Tuesday, November 6, 2012

நவம்பர் புரட்சியின் வெளிச்சத்தில் முன்னேறுவோம்!


சீத்தாராம் யெச்சூரி எம்.பி.


இன்று ரஷ்யப் புரட்சியின் 95ஆவது ஆண்டு தினமாகும் . உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பின் னணியில் இன்றைய புரட்சி தினம் வந் திருக்கிறது. பல அம்சங்களில், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியானது, 1930 களில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட பெரும் மந்தநிலைமையைவிட மிகவும் மோசமான விதத்தில் பல்வேறு விதங் களில் ஊடுருவிப் பரவியிருக்கிறது. நெருக் கடி உருவாகி அதன் ஐந்தாவது ஆண் டில் அது அடியெடுத்து வைத்திருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உட்பட மாபெரும் முதலாளித் துவ பொருளாதாரங்கள் மந்த நிலை மைகளிலேயே நீடிப்பது தொடர்கிறது. ஐரோப்பாவில் பத்து நாடுகள், தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியில் இருப்பதைஅடுத்து, இன் றளவும் மந்தநிலையில் இருப்பதாக அதி காரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக் கின்றன. (ஐரோப்பிய மண்டலத்தின் கீழ் வரும் 17 நாடுகளில்) இத்தாலி, ஸ்பெ யின், பெல்ஜியம், அயர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா, நெதர்லாந்து ஆகிய ஏழு நாடுகளும், இங்கிலாந்து, டென் மார்க், செக் குடியரசு ஆகிய மூன்று நாடு களும் ஆக மொத்தம் பத்து நாடுகளே இவையாகும். அதன் விளைவாக இந் நாடுகளில் வேலையில்லாத் திண்டாட் டம் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களில் 51 விழுக்காட்டினர் கிரீஸிலும், ஸ்பெயினிலும் வேலையின்றி தவிக்கிறார்கள். இத்தாலியிலும் போர்ச் சுக்கல்லிலும் 36 விழுக்காட்டினரும், அயர்லாந்தில் 30 விழுக்காட்டினரும், பிரான்சில் 20 விழுக்காட்டிற்கும் அதிக மானவர்களும் இவ்வாறு வேலையின்றி இருந்து வருகின்றனர்.

மற்ற நாடுகளி லும் நிலைமைகள் கிட்டத்தட்ட இது வேயாகும்.ஏகாதிபத்திய உலகமயத்தால் தலைமை தாங்கப்படும் சர்வதேச நிதி மூலதனத் தின் நிலையாத்தன்மை (unsustainability) உலக முதலாளித்துவத்தை மேலும் ஆழமான நெருக்கடி வளையத் திற்குள் உந்தித் தள்ளிக் கொண்டிருக் கிறது. உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் வாங்கும் சக்தி மிகவும் சுருங்கிவிட்டதன் காரணமாக ஏற்பட் டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவரு வதற்காக, அவர்களுக்குக் கடன் கொடுப் பதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட் டன. இதன் மூலம் முதலாளித்துவம் தான் கொள்ளை லாபம் அடிப்பதைத் தொடர்வதற்கு தற்காலிகமாக அனுமதித் தது. ஆயினும், கொஞ்சகாலத்திலேயே கடனை வாங்கியவர்கள் அதனைக் கட்டமுடியாத நிலைக்கு சென்றதால், மீண்டும் நெருக்கடி (‘(`sub prime’ crisis) ஏற்பட்டு உலக நிதிக் கரைப்புக்கு (global financial meltdown) இட்டுச் சென் றது. இந்த நெருக்கடியிலிருந்தும் உலக முதலாளித்துவம் தன்னை மீட்டெடுப் பதற்காக, நெருக்கடியில் சிக்கிய கார்ப் பரேட்டுகளுக்கு மிகப் பெரிய அளவில் அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித் துவ அரசாங்கங்கள் நிதிநிறுவனங் களில் கடன் வாங்கி, மானியங்கள் (bailout packages) அளித்தன. இவ்வாறு மானியங்கள் அளித்த பல அரசாங்கங் கள் தாங்கள் வாங்கிய கடனை நிதி நிறுவனங்களுக்குத் திருப்பித்தர முடி யாமல் தத்தளிக்கத் தொடங்கிவிட்டன. கார்ப்பரேட் திவால்தன்மை, இவ்வாறு, அரசாங்கத்தின் திவால்தன்மையாக மாற்றப்பட்டது. இதன்பின்னர் இவ்வாறு திவால்நிலைக்குத் தள்ளப்பட்ட அரசாங் கங்கள், திவால் நிலைமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மற்ற செலவினங்களை வெட்டிச் சுருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த அரசாங்கங்கள் அனைத்தும் மக்களின் சமூகநலத் திட் டங்களுக்கு ஒதுக்கியிருந்த செலவினங் களைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி, உழைக்கும் மக்கள் மீது தாங்கொண்ணா அளவிற்குச் சுமைகளை ஏற்றின. அரசாங்கங்களின் இத்தகைய ‘சிக் கன நடவடிக்கைகள்’ மக்களின் வாங் கும் சக்தியை சுருங்கச் செய்தன. இது தற்போதைய பொருளாதார மந்த நிலையை ஆழமாக்கி மற்றுமொரு நெருக்கடிக்கான அடிப்படையாக அமைந்தது. அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததால், அரசாங்கங்க ளின் வருவாய்களை இவை குறைத் தன. இந்நெருக்கடி 2014இல் மேலும் கடுமையாகும். ஏனெனில் ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து கடன் வாங்கி யுள்ள இந்த அரசாங்கங்கள் அனைத்தும் தங்கள் கடன்களை - சுமார் 1.3 டிரில்லி யனுக்கும் அதிகமான டாலர்கள் - தொகையை திருப்பிச் செலுத்த வேண் டிய தவணைகள் தொடங்கிவிடும். இப் போதுள்ள மந்த நிலைமை தொடரும் பட்சத்தில், அநேகமாக இந்த அரசாங்கங் களில் பெரும்பாலானவை, தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலா நிலைமையில்தான் இருந்திடும்.முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற் பட்டுள்ள நெருக்கடிக்கு இந்த அமைப் புக்குள்ளாகவே தீர்வுகாண முடியாது என்பது தெள்ளத்தெளிவான ஒன்றாகும். ‘வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்’ போராட்டமும் அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெற்ற போராட் டங்களும் முதலாளித்துவ அமைப்பு முறையையே கேள்விக்குள்ளாக்கியுள் ளன. பானர்ஸ், ‘‘இது, இந்த அமைப்பிற் குள் இருக்கிற குறைகள் அல்ல. இந்த அமைப்பே - முதலாளித்துவமே - குறையுடைய ஒன்றாகும்’’ என்றார். வெனிசுலாவில் ஹூயூகோ சாவேஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது, லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதுமே முற்போக்கான, நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான சக்திகளின் அபரிமிதமான வளர்ச்சியை மீண்டும் உத்தரவாதப்படுத்தி இருக்கின்றன.
இன்றைய தினம் நமக்கு முன் உள்ள தேவை என்ன? முதலாளித்துவ முறையை சோசலிச முறையாக புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கக் கூடிய விதத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியே இன்றைய தேவையாகும். இந்தப் பின்னணியில், உலகில் நடைபெற்ற முதல் வெற்றிகரமான சோச லிசப் புரட்சியான ரஷ்யப் புரட்சி மூலம் அமைக்கப்பட்ட சோசலிசத்தின் மேன்மையை நன்குணர்ந்து அதனை மீண்டும் கொண்டு வருவதற்கானதோர் அவசரத் தேவையை நம் அனைவருக் கும் நவம்பர் புரட்சிதினம் மீண்டும் அறி வுறுத்துகிறது.மாபெரும் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியும் அதனைத் தொடர்ந்து உரு வான சோவியத் யூனியனும் வர்க்க சுரண்டலிலிருந்து மனிதகுலத்திற்கு விடுதலை அளித்திட எடுத்து வைக்கப் பட்ட முதல் அடியாகும். சோசலிசத் தால் பாய்ச்சல் வேகத்தில் உருவாக்கப் பட்ட வெற்றிகள், ஒரு காலத்தில் மிகவும் பிற்போக்குப் பொருளாதாரமாக இருந்த ரஷ்யாவை ஒரு பலம்பொருந்திய பொரு ளாதாரமாக மாற்றியதிலும், ஏகாதிபத்தி யத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத் துத் தாக்குதல்களையும் எதிர்த்து முறி யடிக்கக்கூடிய ராணுவ வல்லமையை யும் உருவாக்கி, சோசலிச அமைப்பு முறையின் மேன்மையை உறுதி செய் தது. சோவியத் யூனியனில் சோசலிச அமைப்பு கட்டமைக்கப்பட்டதானது மனிதசமுதாய வரலாற்றில் பொன்னெ ழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீர காவியமாகும். பாசிசத்தைத் தோல்வியுறச் செய்த திலும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றை சோச லிச நாடுகளாக உருவாக்குவதிலும் சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பு, உலகத்தின் வளர்ச்சிப்போக்குகளில் மிக ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத் தியது. பாசிசத்திற்கு எதிரான வெற்றி காலனிச் சுரண்டலுக்கு எதிராக, காலனி யாதிக்க நாடுகளில் போராடிக் கொண் டிருந்த மக்களுக்கு தீர்மானகரமான ஓர் உந்து சக்தியாக விளங்கியது. சீனப் புரட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வீரஞ் செறிந்த வியட்நாம் மக் களின் போராட்டம், கொரிய மக்களின் போராட்டம், கியூபா புரட்சியின் மகத் தான வெற்றி ஆகிய அனைத்தும் உல கின் வளர்ச்சிப் போக்குகளில் அபரிமித மான செல்வாக்கைச் செலுத்தின. வறுமை ஒழிப்பு, கல்லாமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை இல்லாமல் ஒழித்தது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் சமூ கப் பாதுகாப்பை உறுதி செய்தது ஆகிய சோசலிச நாடுகளின் சாதனைகள், உல கம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் தங்கள் நாடுகளில் அவர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு ஒரு வலுவான உந்துசக்தியாக விளங்கியது.சோசலிச அமைப்பு அளித்து வந்த இத்தகைய வாழ்க்கைமுறை உலக முத லாளித்துவத்திற்கு சவாலாக அமைந் தது. எனவே அது தன்னை நிலைநிறுத் திக் கொள்வதற்காக, தான் இதற்கு முன் னெப்போதும் உழைக்கும் மக்களுக்கு அளித்திராத உரிமைகளையும் நலத் திட்ட நடவடிக்கைகளையும் பெயரள விலாவது மேற்கொள்ள வேண்டிய கட் டாயத்திற்கு ஆளாகியது. மக்கள்நல அரசு என்கிற கருத்தாக் கமும், இரண் டாம் உலகப் போருக்குப் பின் முதலா ளித்துவ நாடுகளில் உரு வான சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலும் (தற்போது அவை இரக்கம் எதுவுமின்றி கைவிடப் பட்டு வருகின்றன) சோசலிசத்தின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, இந் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவு களேயாகும். இன்றையதினம் மனிதகுல நாகரிகத்துடன் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ள ஜனநாயக உரி மைகள் சோசலிச மாற்றத்திற்காக மக் கள் நடத்திய போராட் டங்களின் விளை பயன்களேயன்றி, முத லாளித்துவ வர்க்க ஆட்சியாளர்கள் அளித்த கருணையி னால் அல்ல.இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் மனிதசமுதாயத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க அளவிற்கு முன்னேற்றத்தை பாய்ச்சல் வேகத்தில் கொண்டுவந்தன. இன்றைய நவீன சமூகத்தில் அழிக்கப் படமுடியாத முத்திரையை இவை பதித் துள்ளன. இவை கலை, அறிவியல், அழ கியல், பண்பாடு என அனைத்துத் துறை களிலும் பிரதிபலிக்கத் தொடங்கின. ஐன்ஸ்டீன் திரைப்படத்துறையைப் புரட்சிகரமாக மாற்றிய அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலை வான மண்டலத்திற்கு விரிவாக்கிக் கொண்டு சென்றது. ஆயினும், இவ்வாறு அபரிமிதமான முன்னேற்றங்களை மனித சமுதாயம் கண்டிருந்த போதிலும், அதுவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைமைகளிலும், தனக்கு எதிரான சூழல் காணப்பட்ட நிலையிலும் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு, தரைமட்டமாக்கி, சாதனை புரிந்த சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு அவற்றை ஒருமுகப்படுத்தி, தக்கவைக்க முடியாமல் போனதேன்?

மேலோட்டமாகப் பார்க்குமிடத்து, தவறான புரிதல் மற்றும் தவறுகள் நடை பெற்ற இரு பகுதிகள் தெரிகின்றன. முத லாவது, தற்போதைய உலக எதார்த்த நிலைமைகள் குறித்த மதிப்பீடுகள் மற்றும் சோசலிசக் கருத்தாக்கம் குறித்தே இருந்து வந்த மதிப்பீடுகளில் தவறுகள் காணப்பட்டன. இரண்டாவ தாக, சோசலிச அமைப்பை உருவாக்கும் காலத்தில் எழுந்த நடைமுறைப் பிரச் சனைகள் சம்பந்தப்பட்டவை.சோசலிசக் கட்டமைப்பைக் கட்டிய மைப்பதற்கான போராட்டத்தில் உலக சோசலிச சக்திகளின் வெற்றியோ அல் லது தோல்வியோ எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது? அவை, சோசலிசக் கட்டு மானத்தின்போது அடைகின்ற வெற்றி கள் மூலமாகவும், சர்வதேச அளவிலும் நாட்டிற்குள்ளேயும் இருக்கின்ற வர்க்க சக்திகளின் இடையே ஏற்படுகின்ற தொடர்புகள் மற்றும் சரியான மதிப்பீடு களை வைத்துமே தீர்மானிக்கப்படுகின்றன. தவறான மதிப்பீடுகள், சோசலிச நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற எதிரி குறித்து குறைத்து மதிப்பிட இட்டுச்செல்லும். சோசலிசம் குறித்து மிகையாக மதிப்பீடு செய்வது என்பதும் உலக முதலாளித்துவம் மேற் கொள்ளும் தாக்குதல் குறித்து கண்ணை மூடிக்கொள்ள இட்டுச் செல்லும். 

இயக்கவியலின் ஜீவனுள்ள சாரம் என் பது துல்லியமான நிலைமைகளை மிக வும் துல்லியமாக ஆய்வு செய்வதிலேயே அடங்கி இருக்கிறது (( the living essence of dialectics is the concrete analysis of concrete conditions) என்று மாமேதை லெனின் எப்போதும் நம்மை அறிவுறுத்தி வந்துள்ளார். நாம் மேற்கொள்ளும் ஆய் வுகள் தவறாகிப்போகுமானால், அல்லது உண்மையான நிலைமைகளைத் தவ றாகப் பார்ப்போமானால், பின் பிழையான புரிந்துணர்வுகளும், உண்மை நிலை மைகளிலிருந்து பிறழ்வுகளுமே ஏற்படும்.இருபதாம் நூற்றாண்டில் சோசலி சத்தைக் கட்டமைப்பதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தை, ஏகாதிபத்தியம் மிக வும் அரக்கத்தனமான முறையில் ராணுவ ரீதியாக, அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் கலாச் சாரரீதியாக தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இன்றைய சூழலில் மிகவும் முக்கியமாக அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் தகர்ந்த பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் வெறிபிடித்த முறையில் கம் யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும், அதன் கீழ் உள்ள அனைத்து அரசுகளும் பாசிசத்தை கம்யூனிசத்துடன் சமமாகப் பாவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளன. பாசிசத்தை கடுமையாக எதிர் கொண்டு, நிர்மூலமாக்கி, வெற்றி பெற்ற கம்யூனிசத்தின் பிரகாசமான வரலாற் றையும், பாசிசத்தைத் தோல்வியுறச் செய்வதில் சோவியத் யூனியன் ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பையும் மாற்றி எழுத, இவ்வாறாக, அவை முயற்சிக்கின் றன. ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் தலை மையகத்தின் மீது சோவியத் செஞ் சேனை வீரர்கள், செங்கொடியைப் பறக்க விட்டதன் மூலம், பாசிசத்திற்கு எதிராக கம்யூனிசத்தின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றிய வீர வரலாற்றை மக்களின் ஞாபக சக்தியிலிருந்து அழித்திட அவை முயற்சிக்கின்றன. 1930களில் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலைமை காலத்தில்தான் பாசிசம் தலைதூக்கியது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க மறக்கக்கூடாது. 

இன்றையதினம் நடத்தப்படுகின்ற கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன், உலக முதலாளித்துவத்திற்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நெருக்கடியும், அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட் டமும் இணைந்து பாசிசக் கொள்கை கள் தலைதூக்கிட இட்டுச்செல்லும். இதுகுறித்து மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

எனவே, இறுதி ஆய்வில், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வலுவான அரசியல் மாற்று மட்டுமே மக்கள் மீதான மூர்க்கத்தனமான பொருளாதாரத் தாக்குதல்களிலிருந்து  மக்களைப் பாதுகாத்திட முடியும், தலைதூக்கும் பாசிச சக்திகளின் வளர்ச்சியையும் தடுத்திட முடியும்.


மாபெரும் நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியின் வளர்ச்சிக்கும் அதே போன்று அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்த அம்சங்களை இன்றைய துல்லியமான நிலைமைகளில் துல்லியமாக ஆய்வு செய்வதன் அடிப்படையில், தேசிய அள விலும், உலக அளவிலும் முதலாளித் துவத்திற்கு எதிராக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்துவது, நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய படிப் பினையாகும். 

(தமிழில்: ச.வீரமணி)

No comments: