Showing posts with label Food Security. Show all posts
Showing posts with label Food Security. Show all posts

Sunday, June 9, 2013

உணவுப் பாதுகாப்பு: தேவை சிறப்பு உறுதியே



சத்தீஸ்கரில் சமீபத்தில் மாவோயிஸ்ட் டுகள் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, ஓர் அரசியல் கருத் தொற்றுமையை ஏற்படுத்திடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டிடலாம் என்று அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மூலமாக பரிந்துரைத்துள்ள அதே சமயத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர் வையும் கூட்டிடலாம் என்றும் மிகப்பெரிய அளவில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின் றன, ஆயினும் ஊடகங்களில் வெளி வந்துள்ள தக வல்களின் அடிப்படையில், உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவை நிறைவேற்று வதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்றும் தெரிகிறது. ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் நாடாளுமன்றத்தின் இரு அவை களின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற் றுகையில் அரசாங்கம் தன்னுடைய முதல் நூறு நாட்களில் அமல்படுத்தவிருக்கும் பல் வேறு நடவடிக்கைகள் குறித்துக் கூறி னார். அவ்வாறு அவர் பட்டியலிட்டதில் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவும் பிரதானமான ஒன்றாகும்.

அவ்வாறு அவர் கூறி நான்கு ஆண்டு கள் கழிந்து விட்டன. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக் கும், ஏற்புக்கும் கொண்டு வர அரசாங்கத்தால் இன்னமும் முடியவில்லை. அவ்வாறு அர சாங்கம் கொண்டு வருவதை எவரும் தடுத் திடவில்லை. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந் தால் அதனை எவராலும் தடுத்திருக்கவும் முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், அரசாங்கம் நாட்டுக்கும், நாட்டு மக்க ளுக்கும் கொடுத்த உறுதிமொழியை நிறை வேற்றாததற்காகத் தமக்குத் தாமே தான் குறை சொல்லிக் கொள்ள முடியுமே தவிர வேறு எவ ரையும் குறை சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர்தொடர் பாக எவ்விதமான வரையறையையும் ஏற்படுத் திடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 85(1)ஆவது விதி கூறுவதாவது: ‘‘குடியரசுத் தலைவர் அப்போதைக்கப்போது நாடாளுமன் றத்தின் ஒவ்வொரு அவையையும் கூட்டு வதற்கு, அவர் உசிதமெனக் கருதும் காலத் தையும், இடத்தையும் நிர்ணயம் செய்து அழைப் பாணை அனுப்பிடுவார். ஆனால், ஓர் அமர் வின் கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கும்,

அடுத்த அமர்வுக்காக நிர்ண யிக்கப்படும் கூட் டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையே ஆறு மாதங்கள் குறுக்கிடக்கூடாது.’’ எனவே அமைச்சரவையின் அறிவுரையின்படி, குடி யரசுத் தலைவர் வழக்கமாக காலங்காலமாகச் செய்துவருவதைப்போன்று, பட்ஜெட் கூட் டத்தொடர், மழைக்காலக் கூட்டத் தொடர் மற் றும் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆகிய மூன்று கூட்டத்தொடர் களுக்கும் கூடுதலாக, நாடாளுமன்றத் தைக் கூட்ட அழைப்பாணை அனுப்பிட லாம். ஆனால் மழைக்காலக் கூட் டத் தொடர் வழக்கமாக ஜூலையில் கூட்டப் படுமாதலால், அதற்கு முன் ஒரு கூட்டத் தொடர் என்பதில் அர்த்தமேதுமில்லை.ஊடகங்களின் வாயிலாக சிறப்புக் கூட் டத்தொடரை நடத்தவிருப்பதாக செய்திகளைக் கசியவிடுவதன் மூலம் ஐ.மு. கூட்டணி-2 அர சாங்கமானது மக்களுக்கு உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்திட மிகவும் உறுதி பூண்டிருப்பதுபோல் காட்டி அரசியல் ஆதா யம் தேட முயற்சித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. மாறாக, அரசாங்கத்திடம் கேட் கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில், இத னைக் கொண்டுவர நான்கு ஆண்டுகளாகக் காலம் கடத்தியது ஏன் என்பதுதான். எனவே இந்த விஷயத்தில் மக்களுக்கு இரண்டகம் செய்திருப்பது அரசாங்கம்தானேயொழிய வேறு யாருமல்ல

.அரசாங்கத்திற்குள் கணிசமான அள விற்கு குடுமிபிடிச்சண்டை நடைபெற்றபின் னர்தான் அரசாங்கம், அனைவருக்கும் 25 கிலோ கிராம் உணவு தானியங்கள் - அரிசி கிலோ 3 ரூபாய் என்ற வீதத்திலும் கோதுமை கிலோ 2 ரூபாய் என்ற வீதத்திலும், இதர தானி யங்கள் கிலோ 1 ரூபாய் என்ற வீதத்திலும் வழங்கிட முன்மொழிவினை ஏற்படுத்தி இருப் பதாகக் கடைசியாகத் தெரிய வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் (கிராமப்புறங்களில் 75 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 50 விழுக் காடும் என்கிற முறையில்) நாட்டு மக்களில் 67 விழுக்காட்டினரைச் சென்றடையக் கூடிய விதத்தில் முன் மொழிவு உருவாக்கப்பட்டிருக் கிறது. கடந்த காலங்களில் இப்பகுதியில் நாம் திரும்பத் திரும்ப பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, நம் நாட்டிலிருந்து பசி - பஞ்சம் - பட்டினியை ஒழித்துக்கட்ட இது போதுமானதல்ல. ஓர் அர்த்தமுள்ள விதத்தில் உணவுப் பாதுகாப்பு அமைந் திட வேண்டு மானால் நாட்டிலுள்ள அனைத்துக் குடும் பத்தினருக்கும் - குறைந்தபட்சம் 90 விழுக் காட்டினர் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய்க்கு மிகைப் படாத வீதத்தில் அளித்திட வேண்டும். இதற் குக் குறைந்த எவ்வித நடவடிக்கையாலும் நாட்டுமக்களுக்கு முழுமையான அளவில் உணவுப் பாதுகாப்பை அளித்திட முடியாது. ஆயினும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் இதனை ஏற்க மறுக்கிறது.மேலும் உணவுப்பாதுகாப்பு என்பது உண் மையிலேயே மக்களைச் சென்றடைய வேண் டுமானால் அதனை பொதுவிநியோக முறையை அனைவருக்குமான ஒன்றாக மாற்றி, நாட்டு மக்கள் அனைவ ரையும் அதன் கீழ் கொண்டு வருவதன் மூலமே செய்திட முடியும். இவ் வாறு செய்வதற்குப் பதிலாக, நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் நேரடி பணப் பட்டுவாடா என்னும் திட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது. ஆனால் இத்திட்டம் அமல்படுத்தப் பட்டால், இதன்மூலம் பொது விநியோக முறை என்பதே அவசியமற்ற ஒன்றாக மாறிப்போகும்.

ஏனெ னில் அரசாங்கம் மக்களிடம் பொருள்களைத் தாங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு வெளிச்சந்தையில்தான் வாங்குமாறு கேட் டுக்கொள்கிறது. பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கு மிகச்சிறந்த வழிமுறை இதைவிட வேறெதுவும் கிடையாது.மேலும் பணவீக்கம் அதிகரித்துக் கொண் டிருப்பதால், மக்களுக்குத் தரப் படும் பணத் தின் உண்மையான மதிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும். விளைவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள் ளப்படுவார்கள். பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்பட்டு, மக்கள் மேலும் மிகப்பெரிய அளவில் வறுமைக் குழிக்குள் தள்ளப்படுவது என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும். இவ்வாறு பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்படுவதென்பது மற்றுமொரு மோச மான பாதிப்பை ஏற்படுத் திடும். தற்சமயம் உணவு தானியங்களை அரசாங்கமே நிர்ண யம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயி களிடமிருந்து கொள் முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய் யப்படும் உணவுதானியங்கள் பின்னர் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிர் ணயிக்கப்பட்ட விலையில் விநியோகிக் கப்படுகின்றன. பொது விநியோக முறை ஒழித் துக்கட்டப்பட்டபின்பு அரசாங்கம் இவ்வாறு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழப்போவதில்லை. இவ் வாறாக விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தரவேண்டிய பொறுப்பிலிருந் தும் அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள் கிறது. அதன்மூலம் அரசாங்கம் விவசாயிக ளுக்கு இதுவரை மிகக் குறைந்த அளவில் என்ற போதிலும் அளித்து வந்த பொருளா தாரப் பாதுகாப்பையும் பறித்துக் கொள்கிறது. மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி அதன்மூலம் அவர்களை பசி - பஞ்சம் - பட் டினிக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து நேரடி பணப் பட்டுவாடா திட்டத் தின் மூலமாக, அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள்வது மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்பதிலிருந்தும் தன்னைக் கழட்டிக் கொள்கிறது.
இத்தகைய நடவடிக்கை மூலமாக அர சாங்கமானது மக்களைக் கொஞ்சமா வது பசி - பஞ்சம் - பட்டினியிலிருந்துக் காப்பாற்றும் வண்ணம் அளித்து வந்த மிகச் சொற்ப அள விலான மானியங்க ளையும் கொஞ்சம் கொஞ் சமாகத் தொடர்ந்து குறைக்கத் திட்டமிட் டிருக்கிறது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்காக அளித்து வந்த மானியங்களையும் இனி கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறது.வேறுவார்த்தைகளில் சொல்வதானால், தற்போது அரசாங்கம் மக்களின் கண்களைக் கட்டி வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அர சாங்கம் கொண்டுவரவி ருக்கும் உணவுப் பாது காப்புச்சட்ட முன்வடிவோ அல்லது பணப் பட்டுவாடா திட்டமோ மக்களுக்குத் தேவை யான நிவாரணத்தை அளித்திட முடியாது. மாறாக காலம் செல்லச் செல்ல விலைவாசி கள் உயர்ந்துகொண்டே செல்லும்போது, இத் தகையப் பணப் பட்டுவாடாக்கள் குடும்பத் தின் உணவு ஊட்டத்திற்குரிய தேவைகளை எதிர்கொள்ள போதாததாக மாறிவிடும். இவ் வாறு ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர் களை வறுமைக்குழிக்குள் தள்ள திட்டமிட்டி ருக்கிறது.

எனவே இப்போது நமக்குத் தேவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் அல்ல. மாறாகத் தேவைப்படுவது என்னவெ னில் மக்களுக்கு உண்மை யான முறையில் உணவுப் பாதுகாப்பை அளிப்பதற்கான உறுதி யேயாகும். மக்கள் முதலில் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பின்னர் தங் கள் வாழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கேற்ற முறையில் அனை வருக்குமான பொது விநியோக முறையை உத் தரவாதப்படுத்திட வேண்டும், அதற்குத் தேவையான அளவு ஒதுக்கீடுகளையும் செய் திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


Saturday, May 28, 2011

உணவுப் பாதுகாப்பு உதிர்கிறதா?



தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) கொண்டுவரப்படும் என்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் அறி வித்து ஈராண்டுகள் ஓடிவிட்டன. குடியரசுத் தலைவர் 15ஆவது மக்களவைத் தேர்த லுக்குப்பின் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப் பினர்களின் கூட்டு அமர்வில் தன் முதல் உரையை நிகழ்த்துகையில், ‘தன்னுடைய அரசாங்கம்’ அடுத்த முதல் நூறு நாட்க ளுக்குள் அத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றும் என்று அறிவித்திருந்தார். நம் நாட் டில் நிலவும் வறுமையின் கொடுமை குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், இத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றுவதில் அரசுத்தரப்பில் தொடர்ந்து சாக்குப்போக்குகள் சொல்லப்படுகின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பொது நல மனு ஒன் றில் திட்டக் கமிஷன் தன்னையும் ஒரு பிரதி வாதியாக இணைத்துக் கொண்டு, ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், நகர்ப் புறத்தில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாயும், கிராமப்புறத்தில் இருப்பவர் களுக்கு 15 ரூபாயும் அவர்களின் அத்தியா வசியத் தேவைகளுக்காக அளிக்கப்படுமா யின், அவர்களை வறுமையிலிருந்து அகற்றிட அது போதுமானது என்று குறிப்பிட்டிருக் கிறது. இதன் உட்பொருள் என்னவெனில், கொண்டுவரப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் இதற்கு மேல் வருமானம் உடைய எவரும் வரமாட்டார்கள் என்பதாகும்.

திட்டக் கமிஷனின் அபிப்பிராயத்தின்படி, நகரங்களில் வாழ்பவர்களில் எவரேனும் மாதத்திற்கு 578 ரூபாய் வருமானம் உடைய வர்களாக இருந்தால், அவர்கள் ஏழைகள் என்று அதிகாரபூர்வமாகக் கருதப்பட மாட் டார்கள். அதன் அறிக்கையின்படி, இந்தத் தொகையில் அவர்கள் வாடகை மற்றும் பயணச் செலவிற்காக அளித்திடும் 31 ரூபாய், அவர்கள் கல்விக்காகச் செலவிடும் 18 ரூபாய், மருந்துகள் வாங்குவதற்காகச் செலவிடும் 25 ரூபாய், மற்றும் காய்கறிகளுக்காகச் செல விடும் 36.5 ரூபாயும் அடக்கம். ஏளனம் செய் கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? உண்மையில், இரண்டையுமேதான் செய்கிறார்கள்.

திட்டக் கமிஷன் அளித்துள்ள மேற்படி புள்ளிவிவரங்களை, அது அளித்துள்ள மற் றொரு புள்ளி விவரத்திலிருந்தே எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் உயிர்வாழ்வதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 2,400 கலோரி கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வரும் நாளொன்றுக்கு 44 ரூபாய் செலவிட வேண்டும். இந்தச் செலவினத்தில் அவர்க ளின் உறைவிடம், உடை, கல்வி, போக்குவரத் துச் செலவினங்கள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திட்டக் கமிஷன், தன்னுடைய ஆய்வின் அடிப்படையில், நம் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 33 விழுக்காடு என்று முடிவு செய்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் வறுமை விகிதம் 46 விழுக்காடு என்று பரிந்துரைத்தி ருக்கிறது. ‘‘நம் நாட்டின் மக்கள் தொகை யில் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிற அர்ஜுன் சென்குப்தா மதிப்பீட்டைவிட இவ்விரண்டு மதிப்பீடுகளுமே மிகவும் குறைவானவைகளாகும்.

இத்தகைய பாசாங்குத்தனமான வரை யறைகள் நம் நாட்டில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசின் பொறுப்பை எள்ளிநகையாடுவதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவை அர சாங்கம் மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் உண்மையான நோக்கத்தினையும் மூடி மறைக்கின்றன. அதாவது இரு வேறு இந்தியர் களுக்கும் இடைவெளி மேலும் அதிகமாகி இருக்கிறது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்ப ட் டிருக்கிறார்கள்.

இதேசமயத்தில், சென்ற வாரம் கூடிய மத்திய அமைச்சரவையானது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் அதன் பொரு ளாதாரம், சாதி மற்றும் மத அடிப்படைகளின் பின்னணியில் தேசிய அளவில் சர்வே செய்திட ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தி யப் பதிவுத் தலைவர் அவர்களிடம், மக்களின் சாதி மற்றும் மதப் பின்னணி குறித்துக் கணக்கெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொள்ள ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கு சென்ற முறை 2002இல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தடவை இதில் நகர்ப்புறங்களும் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது. நகர்ப்புறங் களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களைக் கண்டறிய மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொள்ளுமாறு அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அதாவது, முதலா வது காரணியாக இருப்பிடத்தையும், இரண்டா வது காரணியாக கல்வியின்மை, நீண்டகாலம் நீடித்திருக்கிற இயலாமை, குடும்பத்தலைவ ராகப் பெண் இருத்தல் முதலான சமூகப் பல வீனங்களையும் மூன்றாவது காரணியாக முறைசாராச் தொழில், நிரந்தரமற்ற தொழில், குறைந்த ஊதியம் உடைய தொழில் போன்ற வேலைவாய்ப்புக் குறைபாடுகளையும் எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமையைக் கண்ட றியும் பணி வேறு விதத்தில் செய்யப்பட இருக் கிறது. கிராமப்புறங்களில் மக்கள்தொகை மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட இருக்கின் றன. (தொலைபேசி இணைப்புகள், குளிர் பதன சாதனங்கள் (சநகசபைநசயவடிசள), ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உடையவர்கள் போன்ற) உயர் பணக்காரக் குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு விடும். புராதனப் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவர்கள், ஆதரவற்றவர்கள், மலம் சுமப்பவர் கள் போன்று அடிமட்டத்தில் உள்ளவர்கள் இயல்பாகவே இணைத்துக்கொள்ளப்படு வார்கள். இரண்டுக்கும் இடைப்பட்டவர் களைப் பொறுத்துத்தான் பிரச்சனை. இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கருதப்பட வேண்டுமானால் ஏழு வித மான இயலாமையைப் பெற்றிருக்க வேண் டும். இந்த ‘‘ஏழு விதமான இயலாமை’’ குறித்துத்தான் குறிப்பிடத்தக்க அளவில் குழப்பங்கள் இருந்து வருகின்றன.

நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய தகவல் களின்படி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கணக்கிடும் முறையின்படி, ஓர் ஐந்துபேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஓராண் டிற்கு 27 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமா னம் ஈட்டும் என்றால், அது தானாகவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பட்டியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது எனக் கருதப்படும். அதாவது மாதத் திற்கு 447 ரூபாய்க்கும் மேல் வருமானம் உடைய குடும்பம் ஏழைகளின் பட்டியலி லிருந்து நீக்கப்படப் போதுமானது. ‘கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு 15 ரூபாய் வருமா னம் உடையவர் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்பவர் என்று மதிப்பிடப் போதுமானது’ என் கிற திட்டக் கமிஷனின் மதிப்பீட்டுடன் இது மிகச் சரியாக ஒத்துப்போகிறது.

இவ்வாறு, மத்திய அமைச்சரவையால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் குறித்து கொண்டுவரப்பட்டிருக்கும் கணக் கீடானது, திட்டக் கமிஷனால் முன்வைக்கப் படுகிற ஏளனத்திற்குரிய மோசடியான கணக் கீட்டையே மீளக் கூறுகிறது. மேலும் இத்த கைய மதிப்பீடு குறித்து எந்த மாநில அரசுக் கேனும் சந்தேகம் வந்தால், அது திட்டக்கமி ஷனுடன் கலந்து பேசி அதனைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தக் கணக் குகள் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பொது விநியோக முறை யிலும், கொண்டுவரப்பட இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் உணவு தானி யங்களை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. என வே, பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு தானியங் களை விநியோகிப்பதில் தற்போதுள்ள பிரச்ச னைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு மேலும் சிரமங்களைத் தந்திடும் என்பது தெளிவு.

நம் நாட்டில் உருப்படியான முறையில் உணவுப் பாதுகாப்பு எதுவும் ஏற்படுத்த முடியு மானால் அது, பொது விநியோக முறையை வலுப்படுத்தி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் (அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் சரி அல்லது வறுமைக் கோட்டுக்கு மேல் இருந்தாலும் சரி) மாதம் ஒன்றுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் வீதம் அளிப் பதை உத்தரவாதம் செய்வதில்தான் இருக் கிறது. இதற்குப் பதிலாக, இவ்வாறு மோசடி யான கணக்குகளை மத்திய அரசு கூறுமா னால், அது மக்களை மோசடி செய்கிறது என் றே அர்த்தம். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கக்கூடிய அள விற்கு நாட்டில் போதிய அளவிற்கு வளங்கள் இல்லை என்று ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. இதுவும் மோசடியான ஒன்றேயா கும். நாட்டில் நடைபெற்றுள்ள மற்றெல்லா ஊழல்களையும் விட்டுவிடுங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணம் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பினை அளிப்பதற்குப் போதுமானதை விட அதிகமாகும்.

இவ்வாறு மிகப் பிரம்மாண்டமான முறை யில் ஆட்சியில் உள்ளவர்கள் கொள்ளை யடித்த பணத்தை மீண்டும் கைப்பற்றி, அவற் றை மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன் னேற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகை யில், வலுவான மக்கள் கிளர்ச்சிகள் நடத்தி, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்திற்கு வலு வான நிர்ப்பந்தங்களை அளித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி