Sunday, May 22, 2011

மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை: மார்க்சிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க்கத் தாக்குதல் முறியடிக்கப்படும்

நாம் எதிர்பார்த்ததைப் போலவே, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி யின் தொழிலாளர்களுக்கு எதிராக கொலை வெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் மே 13 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகையி லேயே தொடங்கிவிட்டன. மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில், அதிலும் குறிப்பாக இடது முன்னணி வென்ற பகுதிகளைக் குறி வைத்து, கட்சி அலுவலகங்கள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டிருக்கின்றன. செங்கொடிகள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. அந்த இடங் களில் திரிணாமுல் காங்கிரசின் கொடிகள் வலுக்கட்டாயமாக ஏற்றப் பட்டிருக்கின்றன. இடது முன்னணியின் உள்ளூர்த் தலைவர் களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக் கின்றன மற்றும் சூறையாடப்பட்டிருக்கின் றன. இவற்றை எதிர்க்கும் இடது முன்னணித் தோழர்கள் கொலைவெறியுடன் தாக்கப்பட்டி ருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட, முதல் 48 மணி நேரத்திலேயே, பர்து வான், மேற்கு மிட்னாபூர் மற்றும் பங்குரா மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூன்று முக்கிய முன்ன ணித் தோழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தல் என்பவை ஒருதரப்பினரை வெற்றி பெறச் செய்திடும், மற்றொரு தரப்பினரைத் தோல்வியுறச் செய்திடும். பொதுவாக இது வழக்கம்தான். ஆயினும் வங்கத்தில் இடது முன்னணியின் தேர்தல் தோல்வி என்பது ஆளும் வர்க்கங்களின் பிற்போக்கு சக்திக ளுக்கு இடது முன்னணி மீது வன்முறையை ஏவுவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத் தப்படுகிறது. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் மக்களுக்குக் கிடைத்த ஆதாயங் களை அபகரித்திடக் கூடிய வகையில் அவர் கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இதனை இத்தாக்குதல்களில் நன்கு பார்க்க முடிகிறது.

நிலப்பிரபுக்கள் தலையெடுப்பு

உதாரணமாக, ஜங்கல் மஹால் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் திரிணா முல் காங்கிரஸ், இடது முன்னணியின் நிலச் சீர்திருத்தத் திட்டங்களின் விளைவாக நிலங்களைப் பெற்றவர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இதுநாள்வரை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவும், ஏழை விவசாயிகளாகவும் இருந்தவர்கள், நீதிமன் றங்களில் நடைபெற்ற பல்வேறு நீண்ட நெடிய வழக்குகளுக்குப்பின் இப்போது சட் டப்பூர்வமாக நிலத்தின் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது முந்தைய நிலப்பிரபுக்கள் தங்கள் கையைவிட்டுப் போன நிலங்களை மீண்டும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், வங்கத்தில் நிலச் சீர் திருத்தங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற ஆதா யங்களை அவர்களிடமிருந்து மீண்டும் பறித் திட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு சில இடங்களில், விவசாயத் தொழிலாளர்களின் வேலை நேரங்கள் வலுக் கட்டாயமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நாட்கூலிகள் குறைக்கப் பட் டிருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால மாக, வேலை நேரத்தின் போது, விவசாயத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அரிசி மற்றும் உணவுகள் நிறுத்தப்படுகின் றன. சில இடங்களில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டவைகளை அறுவடை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பதிலாக, அவை சட்டவிரோதமாக அறுவடை செய்யப் படுகின்றன.

ஹிட்லர் பாணியில்....
மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் முக்கியமான தெரு முனைகளி லும், முச்சந்திகளிலும் பலகைகளில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கணசக்தி’ நாளிதழின் அனைத்துப் பக்கங்களையும் ஒட்டி வைப்பதென்பது வழக்கமான நடை முறையாக இருந்து வருகிறது. காசு கொடுத்து பத்திரிகையை வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் படித்துவிட்டுச் செல்வதற் காக இவ்வாறு அங்கே செய்யப்பட்டிருக் கிறது. மாநிலம் முழுவதும் இவ்வாறிருந்த பல கைகளை அடித்து நொறுக்கி இருக்கின்றனர், தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் பாசிஸ்ட் தொழில்நுட்பங்கள், அந்தக் காலத்தில் ஹிட்லர், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தொடுத்த தாக்குதல்களை நினைவுபடுத்து கின்றன. பாசிஸ்ட்டுகள் தங்களுடைய ரெய்ச் ஸ்டாக் மாளிகைக்குத் தாங்களே நெருப்பு வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது போட்டு, அவர்களைத் தாக்கியதைப் போல இவர்களும் செய்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலும், கட்சித் தலைவர்களின் இல்லங்களிலும் ஆயுதங்களை வைத்துவிட்டு, காவல்துறை யினரை அழைத்து, ‘‘இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் இவர்கள் வைத்திருப்பதற்காக இவர்களைக் கைது செய்யுங்கள்’’ என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். இத்தகைய படுகேவலமான அளவிற்கு இன்றைய வர்க்கப் போர் சென்றிருக்கிறது.

வெளிப்பகட்டிற்கு, திரிணாமுல் காங்கி ரசும் அதன் தலைவியும் பொதுக்கூட்டங் களில், இத் தேர்தல்களில் “நாங்கள் மாற்றம் தான் கோருகிறோமே யொழிய, நாங்கள் பழிக் குப் பழி கோரவில்லை” என்றார்கள். அவ்வாறு சொல்லுகிற அந்தத் தருணத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, இடது முன்னணி ஆதரவாளர்களுக்கு எதிராக வன் முறை நடப்பின், அது அவர்களுக்குள் நடை பெறும் உள்கட்சி சண்டை என்றார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் “திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர்கள், இடதுசாரிகளுக்கு எதிராகச் சரியாகப் பாடம் கற்பிப்பார்கள்” என்று தன்னுடைய நெருப்பைக் கக்கும் பேச்சுக்கள் மூலம் தங்கள் ஊழியர்கள் மத்தி யில் உணர்ச்சித் தீயைத் தூண்டி வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மிகவும் பண்புடனும் அடக்கத் துடனும், தங்கள் உறுப்பினர்கள் ஓர் ஆக்கபூர் வமான எதிர்க்கட்சி உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்று கூறிய அதே சமயத் தில், திரிணாமுல் காங்கிரஸ் கும்பல் வங்கத் தில் வர்க்கப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது முதல்முறையல்ல
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு வர்க்கப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதன் மூலம் நம்முடைய சமூகத்தில் சுரண்டப்பட்ட வர்க்கங்களாக இருந்தவர்கள், நிலச் சீர்திருத்தங்கள் மூல மாகவும் பஞ்சாயத்து ராஜ் மூலமாகவும் வங்கத் தில் கடந்த முப்பதாண்டுகளில் பெற்ற அபரி மிதமான ஆதாயங்கள் அனைத்தையும் அப கரித்து, அவர்களைப் பலவீனப்படுத்திட இவ் வர்க்கப் போரைத் தொடுத்திருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய வர்க் கத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பது இது முதல்முறையல்ல. 1972இல் பெரிய அள வில் மோசடியாக சட்டப்பேரவைத் தேர் தலை நடத்தி, ஆட்சிக்கு வந்தபின் கட்சிக்கு எதிராக அரைப் பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள் 1977இல் அவசரநிலை தோல்வியடையும் வரை நீடித் தது. இவ்வாறு கட்சியின் மீது இவர்கள் அடக் குமுறையை ஏவியதன் நோக்கம் கம்யூ னிஸ்ட்டுகளின் தலைமையிலான வெகுஜன இயக்கங்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அப்போது 1400 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். 22 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கட்சிக் குடும்பங்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று, இவர் களின் அரைப் பாசிச அடக்குமுறை நடவடிக் கைகளை வெற்றிகரமாகத் தடுத்து முறியடித் தன. ஆளும் வர்க்கங்களின் நம்பிக்கைகள் தவிடுபொடியாகக்கூடிய விதத்தில் மேற்கு வங்க மக்கள் 1977 தேர்தல்களின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்ல, நாட்டில் வேறெங்கும் பார்க்க முடி யாத அளவிற்கு அதற்கு அளித்து வந்த ஆதர வைத் தொடர்ந்தனர். அவ்வாறு மக்கள் வைத் திருந்த நம்பிக்கை ஏழு தேர்தல்கள் வரை தொடர்ந்தது.

அதேபோன்று இப்போதும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வர்க் கத் தாக்குதல் எதிர்கொள்ளப்பட்டு முறியடிக் கப்படும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இதுநாள்வரையில் சுமார் 400க்கும் மேற்பட்ட இடது முன்னணி ஊழியர்கள் தியாகிகளாகி இருக்கிறார்கள். இவர்களின் தியாகம் வீண்போக அனுமதியோம். வங்கத் தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் சகோதர வர்க்கத்தினருக்கு நாம் நம் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்வோம். இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வங்க மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட ஒருபோதும் அனுமதியோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: