Showing posts with label Sukomal Sen. Show all posts
Showing posts with label Sukomal Sen. Show all posts

Tuesday, May 3, 2011

தொழிற்சங்க இயக்கத்தின் ஓர் அணிகலன் -எம்.கே.பாந்தே



சுகுமால் சென்னின், “இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம்:1830-2000 ஆண்டு களில் உருவாகி வளர்ந்திட்ட இயக்கத்தின் வரலாறு” என்னும் நூலைப் படித்தவர்கள், இந்த நூலையும் படிப்பதில் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சுகுமால் சென் மிகவும் உழைத்து, உலகத் தொழிற்சங்க இயக்கம் உருவான விதத்தை யும் அதன் வளர்ச்சியையும் இதில் சித்தரித் துள்ளார். 2011 ஏப்ரல் 6 - 10 தேதிகளில் ஏதென்ஸ் நகரில், உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் (றுகுகூரு-றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16-வது மாநாடு (காங்கிரஸ்) நடைபெற்ற சமயத்தில் இந்நூல் வெளியிடப் பட்டது.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ், “இந்நூலானது வரலாற்றின் முக்கிய நிகழ்வு களை மிகவும் எளிமையாகவும், நேரடியாக வும், பொருள்பொதிந்த விதத்திலும் முன் வைக்க முயன்றிருக்கிறது. உலகில் பல நாடு களில் இயங்கும் தொழிற்சங்கங்களை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். இந்நூலின் குறிக்கோள், தொழிலாளர் வர்க்கம், புதிய நிலைமைகளுக்கேற்பத் தம்மை மாற் றியமைத்துக் கொள்ள ஊக்குவித்து, அவர் களைப் போராட்டத்தில் உருக்குபோன்று மேலும் வலுவாக மாற்றியமைத்திட வேண் டும் என்பதேயாகும்” என்று மிகவும் பொருத்த மாகத் தெரிவித்திருக்கிறார். இதன் காரண மாகத்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கவாதிகளால் இந் நூல் மிகவும் ஆர்வத்துடன் படிக்கப்படக் கூடியதாக இயற்கையாகவே அமைந்திருக் கிறது.

தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி

நவீன தொழிலாளர் வர்க்கத்தின் மூலவே ரைக் கண்டுபிடித்து, அதிலிருந்து தன் ஆய் வினை நூலாசிரியர் தொடங்குகிறார். இங்கி லாந்தில் 18ம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் தொடங்கிய தொழிற்புரட்சி, முதலாளித்துவச் சமுதாயம் உதயமாவதற்கான அடிப்படையை உருவாக்கியது. மிகப்பெரிய அளவில் உற்பத் தியில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை இயக்கிட ஆட்கள் அதிகமான அளவில் தேவைப்பட்டனர். அதுநாள்வரை விவசாயத் தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை முற்றிலு மாக துண்டித்துக்கொண்டு, தங்கள் உழைப்பு சக்தியைத் தவிர வேறெதுவும் இல்லாத வர்கள் இத்தகைய எந்திரங்களை இயக்கிட அமர்த்தப்பட்டனர். ஜவுளி, நிலக்கரி, இரும்பு மற்றும் ரயில் - சாலைப் போக்குவரத்துத் தொழில்களில் புதிதாக உருவாகியிருந்த முத லாளித்துவ வர்க்கத்திடம் இத்தொழிலாளர் கள் தங்கள் ஜீவனத்திற்காகத் தங்கள் உழைப்பு சக்தியை விற்றனர்.

சுகுமால் சென் சுட்டிக்காட்டுவதுபோல், தொழில் மையங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலைமைகள், தொழிலாளர்களை, தங் களது பிரதான எதிரி இந்த எந்திரங்கள்தான் என்றும், எந்திரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம்தான் தாங்கள் சுரண்டப்படுவதைத் தடுத்திட முடியும் என்றும் நினைக்க வைத்தன. 1752இல் தொழிற்சங்கங்கள் மெல்ல மெல்ல உருப்பெறத் தொடங்கின. ஆனால் வளர்ந்து வரும் தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கிடக் கூடிய வகையில் தொழிலாளர் விரோத சட் டங்களும் (யவேi-உடிஅbiயேவiடிn டயறள) இயற்றப்பட் டன. தொழிலாளர் வர்க்கத்தை விரிவான அள வில் ஒன்றுதிரட்ட 19ஆம் நூற்றாண்டின் மத் தியவாக்கில் உருவான சாசன இயக்கம் எப் படியெல்லாம் உதவியது என்பதை ஆசிரியர் இந்நூலில் நன்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி யடைந்ததை அடுத்து, தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு புதிய தொலைநோக்குப் பார்வை கிடைத்தது. சுகுமால் சென், இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில், சிவப்பு சர்வதேச தொழிலாளர் சங்கங் கள் (சுஐடுரு-சுநன ஐவேநசயேவiடியேட டிக டுயbடிரச ருniடிளே) ஆற் றிய பங்களிப்பினை மிகவும் விரிவான வகை யில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சுகுமால் சென் இந்நூலில் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிக்க கண்டங்களில் அப்போது காலனிகளாக இருந்த நாடுகளில் வளர்ந்து வந்த தொழிற் சங்க மற்றும் அரசியல் இயக்கங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நாடுக ளில் தொழிற்சங்க இயக்கங்களும் தேசிய விடுதலை இயக்கங்களும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக ஒத்துழைப்பு நல்கி முன்னேறிக் கொண்டிருந்தன. மேலும் தொழி லாளர் வர்க்க இயக்கத்தில் சோசலிச சிந் தனை வளர்ச்சி வலுவாக வளர்ந்து வந்ததை யும் உய்த்துணர்ந்திருக்கிறார். இந்தியாவில் இத்தகு வளர்ச்சிப்போக்கு இருந்ததை ஆசிரி யர் சிறப்பு அழுத்தம் கொடுத்து விவரித் திருப்பது இயற்கையே.

செம்படையின் வீரஞ்செறிந்த போராட்டம் தான் பாசிசத்தை துடைத்தெறிந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்து, அங்கெல் லாம் மக்கள் ஜனநாயக அரசாங்கங்களை அமைத்தது. இது, உலக வரைபடத்தைக் கணிசமான அளவிற்கு மாற்றி, தொழிற்சங்க இயக்கத்தில் ஒற்றுமைக்கு ஆதரவான நிலை மையினை உருவாக்கியது.

இந்தப் புத்தகம் 1949இல் சீனாவில் நடை பெற்ற புரட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் கொரியப் புரட்சியின் வெற்றி ஆகியவை எப்படி உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு உதவியாக இருந்தது என் பதை விளக்குகிறது. கியூபா புரட்சியின் வெற்றி உலக அளவில் தொழிலாளர் வர்க்க இயக்கத் தினை மேலும் வலுப்படுத்தியது. உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் உலகின் பல முனைகளிலும் புரட்சிகரத் தொழிலாளர் வர்க்க இயக்கம் மேற்கொண்ட உறுதியான போராட்டங்களின் மூலம் வலுப்பட்டது.

சம்மேளனம் மீண்டும் போர்க்குணமுடையதாக மாறுதல்

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம், 2005 டிசம்பரில் ஹவானாவில் நடைபெற்ற தன்னுடைய 15-வது மாநாட்டுக்குப்பின் எப்படி மீண்டும் போர்க்குணமுடையதாக மாறியிருக்கிறது என்பதையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு குணாம்சத்தையும், வர்க்கப் போராட் டக் கொள்கையையும் தன்னுடைய அடிப் படை அணுகுமுறையாக எப்படி மீண்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார். தற்சமயம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலை மையகம் பிரேக்கிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு மாறியிருக்கிறது. மேலும் தன் நடவடிக்கை களைப் புதுப்பித்திடவும் துல்லியமான நட வடிக்கைகளை சம்மேளனம் எடுத்திருக்கிறது.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் தற்போது ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதி ரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் எடுக்கத் தொடங்கியிருப்பதை, சுகுமால்சென் இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சம்மேளனம் இயங்குவதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் குறைந்த நிலையில் இருந்தபோதிலும், உல கம் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் இன் றைய தினம் மிகவும் நம்பிக்கையுடனும் தீர் மானகரமான உறுதியுடனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

புத்தகத்தின் இறுதியில், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு சமூகத் தொலை நோக்குப் பார்வை இருக்க வேண்டியன் அவ சியத்தை சுகுமால் சென் அடிக்கோடிட்டிருக் கிறார். முதலாளித்துவ அமைப்பு தனக்கேற் பட்டுள்ள கடும் உலகப் பொருளாதார நெருக் கடியின் காரணமாக வீழப்போவது உறுதி என்று ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். உலக வங்கி - சர்வதேச நிதியம் ஆகியவற் றின் கட்டளைகளின் மூலமாக, உலக முதலா ளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க் கைத்தரத்திற்கு எதிராகக் கடுமையான தாக் குதல்களைத் தொடுத்திருக்கின்றன. ஆயி னும், உலகத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்து முறியடித்து, உலக முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவதில் முன்னணிப் பாத் திரம் வகிக்கும் என்று மிகவும் நம்பிக்கை யுடன் சுகுமால்சென் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

உலகத்தொழிற்சங்க இயக்கத்தில் நடை பெற்ற பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிப் போக்கு களை சுகுமால்சென் இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். உலகம் முழுதும் உள்ள தொழிற்சங்க முன்னணி ஊழியர் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய புத்தகமாக இது திகழ்கிறது.

இவ்வாறு, சுகுமால் சென் எழுதியுள்ள சர் வதேச தொழிலாளர் வர்க்க இயக்கம் என்னும் நூல் தொழிற்சங்க இயக்க இலக்கிய வரிசை யில் மேலும் ஒரு மதிப்புமிக்க அணிசேர்க்கை யாக விளங்குகிறது.

தமிழில்: ச.வீரமணி

Saturday, April 30, 2011

உரிமைகளைப் பறிக்கும் தாராளமயம் : சுகுமால் சென்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலைமை கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை உரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிட, தனியார் நிறுவனங்களுக்கு நடைமுறையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எட்டு மணி நேர வேலை என்பதும், நாளின் மீதமுள்ள 16 மணி நேரம் ஓய்வு, மனமகிழ் நிகழ்வுகள் மற்றும் குடும்பத்தாரு டன் மகிழ்வுடன் இருப்பதற்கு என்கிற விதி படிப்படியாக அரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற் றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, உலகில் கடைப்பிடிக் கப்படும் நவீன தாராளமய உலகமயக் கொள் கைகளின் காரணமாகவும், உலக முதலா ளித்துவ நெருக்கடியின் விளைவாகவும் சுமார் ஐந்து கோடி தொழிலாளர்கள் வேலை களை இழந்துள்ளார்கள்.

கொள்ளை லாபமீட்டுவதே

கொள்கையாகிப் போனது

நவீன தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆட்சிகளினுடைய, லாப மீட்டும் கொள்கை மனித சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தோற்றத்தையே மாற்றிவிட் டது. அதனால்தான் எட்டு மணி நேர வேலை குறித்தோ, வேலையில் இருப்பவர் கள் வேலை யிலிருந்து வெளியேற்றப் படுவது குறித்தோ ஆட்சியாளர்கள் கவ லைப்பட வில்லை.

நவீன தாராளமயக் கொள்கை கடைப் பிடிக்கப்படும் ஓர் ஆட்சியில், வணிகம் நன்று, அரசாங்கங்கள் தீது. பெரும் வணிகம் மிகவும் நன்று, பெரும் அரசாங்கங்கள் மிக வும் தீது. பணக்காரர்கள் மீதான வரிகள் தீது, ஏழைகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற் கும் சமூக நலத் திட்டங்களுக்குச் செல விடுவதென்பது மிக மிகத் தீது. சமூகத்தில் மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு அதிகரிப் பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அவசியமானதும் கூட. சமூகத்தில் பணக்காரர்களாக இருப்பவர் கள் மேலும் பணக்காரர்களாகக்கூடிய வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் முதலீடுகளை அதிகரிப்பதற்கு அவை தூண்டுகோலாக அமையும். அதே போன்று ஏழைகள் கடின உழைப்பினை மேற்கொள்ள எப்போதும் ஆர்வத்துடன் முன்வரவேண்டும். சந்தைகள் தவறிழைக் காது. மனித சமூகத்தை ஒழுங்குபடுத்தும் உயர்ந்த மார்க்கம், சந்தைகள்தான். இவை தான் அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படையாகும். அரசாங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் மூலமாக இதில் தலை யிடுவது - அது என்னதான் நல்ல நோக்கத் துடன் இருந்தபோதிலும் - நீண்டகால ஓட்டத்தில் விஷயங்களை அவை மிகவும் மோசமாக்கிவிடும். ஏனெனில், இவை சந்தைத் தீர்விலிருந்து பிரச்சனைகளை வேறு வழிகளில் இழுத்துச் சென்று விடு கின்றன. சுதந்திர சமூகத்தில் அரசாங்கம் என்பது சந்தையின் அதிகாரத்தை உயர்த் திடவே முன்வர வேண்டும். சமூகத்தில் உள்ள எவரும் தங்கள் சொத்துக்களை எந்த விதத்தில் வேண்டுமானாலும் - அது நேர்மையாக வேண்டுமானாலும் இருக்க லாம் அல்லது மிகவும் இழிவான முறையில் வேண்டுமானாலும் இருக்கலாம் - பெருக் கிக்கொள்ள சுதந்திரம் உண்டு. இந்த வகை யில்தான், நவீன தாராளமயக் கொள்கை என் பது மூலதனத்திற்கு ஆதரவாக கூச்ச நாச்சமின்றி வாதிடுகிறது.

நவீன தாராளமயக் கொள்கை 1980 களில் ரீகன் - தாட்சர் காலத்தில் தலை தூக்க ஆரம்பித்தது. 1990களின் முந்தைய ஆண்டுகளில் சோசலிச நாடுகளில் பின் னடைவு ஏற்பட்ட சமயத்தில் இக் கொள்கை வேகமாக வளரத் தொடங்கியது. அப்போது, ‘‘வரலாறு முடிந்துவிட்டது என்று கூறி முதலாளித்துவம் புளகாங்கிதம் அடைந்தது. மார்கரெட் தாட்சர், ‘‘இனி மாற்று எதுவுமில்லை என்று கொக்கரித்தார்.

நவீன தாராளமயத்தின் தத்துவம்

நவீன தாராளமயத்தின் தத்துவமானது வசதிபடைத்தவர்கள் கைகளில் அதிகா ரத்தை ஒப்படைப்பதை நியாயப்படுத்து கிறது. ஆயினும் நவீன தாராளமயத்தின் திவாலாகிப்போன தன்மையும், முரண் பாடுகளும் 1990களின் இறுதியில் வெட்ட வெளிச்சமாயின. உலகமயத்திற்கு எதிரான இயக்கம், உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் களில் நவீன தாராளமயக் கொள்கைகள் மிகவும் விரிவான வகையில் நிராகரிக்கப் பட்டன. அதிலும் குறிப்பாக லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ‘‘வரலாறு முடிந்துவிட்டது’’ என்று கொக் கரித்தவர்களின் கூற்றுக்களைத் தரைமட் டமாக்கின. இந்த சமயத்தில்தான் முதலா ளித்துவம் பொதுவாகவும், ஊடக அமைப் புகள் குறிப்பாகவும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களைப் பெரும் அளவில் சார்ந் திருக்க வேண்டும் என்பதனைப் புரிந்து கொண்டன. நவீன தாராளமயம் அரசின் பாத் திரத்தை அழிப்பதற்கு முயலவில்லை. மாறாக அரசு என்பது முதலாளித்துவத்தின் நலன்களுக்கு அல்லது ஊடக கார்ப்ப ரேஷன்களின் நலன்களுக்கு மட்டுமே முழுமையாகச் செயல்பட வேண்டும் என்கிற முறையில் நவீன தாராளமயம் தன் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தகைய தத்துவார்த்தக் கண்ணோட்டத்துடன் ஊட கங்களின் அரசியல் பொருளாதாரம் புத்துயிர் பெற்றன. இந்த அடிப்படையில் அமெரிக் காவிலும், இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் ஊட கங்களால் பெருமளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டன. இன்றைய கால கட்டத் தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சிப் போக்காகும்.

ஊடகங்களின் பங்கு
நவீன தாராளமய சமூகத்தில் கார்ப்பரேட் டுகளின் ஊடகங்கள் முதலாளித்துவத் திற்கு மாற்று சாத்தியமே இல்லை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் நம்பும் அள விற்கு எடுத்துச் சென்றுள்ளன.

சர்வதேச மூலதனத்திற்கு சேவகம்
இன்றைய தினம் அமெரிக்காவில் மட் டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்கள் தங் கள் ஆளுகையை விரிவாக்கி இருக்கின் றன. அதீத அளவில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடக்கூடிய விதத்தில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மாறி யிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தாராளமயவாதிகள், தங்கள் சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்வதற்காக வகைதொகையின்றி ஊடகங்களுக்கு லஞ் சம் தர தயாராக இருக்கின்றனர்.

1880களில் சிகாகோவில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றபோது உலக முத லாளித்துவத்தின் நிலைமை வேறாக இருந் தது. அதன்பின்னர் உலக முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடைந்து, இன்றைய காலகட்டத்தில், நவீன தாராள மய உலகமயமாக உருவெடுத்து, மிக உக்கி ரமான வடிவத்தினைப் பெற்றுள்ளது.

உலக அளவில், இன்றைய தினம், தொழிலாளர் வர்க்கம் மிகவும் வஞ்சிக்கப் பட்ட வர்க்கமாக, பல்வேறு உரிமைகள் பறிக் கப்பட்ட வர்க்கமாக மாறியிருக்கிறது. பணக் காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத் தங்கள் உழைப்புச் சக்தியைக் கட்டாயமாகக் குறைந்த கூலிக்கு அளிக்கக்கூடிய அள வுக்கு மிகவும் மோசமானதாகத் தொழிலா ளர் வர்க்கம் மாறியிருக்கிறது. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்திருக்கிறது. ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பதென்பதும், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, குறைந்த கூலிக்கு வேலை செய்வ தென்பது போன்ற மே தின சகாப்தத்திற்கு முந்தைய நிலைமை இப்போது ஏற்பட்டி ருக்கிறது.

உலக அளவில், ஊடகங்களின் வெறித் தனமான பிரச்சாரங்கள், மக்களின் சிந்த னைகளையும் செயல்பாடுகளையும் மழுங் கடித்து வருகின்றன. அமெரிக்காவும், பல முதலாளித்துவ நாடுகளும் மிகவும் மோச மான முறையில் பொருளாதார நெருக்க டிக்கு ஆளாகிய பின்னர், அவை தொழிலா ளர் வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்தன. இருபதாம் நூற்றாண்டில் சமூக உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங் களை நடத்தி பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்த தொழிலாளர் வர்க்கம் படிப்படி யாக அவற்றை இழக்கக்கூடிய நிலை ஏற் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையிலிருக்கும் தொழிலாளர்களையும் கடுமையான முறையில் பாதித்திருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூல மாக பெற்றிட்ட எண்ணற்ற உரிமைகள் ஒவ் வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின் றன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமானது, வேலை இழப்புகள், வேலையிலிருப்போரை அதிக மணி நேரத் திற்கு வேலை வாங்குதல், பணிப் பாது காப்பின்மை, நியமனங்களில் ஒப்பந்தமுறை அமல், தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப் படுதல் போன்ற நிலைமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

சோசலிசத்திற்காக

போராடுவது ஒன்றே மாற்று

இன்றைய தினம் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட் டுள்ள விளைவுகளை முற்றிலுமாகத் துடைத்தெறியக் கூடிய வகையில் அணி திரளாமல், துண்டு துண்டான சில அற்பக் கோரிக்கைகளுக்காக நடத்திடும் போரா ட்டங்களால் மட்டும் வலுவடைந்து விடாது.

தொழிலாளர் வர்க்கம், தன்னுடைய புரட்சிகர லட்சியத்தையும் (ளவசயவநபல) அதனை அடைவதற்கான உத்திகளையும் (வயஉவiஉள) அறிந்திருந்தால் மட்டுமே அத னால் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறிட முடியும்.

இல்லாவிடில், இவர்களது போராட்ட அனுபவங்கள் அப்போதைக்கு அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள முதலாளித் துவக் கழிசடை சித்தாந்தங்களின் செல் வாக்கால் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களை சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாத நிலைகளை எடுக்க வைத்திடும். முதலா ளித்துவ அமைப்பை, தொழிலாளர்களுக்கு ஆதரவான ஓர் அமைப்பாக சீர்திருத்தி டவோ அல்லது நவீனப்படுத்திடவோ முடி யாது. முதலாளித்துவ அமைப்பு முறையா னது சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத சக்திகளின் கூட்டணிகளோடு தனக்குச் சாதகமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும். ஆயினும், முதலாளித்துவ அமைப்பு முறையை உறுதியாகவும் விடாப் பிடியாகவும் ஆதரிக்கும் ஒரு முதலாளித் துவ அரசாங்கத்தைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, தொழிலாளர்கள் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மீதுள்ள பிரேமைகளை அகற்றிட வெளிப்படையாக வும், ஒளிவுமறைவற்ற முறையிலும், நடை முறை நடவடிக்கைகளுடன் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட் டத்திற்கு மாற்று இல்லை என்பதை உறுதி யுடன் ஏற்றுக்கொண்டு, அதனை அடை வதற்கான போராட்டத்தில் தன்னை முழு மையாக இணைத்துக் கொள்ள தொழிலாளர் வர்க்கம் முன்வர வேண்டும். அது ஒன்று தான் வீரம் செறிந்த மே தினத் தியாகிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் மே தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடிட தொழிலாளர் வர்க்கத்திற்குப் பொருத்தமான செயலாக அமைந்திடும்.

தமிழில்: ச.வீரமணி

Sunday, November 7, 2010

நவம்பர் புரட்சியும் சோசலிஸ்ட் உணர்வும்--சுகுமால் சென்



1917 அக்டோபர் 17இல் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி, பின்னர் திருத்தப்பட்ட ரஷ்ய காலண்டரின்படி நவம்பர் 7இல் நவம்பர் புரட்சி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவின் முதல் சோசலிஸ்ட் புரட்சி, உலகையே குலுக்கிய நிகழ்வாகும். அதன் முக்கியத்துவம் இன்றைய உலகில் - அதாவது உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள இன்றைய உலகில் - பெரிய அளவில் பொருளாதார மந்தம் மற்றும் கொடூரமான முறையில் ஏகாதிபத்தியத் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய உலகில் - மேலும் மேலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியானது, செப்டம்பர் 15 அன்று தன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஏழை மக்கள் மீதும் தாங்க முடியாத அளவிற்கு அது தாக்குதல்களை ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் களுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு, உலக முதலாளித்துவம் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கக்கூடிய இன்றைய சூழல் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சிக்கு மேலும் அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

ஏகாதிபத்திய மேலாதிக்கம் மற்றும் அதன் நாசகர யுத்த நடவடிக்கைகள் இன்றைய தினம் மிகவும் கூர்மையடைந்து, உலகம் முழுவதையும் தன் மேலாதிக்கக் கருவிகளின்மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் ஏற்படுத்திட்ட நவீன தாராளமயப் பொருளாதார முறை, உலகச் சந்தையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தையும் சாமானிய மக்களையும் ஒட்டச் சுரண்டி கொள்ளை லாபம் ஈட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தோழர் லெனின் விளக்கியதுபோல், ஜார் மன்னனின் ஆட்சியின் கீழ் ஒரு பின்தங்கிய நாடாக விளங்கிய ரஷ்யாதான், 1917இல் முதலாளித்துவ சங்கிலியின் ‘‘பலவீனமான கண்ணியை’’ உடைத்து நொறுக்கி, முதலாளித்துவ உலகில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சியை நிறுவிய முதல் நாடாக வெற்றி பெற்றது. ரஷ்ய சோசலிஸ்ட் புரட்சியின் மிக முக்கியமான அம்சம், முதலாளித்துவத்தின் சுரண்டும் வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டிய முதல் உலகப் புரட்சி இதுவே என்பதாகும்.

இறுதியாக, 1991இல் பல்வேறு காரணங்களால் சோவியத் சோசலிஸ்ட் அரசு முடிவுக்கு வந்தது. சோசலிசத்தின் புரட்சிகரத் தத்துவத்தை பெரிய அளவில் திரித்ததும், விலகிச் சென்றதும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், இது குறித்து உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் இன்னமும் தனியே ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
சோசலிஸ்ட் உணர்வு உருவாதல்

சோவியத் சோசலிஸ்ட் புரட்சியானது, தன்னுடைய நிகழ்ச்சிநிரலில் சோசலிஸ்ட் உணர்வினைப் பிரதானமாக முன்வைத்தது. ஆனாலும், இதனை எய்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தொடர் போராட்டம் அவசியம். உலகிலேயே மிகவும் முக்கியமான பொக்கிஷம், மனித இனமேயாகும். ஆயினும், வரலாற்றுரீதியாகப் பார்த்தோமானால், மனிதகுலத்தின் பெரும்பகுதி பகைமையுடனான சமூக வர்க்கங்களின் ஆளுகைகளின் கீழேயே, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இத்தகைய நிலைமைகள் - அதாவது தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தனிநபர்வாதம் (heightened individualism), அதீத நுகர்வோரியம் (hyper-consumerism), தற்பெருமை (egotism), இரக்கமின்மை (apathy), பகைமையுணர்வு (alienation), பேராசை (greed), வெறுப்பு மனப்பான்மை (cynicism) ஆகிய அத்துணை குணங்களும் சோசலிசத்தைக் கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான அனுகூலமானவை என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவம் மற்றும் புரட்சிக்கு எதிரான சிந்தனையாளர்களில் பலர் இத்தகைய குணங்கள் மக்களிடம் இருப்பது இயல்பானவைகளே என்றும் இதற்கு மேல் மக்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது, கூடாது என்றும் வாதிடுகிறார்கள். ஆயினும் இது ஒரு நம்பிக்கையே யொழிய, அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல. இதேபோன்றுதான் ஒவ்வொருவரின் ‘‘திறமை’’ (ability) மற்றும் ‘‘புத்திசாலித்தனம்’’ (intelligence) ஆகியவையும் வெவ்வேறானவை என்றும், ஒரு சில தனிநபர்கள் வரலாற்றையோ, கலாச்சாரத்தையோ அல்லது சுற்றுச்சூழலையோ தீர்மானிப்பதில் எவ்விதப் பங்கும் ஆற்றவில்லை என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு மாறாக, தனிநபர்கள் நிலையானவர்கள், மாற்ற இயலாதவர்கள் என்கிற எண்ணத்தைப் பொய்ப்பிக்கக்கூடிய விதத்தில் அறிவியல் சான்றுகள் உண்டு. மனித இனம் மாற்றங்களுக்கு - சமூகப் பின்னணியுடன் சம்பந்தப்பட்ட மாற்றங்களுக்கு - உட்பட்டவையே. இவ்வாறு மனித குலத்தின் மகத்தான சக்தியை எவரும் அறுதியிட்டுக் கூறிட முடியாது.

இன்றைய சிக்கல் நிறைந்த மற்றும் முரண்பட்ட பின்னணியில், அதிலும் குறிப்பாக, பல வளர்முக முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நவீன தாராளமய உலகமயக் கொள்கையானது, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மற்றும் முதலாளித்துவம் என்னும் அடிப்படையில் வெவ்வேறான இரு உலகக் கண்ணோட்டங்களுக்கு இடையே ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இரு கண்ணோட்டங்களுமே மக்களது சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை, கருத்துக்களைத் தங்கள் கண்ணோட்டங்களின்பால் ஈர்ப்பதற்கு முயல்கின்றன. உதாரணமாக, இன்றைய தினம் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பது குறித்தும் அவற்றைத் தீர்த்திட சிறந்த வழி எது என்பது குறித்தும் இரு கண்ணோட்டங்களும் இரு கருத்துக்களை முன்வைக்கின்றன. ‘‘மகிழ்ச்சி’’ என்பதற்கான அளவுகோலைக் கூட இரண்டும் இரு விதங்களில் அளிக்கின்றன. வலுவான முறையில் இயங்கிடும் ஏகாதிபத்திய சக்திகள், மக்கள் மத்தியில் சுயநலத்தையும், புதிய புதிய பொருள்களின்மேல் அளவிடற்கரிய ஆசைகளையம் உருவாக்கி, வளர்த்திடக்கூடிய வகையில் பிரச்சாரத்தை செய்துவருகின்றன. இவை அளிக்கும் நிர்ப்பந்தங்களில் பல மிகவும் பசப்பலானவைகளாகும்: மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கானவைகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவை படு பிற்போக்கானவைகளாகும்.

நவீன தாராள உலகமயக் கட்டத்தில், பல்வேறுபட்ட சமூக நலன்களும், அது உற்பத்தி செய்த வர்க்க முரண்பாடுகளும், மக்கள் மத்தியில் வேலைவாதம் (Careerism, சந்தர்ப்பவாதம், ஒருமைப்பாடின்மை (lack of solidarity), மற்றும் சோசலிசத்தைக் கட்டுவதில் ஆர்வமின்மை ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன. உதாரணமாக, நகர்ப்புறங்களில் வேலைபார்க்கும் அதிக ஊதியம் வாங்கும் ஊழியர்களின் சுகபோக வாழ்க்கையானது தொழிற்சாலைகளிலும் கிராமப்புறங்களிலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களிடமிருந்தும், குறைந்த சலுகைகளுடன் வாழ்பவர்களிடமிருந்தும், சொந்த ஊர்களில் வாழும் பெற்றோர்களிடமிருந்தும், ஓய்வூதியதாரர்களிடமிருந்தும் அவர்களைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டது. மூலதனம் - அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பிரச்சனையே அல்ல - தன் அதிகாரத்தையும் அதன் விரிவடையும் தன்மையையும் குறைத்து மதிப்பிடுவது எவ்வாறு தவறோ அதேபோன்று, தத்துவார்த்த சிந்தனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் போன்ற அதன் எதிர்மறை விளைவுகளையும் குறைத்து மதிப்பிடுவது மாபெரும் தவறாகும். புரட்சிகர உணர்வு மட்டம்
சோவியத் யூனியன் இப்போது இல்லை என்ற போதிலும் கூட, சோசலிசத்தைக் கட்டியமைத்திட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலானது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அது தொடரும். சோசலிசத்தைக் கட்டியமைத்து, அதனை நிலைநிறுத்துவதற்கு, உலகளாவிய அளவில் சுத்தமான காற்று மற்றும் தண்ணீர், சுத்தம், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் உட்பட பொதுவான நலன்களுக்காக உண்மையுடன் கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் பெற வேண்டியது அவசியம். அதே சமயத்தில், சமூகத்தை, ஒரு முதிர்ச்சியடைந்த சோசலிஸ்ட் சமூகமாக மாற்றியமைத்திட இத்தகைய கண்ணோட்டங்களை உடைய முன்னணி ஊழியர்கள் தேவை. புரட்சிகர உணர்வும் தேவை. இது சோசலிசத்தின் கீழ் உருவாக்கப்படும். மார்க்சும், ஏங்கெல்சும் பின்னர் லெனினும் சமூக நிலைமைகளில் மாற்றம் மற்றும் மக்களிடையே சோசலிஸ்ட் கல்வி மற்றும் சோசலிஸ்ட் நடைமுறை ஆகியவற்றின் மூலம் மக்களின் மனமாற்றம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவுகள் குறித்து விளக்கி இருக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் சோசலிசத்தை எய்துவது என்பது அதிகமான அளவில் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். புரட்சிகர உணர்வு என்பதே ஒரு குறிப்பிட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை எட்டியபின்னர்தான் ஏற்படும். ஒரு முறையான அரசியல் கட்சி அதிகாரத்தில் இருந்து, சோசலிஸ்ட் சமூகத்தைக் கட்டுவதற்கு அது வழிகாட்டினால், பின்னர் முதலாளித்துவ சமூகத்தின் நாசகரமான முரண்பாடுகளை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
உற்பத்தியில் சோசலிஸ்ட் உறவுகள் அல்லது சோசலிஸ்ட் உணர்வு இல்லாவிட்டாலும்கூட அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரிவாக்கிட முடியும் என்று வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் சோசலிசம் உருவாவதற்கான பொருளியல் அடித்தளம் (material foundation) அமைந்துள்ள போதிலும், சோசலிசத் தத்துவ வளர்ச்சி என்பது அந்நாட்டில் மிகமிக அரிதாகும். சமூக வாழ்க்கைதான் உணர்வை உருவாக்குகிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், உற்பத்திக்கான சமூக உறவுகளை நடைமுறைப்படுத்த நம்மால் முடியவில்லை. சோசலிஸ்ட் உணர்வு என்பது, உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்களிலிருந்து சோசலிஸ்ட் உணர்வு என்பதும் தாமாகவே வரும் என்ற கருத்து தவறாகிவிட்டது. உற்பத்தியின் புதிய உறவுகள் சாத்தியக்கூறுகளை மட்டுமே உருவாக்கி இருக்கிறதேயொழிய நிச்சயமாக சோசலிஸ்ட் உணர்வு உறுதியாக உருவாகும் என்று சொல்வதற்கில்லை. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுதல் என்பது திட்டமிட்டு நடைபெறுவதாகும். அதாவது, தாங்கள் எதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நன்கு புரிந்துகொண்டுள்ள மக்களால் திட்டமிட்டு நடைபெறுவதாகும். என்ன செய்ய வேண்டும் என்னும் நூலில் லெனின், தொழிலாளர் வர்க்கம் எப்படி வர்க்க உணர்வைப் பெறுகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.புரட்சிகரத் தத்துவத்தை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு இது அவசியம் என்று அவர் கூறுகிறார். தற்போது இருந்து வரும் சமூகப் பொருளாதார அமைப்பை, பெருவாரியான மக்களின் நலன்களுக்கானதாக, ஒவ்வொருவரும் தன் ஆற்றலை முழுமையாக உணரச் செய்யக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திடுவதற்கு, புரட்சிகர, அறிவியல்பூர்வமான உணர்வு அவசியம் என்று லெனின் வாதிடுகிறார். ஒருவர் சோசலிஸ்ட் உணர்வைப் பெறுவதென்பது நீண்ட கால நடைமுறையாகும். ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தை எய்தும் வரை இந்நிலையினை எய்திட முறையான கவனம் செலுத்தி வரவேண்டும். மக்கள்திரளிடம் அவர்கள் ஆற்றலை உணரச் செய்து, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களை முன்னேற்ற வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சோசலிஸ்ட் கொள்கைகளை எய்திடத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய முன்னணி ஊழியர்களை அதிகரிப்பதிலும் சிரமங்கள் உண்டு. இவ்வாறு, சோசலிசத்தைக் கட்டுவதற்கு, பொருளாதாரத்தை வளர்ப்பது அவசியமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வழியாக சோசலித்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள், வர்க்கப் போராட்டத்தில் தத்துவத்தின் முக்கிய பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை மாற்றும் அனைத்துக் கட்டங்களிலும் அதன் விமர்சனரீதியான முக்கியத்துவத்தையும் கிரகித்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். சோசலிஸ்ட்டாக மாற்றியமைத்தல்
ஒருவரை சோசலிஸ்ட்டாக மாற்றியமைப்பதற்கு, ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரத்தைத் தந்திருந்தால் மட்டும் போதுமானதல்ல, பெற்றிட்ட சோசலிஸ்ட் ஆதாயங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் அவற்றை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதிலும் அது அடங்கியிருக்கிறது. சோசலிஸ்ட் ஆதாயங்களை அடைவதும், மேலும் மேலும் தொடர்ந்து அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்வதும் மிகவும் கடினமான, நீண்ட, நெடிய, அடிக்கடி ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகும். வரலாறு இவ்வாறுதான் நமக்குக் கற்பிக்கின்றது. புதிய கொள்கைகள், சட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியவை புதிய (மற்றும் பழைய) முதலாளித்துவ, திருத்தல்வாத மற்றும் பல்nறு எதிரான சக்திகளின் செல்வாக்கிற்கு தொடர்ந்து இழுக்கப்படுகின்றன. எனவே நம் முயற்சிகள் என்பவை தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஏவக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். இதன் பொருள், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மக்களின் பெரும்பான்மையோர் நலன்களை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கக் கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதையும், தொழிலாளர் வர்க்கம் தன் அரசியல் செயல்பாடுகளைச் செம்மையாகச் செய்திட ஆதரவையும், வழிகாட்டுதலையும் செய்வதையும் குறிக்கோளாகாக் கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்களின் ஆட்சி அமைவது என்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர வேறெந்தக் குழுவாலோ அல்லது வேறெவராலுமோ அல்ல. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை தொழிலாளர் வர்க்கம்தான் வலுவாக நடைமுறைப்படுத்திட முடியும். உண்மையில், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சமூகத்தைச் சரியானத் திசைவழியில் செலுத்திடத் தன் பங்களிப்பினைச் செய்யும்போதுதான், ஜனநாயகம் குறித்த மார்க்சியக் கண்ணோட்டம் உத்தரவாதப் படுத்தப்படுகிறது. சாமானிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக அரசு செயல்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டுமானால் அதற்கு சமூகத்தின் ஸ்தல மட்டத்திலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியாகத் தொழிலாளர் வர்க்கம் பரந்துபட்ட அளவில் பங்கேற்பது அவசியமாகும். துல்லியமான கோரிக்கைகளின் மீது வெகுஜனப் போராட்டங்கள், குறிப்பாக அவை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வழிநடத்தப்படும் பொழுதும், அவ்வாறு பெரும்பான்மையோர் நலன்களுக்கு உதவிடும் பொழுதும், அரசு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, பெரும்பான்மை மக்களுக்கு நீதி கிடைத்திடச் செய்திட முடியும். தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களை மேம்படுத்தக்கூடிய வகையில் ஸ்தல மட்டங்களில் தொழிலாளர் ஸ்தாபனங்கள் அமைக்கப்படுதல், அதன் தலைவர்கள் மக்களோடு இருந்து, அவர்கள் உணர்வுமட்டத்தை உயர்த்திட உதவுதல், உண்மையான வெற்றிகளைக் பெற்றிட வழிகோலலாம், விரிவான அளவிலும் நீடித்து நிலைக்கக்கூடிய விதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த அது உதவிட முடியும். மக்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது கனவுகளை நனவாக்கிட, அவர்களுடன் இணைந்து நின்று போராடிட வேண்டும். இதன் மூலம் தத்துவார்த்தப் போராட்டத்தை, தத்துவார்த்த மட்டத்தில் மட்டுமல்லாது நடைமுறை வேலைகளின் மூலமும் வென்றிட முடியும்.

தத்துவார்த்த நிலையை உயர்த்திட அனைத்து மட்டத்திலும் போராட்டம்
தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி ஊழியர்கள் நாள்தோறும் நடைபெறும் நடைமுறைப் போராட்டங்கள் மூலம்தான் கற்றுக்கொண்டு முன்னேற முடியும், தங்களுடைய சமூக உணர்வினை தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வாக வளர்த்தெடுக்க முடியும். புரட்சிகர தத்துவார்த்த வளர்ச்சி என்பது அநீதிகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அநீதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவம் ஆகியவற்றின்மூலம் அனுபவங்களிலிருந்து கற்பது என்பதும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளிப்பதற்கும் கற்பது என்பதும் அவற்றின் மூலமாக நாசகர சமூகப் பதட்ட நிலைமைகளைக் குறைப்பது என்பதும், மக்களைத் தங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுவித்திடக் கூடிய வகையில் தீர்மானங்களை உருவாக்கிடும் இயக்கங்களில் பங்கேற்கச் செய்வதென்பதும் சாத்தியமாகின்றன.
புரட்சி என்பது பழையனவற்றை அழிப்பது மட்டுமல்ல, புதியனவற்றை விதைப்பதுமாகும். ‘‘புரட்சியாளன்’’ என்பவன் ‘‘விஷயங்களை அவற்றின் வேர்களிலிருந்து கிரகித்துக்கொள்பவன்’’ என்று மார்க்ஸ் கூறுகிறார். அதாவது சமூகப் புரட்சியின்போது பழையனவற்றை அழித்து அவ்விடத்தில் புதியனவற்றை விதைப்பது என்பதாகும். இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்கும் மார்க்சின் சித்தாந்தம் பொருந்தக்கூடியதே.

1991இல் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தத் தடுமாற்றத்தில் சிக்கிக்கொண்டது. உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீண்டு எழவில்லை. இதன் விளைவு, சில கட்சிகள் வர்க்க சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன, வர்க்க மோதலை எதிர்க்கின்றன, ‘‘ஒளிரும் முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனித முகத்துடன் கூடிய உலகமயம்’’ ஆகியவற்றின் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் புரட்சிகர வளர்ச்சியைத் தடுக்கின்றன, இறுதியாக மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றன. அதுவும் உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் இவை இவ்வாறு கருதிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு, இன்றைய உலகில் நவம்பர் தினத்தின் படிப்பினையாக நாம் கொள்ள வேண்டியது என்னவெனில் சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சித்தாந்தத்தைக் கிஞ்சிற்றும் தடுமாற்றமின்றி நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுமேயாகும். நம்முடைய வரலாற்று இலட்சியத்தை ஈடேற்ற, சோசலிஸ்ட் உணர்வைத் தொழிலாளி வர்க்கம் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வைத்திடுவோம். இன்றைய இன்றியமையாத தேவை என்பது இத்தகைய சோசலிஸ்ட் உணர்வு பெற்ற தொழிலாளர்களேயாவர்.

(தமிழில்: ச.வீரமணி)