போராட்டங்கள் மூலமாக, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவது என்பதேயாகும். நாட்டின் புறச்சூழல் (objective situation) முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் தேவையைக் கூர்மை யாகச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், அகக் காரணியானது subjective factor), அதாவது தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரின் போராட் டங்களின் ஒற்றுமை என்பது, அத்தகைய தோர் அரசியல் மாற்றை உருவாக்கக் கூடிய அளவிற்கு வலுப்படுத்த வேண் டிய நிலையில் இருந்து வருகிறது. இவ்வாறு அகக்காரணியை வலுப் படுத்தும் குறிக்கோளை எய்திடுவதற் காகவும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை வலுப்படுத்தி ஓர் அரசியல் மாற்றை நிறுவிடுவதற்காகவும், கட்சியின் அகில இந்திய மாநாடு, நாம் எதிர் கொண்டு வெல்ல வேண்டிய சவால்க ளாக எட்டு அம்சங்களை நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு எதிராக ஏகாதிபத் தியமும், பிற்போக்கு சக்திகளும் கட்ட விழ்த்துவிட்டுள்ள தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப் பது நம்முன் உள்ள முக்கியமான மற்றும் அவசரமான பணிகளில் ஒன்றாகும். கடந்த இருபதாண்டுகளாக, அவர்கள் முதலாளித்துவமே `நிரந்தரமானது` (eternal) என்றும், மார்க்சிசமும், சோசலிசமும் இறந்துவிட்டன என்றும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மிகவும் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடி நிலவும் இன்று, இவர்கள் தங்கள் தத்துவார்த்த ரீதியான தாக்குதலை, பின் நவீனத்துவம் என்னும் புதிய சித்தாந்தத்தின் மூலமாக ஏவத் தொடங்கியிருக்கிறார்கள். இவர் களது அனைத்துத் தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களின் அடிப்படை என்ன வெனில், வர்க்கச் சுரண்டல் நிலவுவதை யும், வர்க்கப் போராட்டத்தையும் மறுப்ப தும், உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப பெருவாரியான மக்கள் நலன் அடங்கி யிருக்கிறது என்று சித்தரிப்பதுமாகும். இத்தகைய தத்துவார்த்தத் தாக்குதல்கள், நடைமுறையில் உக்கிரமாக நடைபெற்று வரும் மனிதகுலச் சுரண்டல் குறித்து மக் களுக்குத் தெரியாமல் மறைத்து, அவர் களை மழுங்கடையச் செய்வதற்கு இட் டுச் செல்கின்றன. எனவே இதற்கு எதி ரான போராட்டத்தை மேற்கொள்ள வேண் டியதன் அவசியத்தை தீர்மானம் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சுரண்டப்பட்டு வரும் மக் களின் போராட்டங்களை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இடது மற்றும் ஜன நாயக சக்திகளை வலுப்படுத்துவதென் பதும் சாத்தியமாகும். நாடாளுமன்றத் திற்கு அப்பாலான இத்தகைய போராட் டங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், இத்தகைய போராட்டங்களின் வலு மட்டுமே, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மற்றும் பல்வேறு ஜனநாயக உள்ளாட்சி அமைப் புகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் பிரதி பலித்திடும். இவற்றை வெறும் அரசியல் கூட்டணிகள் ((political manoeuvring) மூலம் மட்டுமோ அல்லது நாடாளுமன்ற உத்திகள் (parliamentary tactics) மூலம் மட்டுமோ எய்திட முடியாது. மாறாக நாம் நம் குறிக்கோளை எய்திட நாடாளு மன்றத்திற்குள்ளே நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை, நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டங் களுடன் மிகவும் சரியான முறையில் பொருத்திட வேண்டும். மூன்றாவதாக, நாட்டில் பெருவாரி யான மக்கள் பங்கேற்கும் போராட் டங்களை வலுப்படுத்துவதென்பது எப் படிச் சாத்தியமாகும்? போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கும், ஏழை விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக் கும் இடையேயான ஒற்றுமையைக் கட் டுவதன் மூலமே இதனை எய்திட முடியும். வெகுஜனப் போராட்டங்கள் வலுப்படுத் தப்படுவதற்கு இத்தகைய தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையே அடித்தளமாக அமைந்திடும். நான்காவதாக, தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்துவதை எப்படி எய்துவது? தொழிலாளி வர்க்கம் தன் னுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இதனையும் எய்திட முடியும். நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தற்போது அணிதிரட்டப்பட்டுள்ள தொழி லாளர் வர்க்கத்தையே கூட மிகவும் வேக மாக முறைசாராத் தொழிலாளர் வரிசைக் குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, நிரந்தரப் பணியில் இருக்கும் தொழிலாளர் களையும் ஊழியர்களையும் கேசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் வேலையையும், தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் வேலையோடு சேர்த்தே, ஆளும் வர்க்கங்கள் செய்து வருகின்றன. அதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்று மையையும் உடைத்திடவும், சீர்குலைத் திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் இயக்கத்தோடு, நாளும் வேகமாக அதி கரித்து வரும் முறைசாராத் தொழிலாளர்க ளையும் இணைப்பதன் மூலம் இந்த சவாலை நாம் எதிர்கொண்டு முறியடித் தாக வேண்டும். ஐந்தாவதாக, பின் நவீனத்துவம் போன்ற மார்க்சிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்புத் தத்துவங்கள் மூலமாக அதி கரித்து வரும் அடையாள அரசியல், மீண் டும் சுரண்டப்படும் பிரிவினர்களின் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து வரு கின்றன. இந்தியா போன்றதொரு நாட்டில் வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வதென்பது பொரு ளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட் டங்களையும், சமூக ஒடுக்குமுறைக்சகு எதிரான போராட்டங்களையும் ஒரே சம யத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் மட் டுமே இயலும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்தி ருக்கிறது. சாதி, இனம், பாலினம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்ச னைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் தங்கள் கைகளில் எடுத்துப் போராடாமல் இருந்திருந்தால், இப்பிரிவினர் இத்தகைய அடையாள அரசியலுக்குப் பலியாகி இருப்பார்கள், நாம் வலுப்படுத்த விரும்பும் வர்க்க ஒற்றுமை மேலும் சீர் குலைக்கப் பட்டிருந்திருக்கும். எனவே, பொருளா தாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத் தையும், சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர முன்னெடுத் துச் செல்ல வேண் டியது அவசியமாகும். ஆறாவதாக, வகுப்புவாத சவால். பெரும்பான்மை இந்து வகுப்புவாதம் மற்றும் அனைத்துவிதமான சிறுபான்மை மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டுமே எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவைகளும் சுரண்டப்படும் மக்கள் பிரிவினரை, மதத்தின் பேரால் ஒன்றுசேர விடாமல் பிரிக்க முயல்கின் றன. அதன் மூலம், இத்தகைய சக்திகள், மக்களின் மத நம்பிக்கைகளை தங்களின் குறுகிய மதவெறிக்கும் (sectarian), சீர் குலைவு அரசியல் குறிக்கோள்களுக்கும் (disruptive) பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் அடித்தளங் களை வலுவிழக்கச் செய்வதோடு, வகுப்புவாதம் சுரண்டப்படும் பிரிவினர் களின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறது. எனவே இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதற்கு வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏழாவதாக, உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு சமூக-கலாச்சார-மத வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில், பல்வேறு இனத்தினர் வாழும் நம் நாட்டில், மக்களைத் தங்களுடைய குறுகிய சாதி வெறி, மதவெறி, இனவெறி, தேசியவெறி அடிப்படையில் பிரித்திட பிற்போக்கு சக் திகள் முயற்சித்து வருகின்றன. இத்த கைய மக்கள் பிரிவினரிடையே இவர் களுக்கு இழைக்கப்படும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல் லும் அதே சமயத்தில், ஒடுக்கப்படும் பிரி வினரின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட முயலும் இத்தகைய மதவெறி, இனவெறி சக்திகளின் சவால்களையும் எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எட்டாவதாக, நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதி களில் உள்ள மக்களின் போராட்டங் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரரீதியாக பிற்பட்ட நிலைமை இருப்பதைப் பயன் படுத்திக் கொண்டு, தற்போது இருந்து வரும் மாநிலங்களையே மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்றும், தற்போ துள்ள மொழிவாரி மாநிலங்கள் அடிப்ப டையில் அமைந்துள்ள மாநிலங்களையே பிரித்திட வேண்டும் என்றும் இத்தகைய சீர்குலைவு சக்திகள் கோரி வருகின்றன. இத்தகைய சக்திகளும் சுரண்டப்படும் பிரிவினரின் வர்க்க ஒற்றுமையைச் சீர் குலைத்திடும். எனவே இத்தகைய சக்தி களையும் எதிர்த்து முறியடித்தாக வேண்டும். இத்தகைய சவால்களை எதிர் கொண்டு முறியடிப்பதன் மூலம்தான் இடது ஜனநாயக மாற்றை வலுப்படுத்து வதற்கான குறிக்கோளை எய்திட முடியும். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியாக வலுப்படுத்தாது, அதன் அடிப் படையில் நாட்டில் உள்ள சுரண்டப்படும் பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டாது, மேலே குறிப்பிட்டுள்ள எட்டு சவால் களையும் எதிர்த்து முறியடித்திட முடி யாது. இந்தப் பணிகள் அனைத்தும் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் விவரிக் கப்பட்டிருக்கின்றன. தற்போது நம்முன் உள்ள எதிரி வர்க் கத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் ஸ்தாபனரீதியான சவால்கள் அனைத்தை யும் - எதிர்த்து முறியடித்திடவும், தற்போது ஆளும் வர்க்கங்களால் கடைப்பிடிக்கப் பட்டு வரும் நவீன தாராளமய முதலாளித் துவப் பாதைக்கு மாற்றான அரசியல் பாதையை வலுப்படுத்திடவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, இவ்வாறு, முன் னிலும் இருமடங்கு உறுதிபூண்டிருக் கிறது. நாட்டிலுள்ள ஒடுக்கப்படும் வர்க் கங்கள் அனைத்தையும் அணிதிரட்டிட வும், அதன் மூலம் நாட்டில் மக்கள் ஜன நாயக அரசை நிறுவக்கூடிய விதத்தில் புரட்சிகரமான போராட்டத்தை நடத்தவும் மற்றும் அதன் அடித்தளத்தில், மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்க மான சோசலிசத்தை நிர்மாணித்திடவும், இவ்வாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் புரட்சிகரக் கடமைகளை நிறை வேற்றிட உறுதிபூண்டுள்ளது. (தமிழில்: ச.வீரமணி)

சவால்களைச் சந்தித்திட சபதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 2012 ஏப்ரல் 4 முதல் 9ம் தேதி வரையில், 727 பிரதிநிதிகள் மற்றும் 74 பார்வை யாளர்களின் பங்கேற்புடன் ஆறு நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடை பெற்றது. வரைவு அரசியல் தீர்மானம், சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம், மற்றும் அரசியல் - ஸ்தாபன அறிக்கை ஆகிய முக்கிய மூன்று ஆவ ணங்கள் மீது விவாதங்கள் நடத்தி அவற்றை நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் உள்கட்சி ஜனநாயக நடைமுறைக்கிணங்க, முதல் இரு ஆவணங்களின் நகல்களும் மாநாட்டிற்கு இரு மாதங்களுக்கு முன்பே கட்சி அணி களுக்கு வெளியிடப்பட்டுவிட்டன. கட்சி யின் இணையதளத்திலும் அவை வெளி யிடப்பட்டன. அதனை அடுத்து அவற் றின் மீது 3 ஆயிரத்து 713 திருத்தங்கள் மாநாட்டிற்கு முன்பே வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் அரசியல் தீர்மானத்தின் மீது வரப்பெற்ற 163 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. அதே போன்று, தத்துவார்த்தத் தீர்மானத்தின் மீதும் 1,014 திருத்தங்கள் வரப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் 38 திருத் தங்கள் ஏற்கப்பட்டன. கூடுதலாக, மாநாட் டின் பிரதிநிதிகள் அரசியல் தீர்மானத்தின் மீது 349 திருத்தங்களையும், தத்துவார்த் தத் தீர்மானத்தின் மீது 235 திருத்தங் களையும் முன்மொழிந்தனர். மாநாடு அவை ஒவ்வொன்றையும் உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்வாறு மிகவும் ஆழ மான மற்றும் வலுவான விவாதங்களின் வெளிப்பாடாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானங்கள், கட்சிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பின்பற்ற வேண் டிய அரசியல்-நடைமுறை உத்திகளை வகுத்துத் தந்திருக்கின்றன. 1930களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தத்தைவிட மிக மோச மான அளவில் இன்றைய தினம் உலகப் பொருளாதார முதலாளித்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில்தான் கட்சி யின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இது, முதலாளித்துவம் என்பது எந்தக்காலத்திலும் மனிதனைச் சுரண்டாத மற்றும் நெருக்கடிகளுக்கு ஆளாகாத ஓர் அமைப்பாக இருக்க முடி யாது என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிச-லெனினிசப் புரி தலை மிகவும் உரத்து மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. முந்தைய சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் தகர்ந்தபின் கடந்த இருபதாண்டுகளில் முதன் முதலாக, முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ள உலக மக் களின் பெரும்பான்மையினர், முதலாளித் துவ அமைப்பை கேள்விக்கு உட்படுத்த வும், இதற்கு மாற்று தேவை என்பதை உரத்துக்கூறவும் தொடங்கியிருக் கின்றனர். அதேபோன்று இந்தியாவிலும், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப் படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விளைந் துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சிகளும் போராட் டங்களும் இவற்றைப் பிரதிபலிக்கின்றன. மனித சமுதாயம் உருவாக்கியுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும், மனித குலம் முழுமைக்கும் சென்றடைய வேண் டும், அதனை மனிதகுலத்தின் ஒருசிலர் மட்டும் பறித்திடக் கூடாது என்கிற, மனிதகுல சுரண்டலமைப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கிற, சோசலிச அமைப்பு மட்டுமே அதற்கு மாற்றாக இருக்க முடியும் என்கிற மார்க்சிச-லெனினிசப் புரிந்து ணர்வை, மக்கள் தங்கள் சொந்த அனுப வங்களின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்கு உணர்ந்துகொண்டு விட்டார்கள். முதலாளித்துவத்திற்கு எதிராக இத் தகைய மாற்றுக்கான தேவை உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து கொண் டிருக்கிறது. ஆயினும், நம் முன்னுள்ள முக்கிய பிரச் சனை என்ன? மார்க்ஸ் கூறிய புகழ் பெற்ற வாசகமான, இன்றைய உலக நிலைமை குறித்துப் பல்வேறு விதங் களில் வியாக்கியானம் செய்தால் மட்டும் போதாது, அதனை எப்படி மாற்றப் போகிறோம் என்பதேயாகும். கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டில் பிர தானமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனை இதுவேயாகும்: ‘‘இந்தியாவில் உள்ள துல் லியமான நிலைமைகளில், முதலாளித்து வத்திற்கு எதிரானதோர் அரசியல் மாற்றை எப்படி வலுப்படுத்தப் போகி றோம்?’’ அத்தகையதோர் மாற்றை வலுப்படுத் துவது என்பது, இந்தியாவில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப் படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும். இதனை எப்படி எய்த வேண்டும் என்பதே அரசியல் தீர்மானத்தின் சாராம்சமாகும். அடுத்த மூன்றாண்டுகளுக்கு - அதாவது அடுத்த அகில இந்திய மாநாடு வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் - நடைமுறை உத்திகளின் பிர தானத் தலையீடு (main thrust) என்பது தற் போது ஆளும் வர்க்கங்களால் கடைப் பிடிக்கப்பட்டு வரும் சமூகப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாக வளர்ந்துவரும் துன்பதுயரங்களுக்கு எதிராக வலுவான முறையில் மக்கள் போராட்டங்கள் மூலமாக, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவது என்பதேயாகும். நாட்டின் புறச்சூழல் (objective situation) முதலாளித்துவத்திற்கு ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் தேவையைக் கூர்மை யாகச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், அகக் காரணியானது subjective factor), அதாவது தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரின் போராட் டங்களின் ஒற்றுமை என்பது, அத்தகைய தோர் அரசியல் மாற்றை உருவாக்கக் கூடிய அளவிற்கு வலுப்படுத்த வேண் டிய நிலையில் இருந்து வருகிறது. இவ்வாறு அகக்காரணியை வலுப் படுத்தும் குறிக்கோளை எய்திடுவதற் காகவும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை வலுப்படுத்தி ஓர் அரசியல் மாற்றை நிறுவிடுவதற்காகவும், கட்சியின் அகில இந்திய மாநாடு, நாம் எதிர் கொண்டு வெல்ல வேண்டிய சவால்க ளாக எட்டு அம்சங்களை நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது. முதலாவதாக, மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு எதிராக ஏகாதிபத் தியமும், பிற்போக்கு சக்திகளும் கட்ட விழ்த்துவிட்டுள்ள தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப் பது நம்முன் உள்ள முக்கியமான மற்றும் அவசரமான பணிகளில் ஒன்றாகும். கடந்த இருபதாண்டுகளாக, அவர்கள் முதலாளித்துவமே `நிரந்தரமானது` (eternal) என்றும், மார்க்சிசமும், சோசலிசமும் இறந்துவிட்டன என்றும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மிகவும் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடி நிலவும் இன்று, இவர்கள் தங்கள் தத்துவார்த்த ரீதியான தாக்குதலை, பின் நவீனத்துவம் என்னும் புதிய சித்தாந்தத்தின் மூலமாக ஏவத் தொடங்கியிருக்கிறார்கள். இவர் களது அனைத்துத் தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களின் அடிப்படை என்ன வெனில், வர்க்கச் சுரண்டல் நிலவுவதை யும், வர்க்கப் போராட்டத்தையும் மறுப்ப தும், உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப பெருவாரியான மக்கள் நலன் அடங்கி யிருக்கிறது என்று சித்தரிப்பதுமாகும். இத்தகைய தத்துவார்த்தத் தாக்குதல்கள், நடைமுறையில் உக்கிரமாக நடைபெற்று வரும் மனிதகுலச் சுரண்டல் குறித்து மக் களுக்குத் தெரியாமல் மறைத்து, அவர் களை மழுங்கடையச் செய்வதற்கு இட் டுச் செல்கின்றன. எனவே இதற்கு எதி ரான போராட்டத்தை மேற்கொள்ள வேண் டியதன் அவசியத்தை தீர்மானம் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சுரண்டப்பட்டு வரும் மக் களின் போராட்டங்களை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இடது மற்றும் ஜன நாயக சக்திகளை வலுப்படுத்துவதென் பதும் சாத்தியமாகும். நாடாளுமன்றத் திற்கு அப்பாலான இத்தகைய போராட் டங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், இத்தகைய போராட்டங்களின் வலு மட்டுமே, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மற்றும் பல்வேறு ஜனநாயக உள்ளாட்சி அமைப் புகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் பிரதி பலித்திடும். இவற்றை வெறும் அரசியல் கூட்டணிகள் ((political manoeuvring) மூலம் மட்டுமோ அல்லது நாடாளுமன்ற உத்திகள் (parliamentary tactics) மூலம் மட்டுமோ எய்திட முடியாது. மாறாக நாம் நம் குறிக்கோளை எய்திட நாடாளு மன்றத்திற்குள்ளே நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை, நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டங் களுடன் மிகவும் சரியான முறையில் பொருத்திட வேண்டும். மூன்றாவதாக, நாட்டில் பெருவாரி யான மக்கள் பங்கேற்கும் போராட் டங்களை வலுப்படுத்துவதென்பது எப் படிச் சாத்தியமாகும்? போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கும், ஏழை விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக் கும் இடையேயான ஒற்றுமையைக் கட் டுவதன் மூலமே இதனை எய்திட முடியும். வெகுஜனப் போராட்டங்கள் வலுப்படுத் தப்படுவதற்கு இத்தகைய தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையே அடித்தளமாக அமைந்திடும். நான்காவதாக, தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்துவதை எப்படி எய்துவது? தொழிலாளி வர்க்கம் தன் னுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவ தன் மூலம் மட்டுமே இதனையும் எய்திட முடியும். நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தற்போது அணிதிரட்டப்பட்டுள்ள தொழி லாளர் வர்க்கத்தையே கூட மிகவும் வேக மாக முறைசாராத் தொழிலாளர் வரிசைக் குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, நிரந்தரப் பணியில் இருக்கும் தொழிலாளர் களையும் ஊழியர்களையும் கேசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றும் வேலையையும், தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டும் வேலையோடு சேர்த்தே, ஆளும் வர்க்கங்கள் செய்து வருகின்றன. அதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்று மையையும் உடைத்திடவும், சீர்குலைத் திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றன. அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் இயக்கத்தோடு, நாளும் வேகமாக அதி கரித்து வரும் முறைசாராத் தொழிலாளர்க ளையும் இணைப்பதன் மூலம் இந்த சவாலை நாம் எதிர்கொண்டு முறியடித் தாக வேண்டும். ஐந்தாவதாக, பின் நவீனத்துவம் போன்ற மார்க்சிய எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்புத் தத்துவங்கள் மூலமாக அதி கரித்து வரும் அடையாள அரசியல், மீண் டும் சுரண்டப்படும் பிரிவினர்களின் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து வரு கின்றன. இந்தியா போன்றதொரு நாட்டில் வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வதென்பது பொரு ளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட் டங்களையும், சமூக ஒடுக்குமுறைக்சகு எதிரான போராட்டங்களையும் ஒரே சம யத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் மட் டுமே இயலும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்தி ருக்கிறது. சாதி, இனம், பாலினம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்ச னைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் தங்கள் கைகளில் எடுத்துப் போராடாமல் இருந்திருந்தால், இப்பிரிவினர் இத்தகைய அடையாள அரசியலுக்குப் பலியாகி இருப்பார்கள், நாம் வலுப்படுத்த விரும்பும் வர்க்க ஒற்றுமை மேலும் சீர் குலைக்கப் பட்டிருந்திருக்கும். எனவே, பொருளா தாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத் தையும், சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர முன்னெடுத் துச் செல்ல வேண் டியது அவசியமாகும். ஆறாவதாக, வகுப்புவாத சவால். பெரும்பான்மை இந்து வகுப்புவாதம் மற்றும் அனைத்துவிதமான சிறுபான்மை மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டுமே எதிர்கொண்டு முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவைகளும் சுரண்டப்படும் மக்கள் பிரிவினரை, மதத்தின் பேரால் ஒன்றுசேர விடாமல் பிரிக்க முயல்கின் றன. அதன் மூலம், இத்தகைய சக்திகள், மக்களின் மத நம்பிக்கைகளை தங்களின் குறுகிய மதவெறிக்கும் (sectarian), சீர் குலைவு அரசியல் குறிக்கோள்களுக்கும் (disruptive) பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் அடித்தளங் களை வலுவிழக்கச் செய்வதோடு, வகுப்புவாதம் சுரண்டப்படும் பிரிவினர் களின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறது. எனவே இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதற்கு வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும், ஏழாவதாக, உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு சமூக-கலாச்சார-மத வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில், பல்வேறு இனத்தினர் வாழும் நம் நாட்டில், மக்களைத் தங்களுடைய குறுகிய சாதி வெறி, மதவெறி, இனவெறி, தேசியவெறி அடிப்படையில் பிரித்திட பிற்போக்கு சக் திகள் முயற்சித்து வருகின்றன. இத்த கைய மக்கள் பிரிவினரிடையே இவர் களுக்கு இழைக்கப்படும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல் லும் அதே சமயத்தில், ஒடுக்கப்படும் பிரி வினரின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட முயலும் இத்தகைய மதவெறி, இனவெறி சக்திகளின் சவால்களையும் எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எட்டாவதாக, நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதி களில் உள்ள மக்களின் போராட்டங் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரரீதியாக பிற்பட்ட நிலைமை இருப்பதைப் பயன் படுத்திக் கொண்டு, தற்போது இருந்து வரும் மாநிலங்களையே மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்றும், தற்போ துள்ள மொழிவாரி மாநிலங்கள் அடிப்ப டையில் அமைந்துள்ள மாநிலங்களையே பிரித்திட வேண்டும் என்றும் இத்தகைய சீர்குலைவு சக்திகள் கோரி வருகின்றன. இத்தகைய சக்திகளும் சுரண்டப்படும் பிரிவினரின் வர்க்க ஒற்றுமையைச் சீர் குலைத்திடும். எனவே இத்தகைய சக்தி களையும் எதிர்த்து முறியடித்தாக வேண்டும். இத்தகைய சவால்களை எதிர் கொண்டு முறியடிப்பதன் மூலம்தான் இடது ஜனநாயக மாற்றை வலுப்படுத்து வதற்கான குறிக்கோளை எய்திட முடியும். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியாக வலுப்படுத்தாது, அதன் அடிப் படையில் நாட்டில் உள்ள சுரண்டப்படும் பிரிவினரின் ஒற்றுமையைக் கட்டாது, மேலே குறிப்பிட்டுள்ள எட்டு சவால் களையும் எதிர்த்து முறியடித்திட முடி யாது. இந்தப் பணிகள் அனைத்தும் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் விவரிக் கப்பட்டிருக்கின்றன. தற்போது நம்முன் உள்ள எதிரி வர்க் கத்தின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் ஸ்தாபனரீதியான சவால்கள் அனைத்தை யும் - எதிர்த்து முறியடித்திடவும், தற்போது ஆளும் வர்க்கங்களால் கடைப்பிடிக்கப் பட்டு வரும் நவீன தாராளமய முதலாளித் துவப் பாதைக்கு மாற்றான அரசியல் பாதையை வலுப்படுத்திடவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, இவ்வாறு, முன் னிலும் இருமடங்கு உறுதிபூண்டிருக் கிறது. நாட்டிலுள்ள ஒடுக்கப்படும் வர்க் கங்கள் அனைத்தையும் அணிதிரட்டிட வும், அதன் மூலம் நாட்டில் மக்கள் ஜன நாயக அரசை நிறுவக்கூடிய விதத்தில் புரட்சிகரமான போராட்டத்தை நடத்தவும் மற்றும் அதன் அடித்தளத்தில், மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்க மான சோசலிசத்தை நிர்மாணித்திடவும், இவ்வாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் புரட்சிகரக் கடமைகளை நிறை வேற்றிட உறுதிபூண்டுள்ளது. (தமிழில்: ச.வீரமணி)

Sunday, April 8, 2012

நவீன தாராளமயம்: வறுமையின் தத்துவம்




‘‘ஏகாதிபத்திய உலகமயத்தை உயர்த்திப் பிடிக்கக்கூடிய நவீன தாராளமயப் பொருளா தாரச் சீர்திருத்தக் கொள்கைகள், சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலமாக கொள்ளை லாபத்தினைக் கோரிடும், தேசிய அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி - பெரும்பான் மையான உழைக்கும் மக்களுக்கு - சொல் லொண்ணாத் துன்பத்தினைக் கொண்டு வரும்,’’ என்று நாம் அடிக்கடி சொல்லி வந்த வற்றைத் தற்போது மக்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் தங்கள் உண் மையான அனுபவத்திலிருந்து உணரத் தலைப்பட்டு விட்டார்கள். வறுமையின் கொடூரமான தன்மைகள் மேலும் மேலும் அதிகரித் திருப்பது இவற்றின் நேரடி விளைவு களாகும்.

நாட்டில் வறுமையின் நிலை குறித்துத் தற்போது நடைபெற்று வரும் விவாதம், இந்தி யாவில் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத் தங்களே இத்தகையதொரு ‘வறுமையின் தத்துவத்திற்கு’ வழிகாட்டியாக அமைந்திருக் கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தி இருக்கிறது.

நம் நாட்டின் வளங்கள் சூறையாடப்படு வது பல வழிகளில் நடைபெற்றாலும், இரு முக்கிய வழிகளில் அவை மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் நாட்டு மக்களின் மத்தியில் பொருளாதார சமத்துவ மின்மையை மேலும் மேலும் விரிவாக்குவது தொடர்கிறது. ‘‘அவதிப்படும் இந்தியர்’’களின் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான சுரண் டல் மூலமாக ‘‘ஒளிரும் இந்தியர்கள்’’ பிர காசிப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இரண்டாவதாக, இவ்வாறு அடிக்கப்படும் கொள்ளை தொடர்ந்து வெளியாகிக் கொண் டிருக்கும் மெகா லஞ்ச ஊழல்களின் மூலம் நாட்டின் வளங்கள் எவ்வாறெல்லாம் தனியா ரால் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன என்பதும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டி ருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இவ்வாறு கொள்ளையடிப்பதை நியாயப் படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஜன நாயக முலாம் பூசியாக வேண்டும். இதற்காகத் தான் நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாக கதை கட்டிவிட முன்வந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற புள்ளிவிவர மோசடிகளில் ஆட்சியாளர்கள் இறங்கியிருக் கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாகத்தான், 2012 மார்ச் 19 அன்று மீண்டும் ஒருமுறை இத்தகைய முயற்சி நடந்திருக்கிறது. திட்டக் கமிஷன் அன்றையதினம் வெளியிட்டுள்ள வறுமை மதிப்பீடுகள் தொடர்பான அறிக்கையில், 2004-05க்கும் 2009-10க்கும் இடையேயான காலத்தில் நாட்டில் வறுமை 7.3 விழுக்காடு அளவிற்கு ஒட்டுமொத்தமாக குறைந்துவிட்ட தாம். 2009-10இல் நாள்தோறும் ஒவ்வொரு நபருக்கும் ஆகும் நுகர்வுச் செலவு நகர்ப் புறங் களில் 28 ரூபாயாகவும், கிராமப் பகுதி களில் 22 ரூபாயாகவும் இருப்பதை அடிப்படையாக வைத்து திட்டக் கமிஷன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

இத்தகைய இராட்சசத்தனமான மோசடி வேலைகளில் சிறிது காலமாகவே ஆட்சியா ளர்கள் இறங்கியிருக்கிறார்கள். 2011 மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றில் ஆஜரான திட்டக் கமிஷன், நகர்ப்புறங்களில் 20 ரூபாயும், கிராமப்புறங் களில் 15 ரூபாயும் நாள்தோறும் செலவிடும் நபர் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்ப வராகக் கருதிடப் போதுமானது என்று குறிப் பிட்டிருந்தது. திட்டக்கமிஷனின் கணக்கின் படி, நகர்ப்புறங்களில் மாத வருமானம் 578 ரூபாய் பெறுபவர் ஏழையாகக் கருதப்பட மாட் டார். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த 578 ரூபாயில் அவர் வாடகை மற்றும் பயணச் செலவுக்காக செலவிடும் 31 ரூபாய், கல்விக் காகச் செலவிடும் 18 ரூபாய், மருந்துகளுக் காகச் செலவிடும் 25 ரூபாய் மற்றும் காய் கறிகளுக்காகச் செலவிடும் 36.5 ரூபாயும் அடக்கம். பகுத்தறிவு உள்ள எவனாவது இப் படிக் கூறுவானா? ஆனால் நம் திட்டக் கமி ஷன் இவ்வாறுதான் கூறுகிறது.

இதுதொடர்பாக மக்கள் மத்தியிலிருந்து கடும் விமர்சனம் வந்தபின்னர், தன் பைத் தியக்காரத்தனமான கூற்றை அரசாங்கம் சற்றே திருத்திக் கொண்டது. திட்டக் கமி ஷனின் துணைத் தலைவரும், ஊரக வளர்ச் சித்துறை அமைச்சரும் கலந்து பேசி 2011 செப்டம்பரின் பிற்பகுதியில் ஒரு சரியான மதிப்பீட்டிற்கு வந்திருக்கிறார்களாம். அதன் படி, கிராமப்புற இந்தியாவில் நாளொன்றுக்கு 26 ரூபாயும், நகர்ப்புற இந்தியாவில் 32 ரூபாயும் சம்பாதிப்பவர் நம் நாட்டில் ஏழை கிடையா தாம். வறுமை மதிப்பீடுகள் இனி வருங்காலங் களில் புதியக் கோட்பாட்டின் (நேற அநவாடினடிடடிபல) அடிப்படையில் அமைந்திடும் என்று அர சாங்கம் அறிவித்திருக்கிறது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமைத் துயர்தணிப்பு அமைச்ச கங்களுடன் இணைந்து, வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ள மக்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாம்.

வெளிவந்திருக்கிற தகவல்களின்படி, மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ள இந்தப் புதியக் கோட்பாடு என்ன கூறுகிறது தெரியுமா? சம்பாதிக்கும் உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்ள ஒரு குடும் பத்தின் ஆண்டு வருமானம் 27 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் என்றால், அவர்கள் தானாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழான பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு விடுவார் கள். அதாவது, ஒவ்வொரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 447 ரூபாய் எனில், அதுவே அவர்களை ஏழைகளாகக் கருதாமல் இருப்ப தற்குப் போதுமானது என்ற அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. திட்டக் கமிஷனின் வரையறையை இது எதி ரொலிப்பது மட்டுமல்ல, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதைவிட மோசமான தாகும்.

மிகவும் நகைக்கத்தக்க இத்தகைய குறைந்தபட்ச சம்பாதிக்கும் அளவினை இப் போது திட்டக் கமிஷன் மேலும் குறைத்திருக் கிறது. இத்தகைய கபடத்தனமான முயற்சி கேலித்தனமானது மட்டுமல்ல, கயமைத்தன மானதுமாகும். ஒருவர் உயிர்வாழ வேண்டு மானால் நாள்தோறும் அவர் குறைந்தபட்சம் 2400 கலோரிகள் உட்கொள்ள வேண்டும் என்று இதே திட்டக் கமிஷன்தான் வரை யறை செய்திருக்கிறது. 2010இல், இதற்குக் குறைந்தது 44 ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது. இன்றைய தினம், நிச் சயம் இதைவிடக் கூடுதலாகத்தான் இருக் கும். சரியாகச் சொல்வதென்றால் அரசாங் கத்தால் கணக்கிட்டிருப்பதைப்போல இரு மடங்கு இருந்திடும்.

திட்டக் கமிஷன், அதற்கேயுரிய பகுத்தாய் வின் (?) அடிப்படையில், 2004-05இல் 37.2 விழுக்காடாக இருந்த வறுமை விகிதாச்சாரம், 2009-10இல் 29.8 விழுக்காடாக வீழ்ச்சி யடைந்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் (சூயவiடியேட ஹனஎளைடிசல ஊடிரnஉடை) 46 விழுக்காடு விகிதாச்சாரம் என்று பரிந்துரைத் திருக்கிறது.

மறைந்த அர்ஜூன் சென்குப்தா, நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 77 விழுக் காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்று மதிப்பிட்டிருப்பதோடு, மேற்கண்ட மதிப் பீடுகளை ஒப்பிடுகையில், இவை இரண் டுமே மிகவும் மோசமானவைகள் என்பது புலப்படும். அர்ஜூன் சென் குப்தா மதிப்பீ டானது சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக் கப்பட்டதாகும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கக்கூடிய இன்றைய சூழலில் நிலைமை, நிச்சயமாக, மேலும் மோசமாகத் தான் இருக்கும்.

நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத்தரமும் மிக மோசமாகிக் கொண் டிருப்பதுதான் மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். ‘‘பட்டினி கிடப்போரின் குடியரசு’’ என்னும் உத்சா பட்நாயக்கின் கட்டுரை, நம் மக்களின் துரதிர்ஷ்டவசமான எதார்த்த நிலையை விவரிக்கிறது. 2012 மார்ச் 25, ‘தி இந்து’, நாளேட்டில் பி.சாய்நாத் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில், 1972க்கும் 1991க்கும் இடைப் பட்ட ஆண்டுகளில், சராசரியாக ஒருவர் உட் கொள்ளும் தானியங்கள் மற்றும் பயிர்களின் அளவு நாளொன்றுக்கு 434 கிராமிலிருந்து 480 கிராம்களாக உயர்ந்திருக்கிறது என்றும், ஆனால் 1992க்கும் 2010க்கும் இடையே இது 440 கிராமாக வீழ்ந்துவிட்டது என்றும் குறிப் பிட்டிருந்தார். இதற்குக் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம் என்று சிலரால் கூறப் படுகிறது. ஆனால், 1981க்கும் 1991க்கும் இடையே மக்கள் தொகை வளர்ச்சி 2.16 விழுக்காடு வீதத்தில் இருந்த அதே சமயத் தில், உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 3.13 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்ப தோடு ஒப்பிடும்போது இந்த வாதம் தகர்க்கப் பட்டு விடுகிறது. ஆயினும், நாட்டில் பொருளா தாரச் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப்படத் தொடங்கிய பின்னர், உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. 1991க்கும் 2001க்கும் இடையே, மக்கள் தொகை வளர்ச்சி 1.95 ஆக இருந்த அதே சமயத்தில், உணவு தானிய உற் பத்தி 1.1 விழுக்காடாகும். 2001க்கும் 2011க்கும் இடையே மக்கள்தொகை வளர்ச்சி 1.65ஆக இருந்த அதே சமயத்தில், உணவு தானிய உற்பத்தி 1.03 விழுக்காடு மட்டுமே.

எனவே, நாட்டில் வறுமை அதிகரித் திருக்கிறது என்பது மட்டுமல்ல, அது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது. இத்தகைய மோசமான நிலைமை யிலிருந்து மீள ஒரே வழி, சாமானிய மக் களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சிறந்ததோர் வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுக்கக்கூடிய விதத்தில் தேவையான மானியங்களையும் அவர்களுக்கு அளிப்ப தாகும். ஆனால், ஆட்சியாளர்கள், வீங்கிக் கொண்டிருக்கிற நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்யப் போகிறோம் என்று சொல்லி, சாமா னியர்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிக் குறைத்திட முடிவு செய்திருக்கி றார்கள். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் துள்ள பட்ஜெட் ஆவணங்களின்படி நிதிப் பற்றாக்குறை (களைஉயட னநகiஉவை), 5.9 விழுக்காடு அல்லது சுமார் 5.22 லட்சம் கோடி ரூபாய்களாகும். இதே ஆண்டில், ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர் களுக்கும் அளித்திட்ட வரிச் சலுகைகள் சுமார் 5.28 லட்சம் கோடி ரூபாய்களாகும். சென்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நியாய மான இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருந் தாலேயே ஆட்சியாளர்களால் கூறப்படும் இந்த நிதிப் பற்றாக்குறை வந்திருக்காது. மாறாக, உபரியாக பணம் கிடைத்திருக்கும்.

நவீன தாராளமயத்தின் தத்துவம் - அதா வது வறுமையின் தத்துவம் - என்பது பணக் காரர்களுக்கு அளித்திடும் சலுகைகளைக் கைவிடுவதன் மூலம் பற்றாக்குறையின் சுமைகளைக் குறைத்திட வேண்டும் என்று கூறவில்லை. பணக்காரர்களுக்கு அளிக்கப் படுவது அவர்களது அகராதியின்படி அவர் களின் வளர்ச்சிக்கான ‘‘ஊக்கத் தொகை’’ களாகும். இத்தகைய பற்றாக்குறை ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியங் களைக் கைவிடுவதன் மூலமே சரி செய் யப்பட வேண்டும் என்பதே இவர்கள் குறிக் கோள். ஏழைகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் தான் இவர்களது அகராதியின்படி பொருளா தாரத்தின் மீதான ‘‘சுமைகளாகும்’’.

எனவேதான், இந்த பட்ஜெட்டில், எரி பொருள் மானியம் மேலும் 25 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது, உர மானியம் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக் கிறது. இதேபோன்று மேலும் பல மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை யான மானியங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களைச் சென்றடைய வேண் டும் என்ற இலக்கோடு நிர்ணயிக்கப்பட்ட தால், இவ்வாறு மானியங்களைக் குறைப்பதை யும் அமல்படுத்த வேண்டுமென்றால் வறு மைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண் ணிக்கையையும் அவர்கள் குறைத்தாக வேண்டும். அதற்காகத்தான் திட்டக் கமிஷன் மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் இத் தகைய மோசடியான சதி வேலைகளில் இறங்கி இருக்கிறது.

புருதோன் எழுதிய ‘வறுமையின் தத்து வம்’ என்ற நூலைக் கடுமையாக விமர்சனம் செய்து, காரல் மார்க்ஸ் எழுதிய ‘‘தத்துவத் தின் வறுமை’’ என்னும் நூலில்தான், அவர் ‘‘இன்றைய உலக நிலைமை குறித்துப் பல் வேறு விதங்களில் வியாக்கியானம் செய்தால் மட்டும் போதாது, அதனை எப்படி மாற்றப் போகிறோம் என்பதேயாகும்’’ என்று எழுதி, ‘‘வர்க்கப் பகைமைகள் நிறைந்த ஒவ்வொரு சமூகத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான நிபந்தனையாகும். எனவே, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு விடுதலை காண்பதென்பது அத்தியாவசியமான முறையில் புதியதோர் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே சாத் தியம்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுரண்டப்படும் வர்க்கங்கள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வது என்பதே அதன் அரசியல் வலுவாகும். மனிதனை மனிதன் சுரண்டாத தொரு சமூகத்தை உருவாக்கிட இது மிகவும் அவசியமான நிபந்தனையாகும்.

துல்லியமான இந்திய நிலைமைகளின் கீழ் இவ்வாறு நாம் நம் ஸ்தாபனத்தை வலுப் படுத்தும் பிரச்சனையையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந் திய மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந் திருக்கிறோம். கட்சி, இந்தியாவில் சோசலிச சமுதாயத்தை அமைப்பதற்கான ஒரு முன் னோடியாக, மக்கள் ஜனநாயகப் புரட்சி என்னும் குறிக்கோளை வெற்றிகரமாக எய் திட, சரியான உத்திகளை வகுப்பதே மாநாட்டு நிகழ்ச்சி நிரலின் கருவாக அமைந்திருக் கிறது. இந்தக் குறிக்கோளை எய்திட நம் ஸ்தாபனத்தை வலுப்படுத்தி, நாம் இவ்வாறு எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடித்து முன்னேறிடுவோம்.

நாட்டின் நலன்களையும் நாட்டு மக் களின் நலன்களையும் பாதுகாத்திடுவதற் கான வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்தாபன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சரியான உத்திகளை வகுப்பதற்கான பொறுப்பை, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, நமக்குப் பணித்திருக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

Sunday, April 1, 2012

அற்பத்தனமான நடவடிக்கைகள் - ‘தி டெலிகிராப்’ தலையங்கம்:



அதிகாரம் என்பது வெறித்தனமான போதையை அளிக்கக்கூடிய ஒன்று. வெற்றிக் களிப்பில் மிதக்கும்போது அரசியல் தலைவர்கள் அடிக்கடி அவசியமற்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். மேற்குவங்க முதல மைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அபரிமிதமான செல்வாக்கை செலுத்துகிறார். இது அவரை மிகவும் பணிவுள்ளவராகவும், ஜனநாயக நடைமுறைகளுக்கு மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்பவராகவும் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகார போதையும், மக்கள் ஆதரவும் ஜனநாயகத்தின் இதயமாக விளங்கும். வாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளை அவமதிக்கும் போக்கை அவரிடம் ஏற்படுத்தி இருக் கிறது. அரசின் நூலகங்களும் அரசு ஆதரவுடன் இயங்கும் நூலகங்களும் அரசால் அங்கீகரிக்கப்படும் செய்தித் தாள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று தாக்கீது அனுப்பியிருப் பதற்கு என்ன காரணம் என்பதை எவராலும் விளக்க முடியவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 13 செய்தித்தாள்கள் (இவற்றில் பெரும்பாலானவை மிகவும் சிறிய மற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியாத செய்தித்தாள்களாகும்) மட்டுமே காணப்படுகின்றன. ஆனந்த பசார் பத்திரிகா, டெலிகிராப் உட்பட மேற்கு வங்கத்தில் அதிகமாக விற்ப னையாகும் நாளிதழ்கள் அந்தப் பட்டியலில் இல்லை. சிறிய செய்தித்தாள்களைப் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும் அரசாங்கம் விழைகிறது என்கிற அரசு அதிகாரிகளின் வாதம் மேற் படி பட்டியலில் அதிக விற்பனை யாகும் செய்தித்தாள்களும் இடம் பெற்றிருப்பதிலிருந்து அடிபட்டுப் போகிறது. அந்தப் பட்டியலைப் பரிசீ லிக்கும்போது, முதலமைச்சரின் கொள்கைகளை விமர்சிக்கும் செய்தித்தாள்கள் மட்டும் ஒதுக்கப் பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டிருப் பதை அறியமுடிகிறது. இது மிகவும் ஆழமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறும் கூற்றுக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வைகளாகும். சுயசிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலேயே முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று ஓர் அதிகாரி கூறினார். அடுத்து அவர், சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்திடும் செய்தித்தாள்களை ஆதரிக்கத் தேவையில்லை என்று அரசாங்கம் கருதுவதாக அவர் சொன்னார். முதலமைச்சர் மேலும் ஒருபடி சென்று, எதிர்காலத்தில் எந்த செய்தித்தாளை வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூட சொல்ல இருப்பதாகக் கூறியிருக்கி றார். இத்தகைய அறிக்கைகள் குறித்து அஞ்சவேண்டியதில்லை, மாறாக சிரித்து ஒதுக்கப்பட வேண்டியவையாக கருதப்பட வேண்டியவைகளே. அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் வாசகர்கள் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயத்தையே கட்டுப்படுத்திட ஓர் ஆழமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. முதலமைச் சரின் கடுங்கோபத்திற்கு ஆளானவர்களுக்கு கடுந்துன்பம் வந்து சேரும் என்று அரசாங்கம் செய்தித்தாள்களை எச்சரித்துள்ளது.

ஆனால் மேற்கு வங்கத்திலிருந்து வெளிவரும் இவ்வாறான சுதந்திர மான பத்திரிகைகள் அளித்திட்ட விளம்பரங்கள் மூலமாகத்தான் மம்தா பானர்ஜி இந்த அளவிற்குப் புகழடைந்தார் என்பதை அவர் மிகவும் சவுகரியமாக மறந்துவிட்டார். ஜனநாயகத்தில், பத்திரிகைகள் என்பவை எந்த அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத்திற்கு எதிராக இருக்கிறதோ அதே அளவிற்கு ஒருவருக்கு/ஒரு விஷயத் திற்கு ஆதரவாகவும் இருந்திடும்.

அரசாங்கத்திடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் வருமோ என்ற அச்சத்திற்கு இடம் தராது கருத்துக் களை வெளியிடும் உரிமை ஜனநாய கத்தின் மிக முக்கிய அங்கமாகும். செல்வி மம்தா பானர்ஜி ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற முறையில் விமர்சனத்தினை எதிர்கொள்ள மறுக்கும் தொட்டாற்சிணுங்கியாக இருக்கக் கூடாது. ஊடகங்கள் சொல்லும் கடும் விமர்சனங்களை யெல்லாம் பற்றி அவர் கவலைப்படாது மேற்கு வங்கத்தின் நன்மைக்காக அவர் தம் பணியைத் தொடர்ந்திட வேண்டும். ஊடகங்களின் பணி என்பது அவை தங்களுடைய சொந்தக் கருத்துக்களை முன்வைப்பது. முதலமைச்சரின் பணி என்பது நிர்வாகம் செய்வது. எவ்வித மன சஞ்சலத்திற்கும் ஆளா காமல் முறையாக நிர்வாகம் செய்திட கற்றுக்கொள்ள வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)