Monday, February 13, 2012

ஆட்சியாளரின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவோம்!



த்தரப்பிரதேசத்தில் அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்காக நடைபெற்று வரும் தேர் தலில் மக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் வெறுப்பை உமிழ்வது இயற்கையே யாகும். வரவிருக்கும் பதினைந்து நாட்களில் இது படிப்படியாக அதிகரிக்கவே செய்திடும். இதற்கான காரணங்கள் எண்ணிலடங்கா தவை. மாநிலத்தில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி)க்கு எதிராக எழுந்துள்ள மக் களின் கோபம், நம்பிக்கையற்று விரக்தி நிலையில் உள்ள சமாஜ்வாதி கட்சி (எஸ்பி), ஆட்சியிலிருந்தபோது மக்களின் மனதை எப்படியாவது வென்று விடலாம் என்ற குறு கிய எண்ணத்தின் அடிப்படையில் பாபர் மசூ தியை இடித்து அதன்பின்னர் அலங்கோலமா கியுள்ள பாஜக, இளம் தலைமுறையினரை இறக்கிவிட்டு விளம்பரம் தேடும் காங்கிரஸ் ஆகிய நாலு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட் டுள்ள நான்கு முனைப் போட்டியில் மாநிலம் முழுவதும் அடங்கியிருந்த புழுதி மிக அதிகமான அளவிலேயே கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் முடிவு கள் தேசிய அரசியலிலும் எப்போதும் தாக் கத்தை ஏற்படுத்தும் என்பது மிக முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாட்டின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக இப்போதும் தொடர்ந்து இம்மாநி லம் இருந்து வருகிறது. மக்களவைக்கு அம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களின் எண்ணிக்கை, மத்திய அரசாங் கம் மற்றும் அதன் தலைமையைத் தீர்மானிப் பதில் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும். இந்தியாவில் அதிகமானஅளவில் பிரதமர் களை அளித்திட்ட மாநிலமாகவும் அது திகழ்கிறது.

மேலும், இன்றைய சூழ்நிலையில், ஒரு வேளை ஒரு தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், அதனைத் தொடர்ந்து பெரும்பான் மையைப் பெறுவதற்காக இக் கட்சிகளுக்குள் நடைபெறும் தில்லுமுல்லுகள், மத்தியில் உள்ள கூட்டணியிலும் குறிப்பிடத்தக்க அள விற்கு செல்வாக்கினை ஏற்படுத்திடும். எனவே இங்கு நடைபெறும் தேர்தல் பிரச் சாரத்தில் ஒருவிதமான பதற்றம் நிலவுவதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ வேண்டியதில்லை.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், இதனுடன் மேலும் நான்கு மாநிலங்க ளான பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற் றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளுக் காகவும் தற்போது காத்திருக்க வேண்டிய நிலையிலிருக்கிறது. நாட்டுடன் சேர்ந்து நாமும் காத்துக்கொண்டிருக்கும் அதே சமயத் தில், சமீபகாலங்களில் நமக்கு நினைவு தெரிந்தவரை, எண்ணிலடங்கா ஊழல்கள் மற்றும் பிரச்சனைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டுள்ள மன்மோகன் சிங் தலைமையி லான ஐமுகூ-2 அரசாங்கத்தைப் போல் எந்தவொரு அரசாங்கமும் தான் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப் பதைப் பார்த்ததில்லை.

உச்சநீதிமன்றம், 2ஜி உரிமங்களை ரத்து செய்திருக்கிறது. அதன் மூலம், மத்திய டெலிகாம் அமைச்சர், ‘‘அரசின் கருவூலத் திற்கு இழப்பு என்பது பூஜ்யம்தான்’’ என்றும் எனவே, ‘‘இத்துறையில் ஊழலே நடைபெற வில்லை’’, என்றும் ‘‘முறையற்று எதுவும் நடந்துவிடவில்லை’’ என்றும் கூறியவை அனைத்தும் மறுதலிக்கப்பட்டுவிட்டன. இவையன்றி, ராணுவ உயர் அதிகாரியின் வயது தொடர்பான பிரச்சனை, ஆன்ட்ரிக்ஸ் ஊழல் தொடர்பாக அரசுத்தரப்பில் கூறப்படு பவைகளை ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகள் மறுத்திருப்பது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல், தங்கள் மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப் படையில் சிபிஐ நடவடிக்கை எடுத்திருப் பதற்கு எதிராக மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் கிளர்ந்தெழுந்திருப்பது - என்று ஐமுகூ-2 ஆட்சிக்கு எதிராக புதிது புதிதாக எண்ணற்ற பக்கங்களிலிருந்தும் பிரச்சனைகள் எழுந் துள்ளன.

விலைவாசி உயர்வு, தொடர்ந்து மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கின்றது. நம் நாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி உள்ள நிலை ‘‘தேசிய அவமானம்’’ என்று பிர தமரே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை வளர்த் தெடுக்கக்கூடிய விதத்தில் அறிவியல் ஆராய்ச்சித்துறை செயல்பாடுகள் இல்லை என்றும் புலம்பியிருக்கிறார். ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே நிலவும் பிரச்சனைகள் காரணமாக சாமானிய மக்க ளுக்காக ‘முதலைக் கண்ணீர்’ வடிப்பதும், திரிணாமுல் காங்கிரஸ் சில தந்திரங்களில் ஈடுபடுவதும் தொடர்கின்றது.

ஆட்சியாளர்கள் தங்கள் முன் உள்ள இப் பிரச்சனைகளை மூடிமறைக்க முயல்வதி லிருந்து, சில மாநிலங்களில் தேர்தல் முடிவு கள் தங்களுக்குச் சாதகமாக அமையலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சியினரிட மிருந்து பறித்திட முடியும் என்றும், கோவா மற் றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேவை யான அளவிற்கு எண்ணிக்கையைப் பெற் றிட முடியும் என்றும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியை அமைக்கும் கட்சியைத் தீர்மானிக் கும் கட்சியாக (‘மiபே அயமநச’) உருவாகிட முடி யும் என்றும் அது நம்புகிறது. பிரதான எதிர்க் கட்சியான பாஜகவிற்குள் நடைபெறும் குடுமி பிடிச் சண்டைகள், ஐமுகூட்டணியை இவ் வாறு ‘குழம்பிய குட்டையில் மீன் பிடித்துவிட லாம்’ என்று கருத இடமளித்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஐமுகூ-2 அர சாங்கம் சமர்ப்பிக்கவிருக்கும் பட்ஜெட்டில் மக்கள் மீது மேலும் மிகவும் கொடூரமான முறையில் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் தாக்குதல்களைத் தொடுக் கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது அரசுக்கு இருக்கின்ற நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட இந்த வகையில் அது நிகழ்ச்சிநிர லைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

ஐமுகூ அரசாங்கம், திசை தெரியாது தத் தளித்துக் கொண்டிருக்கிறது என்று நாம் சொல்லும் அதேசமயத்தில், ஒரே ஒரு விஷ யத்தில் மட்டும் இது மிகவும் தெளிவாக இருக் கிறது. அது என்னவெனில், நாடும், நாட்டு மக் களும் எக்கேடு கெட்டாலும், நவீன தாராள மயப் பொருளாதார சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதை மட்டும் விட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் அது குறியாக இருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக, இடதுசாரிக் கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சட்டங் கள் மற்றும் மோசமான நிதிச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கொண்டுவந்து நிறைவேற் றிட ஐமுகூ-2 அரசாங்கம் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முந் தைய ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின்போது அவ்வாறு இடதுசாரிக் கட்சிகள், அரசு கொண்டுவந்த அத்தகைய நிதி சீர்திருத்தங் களைத் தடுத்து நிறுத்திய காரணத்தால்தான் உலக முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் கடும் பாதிப்பு நம் நாட்டிற்குள் ஏற்படாதவாறு தடுத்து நிறுத்த முடிந்தது என்கிற நம் சொந்த அனுபவத்தி லிருந்துகூட அது படிப்பினைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறது.

உலக வங்கியானது தற்போதுள்ள பொரு ளாதார மந்த சூழ்நிலையில் பணக்கார நாடு கள் எதுவும் பணத்தைக் கொண்டுவந்து இந் தியாவிற்குள் கொட்டுவதற்கு உரிய சூழல் இல்லை என்று உலக வங்கி எச்சரித்திருக் கிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் நிதிச் சீர்திருத்தக் கொள்கைகளை மேலும் தாராளமாக்குவதன் மூலம் அந்நிய நிதி வந்து நம் நாட்டிற்குள் கொட்டும் என்கிற ஆட்சி யாளர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் என்றே தெரிகிறது.

மூலதனத்தை மிகவும் தாராளமாக உப யோகப்படுத்துவதாலோ, மிகவும் குறைந்த ஆடம்பரமற்ற முறையில் செலவழிப்பதன் மூலம் மட்டுமோ பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுவிட முடியாது. இதன் மூலம் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் இந்தியப் பெரும் நிறு வனங்கள் லாபம் ஈட்ட வேண்டுமானால் இது உதவக்கூடும். ஆயினும், மக்களின் வாங்கும் சக்தி உயராமல், நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதற்குப் பதிலாக (கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள் அளிக்கப் பட்டிருக் கின்றன) அத்தொகைகளை அவர்களிட மிருந்து வசூலித்து, நமக்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளை உரு வாக்கக்கூடிய வகையில், பொது முதலீட்டில் ஈடுபடுத்தி, மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புக்களை அதிகரித்திருக்க வேண்டும் என்று நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படு வதன் மூலமாகத்தான் ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் கார ணமாக, வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடை பெற்று வரும் கிளர்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் போராட்டங்கள் வளர்ந்து வந்த போதிலும், எதார்த்த உண்மைகளைப் பார்க் காமல் முதலாளித்துவம் கண்ணை மூடிக் கொள்ளும் போக்கையே கொண்டிருக்கிறது.

‘‘முதலாளித்துவப் பொருள் உற்பத்தி, பரி வர்த்தனை உறவுகளையும் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளையும் கொண்ட தாகிய நவீன முதலாளித்துவ சமுதாயம், மாயவித்தை புரிந்து தோற்றுவித்தாற்போல் இவ்வளவு பிரம்மாண்டப் பொருள் உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங் களையும் தோற்றுவித்திருக்கும் இச்சமு தாயம், பாதாள உலகிலிருந்து தனது மந்திரத் தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதி யின் நிலையில் இருக்கக் காண்கிறோம்,’’ என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இத்தகைய உலக முதலாளித்துவ நெருக்கடி அதன் உடல் முழுவதும் வியாபித்துள்ளது. இதற்கு எந்தத் தனிப்பட்ட நபரின் ஆசையோ பேரா சையோ காரணமல்ல. எனவே, சோசலிசம் ஒன்றுதான் மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்தை எய்திட ஒரே விடையாகும்.

இதற்கான நீண்ட நெடிய போராட்டம் இந் தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கைத் திசைவழியை மாற்றக்கூடிய விதத்திலும், பெருமளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய வகை யில், நமக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை உருவாக்கக்கூடிய முறையில் பொது முதலீட்டை அதிகப்படுத்தக்கூடிய விதத் திலும் வலுவான மக்கள் போராட்டங்களை அதிகரிப்பதும் அவசியமாகும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நமக்குக் கொடுக்கத் தீர்மானித்துள்ள திசைவழி இதுவேயாகும்.

தமிழில்: ச.வீரமணி

Tuesday, February 7, 2012

ஐமுகூ அரசின் இருமுனை கொடூரத் தாக்குதல்



உலகம் முழுவதும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் கடும் வீழ்ச்சி யடைந்தபோதிலும் ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மட்டும் இன்னமும் அதனை உயர்த் திப்பிடிப்பதைத் தொடர்கிறது. வரவிருக்கும் வருடாந்திர பட்ஜெட்டுக்கு முன்னால் அதிக அளவில் அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திட லாம் என்கிற நப்பாசையுடன் தாராளமயக் கொள்கைகளை மிகவும் தாராளமாகவே அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டிருக் கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மேலும் சீர்கேடடையும் நிலை தொடரும் சூழ லில், அந்நிய மூலதனம் வருவதற்கான சாத் தியம் இல்லை என்றபோதிலும், அரசாங்கம் அதுபற்றிப் பரிசீலித்ததாகத் தெரியவில்லை. ‘‘பொருளாதாரத்துறையில் பிரகாசமாய் வளர்ந்துவருவதாக’’க் கூறி அந்நிய மூல தனத்திற்கு வரவேற்பளித்து, நம் நாட்டு மக்களை வறிய நிலைக்குத் தள்ளி, அவர் களைக் கொள்ளையடித்துச் செல்ல வழி அமைத்துத் தரவே ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் விரும்புகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடத் தயாராகிவிட்டதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமோ கடுமையான நெருக்கடியில் சிக்கி தன் ஈரோ நாணயத்தையே காப்பாற்ற முடியுமா என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. லாபம் ஈட்ட முடியாது, பசி யால் தவித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மூலதனத்திற்கு இந்திய சந்தையைத் திறந்து விட இவ்வாறு ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய் திருக்கிறது. இதன் மூலம் மிகவும் தாராள மான வகையில் மானியங்கள் கொடுத்து உற் பத்தியாகியுள்ள வேளாண் பொருள்கள் மற் றும் பால், வெண்ணெய் முதலானவை இந்திய சந்தைக்குள் வெள்ளம்போல் பாய வகை செய் யப்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே கடுமை யாக பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் இந்திய விவ சாயத்தையும் விவசாயப் பொருளாதாரத்தை யும் மேலும் கடுமையாகப் பாதிக்கச் செய் திடும். நாட்டின் பல பகுதிகளில் அரசாங்க நிறுவனங்களே தாங்கள் ஒப்புக்கொண்டபடி விவசாயிகளுக்கு, கொள்முதல் செய்யும் விவ சாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆத ரவு விலை கொடுக்க முடியாத நிலை இருக் கிறது. இச்சூழலில் பொருளாதாரத்தை ஐரோப் பிய ஒன்றிய நாடுகளுக்குத் திறந்து விடுவது, நம் விவசாயிகளின் வாழ்வில் மேலும் கொடூ ரமான முறையில் தாக்குதலைத் தொடுத்து, ஏற்கனவே தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர்களை மேலும் கொடூர மான முறையில் தாக்கிடும். இதற்கு முன்ன தாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்புடன் செய்துகொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக நம் நாட்டில், குறிப்பாக கேரளாவில் பணப் பயிர்கள் உற்பத்தி செய்து வந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அறிவோம்.

பிரதமர் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர் தல்கள் முடிவடைந்த பின் சில்லரை வர்த் தகத்துறையில் அந்நிய முதலீடு அனுமதிக் கப்படவுள்ளதாக மிகவும் தெளிவுபடத் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நாட்டில் நாலு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை (அவர்களின் குடும்பத் தினரையும் சேர்த்தால் சுமார் 20 கோடிக்கும் மேலாகும்) சவக்குழிக்கு அனுப்பிட வகை செய்யும் விதத்தில் சர்வதேச நிதி மூல தனத்தை அனுமதித்து நாட்டு மக்களைக் கொள்ளையடித்திட வழிவகுத்துத் தர அரசு தயாராகி விட்டது. இதேபோன்று காப்பீடு மற்றும் வங்கித் துறைகளிலும் அந்நிய மூல தனத்தை அனுமதிப்பதற்கும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓய்வூதிய நிதியத்தி லிருந்த பல லட்சம் கோடி ரூபாய்களைத் தனி யாருக்குத் தாரை வார்க்க வகை செய்யும் ஓய் வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தில் பாஜக, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்துடன் கூட்டுச்சதி செய்து நிறைவேற்றிவிட்டது. கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர் காலப் பாதுகாப்பிற்குப் பேரழிவினை ஏற்படுத் தியிருப்பதுடன், இம்மாபெரும் தொகையை சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பத்திற் கேற்ப ஊக வணிகத்தில் செலுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும் வழிசெய்து தந்துள்ளது.

அந்நிய முதலீடு நம் நாட்டிற்குள் வருவ தென்பது தற்போது வீங்கியுள்ள நிதிப் பற் றாக்குறையைச் சரிக்கட்ட உதவிடும் என்று ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் அளித்துள்ள வரிச்சலுகைகளை விலக்கிக்கொண்டிருந் தாலே இந்நிதிப் பற்றாக்குறையை மிக எளிதாக இல்லாது செய்திருக்க முடியும். இத் தகைய வரிச் சலுகைகள் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதற்கும், நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை வைத்திருக்கக்கூடிய அமெரிக்க டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கையை அதிக ரிப்பதற்குமே உதவியாக இருந்திருக்கிறது. எனவே அரசின் கொள்கைகள் பெரும்பான் மையான நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, அந்நிய மூலதனமும் இந்தியப் பெரும் முத லாளிகளும் கொள்ளை லாபம் ஈட்ட வசதி செய்து தரக்கூடிய விதத்திலேயே அமைந் திருக்கின்றன.

மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிதிப் பற்றாக்குறையைச் சுருக்குகிறோம் என்ற பெயரில், அரசாங்கமானது வரவிருக் கும் பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு தற்சமயம் ஒதுக்கியுள்ள அற்பத் தொகை களைக்கூட மேலும் கடுமையாக வெட்டிக் குறைத்திட இருப்பதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக அரசாங்கத் துறைகளில், அதிலும் குறிப்பாக ரயில்வேத் துறையில் காலி யாக இருக்கும் லட்சக்கணக்கான பணியிடங் களை நிரப்பாமலேயே விட்டுவிட இருக் கிறது. அரசின் செலவினங்களைக் குறைப் பதற்காக அரசின் அதிகாரவர்க்கத்தைக் குறைக்கப்போகிறோம் என்று சொல்கிற அதே சமயத்தில், எதார்த்தத்தில் உலகில் மிகக் குறைந்த விகிதாச்சாரத்தில் அரசு ஊழி யர்கள் பணியாற்றுவது இந்தியாவில்தான் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. நமது நாட்டில் மத்திய - மாநில அரசு ஊழி யர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை எடுத்துக் கொண்டாலும், ஒரு லட்சம் பிரஜைகளுக்கு 1,600 அரசு ஊழியர்கள் என் பதைக்காட்டிலும் சற்றுக் கூடுதலாக இருப்ப தாக ஆய்வுகள் காட்டும் அதே சமயத்தில், அமெரிக்காவில் இதை விட ஐந்து மடங் குக்கும் அதிகமாக, அதாவது 7,681 அரசு ஊழி யர்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. இதிலி ருந்து ரயில்வேயைத் தனியே பிரித்து விடோமானால், இந்த எண்ணிக்கை மேலும் கடுமையாகக் குறைந்துவிடும். அதாவது, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே என்ற முறையில் குறைந்துவிடுகிறது. ஆனால் அமெரிக் காவில் உள்ள அரசு ஊழியர்களின் எண் ணிக்கை என்பது லட்சம் பேருக்கு சுமார் 800 என்ற அளவில் இருந்து வருகிறது.

நமது நாட்டில் மக்களின் சமூகநலத் திட் டங்களை அமல்படுத்துவதற்குத் தேவை யான அரசு ஊழியர்களை நாம் பெற்றிருக்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாகும். ஏன், நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்தக்கூடிய அளவிற்குக்கூட நாம் ஊழியர்களைப் பெற்றிருக்கவில்லை. ஐ.நா. அமைப்பு ஸ்தாபனம் இத்தனை மக்கள் தொகை இருந்தால், இத்தனை காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று ஒரு விகிதாச்சாரத்தை நிர்ணயித்திருக்கிறது. இந்தப் பரிந்துரையின்படி நம் நாட்டின் நிலை மையை ஆராய்ந்தோமானால், நாம் மூன் றாவது இடத்தில்தான் இருக்கின்றோம். இதன் விளைவாக மக்களுக்கு அளிக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், உணவுப் பாது காப்பு ஆகிய அனைத்துமே மிகவும் மோச மான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அர சாங்கம் மக்களுக்காக ஒதுக்கிடும் தொகை யில் ஒரு ரூபாயில் 15 காசுகள் அளவிற்குத் தான் மக்களுக்குச் சென்றடைகின்றன என்று ஒருமுறை ராஜீவ்காந்தி சொல்லி இருக்கிறார். இதனைக்கூட மக்களுக்குக் கொண்டுசெல்லக்கூடிய அளவிற்கு இப் போது அரசு ஊழியர் எண்ணிக்கை இல்லா திருக்கிறது. சுகாதாரம், கல்வி, உணவுப் பாது காப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் மக்களின் சமூகப் பொருளாதாரத் தேவை களைப் பூர்த்தி செய்திடப் போதுமான அள விற்கு அரசு ஊழியர்களை நியமிப்பது இன் றைய தினம் அவசியமாகும். அதனைச் செய்ய அரசு முன்வராதது மட்டுமல்ல, நிதிப் பற்றாக் குறையைச் சரிக்கட்டுகிறோம் என்ற பெயரில் இருக்கின்ற எண்ணிக்கையையும் குறைத் திடத் திட்டமிட்டு வருகிறது.

ஒரு பக்கத்தில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து அந்நிய மற்றும் நம் நாட்டின் பெரும் முதலாளிகளுக்குக் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய வகையில் அமல்படுத்துவதன் மூலமாக நம் நாட்டின் பெரும் பகுதி மக்களை வறியவர்களாக்கு கிறது. மறு பக்கத்தில் அரசு பெயரளவில் விளம்பரப்படுத்திடும் சமூகநலத் திட்டங் களை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண் டிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை யும் மேலும் வெட்டிக்குறைத்திட முன்வந் திருக்கிறது. இவ்வாறு நாட்டு மக்கள் இரு முனைகளில் மிகவும் கொடூரமாகத் தாக்கப் பட்டு வருகிறார்கள்.

என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்? அதேபோன்று மக்கள் செல்வத் திற்கும் குறைவில்லை. நம் நாட்டின் வளங் கள் மெகா ஊழல்கள் மூலமாக கொள்ளை யடிக்கப்படுவதும் பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் தடுத்து நிறுத் தப்பட்டு, அவற்றிற்கு மாறாக மக்களுக்குத் தேவையான சமூகப் பொருளாதாரக் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடிய விதத்தில் பொது முதலீடுகளை அதிகரித் தோமானால், பின்னர் நம் நாட்டு மக்கள் அனைவரின் தேவைகளையும் நாம் மிக எளிதாக நிறைவேற்ற முடியும். இதன் காரணமாக அதிகரிக்கும் வேலைவாய்ப்பு களின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத் தையும் உயர்த்திட முடியும்.

‘‘இந்திய மக்களாகிய, நாம்’’ சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் அதற்கான ஆற்றலையும் அளப்பரிய வளங் களையும் பெற்றிருக்கிறோம். இதனை அடை யக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் தற் போது பின்பற்றிவரும் கொள்கைகளை மாற்றி யமைத்திட, வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்: ச.வீரமணி

Monday, February 6, 2012

தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானம்:சீத்தாராம் யெச்சூரி


தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானம்
நகல் தீர்மானத்தை வெளியிட்டு சீத்தாராம் யெச்சூரி பேட்டி

புதுதில்லி, பிப். 7-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானத்தின் வரைவு இன்று வெளியிடப்பட்டது.

‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வரும் 2012 ஏப்ரல் 4 - 9 தேதிகளில் கோழிக்கோடில் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப் படுவதற்காக ‘சில தத்துவார்த்த பிரச்சனைகள் மீதான தீர்மானத்தின் வரைவு’ 2012 ஜனவரி 17 - 20 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை இன்றைய தினம் (திங்கள் கிழமை) வெளியிட்டு செய்தியாளர்களிடையே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘இத் தீர்மானம் 2008ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டின் கட்டளைக்கிணங்க மத்தியக் குழுவால் தயார் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2005இல் புதுதில்லியில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உலகமயக் கொள்கைகள் விளைவித்துள்ள தத்துவார்த்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தின் கீழ் இன்றைய உலக நிலைமைகள் குறித்து ஒரு புரிந்துணர்வை அலசி ஆராய்ந்து இத்தீர்மானத்தை பிரதிநிதிகளின் விவாதத்திற்காக முன்வைத்திருக்கிறது. ‘‘இவ்வாறாக, உலகைத் தன்குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்கிற ஏகாதிபத்தியத்தின் பேராசையே, மனிதகுலத்திற்கு முழுமையான விடுதலை (emancipationn), சுதந்திரம் (liberationn) மற்றும் முன்னேற்றத்தைத் (progress) தர மறுப்பது தொடர்வதற்கு மூலாதாரமாகும்’’ என்று தீர்மானம் தன் முடிவுரையாகக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ‘‘இந்தச் சூழ்நிலையில், குறிப்பாக உலகின் நிகழ்ச்சிப்போக்குகள் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்நிகழ்ச்சிப் போக்குகள் நம்மீது ஏவியுள்ள சவால்களையும், தத்துவார்த்தப் பிரச்சனைகளையும் ஓர் அறிவியல்பூர்வமான மார்க்சிய - லெனினிய ஆய்வின் மூலமாக வலுப்படுத்தி, மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் நம் புரட்சிகர நோக்கத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்று தீர்மானம் அடிக்கோடிட்டிருக்கிறது.

உலகமய சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, கடந்த இருபதாண்டுகளில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோசலிச நாடுகள் மற்றும் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் சர்வதேச சக்திகளின் சேர்மானம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், ஏகாதிபத்தியம் தன் உலகளாவிய மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் - இவ்வாறு அனைத்துவழிகளிலும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

மூலதனக் குவியல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தநிலையை அடைந்ததை அடுத்து, சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி புதிய உலக ஒழுங்கை புதியமுறையில் கட்டவிழ்த்து விட்டது. இது முதலாளித்துவம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு மேலும் வசதி செய்து தந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தன் குடையின்கீழ் கொண்டுவந்து, தன்னுடைய சர்வதேச நிதி மூலதனம் அனைத்து நாடுகளுக்குள்ளும் புகுந்து, எவ்விதத் தங்குதடையுமின்றி கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டது. நிதித்துறை தாராளமயம் உட்பட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், வர்த்தக தாராளமயம் மூலமாக அனைத்து நாடுகளின் சந்தைகளிலும் பொருள்களின் விலைகளை நிர்ணயித்தல், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தனியார் வசம் தாரை வார்க்கச் செய்திடல், பொது மக்களின் பயன்பாட்டுக்கு இதுநாள்வரையிலும் இருந்து வந்த மின்சாரம், தண்ணீர், சுகாதாரப் பணிகள் போன்றவற்றையும் கல்வி, உடல்நலம் போன்ற சேவைகளையும் லாபம் ஈட்டும் தொழில்களாக மாற்றி அமைத்துள்ளது. நவீன தாராளமயம் என்பது இத்தகைய சீர்திருத்தங்களின் தத்துவார்த்த (ideological) மற்றும் சித்தாந்தக் (theoretical) கட்டமைப்பாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் இத்தகைய அரக்கத்தனமான மூலதனக் குவியல் என்பது உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினருக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நெருக்கடியைத் திணித்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே மேலும் மேலும் நெருக்கடிகளை அதிகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து அது மீள்வதற்காக, தங்கள் திவால் நிலையை தாங்கள் நிலைகொண்டுள்ள நாட்டின் திவால்நிலைமையாக மாற்றுவதில் அவை வெற்றி பெற்றன. இப்போது அந்நாடுகள் இந்த திவால்நிலைமையிலிருந்து மீள்வதற்காக தங்கள் நாடுகளில் மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்திட முன்வந்துள்ளது. இது அம்மக்களின் மீது மேலும் கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும். இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் சுருக்கிடும். இது தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகமாக்கிடும்.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், மனிதகுலத்திற்கு உண்மையான மற்றும் முழுமையான விடுதலை என்பது அதனை அனைத்து விதமான சுரண்டலிலிருந்தும் விடுவித்து, ஒரு சோசலிச சமுதாயத்தை அமைப்பதன் மூலமே சாத்தியம் என்கிற மார்க்சிய மூதுரையை உறுதிப்படுத்துகிறது.
அதிகரித்து வரும் கிளர்ச்சிகள்

முதலாளித்துவச் சுரண்டலின் பகற்கொள்ளைக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அதிகரித்து வருவதையும் தீர்மானம் குறிப்பிடுகிறது. ‘‘இன்றைய உலக நிலையில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இது மிகவும் கூர்மையாக வெளிப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான இத்தகைய எதிர்ப்புக் கிளர்ச்சிகள் உலகின் மற்ற பகுதிகளிலும் மேலும் வளரும். அமெரிக்காவில் நடைபெறும் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம்’ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் இயக்கங்கள் இதன் பிரதிபலிப்புகளேயாகும். இவ்வாறு, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் அரிக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுதும் இவ்வாறு அலை அலையாக எழுந்து வரும் போராட்ட அலைகள் எதிர்காலத்தில் புரட்சிகர போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கான அடித்தளங்களாக அமைந்திடும்’’ என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் இடதுசாரி, முற்போக்கு நவீன தாராளமய எதிர்ப்பு மற்றும் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் வளர்ச்சிகள் குறித்து தீர்மானம் ஆய்வு செய்து, ‘‘இந்நாடுகளில் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிகள், ஏகாதிபத்திய உலகமயம் மற்றும் முதலாளித்துவத்திற்குள்ளான நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக உருவாகி வளர்ந்து வருகின்றன’’ என்று குறிப்பிடுகிறது.
வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளில் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கங்கள் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் இருப்பதைத் தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது. சோசலிச கியூபாவுடன் இணைந்து இந்நாடுகளும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளின் மகா சம்மேளனத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இவ்வாறு உருவாகும் மகாசம்மேளனம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்திட ஒரு மாற்றாக அமைந்திடும். ‘‘ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இச்சக்திகள் ஒரு முக்கிய கூறாக அமைந்திடும். இவை, யுத்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு மற்றும் உலகமயத்திற்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் ஒன்றுபடுத்தும் ஒரு முக்கிய கூறாகவும் இவை அமைந்திடும். இந்த ஒற்றுமையானது ஒரு வலுவான உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கி, எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்திடும் வல்லமையைப் பெற்றிடும்’’ என்றும் தீர்மானம் குறிப்பிடுகிறது.

சோசலிச நாடுகளில் சீர்திருத்தங்கள்
சோசலிச நாடுகளில் துவங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் தீர்மானம் ஆராய்ந்திருக்கிறது. மக்கள் சீனக் குடியரசு 1978இல் சீர்திருத்தங்களைத் தொடங்கியது. வியட்நாமும் கியூபாவும் 1990களிலும், வட கொரியா பின்னரும் இதேபோன்று சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளன.
தீர்மானத்தில் சீனாவில் நடைபெற்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்து குறிப்பிட்டிருப்பதாவது:
‘‘கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் நடைபெற்றுள்ள சீர்திருத்தங்கள் அங்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளன. கடந்த முப்பதாண்டகளில் தொடர்ந்து பத்து விழுக்காட்டுக்கு மேலான வளர்ச்சி விகிதம் என்பது முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்றுள்ள மகத்தான சாதனையாகும். ஆயினும், இதனை அடைவதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் உற்பத்தி உறவுகளிலும் இன்றைய சீனாவின் சமூக உறவுகளிலும் மோசமான மாற்றங்களையும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன என்பதும் தெளிவாகும். இத்தகைய முரண்பாடுகளை எப்படி வெற்றிகரமாக சரி செய்வது என்பதும், எப்படி அவை தீர்க்கப்பட விருக்கின்றன என்பதும் சீனாவின் எதிர்காலத்தை தீர்மானித்திடும்’’ என்று தீர்மானம் தொகுத்தளித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள நிலைமைகள்
இந்தியாவில் சோலிசத்தை நிறுவுவதற்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிந்துணர்வு 8.3 பத்தியில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் தற்போது நிலவிவரும் மார்க்சிய எதிர்ப்பு பிற்போக்குத் தத்துவங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

‘‘இந்தியாவில் உள்ள நிலைமைகளில், புரட்சிகரமான முறையில் நம்முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு நம் பணி, நம் சமூகத்தில் துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியதாகும்’’ என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

இதனை எய்துவதற்கு, கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய பல்வேறுவிதமான போராட்ட வடிவங்களையும் தீர்மானம் விவரிக்கிறது.
‘‘... நாடாளுமன்றத்தின் அமைப்புகளில் நாம் மேற்கொள்ளும் பணி, மக்கள்திரள் போராட்டங்களை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்றப் பணி, தற்போதுள்ள முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு மாற்றை உருவாக்கிடும் வகையில் ஒரு வலுவான இயக்கத்தை வளர்த்தெடுக்கக்கூடிய விதத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே நாம் புரிந்திடும் பணிகளுடனும் போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும்.’’ இவ்வாறு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கையில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயுள்ள பணிகளை உதாசீனம் செய்யக்கூடிய அல்லது நாடாளுமன்றப் போராட்டங்களை மறுதலிக்கக்கூடிய வகையிலான திரிபுகளுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையும், தொழிலாளி - விவசாயி ஒற்றுமையும்
தீர்மானத்தில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது தொடர்பாகவும், வலுவான வகையில் தொழிலாளி விவசாயி ஒற்றுமையைக் கட்டவேண்டியது தொடர்பாகவும் தற்போதுள்ள துல்லியமான நிலைமைகள் குறித்து தீர்மானம் அலசி ஆய்வு செய்திருக்கிறது.

சாதீய ரீதியான அரசியல்
தீர்மானம், அடையாள அரசியல் மற்றும் அந்நிய நாடுகளின் ஆதரவுடன் இயங்கிடும் அரசு சாரா நிறுவனங்கள், குறிப்பாக சாதிய ரீதியில் மக்களை ஒன்று திரட்டும் அரசியல் குறித்து ஆய்வு செய்திருக்கிறது. ‘‘சமூகத்தில் நிலவும் வர்க்க ஒடுக்குமுறையையும் சமூக ஒடுக்குமுறையையும் அங்கீகரித்து அதன் அடிப்படையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அமைந்திருக்கிறது. நம் நாட்டில் உள்ள சமூக பொருளாதார அமைப்பானது, முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டலுடன், சாதி, இனம், பாலினம் போன்று பல்வேறு அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறைகளையும் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலமாக உபரிசைக் கசக்கிப் பிழிகின்றன. தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அவை பல்வேறு வடிவங்களிலான சமூக ஒடுக்குமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, இத்தகைய சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய இரு வடிவங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒரே சமயத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,’’ என்று தீர்மானம் அடிக்கோடிட்டுக் கூறுகிறது.

வகுப்புவாதம் (communalism)

‘‘இந்தப் பின்னணியில்தான் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், அனைத்துவிதமான மத அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச பாணி ‘இந்து ராஷ்டரம்’ போன்ற கோஷங்கள் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை சீர்குலைத்து, நலிவடையச் செய்திடும். இத்தகைய சக்திகள் தொழிலாளர் வர்க்கத்திடையே பல்வேறு விதமான வகுப்புவெறியைத் தூண்டி தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை சீர்குலைத்திடும். எனவே, வகுப்புவாதத்தை முறியடிக்கக்கூடிய விதத்தில் ஓர் உறுதியான போராட்டத்தை நடத்திடாமல், நாட்டில் புரட்சிகர முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை.

ஆண்-பெண் சமத்துவம் மற்றும் அடையாள அரசியல்
தீர்மானம், ஆண்-பெண் சமத்துவமின்மை மற்றும் அதனையொட்டி எழும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை அடிக்கோடிட்டுக் கூறுகிறது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு பிராந்திய மற்றும் இனங்களை ஒன்றுக்கொன்று எதிராக மோதவிடும் அடையாள அரசியலுக்கு எதிராக நம்முன் உள்ள புதிய சவால்கள் குறித்தும் தீர்மானம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு விதமான சவால்களைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்கொண்டு, முறியடித்து, முன்னேறுவதற்கான பாதையையும் தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தீர்மானம் முழுமையாக, கட்சியின் றறற.உயீiஅ.டிசப இணைய தளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. தீர்மானத்தின் மீது திருத்தம் அளிக்க விரும்பும் கட்சி உறுப்பினர்கள் மார்ச் 15க்குள் அனுப்பி வைக்கக் கோரப்பட்டிருக்கிறார்கள்.

(ச. வீரமணி)