Tuesday, December 29, 2015

கோவில் அரசியல்


ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் ராமர் கோவில் நிகழ்ச்சிநிரலை மீண்டும் முன்னிலைப்படுத்திடத் தீர்மானித்திருக்கிறது. சென்ற வாரம், ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்திக்கு ராஜஸ்தானிலிருந்து இரு டிரக்குகளில் செங்கற்கள் (ளயனேளவடிநே) வந்திருக்கின்றன.கோவில்கட்டுமானப் பணிகளுக்காக, விசுவ இந்து பரிசத் நடத்திடும் தொழிற்சாலை ஒன்றில் இந்தக் கற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர், அயோத்தியில் இக்கற்கள் சாஸ்திரசம்பிரதாயங்களுடன் பெறப்பட்டிருக்கின்றன.
மோகன் பகவத்தின் கட்டளை
விசுவ இந்து பரிசத்தின் கீழ் உள்ள அறக்கட்டளையான ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பாளர்கள் கூற்றின்படி, கோவில் விரைவில் கட்டப்படும் என்றுசாதகமான சமிக்ஞைகள்’’ அவர்கள் பெற்றிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், ஒருசில நாட்களுக்கு முன், “எப்பொழுது மற்றும் எப்படி கோவில் கட்டப்படும் என்று எவராலும் சொல்ல முடியாது,’’ என்று கூறியுள்ள அதே சமயத்தில் எனினும், “நாம் தயாரிப்புப்பணிகளை மேற்கொள்வதுடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டியதும் தேவை,’’ என்றும் கூறியிருக்கிறார். இவைதான் மேற்படிசாதகமான சமிக்ஞைகளாக’’ இருக்க முடியும். அவர் மேலும், “கோவில் என் வாழ்நாளுக்குள் கட்டப்பட்டுவிடும்’’ என்றும் சொல்லி இருக்கிறார்.
விசுவ இந்து பரிசத் அயோத்தியில் தன் வேலைகளைப் புதுப்பித்திருப்பதைப் பார்க்கும்போது, ஓர் அரசியல் குறிக்கோளுடன் கோவில் பிரச்சனையை விசுவ இந்து பரிசத் தன் கையில் எடுத்துக்கொண்டு தயாரிப்புப் பணிகளில் இறங்கி இருப்பதாகவே தெரிகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 2017 ஆரம்பத்தில் நடக்க இருக்கின்றன. இதனையொட்டி ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரத்திற்கு மதவெறித் தீயை விசிறிவிடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால், அதனை அவை மிகவும் மூர்க்கத்தனமாக மேற்கொள்ளும். பீகார் தேர்தலுக்குப்பின்னர், பாஜகவின் ஆதரவுத்தளத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுவருவதை அடுத்து, அதிலிருந்து மீள ஆர்எஸ்எஸ் தன்னுடைய கொட்டடியிலிருந்து மதவெறி ஆயுதங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நீதித்துறை கட்டளையை மீறும் செயல்
அயோத்தி தாவா உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக தற்போதைய நிலை நீடித்திட வேண்டும் என்பதே நீதித்துறையின் கட்டளையாகும். ஆனால், அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது என்பது, நீதித்துறையின் கட்டளைகளை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினரை அறிவுறுத்தி இருக்கிறார். இதுபோதுமானதல்ல. உத்தரப்பிரதேச அரசாங்கம் அயோத்திக்குக் கற்களை வரவழைப்பது போன்ற செயல்பாடுகளை நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்குக் கட்டளையிட வேண்டும். தற்போதைய நிலையினை மாற்றுவதற்கு நடைபெறும் எந்தச் செயலும் நடைபெறக் கூடாது. இதனைச் சீர்குலைத்திட நடந்துவரும் நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். -
டிசம்பர் 23, 2015
தமிழில்: .வீரமணி


Saturday, December 26, 2015

பாரிக்கர் பயணம் யாருக்காக?


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கரின் வாஷிங்டன்னுக்கான முதல் பயணம் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு முன்முயற்சிகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. இவற்றில் மிகவும் ஆழமான மற்றும் சங்கடத்தை உருவாக்கக்கூடிய அம்சம், அமெரிக்கா, இந்தியாவில் உள்ள ராணுவத் தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அமைச்சர், இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாகும். இந்திய அரசாங்கம், அமெரிக்காவுடன் ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் செய்து கொள்வதில் திறந்த மனதுடன் இருப்பதாக, மனோகர் பரிக்கர், அமெரிக்க அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்டன் கார்டரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
இடதுசாரிகள் எதிர்ப்பால்ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை
2005 ஜூன் மாதத்தில் கையெழுத்தான இந்திய - அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, இந்தியாவை அமெரிக்காவுடனான ராணுவரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் கையெழுத்திட வற்புறுத்தி வந்தது. இடதுசாரிக் கட்சிகள் இந்தியா, அமெரிக்காவுடன் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்திலும் மேற்கண்ட இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதைக் கடுமையாக எதிர்த்தன.
ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தத்தின்மூலம் அமெரிக்க ராணுவப் படைகள் இந்தியாவின் விமானத் தளங்கள் மற்றும் கப்பற்படைகளின் துறைமுகங்களைத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள இட்டுச் செல்லும். மற்றொரு ஒப்பந்தமான போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தமானது இரு நாட்டின் ராணுவப் படைகளின் போக்குவரத்து வலைப்பின்னல்களை இணைத்திடும். இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டால், பின்னர் இந்தியா அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு முழுமையான கூட்டணி நாடாக மாறிவிடும். ஐமுகூ அரசாங்கம் இறுதியில் இவ்விரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடாமல் இருந்துவிட்டது. இது தொடர்பாக அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுத்தார்.
இந்தியாவுக்கு ராணுவ கருவிகள் விற்பதில் அமெ.தான் முதலிடம்
பாஜக அரசாங்கமானது, அமெரிக்க ராணுவக் கூட்டணியில் சேர மிகவும் ஆர்வம் காட்டுவதுபோல் தோன்றுகிறது. இந்தத் திசைவழியில் அது சென்றுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகைபுரிந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை கையெழுத்தானது. அதன்படி, ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் போர்த்தந்திர நடவடிக்கைகளின் கீழ் இயங்கும் ஒரு நாடாக இந்தியா மாறிவிட்டது. கடல்வழிப் பாதுகாப்பு என்ற பெயரில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்திய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது. ஹவாய் தீவில் இயங்கிக் கொண்டிருக்கும் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் ராணுவத்தளத்திற்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்தான். இந்தியாவிற்கான ராணுவ உபகரணங்களை வழங்குவதில் அமெரிக்காதான் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
இறையாண்மை - ராணுவ நலனில் சமரசம்
இந்திய-அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் பத்தாண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா, மேற்கண்டவாறு ராணுவ ரீதியான ஆதரவு ஒப்பந்தம் மற்றும் போக்குவரத்து மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களுடன் மேலும் அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்னும் மூன்றாவது ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட நிர்ப்பந்தித்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்திடவும், இந்தியா திறந்த மனதுடன் இருக்கிறது என்றும் மனோகர் பரிக்கர் ஒத்துக்கொண்டிருப்பது என்பது, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதற்கான ஓர் அபாய அறிகுறியாகும். இந்த இரு ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடாவிட்டால், உயர் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு மூலங்களை இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது என்ற நிலைபாட்டினை அமெரிக்கா எடுத்திருக்கிறது. மோடி அரசாங்கம், பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்வதற்குக் காட்டும் ஆர்வத்தின்காரணமாக, நாட்டின் இறையாண்மையையும், நம் ராணுவத்தின் சீரிய நிலையையும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு அமெரிக்காவிடம் நயமாகப் பேசிக்கொண்டிருக்கிறது.
பலவீனப்படுத்தும் நடவடிக்கை
இந்தியா இதுவரை எவ்விதமான ராணுவக் கூட்டணியுடனும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் ஒரு சுயேச்சையான நிலைபாட்டினை மேற்கொண்டு வந்தது. ஆனால் தற்போது அமெரிக்க ராணுவத்தை நம்முடைய கப்பற்படை துறைமுகங்கள் மற்றும் விமானப்படையின் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளவும், எரிபொருள்களை நிரப்பிக்கொள்ளவும், தங்கள் படைகளை நிலைநிறுத்திப் பராமரித்துக்கொள்ளவும் அனுமதிப்பதன் மூலம், இத்தகைய நிலைபாட்டிலிருந்து தீவிரமான முறையில் முறிவினை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறது. இவை அனைத்தும், அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் இந்தியாவின் ராணுவப் படையினரைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளேயாகும். பாஜக அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய, நம் சுயேச்சையான ராணுவ நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தக்கூடிய, அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றக்கூடிய இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது.
- தமிழில்: ச.வீரமணி


Sunday, December 20, 2015

அமெரிக்காவிடம் சரணாகதி


மோடி அரசாங்கம் ஆசியாவில் அமெரிக்காவின் போர்த் தந்திர நடவடிக்கைகளுக்கு சேவை செய் திட தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டது என்பது, ஜப்பான் பிரதமர் சின்சோஅபே வருகையின் மூலம் உறுதியாகி விட்டது. அவரது வருகையின்போது, எண்ணற்ற ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன. இவை அனைத்தும் ஜப்பானுடன் மிகவும் நெருக்கமான முறையில் ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை நிறுவியிருக்கின்றன. ஆசிய-பசிபிக்பிராந்தியத்தில் இரு நாடுகளும் இரு தூண்களாகும் என்பதால் இரு நாடு களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்பியது.
அமெரிக்கா வற்புறுத்தியதன் விளைவாகத்தான் 2014 செப்டம்பரில் ஜப்பா னுக்கு மோடி விஜயம் செய்தபோது, முத் தரப்பு பாதுகாப்புக் கூட்டணி உருவானது. ஜப்பான் பிரதமர் அபே வருகை தந்தபோது, இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாகராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய் திடவும் மற்றும் ராணுவத் தகவல்களை இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்துகொள்வதைப் பாதுகாத்திடவும் இரு பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தா யின.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம்
மேலும், மலபார் கப்பல்படை பயிற்சிகளின் ஒரு நிரந்தர உறுப்பினராக ஜப் பானும் மாறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுவரை, மலபார் கப்பல்படையில் நடைபெற்ற பயிற்சிகள் இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒன்றாகத்தான் இருந்து வந்தன. ஜப்பான் இரண்டு அல்லது மூன்றுதடவைகள்மட்டும்தான் அவற்றில் பங் கெடுத்துக் கொண்டது. இப்போது இது மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு கப்பல்படை பயிற்சியாக மாறி யிருக்கிறது. இவ்வாறு மிகவும் நெருக்கமான முறையில் ராணுவம் மற்றும் போர்த்தந்திர உறவுகளை மேற்கொண்டிருப்பதன் அடிப்ப டையில்தான், ஜப்பான் இந்தியாவுடன் ஓர் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைக் கொள்கையளவில் செய்துகொள்ளவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமும் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கிய மான ஒன்றாகும்.
ஏனெனில் ஜப்பானில் உள்ள தோஷிபா, ஹிட்டாச்சி போன்ற கம்பெனிகள் அமெரிக்க கம்பெனிகளான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் போன்றவற்றிற்கு, கேந்திரமான சாதனங்களை அளிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுமதி அளித்தால்தான் அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவிற்கு அணுஉலைகளை அளித்திட முடியும்.
அமைதி வழியிலிருந்து விலகும் ஜப்பான்
இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜப்பான் நாடாளுமன்றத்தால் ஏற்பளிப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஜப்பான் மக்கள் மத்தி யில் இதுபோன்றதொரு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ஃபுகு ஷிமா அணுஉலை பேரிடர் இப்போதும் மக்களின் மனதில் நிலைத்து நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஹிரோ ஷிமா, நாகசாகி நிகழ்வுகளுக்குப் பின்னர்அணு ஆயுதங்களுக்கு எதிரான மன நிலையிலேயே ஜப்பானிய மக்கள் இப் போதும் இருந்து வருகிறார்கள். இந்தியா போன்ற அணு ஆயுதங் கள் வைத்திருக்கக்கூடிய நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச்செல்ல அவர்கள் விரும்ப வில்லை.
ஆனால், சின்சோ அபேயின் வலதுசாரி அரசாங்கம் நாட்டை மீண்டும் ராணுவமயமாக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்காக வெளி நாடுகளில் ராணுவ நடவடிக்கையைத் தடை செய்துள்ள ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தையே திரித்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு ராணுவ சாதனங்களை விற்பனை செய்வது என்பது ஜப்பான் இதுநாள்வரை பின்பற்றிவந்த அமைதி வழிக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதன் சமிக்ஞையேயாகும்.மோடி அரசாங்கம் முந்தைய மன்மோகன்சிங் அரசாங்கம் போன்றே மிகப்பெரிய அளவில் அணு உலைகளை இறக்குமதி செய்திடும் கொள்கையையே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆபத்தை விளைவிப்பவைகுஜராத் மாநிலத்தில் மிதி விர்தி என்னு மிடத்திலும், ஆந்திரப் பிரதேசத்தில் கொவ் வாடா என்னுமிடத்திலும் அமெரிக்க அணு உலைகளை நிறுவும் செயல்கள் அதிக செலவு பிடிக்கக்கூடியவை மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மக்களின்பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையுமாகும்.
பிரெஞ்சு அணு உலைகள் நிறுவப்பட இருக்கும் ஜெய்தாபூர்திட்டத்திற்கும் இவை பொருந்தக் கூடியதேயாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது கையெழுத்தான ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை (Joint Vision Statement on Asia-Pacific and Indian Ocean)யைப் போன்றே, இப்போது இந் தியா - ஜப்பான் இடையே கையெழுத்தா கியுள்ள தொலை நோக்கு அறிக்கையும் போர்த்தந்திரம் மற்றும் உலக அளவிலான ஒத்துழைப்பு குறித்துப் பேசுவதுடன், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக் காவின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா,ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அணிசேர்க்கை ஏற்பட்டிருப்பதையே இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கு சேவை செய்யவே
ஜப்பான், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் காலங்காலமாகவே முதலீடுகளைச் செய்து வந்திருக்கிறது. எனவே, ஆசியாவில் உள்ள இரு பெரிய நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகள் விரிவடைவது என்பது இயற்கையானது மட்டுமல்ல, அவசியமுமாகும். ஆனால், இது இந்தியாவை ஆசியாவில் ஓர் அணிக்குள் தள்ளி அதனை சுருக்கிவிடக்கூடிய ஒருபோர்த்தந்திர உறவாக இருந்திடக்கூடாது. (But this should not entail a strategic relationship which confines India to one bloc in Asia.)
இப்போது உருவாகியிருக்கிற அமெ ரிக்க, ஜப்பானிய, இந்திய ராணுவ - பாதுகாப்பு அணிவரிசை சீனாவைக் கட்டுக்குள் வைத்திட அமெரிக்கா மேற்கொண் டுள்ள திட்டங்களுக்கு சேவை செய்வதற்கேயாகும்.
நிச்சயமாக இது இந்தியாவின் நலன்களுக்கானதாக இருந்திட முடியாது. பிரதமர் சின்சோ அபேயின் கீழ் உள்ள ஜப்பான், சீனாவிற்கு எதிராக ஒரு அதிதீவிர தேசவெறி நிலைப்பாட்டை (ultra nationalist posture) பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
மோடி அரசாங்கத்தின் குறுகிய பார்வையே அதனை அமெரிக் காவின் சூழ்ச்சித் திட்டங்களுக்கு இரை யாக்கி இருக்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, December 13, 2015

இந்திய-பாக். பேச்சு: முன்னெடுத்துச் சென்றிடுக



பாகிஸ்தானுடன் பேச்சுவார்த் தைகள் நடத்துவது தொடர்பாக மோடி அரசாங்கம் இதுநாள்வரை எடுத்து வந்த நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக, இந்திய -பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அயல்துறை செய லாளர்கள் சந்திப்பும் அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற அயல்விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இஸ்லாமாபாத்திற்கு பயணம் செய்திருப்பதும் நடந்திருக்கிறது. இது வரவேற்கத்தகுந்த மாற்றம் என்றுகூறக்கூடிய அதே சமயத்தில், பாகிஸ்தானுடனான இந்தியத் தூதரக உறவுகளில் அதுமுன்னுக்குப்பின் முரணின்றி ஒரு சீரானநிலையினை எடுக்க முடியாமல் திண்டாடுவதையும், ஏற்ற இறக்கத்தையும் கூட தெளிவாகக் காட்டுகிறது.
மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே, பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்பாக அது ஒரு மோதல் போக்கைப் பின்பற்றி வந்தது. 2014 ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்த அயல்துறை செயலாளர்களின் பேச்சு வார்த்தைகளை முறித்துக் கொண்டது. இதற்கு இந்தியத்தரப்பில் கூறப்பட்ட சாக்குப்போக்கு என்னவெனில், பாகிஸ்தான்அயல்துறை அமைச்சர் ஜம்மு - காஷ் மீருக்குவருகை தந்த போது ஹூரியத் தலைவர்களையும் சந்திக்கப் போகிறார் என்பதாகும். அதன்பின்னர் சுமார் ஓராண்டு கால இடைவெளிக்கிடையே, இருநாட்டின் பிரதமர்களும் ரஷ்யாவில் உஃபா என்னுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.
அப்போது அவர்களிருவரும் இரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இரு நாட்டின் எல்லைகளிலும் இருக்கின்ற துணை ராணுவப் படைத் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்திடத் தீர்மானித்தனர். இவை சம்பந்தமாக நிகழ்ச்சிநிரல் தயாரிக்கும்போது, இந்தியா பயங்கரவாதம் குறித்து மட்டும்தான் விவாதிக்க வேண்டும் என்றும் அது மட்டும்தான் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தது. ஆனால், பாகிஸ்தானோ காஷ்மீர் மற்றும் நிலுவையில் உள்ள இதர அனைத்துபிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கக் கூடிய விதத்தில் நிகழ்ச்சிநிரல் தயாரித் திட வேண்டும் என்று கூறியது. இவ் வாறு இவை சம்பந்தமாக தயாரிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிநிரல் குறித்து, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதன் விளைவாக, இப்பேச்சுவார்த்தைகளும் நடைபெறாமல் தோல்வி அடைந்து விட்டன. பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹூரியத் தலைவர்களைச் சந்திப்பது குறித்து இந்தியா தரப்பில் ஆட்சேபணை எழுப்பப்பட்டது.தலைகீழ் மாற்றம்மோடி அரசாங்கம் மற்றும் பாஜக இந்தசமயத்தில் பயங்கரவாதம் குறித்துத்தான்முதலில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்திருந் தது. அதே சமயத்தில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, தொடர்ந்து வெடிகுண்டு தாக்கு தல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. ஜம்மு - காஷ்மீருக் குள்ளும் ஃபிடாயீன் குழு எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல்கள் தொடுப்பது அதிகரித்தன.
பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவல் செய்வதை நிறுத்தாதவரையிலும், பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகளைப் பேச முன் வராத வரையிலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருந்தது. பிரதமர் மோடி இந்த ஆண்டு நவம்பரில்ஸ்ரீநகருக்கு பயணம் செய்தார். அப்போது ஜம்மு - காஷ்மீர் அரசியல் வட்டாரங்களின் மத்தியில், அவர் பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து சிலஅறிவிப்புகளைச் செய்திடுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படி எதுவும் நடந்திடவில்லை. எனவே, இப்போது இந்திய அரசாங்கத் தின் பக்கத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்,ஒரு தலைகீழ் மாற்றமாகவே தோன்று கிறது. பாரீசில் பூமி வெப்பமயமாதல் குறித்து உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தசமயத்தில், இரு நாட் டின் பிரதமர்களும் தனியே, ஒருசில நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். அதன் விளை வாக, 2015 டிசம்பர் 6 அன்று பாங்காக்கில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டி னன்ட் ஜெனரல் நசீர் ஜான்ஜூவா ஆகிய இருவருக்கும் இடையே ரகசியக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடன் இரு நாட்டின் அயல்துறை செயலாளர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள். இச் சந்திப்பிற்குப்பின் வெளியாகியுள்ள அறிக்கையில், “அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் இரு நாடுகளின் எல்லைக் கோட்டில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற் றன,’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனைமேலும் முன்னெடுத்துச் செல்வது என்றும்கூட அப்போது தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த் தைகளை வாபஸ் வாங்கி நான்கு மாதங்கள்கடந்த பின்னர், இந்தியா, பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமல்லாமல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்தும் விவாதித்திட ஒப்புக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைகள் அனைத் துமே முன்பு சர் கிரீக் தாவாவின்போதும், சியாச்சின் பனிப்பகுதியில் படைகளை அனுப்பியபோதும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது விவாதிக்கப் பட்டவைகளேயாகும். தனிமைப்பட்டது...மோடி அரசாங்கம், பாகிஸ்தானுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தமாட்டோம் என்று பிடிவாதமாகவும், எவரும் ஏற்கமுடியாத அளவில் கார ணங்கள் சொல்லிக்கொண்டிருந் ததிலிருந்தும் இப்போது திடீரென்று தலைகீழாக மாறியிருப்பதற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுடனான பேச்சுவார்த் தைகளைத் தொடர முட்டுக் கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்கிற பிரச்சனை என்று கூறிவந்ததை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திட இந்தியா முயற்சித்ததில் தோல்வி கண்டுவிட்டது.
அமெரிக்கா, பாகிஸ் தானுக்கு ராணுவ உதவிகளை அதிகப் படுத்தி இருக்கிறது. இது இந்தியாவை ஆத்திரப்படுத்தியுள்ள போதிலும், அதனால் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும்சொல்ல முடியவில்லை. வாஷிங்டன்னுக்கு நவாஸ் ஷெரிப் சென்றிருந்த போது, தலிபான் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திட பாகிஸ்தானுக்கு இருக்கும் கேந்திரமான பங்கினை அமெரிக்கா மீண்டும் உறுதி செய்தது. `சார்க்’ நாடுகளுக்குள் கூட, தனிமைப்படுத்தப் பட்டு விட்டதை இந்தியா உணரத் தலைப் பட்டிருக்கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை நம்பாதுகாப்புப் படையினரால் உறுதியாகஎதிர்த்து முறியடித்திட முடியும், அதன் மூலம் பாகிஸ்தானை இப்பிரச்சனைமீது பேச வருவதற்குக் கட்டாயப்படுத்திட முடியும் என்கிற இந்தியாவின் நிலைபாடு மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திடாமல், அதனுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளாமல், பயங்கரவாத வன்முறைப் பிரச்சனையை சமாளித்திட முடியாது என்பதை இந்திய அரசு இப்போது உணர்ந்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் தன்னுடைய வெறித்தன மான நிலைபாட்டை இந்தியா கைவிட்டி ருக்கிறது.
அமெரிக்காவை மீற முடியவில்லை
சர்வதேச அளவில், பிரதானமாக அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த் தைகளைத் தொடர வேண்டும் என்று இந்தியாவிற்குத் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வந்தன. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள மோடி அரசாங்கம், இந்த நிர்ப்பந்தத்தைத் தடுத்திட முடியவில்லை. இறுதியாக, ஆப்கானிஸ்தானுடனான மோதலில் இந்தியா தனிமைப்படக்கூடிய சூழல்உருவாகி இருப்பதையும்.
இப்பிராந் தியத்தில் உள்ள நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதில் பாகிஸ்தான் கேந்திரமான பங்கினை வகித்திடும் எதார்த்த நிலையையும் இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. சுஷ்மா சுவராஜ் “ஆசியாவின் இதயம்’’ மாநாட்டில் கலந்து கொள்வது இதனை அங்கீகரித்ததன் விளைவேயாகும். மோடி அரசாங்கம், பாகிஸ்தான் தொடர்பாக மேற்கொண்டிருந்த கொள்கை படு தோல்வி அடைந்து விட்டதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.
மோடியின் ஆசிர்வாதத்துடன் பாகிஸ்தானுடன் மோதல் போக்கை ஏற்படுத்தும் விதத்தில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மிகவும் மிகைப்படுத்தி தேசியவெறியுடன் உருவாக்கிய வெறித்தன மான கொள்கை இவ்வாறு படுதோல்வி அடைந்துவிட்டது.
இந்திய அரசின் கொள்கையில் இவ் வாறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்ப துடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் பாஜகவிலும் இருக்கின்ற வெறிபிடித்த தீவிரவாதிகள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், மோடி அரசாங்கம், பாகிஸ்தானுடனான தூதரக உறவில் இவ்வாறு படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்பு வோம். சுஷ்மா சுவராஜின் பயணத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ள அறிவிப் பினை எவ்விதப் பின்வாங்கலும் இன்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
(தமிழில்: ச. வீரமணி)