Tuesday, February 28, 2017

குஜராத் கொலைவெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டாகியும் பரிதவிக்கும் அவலநிலை



குஜராத் கொலைவெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டாகியும் பரிதவிக்கும் அவலநிலை
அகமதாபாத், பிப்.28-
2002ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை,கொள்ளை, தீக்கிரை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கள் அவர்கள் வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு தனியேபலஇடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் அவர் களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றுஅரசாங்கத்தரப்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், குடிநீர் வசதி, பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துப்புரவு வசதிகள் அல்லது சாலை வசதிகள் எதுவுமின்றிகடந்த பதினான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து அவதிக்குள் ளாகி வருகிறார்கள்.இவ்வாறு தங்க வைக்கப் பட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரைதி ஒயர் இணைய இதழ் செய்தியாளர் நேர்காணல் கண்டு தன்னுடைய இதழில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் விவரம் வருமாறு:இந்து மதவெறியர்கள் நரவேட்டையாடிய இடங்களில் நரோடா பாட்டியா என்பதுஒன்று. இங்கே வசித்து வந்த சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலவரத்திற்குப்பிறகு சிட்டிசன் நகர் என்னும் பகுதிக்குவந்துவிட்டனர். இங்கே வசித்துவந்த நதீம்பாய் சையது (42)என்பவருக்கு ஒரு வீடும் வீட்டைஒட்டி ஒரு மரப்பட்டறையும் இருந் தது. மதவெறியர்கள் அவற்றைத் தீக்கிரையாக்கிவிட்டனர். ஐந்துபேரைக் கொண்ட அவரது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு நதீம்பாய் 2003இல் சிட்டிசன் நகர் என்னும் பகுதிக்கு வந்துவாழத் தொடங்கினார். இவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கித்தரப் பட்டது. இப்போது அவரது பையன்கள் வளர்ந்துவிட்டனர். அவரது பையன்களுக்கு திருமணமும் நடந்துவிட்டது. இப்போது அவரது குடும்பத்தில் ஒன்பது பேர் இருக்கின்றனர். இவர்கள்அனைவரும் ஒரே அறையில்வாழ்வது என்பது இயலாததாகிவிட்டது என்று சையது கூறுகிறார்.பம்பாய் ஓட்டல் பகுதி என்றுமக்களால் அழைக்கப்படும் சிட்டிசன் நகர் என்னும் பகுதி இந்தஆண்டு பிப்ரவரியில் இறந்துவிட்ட கேரள, மலப்புரத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான .அகமது என்பவரது தலைமையிலிருந்த கேரள முஸ்லிம் லீக் நிவாரணக்குழுவுக்குச் சொந்தமானது. அவர் இந்த இடத்தை பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். குஜராத்தில் பல இடங்களில் அமைந்துள்ளதைப்போல சிட்டிசன் நகர் என்பதும் ஒரு தற்காலிக முகாமாகத்தான் உருவானது.
ஆனால் இப்போது அதுஒரு நிரந்தரக் குடிசைப் பகுதி போன்று மாறிவிட்டது.இவ்வாறு இவர்கள் வசிக்கும் இடத்தில் இவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதித்த முஸ்லிம் அமைப்புகள் அவற்றைஇவர்களுக்கு சொந்தமாக்கித் தந்திடுவதற்கு முன்வரத் தயங்குகின்றன. எனவே இவர்களால் இந்த இடங்களில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்து கொள்ளவும் முடியவில்லை.2002 இல் முஸ்லிம்களுக்குஎதிராகக் கட்டவிழ்த்துவிடப் பட்ட கலவரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள்இடங்களை இழந்து வெளியேற் றப்பட்டனர். இவர்கள் மாநிலம் முழுதும் சுமார் 83 காலனிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதில்17 காலனிகளில் மட்டும்தான் வசிப்பவர்களின் முகவரிகளுடன் வீடுகள் இருக்கின்றன. இங்கே வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள் அல்லது வங்கிகளிலிருந்து கடன்கள் அவ்வளவு எளிதாகவாங்கிட முடியாது என்று இவர் களுக்காகப் பாடுபட்டுவரும் ஜன்விகாஷ் என்னும் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஹொசிபா உஜ்ஜையினி என்பவர் கூறுகிறார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் இந்தக் காலனிகளில் இப்போது 16,087 பேர் வசிக்கின்றனர்.
மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து அரசாங்கத்திடமோ அல்லது வேறு எவரிடமுமோ எந்தத் தகவலும் இல்லை. சேரிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் தற்போது வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் களுக்கு இடமளிப்பதற்கே இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று பதான் என்பவர் தெரிவிக்கிறார்.இந்தக் காலனிகளில் வசிப்பவர்களுக்கு இவற்றின் மீது உரிமை அளிக்கப்படாதது மட்டுமல்ல. இந்தக் காலனிகளில் அடிப்படை வசதிகளும் எதுவும் கிடையாது. ஜூகாபுரா என்பதுதான் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கொட்டடியாகும். இங்கே தண்ணீர் வசதி கிடையாது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான தண்ணீர் வரும் குழாய் வழியானது பக்கத் தில் இந்துக்கள் அதிகமாக வாழும் ஜோத்பூர் என்னும் பகுதியோடு முடிந்து விடுகிறது. “என்னுடைய மகன் முறையாகக் கல்வி கற்காமல், கூலி வேலைக்குப் போய் வருகிறான். என் கணவரும் கூலிதான். பலநாட்களில் வருமானம் எதுவும்இருக்காது. சென்ற ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட் டார். அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கினேன். எனினும் என் கணவரைக் காப்பாற்ற முடியவில்லை. இருமாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்,” என்று ரெஹனா பானுஎன்பவர் கூறுகிறார்.இப்போது தான் தங்கியிருந்த அறையையும் காலி செய்யச் சொல்லி கடன் அளித்தவர்கள் தன்னை நிர்ப்பந்தித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.“எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலுமாக அழிக்கப் பட்டுவிட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக் கூலிகளாக மாறிவிட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எங்களால் கல்வி எதுவும் அளிக்க முடியவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலேயே மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.” என்று ஷேக்கட்டூன் பீவி என்பவர் கூறுகிறார்.
(நன்றி: தி ஒயர் இணைய இதழ்)
(தமிழில்: .வீரமணி)

பயங்கரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைப் பொய்யாகப் பிணைத்திடல்



பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்துப் பொய்யாகப் பிணைக்கின்ற நீசத்தனமானதும்அதிர்ச்சியளிக்கக்கூடியதுமான விவரங்கள் தில்லி உயர்நீதிமன்றம் தில்லியில்2005 நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத்தாக்குதல் தொடர்பாகப் பிணைக்கப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்திருப்பதிலிருந்து மீண்டும்ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. முகமது உசேன் பஸ்லி மற்றும் முகமதுரபிக் ஷா என்கிற இளைஞர்கள் அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தாரிக் அகமது தார் என்கிற இளைஞர் வெடிகுண்டுத் தாக்குதலில் எந்தத் தொடர்பும்இல்லை என்ற போதிலும் அவர் ஒருபயங்கரவாத அமைப்பில் உறுப்பினராகஇருந்தார் என்பதற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
நீதிமன்றம் கண்டனம்
முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக காவல்துறையினரால் வகுப்புவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் விளைவாக,தில்லியில் 67 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியஉண்மைக் கயவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் விடுபட்டுவிட்டார்கள். இதுஇவ்வழக்கில் பொய்யாகப் புனையப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.முகமது உசேன் பஸ்லி மற்றும் முகமதுரபிக் ஷா ஆகிய இருவரும் காவல்துறையினரின் கடும் சித்ரவதைகளுக்கும், காவலடைப்புக்கும் ஆளாகிவிட்டு, சுதந்திரக்காற்றை அனுபவிப்பதற்கு 12 ஆண்டுகாலமாகி இருக்கிறது. காவல்துறையினரின் கடும் சித்ரவதைகள், பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியங்கள், அப்பாவி இளைஞர்களைச் சிக்க வைக்க வேண்டும்என்பதற்காக உண்மைகளை மூடி மறைத்திடும் இழிநடவடிக்கைகள் அனைத்தும், அநீதியான இத்தகைய நீதிமன்ற விசாரணைக்குப்பின்னே உள்ளன.உதாரணமாக, காஷ்மீர் பல்கலைக்கழக மாணவரான 22 வயது ரபிக் ஷா, தில்லியில் இந்தத் தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், ஸ்ரீநகரில் உள்ள தன் கல்லூரிவகுப்பறையில் பாடங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த உண்மையை காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் பதிவாளரால் எழுதப்பட்ட கடிதம் உறுதி செய்கிறது. எனினும் இந்த உண்மையை புலனாய்வினை மேற்கொண்ட காவல்துறையினர் வேண்டுமென்றே மூடிமறைத்துவிட்டனர்.அப்பாவி மக்கள் மீது அட்டூழியங்கள்புரிந்து பொய்யாக வழக்கைப்புனைந்திட்ட தில்லி காவல்துறையின் தனிப் பிரிவினை நீதிமன்றத்தின் தீர்ப்புரை இடித்துரைத்திருக்கிறது.
14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் ஒன்றன்பின்ஒன்றாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவற்றில் பொய்யாகப் பிணைக்கப்பட்ட,முஸ்லிம்கள் விடுதலையாகி வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறும்போதெல்லாம், எப்படி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, அந்த சம்பவத்துடன் பொய்யாகப் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை நீதித்துறையின் தீர்ப்புகள் தோலுரித்துக் காட்டியுள்ளன. காவல்துறை புலனாய்வுஏஜன்சிகள், குறிப்பாக தனிப்பிரிவு செல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்குழுக்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான மனோபாவம் கொண்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதையும், அதிலும் குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றன.2012இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட (discharged) அல்லது விடுதலை செய்யப்பட்ட (acquitted) 22 முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை எடுத்துக்கொண்டது. இவ்வாறு வழக்குகளில் பிணைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் முகமது அமின். தில்லியைச் சேர்ந்த இவர் 18 வயதில் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் தன்மீது புனையப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, விடுதலையானார். மற்றொருவர் மக்பூல் ஷா. ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர் 14ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுதலையானார்.
மறுவாழ்வுக்கு இழப்பீடு
  •  இவ்வாறு இதுபோன்று வழக்குகளில் பொய்யாகப் புனையப்பட்டு விடுதலையான அப்பாவிகளின் மறுவாழ்வுக்காக உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
  • சிறையிலிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்திட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • வழக்குகளின் முடிவில் அப்பாவிகள் மீது பொய்யாக வழக்குகள்புனையப்பட்டதாக நீதிமன்றங்கள்கண்டுபிடித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்திடும் சமயத்தில், அவ்வாறு அப்பாவிகள் மீது பொய்யாகவழக்குகளைப் புனைந்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  • சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (Unlawful Activities Prohibition
  • Act) உள்ள கொடுமையான ஷரத்து நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இவ்வாறு இந்தப்பிரச்சனையை மத்திய அரசிடமும், குடியரசுத்தலைவரிடமும் எடுத்துச்சென்ற பின்னரும்கூட, இப்பிரச்சனையை சரிசெய்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தில்லி உயர்நீதிமன்றம் காவல்துறையினரின் புலனாய்வினை கடுமையாக இடித்துரைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது, இதில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். இந்த வழக்கில் நீதிபதிகளால் கண்டிக்கப்பட்டிருக்கின்ற காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.அரசாங்கம் பாதிப்புக்கு உள்ளாகி விடுதலையாகியுள்ள இரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் உரிய இழப்பீடு அளித்து அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

(பிப்ரவரி 22,2017)
தமிழில்: .வீரமணி