Sunday, May 8, 2011

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட வழக்கு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக!

மத்திய உள்துறை அமைச்சர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச் சாரத்தின்போது, ‘‘நாட்டிலேயே மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம்’’ என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மாநிலத்தை ‘‘கொலை நிலம்’’ (‘killing fields’)ஆக மாற்றிவிட்டது என்றும் கூறியவை ஆடி அடங்குவதற்கு முன்ன மேயே, 1995 டிசம்பரில் புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசிய சம்பவத்தில் மூளையாக இருந்து செயல் பட்ட கிம் டேவி அது தொடர்பாக அளித் துள்ள விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

1995ஆம் ஆண்டு டிசம்பர் 17 - 18 தேதிகளின் இரவில் ஒரு விமானம் முழு மையாக அபாயகரமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆகாயவழியே பறந்து வந்து மேற்கு வங்கம், புருலியா மாவட்டத் தில் ஆனந்த மார்க்கம் தலைமையகம் இருக்குமிடம் அருகே, ஆயுதங்களை வீசியது. இது தொடர்பாக கொல்கத்தா வில் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தின் முன், 2000 பிப்ரவரியில் மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகம் (சிபிஐ) சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அவ்வாறு வீசப்பட்ட ஆயுதங்களில் ஏகே-47 துப்பாக்கிகள் 500 வீசப்பட்டதென்றும், அவற்றில் 87 மட்டுமே கைப்பற்றப்பட்டன என்றும், அதேபோன்று மொத்தம் 15 லட்சம் சுற்றுக்கள் வெடிமருந்து மற்றும் பல் வேறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப் பட்டதில் மிகச்சிறிய அளவிற்கே கைப் பற்றப்பட்டன என்றும் கூறியிருக்கிறது. இந்த ஆயுதங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்றும், இவ்வாறு மாநிலத்தைக் ‘‘கொலை நிலமாக’’ மாற் றியது யார் என்றும் உள்துறை அமைச்சர் கூறுவாரா?

அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் கம்யூனிச எதிர்ப்பு வன்முறை நடவடிக் கைகளில் ஈடுபட்டு வந்த ஆனந்த மார்க் கம் என்ற அமைப்புக்காகத்தான் இந்த ஆயுதங்கள் வீசப்பட்டன என்பது விரி வான அளவில் நம்பப்பட்டது. அதுமட்டு மல்ல, மேற்படி ஆனந்த மார்க்கம் சார்பில் அச்சம்பவத்திற்கு முன்பு தோழர் ஜோதி பாசு அவர்களைக் கொலை செய்வதற்கு ஆனந்தமார்க்கிகள் முயற்சிகள் மேற் கொண்டு அது தோல்வியுற்றதையும் அறிவோம். சிபிஐ சமர்ப்பித்த அறிக்கை யில் மேலும், 1995 ஆகஸ்ட் 18 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேக னில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்தான் என்னென்ன ஆயுதங்கள் வாங்க வேண் டும் என்று இறுதிப்படுத்தப்பட்டது என் றும், இக்கூட்டத்தில் கிம் டேவியும்,பீட்டர் பிளீச் என்பவனும் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சதிச் செயலில் ஆறு நாடுகளைச் சேர்ந் தவர்கள் கலந்து கொண்டிருப்பதன் மூலம் இது ஒரு சர்வதேச சதிச் செயல் என்ற உண்மையும் புலனாகியிருக்கிறது.

ஆனந்தமார்க்க அமைப்பின் வெறித் தனமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத் திற்கு தீனி போடுவதற்காகத்தான் இவ் வாறு ஆயுதங்கள் வீசப்பட்டன என்று கூறும் அதே சமயத்தில், தற்போது கிம் டேவியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள், உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவ்வாறு அபாயகரமான ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவத்தில் மத் திய அரசும் உடந்தையாக இருந்திருக் கிறது என்று தெரிய வருகிறது. மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைப் பலவீனப்படுத்த வேண் டும் என்பதற்காக, வங்கத்தில் இவ்வாறு வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கை களை மேற்கொள்ள அன்றைய பி.வி.நர சிம்மராவ் தலைமையிலான மத்திய காங் கிரஸ் அரசாங்கம் தங்களை அனுமதித் தது என்று கிம் டேவி குற்றம் சாட்டியிருக் கி றான். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன் றத்திற்கும் 1996இல் தேர்தல்கள் நடக்க வேண்டியிருந்தது. டேவி மேலும் ஒருபடி சென்று, எப்படித் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்க ளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, அங்கே ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த முன்பு முயற்சி நடந்ததோ, அதேபோன்று வங்கத்திலும் ஒரு நிலைமையை உருவாக் கக் கோரப்பட்டது என்றும் கூறியிருக் கிறான்.

அப்போது ஏற்பட்ட மர்மமான சம் பவங்களின் அடிப்படையில் இவனது கூற்றுக்களை ஆய்வு செய்தோமானால் இன்றைய தினம் வரைக்கும் பல விஷ யங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் எம்ஐ5 (ஆஐ 5) போன்ற சர்வ தேச புலனாய்வு அமைப்புகளிடமிருந்து இது தொடர்பாக வந்த தகவலை இந்திய அரசு அக்கறையுடன் எடுத்துக் கொள்ளா மல் தற்செயலாக எடுத்துக் கொண்டது. இவ்வாறு சர்வதேச ஸ்தாபனம் ஒன்று உஷாராக இருக்குமாறு அனுப்பிய தக வலை இந்திய அரசோ மேற்குவங்க மாநில அரசுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தது. அந்தத் தபால் ஆயு தங்கள் வீசப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தான் மாநில அரசாங்கத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதி யிலிருந்து ஒரு அயல்நாட்டு விமானம் நம் நாட்டின் வான்பாதைக்குள் நுழைய எப்படி அனுமதிக்கப்பட்டது? இவ்வாறு நுழைந்தது கவனிக்கப்படாமல் விடு பட்டுவிட்டது என்று கூறப்படுமானால், பின் அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளங்கக்கூடிய ஒரு ஆழ மான கவனக்குறைவாகும். ஆனால், அவ்வாறில்லாமல், அவ்விமானம் மத்திய அரசின் உடந்தையுடன்தான் நம் வான் பகுதிக்குள் வந்தது என்றால், அது அதை விட மிகவும் மோசமான விஷயமாகும். அது உண்மையாக இருக்குமானால், மத்திய அரசு மீது, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தைப் பலவீனப்ப டுத்திட வேண்டும் என்கிற அவா தொடர் பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின் றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை யாக இருக்கும் பட்சத்தில், மத்திய அர சாங்கமே நாட்டின் பாதுகாப்புக்குக் குந் தகம் விளைவிக்கும் விதத்தில், வெளி நாட்டு விமானத்திலிருந்து ஆயுதங் களைப் போட வைத்ததன் மூலம் மிகப் பெரிய மோசடியை அனுமதித்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசானது இத் தகைய முயற்சிகள் மூலமாக, நம் அர சியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங் களில் ஒன்றாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தையே அழித்திடக் கூடிய வகையில் செயல்பட்டிருக்கிறது என் றாகிறது. தன் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு வந்த மத்திய அரசாங்கமே தான், எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டதோ, அதே அரசியலமைப்புச் சட்டத்தினை அழித்திடத் தயாராகிவிட்டது என்றா கிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும். கொடிதிலும் கொடிய விஷயம் என்னவெனில், மேற்படி விமா னம் ஆயுதங்களை வீசியபின் இடை மறிக்கப்பட்டு மும்பை விமானத் தளத் தில் கீழிறக்கப்பட்டபோது, கிம் டேவி மிக வும் சுதந்திரமாக நடந்து செல்ல அனு மதிக்கப்பட்டிருக்கிறான். அவனுடன் வந்த கூட்டுக் களவாணியான பீட்டர் பிளீச் என்பவனும், அவனுக்கு உதவியாக வந்த மேலும் ஆறு பேரும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்கள்.

(இந்த ஆறு பேரும் லாட்வியர்கள். பின் னர் ரஷ்ய நாட்டுப் பிரஜா உரிமையைப் பெற்றனர்.) இந்த ஆறு பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பீட்டர் பிளீச் விசாரணை செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றான். ஆயினும் மிகவும் விசித்திரமான முறையிலும், விளக்கமுடி யாத வகையிலும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது பீட்டர் பிளீச்சை குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்று விடுதலை செய்திடத் தீர்மானித் தது. அவ்வாறு முடிவு எடுக்கும் சமயத் தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் திரிணாமுல் காங்கி ரஸ் தலைவியும் ஓர் உறுப்பினராக இருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளித்திட வேண்டும் என்று கோரிய மனுவை ஏற்றுக் கொள் வதற்கான பிரச்சனையே எழவில்லை என்று திரும்பத் திரும்ப அரசாங்கத்தால் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப் பட்டு வந்த பின்னணியில்தான் இவ் வாறு அரசாங்கம் முடிவெடுத்தது. பிளீச் தனக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரிய வேட்பு மனுவை, குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நிராகரித்து விட்டார் என்று அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, தில்லி உயர்நீதி மன்றத்தில் 2003 ஜூலை 3 அன்று தெரிவித்தார். ஆயினும், 2004 ஜனவரி 30 அன்று குடியரசுத் தலைவர் பீட்டர் பிளீச்சின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டம் 72(1)(பி) பிரிவின் கீழ் மீதமிருந்த தண்டனைக் காலத்தை கழித்தும், அவனை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஆணை பிறப்பித்து, ஆணை யின் நகலை மேற்கு வங்க உள்துறை செய லாளருக்கு அனுப்பி இருக்கிறார். இவ் வாறு பீட்டர் பிளீச், கொல்கத்தாவில் இந் திய சிறைகளில் எட்டு ஆண்டுகள் 30 நாட்களைக் கழித்த பின், அப்போது மத் திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியின் கீழான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். இக்குற்றத்துடன் சம்பந்தப் பட்ட கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொள் ளாமல் காலம் தாழ்த்தி வரக்கூடிய சூழ லில்தான், கைது செய்யப்பட்டு நீதிமன் றத்தால் தண்டிக்கப்பட்ட நபரை சுதந்தி ரமாக விடுவித்திடக்கூடிய நடவடிக்கை யும் எடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறாக, காங்கிரஸ் கட்சியும் பாஜக-வினால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜன நாயகக் கூட்டணியும்தான் இன்னமும் வெளியுலகத்திற்கு விளக்க முடியாத வகையில் விசித்திரமாகச் செயல்பட் டிருக்கின்றன. இன்றைய தினம் கிம் டேவி இவர்கள் குறித்துக் கூறியுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு இவர்களின் நடவடிக் கைகள் சான்றுகளாக அமையக்கூடிய விதத்தில் இருந்திருக்கின்றன.

இவ்வாறு வெளிநாட்டு விமானம் ஒன்று ஆயுதங்கள் வீசியதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கியிருந்த போதி லும், அப்போதைய காங்கிரஸ் அரசாங் கம் இது தொடர்பாக பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்துவிட்டு, இப்போது மேற்குவங்க தேர்தலில் திரிணா முல் காங்கிரசுடனான கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை சிதைப்பதற்காக இந்தத் தருணத்தில் இதனை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூச்சல் எழுப்புகிறது. டேவி யின் குற்றச்சாட்டுக்களை வெளிக் கொண்டு வந்த தொலைக்காட்சி அலை வரிசையின் கூற்றின்படி, இந்திய அர சாங்கம் தன்னை மீண்டும் இந்தியா விற்குக் கொண்டுவருவதற்காக நடவடிக் கைகளை நெருக்கியதை அடுத்தே, டேவி இவ்வாறு குற்றச்சாட்டுக்களைக் கூறி யுள்ளான் என்று தெரிவித்திருக்கிறது. 2010 ஏப்ரல் 27 அன்று ஊடகங்களில் வெளி யான செய்திகளின்படி, சர்வதேச அமைப்பான இண்டர்போல், டென்மார்க் அதிகாரிகள் புருலியா ஆயுதங்கள் வீசிய வழக்கின் மூளையாகச் செயல்பட்ட கிம் டேவியை இந்தியாவிற்கு அனுப்பி வைத் திடத் தீர்மானித்திருப்பதாக, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்குத் (சிபிஐக்கு) தெரிவித்திருந்தது. கிம் டேவி, இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு, இந்திய நீதிமன்றங்களின் முன் நிறுத்தப் பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டியது, இந்தியப் பாதுகாப்பின் நலன்களுக்கு அத்தியாவசியமானதாகும். அதே போன்று இது தொடர்பாக நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து தில்லு முல்லுகள் குறித்தும், அன்றைய மத்திய அரசாங்கம் அவற்றிற்கு உடந்தையாக இருந்ததா என்பது குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதே போன்று, இந்திய ஜனநாயகத்தின் நலன் கள் கருதி, பீட்டர் பிளீச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கக் காலத்தில், குடி யரசுத் தலைவரின் மன்னிப்புக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் குறித்தும் ஐயந் திரிபற பதிலளிக்கப்பட வேண்டும். இவ் வாறு அனைத்து சூழ்நிலைகள் குறித்தும் ஆய்வு செய்திட உடனடியாக ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்ட நடைமுறையை அழித்திடக்கூடிய வகையில் எவ்வித முயற்சி மேற்கொள்ளப்படுவதையும் அனுமதிக்கக்கூடாது.

தமிழில்: ச.வீரமணி

No comments: