Sunday, February 21, 2010

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டம்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மாவோயிஸ்ட்டுகள், மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஷில்டா என்னும் இடத்தில் தங்கியிருந்த ஈஸ்ட் பிரான் டியர் ரைபிள்ஸ் என்னும் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த 36 பேரில் 24 பேரைப் படுகொலை செய்துள்ள னர். 7 பேர் கடும் காயங்கள் அடைந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் பிரதான நோக்கம், அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும், முகாமி லிருந்த ஆயுதங்களைக் கொள்ளையடிப் பதுமாகும். மாவோயிஸ்ட்டுகள் அங்கிருந்த 40 அதிநவீன ஆயுதங்களைக் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவமானது, அப் பகுதி யில் வாரச் சந்தை நடைபெறும் நாளொன்றில், பட்டப்பகலில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலக் காவல்துறைத் தலைவர், “சம் பவ இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததால், பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்குவதில் சிரமம் இருந்தது” என்று இது தொடர்பாகக் கூறியிருக்கிறார். இத்தாக்குதலைத் தடுக்க முடியாமல் போன தற்கான காரணங்களைக் கண்டறிய மாநில அரசு ஒரு விசாரணைக்கு ஆணையிட்டிருக் கிறது. இத்தாக்குதலானது, மாவோயிஸ்ட்டுக ளின் வன்முறை வெறியாட்டங்களுக்கு முற் றுப்புள்ளி வைத்திட அரசு நடவடிக்கைகளை மேலும் வலுவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தை ஒடுக்கிட, மத்திய பாதுகாப்புப் படையினரு டன், சம்பந்தப்பட்ட மாநிலக் காவல்துறை யினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிப்ரவரி 9 அன்று கொல்கத்தா வில் கூட்டியிருந்தார். ஒரு மாநிலத்தில் தாக் குதலைத் தொடுத்துவிட்டு, அடுத்த மாநிலத் திற்குள் நுழைந்துவிடும் உத்தியை மாவோ யிஸ்ட்டுகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது. சட் டம் - ஒழுங்கு பிரச்சனை என்பது மாநிலப் பட்டியலில் வருவதால், ஒரு மாநிலத்தில் ஏற் பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை விசார ணைக்கு எடுத்துக் கொள்ளும் காவல்துறையி னர், வேறொரு மாநிலத்தில் விசாரணை மேற் கொள்ள வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் தெளிவான அனுமதியின்றி, அங்கே விசாரணையைத் தொடர முடியாது. இந்த நிலைமையை, மாவோயிஸ்ட்டுகள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுத்திடக் கூடிய வகையில், மேலே கூறிய நான்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் கூட் டாகச் செயல்பட்டாக வேண்டியது அவசியமா கும். ஊடகங்களில் வந்துள்ள தகவல்களிலி ருந்து இப்போது மாவோயிஸ்ட்டுகள் நடத்தி யுள்ள தாக்குதலை அடுத்து, அவர்கள் ஜார் கண்ட்டில் உள்ள அவர்களது மறைவிடங்க ளுக்குத் திரும்பி விட்டார்கள் என்பது தெரிகிறது.

“நீங்கள் வன்முறையைக் கை விட்டால், உங்களுடன் நாங்கள் பேசத் தயார்” பிப்ரவரி 9 கூட்டத்திற்குப் பின், மத்திய உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே மாவோ யிஸ்ட்டுகளுக்குத் தெரிவித்திருந்தார்.

என்னுடைய முந்தைய வேண்டுகோள்களை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இப்போதும் அவ்வாறே அவர்கள் புறக்கணித்தால் எங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடருவோம் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். மாவோ யிஸ்ட்டுகள் இப்போது நடத்தியுள்ள கொடூர மான தாக்குதல், உள்துறை அமைச்சரின் வேண்டுகோளை அவர்கள் மீண்டும் ஒரு முறை உதறித்தள்ளிவிட்டனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப் பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது என்று பிரதமரும் திரும்பத் திரும்ப நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் பொது மேடைகளி லும் கூறி வருகிறார். நாட்டின், நாட்டு மக்க ளின் நலன்களைப் பாதுகாத்திட மாவோ யிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலை அனைவ ரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டியது இப்போதைய தேவையாகும்.

ஆயினும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப் பானவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்ல மறுப்பதிலிருந்து, திரிணாமுல் காங் கிரசின் தலைமை, மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக நிற்கும் போக்கு தொடர்கிறது. இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்கள் பொறுப் பேற்றுக் கொள்வதாகவும், தங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைகளுக்குத் தாங்கள் அளித்திடும் எதிர்த்தாக்குதல் இது என்று மாவோயிஸ்ட் டுகளின் தலைவர்கள் ஊடகங்கள் வாயிலா கக் கூறிய பிறகும், திரிணாமுல் காங்கிரஸ் நிலை இவ்வாறிருக்கிறது. மேலும், மாவோ யிஸ்ட் தலைவர்கள், திரிணாமுல் காங்கிரசி னை எதிர்த்திட மாட்டார்கள் என்று ஊடகங் களுக்கு வெளிப்படையாகவே கூறியிருக்கி றார்கள்.

ஷில்டா தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்பு, மாவோயிஸ்ட் தலைவர் மேற்கு மிட்னா பூரில், “திரிணாமுல் காங்கிரசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள மாட் டோம்” என்று அறிவித்திருக்கிறார். அதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, மேற்கு மிட்னா பூரிலிருந்து பாதுகாப்புப் படையினர் விலக் கிக்கொள்ளப்பட வேண்டும் என்று திரிணா முல் காங்கிரஸ் கோரியிருந்ததை, மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி வரவேற்றிருக்கி றார். பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்டு களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் காங் கிரஸ் வெளிப்படையாகவே கோரி வருவதை அனைவரும் அறிவார்கள். ஏனெனில் 2011 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர் தல் வரை இடதுமுன்னணிக்கு எதிராக மக் களைஅச்சுறுத்திப் பணிய வைத்திட மாவோ யிஸ்ட்டுகளின் வன்முறை நடவடிக்கைகள் தேவை என்று அது கருதுகிறது.

திரிணாமுல் காங்கிரசின் வேண்டுகோ ளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் சற்றே செவிசாய்த்தார். “கூட்டு நடவடிக்கைகள் சாமானிய மக்களைப் பாதிப்பதாக அவர் (மம்தா) கருதுகிறார். எனவே அவரது கோரிக் கையைப் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று பிப்ரவரி 9 அன்று ப.சிதம்பரம் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் அளித்திடும் ஆதரவு மற்றும் உதவி ஆகிய வற்றைக் கொண்டு மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கொலைபாதக வன்முறை நடவடிக் கைகளைத் தொடர்வார்கள் என்பது ஷில்டா தாக்குதல்களிலிருந்து தெளிவாகியிருக்கி றது. மாவோயிஸ்ட் வன்முறை நாட்டின் உள் நாட்டுப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் அச்சுறுத்தல் என்று நாட்டின் பிரத மர் வெளிப்படையாகவே நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ள நிலையில், அவரது அமைச்சர வையில் அங்கம் வகிக்கும் ஒரு கேபினட் அமைச்சர், பிரதமரின் கூற்றுக்கு நேரெதிராக வன்முறையில் ஈடுபட்டுவரும் மாவோயிஸ்ட் டுகளுக்கு ஆதரவாக நிற்பது குறித்து காங் கிரஸ் கட்சியும், ஐ.மு.கூட்டணி அரசாங்க மும் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகள், திரிணாமுல் காங்கி ரசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையோ தண்டனையோ மேற்கொள்ளமாட்டார்கள் என்று தீர்மானித்திருக்கும் அதே சமயத்தில், சென்ற பொதுத் தேர்தலுக்குப்பின் இதுவரை அவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 168 பேரை கொன்றுள்ளார்கள். யாருடைய நலன் களைப் பாதுகாப்பதற்காகத் தாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்று மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்களோ, அதே ‘சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள்’ தான் இந்த 168 தோழர்களும். மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களைக் கொல்வதன் மூலம், சாமானிய மக்களை அச் சுறுத்தி அவர்களை திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் திருப்பிடலாம் என்பதுதான் மாவோ யிஸ்ட்டுகளின் நோக்கமாகும். மக்கள் உயிர் களைப் பலிகொண்டாவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்கிற இழிவான, அரக்கத் தனமான நிகழ்ச்சிநிரலை திரிணாமுல் காங் கிரஸ் கொண்டிருக்கிறது.

ஜனவரி 15 அன்று, திரிணாமுல் காங் கிரஸ் தலைவி மம்தா ஒரு பொதுக்கூட்டத் தில் பேசுகையில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏழு நாட்கள் அவகாசம் தருவதாகவும், அவர் கள் அதற்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் கூறியிருந் தார். “அவ்வாறு அவர்கள் வராவிடில், அமைதி யையும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வும் நான் பாத யாத்திரை செல்வேன்” என்றும் கூறினார். அவ்வாறு பேசி, ஆறு வாரங்கள் சென்ற பின்னரும், எவ்விதப் பாத யாத்திரை யையும் அவர் மேற்கொள்ளவில்லை. சும்மா மக்களை ஏமாற்றுவதற்காக அப்போது அவ் வாறு அவர் பேசியிருக்கிறார் என்பது தெளி வாகி இருக்கிறது. அதே கூட்டத்தில் அவரது பேச்சின் உள்நோக்கத்தையும் அப்போதே அவர் தெளிவுபடுத்திவிட்டார். அதாவது, “தேவைப்பட்டால், மத்திய அரசுடன் நடைபெ றும் அக்கூட்டத்தில், லால்காரிலிருந்து மத் திய - மாநிலக் கூட்டுப் படையினரின் நடவ டிக்கைகளை விலக்கிக் கொள்வது உட்பட உங்கள் கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்ற நான் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்று கூறினார்.

நாட்டின், நாட்டு மக்களின் நலன்களைக் காத்திட வேண்டுமானால், இத்தகைய கேடு கெட்ட, மனித உயிர்களைப் பற்றிக் கிஞ்சிற் றும் கவலைப்படாத, அரக்கத்தனமான நட வடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடும், நாட் டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், அமைதிக் கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்திடும், இத் தகைய அரசியல் அடாவடித்தனங்களை அனுமதிக்கக்கூடாது. வன்முறை நடவடிக் கைகளால் இயல்பு வாழ்க்கை சிதிலமடைந் துள்ள பகுதிகளில் அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் மீண்டும் கொணர, மத்திய பாதுகாப்புப் படையினர் நான்கு மாநில அரசு களின் காவல்துறையினருடன் கூட்டாக இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டியது அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

Saturday, February 20, 2010

ஊனமுற்றோரின் உரிமைகளைப் பாதுகாத்திடுவோம் : முரளிதரன்

சொந்தத் தந்தையே ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தன் சொந்த ஏழு வயது மகளையே அடித்துக் கொன்ற கொடுமை பற்றிய ஒரு செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி யிருந்தது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் திரிபாங்கோட்டூர் என்னு மிடத்தில் இக்கொடுமை நடைபெற்றது.

ஒரு நபர் மனநிலைப் பாதிக்கப்பட் டவர் என்பதாலேயே அவரது உரிமைகள் பறிக்கப்படக்கூடாது. ஆயினும் இது போன்றதொரு கொடுமை கேரளம் போன்ற முற்போக்கான மாநிலத்திலேயே நடைபெற்றிருப்பதுதான் கொடுமையி லும் கொடுமை.

கேரளத்திலேயே இம்மாதிரி கொடு மை எனில் மற்ற மாநிலங்களில் நிலை மைகள் இதைவிட மோசமாகும். அநேக மாக மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றவர்களுக்குக் கல்வி, சுகா தாரம், குறைந்தபட்ச வாழ்க்கை பாது காப்பு, வாழ்வதற்கான உரிமைகள் மறுக் கப்படுகின்றன. அவர்கள் அரசியல் மற் றும் பொதுவாழ்க்கையில் பங்கேற்க இய லாது. பல்வேறு விதமான சுரண்டலுக் கும், வன்முறைக்கும், கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். சொந் தக் குடும்பத்தினரே அவர்களைக் கை கழுவி விட்டுவிடுகிறார்கள். அநேகமாக உலகம் முழுவதும் ஊனமுற்றோர் மிகவும் மோசமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் தொடர்பாக ஒவ்வொரு மொழி யிலும் உள்ள வார்த்தைகளே மோசமாகத் தான் இருக்கும். ஒரு வீட்டில் ஊனமுற் றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இருந்தால் அந்தக்குடும்பத்தாரே அவ ரைத் தனியே ஒதுக்கி வைப்பதும், சமூ கத்திலிருந்து பிரித்து வைப்பதும் நடை முறையாக இருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஊனமுற்றோருக்கான ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி லியாண்ட்ரோ டிஸ்பாய், 1993 இல் தன்னுடைய அறிக்கையில், “ஊன முற்றோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை சமூகத்தின் மாண்பினை உயர்த்திப்பிடிக் கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும். ஊனமுற்றோரும் மனிதர்கள்தான், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், சாமானிய மனிதர்களை விட சிறப்புக் குரிய விதத்தில் அவர்கள் கருதப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே ஊனமுற் றோர் உரிமைகள் தொடர்பாக ஐ.நா. கன் வென்ஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சமூகத்தில் உள்ள சிறுபான் மையினர், பெண்கள் சமத்துவமின்மை தொடர்பாக பல்வேறு சட்டங்கள் நிறை வேற்றப்பட்டிருந்தாலும், ஊனமுற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக் கென்று அத்தகைய சட்டங்கள் உரு வாக் கப்படவில்லை. சமீபத்தில்தான் அவ் வாறு உருவாக்கப்படவில்லை என்பதே சமூகத்தில் பல தரப்பினராலும் உணரப் பட்டிருக்கிறது.

ஊனம் - வறுமை - சுகாதாரக் குறைவு ஆகியவற்றிற்கிடையே உள்ள உள்ளார்ந்த உறவு முழுமையாக அங்கீக ரிக்கப்படவில்லை. வறுமை, ஊட்டச்சத் தின்மைக்கும் சுகாதாரமின்மைக்கும், பாதுகாப்பற்ற வாழ்க்கைக்கும் இட்டுச் செல்கிறது.

கருவுற்ற தாய்மார்களுக்குப் போதிய ஊட்டச்சத்துடன் கூடிய உணவு அளிக் கப்பட்டால் அவர் நல்ல ஆரோக்கியத்து டன் கூடிய மகவை ஈன்றெடுப்பார். ஆனால் கருவுற்ற தாய்மார்கள் உரிய முறையில் பேணிப் பாதுகாக்கப்படுவ தில்லை. இதுவே ஊனத்துடனும் மன நிலைப் பாதிக்கப்பட்ட நிலையிலும் குழந் தைகள் பிறப்பதற்கு முக்கிய காரணங் களாகும்.

நாட்டில் ஊனமுற்றோருக்காக சில பள்ளிகள் இருந்தாலும் அங்கே போதிய அளவிற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரி யர்கள் நியமிக்கப்படுவதில்லை. தலை நகர் புதுதில்லியில் உள்ள ஊன முற்றோருக்கான பள்ளியிலேயே கடந்த பத்தாண்டுகளாக போதிய ஆசிரியர்கள் கிடையாது. அநேகமாக பல மாநிலங் களில் உள்ள நிலைமையும் இதுதான்.

ஜனநாயக இயக்கங்களை வலுப் படுத்துவதன் மூலம்தான் ஊனமுற்றோர் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். அந்த வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்க ளின் உரிமைகளுக்கான இயக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறது. 2010 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் கொல்கத்தா வில் மனநிலை பாதிக்கப்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர் சிறப்பு மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேலான உறுப்பினர் களைக் கொண்டுள்ள மேற்கு வங்க மாநில மனநிலைப் பாதிக்கப்பட்டோர் சங்கம் (ஞயளஉாiஅ க்ஷயபேய சுயதலய ஞசயவiயெனோi ளுயஅஅடையni) இச்சிறப்பு மாநாட்டிற்கு ஏற் பாடுகளைச் செய்துள்ளது. மாநாடு சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறு கிறது. நாடு முழுதுமிருந்தும் முன்னணி ஊழியர்கள் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு மாநாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் துவக்கி வைக்கிறார். மனநிலை பாதிக்கப்பட் டோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கல்வி மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம், ஊனமுற்றோர் தொடர்பான ஐ.நா. கன்வென்ஷன் மற்றும் சட்டப் பிரச்சனைகள் குறித்து விவாதங் கள் நடைபெறவிருக்கின்றன. சிறப்பு மாநாட்டின் நிறைவாக எதிர் வரும் காலத்தில் ஊனமுற்றோரைத் திரட்டி, போராடுவதற்காக, கோரிக்கை சாசனம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

-கட்டுரையாளர்: சிபிஎம் மத்தியக்குழு அலுவலகம், ஊனமுற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் முன்னணி ஊழியர்.

தமிழில்: ச.வீரமணி

Thursday, February 18, 2010

மேற்குவங்க அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை

மேற்குவங்க இடது முன்னணி அரசாங் கத்தின் சார்பில் அரசுப் பணிகளில் சமூகரீதி யாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாநில முதல் வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்திருப் பதை ‘வெறும் தேர்தல் தந்திரம்’ என்று காங் கிரஸ் கட்சி எள்ளிநகையாடியிருப்பது எதிர் பார்த்த ஒன்றுதான். ஆயினும் அதனால் அம் முடிவினை வெளிப்படையாக எதிர்த்திட முடி யவில்லை. ஆயினும் எதிர்பார்த்தபடி, மதவெறி அமைப்புகளின் அரசியல் பிரிவான பாஜக இதனை நேரடியாகவே கண்டித்திருக்கிறது.

நாட்டில் வாழும் மத மற்றும் மொழிச் சிறு பான்மையினரின் நலன்களைக் காத்திடுவதற் காக 2004 அக்டோபர் 23 அன்று அமைக்கப் பட்ட ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மேற்கு வங்க அரசு இம்முடிவினை மேற்கொண்டிருக் கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளில் பல வற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்றிருக்கிறது.

ஆணையம் தன் அறிக்கையை பிரதமரி டம் 2007 மே மாதத்திலேயே சமர்ப்பித்திருந்த போதிலும், 2009 டிசம்பரில்தான் அது நாடா ளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அரசு இவ்வாறு காலதாமதம் செய்ததிலிருந்து இப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் தட்டிக் கழிக்கும் மனப்போக்கை நன்கு அறிந்து கொள்ள முடியும். ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது இப்பரிந் துரைகளின் மீது தான் மேற்கொண்ட நடவடிக் கைகள் அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. பொதுவாக எந்த ஓர் ஆணையம் தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நேரத்திலும், அதன்மீது அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக் கை அறிக்கையும் இணைத்தே நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆணை யத்தின் பரிந்துரைகளைப் பொறுத்தவரை வர விருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர் வில் இது அநேகமாக சரிசெய்யப்படலாம். அப் போது நாடும் நாட்டு மக்களும் ஆணையத் தின் பரிந்துரைகளை அமல்படுத்திட மத்திய அரசு எப்படிச் செயல்பட இருக்கிறது என் பதைத் தெரிந்து கொள்வார்கள்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது, பிற் படுத்தப்பட்ட வகுப்பாரை அடையாளம் காண் பதற்கான அளவு கோல்கள் பெரும்பான்மை இனத்தினருக்கும், மத மற்றும் மொழிச் சிறு பான்மையினருக்கும் இடையில் எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரே சீரான முறையில் இருந்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருக் கிறது. எனவே, இப்போது பெரும்பான்மை இனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னரைத் தீர்மானிப்பதற்கு மேற்கொள்ளப்படும் அதே அளவுகோல்களை அனைத்துச் சிறு பான்மையினருக்கும் எவ்வித வித்தியாசமு மின்றி பிரயோகிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு அளிக்கப்படும் அளவுகோல் களை ஆய்வு செய்து, அதன்படி மதச்சிறுபான் மையினருக்கு மத்திய-மாநில அரசுகள் 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட வேண் டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இந்த 15 விழுக்காட்டிலும், 10 விழுக்காடு முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அளித்திட வேண்டும் என்றும், ஏனெனில் நாட்டில் உள்ள மொத்த சிறுபான்மையினர் மக்கள் தொகையில் அவர்கள் 73 விழுக்காடு இருப்பதால், இவ் வாறு 10 விழுக்காடு ஒதுக்கிட வேண்டும் என் றும் கூறியிருக்கிறது. மீதமுள்ள 5 விழுக் காட்டை இதர சிறுபான்மையினருக்கு அளித் திட வேண்டும் என்றும் ஆணையம் பரிந் துரைத்திருக்கிறது.

இவ்வாறான ஆணையத்தின் பரிந்துரைக ளின் அடிப்படையில்தான் மேற்கு வங்க அரசு தன்னுடைய முடிவினை அறிவித்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16(4)ஆவது பிரிவு, ‘‘மாநிலத்தில் உள்ள பணிகளில் எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காவது போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுமானால், பணி நியமனத் தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்ப தற்கு அம்மாநில அரசு ஏதேனும் ஷரத்துக் களை உருவாக்குமானால் அதனை இப்பிரிவு தடுத்திடாது’’ என்று கூறியிருக்கிறது. இந்த 16(4)ஆவது பிரிவினையொட்டியேதான், ஆணை யம் இப்பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந் துரைகள் ஏற்கப்படுவதன் மூலம், இட ஒதுக் கீட்டிற்கென்று உச்சநீதிமன்றம் வரையறுத் துள்ள 50 விழுக்காட்டைத் தாண்ட வேண்டி யிருக்கும். தலித்துகள்/பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக் கீடுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநி லத்தில் உள்ள அவர்களின் மக்கள் தொகைக் கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. சில மாநிலங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக் கான 27 விழுக்காடு முழுமையாக பயன்படுத் திக் கொள்ளப்படவில்லை, அத்தகைய மாநி லங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. தற்சமயம் அம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஏனெனில் மாநில மக்கள் தொகையில் அவர்கள் விழுக்காடு அந்த அளவிற்குத்தான் இருக்கிறது. இப்போது மாநில அரசு மேற்கொண்டுள்ள முடிவின்படி, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த பின் பும், மொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரின் இட ஒதுக்கீடு என்பது இந்த 10 விழுக் காட்டையும் சேர்த்து 17 விழுக்காடுகள்தான் வரும்.

ஆணையத்தின் பரிந்துரைகளில் பிற் படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக் கீடுதான் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டி ருக்கிறது. ஏனெனில் வங்கத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 25 விழுக் காடாகும். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டநாள் புரிதலின்படி, இவ்விட ஒதுக்கீட்டினால் முஸ்லிம்களில் வசதி படைத்தவர்கள் (உசநயஅல டயலநச) பயனடைய மாட்டார்கள். ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பத்தினர் இதனை பயன்படுத்த முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்வது என்பது ஒன்றும் புதிதல்ல. தற்சமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் 16.83 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும், 12 முஸ்லிம் துணைக் குழுக்கள் இருக் கின்றன. மாநில அரசாங்கம் இப்போது மேலும் 37 முஸ்லிம் துணைக் குழுக்களை அடையா ளம் கண்டு, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட் டியலில் சேர்த்திருக்கிறது. முஸ்லிம்களில் வசதிபடைத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டி லிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மேலும் முஸ்லிம்களில் உண்மையில் இடஒதுக்கீடு தேவைப்படும் துணைக்குழுக்களைக் கண்ட றிய ஒரு குழுவை மேற்கு வங்க மாநில அரசு அறிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் இதர பிற்படுத் தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கனவே சில பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் துணைக்குழுக்கள் இருக்கும் யதார்த்த உண்மையை உதாசீனம் செய்துவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடது முன்னணியும் முஸ்லிம்களை முகஸ்துதி செய்வதாக பாஜக-வானது மீண் டும் ஒருமுறை மதவெறித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. அவர்களது, முஸ்லிம் சிறு பான்மை மக்களுக்கு எதிரான மதவெறி விஷத் தைக் கக்கும் குணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உண்மையில், இத்தகைய வெறி பிடித்த மதவெறி அரசியலானது, வாக்கு வங்கி அரசியலின் மிகவும் மட்ட ரகமான வெளிப்பா டாகும். இந்து வாக்கு வங்கியை ஒருமுகப் படுத்துவதற்காக, மதச்சிறுபான்மையினருக்கு எதிராகத் துவேஷத்தைப் பரப்பும் அடிப்படை யில் இதனை பாஜக மேற்கொள்கிறது. மத ரீதி யாக இட ஒதுக்கீடு கூடாது என்று இக்கட்சி வாய் கிழியப் பேசினாலும், தொடர்ந்து இந்து மதத்தின் கீழ் வரும் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடுகள் அளிப்பதையும், அவற்றை விரி வாக்கிக்கொண்டே செல்வதையும் வசதியாக மறந்துவிடுகிறது. இதனைத் துல்லியமாகக் குறிப்பிட்டு ரங்கநாத் மிஸ்ரா ஆணையமானது, மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையைக் கண்டறிவதற்கான அளவுகோல் ஒரே சீராகவும், மதங்களுக்கு அப்பாற்பட்டும் இருந்திட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

நவீன இந்தியாவினைக் கட்டிஎழுப்பிடும் பணியில் சிறுபான்மை இன மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்த முன்வந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன், காங்கிரஸ் கட்சியானது ஏன் அதனை அமல்படுத்தாமல் காலம் தாழ்த் திக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கு முதலில் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

எந்தவொரு நவீன ஜனநாயக அமைப்பின் தரமும், அது மிகவும் சிறுபான்மையினரின் நலன்களையும் எந்த அளவிற்குக் கட்டிக்காக் கிறது என்பதிலிருந்தே அளவிடப்படும். பல் வேறு இன மக்களுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிரப்பிடக் கூடிய வகையில் ஆக்கபூர்வமான நடவடிக் கைகளை அது எடுத்திடுவதை வைத்துத் தான் அதன் வல்லமை மதிப்பிடப்படும். இந் தக் கண்ணோட்டத்தில் மேற்கு வங்க அரசின் முடிவானது மிகவும் சரியான ஒன்று. இதனை நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை விரும் புவோரும், நாட்டையும் நாட்டுமக்கள் மீதும் அபரிமிதமான அன்பு வைத்திருப்போரும் விரும்புவார்கள் என்பது திண்ணம்.

தமிழில்: ச.வீரமணி