Tuesday, April 29, 2014

மே தின புரட்சிப் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிப்போம்!


ஏ.கே.பத்மநாபன்
மே தினக்கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் தொழிலாளர் வர்க்கத்தினிடையே போராட்ட உணர்விலும், ஒருமைப்பாட்டிலும் புத்தெழுச்சியை ஏற்படுத்திடும். இந்த ஆண்டு, உலகம் முழுதும் மே தினத்தைக் கொண்டாடுகையில், இந்தியத் தொழிலாளி வர்க்கம் மிகவும் முக்கியமானதொரு அரசியல் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் 16ஆவது மக் களவைக்கான பொதுத் தேர்தல்களில் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டது.இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும், இந்தியத் தொழிலாளி வர்க்கம், உலகின் பல பகுதிகளிலும் உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினரின் முக்கிய கோரிக்கைகளாகவுள்ள பல அம்சங்களை உயர்த்திப் பிடித்திருக்கின்றன.
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன், உழைக்கும் மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை ஆகிய அனைத்தும் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன. இவற்றிலிருந்து இந்தியத் தொழிலாளி வர்க்கமும் வேறுபடவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே நம் நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்தவைகளாகும்.
தங்கள் வாழ்க்கைப்பிரச்சனைகளுடன் நேரடியாகவும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் எதிர்காலத்துடனும் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனைகள் மீது உழைக்கும் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்டுள்ள போராட்டம் என்பது கடந்த ஐந்தாண்டுகளாக அது நடத்திவரும் பிரம்மாண்டமான ஒன்று பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வரலாறு படைத்திட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட ஒன்றுபட்ட இயக்கம் மற்றும் பல்வேறு துறையினர் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் என்பவை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளை மாற்றுவதற்கான அவசியத்தின்மீது கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். அந்தவிதத்தில் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான போராட்டங்களுடன் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவைகளேயாகும்.
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முதலாளித்துவ உலகம்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கிறது. அதன் பாதிப்புகள் உலகம் முழுதும் உள்ள சாமானிய மக்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்களும் மற்றும்உலகின் பல கண்டங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் இந்நெருக்கடியின் ஆழமான பாதிப்புகளுக்கு எதிரானவை களேயாகும்.
ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலையின்மை கிரிஸில் 27.4 சதவீதம், ஸ்பெயினில் 26.7 சதவீதம், போர்த்துக்கல்லில் 15.5 சதவீதம், பல்கேரியாவில் 12.9சதவீதம், இத்தாலியில் 12.7 சதவீதம்என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். உலகம் முழுதும் உள்ள நாடுகளில் வேலையில்லாதோர் பட்டாளத்தில் இவர்கள்தான் பெரும் பகுதியினராவார்கள்.இவ்வாறு வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதானது, வேலை யிலிருப்போரின் ஊதியங்களிலும் மற்றும் அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்களிலும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இவ்வாறு நிகழும் என்றுதான் வரலாறும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள்என்ற பெய ரில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் உண்மையில் நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடுமையான முறையில் தாக்குதல்களைத் தொடுத் துள்ளன. இதுநாள்வரையில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் தத்துவார்த்தரீதியில் ஆதரவாக இருந்தவர்கள்கூட தற்போது ஆளும் வர்க்கத்தினரும், சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி போன்றவற்றின் கட்டளைகளை ஏற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏப்ரல் 4 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
மாற்று ஐரோப்பா சாத்தியமே’’, என்றும், “சிக்கன நடவடிக்கைகள் ஒழிக’’ என்றும் முழக்கமிட்டவண்ணம் அவர்கள் பேரணியாகச் சென்றுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியாளர்கள் வேலையின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழித்திட முன்வரவேண்டும் என்று பேரணியில் வந்தோர் முழக்கமிட்டுள்ளார்கள்.துரதிர்ஷ்டவசமாக, உலகின் பல பகுதிகளில் அநீதிக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் நடத்திடும் இத்தகைய பிரம்மாண்டமான இயக்கங்கள், “வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத் தில்’’ நடந்ததைப்போலவே, அரசியல் திசை தெரியாமல், தொழிலாளர்கள் தங்கள் கோபத்தைக் காட்டுவதோடு அப்படியே அமிழ்ந்து போய்விடுகின்றன.
தொழிலாளி வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
மே தினம் இப்பிரச்சனைகள் அனைத்தையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுப்பதன் மூலமே நீடித்திருக்க முடியும். இப்போது நாம் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான நெருக்கடிகளும் இந்த முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியவை களேயாகும். எனவே இந்த அமைப்புமுறையையே எதிர்த்திட வேண்டும். தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் பிரிவினர் அனைவரும் அன்றாடம் அவர்கள் மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குப் பின்னே இருக்கின்ற அரசியலையும் தோலுரித்துக் காட்டிட வேண்டும். இவை அனைத்தும் நம்முன் உள்ள மிக முக்கிய அம்சங்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மே தின எழுச்சி கோருகிறது. இன்றைய உலகில் அல்லது இது தொடர்பாக நம் நாட்டிலும் நம் நடவடிக்கைகள் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுக்கு எதிராக உக்கிரப் படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல் நம் சமுதாயத்தின் சமூக வலைப்பின்னலையே அரித்து அழித்துக் கொண்டிருப்பதை ஆழமாக ஆய்வு செய்து அதற்கு எதிராகச் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் 45 கோடிக்கும் மேலான உழைக் கும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறைந்த அளவிலானவர்களே வெகுஜன ஸ்தாபனங்களில் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.
எனவே நம்முன் உள்ள பிரதான கடமை, நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதாகும். மேலும் தொழிற்சங்க இயக்கம் நாட்டுப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனைகளாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் நாட்டின் உழைப்பாளர் பட்டாளத்தில் அவர்கள் பெரும் எண்ணிக்கை யிலானவர்களாகும். அவர்கள் மிகவும் கருணையற்ற முறையில் சூறையாடப் பட்டுவருகிறார்கள். அதன் விளைவாக நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அவலநிலை தொடர்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியிலே இன்றளவும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மற்றும் சீர்திருத்த சிந்தனைகள் நம்முன் உள்ள மற்றுமொரு மாபெரும் சவாலாகும். இது நம் பணியை மிகவும் சிக்கலானதாக ஆக்கியிருக்கிறது. தொழிற்சங்கங்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் வலுப்படுத்த வேண்டியதும், உழைக்கும் மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிசப் புரிந்துணர்வைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகும்.இவற்றுடன், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இவற்றையும் நம் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் போது கையில் எடுப்பதுடன், இவற்றின்மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் அதன் தலையீடுகளையும் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.இந்த ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பித்த நூறாவது ஆண்டாகும். உலகில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகம் மற்றொரு உலக யுத்தத்தை எதிர்கொண்டு அதன் விளைவாக எண்ணற்றவர்கள் பலியானதும், அவர்களின் உடைமைகளுக்கு அபரிமிதமான இழப்பு ஏற்பட்டபோதிலும், யுத்த முஸ்தீபு மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை. ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாக வும் மறைமுகமாகவும் பலநாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.சிரியா, வெனிசுலா, பாலஸ்தீனம், கியூபா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாமும் நம் எதிர்ப்புக் குரலினை எழுப்பிட வேண்டும்.
ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல்களால் லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானம் பலியாகிஇருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். மே தினம் என்பது நம்முன் உள்ள பணிகளை நினைவுகூர்வதற்கான வாய்ப்பாகும். சிஐடியு-வின் நிறுவனத் தலைவரான தோழர் பி.டி. ரணதிவே, மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியங்களை நினைவுகூர்ந்து நமக்குக் கூறியிருப் பதாவது: மே தினத்தின் புரட்சிப் பாரம்பரியம் என்பது எப்போதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் சபதம் ஏற்பதுடன் நம் பகுதி கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.
’’இந்த மாபெரும் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடித்து, இந்தியாவில் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கம் சமூக விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துடன் பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் இணைத்திடக்கூடிய வகையில் சபதம் ஏற்போம். வர்க்கப் போராட்டத்தின் வீரர்கள் மற்றும் எண்ணற்ற தியாகிகளின் மாபெரும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி, போராட்டப் பதாகையை உயர்த்திப் பிடித்து, முன்னேறுவோம்.
வாழ்க மேதினம்.
தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக.
புரட்சி ஓங்குக.
தமிழில்: ச.வீரமணி


Sunday, April 27, 2014

வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!


உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மே தினப் பிரகடனம்
புதுதில்லி, ஏப். 27-வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம், கண்ணியமான வேலைமற்றும் வாழ்வாதாரங்களுக்காக அணி திரள்வோம், போராடுவோம் என்று உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்(WFTU-World Federation of Trade Unions) மே தினப் பிரகடனமாக அறைகூவல் விடுத்துள்ளது.இது தொடர்பாக உலகத் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள பிரகடனம் வருமாறு:உலகத் தொழிற்சங்கங்களின் சம் மேளனம், தன்னுடன் இணைந்துள்ள உல கம் முழுதும் உள்ள 120க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த9 கோடி அமைப்புகளைச் சேர்ந்த தொழி லாளர்களும் தன்னுடைய வர்க்க, சர்வதேசிய மற்றும் வீரஞ்செறிந்த வாழ்த்துக்களை இம் மே தினத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது. இம் மே நன்னாளை வேலைநிறுத்தங்கள், வீரஞ்செறிந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக கௌரவித்திட வேண்டுமாயும் உலகத் தொழிலாளர்களை சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
இந்த ஆண்டு மே தினத்தை உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகவும் இடர்சூழ்ந்த சூழ்நிலையில் எதிர்கொள்கிறது. தற்போது நீடித்துவரும் உலகப் பொருளாதார நெருக் கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும், ஏகாதிபத்தி யத்தின் எந்திரங்களாக விளங்கும் சர்வ தேச நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் முதலானவைகளும் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருதற்காக’’ தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் வெட்டு, ஓய்வூதியத்தில் வெட்டு, எதேச்சதிகாரம், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள் பறிப்பு, சமூக உரிமைகள் ஒழிப்பு, ஆட் குறைப்பு என அனைத்துவிதமான தொழி லாளர் விரோத நடவடிக்கைகளிலும் இறங்கிஇருக்கின்றன.
அதே சமயத்தில், சமீபத் தில் உக்ரைனில் ஏற்பட்டதுபோன்று ஏகாதிபத்தியத்திற்குள்ளேயே உள்ள முரண்பாடு களும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அபாய அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. சர்வதேச தொழி லாளர் ஸ்தாபனத்தில், முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. அதனால்தான் அவை, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 87வது கன்வென்ஷனான வேலை நிறுத்த உரிமை’’ என்னும் அங்கீகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. வேலை நிறுத்த உரிமை என் பது எந்த அரசாங்கத்தாலோ அல்லது சர்வதேச அமைப்பாலோ கொடையாக வழங் கப்பட்டதல்ல. தொழிலாளர்களின் கடும்போராட்டங்களின் விளைவாக வென் றெடுக்கப்பட்ட ஒன்று. இதனைத் தொடர்ந்துநீட்டித்திடக்கூடிய விதத்தில் தொழி லாளர்களின் போராட்டங்கள் தொடரும். எனவேதான், உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், “வேலைநிறுத்த உரிமைமீது கை வைக்காதே’’ என்ற முழக்கத்தை சர்வதேச தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்களும் வீரஞ்செறித்த போராட்டங்களின் மூலம் உரக்க முழங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.
சர்வதேச அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொழிலாளர் வர்க்கத்தையும் அவர்தம் குழந்தைகளையும் கருணையற்ற முறையில் தாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் தன் சுரண்டலை அதிகரித்திட, அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் இடையே மிகவும் கொடூரமான முறையில் அதிகரித்திட, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மே தினத்தை வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு எதிராகப் போராடவும் தொழிற் சங்க இயக்கம் முன்வரவேண்டும் என்று உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.வேலையில்லாதோரின் வாழ்வுக்காக, தொழிற்சங்கங்கள் வேலையில்லாதோரையும் அணிதிரட்டிட முன்வரவேண்டும், வேலையில்லாதோரின் சமூகநலப் பயன்களுக் காகவும் போராட வேண்டும், உலகில் உள்ள அனைவருக்கும் நிரந்தர மற்றும் உறுதியான வேலைக்கான உரிமைக்காகப் போராட முன்வரவேண்டும், ஒட்டுமொத்தத்தில் வேலையின்மைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் தொழிலாளர் வர்க்கத் தை உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறைகூவி அழைக்கிறது.
இம்மேதினம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் சார்பில் 2014 அக்டோபர் 3 அன்று வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனுசரிக்கப்படவுள்ள சர்வதேச நடவடிக்கை தின தயாரிப்புப் பணிகளுக் கான தொடக்கமாக அமைந்திடட்டும். உலகத் தொழிலாளர்களே, வறுமை,வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினி,ஏகாதிபத்திய யுத்தங்கள் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் கல்வி கிடைக்காமல் உழைக்கும் வர்க்கம் ஏன் திண்டாட வேண்டும்? அவ்வாறு திண்டாட வேண்டியதற்கான அவசியமே கிடையாது.
உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தன் பதாகை யின் கீழ் உலகத் தொழிலாளர்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று, உலகில் உள்ளஅனைவருக்கும் வேலை கிடைத்திடவும், வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாத்திட வும், அனைவருக்கும் நிரந்தர மற்றும் உத்தர வாதமான முறையில் வேலை கிடைத்திடவும், பெற்ற தொழிற்சங்க உரிமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்திடவும் போராட அறைகூவி அழைக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் சுரண்டப்படுவதற்கும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடமளிக்கக் கூடிய வகையில் இருந்திடக்கூடாது. உலகத் தொழிலாளர்களே, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதி ராக எழுங்கள், சமூக நீதிக்காக எழுங்கள், சுரண்டலற்ற உலகத்தை உரு வாக்கு வதற்காக, ஒன்றுபடுவோம், போராடு வோம் என்று கூறப்பட்டுள்ளது.
-தமிழில்: ச.வீரமணி



நாட்டுக்கும் மக்களுக்கும் பாஜக முன்கூட்டியே விடுத்துள்ள மிரட்டல்


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் இரட்டைவேடம் நன்கு வெளிப்பட்டுள்ளது. அதன் உயர்மட்டத் தலைவர்கள் வளர்ச்சி’’ குறித்தும், நல்ல அரசாங்கத்தை நடத்திடுவோம்; வேலைவாய்ப்பை அளித்திடுவோம் என்றும் பகட்டாகப் பேசிவருகிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மதவெறி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.பாஜக/ஆர்எஸ்எஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களும், அவர்கள் தங்கள் வாயிலிருந்து கொட்டக்கூடிய வார்த்தைகளும் அவர்களுடைய இந்து மதவெறி குணத்தை நன்கு தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பீகாரில் நவாடா தொகுதியில் போட்டியிடும் பாஜக வின் தலைவரும், வேட்பாளருமான கிரிராஜ் சிங், தேர்தல் பிரச்சாரத்தின் போது,“மோடியைத் தடுத்து நிறுத்த விரும்பும் அனைவரும் தங்கள் ஆதரவுக்காக பாகிஸ்தானைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். வரவிருக்கும் நாட்களில், அத்தகைய நபர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. ஏனெனில் அவர்கள் இடம் பாகிஸ்தானில் இருக்கும்.’’ இந்துத்துவாவை விமர்சிக்கும் அனைவரையும் தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்துவது சங் பரிவாரக் கும்பலின் பழைய உத்திதான்.
இவ்வாறு பாகிஸ்தானைக் குறிப்பதுகூட, முஸ்லிம் இனத்தினரைக் குறி வைத்துத்தான். ஏனெனில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் பக்கம்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்கிற முறையில் எப்போதும் அவர் களை பாஜகவினர் கேலி செய்து கொண்டிருப்பார்கள். அவரது பேச்சை பாஜக ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளபோதிலும், கிரிராஜ் சிங் தான் கூறிய வற்றை இதுவரை மறுதலித்திடவில்லை.இந்தப் பேச்சைத் தொடர்ந்து மோடி யின் வலதுகரமாகச் செயல்படும் அமித் ஷா உத்தரப் பிரதேசம், முசாபர்நகரில் ஒரு வாரம் முன்னதாகக் கூறியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அமித் ஷா தன்னுடைய வெறித்தனமான பேச்சில், “நம் இனத்தினர் மீது ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புக்குப் பழிதீர்க்கும் தருணம் இதுவே.
நம்முடைய தாய்மார்களையும் சகோதரிகளையும் மோசமாக நடத்தி யவர்களுக்கு இத்தேர்தல் பதில் அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும்.’’ என்று பேசியிருக்கிறார். வகுப்புக் கலவரங்கள் மிகவும் மோசமாக நடை பெற்ற ஜாட் சாதியினர் அதிகமாகவுள்ள பகுதியில் பேசியுள்ள அமித் ஷாவின் மேற்கூறிய பேச்சு அவர்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பி நம் கவுரவத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும்’’ என்பதேயாகும்.பாஜக தலைமை அமித் ஷாவின்பேச்சுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா வாக்களிப்பதன்மூலம்தான் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று கூறி யிருக்கிறாராம். இவ் வாறு பாஜக தலைமை அவரது பேச்சுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது. நரேந்திர மோடியும்கூட அமித் ஷாவுக்கு வக் காலத்து வாங்கியிருக்கிறார்.
சிறுபான்மையினருக்கு எதிராகவும் மற்றும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் இத் தகைய வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து களத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியேயாகும். ஆர்எஸ்எஸ் குழுக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை அளித்து வருகின்றன. அத்துண்டுப் பிரசுரங்களில், “நாட்டை கெடுநோக்குள்ள எதிரிகளிடமிருந்து காத்திட, இந்துக்களே வெளியே வந்து, 100 சதவீதம் வாக்களியுங்கள்,’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அங்க மாக இருக்கக்கூடிய விசுவ இந்து பரி சத் அமைப்பின் தலைவரான பிரவீன் தொகாடியா, இந்தத் தேர்தல் பிரச்சார வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். குஜராத்தில் பவானகர் என்னுமிடத்தில் முஸ்லிம் வணிகர் ஒருவர் வீடு வாங்கியதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில், “இந்த வீடு 48 மணிநேரத்திற்குள் காலி செய்யப்பட வேண் டும், இல்லாவிடில் இந்த வீட்டை இந்துக்கள் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வார்கள்,’’ என்று பேசியிருக்கிறார். இந்துக்கள் வாழும் பகுதியில் வீடு வாங்கமுஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என்று தொகாடியா பேசியிருக்கிறார். தொகாடியாவின் இந்தப் பேச்சுக்கும் ஆர்எஸ்எஸ் வக்காலத்து வாங்கி யிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த அவ ருடைய பேச்சின் வீடியோவில் அவர் அவ்வாறு கூறியதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறியிருக்கிறது. ஆயினும் தொகாடியா முஸ்லிம்களை மிரட்டியிருப்பது போலத்தான் தற்போதைய மோடியின் குஜராத் காணப்படுகிறது. அகமதாபாத்தில், வதோதரா மற்றும் சில நகரங்கள் பல அபார்ட்மெண்டுகளில் முஸ்லிம்கள் வீடுகள் வாங்க முடியாது. அவைஇந்துக்களுக்கு மட்டுமே விற்பனை செய்கின்றன. கடந்த பல ஆண்டு களாகவே முஸ்லிம்களைத் தனியே பிரித்து வைப்பது என்பது அங்கே நடைமுறையில் இருந்து வருகிறது.
இத்தகைய மதவெறிப் பிரச்சாரத் திற்குத் தலைமை தாங்குபவரே நரேந்திர மோடிதான். ஆயினும் அதனை மறைத்துக்கொண்டுதான் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி யைக் கொண்டு வருவேன் என்றும், வலுவான முறையில் அரசாங்கத்தை நடத்துவேன் என்றும் சரடு விட்டுக் கொண்டிருக்கிறார். ஆயினும், மக்கள் மீதுவெறுப்பை உமிழும் இத்தகைய மதவெறிப் பிரச்சாரத்தை மூடி மறைத்துவிட முடியாது. மோடியின் முன்னிலை யிலேயே, ராம்தாஸ் காதம் என்கிற சிவசேனையின் தலைவர் ஒருவர், மும்பை யில் ஏப்ரல் 21 அன்று நடந்த கூட்டம் ஒன்றில், மோசமாக நடந்துகொள்ளும் முஸ்லிம்கள் நரேந்திர மோடியால் உரிய படிப்பினையைக் கற்றுக்கொள்வார்கள் என்று பேசியிருக்கிறார். இந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம் நமக்குக் காட்டுவதென்ன? இவை ஏதோஒருசில தனிநபர்களின் கருத்துக்கள் அல்ல. மாறாக, பாஜக மற்றும் நரேந்திர மோடியின் அரசியல் மேடையின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகும். இவ்வாறு பாஜக/ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நாட்டுக் கும் நாட்டுமக்களுக்கும் முன்கூட்டியே மிரட்டல் விடுத்துள்ளன.
-தமிழில்: ச.வீரமணி



Friday, April 25, 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐம்பதாம் ஆண்டின் தொடக்கம்


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு இடையிலேயே, முதலாளித்துவ ஊடகங்களில் சில, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேறை வாரிவீசுவதற்கும் தவறவில்லை. ஐம்பதாண்டு களுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில்தான் அன்றைக்கு இருந்த ஒன்று பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதன் பின்னர் சில நாட் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தார்கள்.
1964 ஏப்ரல் 11 அன்று இது நடந்தது. அதன் ஐம்பதாம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாட இருக்கும் நிலையில், முதலாளித்துவ ஊடகங்கள் நம் கட்சி துவங்கிய 50ஆம் ஆண்டு தினத்தினை நினைவு கூர்வதுபோல் நினைவுகூர்ந்து நம்மீது தாக்குதல் தொடுக்க தயங்கவில்லை. ஒரு முன்னணி மலையாள நாளிதழ், இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறது. “கொள்கைகளும் தோல்விகளும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது.’’ (2014 ஏப்ரல் 12) என்று தலைப்பிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் விரிவான முறையில் கதை புனைந்திருக் கிறது. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பல் வேறு கதைகளை அது அளந்துவிட்டு, கடைசியாக அதுமார்க்சிஸ்ட் கட்சி வர்க்கங் களின் இயற்கை குணம் மாற்றங்கள் அடைந் திருப்பதை கணக்கில் கொள்ளாததால் அதனால் முன்னேறிச் செல்ல முடியாமல் இருக்கிறது,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.இந்தியாவில் வெளியாகும் `இளஞ்சிவப்புமுன்னணி செய்தித்தாள்களில் ஒன்று தன்னுடைய தலையங்கத்தில், “வரலாற்றை எதிர் கொள்ளல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 50ஆம் ஆண்டு விழாவைத் தொடங்குகையில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் துல்லியமாகக் கோருகிறது. புதிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விழைவு. ஆயினும் அந்நாளேடு தன் தலையங்கத்தில் மேலும் அடிக்கோடிட்டுக் கூறியிருப்பது என்ன தெரியுமா? “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய வரலாற்றில் மாபெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. அதாவது, இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமற்ற ஒன்று என்கிற அச்சுறுத்தலை அது எதிர்கொண்டிருக்கிறது.’’ ஏன்?...“ஏனெனில், அதன் தலைமை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் தொழி லாளி வர்க்கத்தின் குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கண்டுகொள்ளவில்லை.’’இவ்வாறு நம்மீது விமர்சனம் செய்துள் ளவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளின் சாராம்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்வது அவசியமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியானது எப்போதுமே காலந்தோறும் மாறி வரும் ஒவ்வொரு அம்சத் தையும் உன்னிப்பாகக் கவனித்து அதற் கேற்ற விதத்தில் தன் கொள்கைகளை கோட்பாடுகளை அமைத்து, அதன் அடிப்படையில் தான் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றி வந்திருக்கிறது. மார்க்சிய லெனினி யத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்பதே துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுதான். அதன் அடிப்படையில்தான் அது செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நிலைமைகள் தொடர்ச்சியாக மாறுவதால், அதற்கேற்ற விதத்தில் மார்க்சிய நுண் ணாய்வையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுமேயானால், உண்மையில், நாம் மார்க்சியத்தையே - அதன் புரட்சிகர உள்ளடக்கத்தையும், அதனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கோட்பாட்டை யுமே - மறுதலித்தவர்களாகிறோம். மார்க் சியம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது என் பதையும், எனவே, ஓர் ஆக்கப்பூர்வமான விஞ் ஞானம் எப்போதுமே வறட்டுத்தனமின்றி இயல்பானதாகவும், இயற்கையானதாகவும், மெய்யானதாகவும் இருந்திடும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உயர்த்திப்பிடித்தே வந்திருக்கிறது.
ஆம். இந்த அடிப்படையில்,நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பல்வேறு வர்க்கங் களின் இயக்கத்தில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது, முழுமையாக முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இன்னமும் மாறாத பல்வேறு சமூக அடுக்கு களைக் கொண்ட நம்முடைய அமைப்பின்மீது - அதாவது சாதிய அடுக்குகளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்குமுறை யை ஏவி, அதீதமான அளவில் ஆதிக்கம் செலுத்த முன்வருகையில், இது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இந்த விமர்சகர்கள் முன்வைக்கும் விஷயம் அப்படியானதல்ல. அவர்கள் கூறும் விமர்சனங்கள் வேறான வைகளாகும்.
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும்மேதைகள்இப்போது சொல்வது என்ன? காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவத்தின் கீழ் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணாம்சம் இன்றுள்ள தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடையா தாம். அன்றைக்கு இருந்ததுபோல் கரத்தால் உழைக்கும் தொழிலாளர்கள் (அயரேயட டயbடிரச) அளவிலும் மற்றும் பல்வேறு வகையினர் கலந்து பணியாற்றுவதிலும் இன் றைக்குக் குறைந்து விட்டார்களாம். எனவே, காரல் மார்க்சும் ஏங்கெல்சும் உலகை மாற்றிட, முதலாளித்துவத்தை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய, தங்களு டைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்த, “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர,’’ என்கிற முழக்கம் இனிப் பொருந்தா தாம். ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தில் பெரும் பகுதியினர் முதலாளித்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார்களாம், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமைத்தளை யிலிருந்து வெளியேறி அவர்கள் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறதாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூறவரும் கருத்து இதுதான்: “மார்க்ஸ் காலத்திலிருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் இன்றையதினம் மாறி விட்டதால், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழ்நிலைக்கு மார்க்சியம் பொருந்தாது. இந்தஎதார்த்தத்தைமார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்க மறுப்பதால், அக்கட்சியும் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்கட்சி இன்றைய தினம் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலாகும்.’’ ஆனால் உண்மை நிலைமை என்ன?உலக முதலாளித்துவம் கடந்த ஆறுஆண்டுகாலமாக தொடர்ந்து நெருக்கடிக் குள் சிக்கி வெளிவர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மார்க்சியம் இன்றைக்கும் பொருத்த முடையதே என்று உரத்தகுரலில் பிரகடனம் செய்கிறது. உலகப் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் தற் போதைய நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் காரல் மார்க்சின் மூலதனத்தின் பிரதிகள் வேண்டும் என்று வாடிகனிலிருந்து தகைசான்ற போப் ஆணை பிறப்பித்தாரே, அது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்ட விபத்தல்ல.
ஆயினும், இன்றைய நெருக்கடிக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் மார்க்சியத்தை நன்கு கற்ற ஒருவராலேயே அதனைச் செய்திட முடியும். தொடர்ந்து இருந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், உண்மையில் அத்தகைய நெருக்கடிக்கான ஆணி வேர் எது என்பதையும், சர்வதேச நிதி மூலதனத்தின் உயர்வையும், இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் நவீன தாராளமயப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அது மேற்கொள்ளும் மேலாதிக்கப் பங்களிப்பினையும் மார்க்சியத்தால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்பட முடியும். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றவால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’’ இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல. எனினும் தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்த இயக்கத்தின் இறுதியில் சுயேச்சையாக எடுக் கப்பட்ட முடிவு என்ன? “இந்தக் கிளர்ச்சிகள் `அமைப்புக்குள் உள்ள கோளாறுக்கு எதி ராக அல்ல, மாறாக இந்தஅமைப்பே கோளாறானது’’ அதாவதுமுதலாளித்துவ அமைப்பே கோளாறானது’’ என்றும் அதற்கு எதிராகவே இது நடைபெற்றுள்ளது என்றும் முடிவுக்கு வந்தது. இதே மாதிரி புரட்சிகரமான முடிவுக்குத்தான் மார்க்சியமும் வருகிறது.
இந்தக் கோளாறான அமைப்புமுறை தூக்கி எறியப்படும்போது மட்டுமே மனித சமூகம் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய முடியும். ஆனால் நவீன தாராளமயக் கொள்கை யைப் பூஜிப்போருக்கு இது வெறும் தெய்வநிந்தனையாகவே தோன்றும். எனவேதான் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்றையதினம் `பொருந்தாத’, `பொருத்தமற்றதானகட்சியாக இகழ்ந்துரைக் கிறார்கள்.மேலும், தொழிலாளர் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், கரத்தால் உழைப்பவர்கள் எண் ணிக்கை குறைந்து, அந்த இடத்தை கருத்தால் உழைப்பவர்கள் நிரப்பியிருந்த போதிலும், (மனிதகுல நாகரிகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில் இது சாத்தியமே) முதலாளித்துவத்தின் இயல்பான குணம் - அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் குணம் - அதன் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து வருவது இன்றைக்கும் மாறாததோர் உண்மை அல்லவா? ஏனெனில், சுரண்டல் என்பது முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைபிரியா ஒன்றல்லவா?இது ஏன்? ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி நடைமுறையின் அடிப்படையே சுரண்டல்தான்.
உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில், அந்தப் பொருளை உற்பத்தி செய்த தொழிலாளியின் பங்களிப்பு எப்போதுமே அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும். இந்த வித்தியாசம்தான் முத லாளித்துவ உற்பத்தி முறையில், தொடர்ந்து உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்தஉபரிமதிப்பைத்தான் முதலாளிகள் லாபம்என்ற பெயரில் தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே, தொழிலாளி, கருத்தால் உழைப் பவரா அல்லது கரத்தால் உழைப்பவரா என்பதே இங்கே பிரச்சனை இல்லை. எவரா யிருந்தாலும் அவரைச் சுரண்டுவது என்பதே முதலாளித்துவத்தின் குணம். எனவே, இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை முற்றிலுமாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, இத்தகைய சுரண்டலிலிருந்து, மனிதகுலத் திற்கு விடுதலையைக் கொண்டு வர முடி யும். இத்தகைய அறிவியல்பூர்வமான உண்மை யை நவீன தாராளமயத்திற்கு வக்காலத்து வாங்கும் `மேதைகள் ஒப்புக் கொள்ள மனம் வராது, வெறுப்பார்கள். எனவேதான் அதனை மறைப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய தினம் பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று நம்மீது பாய்கிறார்கள்.இத்தகைய விமர்சகர்களின் மற்றொரு வகையான செயல்பாடு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்பின் அடித்தளங் களைப் பாதிக்காத விதத்தில் பல்வேறு அரசுசாரா அமைப்புகள் நடத்தக்கூடிய இயக்கங்களை ஊக்குவிப்பதும் மற்றும் ஆதரிப்பது மாகும். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் அளித்த அளவுக்கு மீறிய விளம்பரம், ஆகியவற்றிலிருந்தே இதனை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் நடைb பற்ற அதே சமயத்தில்தான் இடதுசாரிக் கட்சிகள் அவர் முன்வைத்த அதே கோரிக்கை களுக்காக பிரம்மாண்டமான முறையில் மக்கள் இயக்கங்களை நடத்தின. ஆனால் அவை குறித்து அநேகமாக எதையுமே அவை கூறவில்லை. அல்லது பெயரளவில் ஒருசில நொடிகள் கூறும். காரணம் என்ன? ஏனெனில், இடதுசாரிக் கட்சிகளைப்போல அல்லாமல், முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறை ஆகியவற்றின் மீது அவை கைவைப்ப தில்லை. முதலாளித்துவத்திற்கு, அதனுடைய அடித்தளத்தின் மீது கைவைக்காமல் இயங்கும் அனைவருமே உன்னதமானவர்கள் தான், அவர்களை தூக்கி வைத்து அது கொண்டாடும். எனவேதான், அது, ‘ஊழலை ஒழிப்போம்’, ‘நேர்மையான அரசியல்போன்றுஇயக்கம் நடத்தும் அனைத்து அமைப்பு களையுமே அவை வரவேற்கும். ஆனால், அதே சமயத்தில், இடதுசாரிகளைத் தனிமைப் படுத்திட வேண்டும் என்பதில் அவை குறியாக இருக்கும். ஏனெனில், இடதுசாரிகள் இந்த அமைப்பையே கேள்விக்குறியாக்குவது தொடர்வதும், இந்த அமைப்புக்கு மாற்று ஏதும் இல்லை என்று கூறுவதை இடதுசாரிகள் ஏற்க மறுப்பதும்தான் காரணங்களாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை, இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மாற்று உண்டு என்றும், சோசலிச அமைப்பே அதற்கு மாற்று என்றும் பிரகடனம் செய்கிறது.நம் வளர்ச்சியில் அக்கறையுடன் நம் கொள்கைகளையும் நம் செயல்பாடுகளையும் நடுநிலையுடன் விமர்சிப்பவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில், “குழந்தை அழுக்காகிவிட்டதே என்று தண்ணீர் தொட்டிக்குள்ளே தூக்கி எறிவது’’ போன்று விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில், அத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்பதும் அவற்றிற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதுமேயாகும். அதனால்தான், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில், நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் அவற் றிற்குத் தீர்வு மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதுமேயாகும் என்றும் அதன் அடிப்படையில்தான் நாட்டின் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம் படுத்த முடியும் என்றும் இடதுசாரிகள் பிரச் சாரம் செய்து வருகின்றனர். கார்ப்பரேட் ஊடகங் களோ இத்தேர்தல் களத்தைதனிநபர்களைத் தேர்வு செய்வது என்ற அளவிற்கு சுருக்கிக் கொண்டுள்ளன. கோடிக்கணக்காக வறு மையில் வாடிக்கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண் டிய அரசாங்கம் அமைய வேண்டும் என்பது குறித்து அவற்றிற்கு அக்கறை ஏதும் இல்லை.
மாறாக, `தலைவர்கள்பிரச்சாரத்தின் போது ஒருவர்கொருவர் தனிப்பட்டமுறையில் கூறும் கருத்துக்களைத்தான் அவை உயர்த்திப்பிடிக்கின்றன. மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சனைகள் குறித்து அவை கொஞ்சமும் கவலைப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவற் றை அவை மிகவும் அருவருப்பாகவே கருதுகின்றன. நம் ஜனநாயக அமைப்பில் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை, நவீன தாராளமயக் கொள்கைகள் மனிதாபிமானமற்ற முறையில் மக்களைச்சுரண்டிக் கொண்டிருப்பதை வெளிச்சத் திற்குக் கொண்டுவர மறுப்பதோடு மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவில் கார்ப்ப ரேட்டுகளின் கைக்கூலிகளாக மாறிக் கொண்டிருப்பது மிகப் பெரிய அவலமாகும்.அதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்கள் இவற்றை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம் பயக்கக்கூடிய விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி காட்டிடும் மாற்றுத் திசைவழி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில்: .வீரமணி