Showing posts with label Mega Scam Probe needed. Show all posts
Showing posts with label Mega Scam Probe needed. Show all posts

Sunday, November 14, 2010

மெகா ஊழல்: விரைவாக விசாரணை தேவை



அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் தொடர்பான ஆட்டபாட்டங்கள் அடங்குவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடரில் புயல் வீசத் தொடங்கி விட்டது. அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மெகா ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி கள் வெளியானதைத்தொடர்ந்து இவையே உறுப்பினர்களின் பிரதான விவாதப் பொரு ளாக மாறின. டெலிகாம் அமைச்சகத்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவ ரின் (சிஏஜி) அறிக்கையானது, கடந்த மூன் றாண்டுகளாக 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையே என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறது. மும் பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீடு கட் டும் சங்க ஊழல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்கள் தொடர்பாகவும் முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற் றப்பட வேண்டும். இவை ஊழல்களின் பட்டி யலில் கடைசியாகச் சேர்ந்துள்ள ஊழல்களா கும். இதற்கு முன்பே கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஊழல் வெளியாகியுள்ளது.

நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத் தங்களின் கீழான சட்டவிரோத முதலாளித் துவ (crony capitalism) வளர்ச்சியின் வெளிப்பாடே இத்தகைய ஊழல்கள். வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்களை அளிப்பதும், பொதுச் சொத் துக்களைத் தங்கள் இதயத்திற்கு இதமானவர் களுக்கு வாரி வழங்கி அவர்களைப் பெரும் பணக்காரர்களாக மாற்றுவதும் சட்டவிரோத முதலாளித்துவத்தின் வடிவங்களில் சிலவா கும். பிரதமர் அவர்களே, சட்டவிரோத முத லாளித்துவம் இந்தியாவை ஆட்டிப்படைக் கிறது என்று பதிவு செய்திருக்கிறார். ஆயினும் அவரது சொந்த அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் மீதே சட்டவிரோத முதலாளித் துவம் மூலமாக ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டுக்கள் வந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ள கடுங் கோபத் தீயைத் தணிக்க வேண்டும் என்பதற் காக நாடாளுமன்றம் புதனன்று துவங்குவ தற்கு முன்பே, காங்கிரஸ் கட்சி தன்னுடைய மகாராஷ்ட்ர முதல்வரை நீக்கிவிட்டது. மும் பை ஆதர்ஷ் வீடு கட்டும் சங்கத்தில் நடை பெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான நபர் களை நீக்கியதன் மூலம் நிலைமைகள் சரி யாகிவிடும் என்று அது நம்பியது. ஆனால் உண்மையில் நிலைமைகள் மேலும் மோச மாக மாறின. அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டதாலேயே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்களையும் மூடி மறைத்துவிட முடியாது.

இவை அனைத்திற்குப் பிறகும் கூட, தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, 2ஜி ஸ்பெக்ட் ரம் விற்பனையில் டெலிகாம் அமைச்சகத் தின் முடிவால் அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளிப் படுத்திய பின்னரும் கூட, டெலிகாம் அமைச் சர் பதவியில் தொடர்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2008 பிப்ரவரியிலி ருந்தே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர். இப்போது குடியரசுத் தலைவருக்கு சிஏஜி அளித்துள்ள அறிக்கையிலிருந்தும், இந்த விஷயம் முழுமையாகப் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும், தேவைப்பட்டால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து அதன் மூலமாக விசாரணை நடத்திட வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஊழல்கள் மக்கள் மத்தியில் பரவ லாகப் பேசும் பொருளாக மாறியுள்ளது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்புக் குழு தற்சமயம் தேசிய நாளேடு கள் அனைத்திலும் ஏராளமாக முழுப்பக்க விளம்பரங்கள் அளித்து வருகின்றன. அவற் றில் தாங்கள் செலவழித்த அனைத்தும் நியா யமானதே என்றும் தங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவும் தூய்மை யாகவும் நடைபெற்றன என்றும் கூறிவரு கிறது. ஆயினும், காமன்வெல்த் விளையாட் டுப் போட்டிகளுக்கான இணைய தளத்தில் அப்போது காணப்பட்ட விவரங்களைக் கண் ணுறும் எவரும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் காணப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை புனரமைத்திட அதீத மான அளவிற்கு அதாவது 961 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அதில் கூறப்பட்டி ருந்தது. அதேபோன்றுதான் இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு 669 கோடி ரூபாயும், தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்திற்கு 262 கோடி ரூபாயும், கர்னி சிங் துப்பாக்கி சுடும் மையத் திற்கு 149 கோடி ரூபாயும் செலவழித்திட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத் தத்தில் 44 ஆயிரத்து 459 கோடியே 48 லட்சம் ரூபாய் புனரமைப்புக்காக செலவழிக்கப்பட்டி ருக்கிறது. நாக்பூரில் மிக நவீன வசதிகளு டன் புதிதாக ஒரு ஸ்டேடியத்தைக் கட்டுவ தற்கே 84 கோடி ரூபாய்தான் செலவாகியிருக் கிறது. லஞ்ச ஊழல் தொடர்பாக முன்வைக் கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக புலன் விசாரணைக்கு உட்படுத் தப்பட வேண்டும். இவ்வாறு கோடிக்கணக் கான ரூபாய் கையாடல்கள் செய்துள்ள கய வர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். இக்குற்றச்சாட்டுக்களில் பலவற்றைக் குறித்து பல்வேறு ஏஜன்சிகள் ஏற்கனவே புலனாய்வைத் தொடங்கிவிட்டன. ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமும் பல் இல்லாத ஒரு கமிட்டி யை இவற்றை விசாரிப்பதற்காக நியமித்திருக் கிறது. இது கயவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களைத் தப் பிக்க வைத்து, விஷயத்தை மூடி மறைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இக்குற் றச்சாட்டுக்களுக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போன்ற ஏஜன்சி கள் மூலம் விரைந்து புலனாய்வினைச் செய்து, குற்றம் புரிந்தோருக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை விரைவுபடுத்திட அரசாங் கம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.

ஆதர்ஷ் வீடுகட்டும் சங்க ஊழலானது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், மகாராஷ் டிரா மாநில உயர் அதிகார வர்க்கத்தினர் மற் றும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகிய வர்கள் ஒருவர்க்கொருவர் மிகவும் அற்பத்தன மான முறையில் உடந்தையுடன் செயல்பட்டி ருப்பதைக் காட்டுகிறது. மும்பையில் கொலாபா மாவட்டத்தில் மிகவும் பிரதானமான நிலப் பகுதியில் கார்கில் யுத்தத்தில் இறந்தவர்க ளின் குடும்ப விதவைகளுக்கு ஒதுக்கீடு செய் வதற்காக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் இந்தக் கும்பல் 31 மாடிகள் கொண்ட குடியி ருப்பு அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டியிருக் கிறது. நம் நாட்டைப் பாதுகாத்திட உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் அளித்தி டும் இத்தகைய மரியாதையைப் பார்க்கும் போது எவ்வளவு வெட்கமாக இருக்கிறது? மிகவும் அடிமாட்டு விலைக்கு, இந்த அபார்ட் மெண்ட்டுகளை தங்களுக்கு மிகவும் வேண் டிய உற்றார், உறவினர்களுக்கு அளித்துள்ள னர். முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டதாலேயே ஊழலை முற்றிலும் மூடி மறைத்துவிடலாம் என்று கருதிவிடக் கூடாது. ராணுவத்தின் ஒரு சில பிரிவுகளும், மகாராஷ்டிரா அரசாங்கமும் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், மத்திய அரசின் ஏஜன்சி ஒன் றின் மூலம் உயர்மட்ட விசாரணை நடத்தப் பட்டு, ஊழல் புரிந்தோர் அடையாளம் காணப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

இப்போது வெளிவந்துள்ள ஊழல்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன் வெளியாகி யுள்ள சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளை போனது போன்றவை மீது இன்ன மும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் படாமல் இருக்கின்றன. பிரதமர் சட்டவிரோத முதலாளித்துவம் குறித்து எள்ளிநகையாடி யுள்ள அதே சமயத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கமோ தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை கண்மூடித் தனமாகக் கடைப்பிடிப்பதன் மூலம், இத்தகைய சட்ட விரோத முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்து வருகிறது.

‘டிரான்பரன்சி இண்டர்நேஷனல்’ (Transparency International) என்னும் அமைப்பு உல கில் உள்ள நாடுகளில் 2010இல் உயர்மட்ட அளவில் ஊழல்கள் இருப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 87ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதிக ஊழல் புரிந்த நாடு 0 என்றும், ஊழலே இல்லாத நாடு 10 என்றும் ஓர் அளவுகோலை வைத்து ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டதில் இந்தியா 3.3 என்ற இலக்கைப் பெற்றிருக்கிறது. இத் தகைய நிலைமையை அனுமதிக்க முடியாது. நம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் ஊட்டச்சத்துக்குறைவால், பசி, பஞ்சம், பட்டி னியால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். நம்முடைய மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள் ளை போவதற்கு உதவிடும் சட்ட விரோத முத லாளித்துவத்தை ஊட்டி வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர் கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் பணக்காரர்களை, மேலும் பணக்காரர்களாக மாற்றக்கூடிய விதத்தில் இந்தியா பணக்காரர் களுக்கான நாடு என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. நாட் டை நல்வழியில் செலுத்துவதற்கு மட்டு மல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலானவர்க ளின் வாழ்க்கையை மேம்படுத்திடவும் உயர் மட்டத்தில் உள்ள லஞ்சஊழலை ஒழிப்பது என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

வரவிருக்கும் காலங்களில், நாடாளுமன் றம் மேற்குறிப்பிட்ட ஊழல்கள் தொடர்பாக செயல்படவிருக்கும் அதே சமயத்தில், வலு வான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, ஊழல் புரிந்திட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வைத்திட இந்த அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஏற் படுத்தவேண்டியதும் அவசியம்.

தமிழில்: ச.வீரமணி