Thursday, January 17, 2008

திருக்குறளில் மருத்துவம் - முனைவர் டாக்டர் சு. நரேந்திரன்

திருக்குறளில் மருத்துவம்முனைவர் டாக்டர் சு. நரேந்திரன்உலகப் பொதுமறை என்று கருதத்தக்க ஒப்புயர்வற்ற திருக்குறளை ஒரு மருத்துவ நூல் என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதே யாகும். நோய்களெனில் உடலியல் சார்ந்தனவும், உளவியல் சார்ந்தனவும் தவிர உடலியலால் நலிவுற்ற உளவியலும், உளவியலால் நோயுள்ள உடலியல் நோய்களும் என்பனவும் உள்ளடக்கம். இன்றைய மருத்துவ அறிவியல் நலவாழ்வு உள நலனும் உடல் நலனும் சார்ந்ததே என்பதை நிறுவியுள்ளது. இந்த உண்மையினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயமின்றி உணர்ந்து, தேர்ந்து உணர்த்தியுமுள்ள வள்ளுவப் பேராசானின் திருக்குறள் காலத்தால் மிக முந்தியிருப்பினும் கருத்தால் மிகப் புதுமையானது. கூடவே, இன்றைய உலகியலுக்கு மிகவும் பொருத்தமுடையதாகவும் விளங்குகின்றன.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும் - 435
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல் - 442இவை முறையே குற்றங்கடிதல், பெரியாரைத் துணைகோடல் அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்கள். இவை இடம் பெற்றுள்ள தலைப்புகள், மக்கள் வாழ்வியலில் இவை உணர்த்தும் பாடங்களைத் தெளிவாகவே காட்டுகின்றன. அதே நேரம் மருத்துவம் என்ற நோக்கில் காண்கிறபோதும் சிறுமாற்றமும் தேவைப்படாமல் அப்படியே தடுப்பு மருத்துவத்துக்கும், தக்க மருத்துவரைத் தேர்ந்து பயன் கொள்ளவுமாக உணர்த்தும் பாங்கு எண்ணத்தக்கது.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்நாமம் கெடக்கெடும் நோய் -360விருப்பு, வெறுப்பு, தெளிவில்லாமை என்னும் மூன்றன் அச்சமும் இல்லையானால் துன்பமும் இல்லையாகும்.இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஈளை நோய் என்று பல நோய்களுக்கும் காமம், வெகுளி, மயக்கம் அதாவது அளவுக்கு மீறிய அவா, சினம், தவறான மனோ நிலை ஆகிய இவையே காரணம் என்பது இன்றைய ஆய்வாளர்களின் முடிவு.உடல் தூய்மை - உள்ளத் தூய்மைதிருவள்ளுவர் வாய்மை அதிகாரத்தில் உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் ஒருசேர வற்புறுத்தியுள்ளார்.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் - 298என்ற குறளின் மூலம் தனி மனித சுகாதாரத்தையும் எடுத்துக் கூறி உடல் நலத்திற்கு நீரால் குளிப்பது மட்டும் போதும், உள்ளம் தூய்மையுடையதாக இருக்க வாய்மை உடையதாகவும் இருக்கவேண்டும் என்கிறார்.பசியும், பிணியும்தனிமனித சுகாதாரத்தைப் பேசியவர், சமூகத்தையும் கூர்ந்து கவனித்து நாட்டில் பசியும், பிணியும் இருத்தல் கூடாது என்கிறார். பகைவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டதாக, இருக்க வேண்டும் என்பதை இலக்கணமாகவே விதிக்கிறார்.உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு - 734என்ற குறள் மூலம் இதனை உணர்ந்து தனிமனித சுகாதாரம், சமூக நலம் ஆட்சியின் பொறுப்பு என்ற இவற்றில் தவறாது நலவாழ்வும், நலவாழ்வைப் பேண வேண்டியதன் அவசியமும் உணர்த்தப்படுவதைக் காண்கிறோம்.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற - 304சிரிப்பையும், மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கினும் தனக்குப் பகையானவை எவையும் இல்லை.தடுப்பு மருத்துவம்1) சினம்: சினம் கொள்ளுதல், பதட்டமடைதல், உறக்கமின்மை போன்றவற்றால் இதயத் தாக்கு உட்பட இரத்த ஓட்ட சீரழிவும் ஏற்படும். ஆதலால் அதனைக் கைவிடும்படி அறிவுறுத்துகிறார் வள்ளுவர். சினம், தன்னோடு பிறரையும் வருத்தச் செய்வது. ஆதலால் வெகுளாமை வேண்டுகிறார்.தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம் - 305சினத்தைக் கையாளும் பக்குவத்தையே இன்றைய மருத்துவம் தியானம், யோகா என்கிறது. வள்ளுவமோ வெகுளாமை, பொறையுடைமை, தவம் என்று கூறுகின்றது. கூற்றம் குதித்தனும் கைகூடும், நோற்றலின்ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு - 269தவத்தின் ஆற்றல் கை கூடியவர்கட்கு எமனைத் தாண்டுதலும் இயலுமாம்.2) மது அருந்துவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் வரும் தீமைகளை கள்ளுண்ணாமை விளக்குகிறது. கல்லீரல் நோய்கள் உள்ளிட்டு பல நோய்கள் மது அருந்துபவருக்கு வருவது கண்கூடு. ஆகையால் கள் உண்பதை நஞ்சு உண்பவரோடு ஒப்பிடுகிறார், வள்ளுவர்.இதனை,துஞ்சினார் செத்தாரின் வேறல்லர், எஞ்ஞான்றும்நஞ்சுண்டார் கள்ளுண்பவர் - 926என்ற குறள் வழி புலப்படுத்துகிறார்.2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மருத்துவம்இலை, பூ, காய், பட்டை, வேர் முதலிய பொருட்களாலும் மருந்தாகப் பயன்படும் மரத்தை பெருந்தகையான் பெற்ற செல்வத்திற்கு ஒப்பிட்டிருப்பதை காணும்போது மருந்தாகும் என்ற சொல் தமிழ் மருத்துவத்தில் சிறப்பிடத்தைப் பெறவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உணர்த்திச் சென்றிருக்கிறார் வள்ளுவர்.மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - 217மருந்தாகும் மரம் எவ்விதப் பலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவுவதைப் போல் என்று கூறும் செய்தியிலிருந்து மரமும் அதன் பகுதிகளும் தமிழ் மருத்துவத்திற்கு அன்றைய கால கட்டத்தில் பயன்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.தனிப்பட்ட நோய்களுக்கு மருத்துவம்1) மாரடைப்பு இன்றைய உலகில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடிய நோய்களுள் மாரடைப்பு நோயும் ஒன்று. நம் அன்றாடப் பழக்க வழக்கம், உணவு ஆகியவைகளைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தால் மட்டுமே இந்நோயிலிருந்து தப்பிக்கலாம். இத்தகைய மாரடைப்பு நோய் பற்றிய சிந்தனையும் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய் - 429என்ற குறள் மூலம் அறிய முடிகிறது. அதிர வருவதோர் நோய் மாரடைப்பு தானே! இன்னலை எதிர்நோக்கி விழிப்புடனிருப்பவரை இந்நோய் அணுகாதுதானே!2) எய்ட்ஸ்மருந்தே இன்று வரை அறியப்படாத நோய் எய்ட்ஸ். இதனைத் தூய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தை, திருவள்ளுவர்பிறன் பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம் பொருள் கண்டார்கண் இல் - 141என்றும்,ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - 131என்றும் கூறுகிறார்.சமூகம், தனிமனிதன், உளநோய், உடல் நோய் ஆகியவைகளைக் கூறிய திருவள்ளுவர், குறளில் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்து அதில் மந்திர, மாந்திரீகம் என்ற கூறுகளைத் தொடாதுநோய்க்கு ஆளாதல் - 91நோய் வருமன் காத்தல் - 942 - 947நோய் வந்த பின் தீர்த்தல் - 948 - 950 எனும் முறையில் அமைத்துள்ளார்.1) நோய்க்கு ஆளாதல்மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்வளி முதலா எண்ணிய மூன்று - 941பரிமேலழகர் மிகினும் குறையினும் என்பதற்கு உணவு மிகுந்தாலும், குறைந்தாலும் என்று பொருள் எழுதினார். ஆனால் தமிழ் மருத்துவத்தின் தனித் தன்மையான வளி (வாதம்), பித்தம், ஐ (கோழை) என உடலில் அமைந்த மூன்றில் ஒன்று மிகுந்தாலும் நோய், குறைந்தாலும் நோய், சம நிலையில் அமைய வேண்டும்; எனவே நோய்க்குக் காரணம் வளி முதலிய மூன்றுந்தாம் என உணர்த்துகிறார்.2) நோய் வருமுன் காத்தல் - உணவியல்‘மருந்து என வேண்டாவாம்’’ என்று தொடங்கினார் வள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணம் கூறினார்.‘‘அருந்தியது அற்றது போற்றி உணின்’’ - 942 என்கிறார்.அற்றது என்பது ஓர் உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ள வயிற்றினைப் போற்றி மறு உணவு இட வேண்டும். அந்த உணவுப் பாதுகாப்புக் குரிய உணவாக வேண்டும்.‘‘அற்றது போற்றி’’யைத் தொடர்ந்து,‘‘அற்றால் அளவு அறிந்து’’ (943) உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும். அதனைக் கடைப்பிடித்து ‘‘துவரப் பசித்துத் துய்க்க’’ (944) என்றார். இதனைத் தொடர்ந்து, ‘‘மாறுபாடு இல்லாத உணவு’’ என்றார். இவ்வுணவை அறிந்து பின்னர் மற்றவற்றை ‘மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’’ (945). இவற்றால் உடல் நலம் காக்கப்படும் என்பது மட்டுமன்று உயிருக்கே ஆபத்தில்லை என்றார்.வயிற்றுத் தீவயிற்றுத் தீயின் அளவு தெரிந்து, வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ண வேண்டும். அதாவது ஒரு மனிதனுக்கு தேவையான மாவு சத்து, புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை கொடுக்கும் கலோரி மட்டும் ஆசூகும். இதனை வள்ளுவர், தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும் - 946 என்றார்.‘தீ அளவு’ என்பது எண்ணத்தக்கதாகும். தேவையான கலோரி, உண்™ம் உணவின் வழி கிடைக்கும் கலோரி என்று தெரியான் பெரிதுண்ணின் நோயளவில்லாமல் வரும். எவ்வுணவும் அளவோடுதான் இருக்க வேண்டும், இல்லையெனில் அவ்வுணவே நஞ்சாகி நோயின் வருகைக்கு வழிகாட்டிவிடும். இதனால்தான்,இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல நிற்கும்கழிபேரிரையான் கண் நோய் ( 946) என்றார்.
3) நோய் வந்த பின் தீர்த்தல் - மருத்துவ இயல்
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) பிணியறியும் முறையே நோய் நாடல் (னுயைபnடிளளை). நோயின் முதல் நாடல் என்பது நோயின் காரணத்தைக் கண்டறிதல் (னுநவநசஅiniபே வாந நுவiடிடடிபல டிச உயரளயவiடிn டிக னளைநயளந). அது தணிக்கும் வாயல் நாடல் என்பது பிணி தீர்க்கும் வகைகளை ஒத்து ஆராய்ந்து அறிதல் (னுநஉனைiபே வாந அநவாடினள டிக வசநயவஅநவே) என்பதனையும், வாய்ப்பச் செயல் என்பது ஓர்ந்துத் துணிந்த முடிவின்படி வழுவின்றி சிகிச்சை செய்தல் என்பதையும் உணர்த்தும்.திருவள்ளுவர், அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோயாளியின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார்.இதனை, உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல் - 949என்ற குறளில் அமைத்தார்.நிறைவாக, மருத்துவத்தைக் கையாளும் போது, இடம் பெறும் நான்கு கூறுகளைக் குறித்தார். இவை நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம். மருந்து என்றாலே இவை நான்கு கூறுகளும் அடக்கம்தான். உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து - 950திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும், நினைவில் நிற்பவை. நோயாளி நோயைத் தீர்க்கும் மருத்துவன், நோய்க்குரிய மருந்து, உடனிருந்து உதவுவோன் (செவிலியர், கட்டுக்கட்டுபவர்கள்) என்று நான்கையும் முறைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ளது.முடிவுரைதிருவள்ளுவ மருத்துவம், மனிதர் நோய் கொள்ளாதிருக்கும் தடுப்பு முறைகளைக் கூறிவிட்டு, நோயின்றி வாழ அடிப்படையாக பசியின்றி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்து, உண்பாரும் அளவறிந்து உண்ண, வயிற்றுத் தீ குறித்தும் உணர்த்தி உள்ளத்திற்கும் உடலிற்கும் மருந்து கூறி நோயற்ற வாழ்வு வாழ வகை செய்துள்ளார். ‘வயிற்றுத் தீ’க் குறிப்பில் மிகு உணவு, மிகுநோய் என்று அறிவுறுத்தினார். பின்னர் நோய் தீர்ப்பான் என்று மன அமைதி ஊட்டினார். துணை நிற்போன் உள்ளனர் என்று ஆறுதல் கூறினார். மருந்து கூறுகிறார். அதனையும் மருந்து என்று ஒன்றைக் கூறிவிடாமல் நான்கு கூறாகக் கூறி நான்கும் இணைந்ததே மருந்து என உணர்த்தினார்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனையின் பிழிவே திருக்குறள் எனில் அதற்குப் பின்புலமான தமிழர்தம் வாழ்வியல் பாங்கினை எண்ண வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வின் பிரதிபலிப்புதான் வள்ளுவமும், வள்ளுவ ஆசானின் வாழ்வியல் மருத்துவமும், மருத்துவ வள்ளுவமும் என்றெல்லாம் எண்ணும்போது நுணுகிக் காணத்தக்க களங்களின் எண்ணிக்கை மிகுகின்றன.---

1 comment:

சீனி.செயபால் said...

பெருமதிப்பிற்குரிய நண்பர் வீரமணி அவர்களுக்கு எனது அன்பான வணக்கம்.

தங்களின் திருக்குறள் பற்றிய பதிவைப்பார்த்தேன்.அத்தனை அதிகாரங்களையும்
ஆராய்ந்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.நானும் தங்களைப்போலவே உலகப்பொது
மறையாம் திருக்குறள்மீது மிகுந்த பற்றுக்கொண்டவன்.நானும் ஒரு பிளாக் தொடங்கியுள்ளேன்.எனது URL=www.anbirkkuiniyavan.blogspot.com என்பது.திருகுறள் சம்பந்தப்பட்ட சில கருத்துக்களை க்கூறியுள்ளேன்.அன்புகூர்ந்து எனது பதிவுகளைப்பார்த்து தங்களின் கருத்துக்களைக்கூற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

அன்பிற்கு இனியவன்.