Sunday, March 27, 2011

அதிசயம் ஆனால் உண்மை

அதிசயம் ஆனால் உண்மை
புதுதில்லி, மார்ச் 27-

நமது நாட்டு ரயில்கள் பல்வேறு கார ணங்களால் சரியான நேரத்திற்குச் சென்ற டைவதில்லை. தில்லியிலிருந்து சென்னை செல்ல வேண்டுமானால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அல்லது ஜி.டி. எக்ஸ்பிரஸ் என்னும் ரயில்களைத்தான் மக்கள் அதிகம் விரும்புவார்கள். கார ணம், அதிகாரபூர்வமான ரயில்வே கால அட்டவணைப்படி அவை காலையில் சென்னை போய்ச் சேர வேண்டும். எவ் வளவு கால தாமதமானாலும் பகல் நேரத் தில் சென்னையை அடைந்துவிடலாம் என்பதாலும் அதன்பிறகு தங்கள் சொந்த வீடுகளுக்கோ அல்லது வேறு ரயில் பிடித்து தங்கள் ஊர்களுக்குச் செல்வ தற்கோ அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதை விடுத்து கரீப் ரதம், துரந்தோ ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்று ஏதேனும் ரயில்களில் அவர்கள் ஏறி விட்டால், தொலைந்தார்கள். இரவு எட்டு மணியளவில் போய்ச்சேர வேண் டிய அவை, பத்து அல்லது 11 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தால், தொலைந்தார் கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேர்வதற்குள் அநேகமாக கசப் பான அனுபவங்களை அவர்கள் பெற்று விடுவார்கள்.

இதுதான் வழக்கமான நிலைமை. ஆனால், இது தேர்தல் நேரமாயிற்றே. அதிலும் குறிப்பாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி எந்த வழியிலாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண் டிருக்கும் சமயமாயிற்றே. இப்போது என்ன நிலைமை.

இதேபோன்று மேற்கு வங்கத்தில் கந்தாரி எக்ஸ்பிரஸ் என்னும் ரயில் ஹவுரா ஸ்டேஷனுக்கு இரவு 9.40 மணிக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வாறு போய்ச் சேராமல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குப் போய்ச் சேர்ந் திருக்கிறது. ஆனால் என்ன ஆச்சரி யம்? ரயில்வேயைச் சேர்ந்த மூத்த அதி காரிகள் இவர்களது ரயிலின் வருகைக் காகக் காத்துக் கொண்டிருந்திருக் கிறார்கள்.

வண்டி நிலையத்தை வந்து அடைந் ததும், பயணிகள் அவர்களின் இருப்பி டத்திற்குப் போய்ச் சேர்வதற்காக டாக்சி ஏற்பாடு செய்து அனுப்பி இருக்கிறார் கள். இவ்வாறு 300 பயணிகளுக்கு 52 டாக்சிகள் 13 ஆயிரம் ரூபாய் செலவில் அன்று ஓரிரவு மட்டும் ஏற்பாடு செய்தி ருக்கிறார்கள்.

காரணம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? ரயில்வே யின் அமைச்சர் மம்தா பானர்ஜி. இப் போது அவரது கட்சி மேற்கு வங்கத்தில் எப்பாடு பட்டாவது இடது முன்ன ணியை ஆட்சியிலிருந்து அகற்றிட வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது.

சரி, இவ்வாறு மம்தா பானர்ஜி, நாடு முழுவதும் கால தாமதமாக வரும் அனைத்து ரயில்களுக்கும் ஏற்பாடு செய்வாரா?

இவ்வாறு மேற்கு வங்கத்தில் மட் டும் தேர்தலுக்காக அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? (ச.வீ)

No comments: