Monday, October 22, 2012

இடைவெளி அதிகரித்திருக்கிறது



2012 உலக அளவிலான பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகள் குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை, கடந்த இருபதாண்டு காலமாக ஆட்சியாளர் கள் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் நாட்டில் இரு வேறு இந்தியர்களை-ஒளிரும் இந்தியர்களையும் பசி-பஞ்சம்-பட்டினியால் அவதிப்படும் இந்தியர்களையும் - உருவாக்கு வதற்கே இட்டுச் சென்றுள்ளது. இதில் மிகவும் கொடூரமான உண்மை என்ன வெனில், வரவிருக்கும் காலங்களில் இவ் விடைவெளி மேலும் கூர்மையான முறையில் விரிவாகும். உலக அளவில் சத்துணவுக்குறைவால் வாடும் மக்களின் எண்ணிக்கை 1990களின் மத்திய காலத்திலிருந்து 2006-08ஆம் ஆண்டுகள் வரை, தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்பதை உலக வங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய உலகமயம் தாங்கள் பெறும் லாபத்தின் அளவை அதிக பட்ச அளவிற்குப் பெருக்க வேண்டும் என்கிற துடிப்புதான் இதற்குக் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகும். மூலதனக் குவியலின் பல்வேறு வடிவங்களும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியுறக்கூடிய விதத் தில் இட்டுச் சென்றிருக்கின்றன. ஆயினும், உலக வங்கி உலகில் உள்ள பசி - பஞ்சம் - பட்டினிக் கொடுமையை மூன்று முக்கிய சுட்டிக்காட்டும் கருவிகள் மூலம் அளந்திருக்கிறது. அதாவது, குழந்தைகள் எடை குறைவாக இருத்தல், சிசு மரண விகி தம் மற்றும் சத்துணவுக்குறைபாட்டுடன் காணப்படும் மக்கள் ஆகிய மூன்று கருவி களை அளவுகோலாகக் கொண்டு இதனைச் செய்திருக்கிறது. 2012ல் பட்டினிக் கொடுமையால் பரிதவிப்போர் அதிகமாக உள்ள உலக நாடுகள் 79ல் நமது நாடு 65வது இடத்தில் இருக்கிறது.
நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், நேபாளமும் கூட நம் மை விட உயர்நிலையில் உள்ளன. குழந்தை கள் போதிய எடையின்றி வாழும் நாடுகளின் எண்ணிக்கை 129 என்றால் அதில் இந்தியா வின் வரிசை 128 ஆகும். இதற்கு அடுத்த படியாக ஒரேயொரு நாடுதான் இருக்கிறது. அதன்பெயர் டிமோர்-லெஸ்டே என்பதாகும். (உலக வரைபடத்தில் கண்டுபிடிக்க முயற் சிக்க) 1996ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, இந்தியா 22.6 சதவீத மாக இருந்தது. இப்போது 2012ஆம் ஆண் டில் 22.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த இருப தாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த சீர்திருத்தங்களின் பலன் இதுவே ஆகும். இந்தியாவின் இத்தகைய நிலையை மிகவும் குறைகூறியுள்ள உலக வங்கி, தன்னு டைய அறிக்கையில், ‘‘இந்தியா வலுவான பொரு ளாதார வளர்ச்சி கண்டிருந்தபோதிலும், பட்டினி கிடப்போரை முன்னேற்றுவதில் மிகவும் பிந்தைய நிலையிலேயே இருக்கிறது. 1996க்கும் 2001க்கும் இடையே சிறிய அளவு உயர்வு ஏற்பட்டது. தற்போதைய நிலை 1996 மட்டத்திற்குப் பின்னடைந்துவிட்டது. நாட் டின் மொத்த தேசிய வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ள போதிலும்கூட, பட்டினிக் கிடப்போர் நிலைமையில் எவ்வித முன்னேற் றமும் இல்லாமல் தேக்க நிலை நீடிக்கிறது.’’உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையும் வங்க தேச மும் கூட இந்தியாவின் நிலையைவிட எழுத் தறிவிலும், மக்கள் அதிக ஆண்டு காலம் உயி ருடன் இருப்பதிலும் மேம்பட்ட நிலை யிலேயே இருக்கின்றன என்றும், இதற்குக் காரணம் அந்நாடுகளின் அரசுத் தலையீடு தான் காரணமே தவிர அங்குள்ள ‘‘சந்தை சக்திகள்’’ அல்ல என்றும் அறிக்கை குறிப் பிட்டிருக்கிறது.ஒரு நாட்டில் மக்கள் ஊட்டச்சத்துக் குறைவுடன் காணப்படுவதற்கு அவர்களுக் குப் போதிய உணவு கிடைக்கவில்லை என் பது மட்டும் காரணம் அல்ல என்று குறிப் பிட்டுள்ள அறிக்கையானது, அவர்களுக்குப் ‘‘போதிய அளவிற்கு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் அல்லது தூய்மையான சுற்றுச் சூழல்’’ இல்லாதிருப்பதும் காரணங்களாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ‘
‘இந்தியாவில் உள்ள தாய்மார்களில் 36 விழுக்காட்டினர் எடைகுறைவுடன் காணப்படுகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்களில் 16 விழுக்காட்டினர்தான் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’’ என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் சார்பாக, புள்ளி யியல் துறை அமைச்சகமானது, ஆயிர மாண்டுகள் வளர்ச்சி இலக்குகள் தொடர்பாக, எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக் கிறது என்பது குறித்து, ஒவ்வோராண்டும் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அறிக்கை தாக் கல் செய்து வருகிறது. அவ்வாறு அனுப்பிய 2011ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு மட்டத் திலும் குறைந்தபட்ச இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அதில் எதையும் அடைவதற்கு சாத்தியமில்லை என்று அறிக்கை குறிப் பிட்டிருக்கிறது. ஆயிரமாண்டுகள் வளர்ச்சி இலக்குகளின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் குறைந்த எடை யுடன் உள்ள குழந்தைகள் 26 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால் தற்போது நம் நாட்டில் இது 33 விழுக்காடாக இருக்கிறது. அதேபோன்று குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரமாண்டுகள் வளர்ச்சி இலக்குகளின்படி, ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் இறக்கும் குழந்தைகள் 27ஆக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால் தற்போது அது 44ஆக இருக்கிறது. மேலும் நம் நாட்டில் எவ்வித சுகாதார வசதியுமின்றி உள்ள குடும்பங்கள் 43 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் தற்போதுள்ள நிலவரம் குறித்த அறிக்கை ஒப்புக் கொள்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக குறைந்த அளவே பொது சுகாதாரத்திட்டங்களுக்குச் செலவு செய்வ தாலும், சுகாதாரப் பாதுகாப்பைத் தனியாரிடம் தாரைவார்த்திருப்பதும் தான் இந்நிலைமைக் குக் காரணமாகும். உண்மையில் இது மேலும் மோசமாகும். ஆயினும், நிலைமைகள் மோசமாகியிருப் பதற்கு அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்துவருவதும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதன் விளை வாக, அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டு, போதிய அளவிற்கு சத்தான உணவை உட் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். நாட்டில் மொத்த விலைவாசி குறியீட்டெண் 2012 செப்டம்பரில் 7.8 விழுக் காடு அளவிற்கு உச்சத்தைத் தொட்டிருக் கிறது. நுகர்வோர் உணவுப் பொருள்களை வாங்கும்போது மேலும் அதிகமான விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும். நகர்ப்புற நுகர்வோர் பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 9.7 விழுக்காடு இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நாட்டின் மொத்த விலைவாசிக் குறியீட்டெண் ணைவிட 2 விழுக்காடு அதிகம். இப்பண வீக்க விகிதம் கணிசமான அளவிற்கு உயர்ந்து, அதன் முழுமையான நேரடித் தாக்கு தலுடன், சமீபத்தில் டீசல் விலைகளை உயர்த்தியதன் மூலம் உயர்ந்துள்ள அத்தியா வசியப் பொருள்களின் விலைகளும் சேர்ந்து, அக்டோபரிலிருந்து அதன் முழுப் பாதிப்பு துவங்கிவிடும் என்று வல்லுநர்கள் மதிப்பிட் டிருக்கிறார்கள். வரவிருக்கும் பண்டிகை நாட் கள், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்க ளுக்கு மிகப்பெரிய அளவில் வேதனை யளிக்கக்கூடியதாகவே இருந்திடும்.நவீன தாராளமய சீர்திருத்தங்களினால் பயனடைந்துள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலருக்கு மட்டுமே வரவிருக்கும் பண்டிகை நாட்கள் பிரகாசமானதாக அமைந் திடும். பணக்காரர்கள், உண்மையில் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள். அமெரிக்க டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
அவர்களில் 54 பேர் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சொத்துக்களை வைத்திருக் கிறார்கள். 2012 மார்ச்சுடன் முடியும் கடந்த மூன்றாண்டுகளுக்கான அறிக்கைகளின்படி நாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உச்சநிலை யிலுள்ள 500 கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் ரொக்க இருப்பாக 9.3 லட்சம் கோடி ரூபாய் அல்லது 166 பில்லியன் டாலர்கள் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் உள்ள பணம் நாட்டின் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கக்கூடிய அளவிற்குப் போதுமானது அல்லது ஒவ்வோராண்டும் நாட்டின் 40 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு (தற்போது 800 கி.மீ. அளவிற்குத்தான் செய்யப்பட்டு வருகிறது) ஆறு வழி நெடுஞ்சாலைகள் அமைத்திடப் போது மானது. இந்தியாவில் உள்ள கார்ப்பரேட்டுகள் தங்களிடம் உள்ள பணத்தை எதிலும் முத லீடு செய்யாமல் இவ்வாறு முடக்கி வைத் திருப்பது ஏன்? நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையின் கீழ் இருவித இந்தியர்களை உருவாக்கும் ‘மாதிரி’தான் காரணம். நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் நாள் தோறும் அதிகரித்துவரும் பொருளாதாரச் சுமைகளின் விளைவாக, தாங்கள் உயிர்வாழ் வதற்குத் தேவையான அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்தபின், மற்ற பொருள் களை வாங்குவதற்கான வாங்கும் சக்தி கிட்டத்தட்ட இல்லாது ஆக்கப்பட்டிருக் கிறார்கள். இவ்வாறு இவர்கள் சந்தையில் பொருள்களை வாங்கமுடியாத நிலை உருவாகி, உள்நாட்டுத் தேவை சுருங்கிவிட்டதன் காரணமாகத்தான், முதலாளிகள் முதலீடு களைச் செய்வதனை நிறுத்தி வைத்திருக் கிறார்கள். முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கான பணம் மக்களிடம் இல்லாத நிலையில், அவர்கள் முதலீட்டை மேலும் செய்திடாமல் தங்கள் கைகளிலே ரொக்க இருப்பாகத்தான் வைத்துக்கொண்டிருப்பார்கள். பின்னர் இவர்கள் இப்பணத்தை ஊக நடவடிக்கை களில் பாயவிடுவார்கள். ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் சொத்துக்களின் விலைகள் உயர்வதற்கும், தங்கத்தின் விலை உயர்வதற் கும் இதுவே காரணங்களாகும்.இந்த நிலைமை மாற்ற முடியாததா? நிச்சயமாக முடியும். ஆனால், ஆட்சியாளர் கள் நவீன தாராளமயக் கொள்கையையே தொடர்ந்து அமல்படுத்தத் துடித்துக்கொண் டிருக்கும் வரையில் இது சாத்தியமில்லை.
ஆட்சியாளர்கள் அடிக்கடி நாட்டின் உயர் வளர்ச்சி விகிதம் குறித்துத் தம்பட்டம் அடித்த போதிலும், சர்வதேச நிதியம் சென்ற வாரம் இந்தியாவின் பொருளாதாரம் குறித்துக் கூறி யிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி முன்பிருந்த தைப்போல 6.2 விழுக்காடு இருக்காது என்றும், மாறாக 2012ல் அதன் வளர்ச்சி 4.9 விழுக்காடு அளவிற்குத்தான் காணப்படும் என்றும் மதிப்பிட்டிருக்கிறது. எனவே எப் படிப் பார்த்தாலும், வரவிருக்கும் காலம் நாட் டின் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாகவே அமைந்திடும்.ஆட்சியாளர்கள் கடுமையாக முயன்றால் மட்டுமே இந்நிலைமையினை மாற்ற முடியும். முன்னெப்போதும் காணாத அளவிற்கு மெகா ஊழல்களில் ஈடுபட்டு, நாட்டின் செல்வங் களை கொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் கைவிட்டு, அவர்கள் கொள்ளையடித்துள்ள பல லட்சம் கோடி ரூபாயை, நாட்டில் மிகப் பெரிய அளவிலான முதலீடுகளில் செலுத் தினால், நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இத்தகைய மெகா ஊழல்களே இவர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை யின் நேரடி விளைவேயாகும். இக்கொள் கைகள்தான் மிகவும் மோசமான அளவில் சலுகைசார் முதலாளித்துவத்தை அதிகப் படுத்தி இருக்கிறது. இப்போது மற்றொரு எதார்த்த நிலையை யும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறை யில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலு கைகள் 2008-09ல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 99 கோடி ரூபாயாகும். இது 2009-10ல் 5 லட் சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதி கரித்தது.
2010-11ஆம் ஆண்டில் இது 5 லட் சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயி ரத்து 483 கோடி ரூபாயாக இருந்திருக்கின் றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 28 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாயை அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.நிதிப் பற்றாக்குறை என்று கூறப்படுகிற 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப்பாருங்கள், பிரதமர் அவர்களே. நியாயமாக வரவேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக, வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரி வடைந்திருக்கும். உள்நாட்டுச் சந்தை அதி கரிப்பதை அடுத்து, தனியார் முதலீடும் அதி கரிக்கும். இவற்றின் காரணமாக, மக்களின் நேரடி வாழ்க்கையில் இவை முன்னேற் றத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் தற் போது நிலவிவரும் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகளை இல்லாது ஒழித்துவிடும்.நாட்டில் அதிகரித்து வரும் வறுமையை யும், ஊட்டச்சத்துக்குறைவால் மக்கள் வாடு வதையும் மாற்றியமைக்கக்கூடிய அளவிற்கு நம்நாட்டில் வளங்கள் ஏராளமாக இருக்கின் றன. தேவை என்னவெனில், ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப் பட்டு, அந்த இடத்தில், பொது முதலீடு களைக் கணிசமான அளவிற்கு அதிகரிக்கக் கூடிய வகையில் அரசை செயல்பட வைத் திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி

Sunday, October 14, 2012

சாவேஸ் வெற்றி



ஹியூகோ சாவேஸ் வெனிசுலாக் குடியரசின் அதிபராக நான்காவது முறை யாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இத் தேர் தலில், சாவேஸ் 55.11 விழுக்காடு வாக் குகளைப் பெற்று, அவரை எதிர்த்து நின்ற ஹென்ரிக் கேப்ரிலஸ் பெற்ற வாக்கு களைக் காட்டிலும் 11 விழுக்காடு அதிகம் பெற்று, வாகை சூடியுள்ளார். தேர்தலில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது இதுவரை மக்கள் வாக்களித்த அளவை விட அதிக மாகும். சாவேஸ் முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், மூன் றாவது முறையாக அவர் வெற்றி பெற்றிருக் கிறார். இதன் பதவிக்காலம் 2019 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். தற்போது நடந்த தேர்தலானது குறிப்பாக வெனிசுலா வின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்த மாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர் காலத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன் றாகும். 1999இல் அதிபர் சாவேஸ் தன் னுடைய புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே, அவருக்கு எதிரான போராட்டங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டன
. இவருக்கு எதிராக பழைய ஆளும் வர்க்கங்களும், முதலாளித்துவ மேட்டுக்குடியினரும் ஒரு பக்கமும், சாவேஸ் மற்றும் இடதுசாரி-சோசலிஸ்ட் சக்திகள் மறுபக்கமுமாக இப்போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. வெனிசுலா ஓர் எண்ணெய் வளம் நிறைந்த நாடாகும். உலகின் எண்ணெய் இருப்பில் மிக அதிக அளவில் உள்ள நாடாகும். சவுதி அரேபியா இரண்டாவது நாடுதான். நாட்டில் உள்ள எண்ணெய் இருப்பின் மீது அரசின் கட்டுப்பாட்டை சாவேஸ் நிறுவியிருப்பதுடன், நாட்டின் செல்வத்தை மறுவிநியோகம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொண்டார். எண் ணெய் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அவர், எழுத்தறிவு, கல்வி, சுகா தாரம், வீட்டு வசதி போன்ற சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டார். இது நாட்டின் வறுமை நிலையைக் கணிச மான அளவிற்குக் குறைத்தது.19ஆம் நூற்றாண்டில் சைமன் பொலி வார் என்பவரால் தொடங்கப்பெற்ற பொலி வாரியன் புரட்சியின் இறுதி இலக்கு சோச லிசமே என்று 2006இல் சாவேஸ் பிர கடனம் செய்தார். வெனிசுலா முதலாளித் துவ அமைப்புமுறையைக் கொண்டிருந் தது. சாவேஸ் ஆட்சிக்கு வந்தபின் நாட்டி லிருந்த கேந்திரமான தொழில்கள் மற்றும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். அந்நிய நிறுவனங்க ளால் வசப்படுத்தப்பட்டிருந்த பெரிய அள விலான எஸ்டேட் நிலங்கள் அவர்களிட மிருந்து பறிமுதல் செய்யப்பட்டன; நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. ‘‘கிராம கவுன்சில்கள்’’ என்று அழைக் கப்படும் உள்ளூர் சுயாட்சி அமைப்புகள் மூலமாக அனைத்து மக்களின் ஜனநாயக அரசியல் பங்கேற்பு நிறுவப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேற்கொள்வதில் வெனிசுலா முன்னணிப் பாத்திரம் வகித் தது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி இயக்கம் முன்னேற வெனிசுலா ஓர் உந்துசக்தியாக இயங்கியது. பொலி வியாவும், ஈக்வடாரும் இதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்தன.
கியூபா, வெனி சுலா ஆகிய நாடுகளுக்கிடையே மிகவும் நெருக்கமான முறையில் ஏற்பட்ட சகோ தரத்துவ உறவுகளும் ஒத்துழைப்பும் இத் தகைய முற்போக்கான மாற்றங்களுக்கு முக்கிய அடித்தளங்களாக விளங்கின. இவை அனைத்தும், அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கும், உள்நாட்டிலிருந்த மேட் டுக் குடியினருக்கும் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. சாவேஸ் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்திட எண்ணற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும், சாவேஸ் மேற்கொண்ட புரட்சிகரமான நடவடிக் கைகளின் உன்னதமான அம்சங்கள் ஜன நாயக அமைப்பை மேலும் விசால மானதாகவும் ஆழமானதாகவும் மாற்றின. 2002இல் ராணுவ சதி முறியடிக்கப்பட் டதைப்போலவே இப்போது ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்குத்தனமான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் திரளின் ஜனநாயக உறுதியின் கீழ் நொறுங் கித் தரைமட்டமாகின.2012 அக்டோபர் தேர்தல் மிகுந்த முக் கியத்துவம் வாய்ந்தது. சாவேஸுக்கு எதி ராக வலதுசாரி எதிர்க்கட்சிகள் அனைத் தும் ஒன்றுசேர்ந்து ஜனநாயக ஒற்றுமை யின் வட்டமேசை (ஆருனு-சுடிரனேவயடெந டிக னுநஅடிஉசயவiஉ ருnவைல) என்ற அமைப்பை உரு வாக்கி, கேப்ரிலஸ் என்ற ஒரேயொருவரை மட்டும் எதிர்த்து நிற்க வைத்தனர். வலது சாரி பிற்போக்குவாதிகளின் ஏகப் பிரதி நிதியாக கேப்ரிலஸ் இருந்தபோதிலும், மக் கள் மத்தியில் தன்னை ஒரு மிதவாதி யாகக் காட்டிக்கொள்ளவே முயற்சித்தார். ஆயினும், அவர் வெற்றிபெறுவார் என்று சொன்னால், அதன் பொருள், தற்சமயம் சாவேஸ் தலைமையில் பொலிவாரியன் புரட்சிகர நடவடிக்கைகள் மூலமாகப் பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் மீண்டும் தங்கள் கையைவிட்டுப் போய்விடும் என் பதை மக்கள் உணர்ந்தார்கள். வெனிசுலா வின் எண்ணெய் வளம் மீண்டும் பன் னாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும், மேற்கத்திய வல்லரசுகளின் நலன்களுக் கும் சேவை செய்வதற்குத் திருப்பிவிடப் படும் என்பதில் எவ்விதச் சந்தேகமு மில்லை.
எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்துவிதமான முறையிலும் தங்கள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. சாவே ஸுக்கு எதிராகவும் அவர் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை என்பது போலவும் துஷ்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன. ஆயினும் அவர்களின் பொய்ப்பிரச் சாரங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, சாவேஸும் இடதுசாரிகளும் வெற்றி வாகை சூடியுள்ளனர். வெனிசுலா மக் களின் தீர்ப்பு, சாவேஸ் மேற்கொண்ட பொலிவாரியன் புரட்சிகர நடவடிக் கைகள் தொடர வேண்டும் என்பதே யாகும். தேர்தல் தொடர்பாகக் கட்ட விழ்த்துவிடப்பட்ட அனைத்துப் பொய்ப் பிரச்சாரங்களும் சாவேஸால் மிகவும் இலாவகமாய்க் கையாளப்பட்டு முறியடிக் கப்பட்டன. உண்மையில், தேர்தல் நடை முறை மிகவும் விரிவான அளவில் பாராட் டப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக் கிறது. தென் அமெரிக்க நாடுகளின் ஒன் றியத்தின் தேர்தல் குழுவின் தலைவர் தேர்தல்கள் நடைபெற்ற விதத்தைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தபின் கூறி யிருப்பதாவது: ‘‘வெனிசுலா ஜனநாயக நடைமுறை என்றால் என்ன என்பதை மிகவும் போற்றத்தக்கவிதத்தில் வெளிப் படுத்தி இருக்கிறது. உலகிற்கு ஒரு சரி யான படிப்பினையைக் கற்றுத் தந்திருக் கிறது. இது மிகவும் முக்கியமானதாகும்.’’அதிபர் சாவேஸ்,வெனிசுலா நாட்டை ஒரு முற்போக்கான சமுதாயமாக மாற்றும் பணியில் முன்னிலும் வேகமாக இப்போது முன்னேறிச் செல்ல முடியும். அதிகரித்து வரும் குற்றங்கள், பணவீக்கம், போதை மருந்து கடத்தல் போன்று மிக ஆழமான பிரச்சனைகள் பலவற்றை அவர் சமா ளித்து முறியடிக்க வேண்டியிருக்கிறது. நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக தென் அமெரிக்க நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுவதற்கு சாவேஸ் மேற்கொண்ட முயற்சிகள் இவ் வெற்றியின் மூலம் மேலும் உறுதிப்படும்.
வெனிசுலாவின் வெற்றி ஏகாதிபத்திய நாடுகளின் உலக அளவிலான எண் ணெய் அரசியலுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கும் உதவிடும்.மிகவும் பிரகாசமான வெற்றியை அளித்திருக்கும் வெனிசுலா மக்களே, உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.
தமிழில்: ச.வீரமணி


Wednesday, October 10, 2012

மதவெறி விஷத்தைக் கக்கும் அரசியலுக்கு நிரந்தரமாய் முடிவு கட்டுவோம் : மார்கண்டே கட்ஜு



 நம் நாட்டில் இன்றைய தினம் ஏராளமான இந்துக்களும் முஸ்லீம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும், 1857க்கு முன்னர் அத்தகையதொரு நிலைமை நாட்டு மக்கள் மத்தியில் அநேகமாக இருந்ததில்லை என்பதே உண்மையாகும்.  இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயமாக இந்த அளவிற்கு வெறுப்புணர்வு இருந்தது கிடையாது. முஸ்லீம்கள் கொண்டாடும் ஈத் பெருவிழாக் கொண்டாட்டங்களில் இந்துக்கள் கலந்து கொள்வதும், அதேபோன்று இந்துக்களின் ஹோலி, தீபாவளித் திருவிழாக்களில் முஸ்லீம்கள் கலந்துகொள்வதும் வழக்கமாக இருந்து வந்தன. அவர்கள் சொந்த சகோதர, சகோதரிகளைப் போல ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
150 ஆண்டுகளுக்குப்பின்னால், இத் துணைக்கண்டத்தில், ஒருவர்க்கொருவர் இடையே சந்தேகம் மற்றும் வெறுப்பை உமிழக்கூடிய விதத்தில், எப்படி இது மாறிப்போனது? இன்றைய தினம், நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  இந்துக்களிடமிருந்து வாடகைக்கு வீடுகள் பெறுவதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நடைபெற்றால், காவல்துறையினர், அதற்குக் காரணமான உண்மையான கயவர்களைப் பிடித்திடாமல், (ஏனெனில் அவர்களுக்கு அறிவியல்பூர்வமான புலனாய்விற்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை), அரை டஜன் முஸ்லீம்களைக் கைது செய்வதன் மூலம் குற்றத்திற்குத் தீர்வுகண்டு விடுகிறார்கள். அவர்களில் பலர், நீதிமன்றத்தின் முன் அப்பாவிகள் என்று இறுதியில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதற்கு முன் பல ஆண்டுகள் அவர்கள் சிறைக் கொட்டடியில் செலவழிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதன் விளைவாக நாட்டில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அந்நியமாதல் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானிலோ, நிலைமைகள் இன்னும் மோசம். அங்குள்ள சிறுபான்மையினர்தீவிரவாதிகள் மற்றும் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற அச்சத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.
திருப்புமுனை
இந்தியாவில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றில் 1857ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாகும். 1857க்கு முன்னர் நாட்டில் மதத் துவேஷம் இருந்ததில்லை, மதக் கலவரங்கள் நடைபெற்றதில்லை. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, ஆனால் அவை ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வரும் வேறுபாடுகள் போன்றதேயாகும். இந்துக்களும், முஸ்லீம்களும் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.  இடுக்கண் வந்த காலங்களில் உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவர்க்கொருவர் நட்புடன் உதவிக் கொண்டார்கள்.
இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்கள், எண்ணற்ற கோவில்களை இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள், நாட்டில் முஸ்லீம் ஆட்சியாளர்களாக மாறியவர்கள், அநேகமாக அனைவருமே மத நல்லிணக்கத்தைப் பேணி வளர்த்தார்கள். இதனை அவர்கள் தங்கள் சொந்த நலனின் அடிப்படையிலேயே செய்தார்கள். ஏனெனில், தங்களின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருந்தார்கள்.  இந்தக் கோவில்களை இடித்தால் அது அவர்கள் மத்தியில் ஆவேசத்தையும் கலக உணர்ச்சியையும் தூண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதனை எந்த ஆட்சியாளரும் விரும்பமாட்டார்கள். எனவே, நம் நாட்டில் ஆட்சி புரிந்த அநேகமாக அனைத்து முஸ்லீம் ஆட்சியாளர்களுமே - மொகலாயர்கள், ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள், திப்பு சுல்தான் அல்லது ஹைதராபாத் நிஜாம் போன்று அனைவருமே - மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சி
1857இல், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்ததுஇப்போரில் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து சமர் புரிந்தார்கள்.  இக்கலகத்தை அடக்கியபின் பிரிட்டிஷ ஆட்சியாளர்கள் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இவ்வாறு, இந்தியாவிற்கான அரசுச் செயலாளர், சர் சார்லஸ் வுட், வைஸ்ராய் எல்ஜின் பிரபுவுக்கு 1862இல்  எழுதிய கடிதத்தில், ‘‘நாம் இந்தியாவில் ஓர் இனத்தினரை, மற்றோர் இனத்திற்கு எதிராக மோத விடுவதன் மூலமே நம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இருவரும் ஒன்றுபடாதிருப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்திடுங்கள்,’’ என்று எழுதினான்.
1887 ஜனவரி 14 அன்று அரசுச் செயலாளராக இருந்த விஸ்கவுண்ட் கிராஸ் (Viscount Cross ) கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு ஒரு கடிதம் எழுதினான்.   ‘‘இவ்வாறு மக்களை மத அடிப்படயில் பிரித்து வைத்திருப்பது நமக்குப் பெரிய அளவில் அனுகூலமாயிருக்கிறது. இந்தியக் கல்வி மற்றும் போதிக்கும் முறை தொடர்பான தங்களின் விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,’’ என்று அதில் அவன் குறிப்பிட்டிருந்தான்.
இந்தியாவிற்கான அரசுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் ஹாமில்டன், கவர்னர் ஜெனரலுக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினான்: ‘‘இந்தியாவில் நம் ஆட்சிக்கு உண்மையான ஆபத்தாக நான் கருதுவது ... மேற்கத்திய சிந்தனைகளை இங்கே நாம் படிப்படியாக ஏற்றுக்கொண்டு விரிவாக்குவது என்பதாகும். ...எக்காரணம் கொண்டும் நாம் அளித்திடும் நுண்ணிய கல்வி அவர்களை நமக்கு எதிராகத் திருப்பிவிடக்கூடிய விதத்தில் அமைந்துவிடக்கூடாது. ... நாம் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களை இரு பிரிவாக (இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும்) உடைக்க முடியுமானால் ... அவ்வாறு உடைத்து, அத்தகைய பிரிவினை மூலமாக, நாம் நம்முடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்,   நாம் வெளியிடும் பாடப்புத்தகங்கள் இரு இனத்தினருக்கம் இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டு, வெளியிடப்பட வேண்டும்.’’
இவ்வாறு, 1857க்குப்பின்னர், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உமிழ்ந்திடும் விதத்தில் ஒரு நச்சுக் கொள்கையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துவக்கினார்கள். இதனைப் பல வழிகளிலும் அவர்கள் செய்தார்கள்.
மதத் தலைவர்களுக்கு, மற்ற மதத்தினருக்கு எதிராகப் பேசுமாறு, லஞ்சம் தரப்பட்டது. ஆங்கில கலெக்டர், ரகசியமாக பண்டிட்ஜிகளை (கோவில் குருக்கள்) அழைத்து, பணம் கொடுத்து, முஸ்லீம்களுக்கு எதிராகப் பேச வைத்தான். அதேபோன்று, அவன் முஸ்லீம் மௌல்விகளுக்கும் பணம் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகப் பேச வைத்தான்.
மதத் துவேஷத்தை வளர்த்திடும் வகையில் வரலாற்று நூல்கள் திரித்து எழுதப்பட்டன. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்ப காலத்தில் படையெடுத்த முஸ்லீம் மன்னர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்தனர். ஆயினும்பாபரின் வழித்தோன்றலான அக்பர் போன்றவர்கள் கோவில்களை இடிக்கவில்லை, மாறாக, இந்துக் கோவில்களுக்கு மான்யங்கள் அளித்தனர். ராம் லீலா போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்தார்கள்.  அதேபோன்று ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள் போன்று ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் கலந்து கொண்டார்கள். வரலாற்றின் இரண்டாம் பகுதி, அதாவது நம் நாட்டிற்கு படையெடுத்து வந்த முஸ்லீம்களின் வழித்தோன்றல்கள், அநேகமாக அனைவருமே, மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த விஷயங்கள், முழுமையாக வரலாற்று நூல்களிலிருந்து கிழித்து எறியப்பட்டன.  நம்முடைய குழந்தைகள், கஜினி முகமது, சோம்நாத் கோவிலைக் கொள்ளையடித்தான் என்று மட்டுமே போதிக்கப்பட்டார்கள்.  திப்பு சுல்தான் போன்று மொகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மான்யங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதோ, இந்துப் பண்டிகைகளை அவர்களும் கொண்டாடினார்கள் என்றோ சொல்லிக் கொடுக்கப்படவில்லை (பி.என். பாந்தே எழுதி, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்திடும் வரலாறு என்பதைக் காண்க).
மதக்கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டப்பட்டன. நாட்டில் நடைபெற்ற அனைத்து மதக் கலவரங்களுமே 1857க்குப் பின்தான் தொடங்கின. அதற்குமுன் ஒருபோதும் மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை.   கலவரத்தைத் தூண்டுபவர்கள் (agent provocateurs) பல வழிகளில் மதத் துவேஷத்தை உருவாக்கினார்கள். மசூதிக்கு முன் அவர்கள் தொழும் சமயங்களில் இந்து சமய சாமிகளைப் பூஜித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களை ஒலிபரப்புதல் அல்லது இந்து விக்கிரகங்களை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
இத்தகைய நஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நம்மிடையே விதைக்கப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வோராண்டும் விதைக்கப்பட்டு, பெரும் விருட்சமாக வளர்ந்து 1947இல் நாடு பிரிவினைக்காளாகும் வரை நடந்தது. இன்றும் நம்மத்தியில் மதத் துவேஷத்தைப் பரப்பும் நச்சுக்கிருமிகள் போன்ற பலரை நாம் பெற்றிருக்கிறோம்.
எங்கேனும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றால், நம்முடைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல, இந்திய முஜாஹிதீன்ஜைஸ்-இ-முகமது, அல்லது ஹர்கட்-உல், ஜிஹாத்-அல்-இஸ்லாமியா போன்ற அமைப்புகளிடமிருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வந்ததாகக் கூறத் தொடங்கிவிடும். இக்காலத்தில்  தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்கிற அயோக்கியன் எவனும்கூட மிகவும் எளிதாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அனுப்பிட முடியும். இவ்வாறு பெறப்படும் செய்தியை தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலமும், அடுத்தநாள் அதனைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலமும் இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், குண்டு வீசுபவர்கள்  என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். (உண்மையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களிலும் 99 விழுக்காட்டினர் அமைதியை நாடுபவர்கள், நல்லவர்களாவார்கள்.)  இவ்வாறு  மிக நுணுக்கமாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக விஷத்தினை இந்துக்கள் மத்தியில் பரப்புகின்றனர். 
பாபர் மசூதி - ராம ஜன்ம பூமி கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஊடகங்களில் ஒருசில (குறிப்பாக இந்தித் பத்திரிகைகள்) கர சேவகர்களாகவே மாறியிருந்தன.
பங்களூரில் கொந்தளிப்பு
சமீபத்தில், பங்களூரிலும் அதனைச் சுற்றியும்  வசித்து வந்த வடகிழக்கு மாநில மக்களுக்கு அஸ்ஸாமில் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், எனவே அவர்கள் பங்களூரை விட்டு உடனே காலி செய்ய வேண்டும் என்றம் இல்லையேல் அனைவரும் படுகொலை செய்யப்படுவீர்கள் என்றும் குறுச்செய்திகள் அனுப்பப்பட்டன.  இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அழிம்பு (mischief) குறித்து பங்களூர் முஸ்லீம்களுக்குத் தெரிய வந்தபோதுவடகிழக்கு இந்தியர்களுக்காக அவர்கள் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். யாரோ தீயவர்கள் இத்தகு செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், முஸ்லம்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் மத்தியில் கூறினார்கள்.
சில பிற்போக்குவாதிகளின் வெறுக்கத்தக்க இழிவான செயல்களே இவைகள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.  வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் பண்பு கொண்ட மாபெரும் நாடு இந்தியா. நாட்டில் ஒற்றுமைக்கும் வளமைக்கும் ஒரே வழி, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் சம அளவில் மதிப்புடன் நடத்துவதேயாகும்.  நம்நாட்டை ஆண்ட மாமன்னர் அக்பர் நமக்குக் காட்டிச் சென்றுள்ள வழி இதுவேயாகும்.  (இவரும், அசோகருடன் இணைந்து, உலகம் கண்டுள்ள மிகச்சிறந்த ஆட்சியாளர் என்பதே என் கருத்து) (ஹின்சா விரோதக் சங் (எதிர்) மிர்சாபூர் மொட்டி குரேஷ் ஜமாத் என்னும் வழக்கில் நான் அளித்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, இணையத்தில் காண்க).
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதவெறி உணர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகாக்களிடம் இந்தியாவை ஓர் இந்து நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவித்து விட்டதாம். ஆயினும் நம் தலைவர்களின் பெருந்தன்மை காரணமாக, அவர்கள் அவ்வாறு அறிவிக்க வில்லை. ‘‘இந்தியா ஓர் இந்து நாடு அல்ல, மாறாக அது ஒரு மதச்சார்பின்மை நாடு’’ என்று கூறினார்கள். அதனால்தான், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, நம் அண்டைநாட்டார்களைவிட நாம் அனைத்து விதங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்.
 மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பது அல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது. என் கருத்தின்படிமதச்சார்பின்மை ஒன்றே நம் நாட்டை ஒற்றுமையுடன், வளமான இந்தியாவிற்கான பாதையில் முன்னோக்கிச் செல்ல, சிறந்த கொள்கையாகும். 
  (தமிழில்: ச. வீரமணி)
  

Sunday, October 7, 2012

இடரிலிருந்து தப்பிக்க ஒரு முயற்சி


சென்ற வாரம் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட் டணிக்குள் தீர்க்கமுடியாத அளவிற்குத் தலைவிரித்தாடும் முரண்பாடு முன் னுக்கு வந்தது. ‘‘மக்கள் மத்தியில் மத வெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் மட்டுமே மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும் என்பதே’’ அந்த முரண்பாடாகும். பாஜகவின் இத் தகைய நிலைப்பாடு காரணமாக, அதன் கூட்டணிக் கட்சிகள் - குறிப்பாக மாநிலக் கட்சிகள் - தங்கள் மாநிலத்தில் உள்ள மதச் சிறுபான்மையினரிட மிருந்து, அதிலும் குறிப்பாக முஸ்லீம் களிடமிருந்து, தனிமைப்படுத்தப்படக் கூடிய ஆபத்து இருப்பதால் - பாஜ கவை தனிமைப்படுத்தத் துவங்கிவிட் டன. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் ஏற்கனவே தன் மனத் தாங்கலைக் காட்டத் துவங்கிவிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிதான் பிரதமர் என்று பாஜகவில் சித்தரிக்கப்பட்டவுடனேயே அவர்தன் எதிர்ப்பைக் காட்டத் துவங்கிவிட்டார். இம்முரண்பாட்டை மூடி மறைப்பதற் காக, பாஜகவின் முதுபெரும் பந்தயக் குதிரையான எல்.கே. அத்வானி, ஒரு புதிய முகமூடியை -. அதாவது மதச் சார்பின்மையை உயர்த்திப்பிடிப்பதே பாஜகதான் என்னும் முகமூடியை - அணிய முயற்சித்திருக்கிறார். எந்த நபர் ரத யாத்திரை நடத்தி அதன் மூலம் வகுப்புக் கலவரங்களை உருவாக்கி, பாபர் மசூதி இடிக்கப்படும் அளவிற்கு இட்டுச் சென்று, ஏராளமானவர்கள் இறக் கவும், சொல்லொண்ணாத் துன்ப துயரங் களுக்கு ஆளாகவும் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதே நபர் இப்போது மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்.
என்னே முரண்தகை? அத்வானி அக்கூட்டத் தில் பேச வந்தபின், அவர் பேசுவதற் காகத் தயாரிக்கப்பட்டிருந்த உரையி லிருந்து பல முக்கியமான பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்துவிட்டார். அந்த முக்கிய பகுதிகள் பாஜகவோ அல்லது அத்வானியோ பாஜகவின் இந்துத்வா நிகழ்ச்சிநிரலிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளன. அத்வானி அவற்றை ஏன் வாசிக்கவில்லை என் பதற்கு பாஜகவின் தரப்பில் அதிகாரப் பூர்வமான விளக்கம் எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன் மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர் எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. எனவே தயாரிக்கப்பட்டிருந்த உரையை முழுமையாகப் படித்தால் ஆர்எஸ்எஸ்/பாஜக இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் மகிழ்ச்சிகொள்ளலாம். ஆனால் பிற பகுதியினரிடமிருந்து தனி மைப்பட நேரிடும் என்பதற்காகத்தான் அத்வானி அவ்வுரையை முழுமையாகப் படிக்கவில்லை.அவ்வாறு படிக்காத உரைப் பகுதிகள் மூலமாக பாஜக கூற விரும்புவது என்ன? பாஜகவுடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் ‘‘பாஜகவுடன் சேர்ந்து இருப் பதற்காகக் கொஞ்சமும் பயப்பட வேண் டாம்’’ என்பதேயாகும். இத்தகைய வேண்டுகோள்கள் வெறும் கண்துடைப் பேயாகும். மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் போதுமான அளவிற்கு உறுப்பினர் எண்ணிக்கை தேவை. இதற்கு ‘‘பாஜக தன்னுடைய கொள்கை களை உறுதியுடன் கடைப்பிடிக்கிற அதே சமயத்தில், நடைமுறை உத்தி களில் ஒருவிதமான நெளிவுசுழிவுடன் நடந்துகொள்ள வேண்டிய நிலை உரு வாகி இருக்கிறது.’’ தங்கள் கூட்டணிக் கட்சிகளையும் மக்களையும் ஏமாற் றிடவே இத்தகைய உத்திகள். தங்கள் கட்சியின் உண்மையான கொள்கைகள் என்பவை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலின் கருவாக விளங்கும் ‘‘இந்து ராஷ்ட் ரமே’’யாகும். கூட்டணிக் கட்சிகளையும், மக்க ளையும் ஏமாற்ற வேண்டும் என்பதன் ஒரு பகுதியாகத்தான், உலகின் பல பகு திகளிலும் வன்முறையை உசுப்பிவிட் டுள்ள இஸ்லாம் எதிர்ப்பு திரைப் படத்தை அத்வானியும் கண்டித்து சிறு பான்மை மக்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். குறிப்பாக இந்திய நிலைமையைக் குறிப்பிட்டு அவர் கூறுகிறார்: ‘‘ஒரு மதத்தின் கீழ் நம் பிக்கை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அவமரியாதையைப் பரப்புவது தவறு. நம் சமூகத்தின் பல்வேறுபட்ட பிரிவினர்க் கிடையே பாகுபாடோ அல்லது அநீதியோ காட்டமாட்டோம் என்று நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் மீளவும் உறுதிகூறிக் கொள்கிறோம்.’’ பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற அடிப் படையின் கீழ், பாபர் மசூதி இடிக்கப்பட இட்டுச்சென்ற ரதயாத்திரையை நடத் திய அதே நபர்தான் இதையும் கூறி யிருக்கிறார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! இவை அனைத்துமே பல மாநிலங் களில் உள்ள தங்கள் கூட்டணிக் கட்சி களையும், மக்களையும் ஏமாற்றி, நடை பெறவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளே என்பது மிகத் தெளிவாகும். ஆயினும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக முன்நிறுத்தியதன்மூலம் அவர் களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. பாஜக இவ்வாறு தனிமைப்படு வதற்குக் காரணம் என்ன? ஏனெனில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் கருவியாகும். ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரல் என்பது நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசு நிலைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு மக்களையும், தன்னுடைய கூட்டணிக் கட்சிகளையும் ஏமாற்றுவதற்கான ஒரு முகமூடியேயாகும். இத்தகைய மாக்கியவெல்லியன் முயற்சிகளுடன் மட்டும் அல்லாது பாஜக தற்போது முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு ஸ்தாபனப் பிரச்சனை களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கர் நாடக மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேசியக் கவுன்சில் கூட்டத் தில் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டு மல்ல பாஜக தலைவருக்கு அவரது தலைமையைப் பழித்துரைத்துக் கடி தமும் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், தன்னைப் போன்ற மக்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட் டிருக்கிறார். இக்கடிதத்தை செய்தியாளர் களிடையே வெளியிட்டு உரையாற்று கையில் அவர் பாஜக தலைவரிடம், ‘‘ஒருபக்கத்தில் நீங்கள் மிகப் பெரிய அளவில் தத்துவம் பேசுகிறீர்கள். ஆனால் நடைமுறையில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று கேட் டிருக்கிறார். மத்தியில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதனைக் குறிக் கோளாகக் கொண்டு, ஆட்சியைப் பிடித்தபின் ஆர்எஸ்எஸ் தத்துவங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே பாஜக இவ்வாறு மதச்சார்பின்மை முகமூடியை அணிந்திட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. பாஜகவின் இத்தகைய வேஷங்கள் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். இந்தியக் குடி யரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித் தளங்களைப் பாதுகாத்து வலுப்படுத்திட அவை முறியடிக்கப்பட்டாக வேண்டும்.தமிழில்: ச.வீரமணி