Thursday, November 8, 2012

புரட்சியின் தணலை அணைக்க முடியாது



சுகுமால் சென்

சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால் வர்ணிக்கப்பட்ட அக்டோபர் புரட்சியின் நாட்கள். மற்றொன்று, 1956 பிப்ரவரி 14 - 25 தேதிகளில் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரஸ். இருபதாம் நூற்றாண்டின் தத்து வார்த்த அல்லது அரசியல் இயக்க வரலாற் றில் இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில் லை. மிகவும் எளிய வார்த்தைகளில் சொல்வ தென்றால், முதலாவது நிகழ்வான அக்டோபர் புரட்சி உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உரு வாக்கியது என்றால், இரண்டாவதாகக் கூறப் பட்ட சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20ஆவது காங்கிரஸ் அதனை அழித்தது.

- இவ்வாறுதான் உலகப் புகழ்பெற்ற, சமீ பத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் வரலாற்றாசிரியர் தோழர் எரிக் ஹாப்ஸ்வாம் கூறினார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், சமீபகாலங் களில் நடைபெற்ற போராட்டங்கள் உட்பட உழைக்கும் மக்கள் போராட்டங்கள் அனைத் தையும் முழுமையாக ஆய்வு செய்து, அவர் இவ்வாறு கூறினார். உண்மையில், ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீடு என்பவரால் 1917 நவம்பரில் ரஷ்ய தொழி லாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த பேரெழுச்சி அந்தப் பத்து நாட்களில் எப்படி உலகத்தை அது குலுக்கிக் கொண்டிருந்தது என்பதையும், அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது என் பதையும் தான் கண்ணால் கண்ட விவரங் களைக் கொண்டு பதிவு செய்த ஒரு புத்தகமாகும்.இதேபோன்றுதான், 1881இல் ஆயுதந் தாங்கிய பிரெஞ்சு தொழிலாளர் வர்க்கத்தால் நடத்தப்பட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியை ஆய்வு செய்த காரல் மார்க்சும் அதனை வெகு வாகப் புகழ்ந்தார். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக பாரிஸ் கம்யூன் புரட்சி இரு மாதங்களுக்கும் மேல் நீடிக்க முடியவில்லை. மார்க்ஸ் அதன் தோல்விகளுக்கான காரணங்களை விளக்கி னார். ஆயினும் அவர், பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் என்றால் நடைமுறையில் அதன் பொருள் என்ன என்பதை - அதாவது, முத லாளிகளின் வர்க்க ஆட்சி என்பது தொழி லாளர்களின் வர்க்க ஆட்சியால் மாற்றி வைக் கப்பட்டது என்பதைப் - பார்க்க வேண்டும் என்று உலகத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால், ரஷ்யப் புரட்சியோ வேறு வகை யானது. அது லெனின் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட ரஷ்யத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆயுதப் புரட்சியாகும். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம், லெனினது வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு கட்டுப்பாடும் அர்ப்பணிப்பும் கொண்ட படையினால் கட்டப் பட்டிருந்தது. அது உலகைப் பாதிக்கும் முக்கிய அம்சங்கள் அனைத்தின் மீதும் தலையிடும் ஓர் இயக்கமாக மாறியது. ஏனெனில் அது நாஜி ஜெர்மனியை நார் நாராகக் கிழித்தெறிந்து, போருக்குப்பின் வல்லரசாக (superpower) மாறிய சோவியத் யூனியன் சோசலிசக் குடி யரசுடன் பிணைக்கப்பட்ட ஒன்று. போல்ஷ்விசம் நலிந்த ஆனால் மிகப்பெரிய அளவி லான ஒரு பிற்பட்ட நாட்டை ஒரு வல்லரசு நாடாக மாற்றி அமைத்தது. மற்ற நாடுகளிலும் சோசலிசத்தை அடைவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும், காலனி யாதிக்கம் மற்றும் அரைக்காலனியாதிக்கத் திற்கு எதிரான விடுதலைப் போராட்டங்களும் அதன் ஆதரவைச் சார்ந்தும், சில சமயங் களில் உண்மையான பாதுகாப்பையும் அவற்றிற்கு அளித்தன. அதன் பலவீனங்கள் என்னவாக இருந்தபோதிலும், அது இருந்தவரை சோசலிசம் ஒரு கனவு அல்ல நிஜம் என்பது மெய்ப்பிக்கப்பட்டது. ரஷ்யா என்னும் ஒரு நாட்டில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் சங்கிலியின் கண்ணிகளை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சமயத் தில் பனிப் போர் வாதிகளின் கம்யூனிச எதிர்ப் புப் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.
உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்டுகளை அவர்கள் மாஸ்கோவின் ஏஜெண்டுகள் என்றெல்லாம் முத்திரை குத்தினார்கள்.1917லிருந்து 1990 வரை - 73 ஆண்டுகள் - சோசலிஸ்ட் ஆட்சிக்குப்பின், சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1991இல் தகர்ந்தது. இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் திகைத்துத் தடுமாறி நின்றன. சோவியத் யூனியனில் சோசலிசத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்யத் தொடங்கின. ஆனால், இதற்கிடையில் சில நாடுகளில் உள்ள சில கம்யூனிஸ்ட் கட்சிகள் சுக்குநூறாக உடைந்தன அல்லது இரண்டாக உடைந்தன. ஒரு சில மட்டும் தங்களுடைய கட்டமைப்பை உருக்குலையாமல் கட்டிக்காத்தன. தங்களுடைய நடவடிக்கைகளை சோவியத் யூனியனின் வழிகாட்டுதல் அல்லது அறிவுரை எதுவுமின்றி தொடர்ந்து செயல்படத் தொடங்கின. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அந் நாட்கள் மிகவும் நெருக்கடியான காலகட்ட மாகும். ஆனால் இன்றைய தினம், அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்களும் முதலாளித்துவ ஆட்சியின் மீதான - அதன் தற்போதைய பாஷையான நவீன தாராளமய உலகமயம் மீதான - தாக்குதல்களை மீண்டும் தொடுத்துள்ளன. இதுநாள் வரை முதலாளித்துவம் தான், தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் உலகின் உள்ள ஏழை மக்கள் மீதும் மிகவும் மூர்க்கத் தனமான முறையில் தாக்குதலைத் தொடுத் திருந்தது. இப்போது அதே வேகத்தில் உலகத் தொழிலாளர் வர்க்கம் திருப்பித் தாக்கத் தொடங்கி இருக்கிறது. சோவியத் யூனியனில் சோசலிசக் கட்ட மைப்பை உருவாக்குவது தோல்வியுற்றதை அடுத்து சோசலிசம் தொடர்பாகப் பாரம்பரிய மாகக் கொண்டிருந்த கருத்துக்கள் மீதே சந்தேகங்கள் எழத் தொடங்கிவிட்டன. சமூக உடைமையுடன் திட்டமிட்ட வகையில் உற்பத்தி, விநியோகம் மற்றும் உற்பத்தி கருவிகள் என்ற அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் என்பது வேறு. இத்தகைய பொருளாதார அமைப்பினை முதல் உலகப் போருக்கு முன்னர் சோசலிஸ்ட்டுகள் அல்லாத பொரு ளாதாரவாதிகள் கூட ஏற்றுக்கொண்டிருந் தார்கள். இதனை அமல்படுத்துவதில் நடை முறையில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்க லாம். அவற்றை அதிகாரவர்க்கம் மூலமாக அமல்படுத்தியது அதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம். ஆயினும் ஒரு குறிப்பிட்ட அள விற்கு அது வேலை செய்தது என்பதில் சந் தேகமில்லை. குறிப்பாக விலைகளை நிர்ண யிப்பதில், சந்தை விலையும், அரசு நிர்ணயித்த விலையும் இணைந்தே வேலை செய்தன. மேலும் சோசலிசத்தைக் கட்டியமைக்கும் சமயத்தில், நுகர்வோருக்கு எது நல்லது என்று சொல்லிக்கொண்டிருந்ததைவிட அவர் களின் விருப்பங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். உண்மையில், மேற்கத்திய நாடுகளிலிருந்த சோசலிஸ்ட் பொருளாதாரவாதிகள் 1930களில் இவை குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். கலப்புப் பொருளாதாரத்தை மக்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள். சோசலிசம் என்பதன் பொருள் பொதுவாக ஒன்று. சோவியத் யூனியனில் கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சோசலிசம் என்பது இதிலிருந்து வேறானது. அவ்வாறு சோவியத் யூனியனில் பின்பற்றப்பட்ட சோசலிசம்தான் 20வது கட்சிக் காங்கிரசுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் விளைவாக அழிவுற்றது.
சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு ஏன் தோல்வியடைந்தது, ஏன் தகர்ந்தது? காரல் மார்க்ஸ், 1859இல் இதனை முன்னுணரும் வகையில் ஓர் ஆய்வினை முன் வைத் திருக்கிறார்.

‘‘மனிதகுலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது, நிச்சயமான, தங்கள் விருப்பத்திற் கேற்ப அவசியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அத்தகைய உற்பத்தி உறவுகள் அவர்களுடைய பொருளியல் (material) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஒரு நிலையான கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது. வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளியல் உற்பத்தி சக்திகள் ஏற்கனவே இருக்கின்ற உற்பத்தி உறவுகளுடன் முரண்பட முனைகிறது, அல்லது, இதன் சட்டரீதியான விளக்கம் என்னவெனில், சொத்துடைய உறவுகளுடன் முரண்பட முனைகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வடிவங்களிலிருந்து இத்தகைய உறவுகள் அவர்களுடைய கால் விலங்குகளாக மாறுகின்றன. இந்நிலையில் நாம் சமூ கப் புரட்சி சகாப்தத்திற்குள் நுழைகிறோம்.’’
சமூகப் புரட்சி தொடர்பாக உருவாகியுள்ள சூழ்நிலை குறித்து மார்க்சின் தத்துவார்த்த நிலையினை எவரும் மறுத்திட மாட்டார்கள். மார்க்சின் மேற்கூறிய கூற்று, ரஷ்யப் புரட்சி குறித்த ஆய்வுக்கும் பொருந்துமா என்று ஒரு சிலர் வாதிடலாம். ஆனாலும், மார்க்சிய புரட்சிகர தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடிய நடவடிக்கைகள் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின் - ஸ்டாலின் காலத்திற்குப்பின் நடந்த முதல் காங்கிரசுக்குப்பின் - தொடரப்பட்டு, நடைமுறையில் சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு நிலைகுலைவதற்கான தளத்தைத் தயார் செய்தது. இதன் காரணமாகத்தான் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்தக் கொந்தளிப்பில் சிக்கிக்கொண்டது. அது இன்றளவும் தொடர்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதுதொடர்பாகவும், வரலாற்று உண்மையினை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கும் எரிக் ஹாப்ஸ்வாம் அவர் களின் மேற்கோள் குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் அபூர்வமான ஒன்று என்று சிலர் வாதிடலாம். இதற்கு அவர்கள், புரட்சிக் குப் பின், பிற்போக்கான விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த சோவியத் யூனியன் மிகவும் முற்போக்கான தொழில்மயத்தை எட்டிய நாடாக உயர வில்லையா என்று கூறலாம். ரஷ்யப் புரட்சி யைப் பொறுத்தவரை இது விவாதத்திற்கான ஒரு அம்சம்தான். ஆயினும், சோவியத் யூனியன் சுக்குநூறாக உடைந்தது என்பதும் உண்மை. இத்தகைய இறுதித் தகர்வுக்கு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் பங்கினை ஹாப்ஸ்வாம் விளக்குகிறார்.
பழைய அமைப்பு முறை தூக்கி எறியப் பட்டு புதிதாக ஒன்று அமைக்கப் படுகையில் அது முந்தையதைவிட சிறந்ததான ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்கிற மார்க்சின் 19ஆம் நூற்றாண்டைய நன்னம்பிக்கையை இனி மேலும் நாம் பின்பற்ற முடியாது. ஏனெனில், ‘மனிதகுலம் எப்போதும் தன்னால் தீர்க்க முடியும் என்கிற பிரச்சனைகளையே தீர்வு கண்டிருக்கிறது.ஆனால், ‘மனிதகுலம்அல்லது ஒருவகையில் போல்ஷ்விக்குகள் 1917இல் எதிர்கொண்ட பிரச்சனைகள் அவர்களுடைய காலகட்டத்தில் மட்டும் தீர்வுகாணக்கூடியவை அல்ல, அல்லது முழுமையாகத் தீர்வு காணக்கூடியவை அல்ல.போல்ஷ்விக்குகள் மீது அமெரிக்காவும், இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பனிப் போரில் ஈடுபட்டு அவர்களுக்குப் பல்வகைகளிலும் நெருக்கடிகளைப் கொடுத்ததை எவரும் அலட்சியப்படுத்திட முடியாது. ஆயினும் அவற்றையெல்லாம் வீரத்துடனும் விவேகத்துடனும் எதிர்கொண்டுப் பொடிப் பொடியாக்கி, கலை, அறிவியல், கலாச்சாரம் மற்றும் சமூக சமத்துவத்தில் அளப்பரிய சாதனைகளைப் படைத்ததை காணத் தவறி னோமானால் அது குற்றமாகும்.
சோவியத் கம்யூனிசம் நிலை குலைந்ததனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கண்டிடலாம் என்று இன்றைய தினம் கூறிட முடியுமா? சோவியத்யூனியன் சோசலிசக் குடியரசு வீழ்ந்தபின், சோசலிசத்தை அமைக்கும் பணி முடிவுக்கு வந்துவிட்டது என்று சிலர் கூறினார்கள். சோவியத் யூனியனில் அல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளின் கீழ் ஆட்சியில் உள்ள சீனா போன்ற நாடுகளும் கூட சோவியத் யூனியன் முன்பு கடைப்பிடித்ததைப் போன்று, சந்தை சக்திகளின் தயவின்றி, முழுமையாக அரசுக் கட்டுப்பாட்டில் அல்லது கூட்டுறவு அடிப்படையில் பொருளாதார நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை. சோவியத் சோதனை முயற்சி என்பது முதலாளித்துவத்திற்கான மாற்றாகத் திட்ட மிடப்படவில்லை.

ஆனால், அவை மிகவும் பரந்து விரிந்த அளவிலான பிற்பட்ட நாடு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள், வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சாதனைகளைப் படைத் தவை களாகும்.
எரிக் ஹாப்ஸ்வாம் தன் சொந்த அனுபவம் ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். ‘‘1930களில் சோசலிஸ்ட் பொருளாதாரவாதிகளின் மிகவும் பேசப்பட்ட ஆஸ்கார் லாங்கே அமெரிக்காவிலிருந்து, சோசலிசத்தைக் கட்டுவதற்காகத் தன்னுடைய சொந்த நாடான போலந்துக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், உடல்நலிவுற்று லண்டனில் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே அவர் மரணமடைந்துவிட்டார். அவ்வாறு மரணப்படுக்கையில் அவர் இருந்த சமயத்தில் நலம் விசாரிக்க வந்த தன் நண்பர்களி டமும் ஆதரவாளர்களிடமும் தன்னிடமும் அவர் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். அதனை நான் மீண்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர், ‘‘1920களில் நான் ரஷ்யாவில் இருந்திருந்தால், சோவியத் தொழிமயமாதல் குறித்து ஒரு வரையறைக்கு உட்பட்டுத்தான் திட்டங்களைப் பரிந்துரைத் திருந்திருப்பேன். நிச்சயமாக, சோவியத் யூனியன் தன்னுடைய முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் செய்ததைப்போன்று, அடிப் படையில் திட்டமிடப்படாத வேகத்துடன், மிகவும் முரட்டுத்தனமான, கண்மூடித்தனமான மாற்றை பரிந்துரைத்திட என்னால் முடிந்திருக்காது. ஆனாலும் அவர்கள் இதனைச் செய்து காட்டியிருக்கிறார்களே. எப்படி இது சாத்தியம்? இதற்கான பதிலை என்னால் காணவே முடியவில்லை,’’ என்றார். அவர்கள் தனிவார்ப்பாலானவர்கள் என்பதை அவர் காணத் தவறிவிட்டார்.

ஆஸ்கார் லாங்கே மரணப் படுக்கையி லிருந்த போது இவ்வாறு வினா எழுப்பினார். இதற்கு யார் பதில் சொல்ல முடியும்? சோவி யத் பாணியிலான சோசலிசத்தை விமர்சிக்கிறவர்கள், இதற்குப் பதிலளிக்க முடியுமா?
1917 நவம்பர் புரட்சியின் தணலை எவ ராலும் தணிக்கஇயலாது. அது என்றென்றும் கனன்றுகொண்டிருக்கும். நம்முன் உள்ள புறச்சூழ்நிலைகளை மிகவும் முறையாகக் கையாளுவோமேயானால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவோமேயானால், நம்பிக்கை யிழப்பதற்கான காரணம் எதுவுமே இல்லை. முந்தைய சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு வீழ்ச்சியடைந்திருந்தால் என்ன? அதனைத் தொடர்ந்து ஏகாதிபத்தியமும் அதன் கீழ் இயங்கும் ஏஜென்சிகளும் பொருளாதார மற்றும் ராணுவத் தாக்கு தல்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தால் என்ன? அவற்றை நிச்சயமாக நிர்மூலமாக்கி முன்னேறிட முடியும். இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமான நிபந்தனை என்னவெனில், மேலே நாம் விவாதித்ததைப்போன்ற அம்சங்களுடன், தத்துவார்த்தத் தெளிவும், உருக்குபோன்று உறுதியும், கட்டுப்பாடும் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அதன் தலைவர்களும் உறுப்பினர்களுமே யாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: