Friday, April 25, 2014

அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் : பிரகாஷ் காரத்

பிரண்ட்லைன் ஏட்டின் சார்பில் அதன் செய்தியாளர் டி.கே.ராஜலக்ஷ்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்திடம் நேர்காணல் கண்டிருக்கிறார். அதன் சாராம்சம் வருமாறு:



காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஓர் அரசியல் மாற்று குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், இது தொடர்பாக இடதுசாரிகள், காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளைக் கடந்த காலங்களில் ஒருங்கிணைத்த அனுபவத்தின் அடிப்படை
யில், இன்றைய தினம் உள்ள அரசியல் சூழ்நிலையில், இடதுசாரிகள் மற்றும் சில மாநிலக் கட்சிகளின் தற்போதைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பிரகாஷ் காரத்: கடந்த இருபதாண்டு காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் ஒரு மாற்றை உருவாக் கிட முயற்சித்துக் கொண்டு வந்திருக் கிறோம். நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே அடிப்படை வித்தியாசங்கள் எதுவும் கிடையாது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜக இருப்பது என்பது அதுபின்பற்றிவரும் இந்துத்துவா சித்தாந்தத்தில்தான். இத்தகைய சூழ்நிலையில் ஓர் அரசியல் மாற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மாற்றுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லநாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கி றோம். தேசிய அளவில் இத்தகைய மாற்றுக் கொள்கையை ஓர் எதார்த்தமானதாக மாற்றக்கூடிய அளவிற்கு இடதுசாரிகள் இன்னமும் வலுப்பெறவில்லை.
ஆனால், அதே சமயத்தில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுத்திடக்கூடிய வகையில் தேர்தல் காலங்களில் காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். 1996ல், தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத பல கட்சிகளை இணைத்துஐக்கிய முன்னணி அமைத்து, அதுஅரசாங்கத்தை அமைக்கக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றதில் வெற்றிபெற்றோம். இவ்வாறு தேர்தலுக்குப் பின்னர்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐக்கிய முன்னணி சார்பில் குறைந்தபட்ச பொது செயல்திட்டமும் வரையப்பட்டது. இதன் ஆட்சிக் காலம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. அந்த ஈராண்டு காலத்திலும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்திட இடதுசாரிகள் கோரினார்கள்.
ஆனால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொண்டு விட்டதால், ஆட்சி கவிழ்ந்தது. இப்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் நன்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். பாஜகவைப் பொறுத்தவரையில், வலுவாகவுள்ள மாநிலங்களில் அது ஆதாயம் அடையலாம். ஆனால் அதே சமயத்தில் இதர மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக உள்ள மக்களின் மனநிலை மாநிலக் கட்சிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் ஆதரவாகவே திரும்பிடும். இந்தப் புரிதலுடன்தான் நாட்டிலுள்ள காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற 11 கட்சிகளும் தேர்தலுக் குப்பின் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயல்படுவது எனத் தீர்மானித்தன.
நாட்டிலுள்ள பிரதான கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் மூன்றாவது மாற்று என்பதையே நிராகரிக்கிறார்களே?
பிரகாஷ் காரத்: பாஜக மூன்றாவது அணிக்கான வாய்ப்பையே தள்ளுபடி செய்கிறது. ஏனெனில், காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு ஆதரவு உண்டு என்பதும், காங்கிரஸ் மீதுள்ள கோபத்தால் பாஜக ஆதாயம் அடைந்துவிடாமல் அவற்றால் தடுக்க முடியும் என்பதும் அதற்கு நன்கு தெரியும். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் குணத்தின் காரணமாக, அக்கட்சிகளில் ஒருவரை தேர்தலுக்கு முன்பாகவே, பிரத மர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பாஜக சார்பில் எதேச்சதிகாரி ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பது இந்த அணுகுமுறையே கேலிக்குரிய தாக்குகிறது. ஆயினும், பிரதமர் யார் என்று தீர்மானிப்பது தேர்தலுக்குப்பின்னர் மட்டுமே சாத்தியம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
இடதுசாரிகள், ஐமுகூ-1 அரசாங்க களத்தில் முன்வைத்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மிகவும் நன்றாக இருந்தன என்பதையும், மக்கள் ஆதரவுக் கொள்கைகள் என்பதையும் பொதுவாக அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆயினும், அவற்றால் இடதுசாரிகள் ஆதாயம் அடையவில்லையே. இடதுசாரிகள்இதற்காக நடத்திய போராட்டங்கள் மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லப்படாததுதான் இதற்குக் காரணம் என்று கூறலாமா?
பிரகாஷ் காரத்: ஐமுகூ அரசாங்கத் திற்கு நாங்கள் அளித்த ஆதரவு என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத்தான் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், அந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து நாங்கள் ஆதரித்தோமானால், விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற அக்கட்சியின் எதிர்மறை அம்சங்கள், எங்களையும் கடுமையாக பாதிக்கும். ஆயினும், 2009 தேர்தல்களில் எங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டதற் கான காரணங்கள் இது அல்ல. பிரதான மான காரணம், மேற்கு வங்கத்தில் நாங்கள் தோற்றது. ஏனெனில் அங்கிருந்துதான் அதிகமான இடங்கள் இடதுசாரிகள் பெற்று வந்தார்கள். அம்மாநிலம் சம்பந்தப்பட்ட பல காரணிகள் எங்கள் செயல்பாடுகளைப் பாதித்தன. ஐமுகூ அரசாங்கமும், அதற்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்ததும் வேறு வகையானது. நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும் இல்லை, அதனுடன் கூட்டணியும் வைத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவினை அளித் தோம்.
ஏனெனில், பாஜகவின் ஆறாண்டு கால ஆட்சிக்குப்பின்னே அங்கே ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அப்போது காங்கிரசிடம் நாங்கள் கேட்டுக்கொண்டது என்னவென்றால், ஐமுகூ அரசாங்கத்திற்கு என்று ஒரு குறைந்தபட்ச பொது செயல்திட்டம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி னோம். அந்தத் திட்டம் எங்கள் திட்டம்அல்ல. ஆனால் அதனை உருவாக்குகையில் அதுகுறித்து எங்களிடமும்கலந்தாலோசனை மேற்கொண் டார்கள். குறைந்தபட்ச பொது செயல்திட்டத் தில் இருந்த, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் சிலவற்றை அமல்படுத்த வேண்டும் என்று கோரினோம். அதே சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்டநவீன தாராளமய நடவடிக்கைகளை எதிர்த்தோம்.
இந்தக் காலத்தில் இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தின. நாட்டில் ஒருநாள் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவோ அல்லது கூட்டணியாகவோ இல்லை. எனினும்,எங்களது போராட்டங்கள் காரணமாக ஐமுகூ அரசாங்கம் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தில் உறுதியளிக்கப்பட் டிருந்த தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் போன்ற சில உறுதிமொழிகளை நிறைவேற்ற ஐமுகூஅரசாங்கம் முன்வந்தது. அது 2009தேர்தலில் அவர்களுக்கு உதவியது. அவர்கள் அரசாங்கத்தில் இருந்ததாலும், அவற்றைத் தாங்கள்தான் அமல்படுத்தினோம் என்று உரிமை கொண்டாடக்கூடிய நிலையில் அவர்கள் இருந்ததாலும், அதற்கான நற்பெயரை இடதுசாரிகள் பெற முடியவில்லை. ஏனெனில் நாங்கள் அரசாங்கத்திற்கு வெளியே இருந்தோம். நாங்கள் ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து வந்த இந்தக் காலம் முழுவதுமே, நாங்கள் எண்ணற்ற கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தி னோம்.
2009ல் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும், 2014 தேர்தல் அறிக்கைக்கும் இடையே உங்கள் கொள்கை மற்றும் திட்டங்களில் மாற்றம் இருக்கிறதா?
பிரகாஷ் காரத்: சில பொதுவான கோரிக்கைகளை நாங்கள் கெட்டிப்படுத்தி யிருக்கிறோம். உதாரணமாக, குறைந்த பட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என்பதுடன், அது நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும்கோரியிருக்கிறோம். 4,000 ரூபாய்குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டிருக்கிறோம். தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சர்வதேச அளவிலான ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய வகையில் அர சியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும், ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், கார்ப்பரேட்டுகளையும், பொது-தனியார்-ஒத்துழைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என்பது முதலான சட்டத்திருத்தங்களையும் நாங்கள் கேட்டிருக்கிறோம்.
சில கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்கிடையே ஓர் அமைப்பை உருவாக்கிடக்கூடிய விதத்தில் இக்கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா?
பிரகாஷ்காரத்: இக்கட்சிகளுடன் இதுதொடர்பாக பொதுவான கொள்கை களின் மேடை அமைத்திட இதுவரை நாங்கள் தெளிவானமுறையில் இறங்கிட வில்லை. சில பிரச்சனைகளின் மீது எங்களிடையே ஒரு பொதுவான அணுகுமுறை இருக்கிறது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர், தேவைப்பட்டால், நிச்சயமாக பொது செயல் திட்டம் ஒன்றை உருவாக்கிடுவோம். இப்போதைக்கு, சில வித்தியாசமான அணுகுமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக, நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் அளிப்பது தொடர்பான பிரச்சனைக்கு சில கட்சிகள் எங்களுடன் ஒத்துவரவில்லை. இதேபோன்று வேறுசில பிரச்சனைகளும் பேசித் தீர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.
உங்களுக்கிடையே பெரிய அளவில் கருத்துவேறுபாடுகள் இல்லை, அப்படியே வந்தாலும் ஒரு பொது குறிக்கோளை எய்துவதற்காக அவற்றைக் கடந்து செல்ல முடியாதா?
பிரகாஷ்காரத்: உண்மையில் அப்படிபொது செயல்திட்டம் எதையும் இன்ன மும் நாங்கள் தயாரித்திடவில்லை. எங்களுக்கிடையே சில வித்தியாசங்கள் உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். எனவேதான், பொது செயல்திட்டம் உருவாக்கும் சமயத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை முன்வைத்து அது உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கும் சமயத்தில் அதிகபட்சம் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியவற்றை அதில் இணைத்திட முயல்வோம்.
தேர்தலில் இடதுசாரிகளின் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பிரகாஷ்காரத்: மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் தங்க ளுக்குப் பிரதானமான வலிமையை மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் பெறுகின்றன. இம்மூன்று மாநிலங்களிலும் 2009இல் இருந்ததைவிட இப்போது எங்கள் நிலையை மேம்படுத் திக்கொள்வதற்காகக் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தடவை சிறப்பான முறையில் அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

No comments: