Showing posts with label people's democracy. Show all posts
Showing posts with label people's democracy. Show all posts

Thursday, July 2, 2015

50 ஆண்டுகால தொடர் போராட்டம் : சீத்தாராம் யெச்சூரி


50 ஆண்டுகால தொடர் போராட்டம்
-சீத்தாராம் யெச்சூரி
இந்த (2015 ஜூன் 28) இதழுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் வெளியாகும் பீப்பிள்ஸ் டெமாக்ரசிக்கு, 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.  1965 ஜூன் 27இலிருந்து ஞாயிறு தேதியிட்டு ஒவ்வொரு வாரமும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தொடர்ந்து முறையாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. (கட்சியின் அகில இந்திய மாநாடுகள் நடைபெறுவது போன்று அசாதாரணமான தருணங்கள் தவிர) மற்ற அனைத்து வாரங்களிலும் - அதாவது இதுவரை2600 வாரங்கள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளும் ஏற்ற இறக்கம் இல்லாது எளிதாகச் சென்ற காலம் இல்லை.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி முறையாக வெளியாவதைத் தடுக்கக்கூடிய விதத்தில் ஏற்பட்ட பல்வேறு சவால்களை சமாளித்துத் தான் அதுவெளி வர வேண்டி இருந்தது. அதே சமயத்தில், பிற்போக்கு சக்திகளால் ஏவப்பட்ட பல்வேறு சவால்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையில் அது இருந்தது. திருத்தல் வாதத்திற்கு எதிராக கடுமையான தத்துவார்த்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளேயே இருந்துவந்த வர்க்க சமரச(class collaboration) நிலைப்பாடாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் எதிர்த்து முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின்பு,  கட்சிக்குள்ளிருந்த நக்சலைட்டுகளின் இடது அதிதீவிர திரிபு (Left adventurist deviation)க்கு எதிராக கடுமையான போராட்டங் களை நடத்தித்தான் ஆரம்ப ஆண்டுகளில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தொடர்ந்து வெளிவந்தது.
தத்துவார்த்தப் பிரச்சாரம்
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களும் மற்றும் அவர்களின் கட்டளைப்படி செயல்பட்ட பிரம்மாண்டமான அரசு எந்திரமும் நம்மீது ஏவிய தாக்குதல்களை அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் எதிர்கொண்ட அதே சமயத்தில் அனைத்துத் தடைகளையும் மீறி பீப்பிள்ஸ் டெமாக்ரசி வெளிவந்தது என்பது பெரிய அளவில் திருப்தியை அளிக்கிறது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிலிருந்து எழுந்த சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன்னுடைய முக்கியமான தத்துவார்த்தப் பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், வலுவாக இருந்த சோவியத்  சோசலிஸ்ட் குடியரசு ஒன்றியம் (USSR) துண்டு துண்டாகி, சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்தபோது, உலக அளவில் ஏகாதிபத்தியம்   சோசலிசத்திற்கு எதிரான தத்துவார்த்தத் தாக்குதலை மேலும் மூர்க்கத்தனமாகக் கட்டவிழ்த்துவிட்டது. உலகில் இருந்த சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நொறுங்கிவீழ்ந்தன. பல கட்சிகள் ஊசலாடின. அதன் காரணமாக அவை மார்க்சிசம் லெனினிசத்தின் மீது வைத்திருந்த உறுதியே நீர்த்துப் போயின. வலுவாக இருந்த இத்தாலியக் கட்சி செங்கொடியைக் கைவிட்டுவிட்டு, தன்னையும் கலைத்துக் கொண்டுவிட்டது. இக்காலக் கட்டத்தில், பீப்பிள்ஸ் டெமாக்ரசி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை உறுதியுடன் பிரச்சாரம் செய்ததுடன் இந்திய நிலைமைகளின் கீழ் மார்க்சிசம் லெனினிசத்தின் புரட்சிகர சாராம்சத்தைப் பாதுகாத்து  வலுப்படுத்திடவேண்டும் என்றும் கோரியது. இவ்வாறு, பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இந்தியாவில் “துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வு’’ என்னும் மார்க்சிசம்-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலைப் பிரயோகிக்கும் கடமைக்குத் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்து வந்திருக்கிறது.
அளப்பரிய தியாகம்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பதிவாளராக இருக்கும் அதே சமயத்தில் அதன் அதிகாரபூர்வமான செய்தியேடாகவும் செம்மையான முறையில் இருந்து வந்திருக்கிறது, வருகிறது. இந்தியாவில் புரட்சிக்கான ஜனநாயகக் கட்டத்தை நிறைவு செய்வதை நோக்கி வர்க்கப்போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும்,  அதனைத் தொடர்ந்து இந்திய அரசியலின் வளர்ச்சிப் போக்குகளில் அதன் செல்வாக்கும் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகங்களே அடிப்படையாகும்.  சர்வதேச மற்றும் தேசிய அளவிலான வர்க்க எதிரிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலும், வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிரான போராட்டங்களிலும்  ஆயிரக்கணக்கான தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இன்றும் கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறர்கள், இதில் எண்ணற்றோர் தங்கள் உயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள், எண்ணற்றோர் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் இப்போது இது நடந்து கொண்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்த கொந்தளிப்பான  ஆண்டுகளில் மிகவும் உறுதியுடன் வர்க்கத் திரிபுகளுக்கு எதிராகப் போராடியபோதும், மேற்கு வங்கத்தில் அரைப் பாசிச அடக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் அவற்றை எதிர்த்து வெற்றிகரமாக முன்னேறியபோதும், 1970களில் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் அரங்கேற்றப்பட்ட காலத்திலும், கூட்டணி அரசாங்கங்கள் ஆண்ட காலத்தில் இந்திய அரசியலில் மிக வேகமாக மாற்றங்கள் ஏற்பட்ட காலத்திலும், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இப்போதும் அத்தகைய மதவெறி சக்திகளுக்கு எதிராக விடாப்பிடியான போராட்டங்களை நடத்துவதிலும் மற்றும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் - இவ்வாறு அனைத்துச் சவால்களையும் சந்தித்து, எதிர்த்து முறியடித்து, முன்னேறிச் செல்வதில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி முக்கியமான பங்களிப்பினை ஆற்றியது, ஆற்றி வருகிறது.
அவசர நிலைக் காலத்தில் …
அவசரநிலைக் காலத்தில், பீப்பிள்ஸ் டெமாக்ரசி கடும் தணிக்கைக்குப் பலியானது. அந்த 18 மாதங்கள் வெளிவந்த பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் பத்திகளில் காணப்பட்ட வெற்றிடமானது, அவசரநிலையை உறுதியுடன் எதிர்த்துநின்று, நாட்டில் ஜனநாயகத்தை மீளவும் கொண்டுவருவதற்காகப் போராடி வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணியினருக்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற வீராவேசத்தைக் கொடுத்தது. “எங்களின் நிசப்தம் சமயங்களில் கொடுங்கோன்மையான வார்த்தைகளை விட மிகவும் வலுவானதாக இருக்கும்,’’ (`eloquence of silence is at times more powerful than the tyranny of words’) என்று பாரிஸ் கம்யூன் வீழ்ந்தபோது ஒரு புரட்சியாளன் கூறியதைப்போன்று, பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் வெற்றிடம் ஏராளமான விஷயங்களை ஊழியர்கள் மத்தியில் எடுத்துச்சென்றது.
உழைக்கும் மக்களின் குரலாக …
இவ்வாறு, இன்றைய தினம்,  வேறெந்த ஊடகமும் பிரதிநிதித்துவப்படுத்தாத - அது பத்திரிக்கைகளாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி அல்லது இணையதள ஊடகங்களாக இருந்தாலும் சரி அவை  எதுவும் பிரதிநிதித்துவப் படுத்தாத - இந்தியத் தொழிலாளி வர்க்கத்தையும், ஏழை விவசாயிகளையும் மற்றும் அனைத்துவிதமான சுரண்டப்படும் பிரிவினர்களையும் அவர்களது  வர்க்கக் கண்ணோட்டத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஊடகமாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி  தன்னிகரற்ற முறையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியப் புரட்சிகர சக்திகளின் கண்ணோட்டத்தைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.
மிகவும் குறைந்த நிதியுடனும், ஊழியர்களுடனும் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட பீப்பிள்ஸ் டெமாக்ரசி நம்முடைய காலத்திலும் நமக்கு எவ்வளவோ சிரமங்கள் மற்றும் வரம்புகளுக்கிடையே  தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.  நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களும் மற்றும் அதன் எடுபிடி ஊடகங்களின் தத்துவார்த்தத் தாக்குதல்களும் மக்களின், குறிப்பாக இளைஞர்களின்,  சமூக உணர்விலும் செல்வாக்கினை செலுத்திக் கொண்டிருக்கிறது. மதவெறிசக்திகள் வரலாற்றைத் தங்கள் இஷ்டத்திற்குத் திரித்துக் கூறுவதுடன், தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களையும் அதிகரித்துள்ளது.  இந்திய ஆளும் வர்க்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  எடுபிடியாக மாறியுள்ள சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பீப்பிள்ஸ் டெமாக்ரசியும் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக முன்வந்துள்ளன. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இத்தகைய சவால்களை எதிர்த்து முறியடித்திட  கம்யூனிஸ்ட்டுகளின் குரலையும், நாட்டிலுள்ள இதர முற்போக்குப் பிரிவினரின் குரலையும் பிரதிபலிப்பது தொடரும்.  
சிறப்பு இதழ்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி எண்ணற்ற சிறப்பு இதழ்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இவற்றை நம் தோழர்களில் பலர் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தும் வருகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில்  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் முக்கிய ஆண்டுக் கொண்டாட்டங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட முக்கிய பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள், அவசர நிலை அல்லது பாபர் மசூதி இடிப்பு  போன்று மக்கள் விரோத, ஜனநாயக விரோத வெளிப்பாடுகளுக்கு எதிராக மக்களை எச்சரித்தல் ஆகிய பல பிரச்சனைகள் தொடர்பாக எண்ணற்ற சிறப்பு இதழ்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் மறைந்த பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, வி.பி. சிங் போன்ற  நாட்டில் உள்ள தலைசிறந்த அறிஞர் பெருமக்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தொடர்ந்து ஓராண்டு அதுதொடர்பாக சிறப்புக் கட்டுரைகள் - மக்கள் போராட்டங்களின் நாட்குறிப்பு (இந்திய வரலாற்று ஏடுகளில்  வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட பல்வேறு இந்திய சுதந்திரப் போராட்டங்கள், கம்யூனிஸ்ட் விடுதலைபோராட்ட வீரர்களின் பங்களிப்புகள்  இதில் வெளிக் கொண்டுவரப் பட்டன) வெளியிட்டதைச் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.  ஆளும் வர்க்கங்களும் மதவெறி சக்திகளும் `கம்யூனிஸ்ட்டுகள் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள்’ என்று பொய் மூட்டைகள் அவிழ்த்துவிட்டிருப்பதை இக்கட்டுரைகள்  தவிடுபொடியாக்கின.  மேலும் 1857இல் முதல் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர் களுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நடத்திய உன்னதமான போராட்டங்களை இக்கட்டுரைகளில் நினைவுகூர்ந்தோம். இக்கட்டுரைகள் அனைத்தும் நாட்டிலுள்ள முக்கியமான நூலகங்களில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி பதிப்பகத்தால் கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் என்று தனியே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் ஆசிரியர் குழு தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றாமலிருந்திருந்தால் இத்தகைய இமலாயப் பொறுப்புக்களை அதனால் தொடர்ந்து நிறைவேற்றி வந்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, ஆசிரியர் குழுவிற்கு தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாது எண்ணற்ற படைப்பாளிகள் உதவியிருக்காவிட்டாலும் மிகவும் சலிப்பு தட்டுகிற இப்பணியை மிகவும் வெற்றிகரமாக சாத்தியமாக்கி இருக்க முடியாது.
முதல் ஆசிரியர் ஜோதி பாசு
பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதல் ஆசிரியர், தோழர் ஜோதி பாசு. அவரைத் தொடர்ந்து தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, எம். பசவபுன்னையா, சுனில் மைத்ரா மற்றம் இதரர்கள் இதழை வளர்த்துச் செம்மையாக்கினார்கள். ஒவ்வொரு வாரமும் இதழ் அச்சடிப்பதற்காகச் சென்றுவிடும். ஆரம்ப நாட்களில், நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, கட்டுரைகள் அனைத்தும் அச்சுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கே கையால் அச்சுக்கோர்க்கப்பட்டு, சரிபார்ப்புக்காக மீண்டும் தலைவர்களிடம் வரும். அவர்கள் சரிபார்த்து மீளவும் அச்சுக்கோர்க்கப்பட்டு, காலத்தே இதழ் வெளியாகி விடும்.  தோழர்களின் கம்யூனிஸ்ட் அர்ப்பணிப்பின் விளைவாகத்தான்  தொழிலையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்களுக்கு இணையாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழை நம்மால் கொண்டுவர முடிந்தது. தோழர் சென்குப்தா, நம் அச்சகத்தின் முதல் நிர்வாகி, கட்சி மையம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்குப் மாற்றப்பட்ட வந்தபோது, பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதும், காலத்தே இதழை வெளிக்கொண்டுவந்து விடுவார். தோழர் ராம்தாஸ், மத்தியக்குழு உறுப்பினர், கல்கத்தாவிலும் பின்னர் தில்லியிலும் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டார்.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி தில்லிக்கு வந்தபின்னர் தோழர் ராஜனும் அவருடன் இணைந்து கொண்டார். பின்னர், தோழர் சுர்ஜித்தை ஆசிரியராகக் கொண்டு லோக் லஹர் (இந்தி) இதழும் வெளியாகத் தொடங்கி, கட்சியின் சார்பில் இந்தி இதழ் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற சால்கியா பிளீனத்தின் கட்டளையும் நிறைவேற்றப் பட்டது.  தில்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த தோழர் கிட்டி மேனன் ஓய்வுபெற்றபின்னர் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியர் குழுவில் இணைந்து இதழை எவ்வித இடையூறுமின்றி வெளிவருவதை உத்தரவாதப்படுத்தினார். ஆசிரியர் குழுவின் கூட்டுச் செயல்பாட்டின் காரணமாக, இதழின் உள்ளடக்கம் மற்றும் இதழ் காலத்தே வெளிவருவது கடந்த அரை நூற்றாண்டு காலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதழ் எவ்விதத் தளர்ச்சியோ, தடையோயின்றி தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.
விரிவுபடுத்த வேண்டும்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழைத் தொடர்ந்து எவ்விதத் தளர்ச்சியுமின்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அதே சமயத்தில், அதன் உள்ளடக்கம் குறித்தும் நமக்கு விமர்சனம் உண்டு. அதனைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மேலும் பல செய்ய வேண்டிய நிலையிலும் இருக்கிறோம். ஆசிரியர் குழுவை உடனடியாக வலுப்படுத்தியாக வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களாக வெளிவரும் ஊடகங்கள் கட்டவிழ்த்துவிடும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கக்கூடிய விதத்தில் நம் கட்சி ஊழியர்களுக்கு நம் குரலை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டுமானால் இதழை மேலும் விரிவுபடுத்திட வேண்டும்.
போராட்டங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின் நிறுவன ஆசிரியரான ஜோதிபாசு கையெழுத்திட்டு எழுதிய முதல் தலையங்கத்தில் கூறியதாவது: “நாம் நம் கட்சியின் மத்தியக் குழுவின் அதிகாரபூர்வ ஏடாக பீப்பிள்ஸ் டெமாக்ரசியை வெளிக்கொண்டுவருவதில் பெருமை கொள்கிறோம்.’’ தலையங்கத்தில் `நம் குறிக்கோள் மற்றும் கடமைகள்’ என்று தலைப்பிட்டு அதன்கீழ் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நாம் ஒரு முக்கியமான சமுதாயப் பணியை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ... நம் வார இதழ், நம் மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும், அவர்கள் படும் துன்பதுயரங்களையும் அவற்றுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்க வேண்டும். ... பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் மக்களின் உண்மையான நலன்களைப் பிரதிபலித்திட வேண்டும். ... நம் வார இதழ் நமக்கு எதிராக ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் பத்திரிகைகளும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அவதூறுகள் மற்றும் பொய்களுக்கு எதிராக நாம் நம்மைப் பற்றியும் நம் கொள்கைகள் பற்றியும் மக்கள் முன் விளக்கிட வேண்டும்.’’
அரை நூற்றாண்டுக்கு முன் அவர் கூறியவை இன்றைக்கும் பொருத்தம் உடையதாகவே இருக்கின்றன. உண்மையில், இன்றையதினம் அன்றைய தினத்தைவிட மிகவும் பொருத்தம் உடையதாக அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான வளர்ச்சி கார்ப்பரேட்டுகள் ஊடகங்களைத் தங்கள் கைகளுக்குள் போட்டுக்கொண்டு மக்களின் கவனத்தை, தாங்கள் சொல்கிறபடி தலையாட்டக்கூடிய விதத்தில் மாற்றும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தை மிக எளிதாகத் திருப்பிவிட்டுவிடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்றைய தினம் மக்களின் உண்மையான பிரச்சனைகளை அவர்கள் முன்கொண்டுசென்று அவர்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய  முக்கியமான கடமையை பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது. 
சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவோம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டிருப்பதைப் போல புதிய சவால்கள் முன்வந்துள்ளன. (1) நம் மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியுள்ள பொருளாதாரக் கொள்கைகள், (2) நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் மதவெறியை கூர்மைப் படுத்திக்கொண்டிருப்பது,  (3) எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது என்னும் ஒரு புதிய மும்மூர்த்தி, மோடி தலைமையில் இயங்கும் தற்போதைய பாஜக அரசாங்கத்தால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு தீர்மானித்துள்ளபடி, கடமைகளை நிறைவேற்றிட பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் பொறுப்புக்களை மேலும் விரிவாக்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் அணியினரையும் நாட்டு மக்களையும் வலுவான போராட்டங்களை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டிய கடமையை பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆற்ற வேண்டியிருக்கிறது.
தோழர் லெனின், கட்சிப் பத்திரிக்கை என்பது “ஒரு கூட்டுப் பிரச்சாரகன், ஒரு கூட்டு கிளர்ச்சியாளன், ஒரு கூட்டு அமைப்பாளன்’’ என்று சொல்லியிருப்பதற்கு இணங்க, பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் கடமையைத் தன்னால் இயன்ற அளவிற்குச் செவ்வனே செய்து வந்திருக்கிறது. எதிர்காலத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் பொறுப்புகளும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்த்துநின்று முறியடித்து முன்னேறக்கூடிய விதத்தில் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
(தமிழில்: ச.வீரமணி)


  

Friday, November 13, 2009

பெர்லின் சுவர் தகர்ப்பு: நெருக்கடியின் பாதிப்புகளை மறைத்திட கோலாகலக் கொண்டாட்டங்கள்



வெற்றி வீரர்களே எப்போதும் வரலாற்றை எழுதுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் மிகவும் தாமதமாகத்தான் போராட்டங்களின்போது அவற்றில் சிக்கிக்கொண்ட மக்களின் துன்ப துயரங்கள் பற்றி ஆவணப்படுத்துகிறார்கள். இது பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இப்போதும் நன்கு புலப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெர்லின் இரண்டாகப் பிரிவதற்கான உண்மையான வரலாற்றை இருட்டடிப்புச் செய்திடுவதற்காக, இத்தகைய ஆரவார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பாசிசம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வண்ணம் ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கட்டிடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் ஏற்றப்படவில்லை.

யுத்தம் முடிவுற்றபின்னர், பெர்லின் நகரை நான்கு நேச நாடுகளும் (யடடநைன யீடிறநசள) கூட்டாக நிர்வகிக்கத் தீர்மானித்தன. கிழக்கு பெர்லின் சோவியத் செம்படையின் நிர்வாகத்தின்கீழ் இருந்த அதேசமயத்தில், மேற்கு பெர்லின் நகரானது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பெர்லினை கூட்டாக நிர்வகித்திடலாம் என்று சோவியத் யூனியன் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்துவிட்டன. ஏனெனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சோசலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லின் நகரையே முழுமையாக ஈர்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். பல ஆண்டுகள் பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேற்கு பெர்லின் தனியே தனித்துவத்துடன் இருந்து வந்தது. இப்பகுதியை மேற்கத்திய ஆட்சியாளர்கள் சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான பனிப்போரின் நீரூற்றாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சோசலிசத்தின் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கை சீர்குலைத்திட அவை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து, 1961 ஆகஸ்ட்டில்தான், வார்சா ஒப்பந்த நாடுகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெர்லின் சுவரை எழுப்பிடத் தீர்மானித்தன. ஆனால் பெர்லின் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்படுவதற்கு சோசலிசமும் சோவியத் யூனியனும்தான் காரணம் என்கிற முறையில் இப்போது வரலாறு திரிக்கப்பட்டு கூறப்படுகிறது.

நிச்சயமாக எதிர்காலத்தில் உண்மை வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்வார்கள். ஆயினும், ஏகாதிபத்தியத்திற்குத் தன்னுடைய பங்குச்சந்தை (றுயடட ளுவசநநவ) நிலைகுலைந்து வீழ்ந்தகொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், இவ்வாறு பெர்லின் சுவர் தொடர்பாக வரலாற்றைத் திரித்துக்கூற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது எந்தவிதமான வெளியார் தாக்குதலாலும் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்ளீடான மாற்றங்களே ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தில் இத்தகைய நெருக்கடியைக் கொண்டுவந்திருக்கின்றன. இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் குணம் குறித்த இப்பகுதியில் ஏற்கனவே நாம் பல முறை ஆய்வு செய்திருக்கிறோம். எனவே இப்போது அதனை மீண்டும் கூறவேண்டிய தேவையில்லை.

உலகில் உள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, தங்களுடைய வாழ்வில் மிகக் கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்திட்ட ஏகாதிபத்திய பங்குச்சந்தைதான் (wall street) நிலைகுலைந்துள்ளது. இந்த ஆண்டு, தற்போதைய உலக முதலாளித்துவ மந்தம் தொடங்கியதிலிருந்து, உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சியடைந்திருப்பது மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதன்முறையாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசிக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டு, ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள். பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 102 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பசியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மட்டும், பசியால் வாடும் பட்டியலில் 10 கோடியே 30 லட்சம் மக்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து தன்னை மீண்டும் எழுந்து நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஒரு தூண்டுகோலாகவே பெர்லின் சுவர் தகர்வு தொடர்பான கோலாகலக் கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இப்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்கு எந்த கார்பரேட் நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ அவற்றுக்கே மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான டாலர்கள் உதவிகளை அளிப்பதன் மூலம், அவற்றின் இருப்பு நிலைக் குறிப்பையும், லாபத்தையும் நல்லமுறையில் வைத்திட முன்வந்திருக்கிறது. ஆனால் இந்நெருக்கடியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. முதலாளித்துவத்தின் வர்க்கக் குணத்தைத் தெரிந்து கொண்டுள்ளவர்களுக்கு இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனம் (OECD) வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி இந்தக் காலகட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் இணைந் திருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலையில்லாதோரின் விகிதம் அதிகாரபூர்வ அறிக்கையின்படியே இரண்டு இலக்கத்தை - அதாவது 10.2 சதவீதத்தை - தொட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் இதனை 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அமெரிக்காவில் வறுமை விகிதம் 13.2 சதவீதமாகும். இதன்பொருள் சுமார் 4 கோடி மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அதேசமயம் மறுபக்கத்தில், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட அதீதமான நிதி உதவியின் காரணமாக, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மார்கன் சேஸ் என்னும் இரு பெரிய வங்கிகள் அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதாகப் பிரகடனம் செய்து, தன் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கான டாலர் போனஸ் அளித்து அதனைக் கொண்டாடி யிருக்கிறது. முதலாளித்துவம் எப்படி இயங்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும். ‘மக்கள் எக்கேடுகெட்டால் என்ன எனக்கு வேண்டியது லாபம்’ என்பதே அதன் குறிக்கோளாகும்.

எனவே, பெர்லின் சுவர் தகர்வை கோலாகலமாகக் கொண்டாட ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் உலகம் முழுதுமுள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட முடியாது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டக்கூடிய வகையில் வெகுஜன இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, October 25, 2009

இந்துத்வா சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களை முறியடிப்போம்




இந்துத்துவா சக்திகள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய கோரமான முகத்தினை உயர்த்தியுள்ளன. கோவாவில் மட்கானில் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியதாக, சனாதனா சன்ஸ்தா என்னும் அமைப்பானது ஒப்புக் கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் தேர்தலுக்கு முன்னதாக சங்லி மற்றும் கோலாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்களிலும் இந்த அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணபிரகாஷ், ‘‘சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கலவரங்களின்போது இந்துக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும், வாள்கள், சங்கிலிகள் ஆகியவற்றை ஒரு காரில் சனாதன சன்ஸ்தா அமைப்பினர் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்றும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன’’ என்று கூறியிருக்கிறார் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்). உண்மையில், மகாராஷ்ட்ரா, பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ATS - Anti Terrorism Squad)வும், வீரமரணம் எய்திய அதன் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரேயும், மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, 2008 ஜூன் மாதத்திலேயே சனாதன சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்திட வேண்டும் என்று கேட்டிருந்தார். பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தற்போதைய தலைவரும் கூட, இந்த அமைப்பினைத் தடை செய்திடுமாறு ஒரு முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டதென்றும், ஆனால் அதன் தற்போதைய நிலைமை என்ன வென்று தனக்குத் தெரியாதென்றும் கூறியிருக்கிறார்.

சனாதன சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேரை பயங்கரவாத எதிர்ப்புக் குழு கைது செய்திருப்பதன் பின்னணியில் இவ்வாறு பரிந்துரைகள் அனுப்பப் பட்டிருக்கின்றன. 2008 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற மலேகான் வெடிகுண்டு தாக்குதலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டியோலாலி மற்றும் நாசிக் நகர்களில் சதியாலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மேலும், மலேகான் வெடிகுண்டு விபத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவாடே, 2003 ஜூனில் சின்கார் கோட்டை அருகே பஜ்ரங்தளத்தினருக்காக ஒரு பயிற்சி முகாமையே நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சில அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம்.
‘‘நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் வேறு பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதாக, காவல்துறையின் புலனாய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில்ல பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல், 2006இல் நாண்டட் தாக்குதல், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கான்பூரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் போன்ற இவை அத்தனையிலும் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழான ஏதேனும் ஒரு துணை அமைப்பு ஈடுபட்டிருந்தது ,’’ என்று 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதன்பின்னர், 2008 செப்டம்பர் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள எண்ணற்றவர்களைச் சுற்றிவளைத்து, விசாரணை செய்து, நாசிக், போன்சாலா ராணுவப் பள்ளியைச் சேர்ந்த கமாண்டண்ட் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் உட்பட பலரைக் கைது செய்தது.

இந்துக்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பதென்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ‘‘இந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டு அனைவரையும் முழு இந்துக்களாக்க வேண்டும்’’ என்பதே சாவர்கர் வைத்த கோஷம். இதனால் உத்வேகம் அடைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஹெக்டேவார் அவர்களின் குருவான டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். சந்திப்பு 1931 மார்ச் 31 அன்று நடைபெற்றது. அவர் மார்ச் 20 அன்று தன் சொந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகங்களிலிருந்து, இத்தாலிய பாசிசம் எங்ஙனம் தன் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது என்று மிகவும் வியந்து, பாராட்டி, எழுதியிருக்கிறார். பின்னர் அவர் இந்தியா திரும்பியபின், 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகம் (Central Hindu Military Education Society) என்னும் அமைப்பினை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும். கோல்வால்கர், 1939இல், ஹிட்லர் யூதர்களைப் பூண்டோடு துடைத்தழித்திட நாசி பாசிசம் குறித்து குதூகலம் அடைந்து, ‘‘இந்துஸ்தானில் இருக்கிற நமக்கெல்லாம் இது நல்லதொரு பாடம் என்றும், இதனை நன்கு கற்று, ஆதாயம் அடைய வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வினை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொடுக்குகளான விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் ‘‘கர சேவகர்களுக்கு’’ப் பயிற்சி அளித்தது குறித்து பெருமைப்பட்டதைப் பார்த்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் முதல்வராக இருந்தவர், ‘‘பாபர் மசூதியை, தொழில்ரீதியான ஒப்பந்தக்காரர்களைவிட மிகவும் வேகமாகவும், திறமையாகவும் தகர்த்திட்ட கரசேவகர்களின் செயல் குறித்து மிகவும் பெருமைப்படுவதாக’’, வெளிப்படையாகவே கூறினார்.

இந்தப் பின்னணியில்தான், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் ‘‘இந்து தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்கிற சொற்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று கூறியிருப்பதானது, மிகவும் மர்மமாக இருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் குறித்து, எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடைய மத அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. இந்த உண்மை எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒன்று என்று சொல்லக்கூடாதா? ஆம், சொல்லக்கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடாகும். 2008 அக்டோபர் 17 - 19 தேதிகளில் நடைபெற்ற அதனுடைய ‘அகில பாரதீய கார்யகாரிணி மண்டலி பைதக்’ கூட்டத்தில் ‘‘இஸ்லாமிக் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு இரட்டை நிலை எடுத்ததோடு மட்டுமல்லாது, மகாராஷ்ட்ராவிலும் மற்றும் பல பகுதிகளிலும் காவல்துறையினரும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினரும் மேற்கொண்ட ‘‘வெற்றிகரமான நடவடிக்கைகள்’’ குறித்து வெகுவாகப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவர்கள் பாராட்டிய அதே பயங்கரவாத எதிர்ப்புக் குழுவானது, இப்போது இந்துத்வா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் செய்வதறியாது மிகவும் திகைத்து நிற்கிறது. கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக நடைபெறும் புலனாய்வு விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டத்தின் ஆட்சி தன் கடமையைச் செய்திட வேண்டும்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம்புரிந்த கயவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள், நாம் இப்பகுதியில் அடிக்கடி கூறிவந்ததைப்போல் இரு விஷயங்களை உறுதிப்படுத்தகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் தேச விரோதத்தன்மை கொண்டவை என்பதால் அவை தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதற்குமில்லை. இரண்டாவதாக, அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, வலுப்படுத்திடும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. இவை தங்களுடைய செயல்பாடுகளினால் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையுமே அழிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளைத் தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமான சித்தாந்த நடைமுறைகளாகும். மதவெறி அல்லது பிராந்திய வெறி மூலம் மக்களை உசுப்பிவிடுவதன் மூலமாகப் பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்திடலாம் என்று கருதுவது இந்தியாவின் பன்முகப்பட்ட சமூகக் கலாச்சாரத் தன்மையைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிடும். நாட்டின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்து, வலுப்படுத்திட வேண்டுமானால், இத்தகைய பயங்கரவாத அரசியல்கள் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, May 22, 2009

கட்சி சரியானமுறையில் படிப்பினைகளைப் பெற்று முன்னேறும்



நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அரசை அமைப்பதற்காக, மக்களவைக்குப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 274 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து அரசு அமைக்க உரிமைகோரியிருக்கிறது. கூடுதலாக, அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக ஓர் 48 உறுப்பினர்களின் பட்டியலும் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டிருக்கிறது. ஒரே அணியில் இருக்காது என்று பலரால் கருதப்பட்ட பல கட்சிகள் இதிலே அடக்கம். உத்தரப்பிரதேசத்தில் எலியும் பூனையுமாகக் காணப்படும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கடிதங்கள் தந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன், தங்கள் கட்சி காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியில்தான் அங்கம் வகிக்கும் என்று கூறிய பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியை மாபெரும் மக்கள் பேரணி நடத்தி அறிவித்திட்ட மதச்சார்பற்ற ஜனதா தளமும், இப்போது ஐமுகூட்டணியை ஆதரித்திடத் தீர்மானித்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னமேயே, ஆந்திராவில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத முன்னணியில் அங்கம் வகித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போய் சேர்ந்து கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 2009 மே 19 அன்று கூடி விவாதங்களுக்குப்பின் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘‘தேர்தல் சமயத்தில் சில மாநிலங்களில் அமைக்கப்பட்ட மூன்றாவது அணிக்கான கூட்டணிகள் மக்களால் ஒரு நம்பத்தகுந்த (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக தேசிய அளவில் பார்க்கப்படவில்லை’’ என்று மதிப்பீடு செய்திருந்ததை மேலே கூறிய நிகழ்ச்சிப்போக்குகள், உறுதிப்படுத்துகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து நடைபெற்ற தன்னுடைய அகில இந்திய மாநாடுகளின் அரசியல் தீர்மானங்களில், ‘நாட்டின் கொள்கைகளை முற்போக்கான திசைவழியில் தீர்மானிக்கக்கூடிய விதத்தில்’ ஒரு மூன்றாவது அரசியல் மாற்றை உருவாக்க வேண்டியதன் தேவையை தெளிவுபடத் தெரிவித்து வந்திருக்கிறது. அத்தகைய மாற்றானது, தேர்தல் சமயங்களில், வெட்டி ஒட்டக்கூடிய ஏற்பாடாக இருந்திட முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான மூன்றாவது மாற்று என்பது தொடர்ச்சியான மக்கள் போராட்டங் களினூடேதான் உ ருவாகிட முடியும். இதற்கு வேறெந்தக் குறுக்கு வழியும் கிடையாது.

ஆயினும், இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மிக மோசமான வீழ்ச்சியாகும். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின், இந்திய கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குப்பின், நடைபெற்ற முதல் தேர்தலிலேயே, கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்திருந்தன. இப்போது நடைபெற்றுள்ள தேர்தலில் நமக்கு வெறும் 16 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து வெறும் 24 இடங்களைத் தான் பெற்றிருக்கின்றன. இவ்வாறான படுவீழ்ச்சி குறித்து சுய விமர்சன ரீதியாக மறு ஆய்வு செய்யப்பட்டாக வேண்டும். தவறுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முறையான படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். இடதுசாரிகளிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்கள்திரளினை மீண்டும் வென்றெடுத்திட, அவர்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் மீண்டும் பெற்றிட, எதிர்காலத்தில் நம்முடைய செல்வாக்கை ஒருமுகப்படுத்தி விரிவுபடுத்திட, இது அத்தியாவசியமாகும். இந்த நடைமுறை தொடங்கிவிட்டது.

இத்தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு எதிராக அனைத்து கம்யூனிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுசேர்ந்து நின்றதைப் பார்த்தோம். மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்ற சமயத்தில் அவற்றை மிகவும் விரிவாக நாம் இப்பகுதியில் விவரித்திருக்கிறோம். அத்தகைய மகா கூட்டணியானது தங்கள் வசம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் இடதுசாரிகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக, வீசியது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப்பின்பும் நடைபெற்ற மோதல்களில் 31 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, இப்போது ஏற்பட்டிருப்பதுபோல இதற்கு முன்பும் பலமுறை கம்யூனிச எதிர்ப்புக் கும்பல்கள் உருவாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘சீன ஆதரவாளர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நாடு முழுதும் அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நம் தலைவர்களில் பலர் சிறையிலிருந்தே தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். 1967இலும் 1969இலும் மேற்கு வங்கத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டபின்னர், சுமார் பத்தாண்டு காலம் காங்கிரஸ் மேற்கு வங்க மக்கள் மீது அரைப் பாசிச அடக்குமுறையை ஏவி, ஆயிரக்கணக்கான நம் தோழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டுதான், நாட்டிலேயே மாபெரும் இடதுசாரி சக்தியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு மீண்டெழுந்தது. இதனை நாட்டின் அரசியல் வரலாற்றில் எவரும் உதாசீனப் படுத்திடவோ அல்லது ஓரங் கட்டிடவோ முடியாது. (கடந்த இருபதாண்டுகளில், 1989இல் வி.பி. சிங் அரசாங்கம் அமைந்ததிலிருந்து, மத்தியில் எந்த ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் அமைந்தது கிடையாது.) எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் அதேபோன்று நேர்மையான முறையில் சுயவிமர்சன ரீதியாக மறுபரிசீனை மேற்கொண்டு, சரியான படிப்பினைகளை நாம் பெற்றிட வேண்டும்.

இத்தலையங்கம் நம் வாசகர்களை அடையும் நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சியை நடத்திடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும். 2004இல் இதேபோன்றதொரு சமயத்தில், அப்போது அமைய இருந்த அன்றைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் கூறித்து, மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தன. அவ்வாறு அமைந்திட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்தான், ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவினை நல்கின. ஆனால் இந்த சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து எவரும் வாய்திறக்கவே இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், இடதுசாரிகள் ஆதரவு அவசியமற்ற நிலையில் காங்கிரசும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளும் இடதுசாரிகள் வலியுறுத்தும் மக்கள்நலஞ்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘காங்கிரஸ் கட்சி இந்த அளவிற்கு நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு, இடதுசாரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தை அடுத்து ஐமுகூ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு வன உரிமைகள் சட்டம் மற்றும் சில சமூக நலத் திட்டங்கள் காரணங்களாகும்.’’ ஆனால் அத்தகைய திட்டங்கள் குறித்து இப்போது அது கவலைப்படாமலிப்பது என்னே வேடிக்கை வினோதம்!

இத்தகைய மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைள் எதுவும் வகுக்கப்படாதிருப்பதுதான் எதிர்காலத்தில் இடதுசாரிகளின் பங்கினை வரையறுத்திட இருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகவும், மிகவும் கடுமையான முறையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருப்பதன் விளைவாகவும், மக்கள் மீது சொல்லொணா அளவிற்குப் பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, ஆட்சியாளர்களை மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளை வகுத்திட, நிர்ப்பந்திக்கக்கூடிய வகையில் மாபெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருக்கும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அத்தகு போராட்டங்ளை வலுப்படுத்தும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னிற்கும் அதே சமயத்தில் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாத்து வலுப்படுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, May 2, 2009

மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக நச்சுப் பிரச்சாரம் - மக்கள் சரியாகப் பதிலடி கொடுப்பார்கள்



ரு கால் நூற்றாண்டுக்கு முன்பு, ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராக இருந்த சமயத்தில், ‘‘கல்கத்தா ஓர் இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழார்ந்த முறையில் விமர்சனம் செய்தார். இவ்வாறு இவர்களது அவதூறுப் பிரச்சாரம் அனைத்தையும் மீறித்தான், மேற்கு வங்கம் நவீன இந்தியாவை சிருஷ்டிப்பதற்கு மகத்தான அளவில் தன் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயங்களில் எல்லாம், இவர்களின் துர்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இன்று, அவரது புதல்வரும், காங்கிரசின் பொதுச் செயலாளருமாகிய ராகுல் காந்தி, தன் தந்தையின் குரலையே எதிரொலிக்கிறார். ‘‘இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் அரசாங்கம், ஏழைகளை மறந்துவிட்டது. மேலும், மாநிலத்தை முன்னேற்றிச் செல்வதற்குப் பதிலாக, கடந்த முப்பதாண்டுகளில், குறைந்தபட்சம் முப்பதாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது,’’ என்று பேசியுள்ளார். மேலும், வங்கத்தில் உள்ள வறுமையின் அளவை, ஒரிசா மாநிலம் காலஹண்டி, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டிருக்கிறார். தரையில் உறுதியாகத் தடம் பதிக்காது, வானத்தில் மகிழ்ச்சியுடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பவர் களிடமிருந்து இத்தகைய அபத்தமான பேத்தல்கள்தான் வரும். அவர் பேசிய இடமான புருலியாவின் நிலைமையே, ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்ளில் அவர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்ல, காங்கிரசின் தலைரும் பொதுச் செயலாளரும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரேபரேலி மற்றும் அமெதி தொகுதிகளில் உள்ள நிலைமைகளுக்கும் மேம்பட்டதாகும்.

காங்கிரசின் தலைவரான சோனியா காந்தியும், மேற்கு வங்கத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதிகள், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், திருப்பி விடப்படுவதாகவும் மிகவும் இழிவான முறையில் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கமானது நிலை எடுத்ததனை அடுத்து, அதற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட பின்னர், மன்மோகன் சிங் அரசாங்கமானது, நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்திய கத்தை கத்தையான கரன்சி நோட்டுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் காட்டப்படும் அளவிற்கு, மிகவும் மட்டமான அரசியல் ஒழுக்கக்கேட்டிற்கு ஆளான ஒரு கட்சியின் தலைவரிடமிருந்து, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வருவது, வேடிக்கை விநோதம்தான்.

மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கமானது, தனக்கு அளித்திட்ட தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு பொதுவான பல்லவி பாடப்படுகிறது. தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகள் பிரதானமாக வறண்ட மற்றும் பாதி வறண்ட நிலப்பகுதிகளுக்கானது என்றும், எனவே அதிக அளவில் மழை பெய்யும் வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது என்றும் மேற்கு வங்க இடது முன்னணி அரசு மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் வேலைக்காக நியமிக்கப்படும் மக்களை மத்திய அரசின் வேறு பல திட்டப்பணிகளிலும் இணைத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. எனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான பணிகள் செம்மையாக நடைபெறாததற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இடது முன்னணி அரசாங்கமானது ‘‘லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு’’ ‘வேலை அட்டைகள்’ (‘job cards’) கொடுக்கவில்லை என்று காங்கிரசின் தலைவர்களால் இவ்வாறு அர்த்தமற்ற முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட போதிலும், மேற்கு வங்க அரசாங்மானது தகுதியுள்ள ஏழை மக்களில் 95 லட்சம் வேலை அட்டைகள் இப்போது கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும். நாடு முழுவதுமே மொத்தம் 4 கோடி வேலை அட்டைகள்தான் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் வெறும் 8 சதவீதத்தினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள மேற்கு வங்கம், நாட்டில் விநியோகிக்கப்பட்ட மொத்த வேலை அட்டைகளில் 25 சதவீதத்தை விநியோகித் திருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் இடது முன்னணிக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறு குறித்தும் ஆராய்வோம். சென்ற ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட 1993க்கும் 2003க்கும் இடையிலான பத்தாண்டு காலத்தில் - அதாவது நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்பட்ட காலத்தில் - மாநில உள்நாட்டு உற்பத்தி (state domestic product)யில் மேற்கு வங்க மாநிலத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.10 சதவீதமாகும். இந்த அளவானது நாட்டின் பதினாறு பெரிய மாநிலங்களுக்கிடையே உயர்ந்தபட்ச அளவாகும். இது, மகாராஷ்ட்ராவில் 4.74 சதவீதம், குஜராத்தில் 5.87 சதவீதம், கர்நாடகாவில் 6.27 சதவீதம், ஆந்திராவில் 5.27 சதவீதம், தமிழ்நட்டில் 5.24 சதவீதம் என்பதுடன் ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தின் உயர் சதவீதத்தின் அருமை நன்கு புரியும். இந்த ஆய்வானது, மத்திய அரசின் கொள்கை மாற்றுக்கான மையம் வெளியிட்ட ஒன்றாகும். இம்மையமானது மத்திய புள்ளியியல் அமைப்பு, பொருளாதார சர்வே மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் அடிப்படையில் இதனைத் தயாரித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தயாரித்திட்ட ஆய்வுகளும் மேற்படி ஆய்வுக்கு ஒத்துப்போகின்றன.
ஒவ்வொருவருக்குமான தனிநபர் வருமானம் (per capita income) என்று எடுத்துக் கொண்டோமானால், தேசிய சராசரி 4.01 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் அதே சமயத்தில் மேற்கு வங்கமானது 5.51 சதவீத அளவிற்கு சராசரி வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களை விட மக்கள் தொகைப் பெருக்கம், 1.64 சதவீதம் அதிகரித்திட்ட போதிலும், இந்த வளர்ச்சியை மேற்கு வங்கம் பெற்றிருக்கிறது. வங்கதேசத்திலிருந்து மட்டுமல்ல நேபாளத்திலிருந்தும் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், பீகார் மற்றும் ஒரிசா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் இவ்வாறு மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணங்களாக உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு எண்ணற்ற இடர்ப்பாடுகள் இல்லாம லிருந்திருந்தால், மேற்கு வங்கத்தில் தனிநபர் வருமானம் இப்போதிருப்பதை விட மேலும் அதிகமான அளவில் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேற்கு வங்க வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான். பொதுவாக, நிலச்சீர்திருத்தங்கள் என்பது மனிதாபிமான அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத மக்களுக்கு இது ஒரு முக்கியமான வாழ்வாதாரமாகும். சரியான முறையில் நில விநியோகம் செய்யப்பட்டால் அது உற்பத்தித் திறனையும் (நிலம் மற்றும் உழைப்பு ஆகிய இரண்டின் உற்பத்தித் திறனையுமே) அதிகரித்திடும். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும். இவ்வாறாக, வேளாண்மைத் துறையில் ‘உள்ளீடான வளர்ச்சி’ (‘inclusive growth’), விவசாய உற்பத்தித் திறன் வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகிய மூன்றையுமே இன்று மேற்கு வங்கத்தில் நன்கு பார்க்க முடியும்.

சுமார் 13 லட்சம் ஏக்கர நிலம் இடது முன்னணி அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இதன் விளைவாக சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் - மிகவும் குறைச்சலாக - பத்து லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வாறு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரும். இந் அளவிற்கான வள ஆதாரம் பணக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மேற்கு வங்கத்தில் அபரிமிதமான அளவில் செல்வவளம் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதுதான், வேகமான கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். மேலும் கூடுதலாக, சுமார் 20 லட்சம் குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பொருள், அவர்களை நிலப்பிரபுக்கள் நிலத்திலிருந்து வெளியேற்றிட முடியாது என்பதாகும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நிலத்தில் உழுவதற்கானப் பாரம்பர்ய உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து, மாநிலத்தில் சுமார் 50 லட்சம் விவசாயிகளின் அல்லது சுமார் இரண்டரை அல்லது 3 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறது.

நாட்டில் மிகவும் நெருக்கமான முறையில் விவசாயப் பணிகள் நடைபெறும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆயினும், விவசாய நிலத்தில் 28.1 சதவீத அளவற்கே நீர்ப்பாசன வசதி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் இது 89.72 சதவீதமாகும். மத்தியஅரசு, பக்ராநங்கல் அணை கட்டிக் கொடுத்திருப்பதன் காரணமாக அங்கே அது சாத்தியமாகியிருக்கிறது. ஆளால் அதுபோன்ற திட்டங்களை மேற்கு வங்கத்தில் நிறைவேற்றிட மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆயினும் கூட, நாட்டில் விளையும் உணவு தான்ய உற்பத்தியில் உயர்ந்த அளவிற்கு சராசரி விளைச்சல் காணும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. (பஞ்சாப், உத்தரப்பிரதேசம் முதல் இரு மாநிலங்களாகும்.) இன்றைய தினம் நாட்டிலேயே அரிசி உற்பத்தியில் மாபெரும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. 1980களில் நாட்டின் சராசரி உற்பத்தி அளவைவிட மேற்கு வங்கம் 18 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் தேசிய சராசரியை விட 10 சதவீதம் அதிகரித்து முன்னணியில் நிற்கிறது.

இவ்வாறான யதார்த்த உண்மைகள்தான், மேற்கு வங்க மக்கள், கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணி மீது அபரிமிதமான அன்பும் ஆதரவும் வைத்திருப்பதற்குக் காரணிகளாகும். அதனால்தான், காங்கிரசும் அதன் புதிய கூட்டாளியான திரிணாமுல் காங்கிரசும், இடது முன்னணியின் ‘அடாவடி ஆட்சி’ மேற்கு வங்கத்தில் நடைபெறுவதாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் அது கிஞ்சிற்றும் எடுபடவில்லை. எந்த ஒரு ஜனநாயகத்திலும், மக்கள், தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முன்வந்த அரசியல் கட்சிகளைத்தான் தேர்வு செய்திடுவார்கள். இந்த அணுகுமுறைப்படி பார்த்தோமானால், மேற்கு வங்கத்தில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட்ட இடது முன்னணி மீது அபரிமிதமான நம்பிக்கையை மக்கள் தொடர்வதில் ஆச்சர்யம் எதுவுமில்லை,

கடந்த காலங்களில் இடது முன்னணியானது, ‘விஞ்ஞானரீதியான தேர்தல் மோசடி மூலம்’ (‘scientific wrigging’) தேர்தலில் வெற்றி பெறுகிறதென்று அடிக்கடி எதிரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை நம்பி, தேர்தல் ஆணையம் கூட, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் 2006இல் நடைபெற்ற சமயத்தில், அம்மாநிலத்தில் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்திடவும், தேர்தலை நடத்திடுவதற்காகப் பாதுகாப்புப் படையினரையும் தேர்தல் பணியாளர்களையும் வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ததையும் பார்த்தோம். (மேற்கு வங்க அரசு ஊழியர்கள் அனைவருமே மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்) தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் நாம் அந்த சமயத்தில், ‘‘வாக்காளர்களை மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யாதவரை, இடது முன்னணியைத் தோற்கடிக்க எவராலும் முடியாது’’ என்று பிரகடனம் செய்தோம். தேர்தலில் மக்கள் இடது முன்னணிககு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினை அளித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.

இவ்வாறாக, வங்கத்தில் கடந்த முப்பதாண்டுகளாக இடது முன்னணியின் ‘அடாவடி’ ஆட்சி நடைபெறுகிறது என்று எதிரிகள் கூறுவதன் மூலம் அவர்கள் இடதுமுன்னணியைத் தேர்ந்தெடுக்கும் மக்களை அவமதிக்கிறார்கள். ஆயினும் மேற்கு வங்க மக்கள், தங்கள் சொந்த அனுபவத்தின் காரணமாக, கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணிக்கு அன்பும் ஆதரவும் அளித்து வந்ததைப்போலவே இப்போதும் ஆதரவினை நல்கி, எதிரிகளின் நச்சுப்பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி அளிப்பார்கள் என்பது திண்ணம்.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, April 26, 2009

பாஜகவின் நயவஞ்சக நாடகம்!




பாஜக தன்னுடைய ‘‘தொலை நோக்குக் கொள்கைகளை’’ தவணை முறையில் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, கட னைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துதல்போல் தங்கள் கொள்கை களையும் மாற்றி அமைத்துக் கொண்டி ருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத் தை அடுத்து அதனை எதிர்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்துச் சரி யான பார்வை தங்களுக்கு இல்லாதது இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அல்லது, மக்களுக்கு தாங்கள் முன்பு அளித்த உறுதிமொழிகளிலிருந்து முரண் படுவதற்கும் மாற்றிச் சொல்வதற்கும் இது வசதியாக இருக்கும் என்று கருது வதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இப்போது வெளிவந்துள்ள பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது ஏராள மான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந் தாலும், இதற்குமுன் அவர்கள் அளித் திட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இரு அம் சங்கள் குறித்து நாம் எதுவும் சொல்லா மல் இருக்கமுடியாது. முதலாவதாக, 1998க்கும் 2004க்கும் இடையில் அவர் கள் அரசாங்கத்தை நடத்திய காலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அவர்களுக்கிருந்த அணுகு முறை இதில் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகச் செய் வதற்கென்று ஓர் அமைச்சகத்தையே (ஆinளைவசல கடிச னளைinஎநளவஅநவே) உருவாக்கி இருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை எல்லாம் நினைவுகூருங்கள். 2004இல் ஐமுகூ ஆட்சிக்கு வந்த சமயத்தில் இடதுசாரிகளிடமிருந்து வந்த நிர்ப்பந் தத்தின் காரணமாக, ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே, அந்தத் துறையை ஒழித்துக் கட்டியது தான்.

இப்போது பாஜக வெளியிட்டிருக்கும் தொலைநோக்கு ஆவணத்தில், அவர்கள் கூறுவது என்ன? ‘‘ கடந்த பல ஆண்டு களாக நன்கு கட்டி வளர்க்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறையானது நம் நாட் டின் பெருமைமிகு சிறப்பம்சமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கம் பொதுத்துறையை வலுப்படுத்தும், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனைப் பயன் படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இதில் தனியார் துறையும் பங்கெ டுத்துக் கொள்வதற்கான வகையில் தனியார் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் முழு மையாக அளிக்கப்படும். அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) அடிப்படையில், அரசாங்கத்தின் துறைகளை வளர்த்திட, அரசாங்கம் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.” இது எப்படி இருக்கிறது? நாம் முன்பே சொன்னதுமாதிரி, பாஜக தங்களுடைய முந்தைய நிலைபாட்டிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறையைச் சார்ந்திருக்கும் வாக்காளர்களை முழுமையாக ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கும் முயற்சி என்பதைத் தவிர இது வேறொன்றுமில்லை.

இவர்கள் கூறுவதில் உள்ள இன் னொரு முக்கிய அம்சம், அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு என்பதாகும். காங் கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களுமே இதனைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆயினும், கடந்த காலங்களில் நமக்கு ஏற் பட்டுள்ள அனுபவம் என்ன? விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு முறையில்தான், ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர், தாங்கள் போட்ட கணக்கு அனைத்தும் தப்புக்கணக்காய் மாறிப்போனதாலும், உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, விமானப் போக்கு வரத்தில் பயணிகள் வரவு மிகவும் குறைந்துபோனதாலும், அவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்தனர். விளைவு, அத னை விமானப் பயணிகள் தலையில் கட்ட அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கி றது. பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அநியாயமான அளவிற்கு லெவி ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. இதுதான் அர சாங்கம் - தனியார் ஒத்துழைப்பில் உள்ள சூட்சுமம். அதே சமயத்தில் அரசாங்கம் நடத்திடும் விமான நிலையங்கள் நிலை மை என்ன? அவை நட்டத்தில் இயங்கி னாலும் கூட அதன் சுமையை பயணிகள் தலையில் கட்ட அனுமதிக்கப்படுவதில் லை. இவ்வாறு, பாஜக-வின் தொலை நோக்குப் பார்வையானது, மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதற்கான ஒன்று என்பது தெளிவு.

இவ்வாறு நேரத்திற்கு ஏற்றாற்போல, பேசுவதென்பது பாஜகவின் நடைமுறை என்பது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தங்கள் நிலைபாட்டை அவர்கள் முற்றிலுமாக மாற்றிக் கொண்டி ருப்பதிலிருந்து தெளிவாகிறது. 2007 நவம்பர் 28 அன்று, மக்களவையில் இந் திய - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அத்வானி கூறியதாவது:

“123 ஒப்பந்தமானது, தற்போதுள்ள நிலையில், நாட்டிற்கு உகந்ததல்ல, ஏற்றுக்கொள்ளத் தக்கதுமல்ல. ஏனெ னில் இது இந்தியாவின் கேந்திரமான மற் றும் நீண்டகால நலன்களுக்கு விரோத மானது. மீண்டும் தேஜகூ ஆட்சிக்கு வந் தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். இதில் உள்ள நாட்டின் நலன்களுக்கு விரோத மான அம்சங்கள் அனைத்தும் நீக்கப் படும், அல்லது இந்த ஒப்பந்தமே முழு மையாக ரத்து செய்யப்படும்.’’

ஆனால், இப்போது அவர் என்ன கூறுகிறார்? “அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டதாகும். அயல்நாடுகளுடன் முந்தைய அரசாங் கங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங் களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந் துவிட முடியாது.” ஒப்பந்தத்தை “முழு மையாக” ரத்து செய்வதிருக்கட்டும், இதனை “மறுபரிசீலனைக்கு” உட்படுத் தக்கூட இவர்கள் தயாராயில்லை. அதே போன்று, “மறுபரிசீலனை” என்கிற வார்த் தை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்திலும் காணப்படவில்லை.

இவ்வாறாக, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, தங் களுடைய அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டை மூடிமறைத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக நாட்டை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது தெளிவு. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், பாஜக தலைமையிலிருந்த தேஜகூட்டணி அரசாங்கம்தான், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா ராணுவரீதியான கூட்டணியை ஏற்படுத் திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஒன்றாகும். இவர்கள் ஆட்சி யிலிருந்த காலத்தில்தான் இஸ்ரேலுட னான உறவுகள் மேலும் வலுப்பட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவரு டியாக, தேஜகூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமும் மிகவும் நன்றாகவே தொடர்ந்து செயல்படுத்தியது.

பாஜகவின் நயவஞ்சக விளையாட் டுக்கள் இவ்வாறு தொடர்கின்றன. மக் களிடம் வெளியே சொல்வதற்கு முற்றி லும் விரோதமான வகையிலேயே அவர் களின் உண்மையான நிகழ்ச்சிநிரலும் உள்ளார்ந்த எண்ணங்களும் இருந்திடும். இதற்கு சரியான உதாரணம், அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஏற்றுக் கொள்வதாகக் இவர்கள் கூறுவதை குறிப்பிடலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்படும் இவர்களுக்கு, இக்குடியரசை, வெறி பிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச “இந்து ராஷ்ட்ர”மாக மாற்ற வேண்டு மென்பதே குறிக்கோளாகும். தெளிவான இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் எவ்விதத்திலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிறோம். எனவே தான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை அமைத்திட, இந்திய மக்கள் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைத் திட வேண்டும் என்று கோருகிறோம்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, March 29, 2009

காங்கிரஸ்: நினைப்பும் நிலையும்


யதார்த்த நிலைமைகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தன்னுடைய மிக முக்கியமான கூட்டணிக் கட்சியினர் எவரும் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளக்கூட மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியானது, தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடிய சமயத்தில், தாங்களே இப்போதுள்ள பிரதமரின் தலைமையின் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.


தேர்தல் காலத்தில், ஒவ்வொரு கட்சிக்கும் தங்கள் கட்சியின் நிலை குறித்து, யதார்த்த நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், மாபெரும் கனவுகள் காண்பதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் உண்டுதான். ஆனால், ஒரு மாபெரும் ஜனநாயக அமைப்பில் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் எஜமானர்கள் அதன் மக்களேயாவார்கள். தேர்தலில் மக்கள் அளித்திடும் முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு, ஆட்சிபுரிவார்கள் என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், இடதுசாரிக் கட்சிகள் குறித்தும் மூன்றாவது முன்னணி குறித்தும் கூறப்பட்டிருக்கும் வாசகங்களைச் சற்றே ஆராய்ந்திடுவோம்.
காங்கிஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மூன்றாவது முன்னணியை ‘‘குழப்பமானவர்களின் கூட்டணி’’ என்ற விதத்தில் வர்ணித்திருக்கிறது.

(1) மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் கிடையாது,

(2) அது பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கே உதவுகிறது மற்றும்

(3) அது நிலைக்கத்தக்கதல்ல என்பவைகளே அதன் வாதமாகும்.

இப்பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு முன்பாக, மற்றொரு அம்சம் குறித்து பரிசீலிப்பது அவசியம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘‘மூன்றாது முன்னணிக்கு உந்து சக்தியாகத் திகழும் இடதுசாரிக் கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து வந்தன. அவர்கள் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமலேயே ஆட்சியாளர்கள் மீது அதிகாரம் செலுத்த முயற்சித்தார்கள்,’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதலாவதாக, நாடாளுமன்றத்தில் நுழைந்த 61 இடதுசாரி உறுப்பினர்களில் 54 பேர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தோற்கடித்தவர்கள் என்றபோதிலும், நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கம் ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும் மதவெறி சக்திகளை அரசு அதிகாரபீடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அளிக்க வேண்டுமென்பதற்காக, ஐமுகூ அரசாங்கத்தை, இடதுசாரிக் கட்சிகள் மிகவும் முதிர்ந்த தன்மையுடனும் பொறுப்புடனும் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதெனத் தீர்மானித்தன. இவ்வாறு ஆதரிப்பதற்காக, ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பங்கையும் இடதுசாரிகள் கோரவில்லை. இன்றைய நடைமுறை அரசியலில், அரசு அதிகாரம் மற்றும் அதன் விளைவாக அளிக்கப்படும் சுகபோக வாழ்க்கை வசதிகளைத் துச்சமென நிராகரித்துவிட்டு, கொள்கைகள் வழிநின்று, செயல்படுவது என்பதே அபூர்வமான ஒன்றாகும். இவ்வாறுதான், இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளாத அதே சமயத்தில் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, ‘‘ராணுவம்சாரா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு’’ ஐமுகூ அரசாங்கம் ஆதரவு அளித்ததையொட்டி இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையானது, ‘‘இந்தியாவின் உச்சபட்ச தேசிய நலனுக்காகத்தான்’’ அவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக மேலும் கூறுகிறது. அவர்கள், சொல்லாமல் விட்ட ஓர் அம்சம் என்னவெனில், இந்த ஒப்பந்தமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான போர்த்தந்திரக் கூட்டணியின் முழுமையான அங்கம் என்பதையும், அந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நசுக்கப்பட்டுவிட்டது என்பதுமாகும். இரானுக்கு எதிராக சர்வதேச அரங்கத்தில் இந்தியா வாக்களித்ததும், இஸ்ரேலுடன் இப்போது இந்தியா அதிகமான அளவில் கூடிக் குலாவுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இவ்வாறு போர்த்தந்திரக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதன் விளைவுகளேயாகும்.

மூன்றாவதாக, இடதுசாரிக் கட்சிகள் ஐமுகூ அரசாங்கத்திற்க, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆதரவினை அளித்து வந்தன. ஐமுகூ ஆட்சியிலிருந்த அத்தனை ஆண்டு காலத்திலும், இத்திட்டத்தை அது அமல்படுத்துவதற்காகவும், அதிலிருந்து அது விலகிச் செல்லாமல் இருப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வந்தனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியதன் மூலமும், இந்தியர்கள் ஜார்ஜ் புஷ்சை நேசிக்கிறார்கள் என்று உலகிற்கு அறிவித்ததை அடுத்தும், மன்மோகன் சிங் அரசாங்கம் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை மீறிவிட்டது. ‘‘இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையானது சர்வதேச உறவுகளின் பல்துருவக் (multipolarity) கோட்பாட்டை மேம்படுத்தக்கூடிய விதத்தில் பின்பற்றிடும். அதனை ஒருதுருவ கோட்பாட்டை (unilateralism) நோக்கி இழுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திடும்,’’ என்று குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இதனை மீறி, அமெரிக்காவானது, ஈராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை வலுவந்தமாக ஏற்படுத்தி. ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திரக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘‘அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் அதே சமயத்தில், அனைத்து பிராந்திய மற்றும் உலகப் பிரச்சனைகளிலும் இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடு, நிலைநிறுத்தப்படும்’’ என்றும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டிருந்தபோதிலும், அதற்கு முற்றிலும் மாறாக, நாம் மேலே பார்த்ததுபோல, நம்முடைய நாட்டின் அயல்துறைக் கொள்கையானது, அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரைவு தயார் செய்யப்பட்ட சமயத்தில், முதலில் அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகள் கொள்வது தொடர்பாகத்தான் வரையப்பட்டிருந்தது. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு வேண்டுமானால் அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தியபிறகுதான், அது நாம் மேலே குறிப்பிட்டவாறு பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை மீறியது. தான் ஏற்கனவே ஆசைப்பட்டவாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போர்த்தந்திர உறவுகளை செய்து கொள்வதையே விரும்பியது. இவ்வாறு, ஐமுகூ அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்குத் துரோகம் இழைத்ததால்தான், இடதுசாரிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவையே நிதர்சன உண்மைகளாகும்.

நாம் இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஐமுகூ அரசாங்கத்தின் சாதனைகள் என்று பட்டியலிட்டுள்ள அனைத்துமே, இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் மற்றும் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்டவைகளேயாகும். ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து இடதுசாரிகள் வெளியேறுவது என்று தீர்மானித்த பிறகுதான், ஐமுகூ அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தன் பழைய திட்டங்களுக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. ஐமுகூ அரசாங்கத்தை இடதுசாரிகள் ஆதரித்து வந்தவரை, அது பொதுத்துறை நிறுவனங்களை நீர்த்துப்போகச் செய்திடுவதற்கான எந்த முயற்சியையும் அனுமதித்திடவில்லை. கூடுதலாக. இப்பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப்போல, ஐமுகூ அரசாங்கமானது நவீன தாராளமயப் பொருளாதார மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்த முயற்சித்தபோது அதனை அவ்வாறு மேற்கொள்ள விடாது இடதுசாரிகள் தடுத்ததன் விளைவாகத்தான், இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நம் நாட்டையும் பாதிக்காது. ஓரளவிற்குப் பாதுகாத்திட முடிந்திருக்கிறது.

உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மூன்றாவது அணி சம்பந்தமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு இப்போது வருவோம். முதலாவதாக, மூன்றாவது முன்னணிக்கு மாற்றுக் கொள்கைகள் இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஐமுகூ அரசாங்கமோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ ஏதேனும் கொள்கைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்களா? அனைத்து அரசியல் கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன திட்டங்களை அமல்படுத்துவோம் என்று, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திடும். கடந்த இருபதாண்டுகளில், அமைந்திட்ட கூட்டணி அரசாங்கங்கள் அனைத்துமே, தேர்தலுக்குப் பின் உருவானவைதான். 1996இன் ஐக்கிய முன்னணியாக இருந்தாலும் சரி, 1998 இல் உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது 2004இல் உருவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக இருந்தாலும் சரி. கூட்டணி உருவானபிறகுதான் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக ஒரு பொதுத் திட்டம் வரையப்பட்டு, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.


ஐமுகூ அரசாங்கம் உருவானபோதும் இவ்வாறுதான் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரையறுத்து உருவாக்கப்பட்டது. 2009 தேர்தல் முடிந்தபிறகும் இதேபோன்று மதச்சார்பற்ற கட்சிகளின் முன்னணியில் ஒரு மாற்று செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை.

இரண்டாவதாக, இடதுசாரிக் கட்சிகளின் மாற்று முன்னணியால் ‘‘பாஜக வளர்வதற்கே வழிவகுக்கும்’’ என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறது. இதுவும் வெறுமையான ஒன்றேயொழிய வேறில்லை. இடது முன்னணி தீர்மானகரமான சக்தியாக உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் பாஜகவினரால் நாடாளுமன்றத்தை விடுங்கள், சட்டமன்றத்தில் கூட ஓரிடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. மாறாக, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள வடமாநிலங்களில்தான், பாஜக வளர்வதற்கு அது வழிவகுத்துத் தந்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கத்தின் காலத்தில்தான் காங்கிரஸ் கட்சியானது கர்நாடகா, உத்தர்காண்ட், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தன்னுடைய மாநில அரசாங்கங்களை, பாஜகவிடம் இழந்துள்ளது. இவ்வாறு, பாஜக மீண்டும் உயிர்பெறுவதற்கு உதவி செய்திருப்பது யார்?
மூன்றாவதாக, மூன்றாவது மாற்று முன்னணி உறுதியாக இருக்காது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. கடந்த கால அரசாங்கங்களின் அனுபவங்கள் அவ்வாறுதான் இருக்கின்றன. இவ்வாறு உறுதியற்று இருந்தமைக்கு அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த பெரிய கட்சிகள்தான் காரணமாகும். வி.பி. சிங் அரசாங்கத்திற்கு இடதுசாரிக்கட்சிகளும், பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. அத்வானியின் எரியூட்டும் ரதயாத்திரைக்குப்பின்னர் பாஜக தன் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, அவரது அரசாங்கம் வீழ்ந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியானது சந்திரசேகர் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தது. அதுவும் ராஜிவ்காந்தியை யாரோ இரு காவல்துறையினர் வேவுபார்க்கிறார்கள் என்று அற்பக் குற்றச்சாட்டைக் கூறி, ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து, அதுவும் வீழ்ச்சி யடைந்தது. பின்னர் 1996இல் மக்களின் ஆதரவை இழந்த நிலையில் காங்கிரஸ் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதற்காகவும், பாஜக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. 13 நாட்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்ததை நினைவுகூர்க. காங்கிரஸ் கட்சி இதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்தில் அதன் பிரதமரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. சில மாதங்கள் கழித்து, ஐக்கிய முன்னணியின் ஓர் அங்கமாக இருந்த திமுக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி ஆதரவினை விலக்கிக் கொண்டு அது வீழக் காரணமாக இருந்தது. (பின்னர் அதே திமுக-வுடன் தற்போது ஐமுகூ அரசாங்கம் தன் முழுக் காலத்தையும் கழித்திருக்கிறது என்பது என்னே விநோதம்!) இவ்வாறு காங்கிரஸ் துரோகம் செய்யாமல் இருந்திருந்தால், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கவும் முடியாது, 1998இல் ஆட்சியை அமைத்திருக்கவும் முடியாது. காங்கிரஸ் கட்சி மட்டும் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் அளித்திருந்த தன் உறுதிமொழியைக் காப்பாற்றியிருந்தால், ஐக்கிய முன்னணி அரசாங்கமானது 2001 வரை நீடித்திருந்திருக்கும். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கீழே தள்ளுவதற்காக, காங்கிரஸ், பாஜகவுடன் சேர்ந்து - முன்பு வி.பி.சிங் அரசாங்கத்தை வீழ்த்தியது போலவே இப்போதும் - வாக்களித்தது. இவ்வாறு, பாஜக வளர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தது யார்?
கடந்த காலங்களில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அரசாங்கங்கள் உறுதியற்றிருந்ததற்கான அனுபவங்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த கட்சிகளேயாகும். இதற்குத் தீர்வு 2009இல் அமைய இருக்கும் மாற்று மதச்சார்பற்ற முன்னணியானது தன் சொந்த பலத்தில் அமைந்திடுவதிலேயே அடங்கியிருக்கிறது.

இத்தகைய மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைந்திடுவதை உத்தரவாதப்படுத்துவதுதான் எதிர்கால இந்தியாவுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நலம் பயக்கும்.

(தமிழில்: ச.வீரமணி)