Monday, July 13, 2009

பட்ஜெட்: மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!



ஒவ்வொரு பட்ஜெட்டுமே ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் என்பதும், தங்கள் வர்க்க ஆட்சியை ஒரு முகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதே சமயத்தில், மிகுந்த அள வில் லாபத்தை அறுவடை செய்வதற்கும் முயற்சிக்கும் என்பதும் இயற்கையே. இப் போது வந்திருக்கிற ஐமுகூஅரசின் முதல் பட் ஜெட்டும் அதைத் துல்லியமாகச் செய்திருக் கிறது. ஆயினும், அது அரசின் முரண்பட்ட தன்மைகளை விளக்கும் விதத்திலும் அமைந் திருக்கிறது. ஒரு பக்கம் சாமானிய மக்களுக் காக (யாரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்களுக்காக) கவலைப்படுவதுபோல் காட்டிக்கொண்டு, அதே சமயத்தில் பெரு முதலாளிகளின் அடிப்படை அபிலாசை களை நிறைவேற்றக் கூடிய வகையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை முன்னெ டுத்துச் செல்லும் வேலையில் இறங்கியிருக் கிறது.

ஏற்கனவேயே, ஐமுகூ அரசாங்கத்தின் கடந்த முதல் நான்காண்டு கால ஆட்சியின் போது, இந்திய பில்லியனர்கள் (ஒரு பில்லி யனர் என்றால் 100 கோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர்) டாலர் மதிப்பீட்டில் 2004இல் ஒன்பது பேர்களாக இருந்தவர்கள், 2008இல் 53 பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். நாட்டின் பணக்கார பத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்கள் 3 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 10 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக - அதாவது மும்மடங்கு - அதிகரித் திருக்கிறது. இதனை மேலும் ஒருமுகப் படுத்தும் வகையிலேதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். சர்சார்ஜ் ஒழிப்பு, வரு மான வரி உயர்பட்ச வரம்பு அதிகரிப்பு ஆகி யவை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் ஆதா யத்தை பணக்காரர் களுக்குக் கொடுத்திருக் கிறது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நபர், இப்போது ஆண்டு ஒன் றுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வரி கட்டினால் போதும். ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வருமானம் ஈட்டிடும் ஒரு நபர், இப்போது அரசுக்கு 53 ஆயிரத் திற்கும் குறைவாக வரி கட்டினால் போதும். இவற்றின் காரணமாக அரசின் வருவாய் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் குறைகிறது. மேலும், அரசு அளித்திட்ட பல்வேறு சலுகைகளின் காரணமாக, சென்ற ஆண்டு மட்டும் 4.18 லட் சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்பட்டிருப்ப தாக, பட்ஜெட் ஆவணங்கள் வெளிப்படுத்து கின்றன. இந்தச் சலுகைகள் இந்த ஆண்டும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. சில்லரை ஆதாய வரி (குசiபேந க்ஷநநேகவை கூயஒ), பண்டங்கள் பரிவர்த்தனை வரி (ஊடிஅஅடினவைநைள கூயஒயவiடிn கூயஒ) போன்றவையும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. பண்டங்கள் பரிவர்த்தனை வரி ஒழிப்பின் விளைவாக அத்தியாவசியப் பொருள்கள் ஊக வணிகத்திற்குள்ளாகும் என்பதால், அவற் றின் விலைகள் மேலும் பல மடங்கு உயர்ந் திடும். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஊக வணி கத்தில் - அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த் தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்று - தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில்தான், இவர்கள் இவ் வாறு வரிகளை ஒழித்திருக்கிறார்கள்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திட, பொது - தனியார் - கூட்டுத் துறை - அதாவது பிபிபி (ஞஞஞ - யீரடெiஉ-யீசiஎயவந-யீயசவநேசளாiயீ) என்ற பெயரில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை மேலும் கொழுக்கவைக்கும் ஏற்பாடுகளும் ஆரம்பித்துவிட்டன. இந்திய உள்கட்டமைப்பு நிதி கம்பெனி லிட் (ஐஐகுஊடு - ஐனேயை ஐகேசயளவசரஉவரசந குiயேnஉந ஊடிஅயீயலே) என்கிற நிறுவனம் தற்சமயம் சுமார் 60 சதவீதம், வணிக வங்கிகளின் மூலமாக, பிபிபி திட்டங்க ளுக்கு அளித்திட இருக்கிறது. இவ்வாறு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இவர்களிடம் முதலீடு செய்திட அரசு திட்டமிட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அர சாங்கம், தன்னுடைய நிதி நிறுவனங்கள் மூல மாகவே, பிபிபி என்ற பெயரில் தனியாருக்கு கோடிக்கணக்கான ரூபாய் தொகையை எளிய தவணைகளில் அளித்திட இருக் கிறது. இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து பணத் தை பெற்றபின், அரசாங்கத்துடன் இவர்கள் கூட்டுசேர்ந்து மேலும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. முதலாளித் துவ வர்க்கத்தின் சூட்சும வழிகள் எப்படி எப்படி எல்லாம் இருக்கின்றன பாருங்கள்!

இந்தப் பட்ஜெட்டில் அடிப்படைப் பிரச் சனை, உலகப் பொருளாதார மந்தம், அதி கரித்துவரும் வேலை இழப்புகள், மக்களின் வாங்கும் சக்தி வேகமாக வீழ்ச்சியடைந்து வருதல் ஆகியவற்றின் பின்னணியில், நாட் டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புறத்தூண் டுதலை அளிக்கவேண்டிய அதே சமயத்தில், சாமானிய மக்களின் ‘‘உள்ளீடான வளர்ச் சித்’’ (“inஉடரளiஎந பசடிறவா”) தேவைகளையும் நிறைவேற்றுவதாகும். துரதிர்ஷ்டவசமாக, பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில் தெரிவித்திருப்பதைப்போல, இதில் எதையுமே போதுமான அளவிற்கு மேற்கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. அதிகரிக்கப்பட இருக்கும் மொத்த செலவி னம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்தான். இதனால் எவ்வித உள் ளீடான வளர்ச்சியையும் உருவாக்கிட முடியாது. அதேபோன்று ‘உள்ளீடான வளர்ச்சி’க்காக அறிவிக்கப்பட்டிருக்கின்ற படாடோபமான திட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை களும் மிகவும் அற்ப அளவானதாகும்.

கணிசமான அளவிற்கு ஆதாயம் அடைந் திருக்கிற ஆளும் வர்க்கங்கள் அவற்றுடன் திருப்தியடைந்திடவில்லை. குறிப்பாக, ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தயவு தேவை யில்லை என்ற சூழ்நிலையில், ஆளும் வர்க் கங்களின் ஆசை பல்கிப் பெருகியிருக்கிறது. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட அன்று பங்குச்சந் தையில் ஏற்பட்ட சரிவு இதைப் பிரதிபலித் தது. சர்வதேச பங்குச்சந்தையின் நடவடிக் கைகள், நம் நாட்டின் பங்குச் சந்தையையும் பாதிக்கும் என்றபோதிலும், பொருளாதார ஆய் வறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டது போல, நிதிச்சீர்திருத்தங்கள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் பட்ஜெட் டில் பிரதிபலிக்காததே, இத்தகைய சரிவிற் குக் காரணங்கள் என்று கார்ப்பரேட் ஊடகங் கள் மிகவும் விரிவான முறையில் வியாக்கியா னங்கள் செய்தன. இந்த ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று இவை எதிர்பார்த்தன வாம். பட்ஜெட்டில் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாக சொல்லப்பட்டிருந்தபோ திலும், அதன் விவரங்கள் அல்லது அதற்கான வழிவகைகள் எதுவும் கூறப்படவில்லை.

அதேசமயத்தில், நிதி அமைச்சர் மிகப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை இருப்பது பற்றி எச்சரிக்கை செய்து, எனவே ‘நிதிக் கட்டுப்பாட்டு’க்குத் திரும்புவதே அரசின் நோக்கம் என்று கூறியிருக்கிறார். அரசு, இத்தகைய ‘நிதிக்கட்டுப்பாட்டுக்குத்’ திரும்புவது என்பதன் பொருள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதுதான் என்று புரிந்து கொள்ள அதிக அறிவு ஒன்றும் தேவையில் லை. அரசாங்கம் இவ்வாறு கூறியிருப்பதில் எவ்விதமான பொது அறிவும் இல்லை, பொரு ளாதார அறிவும் இல்லை. ஒரு விவசாயி, தான் பெற்ற கடனுக்காகத் தன் நிலத்தையே விற்று ஓட்டாண்டியாவதைப்போலத்தான் இது. இப்பாதை நிச்சயம் நாட்டை சீரழித்துவிடும்.

இவற்றையெல்லாம் இந்த அரசு செய் திடுமா அல்லது எப்படி இவற்றை இந்த அரசு செய்யப்போகிறது என்பதெல்லாம், ஆரம்பத் தில் நாம் குறிப்பிட்ட முரண்பாடு எவ்விதத் தில் மாறப்போகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்பட இருக்கின்றன. இந்திய கார்ப் பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபம் மேலும் விரிவாகும் வகையில் சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றன. ‘உள்ளீடான வளர்ச்சி’ மற்றும் சாமானியர்களின் நலன்களைக் காவு கொடுத்து ‘ஒளிர்கின்ற இந்தியா’வை வலுப் படுத்த வேண்டும் என்று அவை விரும்பு கின்றன.

முரண்பாடுகள் எப்படி முட்டி மோதப் போகின்ற என்பதுதான் ‘உழல்கின்ற’ இந்தி யாவின் அங்கமாக உள்ள பெரும்பான்மை மக் களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கவிருக்கின்றன. கொள்ளை லாபம் அடிக்க விரும்பும் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெறப்போகிறார்களா? அல்லது இவர்களின் கொள்ளை லாபவெறிக்கு எதிராக அணிதிர ளும் கோடிக்கணக்கான மக்களின் வலுவான போராட்டங்கள் வெற்றிபெறப்போகின்றனவா? இவ்வாறு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வெகுஜனப் போராட்டங்களின் வலுதான், எதிர்கால இந்தியாவையும் கோடிக்கணக் கான மக்களின் வாழ்வையும் தீர்மானிக்க இருக்கின்றன.

தமிழில்: ச.வீரமணி

Wednesday, July 1, 2009

லால்கார் : இயல்புநிலையை மீட்பதற்கான முயற்சிகள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னா பூர் மாவட்டத்தில் லால்கார் மற்றும் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் முற் றுகையை, மத்திய -மாநில அரசுகளின் பாது காப்புப் படையினர் கூட்டாக சேர்ந்து அப் புறப்படுத்தி வருவதை அடுத்து, அங்கே நிலைமை மிகவும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. நந்திகிராமத்தில் ஒரு சிறுபகுதி வெற்றி பெற்ற அளவிற்குக் கூட, லால்காரில் அப்பாவிப் பழங் குடியினத்தவரை, அதிலும் குறிப் பாக, பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக நிறுத்தி, பாது காப்புப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட மாவோயிஸ்ட்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற வில்லை என்பது தெளிவு. ஜூன் 7 அன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஏழு பேரை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றதை அடுத்து, உண்மையில் அப் பகுதியிலிருந்த பழங்குடியினர் அனைவ ருமே ஊரைக் காலி செய்துவிட்டுச் சென் றுவிட்டார்கள். இவ்வாறு ஊரைவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 30 ஆயி ரத்திற்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட் டிருக்கிறது.

அவ்வாறு மாவோயிஸ்ட்டுகளுக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியேறிக்கொண் டிருக்கும் பழங்குடியினரிடம் ஊடகவிய லாளர்கள் வினவும்போது அவர்கள், ‘‘போலீ சாரின் தாக்குதல்கள் நடைபெறும் சமயத் தில் அவர்கள் (மாவோயிஸ்ட்டுகள்) பெண் களையும், குழந்தைகளையும் முன்னே நிற்கும்படி கட்டாயப் படுத்துகிறார்கள்,’’ என்றும், ‘‘மாவோயிஸ்ட்டுகள் விரும்பு வதுபோல் போலீசாரின் துப்பாக்கிக் குண்டு களுக்கு இரையாக நாங்கள் விரும்ப வில்லை’’ என்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு மாவோ யிஸ்ட்டுகளால் மிரட் டப்பட்டு, ஊரை விட்டு வெளியேறி நிவா ரண முகாம் களில் அடைக்கலமாகியுள்ள பழங்குடி யினருக்கு மாநில அரசு இலவச அரிசி, காய்கறிகள் மற்றும் தயார் செய்யப் பட்ட உணவுப் பொட்டலங்களை அளித்து உதவி வருகிறது. லால்கார் அரசு மருத்துவ மனையில் சுகாதார வசதிகளை வலுப் படுத்துவதற்காகக் கூடுதலாக பணியா ளர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் பழங்குடியினர் பகுதி களில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளைப் புறக் கணித்ததால்தான் இந்நிலைமை என்று சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத் தின்போது, ராகுல் காந்தியும் கூட, மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் பகுதிகள் பல, ஒரிசாவில் பின்தங்கியுள்ள பிராந்தியங் களைவிட மோசமாக இருக்கின்றன என்று கூறியதைப் பார்த்தோம். அப்போதே நாம், உண்மையில் பங்குரா மற்றும் புரூலியா பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் சமூ கப் பொருளாதார நிலைமைகள், அமேதி மற்றும் ரே பரேலி நிலைமையைவிட மேம் பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.

ஒட்டுமொத்தத்தில் மாநிலத்தில் இடது முன்னணிக்குப் பின்னடைவு ஏற்பட்டி ருந்த போதிலும்கூட, பழங்குடியினருக் கான மக்களவைத் தொகுதிகள் அனைத் தையும் இடதுமுன்னணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை நிலையாகும். பழங்குடியினரின் வாழ்க் கைத்தரத்தை மேம்படுத்திட இன்னும் செய்யவேண்டியது ஏராளமாக இருக்கி றது என்பதில் எந்தக் கருத்து வேறு பாடும் கிடையாது. இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இடது முன்னணி பல புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆயினும், மேற்கு மிட்னாபூர் மாவட் டத்தில், வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடி யினரைப் போய்ச் சேரமுடியாத வகையில் ஒரு பிரத்யேகமான பிரச்சனை இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பெரும்பாலான வளர்ச் சித் திட்டப்பணிகள் தேர்ந்தெடுக்கப் பட்ட பஞ்சாயத்துக்கள் மூலமாகவே மேற் கொள்ளப்படுகின்றன. லால்கார் பகுதி யில் பல பஞ்சாயத்துக்கள் ஜார்கண்ட் கட்சியின்கீழ் இருந்து வருகின்றன. பல வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்து வதில் இக்கட்சி பிரதான தடையாக இருந்து, மாவோயிஸ்ட்டுகள் நுழைவ தற்கு வசதிசெய்து தந்திருக்கிறது. பின் பூர் (பழங்குடியினர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஜார்கண்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான். லால்கார் பகுதி இவரது தொகுதிக்கு உட்பட்டுத்தான் வருகிறது. கையறுநிலையிலுள்ள பழங்குடியினரை, அவர்களின் மிக மோசமான பின்தங்கிய நிலைமையிலேயே வைத்திருப்பதில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஓர் அரசியல் நோக்கம் உண்டு என்பது தெளிவு. தற் போது மாவோயிஸ்ட்டுகள் அவர்களது ‘விடுதலை செய்யப்பட்ட மண்டலத்’திலி ருந்து அப்புறப்படுத்தப் பட்டிருப்பதை யடுத்து, பழங்குடியினருக்கான வளர்ச் சித் திட்டப்பணிகளின் பயன்கள் அவர் களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐய மில்லை.

அடுத்ததாக, மாவோயிஸ்ட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணியின் அணுகுமுறை குறித்து பல வித வியாக்கியானங்கள் வந்துகொண்டி ருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளின் வன் முறை இரு விதமான உத்திகளின் மூல மாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான நிலைப்பாட்டினை மேற் கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, மக்களின், (அதாவது இப்பகுதியில் பழங் குடியினரின்) வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதில் உள்ள உண்மையான பிரச் சனைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மாவோயிஸ்ட்டுகளை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்திடும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வை அளித்திடும். அதே சமயத்தில், சட்டம் -ஒழுங்கு சீர் குலைக்கப்படுமானால் அல்லது மாவோ யிஸ்ட்டுகளால் தாக்குதல் தொடுக்கப் பட்டு நிர்வாக எந்திரம் முடமாக்கப்படு மானால் அவற்றை உறுதியுடன் எதிர்த்து முறியடித்து, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், அரசு நிர்வாகத்தை அப்பகுதிகளில் நிலைநிறுத்துவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும்.

இப்போது, மத்திய அரசு, மாவோயிஸ்ட் இயக் கத்தை சட்டவிரோத நடவடிக்கை கள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களில் ஒன்றாக சேர்த்திருக்கிறது. ஏற்கனவே தடை செய் யப்பட்டுள்ள இயக்கங்களான மக்கள் யுத் தக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் ஒருங்கி ணைப்பு மையம் (ஆயசஒளைவ ஊடிடிசனiயேவiடிn ஊநவேசந) ஆகிய இரு குழுக்களும் இணைந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யாக மாறியிருக்கிறது என்று இது தொடர்பாக ஒரு விளக்கமும் அரசால் கூறப்பட்டிருக்கிறது. இம்முடி வானது நாடு முழுவதுக்கும் பொருந்தும். எனவே இது மேற்கு வங்கத்திற்கும் பொருந்தும். ஆயினும், மேற்கு வங்க முதல்வர் சொல்லியிருப்பது போல, ‘‘இது ஒரு மத்தியச் சட்டமாக இருப்பதால் இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதனை எங்கே, எவருக்கெ திராகப் பிரயோகிப்பது என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம்’’ என்று கூறி யிருக்கிறார்.

மாவோயிஸ்ட்டுகளுக்குத் திரிணா முல் காங்கிரசும், திரிணாமுல் காங்கிர சுக்கு மாவோயிஸ்ட்டுகளும் ஒருவருக் கொருவர் ஆதரவு அளித்து வந்ததற்கு ஏராளமான சான்றுகளை மாவோயிஸ்ட் டுகளின் பேட்டிகளை ஊடகங்கள் ஒளி பரப்பியதன் மூலம் அனைவரும் அறி வோம். இப்போது திரிணாமுல் காங்கிர சும் ஓர் அங்கமாக உள்ள ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோ யிஸ்ட் இயக்கத்திற்கு தடை விதித்தி ருப்பதன் மூலம், திரிணாமுல் காங்கிர சுக்கு ஓர் இக்கட்டான நிலையை ஏற் படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளு டன் தங்களுக்குள்ள உறவை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடி யாமல் திண்டாடும் திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்ட் கொலைபாதக நட வடிக்கைகளைத் தங்கள் தேர்தல் ஆதா யத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட திரி ணாமுல் காங்கிரஸ், இப்போது மாவோ யிஸ்ட் பிரச்சனையில் சிபிஎம் ‘இரட்டை வேடம்’ போடுவதாகக் காட்டுக்கூச்சல் போடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிற் போக்கு சக்திகளுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன் னணிக்கு எதிராக ஒரு மகா கூட்டணி யை ஏற்படுத்திக் கொண்டது என்பதை இப்போது சாமானிய மக்களும் நன்கு புரிந்துகொண்டு வருகிறார்கள். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தங்களுடைய சுய தேர்தல் ஆதாயத்திற்காக சாமானிய மக் களை மாவோயிஸ்ட்டுகளின் மிரட்ட லுக்கும் உருட்டலுக்கும் பணிந்து போகு மாறு வைத்துவிட்டது.

மாவோயிஸ்ட்டுகள் உட்பட திரிணா முல் காங்கிரசால் அமைக்கப்பட்ட மகா கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள சில ‘அறிவுஜீவிகள்‘, லால் கார் பகுதிக்கு ‘‘அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அனுப்பியிருப்பதையும், இயல்பு வாழ்க்கையை அப்பகுதியில் மீட்பதையும் நிறுத்துவதன் மூலம் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்றால், மாவோ யிஸ்ட்டுகளும் பேச்சுவார்த்தைக்குத் தயார்’’ என்று கூறியிருக்கின்றனர். மாவோ யிஸ்ட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப் படைக்கும்வரை, தங்கள் வன்முறை மற் றும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிடுவதாக உறுதிகூறும்வரை, பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாநில அரசு தெளிவுபடத் தெரி வித்துள்ளது. அதேசமயத்தில், பழங்குடி யினருக்கு, பாதுகாப்புப் படையினரால் தொல்லை ஏற்படக் கூடாது என்பதற் காக, பழங்குடியின மக்களை இம்சிக்கக் கூடாது என்று பத்திரிகைக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. இப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக, பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த சமுதாயத்தையே இடருக் குள்ளாக்கி, சாமானிய மக்களுக்கு சொல் லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிக் கொண் டிருக்கிறது.மாவோயிஸ்ட்டுகளால் மக் கள் மீது ஏவப்பட்டுள்ள சவால்களை எதிர்த்து முறியடிப்பதுடன், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இயல்பு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதற்கு, இத்தகைய அரசியல் சக்திகளையும் தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி