Sunday, May 30, 2010

ஐ.மு.கூ. அரசு ஓராண்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் கொள்கைகள்




தலையங்கம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங் கத்தின் ஓராண்டு நிறைவை யொட்டி பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியானது, அரசாங்கம் திசையேதுமின்றி பயணித்துக்கொண்டிருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நாடா ளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அரசாங்கமானது நிதிச் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு கட்சிகளி டம் பல்வேறுவிதமான பேரங்களைச் செய்தும், பேரங்களில் மசியாது போனால் மிரட்டியும் ஆதரவு திரட்டி, நிறைவேற்றியதிலிருந்து நன்கு பார்க்க முடிந்தது. உண்மையில், மக் களவையில் 200 உறுப்பினர்களுக்கும் மேலுள்ள ஒரு கூட்டணி அரசாங்கம் முத லாம் ஆண்டிலேயே இவ்வாறு தாங்கள் கொண்டுவந்த சட்டமுன்வடிவினை நிறை வேற்றுவதற்காக, உறுப்பினர்களின் தலை களை எண்ண வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது கடந்த இருபதாண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.

பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்காக அர சாங்கம், மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன் வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட் டிருந்த போதிலும், மக்களவையில் கொண்டு வராமல் கிடப்பில் போட்டுவிட்டது. இப்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப் படுத்துவதற்காக, மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ராணுவம்சாரா (சிவில்) அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்காகவும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதி அடிப்படை யிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக் கப்பட வேண்டும் என்று பல கட்சிகள் கோரி யதற்கு ஆரம்பத்தில் அடாவடித்தனமாக மறுத்த அரசாங்கம், பின்னர் கீழிறங்கி வந்து இப்பிரச்சனை குறித்து ஆராய அமைச்சர்கள் குழு ஒன்றை நியமித்திருக்கிறது.

பருவநிலை மாற்றம்

அரசின் விளைவல்ல

ஐமுகூ-1 அரசாங்கம் போலல்லாமல், ஐமுகூ-2 அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றையும் கொண் டிருக்கவில்லை. எனவே, இந்த அரசுக்கு செல்ல வேண்டிய திசை எதுவும் கிடையாது. அதேபோன்று செயல்பாட்டில் எதற்கு முக் கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற துடிப் பும் எதுவும் கிடையாது. குடியரசுத் தலைவர், நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில், அரசாங்கத்தின் முதல் நூறு நாட்களுக்கான நிகழ்ச்சிநிரலைப் பட்டியலிட்டார். இவற்றில் பெரும்பான்மையானவை குறித்து நாடாளுமன் றத்தில் எதுவுமே இதுவரை கூறப்படவில்லை.

இவ்வாறு எதைப்பற்றியுமே கவலைப் படாத போக்கு, பிரதமர் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியிலும் நன்கு பிரதி பலித்தது. குறிப்பாக, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து, அதிலும் குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம்போல் ஏறியிருப்பது குறித்து, பிரதமர் செய்ததெல்லாம், ‘‘ஆழ்ந்த கவலை’’யை வெளிப்படுத்தியது தான். இத்துடன் டிசம்பருக்குள் விலைகள் கட்டுக்குள் வந்துவிடும் என்று அறிவித்தி ருக்கிறார். வரும் ஆண்டில் பருவநிலை நன்கு இருக்கும் என்றும், அதனை அடுத்து நல்ல அறுவடை ஏற்பட்டு, விலைகள் கட் டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் நம்புகிறார். இது நடைபெற்றால் மக்களுக்குச் சற்றே நிவா ரணம் கிடைக்கும். அதே சமயத்தில், நல்ல பருவநிலை ஏற்படுவது என்பது நல்ல அர சாங்கத்தின் விளைவால் அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் அளித்திட மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்ற முக்கிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்காது மழுப்பி விட்டார். அத்தியாவசியப் பண்டங்கள் மீதான முன்பேர வர்த்தகம் என்னும் ஊக வணிகத் தைத் தடை செய்வது தொடர்பாக பிரதமர் எது வுமே கூறவில்லை. மேலும் இந்த ஆண்டு உணவு தானிய இருப்பு, அரசின் கிடங்கு களில் இரட்டிப்பாகியுள்ள போதிலும், விலை வாசியைக் கட்டுப்படுத்திட, அவற்றை மக்க ளுக்குப் பொது விநியோக முறையில் விநி யோகிப்பதற்காக மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திட, அரசு எதுவும் நடவடிக்கை எடுக்க இருக்கிறதா என்பது குறித்தும் பிரதமர் எதுவும் கூறவில்லை. அதேபோன்று, பொது விநியோக முறையை வலுப்படுத்துவது குறித்தோ அல் லது பெட்ரோல், டீசல், உரங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி இருப்பதை மறுபரிசீலனை செய்வது தொடர்பாகவோ அவர் எதுவும் கூறவில்லை.

அரசியல் சந்தர்ப்பவாதம்

வர்த்தகர்கள் கொழுக்க வகை செய்யும் முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊக் கப்படுத்தும் வகையில் அரசு எதுவும் செய் யாது என்று பிரதமர் நாடாளுமன்றத்தின் உள் ளேயும் கூறினார், வெளியேயும் கூறினார். ஆயி னும், டெலிகாம் ஊழல் தொடர்பாக ஒரு கேள் விக்கு அவர் பதிலளிக்கையில், ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகையையும் 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகை யையும் ஒப்பிட்டுப்பார்த்தோமானால் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது’’ என்று ஒப் புக் கொள்ளும் அதே சமயத்தில், இது தொடர் பாக மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணை செய்து வருவதாகக் கூறி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்கு எதி ராக விசாரணை எதுவும் இருந்தால், சம்பந் தப்பட்ட துறையின் அமைச்சர், விசாரணை முடியும் வரை அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதே, இயற்கை நீதியின் விதிகளாகும். ஆயினும், கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங் களும், ஆட்சியில் தொடர வேண்டும் என்கிற ஆசையும் பிரதமரை தேவையற்ற சமரசங் களைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி யிருக்கிறது. இதனை அரசியல் சந்தர்ப்ப வாதம் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது? இதேபோன்றுதான், ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற சம்பவங் களும். இப்பிரச்சனைகள் தொடர்பாக நிதி அமைச்சகம் புலனாய்வு மேற்கொண்டிருக் கிறது என்று பொத்தாம் பொதுவில் கூறிய தைத் தவிர, உறுதியான பதில் எதையும் கூறா மல் பிரதமர் நழுவி விட்டார். வர்த்தகர்கள் கொழுக்க வகை செய்யும் முதலாளித்துவம் தொடர்பாகவும் இதே நிலைமைதான்.

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு, மாவோயிஸ்ட்டுகள் வன்முறை பெரும் அச் சுறுத்தலாக இருக்கிறது என்று பிரதமர் பல முறை கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘‘இப் பிரச்சனையின் பரிமாணத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம் என்று கூறு வது சரியல்ல’’ என்றும் தெரிவித்திருக்கிறார். ஆயினும், இப்பிரச்சனையைச் சமாளித்திட, பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை ஏற்க மறுத்திருப்ப திலிருந்து, அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்த அவர் தவறிவிட்டார். சட்டம்-ஒழுங்கு நட வடிக்கைகள் மேற்கொள்வதுடன் நின்று விடாது, அதற்கும் மேலாக, மாவோயிஸ்ட் சவாலை எதிர்கொள்வதற்கான அரசியல் அணுகுமுறையைத் தத்துவார்த்தரீதியாகவும் மேற்கொள்ள வேண்டும், பழங்குடியினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வளர்ச்சித் தேவைகளை உளப்பூர்வமாக மேற்கொண்டிட வேண்டும்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவ டிக்கை எடுப்பதில் தனக்கு ஒரு குறிப்பிட்ட வரையறைதான் உண்டு என்று மத்திய உள் துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையை பிரதமர் ஒதுக்கித்தள்ளிவிட்டு, ‘‘வாய்ப்பு ஏற்படும்போது, இப்பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் கூட்டத் தில் விவாதிக்கப்படும்’’ என்றார். ‘‘இப்பிரச் சனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம்’’ என்பதை ஒப்புக் கொண்ட போதிலும், இது தொடர்பாகத் துல்லி யமான விதத்தில் எதுவும் கூறவில்லை. மேலும் இது தொடர்பாக திரிணாமுல் காங் கிரசின் எதிர்மறையான நிலைப்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் நழுவிவிட்டார். திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் டுகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கைகளின் மூலம் தேர்தல் ஆதாயம் பெறலாம் என்று அது நம் பிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு மாவோ யிஸ்ட்டுகள் குறித்து மிகவும் முரண்பட்ட நிலை எடுத்துள்ள ஒரு கட்சியுடன் எப்படிக் கூட்டணியை வைத்துக்கொண்டிருக்கிறீர் கள் என்ற கேள்விக்கு பிரதமர் வாயே திறக் கவில்லை. மாவோயிஸ்ட் வன்முறைகள் தொடர்பாக எழுந்துள்ள ஆபத்தான ஊசலாட் டங்களை அனுமதிக்கக்கூடிய அளவிற்கு அரசியல் சந்தர்ப்பவாதம் மீண்டும் ஒருமுறை முன்னுக்கு வந்திருக்கிறது.

இளைய பங்காளியாக

மாற்ற முயற்சி

அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த வரை, அரசாங்கம் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடருதல், இந்தியா - பிரேசில் - தென் ஆப்பிரிக்கா (ஐக்ஷளுஹ - ஐனேயை-க்ஷசயணடை-ளுடிரவா ஹகசiஉய) ஒத்துழைப்பை வலுப்படுத்து தல், பிரேசில் - ரஷ்யா - சீனா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்பிற்கு உத்வேகம் கொடுத்திருத் தல், பூமி வெப்பமாதல் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கி டையே (க்ஷஹளுஐஊ - க்ஷசயணடை, ளுடிரவா ஹகசiஉய, ஐனேயை, ஊாiயே) ஒற்றுமை ஏற்பட்டிருத்தல் போன்ற ஆக்கபூர் வமான முன்முயற்சிகள் இருந்தபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் தொடரும் என்று பிரதமர் கூறி, தன்னுடைய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஆதரவு நிலை யையும் ஐயந்திரிபற வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரதமர், தனக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடரான ‘‘உள்ளீடான வளர்ச்சி’’ என்பதை மீண்டும் ஒப்புவித் திருந்தபோதிலும், அவரது அரசாங்கம் பின் பற்றும் கொள்கைகள், உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடை வெளியை மேலும் மேலும் அகலப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக் கின்றன. உல கப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட அதே 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த பில்லி யனர்கள் (ஒரு பில்லியனர் என்றால் நூறு கோடி. ஒரு அமெரிக்க டாலர் இந்தியாவின் ரூபாய் மதிப்புக்கு 50 ரூபாய் என்றால், 100 கோடி டாலர் என்பது 5000 கோடி ரூபாய். எனவே ஒரு பில்லியனர் என்றால் 5000 கோடி ரூபாய்க்கு அதிபதி என்று பொருள்) எண் ணிக்கை 52ஆக இரட்டிப்பாகி இருப்பது குறித்து மவுனம் சாதிக்கிறார். அவர்களின் சொத்துக் களின் கூட்டு மதிப்பு மிகப் பிரம் மாண்டமான தாகும். அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காகும்.

ஒட்டுமொத்தத்தில், இந்த அரசு, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதையும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘இளைய பங்காளி’யாக மாற்ற முயற்சிப்பதையும் எவ்வித லஜ்ஜையு மின்றித் தொடர்கிறது. இக்கொள்கைகளை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே, மக்க ளுக்கு நிவாரணம் அளித்திடவும் சிறந்ததோர் இந்தியாவை நிர்மாணித்திடவும் அந்தத் திசை வழியில் நாம் நம்முடைய மக்கள் இயக் கங்களை வலுப்படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி

No comments: