Showing posts with label Wikileaks expose US. Show all posts
Showing posts with label Wikileaks expose US. Show all posts

Saturday, March 26, 2011

விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் : அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்த மன்மோகன் அரசு! -- பிரகாஷ் காரத்

ந்தியாவில் இருக்கின்ற அமெ ரிக்கத் தூதரக அதிகாரிகள் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள கேபிள்கள் வெளியாகி இருப்பது, ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான குறிப்பிடத் தக்கதொரு தாக்குதலேயாகும். ஒரே வரி யில் சொல்வதென்றால், இவை வெளிப் படுத்தியுள்ள விவரங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் காலத்திலேயும் சரி, அதற்கு முன்பிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காலத்திலேயும் சரி, இரு நாடுகளுக்கும் இடையிலிருந்த உறவு முறையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர கத்தால் அனுப்பப்பட்டுள்ள கேபிள்களை தி இந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் மூலமாகத் தற்சமயம் வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறது. இதுவரை அது வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் மிகுந்த மோசமான சித்திரத்தை அளித்துள்ளன. அமெரிக்கா, நம் நாட்டின் ராணுவ விவகாரங்கள், அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள் கைகளின் மீது செல்வாக்கான நிலைப்பாட் டினைக் கொண்டிருப்பது அவற்றிலிருந்து தெரிய வருகிறது. அமெரிக்காவானது நம் நாட்டின் அதிகாரவர்க்கம், ராணுவம், பாது காப்புத்துறை மற்றும் உளவுப் பிரிவுகளின் அனைத்து மட்டங்களிலும் மிகவும் வெற்றி கரமாக உள்நுழைந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளது இவற்றிலி ருந்து நன்கு வெளிப்படுகிறது. கேபிள்கள் பிரதானமாக 2005 முதல் 2009 வரையி லான கால கட்டத்தினை உள்ளடக்கி இருக் கிறது. பொதுவாக இக்காலகட்டமானது ஐ.மு. கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட காலமாகும்.

அயல்துறைக் கொள்கை: தலைகீழ் மாற்றம்

மன்மோகன் சிங் அரசாங்கமானது, சுயேச்சையான அயல்துறைக் கொள் கைப் பின்பற்றப்படும் என்று தன்னுடைய குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறியிருந்ததிலிருந்து பின்வாங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். இவ்வாறு அரசாங்கம் அயல்துறைக் கொள்கையில் பின்வாங்கியவுடன் அத னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்க வேண்டிய தாயிற்று. இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசாங் கம் பின் வாங்கியபின், அவை எப்படி அமல்படுத்தப்பட்டன என்பது அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களில் இருந்தும், புஷ் நிர்வாகத் தின் உயர்மட்ட அதிகாரிகளின் செயல்பாடு களிலிருந்தும் நன்கு தெரியவருகிறது. 2005 செப்டம்பரில் சர்வதேச அணுசக்தி முகமை (ஐஹநுஹ-ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல) முன்பு ஈரானுக்கு எதிராக மன்மோ கன் சிங் அரசாங்கம் வாக்களித்ததானது அதன் கொள்கைகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றா கும். இவ்வாறு அரசாங்கத்தின் கொள்கை களில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு எப்படியெல்லாம் அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்தம் அளித்தது என்பதை விக்கி லீக்ஸ் கேபிள்கள் தெளிவுபடுத்துகின்றன. ஈரானுக்கு எதிராக உறுதியான நிலைப் பாட்டினை இந்தியா மேற்கொள்ளவில் லை என்றால் அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றாது என்று இந்திய அரசாங்கத்திற்குக் கூறப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் ஐ.நா. பொது சபையின் அமர்வு நடைபெற்ற சமயத்தில் செப்டம்பர் 13 அன்று புஷ்சுக்கும் மன்மோகன் சிங் கிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னர், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் மீது கடுமையான நிர்ப்பந்தம் கொண்டு வரப் பட்டிருந்தது. மன்மோகன்சிங்கிற்கும் புஷ்சிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத் திற்குப் பின்னர்தான், வியன்னாவில் இருந்த இந்தியத் தூதருக்கு சர்வதேச அணுசக்தி முகமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகும்படி அறி வுரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சர்வ தேச அணுசக்தி முகமையில் வாக்கெடுப்பு நடைபெற்றபின் அமெரிக்கத் தூதர் அனுப்பியுள்ள ஒரு கேபிளில் இந்தியா வின் நிலை குறித்துக் குறிப்பிடுகையில், ‘‘ஒரு வலுவான அமெரிக்க - இந்திய உறவு முறையைக் கட்டமைப்பதற்காக ஐ.மு.கூட்டணி அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மிக முக்கியமான சமிக்ஞையை இது அளித்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி அமெரிக்க அரசாங்கம் இந்தி யாவை நேபாளம், இலங்கை மற்றும் வங் கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து சென்றிட வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பல கேபிள்கள் வெளிப்படுத்துகின்றன. அமெ ரிக்காவின் வழிகாட்டுதலின்கீழ் இஸ்ரேலு டன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத் திக் கொண்டுள்ளதையும் அவை நன்கு புலப்படுத்துகின்றன.

‘இந்திய அதிகாரிகள் இந்தியாவும் அமெரிக்காவும் அயல்துறைக் கொள்கை களில் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கியபோதிலும்’ அமெரிக்காவின் அயல்துறைக் கொள் கையுடன் ‘‘முழுமையாக ஒத்துப்போகக் கூடிய’’ வகையில் இந்தியாவின் அயல் துறைக் கொள்கை முழுமையாக மாற்றி யமைக்கப்படுவதில் வெற்றி பெற்றுவிட்ட தாக, தூதரகத்திலிருந்து அனுப்பப்பட் டுள்ள கேபிள் ஒன்று புளகாங்கிதம் அடைந்து தெரிவித்துள்ளது.

ராணுவத்தில் ஒத்துழைப்பு
அமெரிக்காவின் செல்வாக்கு, அடுத்து அதிகமான அளவில் இடம்பெற்றுள்ள பகுதி ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை களில் ஏற்பட்டுள்ள கூட்டுறவாகும். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2005 ஜூனில் அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (குசயஅநறடிசம ஹபசநநஅநவே டிn னுநகநnஉந ஊடிடியீநசயவiடிn) கையெழுத்திட்டுள்ளது. அப்போது இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வாஷிங்டன்னுக்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களிடம் தெரிவிக்கையில், ‘‘இது வெறும் ஓர் ஆய்வுப் பயணம்தான்’’ என்று குறிப்பிட்டார். ஆனால் இது தொடர் பாக அமெரிக்கத் தூதர், அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பெல் டுக்கு அனுப்பியுள்ள கேபிள் அவரது நிகழ்ச்சிநிரலைத் தெளிவாகத் தெரிவித் துள்ளது. அப்போதுதான் மேற்படி பாது காப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தா கியது. இந்தியா மற்றொரு நாடுடன் இத் தகைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடு வது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பின் முழுப் பரி மாணத்தையும் இது தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்க அர சாங்கத்தின் ராணுவ மையமான பென்ட கனும் இவ்வாறு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒப்பந்தம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை யும் திட்டமிடலையும் மேற்கொண்டு வந் திருக்கிறது.

உளவுப்பிரிவுகளிலும் ஒத்துழைப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக் குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறைகளில் உயர்நிலை அள வில் வளர்ந்து வந்த ஒத்துழைப்பினை கேபிள்கள் தெளிவு படுத்துகின்றன. அப் போது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் அமெரிக்க அரசால், அந்நாட்டின் உளவுப் பிரிவுக ளான எப்பிஐ (FBI) மற்றும் சிஐஏ (CIA) போன்ற நிறுவனங்களுடன் மிக உயர்ந்த அளவிற்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முக்கிய நபராகப் பார்க்கப்பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் உளவு அமைப்புகளி லும், பாதுகாப்புத்துறை அமைப்புகளிலும் எந்த அளவிற்கு அமெரிக்கர்கள் ஊடுருவி யிருக்கின்றனர் என்பதை அனுப்பப்பட் டுள்ள கேபிள்களை மேலோட்டமாகப் பார்த் தாலே தெரிந்துகொள்ள முடியும். பிரிட்டிஷ் நாளேடான தி கார்டியன், முதலில் 40 கேபிள்களை வெளியிட்டது. அவற்றில் இரண்டு கேபிள்கள் முறைகேடான தொடர் புகள் குறித்தவைகளாகும். ஒன்றில், நம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோச னைக் குழு உறுப்பினர் ஒருவர், அமெரிக் கத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்தித்து, இந்தியாவில் ஈரானியர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியத் தக வல்களை அளிக்கிறார். அதற்குப் பிரதி பலனாக அவர் அமெரிக்காவிற்குப் போய் வர ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மற் றொன்றில், நம் நாட்டில் உள்ள பயங்கர வாதம் தொடர்பான தகவல்களை அதிகாரப் பூர்வமாகப் பெறுவதை விட, தில்லி காவல் துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரியிடமிருந்து நேரடியாகவே பெற் றுக் கொள்ளலாம் என்று தூதரகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள கேபிள் களில் ஒன்று, 2006இல் நடைபெற்ற மத் திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர் பானது. இதில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ‘கெயில்’ (GAIL) நிறுவனத் தில் பணிபுரியும் ‘‘நம் தொடர்பாளர்’’ என்று ஒருவர் குறித்து குறிப்பிடுகிறது. இவ்வாறு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிள்களிலிருந்து அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிலிருந்து மட்டுமல்ல, அரசின் பல்வேறு அமைச்சகங்களிலிருந்தும் மற் றும் நிர்வாக எந்திரங்களிலிருந்தும் தக வல்களைப் பெற்றிருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

ஊடுருவலும் ஒற்றாடலும்

இரு நாடுகளுக்கும் இடையிலான உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ப தானது அமெரிக்கர்கள் ஊடுருவலுக்கு நன்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. அமெ ரிக்காவிற்காக ஐந்தாம்படை வேலை பார்த்த இரு ஒற்றாடல்கள் தெரிய வந் திருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிக்காலத்தில், ரவீந்தர் சிங் என்கிற நபர், அமெரிக்காவின் சிஐஏவால் நம் நாட்டின் ‘ரா’ (RAW)அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அமெ ரிக்காவுடனான தொடர்பு அம்பலமானவு டன், சிஐஏ-இன் உதவியுடன் அமெரிக்கா விற்குப் பறந்தோடி விட்டார். அதேபோன்று ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் பணி யாற்றிய விஞ்ஞானி (SYSTEMS ANALYST) ஒருவரும், சிஐஏ-ஆல் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவைச் சார்ந்திருப்பது என்பது 2005-2008 கால கட்டத்தில் அதிகரித் திருப்பதை கேபிள்கள் தெளிவாக்குகின் றன. அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத் தின் மூலம் தன் நாட்டின் அனைத்து நலன்களையும் இந்தியாவை ஏற்க வைப் பதற்கு, அரசாங்கத்தின் ஒவ்வொரு கண் ணியையும் பயன்படுத்திக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரா னுக்கு எதிராக 2005 செப்டம்பரிலும் அத னைத் தொடர்ந்து 2006 பிப்ரவரியிலும் வாக்களித்தபின், 2006இல் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டம் ஒன்று, அமெரிக்கா விரும் பியதைப் போல துர்க்மெனிஸ்தான் - ஆப் கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தில் இணைந்து கொள் ளத் தீர்மானித்தது. அமெரிக்கர்களால் கோரப்பட்டதுபோல் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய்வழித் திட்டத்தை குப் பைத்தொட்டியில் தூக்கிப் போடுவதற்கான தொரு தெளிவான சமிக்ஞையாக இது அமைந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் நம் நாட்டின் ராணுவத்திலும் மற்றும் பல் வேறு பாதுகாப்பு அமைப்புகளிலும் இரு நாடுகளும் கூட்டாகப் பயிற்சிகள் மேற் கொள்வது குறிப்பிடத்தக்க அளவில் அதி கரித்தது. அமெரிக்காவின் கப்பல் படை யைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் நம் நாட்டின் துறைமுகங்களிலும் விமானத் தளங்களிலும் வந்து எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவும், அவற்றை இயக்கிக் கொள்ளவும், மற்றும் பல்வேறு பணி களைச் செய்துகொள்ளவும் அனுமதித்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதையும் கேபிள் கள் தெளிவுபடுத்துகின்றன. மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்பந்தத்திற் கான வரைவு தாக்கல் செய்யப்படுகையில், இடதுசாரிக் கட்சிகள் இதனைக் கடுமை யாக எதிர்த்தன.

காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துதல்

2006இல் மத்திய அமைச்சரவை விரி வாக்கம் செய்யப்பட்ட சமயத்தில், தனக்குச் சாதகமான நபர்களை அமைச்சர்களாக் கிடக்கூடிய வகையில் காங்கிரஸ் கட்சியின் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்தி யதை மற்றொரு கேபிள் வெட்டவெளிச்ச மாக்குகிறது. அமைச்சரவை மாற்றியமைக் கப்படுவது தொடர்பாக அமெரிக்கத் தூதர் மதிப்பிட்டிருப்பதாவது: ‘‘அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபின் அமைந்துள்ள அமைச்சரவையானது, இந்தியாவிலும் (ஈரானிலும்) அமெரிக்காவின் குறிக்கோள் களை நிறைவேற்றக் கூடிய வகையில் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது.’’ அந்த அறிக்கையில் மிகவும் வலுவான அமெரிக்க ஆதரவு அமைச்சர்கள் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. முரளி தியோரா, கபில் சிபல், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகிய ஐவருமே அவர்களாவார்கள். மாற்றியமைக்கப்பட் டுள்ள அமைச்சரவை குறித்து இடதுசாரி கள் சீற்றம் அடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை சரியாகக் குறிப்பிட்டிருக் கிறது. மேலும் அந்த அறிக்கையில், ‘‘இவ் வாறான அமைச்சரவை மாற்றம், அமெ ரிக்கா பக்கம் அரசு சாய்ந்துகொண்டிருப்ப தையே காட்டுகிறது என்று கூறி இடது சாரிகள் காங்கிரசிடம் கொண்டிருந்த நட்புற வினை முறித்துக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மேலும் ஐ.மு.கூட்டணி அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களையும் அயல்துறைக் கொள்கை தொடர்பான முன்முயற்சிகளையும் எதிர்க் கத் தொடங்கிவிட்டார்கள். அவை வர விருக்கும் காலங்களில் அரசியல் வான வேடிக்கைகளை அளித்திடும்’’ என்றும் உய்த்துணர்ந்திருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றியமைக் கப்பட்டு, அவருக்குப் பதிலாக முரளி தியோரா அமர்த்தப்பட்டது தொடர்பாக தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க அமெரிக்கத் தூதர் தயங்கவில்லை. மணி சங்கர் ஐயர் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய்வழித் திட்டத்திற்கு முன்முயற்சிகள் எடுத்ததும், சீனத்திற்குச் சென்று வந்ததும்தான் அமெ ரிக்காவின் கோபத்திற்குக் காரணமாகும். மாறாக அவரது இடத்தில் அமெரிக்க ஆதர வாளரும், பெரும் முதலாளிகளுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவருமான முரளி தியோரா அமர்த்தப்பட்டது வெகு வாகப் புகழப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், அரசின் ஒவ்வொரு துறையிலும் செல் வாக்கு செலுத்தவும், ஊடுருவிடவும் அமெ ரிக்கர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டி ருக்கின்றன. இவ்வாறு தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டமைக்காக அமெரிக்கர்களைக் குறைகூறுவதில் பயனில்லை. மிகவும் சரி யாகச் சொல்வதென்றால், ஐ.மு.கூட்டணி அரசாங்கம்தான் 2007இல் தேர்வு செய் யப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அமெரிக் காவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழ கங்களில் பயிற்சித் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி யுள்ளது. அவர்கள் சிவில் ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது ராணுவத்தின் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனை வரும் அமெரிக்கா சென்று பயிற்சி எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

அரசியலில் ஊழல்

இந்தியாவின் அரசியலமைப்பு முறை யில் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்களை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவ தைப் பல கேபிள்கள் படம்பிடித்துள்ளன. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கு, மிகப் பெரிய அளவில் பணம் பயன்படுத்தப்பட் டது தொடர்பான கேபிளானது அமளி ஏற் படக் காரணமாக அமைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு மன்மோகன்சிங் அரசாங்கம் எதை வேண் டுமானாலும் செய்திட வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏனெனில் அப்போதுதான் அணுசக்தி ஒப் பந்தத்தை செயல்படுத்திட முடியும். எந்த வழிமுறையாக இருந்தாலும் - அது நேர் மையானதா அல்லது நெறிபிறழ்ந்ததா என்பது பற்றி - அமெரிக்காவிற்குக் கவ லையில்லை. அனைத்தும் அதற்கு ஏற்பு டையதுதான். சென்னை தூதரக அலுவல கத்திலிருந்து சென்றுள்ள ஒரு கேபிள், திமுக, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போதும், மதுரை மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்த லின்போதும் எப்படி எல்லாம் வாக்காளர் களுக்குப் பணம் விநியோகித்தது என் பதை மிகவும் துல்லியமாக அனுப்பியிருக் கிறது. இவ்வாறு நம் நாட்டின் அரசியலில் ஊழல் அரசியல்வாதிகள் யார் யார் என் பதையும் அவர்களை எப்படியெல்லாம் வாங்கிட முடியும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறிந்து வைத்திருந்தது.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக விருந்த சமயத்தில் நாட்டில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் எந்த அள விற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டின என் பதை பல கேபிள்கள் தெளிவாக்குகின்றன. அணுசக்தி ஒப்பந்தமானது நம் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, அமெ ரிக்காவின் நலன்களையே அதிகமான அளவில் முன்னெடுத்துச் செல்லும் என்ப தால் அது எப்படியும் கையெழுத்தாகிவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த தற்குப்பிறகு ஏற்பட்ட மாபெரும் விஷய மாக அணுசக்தி ஒப்பந்தத்தை பிரதமர் மன் மோகன் சிங்கும் அவரைச் சுற்றியுள்ள கும்பலும் பார்த்தன. அணுசக்தி ஒப்பந்த மானது, தன் நாட்டின் ஒருசில பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டக்கூடிய வெறும் வணிகப் பயன்பாடாக மட்டும் அமெரிக்கா பார்க்கவில்லை, மாறாக இந்தியாவை தன் னுடைய கேந்திரமான ராணுவக் கூட்டாளி யாகவும் மாற்றிடக் கூடிய ஒன்று என்பதை பல கேபிள்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

பிரதமரும் காங்கிரஸ் தலைமையும் நாட்டை அடகு வைத்து இவ்வாறு ஒப்பந் தம் செய்துகொள்கிறோமே என்று கொஞ் சம்கூட கூச்சநாச்சம் எதுவுமின்றி இந்த ஒப்பந்தத்தைச் செய்திட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள், அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்தக் கேபிள்கள் சரிபார்க்கத்தக்கதல்ல என்றும் அவற்றை அதிகாரப்பூர்வமான தாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர் பாக அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய அயல் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கேபிள்கள் கசிவு குறித்து எச்சரித்திருப்பதோடு, அவற் றால் ஏற்படக்கூடிய தர்மசங்கடமான நிலை மைகள் குறித்தும் பேசியிருப்பதிலிருந்து இது ஒரு பரிதாபகரமான சாக்குப்போக்கு தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை நாட்டை எந்த அளவிற்கு அமெ ரிக்காவின் காலடியில் வைத்திருக்கிறது என் பதை மிகவும் துயரார்ந்த முறையில் விக்கி லீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழில்: ச.வீரமணி

Monday, December 6, 2010

அமெரிக்க அரசின் முகத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்




விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க அரசின் சுமார் நான்கு லட்சம் ரகசிய யுத்த ஆவணங்களை முன்பு வெளிப்படுத்தி இருந்தது. இப்போது அமெரிக்க அரசாங்கம் உலகம் முழு வதும் உள்ள தன் தூதரகங்களுக்கு கம்பி வழித் தந்தி மூலம் அனுப்பி வைத்த இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் சமீபத்தில் பிப்ரவரியில் அனுப்பி வைத்தவைகளும் அடங்கும். இவை, மீண்டும் ஒருமுறை, அமெரிக்க ஏகாதி பத்தியம் உலகம் முழுவதும் தன் மேலா திக்கத்தை நிறுவிட, பழிபாவத்திற்கு அஞ்சாது எந்த நிலைக்கும் தாழ்ந்திடும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக் கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவ ணங்கள் இராக்கிலும் ஆப்கானிஸ் தானத்திலும் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் அதன் கொடூர முகத்தை வெளிப்படுத்தியது. இப்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக்கும் ஆவணங்கள், அமெரிக்கா பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங் களில் எப்படியெல்லாம் தலையிட்டிருக் கிறது என்பதைக் காட்டுகின்றன.

இதில் மிகவும் கண்டனத்திற்குரிய செயல்பாடு எதுவெனில், அமெரிக்க அர சின் அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட ஐ.நா. உயர்மட்ட அதிகாரிகள் அனைவர் நடவடிக்கைகள் குறித்தும் உளவு பார்க்க வேண்டும் என்று கட்ட ளையிட்டிருப்பதுதான். ஐ.நா. மீது உளவு பார்ப்பது தடை செய்யப்பட்டு பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் இருப்பதை நினைவுகூர்தல் வேண்டும். தனிநபர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து 1946ஆம் ஆண்டு ஐ.நா. கன் வென்ஷன் கூறுவதாவது: ‘‘ஐ.நா. ஸ்தா பன வளாகம் மிகவும் புனிதமான இட மாகும். ஐ.நா.வின் சொத்துக்களும் உட மைகளும் அவை எங்கே நிறுவப்பட் டிருந்தாலும், யாரால் பேணப்பட்டு வந் தாலும், அவை நிர்வாகத் தரப்பின ராலோ, நீதித்துறையினராலோ அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்ற நடவடிக்கை களாலோ சோதனை செய்யப்படுவதி லிருந்தும், பறிமுதல் செய்யப்படுவதி லிருந்தும், விலக்களிக்கப்பட்டவை களாகும்.’’

இவற்றை முற்றிலுமாக மீறக்கூடிய விதத்தில் கிளிண்டன் ரகசிய தந்திச் செய்திகள் மூலமாக, ஐ.நா. உயர் அதி காரிகளின் கிரெடிட் கார்டு எண்கள், அவர்கள் பயணம் செய்யும் விமானங் களின் எண்கள், கைரேகைகள், டிஎன்ஏ சோதனை விவரங்கள் உட்பட அனைத் தையும் சேகரிக்குமாறு கட்டளையிட்டி ருக்கிறார். அவை மட்டுமல்ல, அவற்றின் ரகசிய சங்கேதச் சொற்கள், சங்கேதக் குறியீடுகள், கணினியின் செயல்பாடு கள் ஆகியவை குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருப்பது என்பதும் நிச் சயமாக அமெரிக்கா, சர்வதேச அளவில் ஒரு தாக்குதலைத் தொடுக்கத் தன் னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக் கிறது என்கிற சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

லண்டன் கார்டியன் எழுதியிருப்ப தாவது: ‘‘ஞாயிறு அன்று வெளியாகி இருக்கும் அமெரிக்க அரசின் கம்பி வழித் தந்திச் செய்திகள் எப்படி அமெரிக்கா தன்னுடைய தூதரகங்களை, உலகத்தை வேவுபார்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப் படுத்துகின்றன.’’ மேலும் அது கூறு கிறது: ‘‘ஹில்லாரி கிளிண்டன் பெயரி லும் அவருக்கு முன் அயல்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்த கண் டோலிசா ரைஸ் பெயரிலும் வெளியாகி யுள்ள செய்திகள், தங்கள் தூதரக அதி காரிகளை, தாங்கள் உள்ள நாடுகளில் உள்ள ராணுவத் தளங்கள், ஆயுதங் களின் விவரங்கள், அரசியல் தலைவர் களின் வாகன விவரங்கள் ஆகியவற்றை யும் சேகரித்திடுமாறு கேட்டுக்கொண் டிருக்கின்றனர்.’’ இந்தக் குற்றச்சாட்டுக் களின் மேல் அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கார்டியன் வினவிய போது, அவர், ‘‘அமெரிக்கத் தூதரக அதி காரிகள், உளவு வேலைகளைச் செய்திட அமர்த்தப்படவில்லை’’ என்று கூறி அவற்றை மறுத்திருக்கிறார். ஆயினும் அமெரிக்கா, உளவு வேலைகளையும் வேவுபார்க்கும் வேலைகளையும் தூதரக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதுகிறது என்பது தெளிவாகும்.

ஹில்லாரி கிளிண்டன் ஒருபடி மேலேயே சென்று, ‘‘நாட்டின் மிக முக் கியமான தகவல்கள் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பதற்கு’’ கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முக்கிய மான தகவல்கள் சட்டவிரோதமாக ‘‘வெளியாகி’’ இருப்பதற்குத்தான் அவர் கண்டனம் தெரிவித்திருப்பதையும், ஆனால் அவற்றின் ‘‘சாராம்சங்கள்’’ குறித்து அல்ல என் பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ள ஹில்லாரி கிளிண்டன், அதைச்சொன்ன அதே மூச்சில், ‘‘அமெரிக்க நிர்வாகம், உலகப் பொருளாதாரத்தை நன்னிலைக்குக் கொண்டு செல்வதற்காகவும், சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற் காகவும், அழிவுதரும் ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகவும், மனித உரிமைகளை யும் மண்ணின் மாண்புகளையும் முன்னேற்றுவதற்காகவும் ஒரு வலுவான அயல்துறைக் கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக் கிறது’’ என்றும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அரசின் கொள்கைகள் உன்னதமானது எனில், அது ஏன் இத்த கைய இழிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும்? இதற்கு ஹில்லாரி கிளிண்டன் அளித் துள்ள பதிலிலேயே காரணங்கள் காணப் படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத் தியத்தைப் பொறுத் தவரை, மண்ணின் மாண்புகள் என்றால், அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்துதல் என்று பொருள். மனித உரிமைகள் என்றால் அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்திடும் நபர்களின் மனித உரிமைகள் என்று பொருள். இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் முத லான நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களின் மனித உரிமைகள் ஒழித்துக் கட்டப்பட்டிருப்பது குறித்து அதற்கு சிறிதளவும் கவலை கிடையாது.

அமெரிக்க ரகசிய ஆவணங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைதி நடவடிக்கைகளில் அமெரிக்காவின் செயல்பாடுகளில் உள்ள இரட்டை வேடத்தை நன்கு காட்டுகின்றன. இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அரசின் தூதரகங்கள், பாலஸ்தீன அரசாங்கம் குறித்தும் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குறித்தும் குறிப்பாக காசா மற்றும் மேற்கு கரைக்குள் உள்ள படையினர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு, பாலஸ்தீனர் களுக்கு தாய்நாட்டிற்கான உரிமை களைப் மறுப்பதற்கான வேலைகளைச் செய்ய உதவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுபோன்று இன்னும் அதிகமான அளவில் ரகசிய ஆவணங்கள் வெளி யிடப்படும் என்று உலகத்திற்கு உத்தர வாதம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானமற்ற கொடூரமான முகத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் அவை அமையலாம். கிளிண்டன், ‘‘இவ்வாறு ரகசிய ஆவ ணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கை மீதான தாக்குதல்கள் மட்டு மல்ல, உலகத்தைப் பாதுகாத்திடவும், பொருளாதார வளமையைக் கொண்டு வருவதற்காகவும் ஒன்றுபட்டுச் செயல்படும் சர்வதேச சமூகத்தினரின் மீதான தாக்குதலுமாகும்’’ என்று கூறியிருக்கிறார். யாருடைய ‘பாது காப்பு’ மற்றும் யாருடைய ‘வளமை’?

அமெரிக்க மக்கள், ஓர் ஆப்ரிக்க-அமெரிக்கரைத் தங்கள் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தபோது உலகமே அதனை வியந்து பார்த்தது. உலக மக்கள் மத்தியில் இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தபோது, நாம் ‘‘வேங்கைப்புலி தன் புள்ளிகளை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளாது’’ என்று கூறி எச்சரித்திருந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகத்தை மேலாதிக்கம் செய்திட மிகவும் அரு வருக்கத்தக்க செயல்களில் இறங்கி யிருப்பதாக ரத்தத்தை உறைய வைத் திடும் விதத்தில் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கப் பேராசை முறியடிக்கப்பட் டால்தான், பரஸ்பர சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப் படையில் சர்வதேச உறவுகள் அமைந் தால்தான், ‘மனித உரிமைகளையும் மண்ணின் மாண்புகளையும் முன் னெடுத்துச் செல்லுதல்’ சாத்தியமாகும்.

-தமிழில்: ச.வீரமணி