Sunday, May 29, 2011

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மக்கள் மீது சுமைகள் ஏறும்! -சீத்தாராம் யெச்சூரிஎம்.பி.,

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அர சாங்கம் ஈராண்டு நிறைவுபெற்றதை அடுத்து, அதை அனுசரிக்கும் விதத்தில் பிரதமரால் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சியும், அப்போது பிரதமர் உரை நிகழ்த்தி ‘மக்களுக்கு அறிக்கை’ ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற சமயங்களில் சம்பிரதாயரீதி யாகப் புகைப்படங்கள் எடுக்கப்படும். இப் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன், சென்ற ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட் டுப் பார்த்தோமானால், சில வித்தியாசங்கள் பளிச்செனத் தெரியும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தில் இல்லை. அதேபோன்று ஐ.மு.கூட்டணி யில் அங்கம் வகிக்கக்கூடிய லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சியினரும் காணப்படவில்லை. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுகவின் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப் பினருமான கனிமொழி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திமுகவின் அனைத்து அமைச்சர்க ளும் காணப்படவில்லை. டி.ஆர். பாலு மட்டும் திமுகவைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் பெயரளவில் விருந்தில் கலந்து கொண்டார். அதேபோன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் - ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கத்தின்போது அங்கம் வகித்தவர்கள் - இப் போது காணப்படவில்லை. ஐ.மு.கூட்டணி1 அரசாங்கத்தில் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இப் போதும் ஆஜராகி இருந்தார்கள்.

ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் தன்னிச் சையாக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அந்த ஆட் சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நம்பிக் கைக் கோரும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எப்படி அது நடந்து கொண்டதோ அதேபோன்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இப்போதும் மிகவும் இழி வான முறையில் நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேரம் பேசி எப்படியோ தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆறாண்டு காலம் ஆட்சியிலி ருந்த காலத்தில் அரிக்கப்பட்டுக் கொண்டும் சிதைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், நாட்டின் பொது அமைப்புகளின் மதச் சார்பற்ற ஜனநா யக உள்ளடக்கத்தையும் பாதுகாத்திட வேண் டும் என்பதன் தேவையை உணர்ந்துதான் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் அமைக்கப்பட் டது. அப்போது ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத் தின் சார்பில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது. “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யானது ஓர் ஊழலற்ற, வெளிப்படையான மற் றும் மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய தொரு அரசாங்கத்தை அளிப்பதற்கும், மக்க ளுக்கு மிகவும் பொறுப்புடனும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகை யிலும் நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் உறுதி எடுத்துக் கொள்கிறது,” என்பதே அந்த உறுதி மொழியாகும். மேலும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு அடிப் படையாக அமைந்த ஒரு குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தையும் அது ஏற்றுக் கொண்டது.

ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் நிறைவேற்று வதாகக் கூறி எடுத்துக்கொண்ட உறுதிமொழி யையும், உள்ளடக்கத்தையும் ஐ.மு.கூட் டணி-2 அர சாங்கமானது இவ்வாறு திட்ட மிட்டமுறையில் இடித்துத் தள்ளிக்கொண்டி ருக்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எவ்விதத் தங்குதடையு மின்றி அமல்படுத்த வேண்டும் என்பதற்காக வும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாக மாற்ற வேண் டும் என்பதற்காகவும், ‘‘ஆம் ஆத்மி’’ (சாமா னியர்களு)க்காகவே தாங்கள் இருக்கிறோம் என்ற பாசாங்கினைக் கூட அது கைவிடத் தொடங்கிவிட்டது.

ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்திலே யேகூட, ஆம் ஆத்மியின் நலன்களை முன் னேற்றுவதற்காக, அரசாங்கம் தான் அளித் திட்ட உறுதிமொழியையும், குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டத்தையும் படிப்படியாகக் கைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல் லாமல், ஒருதலைப்பட்சமாக இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறப்படாதவற்றையும் மேற்கொண்டது. இதன் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய கேந் திரக் கூட்டாளியாக சேர்ந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை இவ்வாறு நம்பிக் கைத் துரோகம் செய்ததன் மூலம், இடதுசாரிக் கட்சிகள் எதன் அடிப்படையில் அதற்கு ஆத ரவு அளித்து வந்ததோ, அதை அவர்கள் மறு தலித்ததன் காரணமாக, வேறு வழியின்றி தங் கள் ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அதேபோன்று, அரசாங்கம் தான் அளித்திட்ட உறுதிமொழிகள் அனைத்தை யும் கைவிட்டதை அனைவரும் பார்க்கத்தான் செய்தனர்.

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் கடந்த ஈராண்டு கால ஆட்சியில், நாட்டையும் நாட்டு மக்க ளையும் பீடித்திருக்கிற இரு முக்கிய கொள் ளைநோய்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வும், மாபெ ரும் ஊழல்களுமாகும். இவ்விரண்டு நோய்க ளும் நாட்டின் ரத்த நாளங்களையே கடுமை யாக அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமையில், பிரதமரின் உரை யில், விலைவாசி உயர்வின் காரணமாக மக் கள் படும் துன்பங்களைக் களைவது குறித்து சம்பிரதாயமான முறையில் கூட எதுவும் இல் லை. மாறாக, விலைவாசி உயர்வை நியாயப் படுத்தக்கூடிய விதத்தில், எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று விளக்கமளித்திருக்கிறார். விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திற னை அதிகரிக்க வேண்டியதன் அவசியத் தை அவர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவற் றை எவ்வாறு அரசு நிறைவேற்றப்போகிறது என்பது குறித்து எவ்வித உருப்படியான திட்ட மும் முன்வைக்கப்படவில்லை. இதுவரை யில், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு முக்கியமான காரண மாகவுள்ள, ஊக வர்த்தகத்தை தடை செய் திட அரசாங்கம் மறுத்து வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் காமன் வெல்த் விளையாட்டுக்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மேம்போக்காகப் போகிற போக்கில் பிரதமர் குறிப்பிட்டிருந்தாலும், அவ ரது பேச்சின் தொனி மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு திருப்தி மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். எது தேவை என நினைத் தார்களோ அதனைச் செய்துவிட்டார்களாம். “சட்டம் தன் கடமையைச் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெறா வண்ணம் தடுத்திடவும், அதிகாரிகள் தங்கள்இஷ்டத் திற்குச் செயல்படுவதைக் குறைத்திடவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன,” என்று கூறியிருக்கிறார். ஆயினும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெ னில், ஆட்சியாளர்கள், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்திட்ட பல லட்சம் கோடி ரூபாய்களையும் அவர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பயன்படுத்துவது தொடர்பானதாகும். இது குறித்து எதுவுமே கூறாது பிரதமர் அமைதி காத்திருக்கிறார்.

பிரதமர், எதிர்பார்த்ததுபோலவே, கடந்த ஈராண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதை, ‘‘வரலாற்றுச் சாதனை’’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். ‘‘நாம் தேசிய அளவில் ‘உள்ளார்ந்த வளர்ச்சி’, சர்வதேச அளவில் ‘உள் ளார்ந்த உலகமயம்’ என் னும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகி றோம். அதன் மூலம், இல்லாதவர்கள் பயன டைவார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாத வர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்திடும்,” என்று கூறியிருக்கிறார்.

இதைவிடக் கொடூரமான ஜோக் வேறெது வும் இருக்க முடியாது. கடந்த ஈராண்டுகளில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52ஆக உயர்ந்தது. தற்சமயம் மேலும் உயர்ந்து 69 ஆக மாறியிருக்கிறது. அவர்களின் ஒருங் கிணைந்த சொத்தின் மதிப்பு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) மூன் றில் ஒரு பங்காகும். அதே சமயத்தில் மறுபக் கத்தில், நம் நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர் அல்லது 80 கோடிக்கும் மேலான மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாது வாடிக்கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மிகவும் உள்ள ஏற்றத்தாழ்வு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டிருக்கிறதே யொழிய, பிரதமர் நம்மை நம்பச் சொல்வது போல் குறைந்திடவில்லை.

பிரதமர் நாட்டின் எதிர்காலத்திற்காகக் காட்டிடும் வரைபடம் மிகவும் கவலை அளிக் கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. “நமக்கு உடனடிச் சவாலாக இருப்பதென்பது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடும் அதே சமயத்தில் வளர்ச் சிக்கான செயல்முறைகளையும் தக்க வைத் துக்கொள்ள வேண்டியநிலையில் நாம் இருப் பதுதான்,’’ என்று பிரதமர் கூறுகிறார். இவ் வாறு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைப் பதற்கு, பிரதமர் பல்வேறு விதமான யோசனை களைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுவது, நாட்டின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருமானம் குறித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண் டும் என்பதாகும். கடந்த ஈராண்டுகளில் அர சுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்கிட, அரசு மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் நம் பொருளாதார வளர்ச்சியைத் தேவையான அளவு நிலைநிறுத்திட உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ‘‘நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறையை’’க் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நட வடிக்கைகள் குறித்துத் தற்போது பேசுகிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? அரசாங்கம் வருவாயைப் பெருக்குவதற்கான வேலைக ளில் இறங்கும் அதே சமயத்தில், செலவினங் களைக் குறைப்பதற்கான வேலைகளிலும் இறங்கிட வேண்டும் என்பதேயாகும். அதா வது மக்கள் நலத்திட்டங்களுக்காக சமூக நலத் துறைகளுக்குத் தற்போது ஒதுக்கப் பட்டுவரும் அற்பத் தொகைகள்கூட மேலும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட இருக்கிறது என்பதேயாகும். இன்னும் சரி யாகச் சொல்வதென்றால், நாட்டின் பெருவாரி யான மக்கள் மீது மேலும் அதிகமான சுமை களைச் அரசு சுமத்த இருக்கிறது என்பதே இதன் பொருளாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து உலக முதலாளித்துவம் எப்படித் தன்னைச் சரிப்படுத்திக்கொண்டதோ அதன் எதிரொலி தான் இது என்பது தெளிவு. பெருமுதலாளித் துவ நிதி நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வதற் காக தங்கள் நாடுகளில் உள்ள அரசுகளிடமி ருந்து பொருளாதார ஊக்குவிப்புத் தொகை களைப் பெற்று, நெருக்கடியிலிருந்து வெளி வந்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் அர சாங்கங்களும் மிகப்பெரிய அளவில் நிதி களைக் கடனாகப் பெற்றன. இவ்வாறு பெற்ற கடன்களைச் சரிசெய்வதற்காக, தங்கள் செல வினங்களைக் குறைத்து, தங்கள் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி யிருக்கின்றன. முதலாளித்துவத்தின் குணம் என்னவெனில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்களைச் சரிப்படுத் திக் கொண்டு வெளியேற, தங்கள் திவால்தன் மையை அரசின் திவால்தன்மையாக மாற்றி டுவது என்பதுதான். ஒட்டுமொத்த விளைவு, மக்களின் மீது தாங்கொணா சுமைகள் விழும். இவ்வாறு தங்கள் மீது விழுந்த தாக்குதல் களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் முழுவதி லும் மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யிருக்கின்றன.

இத்தகைய நடைமுறைகளைத்தான் இந்தியாவிலும் கொண்டுவரப் போவதாக பிரதமர் நினைவுபடுத்தி இருக்கிறார். ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தின் ஈராண்டு கால நிறைவு விழா, இவ்வாறு, மக்கள் கொண்டா டப்படக்கூடிய ஒன்றாக அமைந்திடவில் லை, மாறாக தங்கள் மீது மேலும் சுமைகள் விரைவில் விழப்போகின்றன என்று எச்சரிக் கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.

அரசாங்கம் இவ்வாறு முன்கூட்டி எச் சரிக்கை செய்திருப்பது, மக்கள் இதற்கு எதி ராகப் போராடுவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. தங்கள் மீது அரசு ஏற்றப்போகிற சுமைகளுக்கு எதிராக மக்கள் திரள் நடத்த இருக்கும் மகத்தான போராட்டங் களின் வலிமைதான், மக்கள் இதுவரைப் பெற் றிருக்கின்ற உரிமைகளைப் பாதுகாத்திடு வதையும், சிறந்ததோர் வாழ்க்கைக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் பெரிய அளவில் தீர்மானித்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, May 28, 2011

உணவுப் பாதுகாப்பு உதிர்கிறதா?



தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) கொண்டுவரப்படும் என்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் அறி வித்து ஈராண்டுகள் ஓடிவிட்டன. குடியரசுத் தலைவர் 15ஆவது மக்களவைத் தேர்த லுக்குப்பின் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப் பினர்களின் கூட்டு அமர்வில் தன் முதல் உரையை நிகழ்த்துகையில், ‘தன்னுடைய அரசாங்கம்’ அடுத்த முதல் நூறு நாட்க ளுக்குள் அத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றும் என்று அறிவித்திருந்தார். நம் நாட் டில் நிலவும் வறுமையின் கொடுமை குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், இத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றுவதில் அரசுத்தரப்பில் தொடர்ந்து சாக்குப்போக்குகள் சொல்லப்படுகின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பொது நல மனு ஒன் றில் திட்டக் கமிஷன் தன்னையும் ஒரு பிரதி வாதியாக இணைத்துக் கொண்டு, ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், நகர்ப் புறத்தில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாயும், கிராமப்புறத்தில் இருப்பவர் களுக்கு 15 ரூபாயும் அவர்களின் அத்தியா வசியத் தேவைகளுக்காக அளிக்கப்படுமா யின், அவர்களை வறுமையிலிருந்து அகற்றிட அது போதுமானது என்று குறிப்பிட்டிருக் கிறது. இதன் உட்பொருள் என்னவெனில், கொண்டுவரப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் இதற்கு மேல் வருமானம் உடைய எவரும் வரமாட்டார்கள் என்பதாகும்.

திட்டக் கமிஷனின் அபிப்பிராயத்தின்படி, நகரங்களில் வாழ்பவர்களில் எவரேனும் மாதத்திற்கு 578 ரூபாய் வருமானம் உடைய வர்களாக இருந்தால், அவர்கள் ஏழைகள் என்று அதிகாரபூர்வமாகக் கருதப்பட மாட் டார்கள். அதன் அறிக்கையின்படி, இந்தத் தொகையில் அவர்கள் வாடகை மற்றும் பயணச் செலவிற்காக அளித்திடும் 31 ரூபாய், அவர்கள் கல்விக்காகச் செலவிடும் 18 ரூபாய், மருந்துகள் வாங்குவதற்காகச் செலவிடும் 25 ரூபாய், மற்றும் காய்கறிகளுக்காகச் செல விடும் 36.5 ரூபாயும் அடக்கம். ஏளனம் செய் கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? உண்மையில், இரண்டையுமேதான் செய்கிறார்கள்.

திட்டக் கமிஷன் அளித்துள்ள மேற்படி புள்ளிவிவரங்களை, அது அளித்துள்ள மற் றொரு புள்ளி விவரத்திலிருந்தே எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் உயிர்வாழ்வதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 2,400 கலோரி கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வரும் நாளொன்றுக்கு 44 ரூபாய் செலவிட வேண்டும். இந்தச் செலவினத்தில் அவர்க ளின் உறைவிடம், உடை, கல்வி, போக்குவரத் துச் செலவினங்கள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திட்டக் கமிஷன், தன்னுடைய ஆய்வின் அடிப்படையில், நம் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 33 விழுக்காடு என்று முடிவு செய்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் வறுமை விகிதம் 46 விழுக்காடு என்று பரிந்துரைத்தி ருக்கிறது. ‘‘நம் நாட்டின் மக்கள் தொகை யில் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிற அர்ஜுன் சென்குப்தா மதிப்பீட்டைவிட இவ்விரண்டு மதிப்பீடுகளுமே மிகவும் குறைவானவைகளாகும்.

இத்தகைய பாசாங்குத்தனமான வரை யறைகள் நம் நாட்டில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசின் பொறுப்பை எள்ளிநகையாடுவதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவை அர சாங்கம் மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் உண்மையான நோக்கத்தினையும் மூடி மறைக்கின்றன. அதாவது இரு வேறு இந்தியர் களுக்கும் இடைவெளி மேலும் அதிகமாகி இருக்கிறது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்ப ட் டிருக்கிறார்கள்.

இதேசமயத்தில், சென்ற வாரம் கூடிய மத்திய அமைச்சரவையானது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் அதன் பொரு ளாதாரம், சாதி மற்றும் மத அடிப்படைகளின் பின்னணியில் தேசிய அளவில் சர்வே செய்திட ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தி யப் பதிவுத் தலைவர் அவர்களிடம், மக்களின் சாதி மற்றும் மதப் பின்னணி குறித்துக் கணக்கெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொள்ள ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கு சென்ற முறை 2002இல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தடவை இதில் நகர்ப்புறங்களும் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது. நகர்ப்புறங் களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களைக் கண்டறிய மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொள்ளுமாறு அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அதாவது, முதலா வது காரணியாக இருப்பிடத்தையும், இரண்டா வது காரணியாக கல்வியின்மை, நீண்டகாலம் நீடித்திருக்கிற இயலாமை, குடும்பத்தலைவ ராகப் பெண் இருத்தல் முதலான சமூகப் பல வீனங்களையும் மூன்றாவது காரணியாக முறைசாராச் தொழில், நிரந்தரமற்ற தொழில், குறைந்த ஊதியம் உடைய தொழில் போன்ற வேலைவாய்ப்புக் குறைபாடுகளையும் எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமையைக் கண்ட றியும் பணி வேறு விதத்தில் செய்யப்பட இருக் கிறது. கிராமப்புறங்களில் மக்கள்தொகை மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட இருக்கின் றன. (தொலைபேசி இணைப்புகள், குளிர் பதன சாதனங்கள் (சநகசபைநசயவடிசள), ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உடையவர்கள் போன்ற) உயர் பணக்காரக் குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு விடும். புராதனப் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவர்கள், ஆதரவற்றவர்கள், மலம் சுமப்பவர் கள் போன்று அடிமட்டத்தில் உள்ளவர்கள் இயல்பாகவே இணைத்துக்கொள்ளப்படு வார்கள். இரண்டுக்கும் இடைப்பட்டவர் களைப் பொறுத்துத்தான் பிரச்சனை. இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கருதப்பட வேண்டுமானால் ஏழு வித மான இயலாமையைப் பெற்றிருக்க வேண் டும். இந்த ‘‘ஏழு விதமான இயலாமை’’ குறித்துத்தான் குறிப்பிடத்தக்க அளவில் குழப்பங்கள் இருந்து வருகின்றன.

நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய தகவல் களின்படி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கணக்கிடும் முறையின்படி, ஓர் ஐந்துபேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஓராண் டிற்கு 27 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமா னம் ஈட்டும் என்றால், அது தானாகவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பட்டியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது எனக் கருதப்படும். அதாவது மாதத் திற்கு 447 ரூபாய்க்கும் மேல் வருமானம் உடைய குடும்பம் ஏழைகளின் பட்டியலி லிருந்து நீக்கப்படப் போதுமானது. ‘கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு 15 ரூபாய் வருமா னம் உடையவர் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்பவர் என்று மதிப்பிடப் போதுமானது’ என் கிற திட்டக் கமிஷனின் மதிப்பீட்டுடன் இது மிகச் சரியாக ஒத்துப்போகிறது.

இவ்வாறு, மத்திய அமைச்சரவையால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் குறித்து கொண்டுவரப்பட்டிருக்கும் கணக் கீடானது, திட்டக் கமிஷனால் முன்வைக்கப் படுகிற ஏளனத்திற்குரிய மோசடியான கணக் கீட்டையே மீளக் கூறுகிறது. மேலும் இத்த கைய மதிப்பீடு குறித்து எந்த மாநில அரசுக் கேனும் சந்தேகம் வந்தால், அது திட்டக்கமி ஷனுடன் கலந்து பேசி அதனைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தக் கணக் குகள் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பொது விநியோக முறை யிலும், கொண்டுவரப்பட இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் உணவு தானி யங்களை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. என வே, பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு தானியங் களை விநியோகிப்பதில் தற்போதுள்ள பிரச்ச னைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு மேலும் சிரமங்களைத் தந்திடும் என்பது தெளிவு.

நம் நாட்டில் உருப்படியான முறையில் உணவுப் பாதுகாப்பு எதுவும் ஏற்படுத்த முடியு மானால் அது, பொது விநியோக முறையை வலுப்படுத்தி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் (அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் சரி அல்லது வறுமைக் கோட்டுக்கு மேல் இருந்தாலும் சரி) மாதம் ஒன்றுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் வீதம் அளிப் பதை உத்தரவாதம் செய்வதில்தான் இருக் கிறது. இதற்குப் பதிலாக, இவ்வாறு மோசடி யான கணக்குகளை மத்திய அரசு கூறுமா னால், அது மக்களை மோசடி செய்கிறது என் றே அர்த்தம். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கக்கூடிய அள விற்கு நாட்டில் போதிய அளவிற்கு வளங்கள் இல்லை என்று ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. இதுவும் மோசடியான ஒன்றேயா கும். நாட்டில் நடைபெற்றுள்ள மற்றெல்லா ஊழல்களையும் விட்டுவிடுங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணம் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பினை அளிப்பதற்குப் போதுமானதை விட அதிகமாகும்.

இவ்வாறு மிகப் பிரம்மாண்டமான முறை யில் ஆட்சியில் உள்ளவர்கள் கொள்ளை யடித்த பணத்தை மீண்டும் கைப்பற்றி, அவற் றை மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன் னேற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகை யில், வலுவான மக்கள் கிளர்ச்சிகள் நடத்தி, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்திற்கு வலு வான நிர்ப்பந்தங்களை அளித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, May 22, 2011

மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை: மார்க்சிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க்கத் தாக்குதல் முறியடிக்கப்படும்

நாம் எதிர்பார்த்ததைப் போலவே, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி யின் தொழிலாளர்களுக்கு எதிராக கொலை வெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் மே 13 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகையி லேயே தொடங்கிவிட்டன. மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில், அதிலும் குறிப்பாக இடது முன்னணி வென்ற பகுதிகளைக் குறி வைத்து, கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டிருக்கின்றன. செங்கொடிகள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. அந்த இடங் களில் திரிணாமுல் காங்கிரசின் கொடிகள் வலுக்கட்டாயமாக ஏற்றப் பட்டிருக்கின்றன. இடது முன்னணியின் உள்ளூர்த் தலைவர் களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக் கின்றன மற்றும் சூறையாடப்பட்டிருக்கின் றன. இவற்றை எதிர்க்கும் இடது முன்னணித் தோழர்கள் கொலைவெறியுடன் தாக்கப்பட்டி ருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட, முதல் 48 மணி நேரத்திலேயே, பர்து வான், மேற்கு மிட்னாபூர் மற்றும் பங்குரா மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூன்று முக்கிய முன்ன ணித் தோழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தல் என்பவை ஒருதரப்பினரை வெற்றி பெறச் செய்திடும், மற்றொரு தரப்பினரைத் தோல்வியுறச் செய்திடும். பொதுவாக இது வழக்கம்தான். ஆயினும் வங்கத்தில் இடது முன்னணியின் தேர்தல் தோல்வி என்பது ஆளும் வர்க்கங்களின் பிற்போக்கு சக்திக ளுக்கு இடது முன்னணி மீது வன்முறையை ஏவுவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத் தப்படுகிறது. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் மக்களுக்குக் கிடைத்த ஆதாயங் களை அபகரித்திடக் கூடிய வகையில் அவர் கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இதனை இத்தாக்குதல்களில் நன்கு பார்க்க முடிகிறது.

நிலப்பிரபுக்கள் தலையெடுப்பு

உதாரணமாக, ஜங்கல் மஹால் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் திரிணா முல் காங்கிரஸ், இடது முன்னணியின் நிலச் சீர்திருத்தத் திட்டங்களின் விளைவாக நிலங்களைப் பெற்றவர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இதுநாள்வரை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவும், ஏழை விவசாயிகளாகவும் இருந்தவர்கள், நீதிமன் றங்களில் நடைபெற்ற பல்வேறு நீண்ட நெடிய வழக்குகளுக்குப்பின் இப்போது சட் டப்பூர்வமாக நிலத்தின் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது முந்தைய நிலப்பிரபுக்கள் தங்கள் கையைவிட்டுப் போன நிலங்களை மீண்டும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், வங்கத்தில் நிலச் சீர் திருத்தங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற ஆதா யங்களை அவர்களிடமிருந்து மீண்டும் பறித் திட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு சில இடங்களில், விவசாயத் தொழிலாளர்களின் வேலை நேரங்கள் வலுக் கட்டாயமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நாட்கூலிகள் குறைக்கப் பட் டிருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால மாக, வேலை நேரத்தின் போது, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அரிசி மற்றும் உணவுகள் நிறுத்தப்படுகின் றன. சில இடங்களில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டவைகளை அறுவடை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பதிலாக, அவை சட்டவிரோதமாக அறுவடை செய்யப் படுகின்றன.

ஹிட்லர் பாணியில்....
மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் முக்கியமான தெரு முனைகளி லும், முச்சந்திகளிலும் பலகைகளில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கணசக்தி’ நாளிதழின் அனைத்துப் பக்கங்களையும் ஒட்டி வைப்பதென்பது வழக்கமான நடை முறையாக இருந்து வருகிறது. காசு கொடுத்து பத்திரிகையை வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் படித்துவிட்டுச் செல்வதற் காக இவ்வாறு அங்கே செய்யப்பட்டிருக் கிறது. மாநிலம் முழுவதும் இவ்வாறிருந்த பல கைகளை அடித்து நொறுக்கி இருக்கின்றனர், தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் பாசிஸ்ட் தொழில்நுட்பங்கள், அந்தக் காலத்தில் ஹிட்லர், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தொடுத்த தாக்குதல்களை நினைவுபடுத்து கின்றன. பாசிஸ்ட்டுகள் தங்களுடைய ரெய்ச் ஸ்டாக் மாளிகைக்குத் தாங்களே நெருப்பு வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது போட்டு, அவர்களைத் தாக்கியதைப் போல இவர்களும் செய்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலும், கட்சித் தலைவர்களின் இல்லங்களிலும் ஆயுதங்களை வைத்துவிட்டு, காவல்துறை யினரை அழைத்து, ‘‘இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் இவர்கள் வைத்திருப்பதற்காக இவர்களைக் கைது செய்யுங்கள்’’ என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். இத்தகைய படுகேவலமான அளவிற்கு இன்றைய வர்க்கப் போர் சென்றிருக்கிறது.

வெளிப்பகட்டிற்கு, திரிணாமுல் காங்கி ரசும் அதன் தலைவியும் பொதுக்கூட்டங் களில், இத் தேர்தல்களில் “நாங்கள் மாற்றம் தான் கோருகிறோமே யொழிய, நாங்கள் பழிக் குப் பழி கோரவில்லை” என்றார்கள். அவ்வாறு சொல்லுகிற அந்தத் தருணத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, இடது முன்னணி ஆதரவாளர்களுக்கு எதிராக வன் முறை நடப்பின், அது அவர்களுக்குள் நடை பெறும் உள்கட்சி சண்டை என்றார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் “திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர்கள், இடதுசாரிகளுக்கு எதிராகச் சரியாகப் பாடம் கற்பிப்பார்கள்” என்று தன்னுடைய நெருப்பைக் கக்கும் பேச்சுக்கள் மூலம் தங்கள் ஊழியர்கள் மத்தி யில் உணர்ச்சித் தீயைத் தூண்டி வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மிகவும் பண்புடனும் அடக்கத் துடனும், தங்கள் உறுப்பினர்கள் ஓர் ஆக்கபூர் வமான எதிர்க்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்று கூறிய அதே சமயத் தில், திரிணாமுல் காங்கிரஸ் கும்பல் வங்கத் தில் வர்க்கப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது முதல்முறையல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு வர்க்கப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதன் மூலம் நம்முடைய சமூகத்தில் சுரண்டப்பட்ட வர்க்கங்களாக இருந்தவர்கள், நிலச் சீர்திருத்தங்கள் மூல மாகவும் பஞ்சாயத்து ராஜ் மூலமாகவும் வங்கத் தில் கடந்த முப்பதாண்டுகளில் பெற்ற அபரி மிதமான ஆதாயங்கள் அனைத்தையும் அப கரித்து, அவர்களைப் பலவீனப்படுத்திட இவ் வர்க்கப் போரைத் தொடுத்திருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய வர்க் கத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பது இது முதல்முறையல்ல. 1972இல் பெரிய அள வில் மோசடியாக சட்டப்பேரவைத் தேர் தலை நடத்தி, ஆட்சிக்கு வந்தபின் கட்சிக்கு எதிராக அரைப் பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள் 1977இல் அவசரநிலை தோல்வியடையும் வரை நீடித் தது. இவ்வாறு கட்சியின் மீது இவர்கள் அடக் குமுறையை ஏவியதன் நோக்கம் கம்யூ னிஸ்ட்டுகளின் தலைமையிலான வெகுஜன இயக்கங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அப்போது 1400 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். 22 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கட்சிக் குடும்பங்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று, இவர் களின் அரைப் பாசிச அடக்குமுறை நடவடிக் கைகளை வெற்றிகரமாகத் தடுத்து முறியடித் தன. ஆளும் வர்க்கங்களின் நம்பிக்கைகள் தவிடுபொடியாகக்கூடிய விதத்தில் மேற்கு வங்க மக்கள் 1977 தேர்தல்களின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்ல, நாட்டில் வேறெங்கும் பார்க்க முடி யாத அளவிற்கு அதற்கு அளித்து வந்த ஆதர வைத் தொடர்ந்தனர். அவ்வாறு மக்கள் வைத் திருந்த நம்பிக்கை ஏழு தேர்தல்கள் வரை தொடர்ந்தது.

அதேபோன்று இப்போதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க் கத் தாக்குதல் எதிர்கொள்ளப்பட்டு முறியடிக் கப்படும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இதுநாள்வரையில் சுமார் 400க்கும் மேற்பட்ட இடது முன்னணி ஊழியர்கள் தியாகிகளாகி இருக்கிறார்கள். இவர்களின் தியாகம் வீண்போக அனுமதியோம். வங்கத் தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் சகோதர வர்க்கத்தினருக்கு நாம் நம் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்வோம். இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வங்க மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட ஒருபோதும் அனுமதியோம்.

தமிழில்: ச.வீரமணி

Friday, May 20, 2011

தேர்தல் முடிவுகள் : சவால் மிகுந்த, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவோம்! பிரகாஷ் காரத்

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இடது முன்னணிக் குப் பெரும் தோல்வியைத் தந்துள்ளது. இது மேற்கு வங்கத்தை இடதுசாரி களின் கோட்டை எனக் கருதிய நாட்டில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத் தைத் தந்துள்ளது. 1977ல் இருந்து ஏழு முறை அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, 34 ஆண்டு காலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன் னணி அரசாங்கம் பதவி விலகியுள்ளது. தேர்தல் முடிவில் சில பொதுவான அம் சங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் மாற்றத்திற்காகத் தீர்மானகரமான முறையில் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார்கள். அதற்காக, திரிணா முல் காங்கிரஸ் கூட் டணிக்குப் பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். இதற்காக இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளும் - வலது சாரிகளிலிருந்து இடது அதிதீவிர மாவோ யிஸ்ட்டுகள் வரை - ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். மேலும் இடது முன்னணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த தளத்தை எதிர்பார்த்த அளவிற்கு மீட்க முடியவில்லை என்பதும் தெளிவாகிறது.

விமர்சனப்பூர்வ ஆய்வு

இடது முன்னணியின் ஆதரவுத் தளத் தில் அரிப்பு ஏற்பட்டிருப்பதற்கும், கணிச மான அளவு அரசியல் திசைமாற்றம் ஏற் பட்டிருப்பதற்குமான காரணங்களை அடையாளம் காண மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முழுமையான ஆய்வினை மேற் கொள்ள இருக்கிறது.

2009 மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்குகளைவிட, 11 லட்சம் வாக்கு களை இந்த முறை கூடுதலாக இடது முன்னணி பெற்றிருக்கிறது. இருப்பினும், மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகை யில் வாக்கு விகிதாசாரத்தில் 2.2 விழுக் காட்டுப் புள்ளிகள் குறைவு ஏற்பட்டிருக் கிறது. இடது முன்னணியின் ஆட்சியில் கடந்த முப்பதாண்டுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்றச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தபோதிலும், அரசாங்கத் தில் தொடர்ந்து நீடித்திருந்ததால், சில எதிர் மறைக் காரணிகள் குவிவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. கட்சியின் அரசி யல் மற்றும் ஸ்தாபனப் பணிகளின் பின் னணியில், இந்த தேர்தல் போக்குகள் குறித்து ஓர் ஆழமான ஆய்வினை மேற் கொள்வதென்பது, நம்முடைய அணுகு முறையில் காணப்படும் குறைபாடு களைச் சரிசெய்வதற்கும் ஸ்தாபனப் பல வீனங்களைக் களைவதற்கும் உரிய நட வடிக்கைகளை உருவாக்குவதற்கு உத விடும்.

கேரளாவில், இடது ஜனநாயக முன் னணி மிகவும் குறுகிய அளவிலேயே வெறும் மூன்றே மூன்று இடங்கள் குறை வாகப் பெற்று பெரும்பான்மையை பெற முடியாமல் போயுள்ளது. ஐக்கிய ஜனநா யக முன்னணி இரு இடங்களை மட்டுமே கூடுதலாகப் பெற்று நூலிழை அளவிற்கே பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே யான வித்தியாசம் என்பது வாக்கு விகிதா சாரத்தில் வெறும் 0.89 விழுக்காடே யாகும். இது இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாட்டின் மீது மக்கள் பரவலாக திருப்தியுடன் இருந்தனர் என் பதையும், அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை எதுவும் இல்லை என்பதையுமே காட்டுகிறது. முதலமைச் சர் வி.எஸ்.அச்சுதானந்தன் லஞ்சத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பினைப் பெற்றது. ஒருசில பிரிவினரிடையே சாதீய மற்றும் மத அமைப்புகள் சில சாகசமாக செல்வாக்கு செலுத்தி இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியை பாதிப்படைய செயல்பட்டன என்று பூர்வாங்க அறிக் கைகள் காட்டுகின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தால் வரலாறு காணா அளவிற்கு ஊழலும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கூட்டணியால் பெரும் பகுதி மக்களைக் கவர முடியவில்லை.

உள்நோக்கத்துடனான தாக்குதல்கள்

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தோல்வி யை அடுத்து முதலாளித்துவ ஊடகங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் எதிராக வகை தொகையற்ற விதத்தில் துஷ்பிரச்சாரத் தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. தேர் தல் முடிவுகளானது மார்க்சிஸ்ட் கட்சி யின் மீது விழுந்த மரண அடி என்றும் அதி லிருந்து அது மீளவே முடியாது என்றும் சித்தரிக்க முயல்கின்றன. வேறு சில விமர்சகர் கள் தங்கள் விமர்சனங் களை வேறுவிதமாக முன்வைக்கிறார்கள். அதா வது, கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் அராஜகமானது, இக்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று என்றும், உலக அளவில் சோசலிசமும், மார்க்சியமும் பொருந்தாமல் போனதன் நீட்சியாகவே மேற்குவங்க தேர்தல் முடிவு அமைந் துள்ளது என்றும் திரிக்கின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந் ததானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற் படுத்தவில்லை என்கிற உண்மையி லிருந்து இவர்களின் கூற்றுக்கள் பொய் யானவை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், 1990 களில் கட்சி மேற்கு வங்கத்திலும், கேர ளாவிலும் மேலும் உறுதியாகவும் வலு வாகவும் வளர்ந்தது. தத்துவார்த்த நிலை பாட்டை பொறுத்தவரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத் தத்துவத் தையும் நடைமுறையையும் இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக பிரயோகித்துக் கொண்டி ருக்கிறது. இது தேக்கமல்ல; மாறாக நிலைமைக்கேற்ப புதுப்பித்துக்கொண்டு வளரும் நிலை யாகும்.

மேற்கு வங்கத்தில் கடந்த நாற்பது ஆண்டு காலமாக எண்ணற்ற போராட் டங்களையும் மக்கள் இயக்கங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுத்ததன் மூலமா கத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும், இடது முன்னணியும் வளர்ந்தன. இடது முன்னணியின் தேர்தல் வெற் றிகள் இத்தகைய இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் மூலம் உருவான மக்கள் தளங்களின் வெளிப்பாடேயாகும். இடது முன்னணி, மேற்கு வங்கத்தில் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; தேர்தல் நடவடிக்கைகளால் மட்டுமே வலிமைமிகுந்த வெகுஜனக் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந் திட வில்லை.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக் கும் முடிவுகட்டப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுவோர், ஓர் உண்மை யைப் பார்க்க மறுக்கிறார்கள். அதாவது, இப் போது ஏற்பட்டுள்ள தோல்வியிலும் கூட, இடது முன்னணி 41 விழுக்காடு வாக்கு கள் பெற்றுள்ளது. ஒரு கோடியே 95 லட் சம் வாக்காளர்கள் இடது முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இத்தகைய உறுதியான வெகுஜனத் தளத்தின் காரண மாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்க முடிந்துள்ளது. கம்யூனிச எதிர்ப்பு விஷமப் பிரச்சார கர்கள் மற்றும் நவீன தாராளமய ஆதரவு விமர்சகர்களின் கூற்றுக்கள் தவறானவை என்று மெய்ப்பிக்கப்படும். விலகிச்சென் றுள்ள மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து வலுவான போராட்டங்களை நடத்துவதன் மூலம், விலகிச்சென்ற மக்களின் மனங்களை மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் வென்றெ டுக்கும் என்பது திண்ணம்.

மார்க்சிஸ்ட் கட்சி மீது தொடுக்கப்ப டும் மற்றொரு தாக்குதல், கட்சி மக் கள் மீது ஒடுக்குமுறையை மேற்கொண்ட எதேச்சதிகார சக்தி என்று சித்தரிப்பதும், இடது முன்னணி ஆட்சிக்காலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் அவ தூறை அள்ளிவீசுவதுமாகும். இடது முன் னணியின் கடந்த கால வெற்றிகள்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட் டளைகளுக்குக் கீழ்படிய மறுத்தவர்கள் மீது அல்லது அதனை எதிர்த்தவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியதன் மூல மாகத்தான் கிடைத்தன என்று சொல் லும் அளவிற்குக் கூடச் சிலர் சென்றிருக் கிறார்கள். இத்தகைய விமர் சகர்கள் ஓர் அம்சத்தை வசதியாக மறந்துவிடுகிறார் கள். அதாவது, 1977க்குப்பின்னர் நடை பெற்ற ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், இடதுசாரிகளுக்கு எதிராக வாக்களித்தோரின் விகிதாசாரம் 40 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் இதற்கு முன் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் 45 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடுகள் வரை வாக்குகள் பெற்று குறிப்பிடத்தக்க வரலாறு படைத் திருக்கின்றன. மக்கள் மத்தியில் வெகு ஆழமாக வேரூன்றியிருப்பது குறிப்பாக கிராமப்புற மக்கள் மத் தியில் வெகுவாக செல்வாக்கு செலுத்தி வந்ததும்தான் இதற்குக் காரணங்களாகும். சுயநலம் சற்றும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை கொடுங்கோலர்கள், ஊழல் பேர் வழிகள் என்று பொய்யாக உள்நோக்கத் துடன் சித்தரிப்பதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்தி விடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இடது முன்னணி அரசாங்கம் இயல் பாகவே ஜனநாயக விரோதமானது என் றும், எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடாத சர்வாதிகாரத்தன்மை கொண்டது என்றும் எதிர்ப்பவர்களையெல்லாம் அழித்துவி டும் என்றும் ஒரு அவதூறு முன்வைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ், ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டுத்தான் இடது முன்னணி தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது சாரிகளும் நாட்டில் உள்ள அமைப்புக ளில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாடு படுவதில் மிகவும் உறுதியான சக்தி என்று நிரூபித்து வந்திருக்கின்றன. கேர ளாவில் 1957-ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வென்று நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர வையை அமைத்ததிலிருந்தே, அது நாட் டில் ஜனநாயக நடைமுறைகளில் பெரு வாரியான மக்களைப் பங்கேற்க வைத்த தன் மூலம் ஜன நாயகத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்திருக்கிறது.

நாட்டில் அதிக மான அளவில் மக்கள் வாக்களிக்கும் மாநிலங்களாக மேற்கு வங் கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகியவை மாறியிருப்பதென்பது யதேச்சையாக நிகழ்ந்ததல்ல. இம்மூன்று மாநிலங்களி லும் நடைபெற்ற நிலச்சீர்திருத்தங்கள், அங்கிருந்த பழைய நிலப்பிரபுத்துவக் கட் டமைப்பை சுக்குநூறாக தகர்த்து, ஜன நாயக அமைப்பினை விரிவாக்கியுள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இடது சாரிகள் உருவாக்கிய ஜனநாயகப் பாரம் பரியத்தைக் களங்கப்படுத்தவும், சீர் குலைக்கவும்தான் ஆதிக்க வர்க்கங் களின் ஏஜெண்டுகளும், பிற்போக்கு சக்திகளும் இப்போது முயற்சிக்கின்றன.

இடதுசாரி அரசாங்கங்களின் பங்களிப்புகள்

மக்களின் ஆதரவைப் பெற முடிந்த இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசாங்கங்களை நடத்துவ தில் சொந்த அணுகுமுறையைக் கை யாண்டது. இடதுசாரிகள் தலைமையி லான அரசாங்கங்கள், இடது மற்றும் ஜன நாயக இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக் களின் இயக்கங்கள் வளர்ந்து வலுப் பெறக்கூடிய வகையில் செயல்பட வேண்டி இருந்தன. அரசியலமைப்புச் சட்டம் தற்போது மாநில அரசுகளுக்கு அளித்துள்ள வரையறைக்கு உட்பட்டே, மக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய விதத் தில் மாற்றுக் கொள்கைகளை திட்ட மிட்டு செயல்படுத்திட வேண்டும் என்று கட்சித் திட்டம் விளக்கிக் கூறியிருக்கிறது. இவ்வாறு தன்னுடைய லட்சியத்தை அடைந்திட, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கம் தீவிரமாகச் செயல் பட்டிருக்கிறது என்பதை இடது முன்ன ணியின் ஈடிணையற்ற வரலாறு காட்டு கிறது. இடதுசாரிகள் தலைமையிலான இத்தகையதோர் அரசாங்கத்தின் இழப்பு என்பது ஒரு பின்னடைவுதான். ஆயினும் இதனை நிரந்தரமான, அடிப்படையான இழப்பு என்று பார்க்கக் கூடாது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அணிதிரட்ட வேண்டியதன் அவசியத் தையும், அவர்களை வர்க்க மற்றும் வெகு ஜன அமைப்புகளின் மூலமாக அணி திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் வெகுஜன இயக்கங்களையும் போராட் டங்களையும் வளர்த்தெடுத்து, அதன் மூலம் மக்களின் அரசியலுணர்வை மேம் படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங் கங்கள் அமைந்தது இத்தகைய செயல் முறையின் வெளிப்பாடேயாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர் தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆய் வுகள் செய்தபின், அடிப்படை வர்க்கங் களின் பிரச்சனைகள் குறித்தும், உழைக் கும் மக்களின் நலன்களுக்கான போராட் டங்கள் குறித்தும் சரியானதொரு திசை வழியில் உத்திகளை உருவாக்கிடும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளுக்கு எதிரான போராட்டம், மக் களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதுகாப் பதற்கான போராட்டம், நாட்டின் இறை யாண்மையை மற்றும் மதச்சார்பின் மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவைதான், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு எதிராக நாட்டின் முன்வைக்கப்படும் மாற்று அரசியல் பாதையாக இப்போதும் திகழ்கிறது.

மேற்கு வங்கத்தில் மாறியுள்ள அரசி யல் சூழ்நிலையில், கடந்த முப்பதாண்டு களுக்கும் மேலான இடது முன்னணி ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன்களை அவர்களிடமிருந்து எவரும் தட்டிப்பறித்திடாமல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பாதுகாத்திடும். ஆளும் கூட்டணியின் வர்க்கக் குணத் தின் காரணமாக அது நிலச்சீர்திருத்தங் கள் மூலம் மக்களுக்குக் கிடைத்திட்ட பயன்களைப் பறித்திடவும், உழைக்கும் மக்களுக்குக் கிடைத்திட்ட பலன் களை ஒழித்துக்கட்டவும் முயற்சிக்கும். நிலச் சீர்திருத்தத்தையும் குத்தகை தாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம். தொழிலாளர்களை அவர்களது உரிமை களுக்கான போராட்டத்திற்கும், உழைக் கும் மக்களின் அனைத்துப் பிரிவினரை யும் தங்களின் வாழ்க்கைத்தரத் தினைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கும் மேலும் வலுவாக அணிதிரட்டிடுவோம். மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்க மாண்பினையும் பாதுகாத் திடுவோம். பிரிவினை சக்திகள் நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத் திட மேற்கொள்ளும் முயற்சி களையும் முறியடித்திடுவோம். இவை அனைத்தை யும் இடதுசாரி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நிறைவேற்றிடு வோம்.

கட்சியையும் இடது முன்னணியையும் பாதுகாத்திடுவோம்

தேர்தல் முடிவின் பின்னணியில் மேற்கு வங்கத்தில் கட்சியையும், இடது முன்னணியையும் இயக்கத்தையும் காப் பாற்ற வேண்டிய கடமை உட னடியாக நம் முன் வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியதுமே, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மீது எண்ணற்றத் தாக்குதல் கள் நடைபெற்றிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணி ஊழியர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இரு நாட்களி லேயே கட்சியின் இரு தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட் டிருக்கிறார் கள். திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியையும் இடதுசாரி களையும் பல பகுதிகளில் ஒடுக்கும் செயலில் இறங்கியிருக்கிறது. இது முறி யடிக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களுக்கு எதி ராக மேற்கு வங்க மக்களின் ஜனநாயக உணர்வுகள் கிளர்ந்தெழச் செய்யப்பட வேண்டியுள்ளது. இத்தகைய தாக்குதல் களுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய விதத் தில் நாடு முழுவதும் உள்ள கட்சி அணி களும், இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இடது முன்ன ணியுடனும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

Saturday, May 14, 2011

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக



உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள்.

மாயாவதி அரசாங்கமானது, கிரேட்டர் நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, ஜே.பி.அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக கவுதம் புத் நகரிலிருந்து ஆக்ரா வரை 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலங்கள் விவசாயி களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டிருக் கின்றன. ஆனால், கையகப்படுத்துதல் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை. யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சிக் குழுமம் (கூாந லுயஅரயே நுஒயீசநளளறயல ஐனேரளவசயைட னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல), எக்ஸ்பிரஸ் பாதையைச் சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களையும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி, அதன் பின்னர் அவற்றை பத்திலிருந்து இருபது மடங்கு விலை வைத்து ரியல் எஸ்டேட் கம் பெனிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. வீடுகள் கட்டும் கட்டிடக்காரர்களும் (ரெடைனநசள), ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் அவ்வாறு பெற்ற நிலங்களை ஐம்பதி லிருந்து நூறு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றன. 2010 டிசம்பரில் உத்தரப்பிரதேச மாநில அர சாங்கமானது ஓர் அறிவிக்கை வெளி யிட்டது. அதன்படி யமுனா எக்ஸ்பிரஸ் பாதை செல்லும் ஆறு மாவட்டங்களில் உள்ள 1187 கிராமங்களை, யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சி அதிகாரக் குழுமத்தின்கீழ் கொண்டு வந்தது. இப்பகுதியில் நகர்ப்புற மையங் களும் (ரசயெn உநவேசநள) தொழிற்பேட்டை களும் (iனேரளவசயைட யசநயள) கட்ட வேண்டும் என்பதே இக்குழுமத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ள பணியாகும்.

நொய்டாவிற்கும் கிரேட்டர் நொய்டா விற்கும் இடையில் உள்ள நிலங்கள் கையகப்படுத்துதலில் என்ன நடைபெற் றது என்பதை விளக்கினால் வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இப்பகுதியில் நிலத்தைக் கையகப் படுத்தும்போது, ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கும் விவ சாயிகளுக்குத் தலா 50 ரூபாய் என்கிற முறையில் தரப்பட்டது. ஆனால் இன்று, அதே இடத்தில் ஜே.பி.கம்பெனி 2500 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறது. இக் கம்பெனி இங்கே மனைகளை ஒரு சதுர மீட்டர் 15 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 50 ரூபாய்க்கு விவசாயிகளிட மிருந்து வாங்கி, அதே நிலத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறது.

இதுதான் விவசாயிகளைக் கோப மடைய வைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதை நெடுக, இவ்வாறு கடந்த ஓராண்டு காலமாக நிலங்களை விற்ற விவசாயிகள் தற்போது கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அலிகார் மாவட்டத்தில் தப்பால் என்னுமிடத்தில் 2010 ஆகஸ்டில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்திய சமயத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாகினர். மதுரா, ஆக்ரா மற்றும் கவுதம் புத் நகர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநில அரசாங்க மானது விவசாயிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் நிலங்களை கையகப் படுத்தி, அவற்றை ஜே.பி.அசோசியேட்ஸ் போன்று தங்களுக்கு வேண்டிய கம்பெனி களிடம் எக்ஸ்பிரஸ்பாதை அமைப்பதற் காக மட்டுமல்ல, நகரக் குடியிருப்புகள் (வடிறளோiயீள) மற்றும் பெரும் வணிக வளா கங்கள் (அயடடள) கட்டுவதற்கும் ஒப் படைத்துக் கொண்டிருக்கின்றது. தப்பால் கிளர்ச்சிகள் இவ்வாறு கையகப்படுத்தப் பட்ட நிலங்களை நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்காக, கம்பெனி ஒன்று பயன் படுத்த முன்வந்ததை அடுத்தே நடை பெற்றுள்ளன. கிரேட்டர் நொய்டாவுக்கும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பால்லி யாவுக்கும் இடையேயான 1,047 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் பாதை மற்றொரு மாபெரும் திட்டமாகும். இப்பாதையின் இரு மருங் கிலும் நகரக் குடியிருப்புகளும், தொழிற் பேட்டைகளும் கட்டப்படவிருக்கின்றன. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு, ஜே.பி. அசோசியேட்சுக்கும் மற்றும் பல தனியார் கம்பெனிகளுக்கும் ஒப் படைக்கப்படவிருந்தன. சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த இருந்தனர். இதில் மொத்தம் 1250 கிரா மங்கள் பாதிக்கப்படவும் அக்கிராமங்களி லிருந்த மக்கள் காலி செய்யப்பட்டு விரட்டியடிக்கப்படவும் இருந்தார்கள். இத்திட்டம் தொடர்பாக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஆட்சேபணைகள் தாக் கல் செய்திருப்பதால் இத்திட்டம் இன் னமும் தொடங்கப் படவில்லை.

இவ்விரு திட்டங்களிலுமே, சட்ட விரோத மூலதனம் (உசடிலே உயயீவையடளைஅ) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் விரு திட்டங்களையுமே மாயாவதி அர சாங்கம் ஒரேயொரு கம்பெனியிடம்தான் ஒப்படைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதையைப் பொறுத்தவரை, இந்தக் கம்பெனியானது அடுத்த 35 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய அளவில் நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்கும், விளை யாட்டு நகரம் அமைப்பதற்கும் நிலங்கள் இக்கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட் டிருக்கின்றன.

விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்து, பெரும் வர்த்தகச் சூதாடிக ளிடமும், ரியல் எஸ்டேட் முதலை களிடமும் ஒப்படைத்திடும் இந்தச் செயல் பட்டவர்த்தனமான பகற்கொள் ளையாகும். இவ்வாறு கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைப்பதும், அவர்கள் உரிய முறையில் மீளக் குடிய மர்த்தப்படுவதும், அவர்களின் மறுவாழ் வுக்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதும் மட்டுமல்ல, அவர்களின் நிலங்கள் கடைசியாக விற்கப்படுவதன் மூலம் கிடைத்திடும் லாபத்திலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டியதும் அவ சியமாகும்.

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இதுநாள்வரை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தச் சட்டமுன் வடிவையும்,மறுவாழ்வு மற்றும் மீளக்குடியமர்வுச் சட்டமுன்வடிவையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தவறிவிட்டது. இது உடனடியாக செய்யப்பட வேண்டும். ஆனால் அதுமட்டும் கார்ப்பரேட் நிறு வனங்கள் அடித்திடும் நிலப்பறிக் கொள் ளையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்த்துவிடாது. மாயாவதி அரசாங்கம் பின்பற்றும் இதே கொள்கையைத்தான் இடதுசாரி அல்லாத வேறு பல மாநில அரசாங்கங்களும் பல்வேறு படிநிலை களில் செயல்படுத்திக் கொண்டிருக்கின் றன. விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, மாநில அரசாங்கங்கள் அவற்றை ரியல் எஸ் டேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கும் நடைமுறைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, May 8, 2011

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட வழக்கு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக!

மத்திய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச் சாரத்தின்போது, ‘‘நாட்டிலேயே மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம்’’ என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மாநிலத்தை ‘‘கொலை நிலம்’’ (‘killing fields’)ஆக மாற்றிவிட்டது என்றும் கூறியவை ஆடி அடங்குவதற்கு முன்ன மேயே, 1995 டிசம்பரில் புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசிய சம்பவத்தில் மூளையாக இருந்து செயல் பட்ட கிம் டேவி அது தொடர்பாக அளித் துள்ள விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

1995ஆம் ஆண்டு டிசம்பர் 17 - 18 தேதிகளின் இரவில் ஒரு விமானம் முழு மையாக அபாயகரமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆகாயவழியே பறந்து வந்து மேற்கு வங்கம், புருலியா மாவட்டத் தில் ஆனந்த மார்க்கம் தலைமையகம் இருக்குமிடம் அருகே, ஆயுதங்களை வீசியது. இது தொடர்பாக கொல்கத்தா வில் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தின் முன், 2000 பிப்ரவரியில் மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகம் (சிபிஐ) சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அவ்வாறு வீசப்பட்ட ஆயுதங்களில் ஏகே-47 துப்பாக்கிகள் 500 வீசப்பட்டதென்றும், அவற்றில் 87 மட்டுமே கைப்பற்றப்பட்டன என்றும், அதேபோன்று மொத்தம் 15 லட்சம் சுற்றுக்கள் வெடிமருந்து மற்றும் பல் வேறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப் பட்டதில் மிகச்சிறிய அளவிற்கே கைப் பற்றப்பட்டன என்றும் கூறியிருக்கிறது. இந்த ஆயுதங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்றும், இவ்வாறு மாநிலத்தைக் ‘‘கொலை நிலமாக’’ மாற் றியது யார் என்றும் உள்துறை அமைச்சர் கூறுவாரா?

அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் கம்யூனிச எதிர்ப்பு வன்முறை நடவடிக் கைகளில் ஈடுபட்டு வந்த ஆனந்த மார்க் கம் என்ற அமைப்புக்காகத்தான் இந்த ஆயுதங்கள் வீசப்பட்டன என்பது விரி வான அளவில் நம்பப்பட்டது. அதுமட்டு மல்ல, மேற்படி ஆனந்த மார்க்கம் சார்பில் அச்சம்பவத்திற்கு முன்பு தோழர் ஜோதி பாசு அவர்களைக் கொலை செய்வதற்கு ஆனந்தமார்க்கிகள் முயற்சிகள் மேற் கொண்டு அது தோல்வியுற்றதையும் அறிவோம். சிபிஐ சமர்ப்பித்த அறிக்கை யில் மேலும், 1995 ஆகஸ்ட் 18 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேக னில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்தான் என்னென்ன ஆயுதங்கள் வாங்க வேண் டும் என்று இறுதிப்படுத்தப்பட்டது என் றும், இக்கூட்டத்தில் கிம் டேவியும்,பீட்டர் பிளீச் என்பவனும் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சதிச் செயலில் ஆறு நாடுகளைச் சேர்ந் தவர்கள் கலந்து கொண்டிருப்பதன் மூலம் இது ஒரு சர்வதேச சதிச் செயல் என்ற உண்மையும் புலனாகியிருக்கிறது.

ஆனந்தமார்க்க அமைப்பின் வெறித் தனமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத் திற்கு தீனி போடுவதற்காகத்தான் இவ் வாறு ஆயுதங்கள் வீசப்பட்டன என்று கூறும் அதே சமயத்தில், தற்போது கிம் டேவியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள், உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவ்வாறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவத்தில் மத் திய அரசும் உடந்தையாக இருந்திருக் கிறது என்று தெரிய வருகிறது. மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைப் பலவீனப்படுத்த வேண் டும் என்பதற்காக, வங்கத்தில் இவ்வாறு வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கை களை மேற்கொள்ள அன்றைய பி.வி.நர சிம்மராவ் தலைமையிலான மத்திய காங் கிரஸ் அரசாங்கம் தங்களை அனுமதித் தது என்று கிம் டேவி குற்றம் சாட்டியிருக் கி றான். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன் றத்திற்கும் 1996இல் தேர்தல்கள் நடக்க வேண்டியிருந்தது. டேவி மேலும் ஒருபடி சென்று, எப்படித் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்க ளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அங்கே ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முன்பு முயற்சி நடந்ததோ, அதேபோன்று வங்கத்திலும் ஒரு நிலைமையை உருவாக் கக் கோரப்பட்டது என்றும் கூறியிருக் கிறான்.

அப்போது ஏற்பட்ட மர்மமான சம் பவங்களின் அடிப்படையில் இவனது கூற்றுக்களை ஆய்வு செய்தோமானால் இன்றைய தினம் வரைக்கும் பல விஷ யங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் எம்ஐ5 (ஆஐ 5) போன்ற சர்வ தேச புலனாய்வு அமைப்புகளிடமிருந்து இது தொடர்பாக வந்த தகவலை இந்திய அரசு அக்கறையுடன் எடுத்துக் கொள்ளா மல் தற்செயலாக எடுத்துக் கொண்டது. இவ்வாறு சர்வதேச ஸ்தாபனம் ஒன்று உஷாராக இருக்குமாறு அனுப்பிய தக வலை இந்திய அரசோ மேற்குவங்க மாநில அரசுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தது. அந்தத் தபால் ஆயு தங்கள் வீசப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தான் மாநில அரசாங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதி யிலிருந்து ஒரு அயல்நாட்டு விமானம் நம் நாட்டின் வான்பாதைக்குள் நுழைய எப்படி அனுமதிக்கப்பட்டது? இவ்வாறு நுழைந்தது கவனிக்கப்படாமல் விடு பட்டுவிட்டது என்று கூறப்படுமானால், பின் அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளங்கக்கூடிய ஒரு ஆழ மான கவனக்குறைவாகும். ஆனால், அவ்வாறில்லாமல், அவ்விமானம் மத்திய அரசின் உடந்தையுடன்தான் நம் வான் பகுதிக்குள் வந்தது என்றால், அது அதை விட மிகவும் மோசமான விஷயமாகும். அது உண்மையாக இருக்குமானால், மத்திய அரசு மீது, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்ப டுத்திட வேண்டும் என்கிற அவா தொடர் பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின் றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை யாக இருக்கும் பட்சத்தில், மத்திய அர சாங்கமே நாட்டின் பாதுகாப்புக்குக் குந் தகம் விளைவிக்கும் விதத்தில், வெளி நாட்டு விமானத்திலிருந்து ஆயுதங் களைப் போட வைத்ததன் மூலம் மிகப் பெரிய மோசடியை அனுமதித்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசானது இத் தகைய முயற்சிகள் மூலமாக, நம் அர சியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங் களில் ஒன்றாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தையே அழித்திடக் கூடிய வகையில் செயல்பட்டிருக்கிறது என் றாகிறது. தன் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு வந்த மத்திய அரசாங்கமே தான், எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டதோ, அதே அரசியலமைப்புச் சட்டத்தினை அழித்திடத் தயாராகிவிட்டது என்றா கிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும். கொடிதிலும் கொடிய விஷயம் என்னவெனில், மேற்படி விமா னம் ஆயுதங்களை வீசியபின் இடை மறிக்கப்பட்டு மும்பை விமானத் தளத் தில் கீழிறக்கப்பட்டபோது, கிம் டேவி மிக வும் சுதந்திரமாக நடந்து செல்ல அனு மதிக்கப்பட்டிருக்கிறான். அவனுடன் வந்த கூட்டுக் களவாணியான பீட்டர் பிளீச் என்பவனும், அவனுக்கு உதவியாக வந்த மேலும் ஆறு பேரும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள்.

(இந்த ஆறு பேரும் லாட்வியர்கள். பின் னர் ரஷ்ய நாட்டுப் பிரஜா உரிமையைப் பெற்றனர்.) இந்த ஆறு பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பீட்டர் பிளீச் விசாரணை செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றான். ஆயினும் மிகவும் விசித்திரமான முறையிலும், விளக்கமுடி யாத வகையிலும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது பீட்டர் பிளீச்சை குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்று விடுதலை செய்திடத் தீர்மானித் தது. அவ்வாறு முடிவு எடுக்கும் சமயத் தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் திரிணாமுல் காங்கி ரஸ் தலைவியும் ஓர் உறுப்பினராக இருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளித்திட வேண்டும் என்று கோரிய மனுவை ஏற்றுக் கொள் வதற்கான பிரச்சனையே எழவில்லை என்று திரும்பத் திரும்ப அரசாங்கத்தால் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப் பட்டு வந்த பின்னணியில்தான் இவ் வாறு அரசாங்கம் முடிவெடுத்தது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரிய வேட்பு மனுவை, குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நிராகரித்து விட்டார் என்று அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, தில்லி உயர்நீதி மன்றத்தில் 2003 ஜூலை 3 அன்று தெரிவித்தார். ஆயினும், 2004 ஜனவரி 30 அன்று குடியரசுத் தலைவர் பீட்டர் பிளீச்சின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் 72(1)(பி) பிரிவின் கீழ் மீதமிருந்த தண்டனைக் காலத்தை கழித்தும், அவனை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஆணை பிறப்பித்து, ஆணை யின் நகலை மேற்கு வங்க உள்துறை செய லாளருக்கு அனுப்பி இருக்கிறார். இவ் வாறு பீட்டர் பிளீச், கொல்கத்தாவில் இந் திய சிறைகளில் எட்டு ஆண்டுகள் 30 நாட்களைக் கழித்த பின், அப்போது மத் திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியின் கீழான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். இக்குற்றத்துடன் சம்பந்தப் பட்ட கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொள் ளாமல் காலம் தாழ்த்தி வரக்கூடிய சூழ லில்தான், கைது செய்யப்பட்டு நீதிமன் றத்தால் தண்டிக்கப்பட்ட நபரை சுதந்தி ரமாக விடுவித்திடக்கூடிய நடவடிக்கை யும் எடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறாக, காங்கிரஸ் கட்சியும் பாஜக-வினால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜன நாயகக் கூட்டணியும்தான் இன்னமும் வெளியுலகத்திற்கு விளக்க முடியாத வகையில் விசித்திரமாகச் செயல்பட் டிருக்கின்றன. இன்றைய தினம் கிம் டேவி இவர்கள் குறித்துக் கூறியுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு இவர்களின் நடவடிக் கைகள் சான்றுகளாக அமையக்கூடிய விதத்தில் இருந்திருக்கின்றன.

இவ்வாறு வெளிநாட்டு விமானம் ஒன்று ஆயுதங்கள் வீசியதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கியிருந்த போதி லும், அப்போதைய காங்கிரஸ் அரசாங் கம் இது தொடர்பாக பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்துவிட்டு, இப்போது மேற்குவங்க தேர்தலில் திரிணா முல் காங்கிரசுடனான கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை சிதைப்பதற்காக இந்தத் தருணத்தில் இதனை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூச்சல் எழுப்புகிறது. டேவி யின் குற்றச்சாட்டுக்களை வெளிக் கொண்டு வந்த தொலைக்காட்சி அலை வரிசையின் கூற்றின்படி, இந்திய அர சாங்கம் தன்னை மீண்டும் இந்தியா விற்குக் கொண்டுவருவதற்காக நடவடிக் கைகளை நெருக்கியதை அடுத்தே, டேவி இவ்வாறு குற்றச்சாட்டுக்களைக் கூறி யுள்ளான் என்று தெரிவித்திருக்கிறது. 2010 ஏப்ரல் 27 அன்று ஊடகங்களில் வெளி யான செய்திகளின்படி, சர்வதேச அமைப்பான இண்டர்போல், டென்மார்க் அதிகாரிகள் புருலியா ஆயுதங்கள் வீசிய வழக்கின் மூளையாகச் செயல்பட்ட கிம் டேவியை இந்தியாவிற்கு அனுப்பி வைத் திடத் தீர்மானித்திருப்பதாக, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்குத் (சிபிஐக்கு) தெரிவித்திருந்தது. கிம் டேவி, இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு, இந்திய நீதிமன்றங்களின் முன் நிறுத்தப் பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டியது, இந்தியப் பாதுகாப்பின் நலன்களுக்கு அத்தியாவசியமானதாகும். அதே போன்று இது தொடர்பாக நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து தில்லு முல்லுகள் குறித்தும், அன்றைய மத்திய அரசாங்கம் அவற்றிற்கு உடந்தையாக இருந்ததா என்பது குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதே போன்று, இந்திய ஜனநாயகத்தின் நலன் கள் கருதி, பீட்டர் பிளீச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கக் காலத்தில், குடி யரசுத் தலைவரின் மன்னிப்புக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் குறித்தும் ஐயந் திரிபற பதிலளிக்கப்பட வேண்டும். இவ் வாறு அனைத்து சூழ்நிலைகள் குறித்தும் ஆய்வு செய்திட உடனடியாக ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்ட நடைமுறையை அழித்திடக்கூடிய வகையில் எவ்வித முயற்சி மேற்கொள்ளப்படுவதையும் அனுமதிக்கக்கூடாது.

தமிழில்: ச.வீரமணி

Saturday, May 7, 2011

வட மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகள்-தலித் மாணவர்களின் தொடரும் தற்கொலைகள்

புதுதில்லி, மே 8-
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். தந்தை பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் என்று கேட்பவர்கள் தமிழகத்தில் இன்றைக்கும் உண்டு. அவர்கள் வட மாநிலங்களுக்கு வந்து அங்கு தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு எதிராக, கிராமப்புறங்களில் மட்டுமல்ல, பெருநகரங்களாக விளங்கக்கூடிய தில்லியிலேயே கூட தொடரும் தீண்டாமைக் கொடுமைகளைப் பார்த்தார்கள் என்றால்தான் தந்தை பெரியார் போன்றவர்கள் தீண்டாமைக்கு எதிராகத் தமிழகத்தில் மேற்கொண்ட இயக்கங்களின் அருமை புரியும்.

தமிழகத்தில் இன்றைக்கும் கிராமப்பகுதிகளில்தான் பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளைப் பார்க்க முடியும். நகர்ப்பகுதிகளில் வெளிப்படையாக அவ்வளவாகத் தெரியாது. ஆனால் தில்லி உட்பட வடநாட்டின் நகர்ப்பகுதிகளிலும் அவை மிகவும் கொடூரமாகத் தலைவிரித்தாடுகின்றன. சர்மா என்றும், யாதவ் என்றும் சாதியை மட்டும் பெயர்களில் குறிப்பிடும் பழக்கம் இன்றளவும் இங்கு உண்டு.

பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணில் பிறந்த ஜஸ்பிரீத் சிங், ஒரு தலித் மாணவன். தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதைவிடப் பெரிய ஆசை ஒன்றும் அவனுக்குக் கிடையாது. ஜஸ்பிரீத் சிங் சண்டிகாரில் உள்ள அரசினர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான். நான்காண்டுகள் படிப்பை முடித்து இறுதி ஆண்டு வரை வந்துவிட்டான். அதுவரை எந்தப் பாடப்பிரிவிலும் அவன் தவறியதே கிடையாது. நன்கு மதிப்பெண்கள் எடுத்து சிறந்த மாணவனாக முன்னேறி வந்தான். ஆயினும். இறுதியாண்டு வரும்போதுதான் மிகவும் கொடூரமான முறையில் பழிவாங்கப்பட்டான்.

அவனது துறைத் தலைவர் அவனிடம் ’’நீ உன் சாதிச் சான்றிதழை வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்திருக்கலாம். ஆனாலும் டாக்டர் பட்டம் பெற்று உன்னை வெளியேற நான் விட மாட்டேன்.’’ என்று கூறினார். மருத்துவப் படிப்பில் மிகவும் முக்கிய பாடப்பிரிவான ‘கம்யூனிடி மெடிசன்’ என்னும் பாடப்பிரிவில் அவனை ‘பெயில்’ ஆக்கினார். அதன்பின் தான் ‘பாஸ்’ ஆகி வெளியேற முடியாது என்று தெரிந்து கொண்ட ஜஸ்பிரீத் சிங் தற்கொலை செய்து கொண்டான்.

இவ்விவரங்களை அவன் தன்னுடைய தற்கொலைக்கான காரணங்கள் குறித்து எழுதி வைத்துள்ள குறிப்பில் தெரிவித்திருக்கிறான். பின்னர் ஜஸ்பிரீத் சிங்கின் நண்பர்கள் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஜஸ்பிரீத் சிங்கின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்திட வைத்துள்ளனர். இதமைன மறு ஆய்வு செய்த ‘கம்யூனிடி மெடிசன்’ பாடப் பிரிவைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள், ஜஸ்பிரீத் சிங் மிக நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதைப் பார்த்து, அவனுக்கு ‘பாஸ்’ மார்க் வழங்கியுள்ளார்கள். ஆயினும் இன்றைய தினம் வரை இவ்வாறு ஜஸ்பிரீத் சிங் சாவுக்குக் காரணமான துறைத் தலைவர் மீதோ அல்லது அந்த நிர்வாகத்தின் மீதோ எந்த நடவடிக்கையும் அரசுத்தரப்பில் எடுக்கப்படவில்லை.

ஜஸ்பிரித் சிங்கின் சகோதரியும் தன் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்கிக் கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதேபோன்று, பால் முகுந்த் என்னும் மாணவன் புதுதில்லி, எய்ம்ஸ் எனப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான். அவனும் தற்கொலை செய்து கொண்டான். பால் முகுந்ந் தற்கொலைக் குறிப்பு எதுவும் வைக்க வில்லை என்றபோதிலும், அவனது பெற்றோர், தன்னை ஆசிரியர்கள் சாதியைச் சொல்லி வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும், தான் டாக்டரானபின் இவர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன் என்றும் கூறிக்கொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்.

‘இன்சைட் ஃபவுண்டேஷன்’ என்னும் தலித் மாணவர்கள் ஆய்வுக் குழு ஒன்று சமீபத்தில் புலனாய்வு மேற்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தலித் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 18 பேர் இவ்வாறு தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறது.

தாங்கள் ஆய்வு செய்தபோது இறந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேட்டி கண்டு அவற்றை, ‘யு ட்யூப்’ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர். ‘‘தகுதியின் மரணம்’’ (The death of Merit) என்னும் பெயரை தேடுபொறியில் தட்டச்சு செய்தால் இப்பேட்டிகளைக் காணலாம்.

(ச.வீரமணி)

Tuesday, May 3, 2011

தொழிற்சங்க இயக்கத்தின் ஓர் அணிகலன் -எம்.கே.பாந்தே



சுகுமால் சென்னின், “இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம்:1830-2000 ஆண்டு களில் உருவாகி வளர்ந்திட்ட இயக்கத்தின் வரலாறு” என்னும் நூலைப் படித்தவர்கள், இந்த நூலையும் படிப்பதில் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சுகுமால் சென் மிகவும் உழைத்து, உலகத் தொழிற்சங்க இயக்கம் உருவான விதத்தை யும் அதன் வளர்ச்சியையும் இதில் சித்தரித் துள்ளார். 2011 ஏப்ரல் 6 - 10 தேதிகளில் ஏதென்ஸ் நகரில், உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் (றுகுகூரு-றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16-வது மாநாடு (காங்கிரஸ்) நடைபெற்ற சமயத்தில் இந்நூல் வெளியிடப் பட்டது.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ், “இந்நூலானது வரலாற்றின் முக்கிய நிகழ்வு களை மிகவும் எளிமையாகவும், நேரடியாக வும், பொருள்பொதிந்த விதத்திலும் முன் வைக்க முயன்றிருக்கிறது. உலகில் பல நாடு களில் இயங்கும் தொழிற்சங்கங்களை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். இந்நூலின் குறிக்கோள், தொழிலாளர் வர்க்கம், புதிய நிலைமைகளுக்கேற்பத் தம்மை மாற் றியமைத்துக் கொள்ள ஊக்குவித்து, அவர் களைப் போராட்டத்தில் உருக்குபோன்று மேலும் வலுவாக மாற்றியமைத்திட வேண் டும் என்பதேயாகும்” என்று மிகவும் பொருத்த மாகத் தெரிவித்திருக்கிறார். இதன் காரண மாகத்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கவாதிகளால் இந் நூல் மிகவும் ஆர்வத்துடன் படிக்கப்படக் கூடியதாக இயற்கையாகவே அமைந்திருக் கிறது.

தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி

நவீன தொழிலாளர் வர்க்கத்தின் மூலவே ரைக் கண்டுபிடித்து, அதிலிருந்து தன் ஆய் வினை நூலாசிரியர் தொடங்குகிறார். இங்கி லாந்தில் 18ம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் தொடங்கிய தொழிற்புரட்சி, முதலாளித்துவச் சமுதாயம் உதயமாவதற்கான அடிப்படையை உருவாக்கியது. மிகப்பெரிய அளவில் உற்பத் தியில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை இயக்கிட ஆட்கள் அதிகமான அளவில் தேவைப்பட்டனர். அதுநாள்வரை விவசாயத் தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை முற்றிலு மாக துண்டித்துக்கொண்டு, தங்கள் உழைப்பு சக்தியைத் தவிர வேறெதுவும் இல்லாத வர்கள் இத்தகைய எந்திரங்களை இயக்கிட அமர்த்தப்பட்டனர். ஜவுளி, நிலக்கரி, இரும்பு மற்றும் ரயில் - சாலைப் போக்குவரத்துத் தொழில்களில் புதிதாக உருவாகியிருந்த முத லாளித்துவ வர்க்கத்திடம் இத்தொழிலாளர் கள் தங்கள் ஜீவனத்திற்காகத் தங்கள் உழைப்பு சக்தியை விற்றனர்.

சுகுமால் சென் சுட்டிக்காட்டுவதுபோல், தொழில் மையங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலைமைகள், தொழிலாளர்களை, தங் களது பிரதான எதிரி இந்த எந்திரங்கள்தான் என்றும், எந்திரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம்தான் தாங்கள் சுரண்டப்படுவதைத் தடுத்திட முடியும் என்றும் நினைக்க வைத்தன. 1752இல் தொழிற்சங்கங்கள் மெல்ல மெல்ல உருப்பெறத் தொடங்கின. ஆனால் வளர்ந்து வரும் தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கிடக் கூடிய வகையில் தொழிலாளர் விரோத சட் டங்களும் (யவேi-உடிஅbiயேவiடிn டயறள) இயற்றப்பட் டன. தொழிலாளர் வர்க்கத்தை விரிவான அள வில் ஒன்றுதிரட்ட 19ஆம் நூற்றாண்டின் மத் தியவாக்கில் உருவான சாசன இயக்கம் எப் படியெல்லாம் உதவியது என்பதை ஆசிரியர் இந்நூலில் நன்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி யடைந்ததை அடுத்து, தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு புதிய தொலைநோக்குப் பார்வை கிடைத்தது. சுகுமால் சென், இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில், சிவப்பு சர்வதேச தொழிலாளர் சங்கங் கள் (சுஐடுரு-சுநன ஐவேநசயேவiடியேட டிக டுயbடிரச ருniடிளே) ஆற் றிய பங்களிப்பினை மிகவும் விரிவான வகை யில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சுகுமால் சென் இந்நூலில் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிக்க கண்டங்களில் அப்போது காலனிகளாக இருந்த நாடுகளில் வளர்ந்து வந்த தொழிற் சங்க மற்றும் அரசியல் இயக்கங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நாடுக ளில் தொழிற்சங்க இயக்கங்களும் தேசிய விடுதலை இயக்கங்களும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக ஒத்துழைப்பு நல்கி முன்னேறிக் கொண்டிருந்தன. மேலும் தொழி லாளர் வர்க்க இயக்கத்தில் சோசலிச சிந் தனை வளர்ச்சி வலுவாக வளர்ந்து வந்ததை யும் உய்த்துணர்ந்திருக்கிறார். இந்தியாவில் இத்தகு வளர்ச்சிப்போக்கு இருந்ததை ஆசிரி யர் சிறப்பு அழுத்தம் கொடுத்து விவரித் திருப்பது இயற்கையே.

செம்படையின் வீரஞ்செறிந்த போராட்டம் தான் பாசிசத்தை துடைத்தெறிந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்து, அங்கெல் லாம் மக்கள் ஜனநாயக அரசாங்கங்களை அமைத்தது. இது, உலக வரைபடத்தைக் கணிசமான அளவிற்கு மாற்றி, தொழிற்சங்க இயக்கத்தில் ஒற்றுமைக்கு ஆதரவான நிலை மையினை உருவாக்கியது.

இந்தப் புத்தகம் 1949இல் சீனாவில் நடை பெற்ற புரட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் கொரியப் புரட்சியின் வெற்றி ஆகியவை எப்படி உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு உதவியாக இருந்தது என் பதை விளக்குகிறது. கியூபா புரட்சியின் வெற்றி உலக அளவில் தொழிலாளர் வர்க்க இயக்கத் தினை மேலும் வலுப்படுத்தியது. உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் உலகின் பல முனைகளிலும் புரட்சிகரத் தொழிலாளர் வர்க்க இயக்கம் மேற்கொண்ட உறுதியான போராட்டங்களின் மூலம் வலுப்பட்டது.

சம்மேளனம் மீண்டும் போர்க்குணமுடையதாக மாறுதல்

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம், 2005 டிசம்பரில் ஹவானாவில் நடைபெற்ற தன்னுடைய 15-வது மாநாட்டுக்குப்பின் எப்படி மீண்டும் போர்க்குணமுடையதாக மாறியிருக்கிறது என்பதையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு குணாம்சத்தையும், வர்க்கப் போராட் டக் கொள்கையையும் தன்னுடைய அடிப் படை அணுகுமுறையாக எப்படி மீண்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார். தற்சமயம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலை மையகம் பிரேக்கிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு மாறியிருக்கிறது. மேலும் தன் நடவடிக்கை களைப் புதுப்பித்திடவும் துல்லியமான நட வடிக்கைகளை சம்மேளனம் எடுத்திருக்கிறது.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் தற்போது ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதி ரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் எடுக்கத் தொடங்கியிருப்பதை, சுகுமால்சென் இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சம்மேளனம் இயங்குவதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் குறைந்த நிலையில் இருந்தபோதிலும், உல கம் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் இன் றைய தினம் மிகவும் நம்பிக்கையுடனும் தீர் மானகரமான உறுதியுடனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

புத்தகத்தின் இறுதியில், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு சமூகத் தொலை நோக்குப் பார்வை இருக்க வேண்டியன் அவ சியத்தை சுகுமால் சென் அடிக்கோடிட்டிருக் கிறார். முதலாளித்துவ அமைப்பு தனக்கேற் பட்டுள்ள கடும் உலகப் பொருளாதார நெருக் கடியின் காரணமாக வீழப்போவது உறுதி என்று ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். உலக வங்கி - சர்வதேச நிதியம் ஆகியவற் றின் கட்டளைகளின் மூலமாக, உலக முதலா ளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க் கைத்தரத்திற்கு எதிராகக் கடுமையான தாக் குதல்களைத் தொடுத்திருக்கின்றன. ஆயி னும், உலகத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்து முறியடித்து, உலக முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவதில் முன்னணிப் பாத் திரம் வகிக்கும் என்று மிகவும் நம்பிக்கை யுடன் சுகுமால்சென் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

உலகத்தொழிற்சங்க இயக்கத்தில் நடை பெற்ற பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிப் போக்கு களை சுகுமால்சென் இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். உலகம் முழுதும் உள்ள தொழிற்சங்க முன்னணி ஊழியர் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய புத்தகமாக இது திகழ்கிறது.

இவ்வாறு, சுகுமால் சென் எழுதியுள்ள சர் வதேச தொழிலாளர் வர்க்க இயக்கம் என்னும் நூல் தொழிற்சங்க இயக்க இலக்கிய வரிசை யில் மேலும் ஒரு மதிப்புமிக்க அணிசேர்க்கை யாக விளங்குகிறது.

தமிழில்: ச.வீரமணி