Sunday, December 11, 2016

நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்


நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையி லான விரிசல் கடந்த சில வாரங்களில் அதிகரித் திருக்கிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல், உச்சநீதிமன்றத்திடம் உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகள் பதவிக்காக உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் (கொலிஜியம்) அனுப்பி வைத்த 77 பெயர்களில், அரசாங்கம் 34 பெயர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, மீதம் 43 பெயர்களை திருப்பி அனுப்பிவிட்டது. முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு அரசாங்கம் உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கை அதிகரித் துள்ளது.உயர்நீதிமன்றங்களில் ஏராளமான நீதிபதிபணியிடங்கள் காலியாக இருக்கும் பின்ன ணியில்தான் இவ்வாறு உச்சநீதிமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையே சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 1,079. இதில் 478 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், மொத்தம் உள்ள பணியிடங்களில் 55.7 சதவீதம் அள விற்குக் காலியாக இருக்கின்றன என்பதாகும்.
வெளிப்படைத்தன்மை கொண்ட முறை
மோடி அரசாங்கமானது, சட்டவிரோதமான முறையிலும், அரசியல்ரீதியாக சந்தேகிக்கக் கூடிய விதத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் (கொலிஜியம்) முன்மொழிந்திடும் நியமனங்களை நிராகரிக்கும் விதத்தில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்திடும் முறையையே மாற்றி அமைத்திட மோடி அரசாங்கம்முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தத்தரு ணத்தில் அரசாங்கம் 2014 அக்டோபரில் நிறை வேற்றிய தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வாயமானது (Constitutional Bench) அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி,ரத்துசெய்துவிட்டதை நினைவுகூர்ந்திட வேண்டும். உச்சநீதிமன்றம், கொலிஜியம் முறையைஉறுதி செய்திட்ட அதே சமயத்தில், மேலும் வெளி ப்படைத்தன்மை வாய்ந்தவிதத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு ஒரு முறையை (Memorandum of Procedure) தயார் செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டது.
நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கமும் தலை யிடக்கூடிய விதத்தில் ஒரு ஷரத்தை வரைவு நீதிபதிகள் நியமன நடைமுறையில் சேர்த்திட வேண்டும் என்று அரசாங்கம் கோரி இருக்கிறது. உதாரணமாக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு பரிந்துரைத்திடும் பெயர்களை மட்டுமே கொலிஜி யம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. இவ்வாறு ஓய்வுபெற்ற தலைமைநீதிபதிகளின் குழுவை அரசா ங்கம் அமைத்திடும் என்றும் அந்த ஷரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு, யாரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று கொலிஜியத்திற்குக் கட்டளையிடும் விதத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவந்தது.
அரசின் ஆபத்தான திருத்தம்
அரசாங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட மற்றுமொரு ஆட்சேபகரமான ஷரத்து என்ன வெனில், கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களை அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு என்றபெயரில் நிராகரிப்பதற்கான உரிமை உண்டு என்றுதெரிவித்திருந்ததாகும். ஆர்எஸ்எஸ்/பாஜகபரிவாரங்களின் ‘தேசியவாதம்’ என்னும் கோட்பா ட்டிற்கு ஒத்துப்போகாதவர்கள் அனைவரையுமே, மதச்சார்பின்மையாளர்களையெல்லாம் ‘தேச விரோதிகள்’ என்று கருதுகிற அதன் ஒருதலைப்பட்ச கருத்திற்கு ஏற்ப, தங்கள் மதவெறி சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாத எவராக இருந்தாலும் அவர்களை நீதிபதிகளாக அனுமதித்திடக்கூடாது என்கிற இழிநோக்கம் அதில் புதைந்திருப்பதைக் காணமுடியும். இதற்காகத்தான் அது தேசப் பாதுகாப்பு என்கிற அச்சுறுத்தலை எழுப்பியிருக்கிறது.
அரசாங்கத்தின் சார்பில் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கொலிஜியம் அனுப்பிய 43 பெயர்களைத் திருப்பி அனுப்புவதற்கான முடிவை அரசாங்கம் ஏன் எடுத்தது என்பதற்கான காரணம் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ‘மிகமோசமான முறையில் உளவுத்துறை அறிக்கைகள் அனுப்பி இருந்ததாகவும்’ மற்றும் ‘அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும்,‘ அரசாங்கத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்களைஉளவுத்துறையானது நீதிபதி பதவிக்குப் பொருத்தமற்றவர்கள் என்று கருதியிருப்பது நம்பமுடியாத ஒன்று. பாஜக அரசாங்கத்தின் நோக்கம்மிகவும் தெளிவானது. தங்களுடைய அதிகாரப் பூர்வமான மதவெறி சித்தாந்தத்திற்கு உட்படாத எவரும் அல்லது தங்கள் இழிநோக்கத்திற்கு வளைந்துகொடுக்காத எவரும் நீதிபதிகளாக வருவதை அது ஏற்கத் தயாரில்லை என்பதேயாகும்.
தேவை நீதித்துறை ஆணையம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்ட நீதித்துறையில் நீதிபதிகளை நியமனம்செய்வதில் கொலிஜியம் முறையானது பிழையான ஒன்று என்றும், திருப்தியளிக்கக்கூடிய நடை முறை அல்ல என்றும்தான் எப்போதும் கூறி வந்திருக்கிறது. நீதிபதிகளை நியமனம் செய்திடும் கடமையை நிறைவேற்றுவதற்கு, சுயேச்சையான மற்றும் விரிவான அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் தேவை என்றே அது கூறி வந்திருக்கிறது.இதுதொடர்பாக முன்பு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு மிக முக்கியக் காரணம், அதில் கொலிஜியத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதி களை நிராகரித்திடும் உரிமை (veto powers) அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டிருந்ததாகும்.
எனவே அத்தகைய குறைபாடுகள் அற்ற ஒரு தேசியநீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.இதனை நடைமுறைப்படுத்தும் வரையிலும், கொலிஜியம் முறைதான் அமலில் இருக்க வேண்டியிருக்கிறது. மோடி அரசாங்கம், நாட்டின் சுதந்திரத்தையும், அரசு அமைப்புகளின் ஒருமைப்பாட்டை யும் சீர்குலைத்திடும் விதத்தில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. நீதித்துறை யின் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தங்கள் சித்தாந்தத்திற்கு ஏற்ப வசப்படுத்திடும் வேலைகளில் அது இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. உச்சநீதி மன்றம், மீண்டும் அந்த 43 பெயர்களையே நீதிபதிகளாக நியமித்து அரசாங்கத்திற்கு அனுப்பினால், அதனை ஏற்பதைத்தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை.
அவ்வாறு அதனை ஏற்க அரசாங்கம் தவறுமேயானால், அது உயர்நீதித்துறையின் கட்டமைப்பையே கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய தாகவே எடுத்துக்கொள்ளப்படும். நீதித்துறை யை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரு வதற்காக மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் நாசகரமான முயற்சிகளை நாட்டிலுள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அது தெரிந்து கொள்ள வேண்டும்.
(டிசம்பர் 7, 2016)
(தமிழில்: ச. வீரமணி)


No comments: