Saturday, March 13, 2010

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு


பதினான்கு ஆண்டு காலம் கழித்து, மூன்று முறை நாடாளுமன்றத்தில் இதற்கு முன் கொண்டுவரப்பட்டு, உறுப்பினர்கள் செய்த அமளியால் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டு, கடைசியாக, மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிர்க்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டமுன்வடிவு 2010 மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது கொண்டுவரப்பட்ட இச் சட்டமுன்வடிவானது 1996இல் இடதுசாரிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரவையால் ஏற்கப்பட்ட ஒன்று என்பதையும் அதுதான் இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அந்தச் சட்டமுன்வடிவானது, மிகவும் ஆழமான பரிசீலனைக்காக ஒருமுறை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கும், பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் இரண்டிலுமே அனைத்துக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள் என்ற போதிலும், இந்தச் சட்டமுன்வடிவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டது, வெளிப்படையாகவே அவையில் நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது. அதே அரசியல் கட்சிகள் அவற்றைத் திரும்பவும் அரங்கேற்ற இப்போதும்கூட முயற்சித்தன. ஆயினும், இடதுசாரிக் கட்சிகள், வலதுசாரிக் கட்சிகள் மற்றும் நடுநிலை சக்திகளின் விரிவான ஒற்றுமையின் காரணமாக ( வாந செடியனநளவ யீடிளளiடெந ரnவைல டிக வாந டுநகவ, சுiபாவ யனே வாந ஊநவேநசளைவ கடிசஉநள) மாநிலங்களவையில் அத்தகைய சீர்குலைவு முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இறுதியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மகளிர்க்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திய சுதந்திரப் போராட்டம் துவங்கிய காலத்திலேயே எழுப்பப் பட்டுவிட்டது. சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்த வீராங்கனைகள், அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் வீராங்கனைகள், எப்போதும் பாலின சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுத்து வந்தனர். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் சமயத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்பதன் பிரிக்கமுடியாததொரு பகுதியாக பாலின சமத்துவமும் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆயினும், சுதந்திரம் பெற்றபின், ஆட்சியாளர்கள் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியை நிறைவேற்ற நிரம்பவே தயக்கம் காட்டினர். எனவே பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் உருவாயின. 1954இல், ‘‘வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான மகளிர் போராட்டத்தை’’ முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தோடு இந்திய மகளிர் தேசிய சம்மேளனம் அமைக்கப் பட்டது.

உலக அளவிலும், பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதி (நனேநச நளூரயடவைல யனே பநனேநச தரளவiஉந) தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய விதத்தில், 1975இல் சர்வதேச மகளிர்ஆண்டாக பிரகடனம் செய்தது. அப்போது ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஓர் அறிக்கை தயார் செய்து அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பாக கோரிக்கைகள் எழுப்பப்படுவது அதிகரித்தன. 1971 செப்டம்பரில் இந்தியாவில் பெண்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்திட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் அறிக்கை 1975இல் வெளி உலகுக்கு வெளியிடப்பட்டது. அதன்மூலம் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தக்குழுவானது, மாதர் அமைப்புகள் உயர்த்திப்பிடித்ததைப்போல், நாட்டில் மகளிர் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டிய அதே சமயத்தில், பெண்களின் நிலைமைகளை உயர்த்திட, மிக முக்கியமான கூறாக, பெண்களுக்கு அரசியல் அமைப்புகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருந்தது. பின்னர் 1988இல் பெண்களுக்கான தேசிய தொலைநோக்குத் திட்டம் (சூயவiடியேட ஞநசளயீநஉவiஎந ஞடயn கடிச றுடிஅநn), பெண்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அமைப்புகளிலும் அனைத்து மட்டங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இக்கோரிக்கைகளின்பால் ஏற்பட்ட அரசியல் கருத்தொற்றுமை அடிப்படையில், 1993ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74ஆவது திருத்தங்களின் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உத்தரவாதப் படுத்துவதற்காக சட்டமுன்வடிவு நிறைவேற்றப் பட்டிருக்கும் இத்தருணததில் பெண்களின் நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக நடைபெற்ற போராட்டங்களை நினைவுகூர்வது அவசியம். அரசியல் அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் நிலை தானாகவே மேம்பட்டுவிடும் என்று பொருள் கொண்டிடக் கூடாது. பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இவை கவனத்தில் கொண்டுவர உதவிடும். இடஒதுக்கீடுகள் அவசியம் என்ற போதிலும் அது மட்டுமே அவர்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்து விடப் போதுமானதல்ல. மகளிர் அமைப்புகளின் வலு மற்றும் நாட்டின் ஜனநாயக இயக்கங்கள் மூலமாகத்தான் தந்தைவழிச் சமுதாய அமைப்பில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அநீதிகள் மற்றும் தப்பபிப்பிராயங்கள் நீக்கப்படுவது சாத்தியம். மேலும் தற்போது நாட்டில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றன. பெண் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி கவனிப்பாரற்றுக் கிடப்பது மட்டுமல்ல, ஊட்டச்சத்தின்மை மற்றும் ஆரோக்கியமற்ற சூழ்நிலைமைகளும் இந்தியப் பெண்களை மிகவும் கீழ் நிலையில் வைத்திருக்கின்றன. இவற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கிட வேண்டியிருக்கிறது. பாலின சமத்துவம் அளிப்பதில் உலகில் உள்ள 128 நாடுகளில் இந்தியா 114ஆவது நாடாகப் பட்டியலிடப் பட்டிருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் மற்றும் பிரிவினர், இந்த ஒதுக்கீடுகள் நாட்டில் உள்ள மேல் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்குத்தான் சாதகமாக இருந்திடும் என்றும் பிற்பற்ற வகுப்பார் மற்றும் முஸ்லீம்கள்போன்ற மதச் சிறுபான்மையினருக்கு உருப்படியான எவ்வித முன்னேற்றத்தையும் அளித்திடாது என்றும் வாதிட்டனர். பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம் பெண்கள் வாழ்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். அவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியவைதான். இதற்குத் துல்லியமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டியது அவசியம். ஆனால் இதனைக் கூறி, பெண்களுக்கு அரசியல் அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. கடந்த இருபதாண்டு காலமாகவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை இவர்கள் இவ்வாறுதான் தடுத்து முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள்.

மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவை எதிர்த்து வந்தவர்கள், இப்போது தங்கள் அணியில் ஒரு புதிய கூட்டாளியை - திரிணாமுல் காங்கிரசை - கண்டார்கள். ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு முக்கிய பங்காளராக இருந்த போதிலும், இச்சட்டமுன்வடிவு தொடர்பாக அரசாங்கம் தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இது மிகவும் விசித்திரமாகும். எந்தவொரு சட்டமுன்வடிவும், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் மத்திய கேபினட் அமைச்சர் ஒருவர் இவ்வாறு தனக்குத் தெரியாது என்று கூறுவது கேலிக்கூத்தான ஒன்று. கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவு தற்போதைய வடிவத்தில் ஏற்புடையதல்ல என்றும், இதில் முஸ்லீம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கூடிய வகையில் போதுமான சிறப்பு ஷரத்துக்கள் ஏதுமில்லை என்றும் திரிணாமல் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் இதே திரிணாமுல் காங்கிரஸ்தான், மேற்கு வங்கத்தில் ரங்கனாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கு வங்க அரசு, முஸ்லீம்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெளிவாகிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இவ்வாறு மோதுவது முதல் தடவையல்ல. இதற்குமுன் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தபோதும், பிரதமர் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரகடனம் செய்துள்ளபோதும், திரிணாமுல் காங்கிரஸ், மத்திய - மாநில அரசுகள் இணைந்து கூட்டாகப் பாதுகாப்புப் படையினர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்ததன் நோக்கம் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பரிவுகாட்டுவதற்கே. மேற்கு வங்கத்தில் மக்கள் மத்தியில் அராஜகம் மற்றும் வன்முறையை ஏவி, அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, தங்கள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட வேண்டும் என்ற கெடுசிந்தையுடன் இவ்வாறு அது நடந்து கொள்கிறது. மொத்தத்தில் இந்தக் கட்சிக்கு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட்டிருக் கிறதே என்ற கவலை கிஞ்சிற்றும் கிடையாது.

இவ்வாறு இக்கட்சி நிலை எடுத்திருந்த போதிலும், மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலிருந்து, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பான்மையானவை, மகளிர்க்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து நிற்பது தெளிவாகி இருக்கிறது. உண்மையில் இது, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாகும். வரவிருக்கும் காலங்களில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமுன்வடிவானது மக்களவையிலும் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெரும்பாலானவற்றிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகி செயல்வடிவம் பெறுவதற்கான நிலைமையை உருவாக்க வேண்டியது நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அடுத்து, பெண்களின் வாழ்நிலைமையை மேம்படுத்துவதற்கும், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ நிலையை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: