Friday, November 5, 2010

ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மெகா ஊழல் ஆ.ராசாவை நீக்குக! சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுதில்லி, நவ.4-

2ஜி தொலைபேசி அலைவரி சைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கெனவே கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுக் களையும், மத்திய தலைமை தணிக் கை அதிகாரி உறுதிப்படுத்தி இருக் கிறார் எனவே அதன் அடிப்படை யில் பிரதமர் செயல்பட வேண்டும், தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவை பதவி யிலிருந்து நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கூறினார்.

புதுதில்லியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டம் நடை பெற்றது. அதில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஆ. ராசா வின் கீழ் இயங்கும் தொலைத் தொடர்புத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறதென்றும், எனவே அமைச்சர் ஆ.ராசாவைப் பதவிநீக் கம் செய்து, முறையான விசாரணை நடத்தி, ஊழலுக்குக் காரணமான வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அர சுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட் டக்கூடிய விதத்தில் உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும் என் றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி வந்தோம். இது தொடர் பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்று கடிதங்கள் எழுதியிருக்கி றோம். 2008 பிப்ரவரியில் ஒரு கடித மும், 2008 நவம்பரில் ஒரு கடிதமும் பின்னர் கடைசியாக 2010 மே- யில் ஒரு கடிதமும் எழுதியிருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உண்மை என்று மத்திய தலைமைத் தணிக் கை அதிகாரி தற்போது தெரிவித் திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் கார ணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப் பை நாங்கள் கூட குறைத்து மதிப் பிட்டுவிட்டோம். உண்மையில் அதன் மதிப்பு என்பது சுமார் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடிக் கும் அதிகம் என்று தெரிவித்திருக்கி றார். நாட்டில் இவ்வளவு பெரிய மெகா ஊழல் இதற்குமுன் நடை பெற்றதில்லை.

தலைமைத் தணிக்கை அதிகாரி மேலும், 2008 ஜனவரியில் கொடுக் கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள், மத்திய தொலைத் தொடர்புத்துறை வரையறுத்துள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த வில்லை என்றும் குறிப்பிட்டிருக்கி றார். 72 உரிமங்கள் போதுமான அளவு மூலதனம் இல்லாத கம் பெனிகளுக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதாகவும், 27 உரிமங்கள் தொலைத்தொடர்புத்துறை வரை யறுத்துள்ள நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த தவறிவிட்டன என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கிற ஊழலின் அளவை ஆராய்ந்தோமானால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மூன்று விழுக்காடாகும். சுகா தாரத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையைவிட எட்டு மடங்கிற்கும் அதிகமாகும். கல்விக் காக ஒதுக்கியுள்ள தொகையைவிட மூன்றரை மடங்காகும். இந்த மிகப் பெரும் மெகா ஊழலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங், நாட் டில் உள்ள சட்டவிரோத மூலதனம் குறித்து அடிக்கடி கவலைப்படு கிறார். ஆனால் இவரது ஆட்சியில் தான் மெகா ஊழல்கள் மூலம் சட்டவிரோத மூலதனம் நாட் டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் ஊழல், தற்போது மும்பை யில் கார்கில் வீரர்களுக்கு வீடுகள் கட்டித்தந்ததில் ஊழல். சட்ட விரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்து அயல்நாடு களுக்கு ஏற்றுமதி செய்த ஊழல், எல்லாவற்றையும் விஞ்சும் 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல். இவை அனைத்தும் சட்டவிரோத மூலதன மின்றி வேறென்ன?

எனவே பிரதமர், இந்த மெகா ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். தற் போது 3ஜி அலைவரிசை ஏலத் திற்கு விட்டதுபோல் மீண்டும் 2ஜி அலைவரிசையை ஏலத்திற்கு விட்டு, இழந்த தொகையை, உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலித் திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அரசுக்கு இழப்பு ஏற் பட அனுமதித்திடக் கூடாது. அத் தொகைகளை உரிமம் எடுத்தவர் கள் தர மறுத்தால், அவர்களுக்கு அளித்த உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, அவர்கள் ஊழல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுத்திட வேண்டும்.

இந்த விசாரணைகள் பாரபட்ச மின்றி நடைபெறுவதை உறுதிப் படுத்திட இந்த ஊழல்கள் நடை பெற்ற சமயத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதும் அதன் அமைச்சராக இருப்பவருமான ஆ.ராசா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

No comments: