Wednesday, November 25, 2009

மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று!



முதலாளித்துவத்தை தூக்கி எறிவோம்! மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று! சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாட்டுப் பிரகடனம்
மனித குலத்தின் வருங்காலத் திற்கு சோசலிசமே ஒரே மெய்யான மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதில் உலக மக்கள் கம்யூனிஸ்ட்டுக ளுடன் இணைந்து நிற்க வேண்டு மென்று தில்லியில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

47 நாடுகளைச் சேர்ந்த 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது.

இம்மாநாடு தனது தில்லிப் பிரகடனத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. பிரகடனம் வருமாறு:-

“சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் போராட்டம், இதற்கான மாற்றுக்கள், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்கு” என்ற அடிப் படையில் இம்மாநாடு தனது பிரகடனத்தை நிறைவேற்றியது.

பிரகடனம்

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் வர லாற்று எல்லைகளை வரையறுத்துக் காட்டியுள்ளதோடு, புரட்சிகரமான நட வடிக்கைகள் மூலம் முதலாளித் துவத்தைத் தூக்கி எறிய வேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் இடையே உள்ள முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் அது எடுத்துக் காட்டுகிறது. மூலதனத்தின் அரசியல் பிரதி நிதிகள், இந்த நெருக்கடியின் மைய மாக உள்ள மூலதனத்திற்கும், உழைப் பிற்கும் இடையேயான தீர்க்க இயலாத முரண்பாட்டை மூடிமறைக்க முயற் சிக்கின்றனர். மூலதனத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் நெருக்கடிக்கான தங்களது தீர்வுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். உலக அமைப்புக்களான சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றோடு இச்செய லில் ஈடுபட்டு வரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே நிலவும் போட்டி களை இந்நெருக்கடி தீவிரப்படுத்து கிறது. ராணுவ அரசியல் தீர்வுகள், தீவிர மாக முன்வைக்கப்படுகின்றன.

நேட்டோ ராணுவக் கூட்டணி அமைப்பும் தனது தீவிர நடவடிக்கை களை அதிகரித்து வருகிறது. அரசியல் அமைப்புக்கள், ஜனநாயக, சிவில் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் பிற்போக்கான தன்மைக்கு மாறி வருகின்றன என்பதை இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது.

தற்போதைய நெருக்கடி, 1929-ம் ஆண்டில் ஏற்பட்ட மகத்தான பொருளா தார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்துத் துறைகளையும் பாதிக்கின்ற ஒன்றாக உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிபடக் கூறுகிறது. விவசாயமும், கிராமப் பொரு ளாதாரங்களும் பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளன. உலகளவில் கோடிக் கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துன்பத்தையும் வறுமை நிலையையும் அதிகரித்து வருகி றது. கோடிக்கணக்கானோர் வேலைக ளையும் வீடுகளையும் இழந்து நிற்கின் றனர். வரலாறு காணாத அளவில் வேலை யின்மையின் அளவு அதிகரித்து வருகி றது. அதிகாரப்பூர்வமாகவே வேலையில் லாதோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி வருகின் றனர். நூறு கோடி மக்களுக்கும் அதிக மானோர், அதாவது மனித குலத்தில் ஆறில் ஒரு பகுதியினர் பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள், பெண்கள், நாடு பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த தொழி லாளர்கள் ஆகியோர் இதற்கு முதல் பலியாகின்றனர்.

இயற்கையான தங்களின் வர்க்க நிலைக்கேற்ப, முதலாளித்துவ நாடுக ளின் அரசுகள் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு இத்தகைய அடிப்படையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறி யுள்ளன. நவீன தாராளமயத்தின் ஆதர வாளர்களும், முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயக நிர்வாகிகளும் இதுநாள்வரை அரசைக் குறை கூறி வந்தனர். இப்போது தங்களை நெருக்கடியிலிருந்து மீட்க அரசைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசமைப்பு எப்போ துமே முதலாளிகளின் பெருத்த லாபத் திற்கான பாதைகளை விரிவுபடுத்தவும், அதனைப் பாதுகாக்கவும் எப்போதும் துணை நிற்கும் என்ற அடிப்படையான உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிறுவனங்களை நெருக் கடியிலிருந்து மீட்பதற்கான மீட்பு நடவ டிக்கைகள் பொதுமக்களின் பணத் திலிருந்து செய்யப்படுகின்றன; ஆனால் இதனால் பயனடைவோர் சிலரே. நெருக் கடியில் உள்ள முதலாளிகளை மீட்பதற் கான நடவடிக்கைகள் முதலில் மேற் கொள்ளப்பட்டதோடு, அவர்களின் கொழுத்த லாபத்திற்கான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன. வங்கிகளும், நிதிக் குழுமங்களும் மீண்டும் தொழில்களில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. கார்ப் பரேட் நிறுவனங்களை மீட்கப் பெருந் தொகையை அரசுகள் பரிசாக வழங்கின.

ஆனால் அதிகரித்துவரும் வேலை யின்மையும், உண்மையான ஊதியத்தின் வீழ்ச்சியும்தான் உழைக்கும் மக்களுக்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சிலரின் பேரா சையின் அடிப்படையில் உருவான பிறழ்ச் சியாலோ அல்லது முறையான ஒழுங்கு முறைகள் இல்லாமையாலோ இந்த நெருக்கடி உருவாகவில்லை. உலகமய மாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சில பத்தாண்டுகளில் முதலாளித் துவத்தின் அடிப்படையான லாபத்தைப் பெருக்குதல், நாடுகளுக்கிடையிலும், ஒரு நாட்டிற்குள்ளேயும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கூர்மையாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக உலக மக்களின் மிகப்பெரும்பான்மையோரின் வாங் கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற் போதைய நெருக்கடி முதலாளித்துவத் தின் உள்ளார்ந்த நெருக்கடியாகும். முதலா ளித்துவ அமைப்பு உள்ளார்ந்த வகையில் நெருக்கடியில் உழலும் ஒன்று என்ற மார்க்சிய பகுப்பாய்வு சரியானதே என்று மீண்டும் நிரூபணமாயுள்ளது.

முதலாளித்துவம் லாப வேட்டைக் காக எல்லைகளைத் தாண்டிச் செயல் படுகிறது. எல்லாவற்றையும் மிதித்து நாச மாக்குகிறது. இந்த நிகழ்வுப் போக்கில் அது தொழிலாளி வர்க்கத்தையும் இதர உழைக்கும் மக்களையும் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துகிறது. அவர்கள் மீது கூடு தல் துன்பங்களைச் சுமத்துகிறது. முதலா ளித்துவத்திற்கு உண்மையில் ஒரு நிரந்தர உழைப்பாளர் படை தேவைப்படுகிறது.

மெய்யான மாற்று அமைப்பை, அதா வது சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே இத்தகைய முதலாளித்துவக் கொடுங் கோன்மையிலிருந்து விடுதலை பெற முடியும். இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்புப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு மாற்றுப்பாதைக்கான நமது போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தாகும். ஒரு மாற்றுக்கான நமது போராட்டம் மக்களை மக்கள் சுரண்டுவதும் ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் இல்லாத ஓர் அமைப்பாகும். இது வேறொரு உலகத்திற்கான, ஒரு நியாய மான உலகத்திற்கான, ஒரு சோசலிச உலகத்திற்கான போராட்டமாகும்.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தூய்மை கெட்டிருப்பதற்குக் காரணமான முதலாளித்துவம், உலகம் வெப்பமய மாவதைத் தடுப்பதற்கான சுமை முழுவ தையும் தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கு முயல்கின்றது. உலகத்தின் வெப்பம் அதி கரிப்பதற்கு அவர்களே காரணமாவர். வெப்ப மாற்றத்தைத் தடுப்பது என்ற பெயரால் உலகக் கட்டமைப்பை மாற்றி யமைப்பதற்கான முதலாளித்துவத்தின் ஆலோசனை, சுற்றுச்சூழலைப் பாது காப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லா ததாகும். பசுமை வளர்ச்சி, பசுமைப் பொரு ளாதாரம் என்பனவற்றைப் புதிய அரசு ஏகபோக விதிமுறைகளைச் சுமத்துவ தற்கே பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிகபட்ச லாபத்திற்காகவும், மக்கள் மீது புதிய துன்பங்களைச் சுமத்துவதையும் ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் அதிகபட்ச லாபமானது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மக்களின் உரிமைகளுக் கும் இசைவானதல்ல.

ஆதிக்க ஏகாதிபத்திய வல்லரசுகள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உழைக் கும் மக்கள் மீது கூடுதல் சுமைகளைச் சுமத்துவதற்கு முயல்கின்றன. நடுத்தர அல்லது கீழ்மட்ட முதலாளித்துவ வளர்ச்சி நிலையிலுள்ள, அதாவது வள ரும் நாடுகளின் சந்தைகளில் ஊடுருவ வும், ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின் றன. முதலாவதாக, உலக வர்த்தகக் கழக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இதைச் செய்ய முயல்கின்றன. இவை இந்த நாடுகளின் மக்களுக்குப் பாதகமான முறையில், குறிப்பாக விவசாயத் தரங்கள், விவசாயப் பொருட் கள் அல்லாத பிற பண்டங்களுக்குச் சந்தை அனுமதி மூலம் செய்ய முயல்கின்றன.

இந்த நிலைமைகளில், நிலையான முழு வேலைவாய்ப்புக்காகவும், எல்லோ ருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கும், பாலின வேறுபாட்டிற்கு எதிராகவும், இன வெறிக்கு எதிராகவும், இளைஞர்கள், பெண்கள், குடியேறித் தொழிலாளர்கள் மற்றும் இன, தேசிய சிறுபான்மையோர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதிகளின் உரிமைகளின் பாதுகாப்புக்காகவும் போராட்டத்தில் மக்கள் சக்திகளின், முடிந்த அளவு பரந்த பகுதிகளைத் திரட்டுவதற்கு கம்யூ னிஸ்டு - தொழிலாளர் கட்சிகள் செய லூக்கமாகப் பாடுபட வேண்டும்.

கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் தமது நாடுகளில் இந்தப் பணியை மேற்கொண்டு, மக்களின் உரிமைகளுக் காகவும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் பரந்த போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம் தனது பலத்தைத் திரட்டி, முதலாளித் துவத்தின் முயற்சிகளை எதிர்க்கும் போது, தனது உரிமைகளைப் பாதுகாப் பதில் வெற்றியடைய முடியும் என்று அனு பவம் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பு இயல்பா கவே நெருக்கடி சூழ்ந்ததாக இருந்த போதிலும், அது தானாகவே வீழ்ச்சி யடைந்துவிடுவதில்லை. கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர் தாக்குதல் இல்லா விட்டால் பிற்போக்கு சக்திகள் தலை தூக்கும் அபாயத்தை ஏற்படுத் தும். தமது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற் காக ஆளும் வர்க்கங்கள் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு முழுமூச் சான தாக்குதலைத் தொடுப்பார்கள். முதலாளித்துவத்தின் மெய்யான தன்மையைச் சமூக ஜனநாயக வாதிகள் தொடர்ந்து பிரமைகளை வளர்க்கிறார் கள். இதற்காக அவர்கள், ‘முதலாளித்து வம் மனித நேயமடைந்து வருகிறது. முறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக ரீதியான நிர்வாகம்’ முதலிய முழக்கங் களை முன்வைக்கின்றனர். இவை உண்மையில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற முதலாளித்துவத்தின் தந்தி ரத்தை ஆதரிக்கின்றன.

மக்களுக்கு எதிரான கொள்கை களைக் கடைப்பிடிப்பதற்கு ஆக்கமளிக் கின்றன. எந்த அளவு சீர்திருத்தமும் முதலாளித்துவத்தின் கீழான சுரண் டலை அகற்ற முடியாது. முதலாளித் துவம் தூக்கியெறியப்பட வேண்டும். இதற்குத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனப் போராட் டங்கள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முனைப்பாக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்பது போன்ற பல வகைப்பட்ட தத்துவங்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அவற்றை முறிய டிப்பதற்கு நமது பதில் ‘சோசலிசம்தான் அவற்றுக்கு மாற்று’.

உலகின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் சமூகத்தின் இதர உழைக்கும் மக்கள் அனைவரின், உலக மக்களின் மிகப் பெரும்பான்மையோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளாகிய நாம், கம்யூ னிஸ்ட் கட்சிகளின் மாற்றப்பட்ட முடி யாத பாத்திரத்தை வலியுறுத்துகிறோம்.

மனித குலத்தின் வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரு மெய்யான மாற்று. அதாவது நமது வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரே மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங் களை வலுப்படுத்துவதில் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள் என்று மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

No comments: