Friday, December 31, 2010

சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவோம்



அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள்தோறும் ஏற்றப்படும் பொருளாதாரச் சுமைகளின் வேதனை தாங்காது முனகிக் கொண்டிருக்கும் மக்கள் மீதான ஆழ்ந்த அனுதாபங்களுடனேயே இவ்வாழ்த்துக் களை தெரிவிக்க வேண்டி இருக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கொடூரமான வகை யில் அரிக்கப்பட்டு சரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க வழியின்றி உழன்று கொண்டிருக்கக்கூடிய நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதானது, அவர்களை மேலும் மேலும் கொடிய பஞ்சநிலையை நோக்கித் தள்ளிக் கொண்டி ருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக்கு உதவி

2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு சர்க்கரை கிலோ 50 ரூபாய் என்ற அளவிலும் துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய் என்ற அளவிலும் மற்றும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும், அதேபோன்று சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்குக் கடுமையாக உயர்ந்தும் இருந்தன. இப்போது 2010 முடிவுக்கு வரக்கூடிய நிலையில். வெங்காயத்தின் விலை அநேகமாக அனைத்து நகரங்களிலும் கிலோ 70 ரூபாய்க்கு விற்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. இது மற்ற காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்களின் வழங்குதல் மற்றும் தேவை ஆகியவற்றிற்கு இடையேயான பொருத்தமின்மையே இதற்குக் காரணம் என்கிற அரசாங்கத்தின் வாதமெல்லாம் ஏற்புடையதல்ல.

தில்லியில் 2008க்குப் பின் வெங்காயம் வழங்கப்படுவது என்பது 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. ஆயினும் அதன் மொத்த விலை 300 விழுக்காட்டிற்கும் மேலாகப் பாய்ந்து சென்றிருக்கிறது. சென்ற ஆண்டு சர்க்கரைக்குச் செய்ததுபோலவே இந்த ஆண்டு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவது தாராளமாக்கப்பட்டிருக்கிறது. வெங்காயத்தின் தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விளைவாக விலைகள் தாறுமாறாக உயரக்கூடும் என்று தெரிந்திருந்தும் அரசு இவ்வாறு செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இத்தகைய ஏற்று மதிக்கு ஊக்கத் தொகைகளும் அளிக்கப்பட்டிருக்கிறது. 2005-06ஆம் ஆண்டில் 7.8 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த வெங்காய ஏற்றுமதி, 2009-10ஆம் ஆண்டில் சுமார் 19 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் மத்தியில் கடும் ஆவேசம் ஏற்பட்டதை அடுத்து, அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது. இப்போது வெங்காய இறக்குமதியை எவ்விதத் தீர்வையுமின்றி அனுமதித்திருக்கிறது. அதாவது, விலை வாசியைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதிக்கு மானியம் அளித்திருக்கிறது. ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை அளிப்பதும், இறக்குமதிக்கு மானியம் அளிப்பதும் இவ்வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வழிவகைகள் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று.

இந்த ஆண்டு ஏப்ரல் 1இலிருந்து நவம்பர் 30 வரையிலான காலத்தில் வேளாண் பொருட்களின் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 8,33,605.53 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஆண்டு இதே கால அளவிற்கு இது, 7,66,133.46 கோடி ரூபா யாக இருந்தது. இத்தகைய கூர்மையான உயர்விலிருந்து ஊக வர்த்தகத்தின் மூலமாக வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியிருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், அரசாங் கம் அத்தியாவசியப் பொருள்களின் மீதான ஊக வர்த்தகத்தைத் தடை செய்யவோ அல் லது நிறுத்தி வைக்கவோ மறுக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கக் கூடிய மற்றுமொரு மாபெரும் ஊழல் என்று இதனை கூறலாம் அல்லவா?

கருப்பு எழுத்துக்களால்

ஊழல்களைப் பற்றிப் பேசப்புகுந்தால், 2010ஆம் ஆண்டினை சுதந்திர இந்திய வர லாற்றிலேயே கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஆண்டாகக் கொள்ளலாம். ஊழல்கள் அனைத்திற்கும் தாயாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சொல்லலாம். இதனை அடுத்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டமை, நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டமை, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் முதலானவற்றைக் குறிப்பிடலாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு கஜானாவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி(சிஏஜி)யால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாபெரும் ஊழல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக நம் மக்களின் வாழ்க்கைத்தரம் கடு மையான முறையில் பறிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள்

கொள்ளை போக அனுமதி

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, மக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா மல், நாட்டின் வளங்கள் இவ்வாறு மிகப் பெரிய அளவில் கொள்ளை போக அனுமதித் திருப்பது, அதன் மீது வலுவான வகையிலும் மற்றும் நியாயமான முறையிலும் சந்தேகத் தினை ஏற்படுத்தி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரியபோதும் அதனை ஏற்க அகம்பாவத்துடன் அது மறுத்ததன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ‘வீணடிக்கப்படுவதற்கு’ இட்டுச் சென்றது, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டதற்குப் பின்னர், பிரதமர் தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதையே அவர் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாரானால் நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கக் கூடும்.

மேலும் பிரதமர் பொதுக்கணக்குக் குழுவின் முன்பு ஆஜராகத் தயார் என்றால், அவர் ஏன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராகக் கூடாது?

பயன்தராத நடவடிக்கைகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் பல்வேறு அமைப்புகளின் மீதும் கடும் தாக்குதல்கள் தொடுப்பதிலும் முனைப்பாய் இருந்தது, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மத்திய விஜிலன்ஸ் கமிஷன் போன்றவைகளின் செயல் பாடுகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல்களின் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஊழல்கள் நடைபெற்ற சமயத்தில் சோதனை நடத்தாமல் வெகுகாலம் கழித்து நடத்துவதால் பெரிய அளவிற்கு பிரயோசனம் இருக்காது என்ற போதிலும் அரசாங்கம் தான் மிகவும் நியாயமாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய் திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு

மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் கொள்கைகள் நெறிபிறழ்ந்து சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளிலும் இத்தகைய நிலைமைகள் தொடரக் கூடும். இந்த ஆண்டின் நடவடிக் கைகளைப் பரிசீலனை செய்ததிலிருந்து நம் அனுபவம் என்னவெனில், ஓர் அரசாங்கம் திறமையுடன் செயல்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை இருந்தால் மட்டும் போதாது, அதற்கும் மேலாக நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, அது செயல்படவும் வேண்டும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றைச் செய்திடாமல், ஜி-20 மாநாடுகளிலும், அனைத்து பி-5 நாடுகளின் தலைவர்களுடனும் பங்கேற்பதால் பயனேதும் இல்லை.

மக்கள் இயக்கம் ஒன்றே வழி

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகளை வைத்து வரவிருக்கும் ஆண்டிற்கான நிகழ்ச்சிநிரலை வரையறுக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் போராட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களுக்கு ஆதரவானதாக மாற்றக்கூடிய விதத்தில் நிர்ப்பந்தம் அளிக்காவிட்டால், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கமுடியாது. நாட்டை நல்லமுறையில் உருவாக்கிடவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திடவும் சமூக நீதியை நிலைநாட்டவும் இந்திய மக்களாகிய நாம் மகத்தான சக்தியைப் பெற்றிருக்கிறோம். ஆயினும், நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்திடவும், சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கிடவும் கூடிய வகையில் அரசின் கொள்கைகள் அமைந்தால்தான் இவற்றை அடைவது சாத்தியம். அரசாங்கம் அத்தகைய வகையில் செயல்பட வேண்டும். நம் மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க 2011இல் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்!

தமிழில்: ச.வீரமணி

Sunday, December 26, 2010

உச்சரிப்பதோ சாமானியர், சேவகமோ பெருமுதலாளிக்கு...


கில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு நாள் மாநாடு தில்லி அருகே புராரியில் நடைபெற்று முடிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங் கம் ஒன்றன்பின் ஒன்றாக பல ஊழல் குற்றச் சாட்டுக்களால் தாக்கப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் இம்மாநாடு நடந்து முடிந்துள்ளது. 2009 மே மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் முடிவின்போது வெற்றிக் களிப்பில் இருந்த மனோநிலை இப்போது மறைந்துவிட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் நிலை, தீர்க்கமுடியாத நிலையில் தொடரும் விவசாய நெருக்கடி, வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருத்தல் ஆகியவை காங்கிரசின் சாமானியர்களுக்கான மேடையை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. கட்சி ஸ்தாபனமானது ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியின் கலகம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட படுதோல்வி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் லஞ்சக் குற்றச்சாட்டுக்களாலும், இவற்றை சமாளிக்க முடியாததன் காரணமாக பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் ஏற்பட்ட நம்பகமின்மையாலும் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் தலைமையானது, குற்றச்சாட்டை எதிர்கொள்வதைவிட எதிர்த்தாக்குதல் தொடுக்கலாம் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. ஊழல் குறித்து பாஜக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் ஊழல்களையும் தற்போதைய கர்நாடக பாஜக அரசாங்கத்தின் ஊழல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவை மிகச் சரியானவையே. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய அரசியல் தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அவை ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இடது முன்னணியைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் ஊழல் புகார்களை எதிர் கொண்டதில்லை என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு அறியும். காங்கிரஸ் தலைவர் தன் தலைமையுரையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக் கப்படுவதற்கு முன்பே அவர்கள் அமைச்சர் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டுவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் ஒப்புக்கொள்ளாத விஷயம் என்னவெனில், மகாராஷ்டிரா முதல்வரும் மற்ற அமைச்சர்களும் புரிந்திட்ட ஊழல்கள் மறைக்க முடியாத அளவிற்கு வெளிச்சத்திற்கு வந்த பின்னர்தான் அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதாகும்.

அதுமட்டுமல்ல, பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகவே லஞ்சம் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதனை காங்கிரஸ் கட்சி உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையானது, தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தங்கள் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதிலோ, அதன் பிரதிபலனாக அவர்களிடமிருந்து சலுகைகள் பெறுவதிலோ தவறேதும் இல்லை என்றே காங்கிரஸ் தலைமை கருதுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க மறுப்பதே இதற்குச் சரியானதோர் எடுத்துக்காட்டாகும்.

காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் தீர்மானங்களில், கட்சியானது சமூக ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டது. உண்மையில் இது மக்களை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சிதான். பொருளாதாரத் தீர்மானமானது மக்களின் உள்ளார்ந்த வளர்ச்சி குறித்தும் மக்களின் உரிமைகள் குறித்தும் பேசுகிறது. வேலை செய்யும் உரிமை, கல்விக்கான உரிமை, நிலத்திற்கான உரிமை, உணவுக்கான உரிமை முதலானவற்றைக் காங்கிரஸ் கட்சியும் குறிப்பிடுகிறது. ஆனால், இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறினாலும், அக்கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு என்பது இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இவ்வாறு சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது கிட்டத்தட்ட உத்தரவாதம் செய்யப்பட்டிருப்பதாக’’ தன்னுடைய பொருளாதாரத் தீர்மானத்தில், அது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன? நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் ஒருசில மாநிலங்கள் தவிர வேறெங்கும் அமல்படுத்தப்பட்டிருக்க வில்லை. நாடு முழுவதுமே விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் அரசின் கொள்கைகளின் காரணமாகப் பறிகொடுத்து விட்டு, பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பசி, பஞ்சம், பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு உரிமை என்பது இன்னமும் தொலை தூரக் கனவாகவே இருந்து வருகிறது. நாட்டில் பொது விநியோகமுறையை பெருமளவில் வெட்டிக் குறைத்திருக்கும் மத்திய அரசின் கொள்கையே இதற்குப் பிரதான காரணமாகும்.ஆனால் காங்கிரஸ் கட்சி இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு மாநில அரசுகளே காரணம் என்று வீணே பழிபோட முயற்சிக்கிறது.

பொதுத்துறையின் கேந்திரமான பங்களிப்பு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையில்? மன் மோகன்சிங் அரசாங்கமானது, மிகஅதிக அள வில் இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் மும்முரமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில்தான் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ‘பொதுத் துறையின் பங்குகளில் 51 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்திடும்’ என்று மக்களுக்கு உறுதிமொழி அளித்துக் கொண்டே, அவர்களை ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கட்டற்ற வணிகமயம் மற்றும் தனியார்மயம் மூலமாக வசதி படைத்த பிரிவினருக்கான கல்வி முறையை மேம்படுத்தி, சாமானிய மக்களின் கல்வியை வெட்டிச் சுருக்கும் ஐ.மு.கூட்டணி அரசின் புதிய கொள்கைகள் மூலம் கல்வி உரிமையும் வெட்டிச் சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசியல் பிரச்சனைகள் குறித்து அது நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடதுசாரிகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறித் தாக்குதல் தொடுத்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் அரசியல் அல்லது தேர்தல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து வன்முறையை பிரயோகிக்கின்றது என்று குற்றஞ்சாட்டி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தான் திரிணாமுல் காங்கிரசின் இளைய பங்காளியாக இருந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடதுசாரிகள் மீதும் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. முர்சிதாபாத், பர்தமான் போன்ற மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியானது மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியானது ராஜீவ்காந்தி காலத்திலிருந்தே, பிரிவினை சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, பயங்கரவாத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது ஜனநாயக முன்னணியையும் எதிர்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியானது சாதிய மற்றும் மதவெறி சக்திகளுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கியதில்லை.

மேலும் மற்றொரு அரசியல் தீர்மானத்தில், காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங் கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிக் கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை நிலைகள் பலவற்றை எதிர்க்கின்றன. உண்மையில், காங்கிரசும் பாஜகவும்தான் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் பின்பற்றுவதில் ஒரு பொதுவான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.

அயல்துறைக் கொள்கைத் தீர்மானம், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் அயல்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கை போன்றே வாசிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் அயல் துறைக் கொள்கையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றிருக் கும் யதார்த்தத்தை மறைக்க முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகள், வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கியபோதிலும், அயல்துறைக் கொள்கையில் அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய விதத்தில் திருப்திகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடமிருந்து தந்திச் செய்தி (கேபிள்) சென்றிருப்பதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.

தீர்மானத்தில் மேலும், ‘‘மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்திச் செல்வதில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் இந்தியா’’, என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியா, மூன்றாம் உலகத்தில் நடைபெற்ற இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியது உண்மைதான். ஆனால் இன்றைய தினம் அதனை அது கைகழுவிவிட்டது என்பதில் ஐயமில்லை. இப்போது அது அமெரிக்காவின் ஆசியுடன் ‘‘உலக அளவிலான அதிகார மையமாக’’ மாறிட அவா கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண் டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அதன் நிலை எப்படி இருக்கிறது? ‘‘சாமானிய மனிதர்’’களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை உதறித் தள்ளிவிட்டு, அதிகார வெறி பிடித்த பெரு முதலாளிகளின் கருவி யாக மாறியதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி அழுகிக்கொண்டிருக்கும் அறிகுறி களையே காண முடிகிறது.

தமிழில்: ச.வீரமணி

Saturday, December 25, 2010

வரலாறு படைத்திட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலை நிறுத்தம்:விஏஎன் நம்பூதிரி, தலைவர்



பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்கத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகையிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பதையோ, ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந்தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான கைபேசி இணைப்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.

ஏப்ரல் 20 வேலைநிறுத்தமும் அதன்பின் நடைபெற்ற தொடர் நடவடிக்கைகளும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், இதர பல கோரிக்கைகளுடன் மேற்கண்ட முக்கியமான கோரிக்கைகளையும் வலியுறுத்தி, 2010 ஏப்ரல் அன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றதன் காரணமாக வேலைநிறுத்தத்தின் முதல் நாளன்றே மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்த்து வைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஒரு சில கோரிக்கைகள் மீது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், மற்ற கோரிக்கைகள் மீது கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் அமல்படுத்தப்படவில்லை. முக்கியமான கோரிக்கைகளை அமலாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக ஊழியர்கள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.
தனியாருக்குத் தாரைவார்த்தல் / சுயஓய்வு மூலம் ஆட்குறைப்பு
ஐமுகூ-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களைக் வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுiயாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கைகளைத் தொடங்கி இருந்தன. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள கார்பரேட் நிறுவனங்களும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அதன் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தன.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட்டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய கார்பரேட் நிறுவனங்களும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக. டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தினை எந்த விதத்தில் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.

எந்தவொரு வேலைநிறுத்தம் என்றாலும் அதற்கு முழுத் தயாரிப்புப் பணிகள் அவசியம். கோரிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டியதும் அவசியம். வேலைநிறுத்தத்திற்காக கோரிக்கைகள் பிரதானமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துடன் சம்பந்தப்பட்டதால், இது தொடர்பாக மேலும் தீவிரமான பிரச்சாரம் அவசியமாக இருந்தது. எனவே இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் ஏராளமான எண்ணிக்கையில் சிறுபிரசுரங்களும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.
அகிலஇந்திய சிறப்பு மாநாடு - 19 ஜூலை 2010

வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகளின் முதல் கட்டமாக 2010 ஜூலை 19 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக புதுதில்லியில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து பங்கேற்றார்கள். இச்சிறப்பு மாநாட்டில் எம்.கே. பாந்தே (சிஐடியு), ஜி. சஞ்சீவரெட்டி (ஐஎன்டியுசி) மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இச்சிறப்பு மாநாட்டில் 2010 அக்டோபர 19 முதல் 21 வரை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மாநிலங்களிலும் மாநில அளவிலான சிறப்பு மாநாடுகள் நடைபெற்றன. ஏராளமான எண்ணிக்கையில் மாநில மொழிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, சுற்றுக்கு விடப்பட்டன.

2010 அக்டோபர் 19 முதல் 21 பண்டிகைக் காலமாக இருந்ததாலும், கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதாலும், வேலைநிறுத்தத்தை 2010 டிசம்பர் 1 - 3 தேதிகளில் நடத்துவது என கூட்டு நடவடிக்கைக் குழு, தீர்மானித்தது.

நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி

2010 நவம்பர் 19 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வந்து கலந்து கொண்டனர். பேரணி, புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமையிடத்திலிருந்து புறப்பட்டு, டால்ஸ்டாய் வீதி வழியாக, நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது, காவல்துறையினரால் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சர்யா, பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அபிமன்யு மற்றும் தலைவர்கள் உரையாற்றினார்கள். ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமருக்கும், மக்களவை சபாநாயகருக்கும் அளிக்கப்பட்டது.

2010 டிசம்பர் 1 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது

வேலைநிறுத்தத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னரும், பிஎஸ்என்எல் நிர்வாகம் மௌம் சாதித்தது. பின்னர் பெயரளவில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், உருப்படியாக ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. 2010 நவம்பர் 29 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் முழுமையாக வெற்றி பெற்றன. வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய/மாநில அரசு ஊழியர் அமைப்புகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. அவை தங்கள் முழுமையான ஆதரவை வேலைநிறுத்தத்திற்கு அளித்தன.

பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிசம்பர் 1 தினத்தை தனியார்தாரைவார்ப்பு எதிர்ப்பு தினமாக அனுசரித்து அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு அறைகூவல் விடுத்தது. மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் பெடரேஷன் மற்றும் பல்வேறு அமைப்புகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன. அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓட்டி ஓய்வூதியர் சங்கமும், பிஎஸ்என்எல் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனமும் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளித்தன.

டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. பல மாநிலங்களில் மாநில அளவிலான முதன்மை பொது மேலாளர்கள்கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பங்களுரு, திருவனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக்கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுடனும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.

முதல் நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலைநிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும், அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பாக ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட்து. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங்களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.

பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக்கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேவைநிறுத்தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.

வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடியவைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.
அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும் சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட்டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தியில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
கூட்டு நடவடிக்கைக் குழுவை உடைத்திட அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பொடிப்பொடியாக்கியுள்ளோம். இதனை எதிர்காலத்திலும் பேணிப்பாதுகாத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவை மேலும் வலுவானதாக மாற்றிட வேண்டும்.
டெலிகாம் துறை மிகவும் விரிவானதும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவருகின்றனர். இத்தகைய இவர்களின் இழிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, December 16, 2010

பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்புகள்:பிரகாஷ் காரத்




நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் எவ்வித விவாதமோ நடவடிக்கை களோ இன்றி முடிவுற்றுள்ளது. 2ஜி ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம் குறித் தும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மற்ற அம்சங்கள் குறித்தும் விசாரிக்க, நாடாளு மன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண் டும் என்கிற கோரிக்கையை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வீண்பிடிவாதத்துடன் மறுத்ததே இதற்குக் காரணமாகும்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கையானது, ஆ.ராசாவின் கீழிருந்த டெலிகாம் அமைச்ச கம், உரிமங்கள் மற்றும் அலைவரிசைகள் ஒதுக்கீடு செய்த வழி காரணமாக அரசின் கஜானாவிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. இது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களிலேயே மாபெரும் ஊழ லாக அமைந்திருக்கிறது. ஆயினும், காங்கி ரஸ் தலைமையோ, ஐ.மு.கூட்டணி அரசாங் கமோ இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசா ரணைக் குழுவை அமைக்க, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்திட அனுமதி தர தயாராக இல்லை.

அமைப்பு முழுமையாக அழுகி இருக்கிறது

காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கடந்த சில மாதங் களில் எண்ணற்ற ஊழல்களைப் புரிந்துள் ளது. காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடத் தியது தொடர்பான ஊழலும் இதற்கிணையாக அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆயி னும், அதனை நடத்திய, அமைப்புக்குழு செய் திட்ட தவறான சில நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்றும், பொதுப்பணத்தை மோசடி செய்வதில் இது மிகவும் அற்பத் தொகையே என்கிற முறையில் அரசாங்கம் அதனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிற்கு அரிசி ஏற்றுமதி செய்ததில் உள்ள ஊழல் போன்றவை உயர்மட்ட அள வில் அரசில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சில உதாரணங்களாகும்.

இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல் சம்ப வங்களை, ஒரு சில அரசியல்வாதிகள் அல் லது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்ட ஊழல்களின் வெளிப்பாடு என்று கருதினால் தவறிழைத்துவிடுவோம். சமூகத்தில் ஏற்பட் டுள்ள அழுகல் நிலை மிகவும் ஆழமாகச் சென்று அமைப்பு முழுமையையும் வியாபித் திருக்கிறது. உயர் இடங்களில் இத்தகைய ஊழல் என்பது புதியது ஒன்றுமல்ல. தாராள மயப் பொருளாதாரக் கொள்கை துவங்கப்பட்ட 1990களிலேயே இது வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. தாராளமய சகாப்தத்தில் ஊழலின் தன்மை குறித்து 2001 மார்ச் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’இதழில் நான் எழுதி யிருந்ததாவது:

‘‘ஊழலின் தன்மையைப் பொறுத்தவரை, தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்து வதற்கு முன்பு இருந்த நிலைக்கும் இப்போதி ருக்கும் நிலைக்கும் இடையே என்ன வேறு பாடு? தாராளமயக் கொள்கைகள் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, குறிப்பாக 1985கள் வரை, உயர்மட்ட அளவில் ஊழல் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்கள் உரிமங்கள் பெறுவதற்காகவும் சில விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவும் லஞ்சம் கொடுக்கும் நிலை மட்டுமே இருந் தது. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட பெரும் வர்த்தக நிறுவனத்திற்கும் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரிகள் என்ற அளவில்தான் அது இருந்தது, இப்போது தாரா ளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்பு, அரசின் விதிமுறைகள் எல்லாம் தளர்த்தப் பட்ட பின்பு, ஆட்சியாளர்களின் கொள்கையே விற்பனைக்குத் தயாராகி விட்டது. அந்நியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் தொழில்மயத்திற்குப் பெரும் லாபம் கிடைக் கும் வகையில் ஆட்சியாளர்களின் கொள்கை களையே பெரும் தொகைகளை அளித்து மாற்றமுடிந்தது. அவர்கள் கொடுக்கும் விலை சரியென்று அரசு கருதுமானால் இரவோடு இரவாகவே கொள்கைகளை மாற்ற முடியும். மிகமோசமான முறையில் டெலிகாம் துறை யில் இது நடந்தது. மின்சாரம், எண்ணெய் மற்றும் பல பெரிய தொழில்துறைகளிலும் இத் தகைய தாராளமயக் கொள்கைகள் தொடர்ந் தன. உண்மையில், அரசு மேற்கொண்ட ஒவ் வொரு கொள்கை முடிவுமே, பன்னாட்டு நிறு வனங்கள் மற்றும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களின் சங்கம் அளித்திட்ட தொகையின் அடிப்படையிலேயே மேற்கொள் ளப்பட்டன. இவ்வாறு நாட்டில் இருந்த அனைத்து நிறுவனங்களையும், அரசு ஏஜென் சிகளையும் நாட்டின் பெரு முதலாளிகள் லஞ்சம் கொடுத்துத் தங்கள் பக்கம் வசப்படுத் திக் கொள்ள முடிந்தது. பன்னாட்டு நிறுவ னங்களும், சட்டவிரோத முதலாளித்துவமும் (உசடிலே உயயீவையடளைஅ) ஆட்டிப்படைத்திடும் தாய் லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல் வாதிகள் - அதிகாரவர்க்கத்தினருக்கு இடை யிலான பிணைப்பு என்பது நவீனதாராளமயக் கொள்கை ஆட்சியில் மிக வேகமாக உரு வாகி இருக்கிறது. ஊழல்களின் முதல் அலை என்பது நரசிம்மராவ் அரசாங்கக் காலத்திலேயே வந்துவிட்டது. முதலாளித் துவ (பூர்சுவா) கட்சிகளின் உயர்மட்ட அர சியல்வாதிகள் மாட்டிக்கொண்ட ஹவாலா ஊழல், வங்கிப் பத்திரங்கள் (securities) ஊழல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் நடைபெற்ற மோசடிகள், பெட்ரோல் பங்க் ஊழல் என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன.

டெலிகாம், சுரங்கம் மற்றும் எண்ணெய் வளத்திற்காக நிலங்களைத் தோண்டி ஆராய் தல் முதலியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஒருசில பெரும் வர்த்தக நிறுவ னங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக் காகவே வடிவமைக்கப்பட்டன. அரசின் கொள்கைகள் மூலதனக் குவியலின் முக்கிய மானதொரு கருவியாக எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றி மாறியது.

நவீனதாராளமயக் கொள்கை பெற்றெடுத்த குழந்தையே ஊழல்

பெரும் வர்த்தக நிறுவனங்களுடனான ஊழல் பிணைப்பில் காங்கிரஸ் கட்சி மிகவும் செங்குத்தாய் உயர்ந்தது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), ஜேஎம்எம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. அதில், 1997 ஆகஸ்டில் மக்கள வையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அம்பானிகள், எஸ்ஸார், வீடியோகான் மற்றும் பல பெரும் வர்த்தக நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய அமைச்சராக இருந்த சதீஷ் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகளைப் பட்டியலிட்டிருந்தது. அவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய் யப்பட்டார்கள் என்பது வேறு விஷயம்.

பாஜக ஆட்சியிலிருந்தபோது, அதன் செயல்பாடுகளும் அப்படி ஒன்றும் வித்தியாச மாக அமைந்துவிடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்,டெலிகாம் துறை, பெட்ரோல் பங்க் கள் மற்றும் எரிவாயு ஏஜென்சிகளை விற்றல், ராணுவத் தளவாடங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் என அனைத்து அம்சங் களிலும் தங்களுக்கு வேண்டிய பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகை காட்டி யது என்று காங்கிரஸ் கட்சி சென்ற அதே பாதையில்தான் பாஜகவும் சென்றது. சமீபத் தில்கூட, பெல்லாரி சுரங்க மாஃபியா கும்ப லை பாஜக, கர்நாடகாவில் உள்ள தன்னு டைய அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. எடி யூரப்பா அரசாங்கம், தங்கள் குடும்ப உறுப் பினர்களுக்கும், தன் உறவினர்களுக்கும் மற் றும் இதர அமைச்சர்களின் உறவினர்களுக் கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியிருப்பதில் புதிய சாதனையே படைத் திருக்கிறது.”

முதலாளிகளைப் பொறுத்தவரை, இவ் வாறு ஊழல்பேர்வழிகள் ஆட்சி யிலிருப்ப தை மிகவும் வசதியானதாகவே கருதுவர். சட்டவிரோத முதலாளித்துவமும் (உசடிலே உயயீவையடளைஅ), ஊழலும் நவீன தாராளமயக் கொள்கை யின் இரு கைகள் போன்றவையாகும். இத னை மறைக்கும் விதத்தில் முதலாளித்துவ வர்க்கம் புதிய அறநெறியைச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

ராடியாவின் ஒலிநாடாக்கள் (டேப்புகள்), பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசுக் கும் இடையில் பரஸ்பரம் உதவி செய்துகொள் ளும் கள்ள உறவுகளை வெளிக்கொணர்ந் திருக்கிறது, ஊடகங்களின் எடிட்டர்கள் மற் றும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் வர்த் தக நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கும் இடையேயுள்ள மறைமுக உறவுகள் வெளி வந்திருப்பதைப் பார்த்து மத்தியதர வர்க்கம் அதிர்ச்சியடையலாம். ஆனால் இடதுசாரி களைப் பொறுத்தவரை, அதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவுமில்லை. எனவேதான் கார்ப்ப ரேட் ஊடகங்கள் நம்மை எப்போதும் வசை மாரி பொழிந்துகொண்டிருக்கின்றன. ஊடகங் களில் பெரும்பாலானவை கார்ப்பரேட் கட்ட மைப்பின் ஒரு பகுதியே. எனவேதான் அவை, அரசாங்கம் நவீன தாராளமயக் கொள் கைகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே வேண்டு மென்றே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின் றன. டெலிகாம் அமைச்சராக தயாநிதி மாறன் வர வேண்டுமா அல்லது ஆ.ராசா வரவேண் டுமா என்பதைக் கூட கார்ப்பரேட்டுகள் போட்டிப்போட்டுக்கொண்டு, ஒன்றுக் கொன்று தலையிட்டு, செல்வாக்கு செலுத்தும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த அடிப்படையில் தங்களுக்கு வேண்டியவர் அமைச்சராக வரவில்லையென்றால், அதன் பின் அவர் எங்ஙனம் தங்கள் நலன்களுக்கு வளைந்து கொடுக்கிறார் என்பதை வைத்து அவரது செயல்பாடுகள் மதிப்பிடப்படுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் எப்படி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றப்பட்டு, அந்த இடத் தில் முரளி தியோரா அமர்த்தப்பட்டார் என் பதை நினைவுகூர்ந்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

அரசியலில் பணபலத்தை முறியடிக்க வேண்டியது அவசியம்

சமீபத்திய வெளிப்பாடுகள் கசப்பான தோர் உண்மையை உறுதிப்படுத்தி இருக் கின்றன. பிரதமர் ஓர் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். இதில் சிலர் சில வர்த் தக நிறுவனங்களின் நலன்களைப் பிரதி பலிக்கிறார்கள். சிலர் அவர்களே வர்த்தகர் களாக இருக்கிறார்கள். ஒருசிலர் வழக்கறிஞர் கள். இவர்கள் ஒருசில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞர்களும் ஆவார் கள். அவர்கள் வகிக்கும் இலாகாவில் அவர் கள் சார்ந்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் விஷ யங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஊழல்மிக்க பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தின ரின் பிணைப்பின் மூலமாக இயக்கப்படும் சட்டவிரோதப் பணம்தான் நாட்டின் அரசி யலையும் ஜனநாயகத்தையும் தவறான வழி யில் செலுத்தி, ஒரு மோசமான அரசியல மைப்பை உருவாக்கிக் கொண்டிருக் கிறது. இத்தகைய ஊழல் மற்றும் சட்ட விரோதப் பணத்திற்கும் இடையேயுள்ள நேரடித் தொடர் புதான் தேர்தல்களின்போது மிகப்பெரிய அள வில் பயன்படுத்தப்படுகிறது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, அதன் பிறப்பிடமான இத்தகைய இழிவான பிணைப்பின் மூலாதாரத்தையே தாக்குவ திலிருந்து தொடங்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட் ரம் அலைவரிசை விவகாரத்தில், அமைச்சர் மற்றும் குற்றமிழைத்துள்ள அதிகாரிகள் மட்டு மல்ல, அவர்களைக் கள்ளப் பணத்தாலேயே அடித்துத் தங்கள் வசமாக்கியுள்ள கார்ப்ப ரேட்டுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத் தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். கபில் சிபல் டெலிகாம் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், மேற்கொண்ட நடவடிக்கைகள் பெயரள விலானவையே என்ற சந்தேகத்தை ஏற்படுத் தியுள்ளது. “உங்கள் உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்படக் கூடாது” என்று 85 கம்பெனிக ளுக்கு காரணம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டபின், உள் விசாரணைக் குழு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? சட்ட விரோதமான வகைகளில் உரிமங்கள் பெற்ற அனைத்துக் கம்பெனிகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்க அமைச் சர் ஏன் தயங்குகிறார்? அலைவரிசையை ஏலமிடுவது சிறந்த வழியாக அமையாது போக லாம் என்று அமைச்சர் ஏன் கூறுகிறார்?

இவ்வாறு விஷயங்களை நுணுகி ஆராயும் போது சில விஷயங்களைத் தெளிவாக பார்க்க முடியும். அதாவது ஊழலின் அடிநாதமாக விளங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊழ லுடன் பிணைக்காமல் தப்பவிடும் முயற் சியே அது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க அரசாங்கம் விரும்பாததன் உண் மையான காரணம் இதுவேயாகும். ஏனெனில் அவ்வாறு ஒரு விசாரணைக் குழு அமைக்கப் பட்டுவிட்டால், மேலே சொன்னவாறு பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தினர் இடையேயான பிணைப்பின் மூலமாக செயல்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நலன்களுக்குச் சாதகமான கொள் கைகள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது வெட்டவெளிச்சமாகிவிடும். பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதி களுக்கு இடையிலான பிணைப்பின் மூலம் உருவாகும் ஆபத்தான அம்சங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வின் விரிவடைந்த கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட அரசியல் தீர்மானம் மிகவும் கவலை யுடன் சுட்டிக்காட்டுகிறது. “அரசியலிலும் தேர்தல்களிலும், பணபலம் பாய்ச்சப்படு வதற்கு எதிராக மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தை கட்சி மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது. பணம்படைத்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணபலத்தின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளையே தங்கள் நலன்களுக்கு ஏற்ப உருவாக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் துணையாக நிற்கும் முதலாளித்துவக் கட்சி களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.”

நவீனதாராளமயக் கொள்கைகளே ஊழல் என்னும் முட்டைகள் பெருமளவில் உற்பத்தி யாகக் காரணமாகும். எனவே, ஊழலுக்கு எதி ரான போராட்டத்தையும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் தையும் சரியானமுறையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, December 12, 2010

நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்



புதுதில்லி, டிச. 2-
எதிர்கால இந்தியாவை, நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாடாக உருவாக்குவோம் என்று இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் முனைவர் ஏபிஜெ அப்துல் கலாம் கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் 2010 கருத்தரங்கம் வெள்ளி, சனி, ஞாயிறு தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளன்று படைப்பாளர்களின் கட்டுரைத் தொகுப்பான ‘இதுவரை, இன்று, இனி’ என்னும் நூலை வெளியிட்டு அப்துல் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘இந்த விழாவைச் சிறப்பாக நடத்தும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின்று என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கடந்த மூன்று நாட்ள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழை ஆராய்ந்து, தமிழை வளப்படுத்தி, தமிழ் மொழியின் மாட்சிமையை வெளிக்கொணர்ந்து, அதன் படைப்பாக இன்றைக்கு ‘‘இதுவரை, இன்று, இனி...’’ என்ற புத்தகத்தினை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

1946இலிருந்து இன்றுவரை இப்படிப்பட்ட ஓர் அறிவார்ந்த கருத்தரங்கம் இந்தத் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இப்போதுதான் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது என்று அறிகிறேன். இதைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இப்படிப்பட்டதோர் அருமையான புத்தகத்தை வெளியிட எடுத்துக்கொண்ட முயற்சிக்காக தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், குறிப்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் பொதுச் செயலாளர் சக்தி பெருமாள் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

கட்டுரைகளின் படைப்பாளிகள் தமிழ்த் திறனை, ஆராய்ச்சியை, கவிதை நடையை, மொழியின் திறனை, கற்பனை வளத்தை, வாழ்வின் சூழலை, இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களை, உலகமயமாகும் தமிழை, கணினித் துறையில் பல்வேறு பரிணாமம் பெற்ற தமிழை, பிற மொழிகளுடன் தமிழ் எவ்வாறு சமூக மாற்றத்தில் பங்கு பெற்றுள்ளது என்பதை நூலைத் தொகுத்தளித்துள்ள தொகுப்பாசிரியர் கோ. பாலச்சந்திரன் அருமையாகத் தொகுத்தளித்துள்ளார்கள்.

கணினித் தமிழில் எப்படிப் பல்வேறு வடிவங்கள் இன்றைக்கு யூனிகோடாக வடிவம் பெற்றுள்ளது? இன்றைக்கு உள்ள Level 2 Complex Script என்ற முறையில் தமிழ் யூனிகோடும் அதன் பயன்பாடும் மற்றும் அதில் உள்ள குறைபாடுகளையும் TACE-16 என்ற முறையில் உருவாக்கினால் அது எப்படி கணினி மட்டுமல்ல, iphone, smart phone, android போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும்? இவை குறித்த ஒரு விவாதம் இங்கே தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முடிவு ஆறு கோடி மக்களின் பயன்பாட்டுக்கு உபயோகமானதாக மாறும் என்பது திண்ணம். எனவே, இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்த அத்துணைப் படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் 2010 கருத்தரங்கத்தில் ஏழு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் மேலும் இரண்டு தலைப்புக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒன்று தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், தமிழ் மக்களின் சிறப்பியல்புகளையும் சித்தரிப்பதாக அது அமைய வேண்டும். இரண்டாவது தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் பத்தாண்டுகளில் எவ்வாறு மேம்பட வேண்டும், எப்படி ஒரு வளமான தமிழகத்தை நாம் காண முடியும் என்கிற வகையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிற்குச் சென்றிருந்தேன். உலகக் கவிஞர்களின் 30ஆவது மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் உலகம் முழுதுமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். சீன நாட்டைச் சேர்ந்த கவிஞர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அது என்ன நிகழ்வு? தைவான் நாட்டைச் சேர்ந்த என்னுடைய சீன நண்பர் கவிஞர் யூசி அவர்கள் மேடையேறினார்கள். அவர் சொன்னார்: ‘‘நான் 2005ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு என் நண்பர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தார். அவரிடம் கவிதையைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது, கலாம் என்னிடம் 2200 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தில் பிறந்து, இந்த உலகத்திற்கு, உலகத் திருமுறையை, திருவள்ளுவரின் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை எனக்கு வழங்கினார்.

அதைக் கடந்த ஐந்தாண்டுகளாகப் படித்தேன். பல்வேறு ஆங்கில உரைநடைகளை வாங்கிப் படித்தேன். எவ்வளவு அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் என்பதை அறிந்தேன். அறம், பொருள், இன்பம் குறித்து அவர் எழுதிய இரு வரி கொண்ட குறள், 2200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் மாட்சிமையை, அறிவார்ந்த சமூகத்தின் மகிமையின் வெளிப்பாடாக அமைந்திருந்ததை அறிந்தேன். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும், முழு உலகத்திற்கும் பொருந்தும் வகையிலும் அது அமைந்திருந்ததை உணர்ந்தேன். 2005இல் திருக்குறளை கலாம் எனக்கு அளித்தபோது, இதனைச் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திருக்குறளைப் படிக்க படிக்க, என் நண்பர் கலாம் சொன்னது என்னைத் தூங்கவிடவில்லை. திருக்குறள் சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக அதைச் சீன மொழியில், மொழிபெயர்த்தேன். இன்றைக்கு என் நண்பர் கலாம் முன்னிலையில் உலகக் கவிஞர்களின் 30ஆவது மாநாட்டில் அதனை வெளியிடுகிறேன்’’ என்று சொன்னார். உடனடியாக அங்கு கூடியிருந்த அத்தனை உலக அறிஞர்களும் கவிஞர்களும் ஆரவாரத்துடன் திருக்குறளின் சீன மொழிபெயர்ப்பை வரவேற்று அங்கீகரித்தார்கள். இது வரும் 2011 ஜனவரியில் சீனத்தில் மட்டுமல்ல, சீன மொழி பேசுவோர் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அதன் மகிமையை வெளிப்படுத்தி மக்களின் வாழ்வை வளப்படுத்தும். இவ்வாறு தமிழர் படைத்த திருக்குறள் உலகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

அப்படித் தமிழை வளர்த்த தமிழர்கள் எப்படி இருக்க வேண்டும்? அதாவது இன்றைய சூழலில் தமிழர்களின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட வாழ்வு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்றம் தரும்? இன்றைக்கு ஆறு கோடி பேராக இருக்கக் கூடிய தமிழ் மக்கள் 2020இல் பத்து கோடிக்கும் மேலாக உயர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டுமானால், என்ன வேண்டும்? சிறப்பாக வாழ, முதலாவதாக சிறந்த கல்வி அவசியம். கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு அவசியம். வேலைவாய்ப்பு மட்டுமல்ல, பண்டைத் தமிழர்களுக்கிருந்த நற்பண்புகள் அவசியம். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியம் வேண்டும். தனது செயலில் நேர்மை வேண்டும். பகைக்கு அஞ்சா விவேகத்துடன் கூடிய வீரம் வேண்டும். அனைவரையும் மதிக்கும் பண்பு வேண்டும். வாழ்க்கையில் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பயனற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்க வேண்டும். அரசியலில் நேர்மை, நாணயம் வேண்டும், தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்கும் தலைமைப் பண்பு வேண்டும். நமது முன்னோர்கள் காட்டிய அறவழியை நமது குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். வாழ்க்கையில் உழைத்து, செல்வம் சேர்த்தோருக்கு ஈகைப் பண்பு வேண்டும். ஈகை அறிவுச் செல்வத்தைத் தருவதாக அமைய வேண்டுமேயல்லாமல், தானமாகக் கூடாது.

இதற்கெல்லாம் ஒரு அடிப்படைப் பண்பு வேண்டும். என்ன அந்த அடிப்படைப் பண்பு? அதுதான் நல்லொழுக்கம். நல்லொழுக்கம் என்றால் என்ன?

எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி நிலவினால், நாட்டில் சீர் முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும்.
எல்லாவற்றிற்கும் அடிப்படை நல்லொழுக்கம என்பது இந்த சிறு கவிதை மூலம் உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன்.

நல்லொழுக்கத்துடன் உழைத்தால், நல்ல எண்ணங்கள் உண்டாகும். நல்ல சிந்தனையால், நல்ல கவிதைகள் பிறக்கும். தமிழ் மொழி இலக்கியம் வளரும். தமிழ் விஞ்ஞானம் வளரும். தமிழர் தம் தொழிலில் சிறந்து விளங்குவர். தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கும். நல்லொழுக்கம் உள்ள தமிழகம் உழைப்பால் சிறப்பாக வளரும். திருவள்ளுவர் கண்ட திருக்குறள் போல் மற்றுமொரு மறுமலர்ச்சிக் காவியம் பிறக்கும். தொல்காப்பியத்தைப்போல் தமிழ் இலக்கியப் படைப்புகள் பலபல உண்டாகும். ஐம்பெரும் காப்பியங்கள் கண்ட தமிழகம் பல அரிய காப்பியங்ளை வடிக்கும். தமிழ்மொழி சிறக்கும். அப்படிப்பட்ட தமிழகம் உருவாக வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நல்லொழுக்கததை நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். நிறைவாக சங்கத்தின் செயலாளர் சக்திபெருமாள் நன்றி கூறினார்.
--

Saturday, December 11, 2010

தமிழ் இனிய மொழி ஆனால் கற்பதற்குக் கடினமான மொழி-தமிழ் 2010 கருத்தரங்கில் தில்லி முதல்வர் புகழாரம்













புதுதில்லி, டிச. 12-
தமிழ் மிகவும் இனிய மொழி ஆனால் அதே சமயத்தில் கற்பதற்கு மிகவும் கடினமான மொழி என்று தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் 2010 கருத்தரங்கம் வெள்ளியன்று மாலை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் தொடங்கியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் பேசியதாவது:
‘‘நான் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் இங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த போது தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களும் வந்திருந்தார்கள்.
எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என் மருமகளே தமிழகத்தின்தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். எனக்கும் என் கணவருக்கும் தமிழ் நண்பர்கள் ஏராளம்.
தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள். அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டுவந்தவர் தந்தை பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.
தில்லி மாநகரத்தில் பல்வேறு மொழி பேசுவோர் வாழ்கிறோம். இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.
தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்துகிற 2010கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.
அடுத்து தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், கனடா லிண்ட்சர் பல்கலைக்கழக பேராசிரியர் கவிஞர் சேரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக இந்திய மொழிகள் மையத் தலைவர் கி.நாச்சிமுத்து, தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் அ.மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பி.குருமூர்த்தி நன்றி கூறினார்.
முன்னதாக வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் மங்கல இசை வாசிக்கப்பட்டது. நிறைவாக பத்மஸ்ரீ சரோஜா வைத்தியநாதன் மாணவியர் பரதநாட்டியம் நடைபெற்றது.
சனிக்கிழமை
கருத்தரங்கம் சனிக்கிழமையன்று தொடர்ந்தது. சனிக்கிழமை காலை நடைபெற்ற 50 ஆண்டு காலப் புனைவிலக்கியம் என்ற அமர்வு நடைபெற்றது. முனைவர் எம்.ஏ.சுசீலா நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் என்ற பொருளில் முனைவர் பிரேம், நாவல் இலக்கியம் என்ற பொருளில் நாஞ்சில் நாடன் உரையாற்றினார்கள். இன்றைய சிறுகதைகள்: சாதனைகளும் சவால்களும் என்ற பொருளில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அனுப்பி வைத்த கட்டுரையை ஷாஜஹான் வாசித்தார். இத்துடன் காலை அமர்வு நிறைவுற்றது.
இதனை அடுத்து கவிதை இலக்கியம் என்ற இரண்டாவது அமர்வு நடைபெற்றது. சிந்துக்கவி மா. சேது ராமலிங்கம் நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். கவிஞர் கலாப்ரியா இன்றைய கவிதை போகும் திசை என்ற பொருளிலும், கவிஞர் முத்துலிங்கம் மரபுக் கவிதை மறக்கப்பட வேண்டியதா என்னும் பொருளிலும், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் இந்திய அளவில் தமிழ்க் கவிதையின் நிலை என்ற பொருளிலும் உரையாற்றினார்கள்.
அடுத்து கணினித் தமிழ் என்ற மூன்றாவது அமர்வு நடைபெற்றது. ஜான்சுந்தர் நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். எழுத்துரு தரப்படுத்தல் என்னும் பொருளில் பத்ரி சேஷாத்ரி அவர்களும், கணினித் தமிழ் மொழியாக்கச் சிக்கல்கள் என்னும் பொருளில் முனைவர் பெ.சந்திரபோஸும் உரைநிகழ்த்தினார்கள்.
கருத்தரங்கம் ஞாயிறு அன்று நிறைவடைகிறது. ஞாயிறு காலை பிறமொழிகளில் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்விற்கு முனைவர் எச். பாலசுப்பிரமணியன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். பிறமொழி அறிஞரின் பார்வையில் தமிழ் என்னும் பொருளில் பேராசிரியர் சிவபிரகாஷ், சமூக மாற்றத்தில் மொழிபெயர்ப்பின் பங்கு என்னும் பொருளில் அமரந்த்தா உரையாற்றுகிறார்கள்.
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை முனைவர் கோவி. இராசகோபால் நெறியாளுநராக இருந்து நடத்தி வைக்கிறார். கவிஞர் இமையம், ‘எது இலக்கியம - எது தலித் இலக்கியம’ என்னும் பொருளிலும், எழுத்தாளர் அம்பை, ‘பால்தன்மை, பட்டுணர்வு மற்றும் வெளிப்பாடு:படைப்பிலக்கியம் பற்றிய சிலகுறிப்புகள்’ என்னும் பொருளிலும், எழுத்தாளர் லிவிங்ஸ்மைல் வித்யா, ‘தமிழ்ச்சூழலில் பாலியல் சிறுபான்மையினர் - பதிவுகள்’ என்ற பொருளிலும் உரையாற்றுகிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை எழுத்தாளர் நாக. வேணுகோபாலன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். உலகமயமாகும் தமிழிலக்கிய முயற்சிகள் என்னும் பொருளில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், புகலிடத் தமிழ் இலக்கியம - ஒரு பார்வை என்னும் பொருளில் லண்டனைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் மு. நித்திhனந்தன் உரையாற்றுகிறார்கள்.
நாடக - ஊடகத் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை யதார்த்தா கே. பென்னேஸ்வரன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். நாடகம், நிகழ்வு, அழகியல் என்னும் பொருளில்‘வெளி’ ரங்கராஜன், ‘காளிதாஸ்’ முதல் ‘காதல்’ வரை தமிழ்த் திரைப்படங்கள் குறித்து தியடோர் பாஸ்கரன், ‘ஆக்டோபஸ் கைகளும் விடுபடும் உபாயங்களும்’ என்னும் பொருளில் குறும்பட இயக்குநர் கவிஞர் ரவி சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்கள்.
நிறைவு விழாவிற்கு மததிய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜெகத்ரட்சகன் தலைமை வகிக்கிறார். குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

Monday, December 6, 2010

அமெரிக்க அரசின் முகத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்




விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க அரசின் சுமார் நான்கு லட்சம் ரகசிய யுத்த ஆவணங்களை முன்பு வெளிப்படுத்தி இருந்தது. இப்போது அமெரிக்க அரசாங்கம் உலகம் முழு வதும் உள்ள தன் தூதரகங்களுக்கு கம்பி வழித் தந்தி மூலம் அனுப்பி வைத்த இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மிகவும் ரகசியமான ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் சமீபத்தில் பிப்ரவரியில் அனுப்பி வைத்தவைகளும் அடங்கும். இவை, மீண்டும் ஒருமுறை, அமெரிக்க ஏகாதி பத்தியம் உலகம் முழுவதும் தன் மேலா திக்கத்தை நிறுவிட, பழிபாவத்திற்கு அஞ்சாது எந்த நிலைக்கும் தாழ்ந்திடும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக் கும் அமெரிக்க அரசின் ரகசிய யுத்த ஆவ ணங்கள் இராக்கிலும் ஆப்கானிஸ் தானத்திலும் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் அதன் கொடூர முகத்தை வெளிப்படுத்தியது. இப்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி இருக்கும் ஆவணங்கள், அமெரிக்கா பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங் களில் எப்படியெல்லாம் தலையிட்டிருக் கிறது என்பதைக் காட்டுகின்றன.

இதில் மிகவும் கண்டனத்திற்குரிய செயல்பாடு எதுவெனில், அமெரிக்க அர சின் அயல்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட ஐ.நா. உயர்மட்ட அதிகாரிகள் அனைவர் நடவடிக்கைகள் குறித்தும் உளவு பார்க்க வேண்டும் என்று கட்ட ளையிட்டிருப்பதுதான். ஐ.நா. மீது உளவு பார்ப்பது தடை செய்யப்பட்டு பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் இருப்பதை நினைவுகூர்தல் வேண்டும். தனிநபர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து 1946ஆம் ஆண்டு ஐ.நா. கன் வென்ஷன் கூறுவதாவது: ‘‘ஐ.நா. ஸ்தா பன வளாகம் மிகவும் புனிதமான இட மாகும். ஐ.நா.வின் சொத்துக்களும் உட மைகளும் அவை எங்கே நிறுவப்பட் டிருந்தாலும், யாரால் பேணப்பட்டு வந் தாலும், அவை நிர்வாகத் தரப்பின ராலோ, நீதித்துறையினராலோ அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்ற நடவடிக்கை களாலோ சோதனை செய்யப்படுவதி லிருந்தும், பறிமுதல் செய்யப்படுவதி லிருந்தும், விலக்களிக்கப்பட்டவை களாகும்.’’

இவற்றை முற்றிலுமாக மீறக்கூடிய விதத்தில் கிளிண்டன் ரகசிய தந்திச் செய்திகள் மூலமாக, ஐ.நா. உயர் அதி காரிகளின் கிரெடிட் கார்டு எண்கள், அவர்கள் பயணம் செய்யும் விமானங் களின் எண்கள், கைரேகைகள், டிஎன்ஏ சோதனை விவரங்கள் உட்பட அனைத் தையும் சேகரிக்குமாறு கட்டளையிட்டி ருக்கிறார். அவை மட்டுமல்ல, அவற்றின் ரகசிய சங்கேதச் சொற்கள், சங்கேதக் குறியீடுகள், கணினியின் செயல்பாடு கள் ஆகியவை குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருப்பது என்பதும் நிச் சயமாக அமெரிக்கா, சர்வதேச அளவில் ஒரு தாக்குதலைத் தொடுக்கத் தன் னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக் கிறது என்கிற சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

லண்டன் கார்டியன் எழுதியிருப்ப தாவது: ‘‘ஞாயிறு அன்று வெளியாகி இருக்கும் அமெரிக்க அரசின் கம்பி வழித் தந்திச் செய்திகள் எப்படி அமெரிக்கா தன்னுடைய தூதரகங்களை, உலகத்தை வேவுபார்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப் படுத்துகின்றன.’’ மேலும் அது கூறு கிறது: ‘‘ஹில்லாரி கிளிண்டன் பெயரி லும் அவருக்கு முன் அயல்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்த கண் டோலிசா ரைஸ் பெயரிலும் வெளியாகி யுள்ள செய்திகள், தங்கள் தூதரக அதி காரிகளை, தாங்கள் உள்ள நாடுகளில் உள்ள ராணுவத் தளங்கள், ஆயுதங் களின் விவரங்கள், அரசியல் தலைவர் களின் வாகன விவரங்கள் ஆகியவற்றை யும் சேகரித்திடுமாறு கேட்டுக்கொண் டிருக்கின்றனர்.’’ இந்தக் குற்றச்சாட்டுக் களின் மேல் அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கார்டியன் வினவிய போது, அவர், ‘‘அமெரிக்கத் தூதரக அதி காரிகள், உளவு வேலைகளைச் செய்திட அமர்த்தப்படவில்லை’’ என்று கூறி அவற்றை மறுத்திருக்கிறார். ஆயினும் அமெரிக்கா, உளவு வேலைகளையும் வேவுபார்க்கும் வேலைகளையும் தூதரக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதுகிறது என்பது தெளிவாகும்.

ஹில்லாரி கிளிண்டன் ஒருபடி மேலேயே சென்று, ‘‘நாட்டின் மிக முக் கியமான தகவல்கள் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பதற்கு’’ கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முக்கிய மான தகவல்கள் சட்டவிரோதமாக ‘‘வெளியாகி’’ இருப்பதற்குத்தான் அவர் கண்டனம் தெரிவித்திருப்பதையும், ஆனால் அவற்றின் ‘‘சாராம்சங்கள்’’ குறித்து அல்ல என் பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ள ஹில்லாரி கிளிண்டன், அதைச்சொன்ன அதே மூச்சில், ‘‘அமெரிக்க நிர்வாகம், உலகப் பொருளாதாரத்தை நன்னிலைக்குக் கொண்டு செல்வதற்காகவும், சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற் காகவும், அழிவுதரும் ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகவும், மனித உரிமைகளை யும் மண்ணின் மாண்புகளையும் முன்னேற்றுவதற்காகவும் ஒரு வலுவான அயல்துறைக் கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக் கிறது’’ என்றும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அரசின் கொள்கைகள் உன்னதமானது எனில், அது ஏன் இத்த கைய இழிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும்? இதற்கு ஹில்லாரி கிளிண்டன் அளித் துள்ள பதிலிலேயே காரணங்கள் காணப் படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத் தியத்தைப் பொறுத் தவரை, மண்ணின் மாண்புகள் என்றால், அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்துதல் என்று பொருள். மனித உரிமைகள் என்றால் அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்திடும் நபர்களின் மனித உரிமைகள் என்று பொருள். இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் முத லான நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களின் மனித உரிமைகள் ஒழித்துக் கட்டப்பட்டிருப்பது குறித்து அதற்கு சிறிதளவும் கவலை கிடையாது.

அமெரிக்க ரகசிய ஆவணங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைதி நடவடிக்கைகளில் அமெரிக்காவின் செயல்பாடுகளில் உள்ள இரட்டை வேடத்தை நன்கு காட்டுகின்றன. இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அரசின் தூதரகங்கள், பாலஸ்தீன அரசாங்கம் குறித்தும் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குறித்தும் குறிப்பாக காசா மற்றும் மேற்கு கரைக்குள் உள்ள படையினர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு, பாலஸ்தீனர் களுக்கு தாய்நாட்டிற்கான உரிமை களைப் மறுப்பதற்கான வேலைகளைச் செய்ய உதவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுபோன்று இன்னும் அதிகமான அளவில் ரகசிய ஆவணங்கள் வெளி யிடப்படும் என்று உலகத்திற்கு உத்தர வாதம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானமற்ற கொடூரமான முகத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் அவை அமையலாம். கிளிண்டன், ‘‘இவ்வாறு ரகசிய ஆவ ணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கை மீதான தாக்குதல்கள் மட்டு மல்ல, உலகத்தைப் பாதுகாத்திடவும், பொருளாதார வளமையைக் கொண்டு வருவதற்காகவும் ஒன்றுபட்டுச் செயல்படும் சர்வதேச சமூகத்தினரின் மீதான தாக்குதலுமாகும்’’ என்று கூறியிருக்கிறார். யாருடைய ‘பாது காப்பு’ மற்றும் யாருடைய ‘வளமை’?

அமெரிக்க மக்கள், ஓர் ஆப்ரிக்க-அமெரிக்கரைத் தங்கள் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தபோது உலகமே அதனை வியந்து பார்த்தது. உலக மக்கள் மத்தியில் இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தபோது, நாம் ‘‘வேங்கைப்புலி தன் புள்ளிகளை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளாது’’ என்று கூறி எச்சரித்திருந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகத்தை மேலாதிக்கம் செய்திட மிகவும் அரு வருக்கத்தக்க செயல்களில் இறங்கி யிருப்பதாக ரத்தத்தை உறைய வைத் திடும் விதத்தில் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கப் பேராசை முறியடிக்கப்பட் டால்தான், பரஸ்பர சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப் படையில் சர்வதேச உறவுகள் அமைந் தால்தான், ‘மனித உரிமைகளையும் மண்ணின் மாண்புகளையும் முன் னெடுத்துச் செல்லுதல்’ சாத்தியமாகும்.

-தமிழில்: ச.வீரமணி

Saturday, December 4, 2010

2ஜி என்றால் என்ன?

நாட்டின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இமாலய ஊழல் நடந்திருப்பது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தான். 2ஜி, 2ஜி என்று செய்தித்தாள்களில் அடி படும்போது, விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ள மக்கள் இந்த 2ஜி என்றால் என்ன என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

1990களில் தொலைபேசி என்பது மிகவும் அபூர்வமான ஒன்று. ஒருவருக்குத் தொலைபேசி இணைப்பு வேண்டும் என்றால் அவர் தொலைபேசி அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுக்கு பதினைந்து இணைப்புகளுக்கு மட்டும் பரிந்துரை செய்திடலாம். தொலைபேசிகள் தொலைபேசிக் கம்பிகளின் வழியாக இணைக்கப்பட்டிருந்தன.

பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிரடிப் புரட்சி ஏற்பட்டது. இதனை தலைமுறை மாற்றம் என்று குறிப்பிடுகிறார்கள். தொலைபேசிக் கம்பிகளுக்குப் பதிலாக, கம்பியில்லா நிலையிலேயே தொலைவில் உள்ளவர்களைத் தொடர்புகொள்ளக்கூடிய வசதிகள் கிடைத்தன.

1ஜி என்கிற முதல் தலைமுறை தொலைபேசி வந்த சமயத்தில், இந்தியா வில் இதனைப் பாதுகாப்புக் கருதி ராணுவம் மற்றும் காவல்துறையினர் மட்டும் உபயோகித்தனர். காவலர் கள் பேசும்போது பேச வேண்டிய இடத்திற்குப் பேசிவிட்டு, ‘ஓவர்’ என்று சொன்னபிறகு, மறு முனை யிலிருந்து பதில் சொல்லி விட்டு அவர் ‘ஓவர்’ என் பார். இந்த 1ஜி இணைப்பு மக்களுக்கோ, தனியாருக்கோ தரப்படவில்லை.

அடுத்து 2ஜி என்கிற இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசைகள் அறிமுகமாயின. 1ஜி அன லாக் ரேடியோ சமிக்ஞை களைப் பயன்படுத்திய அதே சமயத்தில், 2ஜி டிஜிட்டல் ரேடியோ சமிக்ஞைகளைப் பயன்படுத்தியது. இதன் காரணமாக இதில் மிகவும் அதிகமான அழைப்பு களைப் பதிவு செய்து, அனுப்பிட முடியும். 2ஜி செல்போன் கருவிகள், மிகவும் குறைந்த அளவே ரேடியோ அலைக்கற்றையை அனுப்புவதால், இவை 1ஜி-யைவிட மிகவும் சிறியன.

2ஜி-இன் மற்றொரு அனுகூலம். இதன் பேட்டரி லைஃப், 1ஜியைவிட அதிக மாகும். இது தகவல்களை டிஜிட்டல் மூலமாக அனுப் புவதால், 2ஜி மூலம் குறும் செய்தி சேவை (எஸ்எம் எஸ்), மின் அஞ்சல் முதலா னவற்றைக்கூட இதன் மூலம் அளிக்க முடியும். மேலும் 2ஜி மிகவும் குறைந்த அளவே மின் சக் தியைப் பயன்படுத் துவதால் நுகர்வோர் வைத்திருப்பதற் கும் மிகவும் பாதுகாப் பானதாகும்.

இவ்வாறு 2ஜி அதிகப் பயன்பாட்டை அளித்த தால், மக்கள் மத்தியில் மிக வேகமாகக் காலூன்றியது. 1990களில் மிகவும் அரிதாக இருந்த தொலைபேசி இணைப்புகள் பல கோடி அளவிற்கு உயர்ந்தது. ஒரு தெருவிற்கே ஒரு தொலை பேசிதான் என்று இருந்த நிலை மாறி, ஒரு வீட்டி லேயே ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி என்ற நிலை ஏற்பட்டது.

3ஜி

அடுத்து இப்போது 3ஜி என்று ஒயர்லெஸ் தொழில் நுட்பத்தின் மூன்றாம் தலைமுறை தொலை பேசி கள் வந்துவிட்டன. முன்பி ருந்த 2ஜியின் வேகத்தை விடப் பன்மடங்கு வேகத் துடன், மிகவும் முன்னேறிய மல்ட்டிமீடியா வசதிகளு டன், உலக அளவில் பேசக் கூடிய வாய்ப்புடன் 3ஜி வந்திருக்கிறது. 3ஜி தற்சம யம் அதிகமான அளவில் கைபேசியில் இணையதள இணைப்பைப் பெறு வதற்குப் பயன்படுத்தப் படு கிறது. மேலும் எதிர்முனை யில் பேசுபவரின் ஒலிக்குறியு டன் ஒளிக்குறியையும் காட் டக்கூடிய வகையில் ‘வீடியோ கால்களை’ 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்ய முடியும். இணைய தளத்தை உலகில் எந்நேரத்திலும் எங்கேயிருந்தும் மேய (browse) முடியும்.

2ஜியைவிட பன்மடங்கு வேகத்தில் தகவல்களை 3ஜி மூலம் அனுப்ப முடியும். ஒலி, ஒளி முதலியவை 2ஜி யில் கிடைப்பதைவிட மேலும் மேம்படுத்தப்பட்ட வகையில் 3ஜியில் கிடைத் திடும். வீடியோ கான்பரன் சிங் சாத்தியம். இணைய தளத்தினில் மிக அதிக வேகத்தில் உலாவரமுடியும். இணையதளத்தின்மூலம் தொலைக்காட்சி அலை வரி சைகளைக்கூடக் காண முடியும்.

4ஜி
இப்போது 4ஜி என்கிற நான்காம் தலைமுறை ஒயர் லெஸ் தொழில்நுட் பமும் வந்துவிட்டது.3ஜியின் வேகத்தைவிட, 4ஜி பன் மடங்கு வேகமானதாகும். எனவேதான் தொழில்நுட் பத் துறையினர் 4ஜி தொழில் நுட்பத்தை ‘‘மேஜிக்’’ (“MAGIC”) என்று அழைக்கிறார்கள். அதாவது, மொபைல் மல்ட்டி மீடியா, எந்தநேரத்திலும்/எங்கிருந் தும், உலக அளவில் பேசக் கூடிய வாய்ப்பு, ஒருங்கி ணைக்கப்பட்ட ஒயர்லெஸ் தீர்வு, தனிப்பட்டவர் தேவைக்கேற்பத் திருத்தி அமைத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் என்று பொருள் படக்கூடிய Mobile Multimedia, anytime/anywhere, global mobility support; integrated wireless solution and customized personal services வசதிகள் இதில் இருக்கின்றன.

--