Sunday, September 27, 2015

நேபாள அரசமைப்புச் சட்டம்: ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை


நேபாள அரசமைப்புச் சட்டம்:
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை
கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நேபாளத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் நேபாள மக்கள் தொடர்ந்து நடத்திவந்த போராட்டத்தின் விளைவாக, இவ்வாறு ஒரு கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசு நிறுவப்படும் அளவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இடைக்கால அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப்பின்னர், மிகவும் சிக்கலான அரசியல் நடைமுறைகளுக்குப்பின்னர்,
அரசியல் நிர்ணயசபையானது, மிகவும் தீர்மானகரமான முறையில் (மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 507 உறுப்பினர்களின் ஆதரவுடன்) இந்த அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. நேபாள மக்கள், நேபாளத்தின் மூன்று பெரிய அரசியல் கட்சிகளாக விளங்கும் - நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இவ்வாறு குறிப்பிடத்தக்க முறையில் சாதனை புரிந்ததற்காக வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
மோடி அரசின் தலையீடு
இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருப்பதை வரவேற்பதில் இந்தியா முதலாவதாக இருந்திருக்க வேண்டும். மாறாக, மோடி அரசாங்கம் ஓர் எதிர்மறை அணுகுமுறையை பின்பற்றி இருக்கிறது. ஒரு தேவையற்ற தலையிடும் நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது. அரசியல் நிர்ணயசபையில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு இரு நாட்களுக்குப் பின், மோடி அரசாங்கம் தன் அயல்துறை செயலாளர் ஜெய்சங்கரை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து,அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிற செப்டம்பர் 20 அன்று அவ்வாறு நடைபெறாமல் நிறுத்துவதற்காக காத்மண்டுக்கு அனுப்பியது. நேபாளத்தின் இறையாண்மை விஷயங்களில் மிகவும் கேடுகெட்ட முறையில் தலையிடுவதற்கு அது கூறும் காரணம், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற அரசமைப்புச் சட்டம் மாதேஷி மக்களுக்குப் போதுமான அளவிற்கு பங்களிப்பினைச் செய்திடவில்லை என்றும், அதன் விளைவாக மாதேஷி மக்கள் மத்தியில் ஓர் ஆழமான அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதுமாகும். அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பின்னர், இந்திய அயல்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் மற்றும் வன்முறை குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. இதற்கு அடுத்து இரு நாட்களில் இந்திய அரசின் சார்பில் இரு அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் டெராய் மண்டல நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்திருப்பதுடன், அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்து மாதேஷி மக்களின் கவலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் கலந்தாலோசனைகள் செய்வதற்காக அழைக்கப் பட்டிருக்கிறார். நேபாளம் குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் ஒரு பெரிய அண்ணன் அணுகுமுறை யை அடிக்கடி கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். ஆயினும் அத்தகைய அணுகுமுறை இப்போது மிகவும் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. தங்கள் நாட்டின் சொந்த ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளநேபாளத்திற்கு இருக்கும் இறையாண்மை உரிமையை இரக்கமற்ற முறையில் அது அசட்டை செய்கிறது.
தெற்காசியாவிலேயே மேம்பட்ட சட்டம்
நேபாள அரசமைப்புச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறதை விட மிக விரிவான அளவில் அந்நாட்டின் பிரஜைகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது. அமையவுள்ள மக்கள் பிரதிநிதிகள் அவையில் அரசியல் கட்சிகளுக்கு 45 சதவீத இடங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய விதத்தில், தேர்தல் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்கள், தலித்துகள், மாதேஷிகள், ஜன்ஜாதிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் அரசமைப்புச் சட்டத் தின் பல்வேறு அமைப்புகளில் இடஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏழு மாநிலங்கள் இருக்கும். நேபாள அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் மற்றும்ஸ்தல அரசாங்கங்கள் என மூன்று மட்டங்களில் அரசாங் கங்கள் அமைக்கப்படும். ஒருசில குறைபாடுகள் இருப் பினும்கூட, தெற்காசியாவில் தற்போதுள்ள ஜனநாயகஅரசமைப்புச் சட்டங்களில் இருப்பதைவிட பல் வேறு அம்சங்களில் நேபாள அரசமைப்புச் சட்டம் மேம்பட்ட தாகும். வரைவு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் ஒன்று, நேபாள அரசை ஒரு மதச்சார்பற்ற அரசு என்றுவரையறுத்திருப்பதாகும். நேபாளத்தில் சில பிரிவினர் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். மன்னர் ஆதரவு ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியும் மற்றும் பல்வேறுஇந்துத்துவா குழுக்களும் நேபாளம் முழுவதும், நேபா ளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. அரசியல் நிர்ணயசபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
பாஜகவின் ஆசை
நேபாளத்தை இந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளத்திற்குள் செயல்பட்டு வரும் சக்தி களுக்கு இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இந்துத்துவா சக்திகள் அனைத்தும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்தன. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வைத்தியநாத், நேபாளத்தை இந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளக் குடியரசுத் தலைவருக்கும், அரசியல் நிர்ணயசபையின் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி இருந்தார்.முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் என்ற முறையில் 2010 மார்ச்சில் மறைந்த பிரதமர் ஜிபி கொய்ராலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேபாளத்திற்குச் சென்றிருந் தார். அந்த சமயத்தில் அவர், “உலகிலேயே நேபாளம் மட்டுமே இந்து ராஜ்ஜியமாக இருந்ததில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தோம். நேபாளம் மீண்டும் இந்து அரசாக மாறும் எனில் நாங்கள் மிகவும் மகிழ்வோம்,’’ (ஐஏஎன்எஸ், மார்ச் 22, 2010) என்று பேசியிருந்தார். நேபாளத்தில் இந்து ராஷ்ட்ரம் அமைய வேண் டும் என்று நடைபெற்று வரும் பிரச்சாரங்களில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் இந் துத்துவா அமைப்புகளின் சாதுக்களும் தலைவர்களும் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆத்திரம் கொள்ளும் இந்துத்துவா சக்திகள்
நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும், நேபாளம் ஒருமதச்சார்பற்ற குடியரசாகத் திகழும் என்று கூறியிருப்ப தும்தான் இந்தியாவில் இயங்கும் இந்துத்துவா சக்தி களை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. பாஜகவும் இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாவிட்டாலும், இந்தக் கோபத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது. மோடிஅரசாங்கத்தால் எதிர்மறையான நிலைப்பாடு எடுக்கப் பட்டிருப்பதற்கு அநேகமாக இதுதான் காரணமாகும். நேபாள மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக் கும் மாதேஷி மக்கள் மத்தியில் நியாயப்பூர்வமான குறைகள்இருக்கலாம். ஆனால் மோடி அரசாங்கம், அவர்களின் கோரிக்கைகளுக்காக வெளிப்படையாக நிலை எடுத் திருப்பதை, அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டிருக்கிறது என்று கூறுவதைத் தவிர வேறெப்படியும் கூற முடியாது. மாதேஷி கிளர்ச்சிக்கு மோடிஅரசாங்கம் மவுனமாய் ஆதரவு அளித்து வருவ தற்கு பீகார் சட்டமன்றத் தேர்தலும் ஒரு காரணமாகும். பீகாரில் எல்லை மாவட்டங்களில் வாழும்மக்களில் பெரும்பகுதியினர் மாதேஷி மக்களுடன்எல்லைக்கப்பாலும் தொடர்புகளைக் கொண்டிருக் கின்றனர். நேபாளத்துடனான உறவுகளுக்குத் தீங்குபயக்கக்கூடிய விதத்தில், இவ்வாறு மிகவும் குறுகியஅரசியல் லாபத்திற்காக இந்த அரசு, நிலை எடுத்திருக் கிறது. நேபாள அரசாங்கமும், நேபாளத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைமைகளும் மாதேஷி மக்களின்அபிலாசைகளை எப்படி நிறைவேற்றலாம் என்று பரிசீலிக்க முன்வர வேண்டும். அரசமைப்புச் சட்டங் கள் என்பவை விரைப்பானவைகளோ, யாராலும் மாற்றமுடியாதவைகளோ அல்ல. ஜனநாயக நடைமுறை களின்கீழ் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.மோடி அரசாங்கத்தின் வெறித்தனமான தலையீடு, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லவிதமான அண்டை உறவுகளைக் கறைப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். இந்தியாவின் பெரிய அண்ணன் அணுகுமுறையிடமிருந்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண் டும் என்கிற எச்சரிக்கை செய்தியை தெற்காசியாவில் உள்ள இதர நாடுகளுக்கும் இது அனுப்பி வைத்திருக் கிறது.
செப்டம்பர் 23, 2015
தமிழில் : ச. வீரமணி

 

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்




இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் வேண்டுகோள்
(1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிட, கம்யூனி°ட் கட்சியைக் கட்டி வளர்த்திட அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்°, லெனின், கம்யூனி°ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)
பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.
அன்புத் தோழர்களே,
ஒரு புரட்சிக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகளைப் பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்முனைப்புள்ள ஆதரவைத் திரட்டுவதற்காக அவர்களை நாங்கள் அணுகுவோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உணர்ச்சிகரமான பசப்பு வார்த்தைகள் எதற்கும் அவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இப்பொழுது இரண்டு வெவ்வேறு கட்டங்களை நீங்கள் கடந்தாக வேண்டியுள்து. முதலாவது முன்னேற்பாடு, இரண்டாவது நேரடி நடவடிக்கை.
தற்போதைய போராட்டத்திற்குப் பிறகு நேர்மையான புரட்சிகரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையினையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கித் தள்ளுங்கள். நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும் கடினமான பணி. புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய-பொருளாதார சூழ்நிலைகளின் மூலமாகவே கொண்டுவரப்படும். இந்த சூழ்நிலைகளால் கொடுக்கப்படும் எந்தவகையான வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும் புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவதும் மிகவும் கடினமான தொரு பணி.  அப்பணி, புரட்சிகர தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்ப°தராகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலை நேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் ஏற்கனவே நிறையப்பேர் இருக்கின்றனர். அவர்கள் பயனற்றவர்கள்.
நமக்குத் தேவையானவர்கள்- லெனினுக்கு பிடித்தமான வார்த்தையில் சொல்வதானால்- புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேர புரட்சியாளர்களே (professional revolutionaries). புரட்சியைத்தவிர வேறெந்த இலட்சியமோ வாழ்நாட் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சிக்குள் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கு முக்கியமாக உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு கட்சி. அக்கட்சியானது மேலே விவாதிக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த தொண்டர்களை (அதாவது முழுநேர புரட்சியாளர்களை) கொண்டதாக இருக்க வேண்டும். அத்தொண்டர்கள், தெளிவான சிந்தனைகளும் கூரிய அறிவும் முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கட்சிக்குத் தேவைப்படுகின்ற தொண்டர்களை இளைஞர் இயக்கத்தின் மூலமாக மட்டுமே கொண்டு வர முடியும். ஆகவே இளைஞர் இயக்கத்தையே நமது செயல் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாக நாம் காண்கிறோம்.
தங்களது கருத்துக்களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் குறிக்கோளுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தம்மையே உணருபவர்களாகவும் இருக்கும் இளைஞர்களை (இளைஞர் இயக்கத்திலிருந்து) கட்சிக்குக் கொண்டு செல்லலாம். கட்சித் தொண்டர்கள் எப்போதும் இளைஞர் இயக்கத்தின் செயல்பாட்டையும் சேர்த்து வழிநடத்துபவர்களாகவும் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெகுஜன பிரச்சாரப் பணியில் இருந்து கட்சியின் வேலை துவக்கப்பட வேண்டும். இது மிகவும் இன்றியமையாதது.
இவை நீங்கலாக, இராணுவத் துறை ஒன்று கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும். சில நேரங்களில் இதன் தேவையானது மிக அவசியமாக உணரப்படும். ஆனால் அந்நேரத்தில் அத்தகையதொரு அமைப்பை ஆற்றலுடன் செயல்படுவதற்குப் போதுமான வழிவகைகளுடன் உடனடியாக உங்களால் துவக்கவும் முறைப்படுத்தவும் முடியாது.
ஒருவேளை கவனமான விளக்கம் தேவைப்படக்கூடிய தலைப்பாகும் இது. இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். "ஆயுதம் தாங்கியிருக்கும் என் தோழர்கள், ராம் பிரசாத் பி°மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திற்கிடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையில்- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன். இதனால் எனது வார்த்தைகளை வாசிக்கும் போது கவனமுடன் இருக்குமாறு எனது வாசகர்களை எச்சரிக்கிறேன். அவர்கள் எனது எழுத்துகளுக்குப் புறம்பாக எதையும் ஊகித்தறிய முயற்சி செய்யக்கூடாது. எனது சக்தி அனைத்தையும் ஒன்றுகூட்டி உரக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. அந்த முறைகளின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஹிந்து°தான் சோசலி°ட் ரிபப்ளிகள் அசோசியேசனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதனை எளிதாக தீர்மானிக்கலாம். எங்களது செயல்பாடுகள் அனைத்தும் மாபெரும்(விடுதலை) இயக்கத்துடன், அதன் இராணுவப் படைப்பிரிவாக எங்களை நாங்களே ஒன்றிணைத்துக் கொள்ளும் இலக்கை நோக்கியதாகவே இருந்தன. எவரேனும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளட்டும். வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் பயனற்றவை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் இதற்கு நேர்மாறாகவே நான் சொல்கிறேன். ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், வெறுமனே வெடிகுண்டுகளை மட்டும் வீசியெறிவதால் பயன் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சில நேரங்களில் அது கேடுவிளைவிப்பதாகவும் இருந்து விடுகிறது.
கட்சியின் இராணுவத் துறையானது, எந்தவொரு அவசர காலத் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து போர்த் தளவாடங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது கட்சியின் அரசியல் வேலைக்கு பின்பலமாக இருக்கவேண்டும். அது தன்னிச்சையாக செயல்பட இயலாது, செயல்படவும் கூடாது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டதன் திசை வழியில் கட்சி, அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும். பத்திரிகைகள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் தங்களது தொண்டர்களை எல்லா விவாதப் பொருள்பற்றியும் பயிற்றுவித்துக் கொண்டும் தப்பெண்ணங்களை அகற்றிக் கொண்டும் அவர்கள் செல்ல வேண்டும். இத்திசைவழியில் நீங்கள் செயல்பாட்டைத் துவக்கினால் மிகவும் பொறுமை காக்க வேண்டும். இச்செயல் திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் தேவைப்படலாம். ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாத வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.
புரட்சி நீடூழி வாழ்க!
2 பிப்ரவரி 1931.
(இன்று (செப்டம்பர் 28)  பகத்சிங் பிறந்த தினம். சிலர் செப்டம்பர் 27 என்றும் குறிப்பிடுகிறார்கள்.)

Friday, September 25, 2015

வரலாற்றைத் திரிப்பதை அனுமதிக்கப் போகிறோமா? - சீத்தாராம் யெச்சூரி




வரலாற்றைத் திரிப்பதை அனுமதிக்கப் போகிறோமா?
பாஜக அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் 2014 பொதுத்தேர்தலின்போது மக்களுக்கு அளித்திட்ட வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் நிறைவேற்றாது வஞ்சித்து விட்டார்கள் என்று குறைகூறிட முடியும். தற்போதைய அரசமைப்புச் சட்டத்தின் கீழான குடியரசுக்குப் பதிலாக, ஒரு வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட்இந்து ராஷ்ட்ரம்என்கிற ஆர்எஸ்எஸ்- இன் திட்டத்தை நிறுவுவதற்காக, மதவெறியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருப்ப திலேயே எவ்வித இரக்கமுமின்றி மிகவும் மூர்க்கத்தனமானமுறையில் நடவடிக் கைகளை மேற்கொண்டிருப்பதே அந்த ஒரேயொரு வாக்குறுதியாகும். வரும்வாரத்தின் இறுதியில், தில்லிப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை சார்பில் ஓரு கூட்டம் நடைபெறவிருக் கிறது. வேதங்களின் காலம் “5,000 அல்லது 10,000 ஆண்டுகளுக்குப்பிந்தையது’’ என்றே வரலாற்றாசிரியர்களால் தற்போது கூறப்பட்டு வருகிறது.
இதனை இந்தக் கூட்டத்தில் மாற்றி அமைக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மொழியியல் சாட்சிஇதுவரையில் வெளியாகியுள்ள வர லாற்றுச் சான்றுகளின்படி சிந்துச் சமவெளி நாகரிகம் என்பது சுமார் கி.மு.1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிராகரிக்கப்பட்டு, அது சுமார் கி.மு. 1500 ஆண்டு களுக்கு முற்பட்டதுதான் என்பதும், ஆரியர் கள் இதற்குள் நுழைந்து செல்வாக்கு செலுத்தியது அப்போதுதான் என்பது மேயாகும். மொழிநூல் சார்ந்த சான்று களைப் பயன்படுத்தியும் மற்றும் வேதசமஸ்கிருதம், பழைய பாரசீகம் மற்றும் புராதன ஐரோப்பிய மொழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், பெரும்பான்மை யான அறிஞர்கள் ரிக் வேத ஆரியர்கள் வெளியேயிருந்து வந்தவர்கள் என்றே காட்டியிருக்கிறார்கள். ஆயினும், புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ரொ மிலா தாப்பர், “சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது மேற்கு ஆசியாவிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது,
ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திட வில்லைஎன்று நிறுவியிருக்கிறார். (பார்க்க: செமினார் 400, டிசம்பர் 1992). இவை அனைத்தையுமே துடைத்தெ றிய ஆர்எஸ்எஸ் கூட்டம் முடிவு செய் திருக்கிறது. வரலாற்றுச் சான்றுகளுக்குப் பதிலாக நம்பிக்கையையும், வரலாற்றுக்குப் பதிலாக புராணக் கட்டுக்கதைகளை யும், தத்துவ இயலுக்குப் பதிலாக புராணக்கதைகளின் தொகுப்பையும் பதிவுசெய் திட முடிவு செய்திருக்கிறது. செப்டம்பர் 19 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார் பிரமுகர், மன்மோகன் வைத்யா, “பாரதப் பண்பாடுஎன்பது தொன்று தொட்டே அனைத்துநம்பிக்கையாளர்களையும், இனத்தின ரையும் ஒன்றாகவே கருதி வந்திருக்கிறது. எனவே நமக்கு மதச்சார்பின்மை என்கிற செயற்கை ஊசி ஏற்ற வேண்டிய தேவை யில்லை,”என்று கூறியிருக்கிறார்.
அப்படியெனில், நாட்டின் மதச் சிறுபான்மை யினராக இருக்கக்கூடிய முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராகத் திரும்பத்திரும்ப மதவெறி வன்முறை வெறியாட் டங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறதே, ஏன்? பாஜக-வின் 2014 தேர்தல் அறிக்கை, “இந்தியா உலகின் மிகவும் புராதன நாகரிகத்தைப் பெற்ற நாடு...’’ (புராதன நாகரிகங்களில் ஒன்று அல்ல) என்று தொடங்கு கிறது. நம் நாகரிக உணர்வின் தொடர்ச்சி இழை எப்போது விடுபட்டது என்பதைக் கண்டறிந்து, நம் ஒளிமயமான எதிர் காலத்திற்காக அதனை இந்திய ஆன்மா வின் வலுவான அம்சங்களுடன் பொருத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது,’’ என்றுகூறி, “எனவே ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரேதேசம்’’ என்று அறிக்கை முடிவடைகிறது. இவ்வாறு, பாஜக தேர்தல் அறிக்கை ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிரொலிப்ப துடன், நம் நாட்டின் வளமான பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் என்பதை மறு தலித்துள்ளது.
கோல்வால்கரின் மவுனம்
கோல்வால்கர், 1939 இல் எழுதிய, “நாம்அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்என்னும் நூலில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படையைத் தெளிவாக்குகிறார். அவர் கூறுகிறார்: இந்துக்களாகிய நாம் - இந்த நிலத்தில் எட்டு அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அயல் இனத்தினர் எவராலும் படையெடுத்து வந்து கைப்பற்றப்படு வதற்கு முன்பிருந்தே, விவாதத்திற்கு இடமில்லாது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய விதத்திலும், எவரும் குறுக்கிடாத விதத்திலும், இருந்து வந்திருக்கிறோம். எனவே, இந்த நிலம், இந்துக்களின் இந்த நிலம் இந்துஸ்தான் என்று அறியப் படக்கூடிய விதத்தில் இருந்தது.’’ உண்மையில் சிந்து நதி ஓடும் பகுதியில் வாழ் பவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த மக்களால் தான் இந்துஸ்தான் என்கிற பெயரே உரு வாவதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தன. இந்த உண்மை உட்பட புராதன இந்திய வரலாறு குறித்த பல்வேறு ஆய்வுகள் குறித்துகோல்வால்கர் வேண்டுமென்றே மவுன மாக இருந்துவிட்டார். இதனை நிறுவ வேண்டியது ஆர்எஸ்எஸ் அரசியல் குறிக்கோளுக்கு மிகவும்அவசியம். இல்லையெனில், இந்த பூமிக்குவந்த மற்றவர்களைப் போலவே ஆரியர் களும்/இந்துக்களும் அயல் இனத்தின ராகவே கருதப்பட்டுவிடுவார்கள். எனவேதான், ஆரியர்கள் இந்தியாவுக்கு, வேறெங்கிருந்தும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, மாறாக இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று நிறுவ வேண்டியது அவர்களுக்குக் கட்டாயமாகிவிடுகிறது. இவர்களது கூற்றுக்கு எதிராக உள்ள வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும், “மேற்கத்திய அறிஞர்களின் இழிந்த கூற்றுக்கள்’’ எனக்கூறி தள்ளுபடி செய்துவிடு கின்றனர்.
நிராகரிக்க முடியாத திலகரின் கருத்து
ஆயினும், இவர் -ஆர்எஸ்எஸ் குரு, லோகமான்ய பால கங்காதர திலகரின் கருத்தை - அதாவது வேதங்களின் ஆர்க் டிக் மூலத்தின் கருத்தை - எதிர்க்க வேண்டி யிருந்தது. ஆயினும், கோல்வால்கர் ஒரு செல்வாக்குமிக்க தலைவரின் கருத்தை நிராகரித்திட இயலவில்லை. ஏனெனில் அவரும் ஓர் இந்து. எனவே, ஆர்க்டிக் மண்டலம் குறித்து எவரும் நம்பமுடியாத அளவில் புதிதாகக் கருத்துக்களைக் கூறு கிறார். அதாவது, ஆர்க்டிக் மண்டலம் என்பது ஆரம்பத்தில் உலகில் தற்போது பீகார் மற்றும் ஒரிசா என்று அறியப்படும் பகுதியில்தான் இருந்தது. பின்னர், அது வடகிழக்கே நகர்ந்து, பின்னர் சிலகாலம் மேற்குப் புறமாக நகர்ந்து, சில சமயங்களில் வடக்கே நகர்ந்து, இன் றைய நிலைக்கு வந்திருக்கிறது. நிலை மை இவ்வாறிருப்பதால், ஆர்க்டிக் மண்டலத்தை விட்டு நாம் விலகினோம் மற்றும்இந்துஸ்தானத்திற்கு வந்தோம் அல்லதுநாம் எப்போதும் இங்கேதான் இருக்கி றோம். ஆர்க்டிக் மண்டலம்தான் நம்மைவிட்டு வடக்கே வலமும் இடமுமாய் வளைந்து வளைந்து சென்றுவிட்டது. திலகர் காலத்தில் இந்த உண்மை கண்டறியப்பட்டிருந்தால், எவ்விதத் தயக்கமுமின்றி நாம் இதனை ஏற்றுக்கொண்டி ருப்போம். திலகரும்எவ்விதத் தயக்கமு மின்றி, “வேதங்களின் ஆர்க்டிக் இல்லம்’’ இந்துஸ்தானத்தில்தான் இருந்தது என்பதையும், மாறாக, இந்துக்கள் இந்த இடத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லர் என்பதையும், மாறாக ஆர்க்டிக் மண்டலம்தான் இந்துக்களை இந்துஸ்தானத் திலேயே விட்டுவிட்டு குடிபெயர்ந்து சென்று விட்டது என்றும் இப்பிரச்சனைக் குத் தீர்வு காணக்கூடிய விதத்தில் முன் மொழிந்திருப்பார்.
நிலப்பரப்பு நகர்ந்தால் மக்கள் நகரமாட்டார்களோ
என்னே பைத்தியக்காரத்தனமான வாதம்! நிலவியல் அறிவியல் மற்றும் வான் வெளி அறிவியல் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில் பலநூறு ஆண்டு காலத்தில் பூமியின் சுழற்சிஎவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இத்தகையஅறிவியல் முன்னேற்றங்கள் குறித்து கோல்வால்கர் அறியாமல் இருந்திருக் கலாம். ஆயினும், ஓர் எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். அவருடைய வாதத்தின்படியே ஆர்க்டிக் மண்டலம் பீகார் மற்றும் ஒரிசாவிலிருந்து நகர்ந்து சென்றுவிட்டது என்றால், அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் மட்டும் அங்கேயே எப்படி இருப்பார்கள்? நிலப்பரப்பு நகரும்போது, அத்துடன் சேர்ந்து அனைத்துமே நகர்ந்துதானே ஆக வேண்டும். ஆர்எஸ்எஸ் விரும்பும்போது ஆர்எஸ்எஸ் விரும்பும் இடத் தில் போடப்படும்வரை அந்தரத்தில், அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்ட வெற்றிடத்தில், மக்கள் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடியினர் என்று நிறுவிடவும்’’, அவர்கள் வேறெங்கிலுமிருந்து வந்தேறியவர்கள் அல்ல என்று காட்டவும்தான் இத்தகைய நயவஞ்சக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. எண்ணூறு ஆண்டு கால இந்திய வரலாறு என்பது முஸ்லீம்களின் படை யெடுப்புக்கு எதிரான ஒட்டுமொத்த இந்து தேசத்தின்நீண்ட நெடிய யுத்த காலம் என்பதுபோலவே சித்தரிக்கப்படுகிறது. எனினும், கோல்வால்கர், இறுதியில் இந்து தேசம் வெற்றிவாகை சூடியதாகவும், அதுபுதியதொரு எதிரியால், அதாவது பிரிட்டி ஷாரால், வென்றடக்கப் பட்டது என்றும் கூறுகிறார். 1857இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், இந்து தேசத்தால், “நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பெரிய யுத்தம்’’ என்று சித்தரிக்கப்படுகிறது. “1857 முயற்சி தோல் வியடைந்து விட்டது, ஆயினும் அவ்வாறு அவர்கள் தோல்வி அடைந்திருந்த போதிலும், உன்னதமான இந்து தேசப் பற்றாளர்கள் அனைவரும் நாடு பூஜிக் கக்கூடிய அளவிற்குப் பிரகாசமான அடையாளங்களாக மாறி விட்டார்கள்,’’ என் கிறார். உண்மை விவரங்களை எந்த அள விற்குத் திரித்துக்கூறுகிறார்கள்!
1857: முஸ்லிம்களுக்கு எதிரானதா?காலனிய ஆட்சிக்கு எதிரானதா?பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தக் கலகத்தை மேற்கொண்டது மொகலாய சக்கர வர்த்தி பகதூர் ஷா ஜஃபார் அல்லவா! அவருடைய படையில்தானே இந்து ராணியான ஜான்சி ராணி லட்சுமி பாய் இணைந்துநின்று வீரஞ்செறிந்த போராட்டத்தை மேற்கொண்டார். இந்த யுத்தம், இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லீம் களுக்கு எதிரான இந்துக்கள்யுத்தமா? அல்லது காலனிய ஆட்சிக்கு எதிராக இந் தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய யுத்தமா?ஆர்எஸ்எஸ் இயக்கமும் பிரதமர் மோடியும் தங்கள் நம்பிக்கையையே வரலாறாகத் திரித்துக் கூறிட அனைத்து முயற்சி களிலும் இறங்கி இருக்கிறார்கள். இதனை நிறைவேற்றும் நோக்கத்துடனேயே மதச்சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லீம்களுக்கு, எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார் கள். தற்போது தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், எதிர்காலத் தைத் தங்களுக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொள்வதற்காகவும் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நம்முடைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அவர் களின் குறிக்கோளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றி அமைப்பதில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு நாம் அனுமதிக்கப் போகி றோமா?
நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, 22-9-15
தமிழில்: ச. வீரமணி