Monday, September 27, 2010

ஜம்மு-காஷ்மீர் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்



இறுதியாக, செப்டம்பர் 20-21 தேதி களில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஜம்மு - காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண் டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூறு நாட் களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையின ருக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 108 இளம் உயிர்கள் பலியானதை அடுத்து இந்தக்குழு சென்றது. ஜூன் 11 அன்று அங்கே கிளர்ச்சி துவங்கிய உடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று கோரினோம். ஆகஸ்ட் 6 அன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்ற சமயத்திலும் இதனை நாம் வலியுறுத்தினோம். புனித ரம் ஜான் மாதம் துவங்குவதற்கு முன்னரே இத னைச் செய்திடுமாறும் நாம் கேட்டுக் கொண் டோம். அப்போது அரசுத் தரப்பில், அங்கே இயல்பு வாழ்க்கைத் திரும்பிய பின் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வாதிடப்பட்டது. இயல்பு வாழ்க்கைத் திரும்பு வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் அவ சியம் என்று நாம் திரும்பத் திரும்ப அரசை வலியுறுத்தி வந்தோம். அந்த சமயத்தில் இதனை ஏற்க அரசு மறுத்ததை அடுத்து, அங்கே பதட்ட நிலைமைகள் மேலும் அதிக ரிக்கவும் அதன் விளைவாக எண்ணற்ற அப் பாவி உயிர்கள் பலியாகவும் நேர்ந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதி கள் குழு ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு நகரங்களிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மக்களின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தது. மாநில மக்களின் துன்ப துயரங்களை பிரதிநிதிகள் குழுவும் மிகவும் கவலையுடன் கேட்டது. மக்களுக்குத் தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்தது. முதலாவதாக, அனைத்து அரசியல் கட்சித் தலைமைகளுக்கும், அனைத்துப் பிரிவு மக்க ளுக்கும் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை யும் அமைதியையும் மீளக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அனைவரும் ஒன்றுசேரு மாறு பிரதானமாக வேண்டுகோள் விடுத்தது. பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்க்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டது. இந்த உணர்வின் அடிப்படை யிலேயே பிரதிநிதிகள் குழுவில் சென்ற உறுப் பினர்களில் சிலர் மாநிலத்தில் இயல்பு வாழ்க் கைத் திரும்பவும், மக்கள் மீதான துன்ப துயரங் களைப் போக்கிடவும், அப்பாவி உயிர்கள் பலி யாகாமல் பாதுகாத்திடவும் முன்வர வேண்டும் என்று கோருவதற்காக காஷ்மீரில் இயங்கி வந்த பிரிவினை இயக்க தலைவர்கள் பல ரைச் சந்திக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. பின்னர், பிரதிநிதிகள் குழுவினரே அவர்கள் இடத்திற்குச் சென்றனர். இவ்வாறு திடீரென்று எவரும் எதிர்பாராதவிதத்தில் எடுக்கப்பட்ட நட வடிக்கையானது, தற்போது மாநிலத்தில் நில வும் துன்ப துயரங்களைப் போக்குவதற்காக வும், மக்களுக்கு நிவாரணம் அளித்து இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதற்காக வும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மிகவும் நேர்மையாக நடந்து கொண் டதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் கொண்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கம் என்று ஒரு மனதாக நிறைவேற்றப் பட்ட 1994 தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் அணுகுமுறை அமைந்திருந்தது.

ஸ்ரீநகரில் பல்வேறு பிரிவு மக்களுடனும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருப வர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகளி லிருந்து, அவர்கள் மிகவும் மனம் நொந்து, நம் பிக்கையற்ற நிலையில் இருப்பதை உணர முடிந்தது. உடனடியாக அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவுமே இதுவரை அமல் படுத்தப்படவில்லை. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையும் அவநம்பிக்கை யையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் மத்தி யில் உள்ள அவநம்பிக்கையைப் போக்கிட வும், அரசின் மீது நம்பிக்கையில்லாமல் மக் கள் இருப்பதையும் போக்கிட வேண்டுமா னால் உடனடியாக அரசு, இடதுசாரிகள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

அடுத்து, ஜம்முவில் பிரதிநிதிகள் குழு வைச் சந்தித்தவர்கள், மத்திய அரசின் அணுகுமுறை முழுமையாக ‘‘காஷ்மீரை மையமாக’’ வைத்தே இருப்பதாகவும், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை அது முழுமை யாகப் புறக்கணித்துவிட்டதாகவும் கூறினார் கள். பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிலர், புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் முகாம்க ளுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் அளித்த விவரங்கள், காஷ்மீரில் உள்ள பிரச்சனைக ளின் மற்றொரு பக்கத்தைக் காட்டின. பள்ளத் தாக்கிலிருந்து 21 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்களில், பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரையிலும் நிரந்தரக் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. மத்திய அரசாலும் மாநில அர சாலும் அறிவிக்கப்பட்ட அனைத்து உறுதி மொழிகளும் பெருமளவில் இன்றளவும் நிறை வேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. காஷ் மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்து வந் துள்ள மக்களின் துன்ப துயரங்களும் உடனடி யாகப் போக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல நூறு ஆண்டு களாக, முஸ்லிம்களும் பண்டிட்டுகளும் மிக வும் நல்லிணக்கத்துடன் கூட்டாகவே வாழ்ந்து, நாட்டின் சமய ஒற்றுமைக்கு வலு வான அடிப்படைத் தூண்களாக விளங்கி வந் துள்ளனர். நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியாவிற்கு அடித்தளமாக விளங்கும் இத்த கைய நல்லிணக்கத்தை அழித்திடக் கூடிய வகையில் அரசின் செயலற்றத் தன்மை இருந்து விடக் கூடாது.

எனவே, இப்பிரச்சனைகளைக் களைந் திட அரசு அவசரகதியில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அங்கே இயல்பு வாழ்க் கைத் திரும்புவது என்பது ஜம்மு - காஷ்மீர் மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற் காக மட்டுமல்ல, நாட்டின் நவீன மதச்சார்பற்ற குடியரசை வலுப்படுத்துவதற்கும் வசியமாகும்.

மத்திய அரசும் மாநில அரசும் உருப்படி யான, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூ டிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்திட வைப்பதற்கு உதவிடும் வகையில் நாடாளு மன்ற பிரதிநிதிகள் குழு பயணம் பயன்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சார்பில் முன்வக்கப்பட்ட தீர்மானகரமான நடவடிக் கைகள் இதற்கு அடிப்படையாக அமைந்திட வேண்டும். கடைசியாக, மத்திய அரசு, மத் தியக் குற்றப் புலனாய்வுத் துறையாலோ அல் லது வேறு ஏஜென்சிகளாலோ குற்றம் சாட்டப் பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு எதி ராக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மேலும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகள் குறித்தும் மறு பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுடன் சிறை யிலிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி