Monday, May 31, 2010

தீண்டாமை வடிவங்கள் அனைத்தையும் அடியோடு அகற்றுவோம்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் சபதம்
புதுக்கோட்டை, மே 31-

புதுக்கோட்டையில் எழுச்சி யோடு நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவும், தீண்டாமைக் கொடுமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவும் உறுதியேற் றுள்ளது.

இந்தியச் சமூகத்தின் பொருளியல் ஒடுக்குமுறையோடு சமூக ஒடுக்கு முறையும் பின்னிப் பிணைந்திருக் கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கவசமாக சாதியக் கட்டமைப்பை காலகாலமாய் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதன் பன்முக விளைவு கள் உழைப்பாளி மக்களின் வாழ் வுரிமை மீதும், ஒற்றுமை மீதும் எதிர் மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக் கின்றன. பொருள் ஒடுக்குமுறையி னின்று மனித குலத்தை விடுவிக்கிற போராட்டம் சமூக தளத்தில் ஒரு சேர நடைபெற வேண்டியுள்ள தேவையை இம்மாநாடு அழுத்தமாக வலியுறுத்து கிறது. இப் போராட்டக்களத்தில் கரம் கோர்க்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், உழைப்பாளி மக்களுக் கும் தலித் இயக்கங்களுக்கும் இம் மாநாடு வேண்டுகோள் விடுத்தது.

இந்திய மண்ணில் சாதியக் கட்ட மைப்பின் உச்சபட்ச கொடூரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பி லிருந்து இறப்புவரை வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க் கடைகள், சிகை திருத்தகம், சலவைய கம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டா மைக் கொடுமைகள் பல்வேறு வடி வங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத் தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக் குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்கு களாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச் சனை மட்டுமல்ல. இத்தகு அநீதி களை எதிர்கொள்ளாமல் ஜனநாயகத் திற்கான போராட்டத்தில் இம்மியள வும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்ப தற்கு இம்மாநாடு உறுதியேற்றது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியதி லிருந்து நடத்தி வருகிற களப்போராட் டங்கள் சமூக நீதிக்கான பயணத்தில் பெரும் நம்பிக்கையளிப்பதாக அமைந் துள்ளன. தலித் மக்களை புறக்கணிக் கிற சுவர்கள் வீழ்ந்துள்ளன. பல ஆல யங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட மயானப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதிக்கச் சக்தி யினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளன. இப்போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமின்றி பெருந் திரளாக உழைப்பாளி மக்களும் பங்கேற்றிருப்பது எதிர்காலப் பயணத் திற்கு நம்பிக்கையூட்டுகிற நிகழ்வுகளா கும் என மாநாடு பாராட்டியுள்ளது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடும் இக் காலத்தில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றியாகும். பட்டியலினத்தவர் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முதன்முறையாக இவ்வாண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு கிட்டியுள்ள வெற்றிகளாகும் என்று மாநாடு பெரு மிதத்தோடு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் நமது இலக்குகளை நோக்கி நாம் வெகு தூரம் முன்னேற வேண்டியுள்ளது. ஆதிக்கச் சக்தி களின் சாதிவெறி ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்றைக்கும் மனித உரிமைகளுக்கும், மாண்புகளுக்கும் சவால் விடுப்பவையாக உள்ளன. அரசு இயந்திரமும், காவல் துறையும் வன் கொடுமைகளுக்கு எதிராக மவுனம் சாதிப்பதும், துணை போவதும், ஆதிக்கச் சக்திகளுடன் கைகோர்ப் பதுமான அணுகுமுறையும் தொடர் கிறது. இவற்றுக்கு எதிரான பரந்த திரட் டல், விழிப்புணர்வு தேவைப்படுகிறது என மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், தலித்துகளுக்கு நிலம், பட்டா உறுதி செய்திடவும், மனித மாண்புகளுக்கு எதிரான சாதிய ரீதியிலான பணிகளைக் கட்டாயப் படுத்துகிற இழிசெயலுக்கு முடிவு கட்டவும், அருந்ததியரின் வாழ்வுரி மைக்கான போராட்டங்களை இடை யறாது தொடர்ந்திடவும், தலித் கிறித் தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க வேண்டிய இயக்கங்களை நடத்திடவும், பஞ்சமி நிலங்களை மீட் டிடவும், தனியார்துறை இடஒதுக்கீட் டைப் போராடிப் பெற்றிடவும், தலித் நிலுவைக் காலியிடங்களை நிரப்புவ தன் மூலம் இடஒதுக்கீட்டின் உயிர்ப் பைப் பாதுகாத்திடவும், பழங்குடி மக் களின் வாழ்வுரிமைக்காக போராட வும், தலித் மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுப் சிறப்புகளை வளர்த் தெடுக்கவும் இம்மாநாடு கோடானு கோடி உழைப்பாளி மக்களைத் திரட் டிப் போராட உறுதியேற்கிறது. மனித குலத்தின் அவமானச் சின்னங் களாகத் திகழ்கின்ற தீண்டாமை வடி வங்களை அடியோடு இம்மண்ணிலிருந்து அகற் றவும் மாநாடு சபதமேற்றுள்ளது.

ஒடுக்குமுறைகள் எவ்வடிவில் அமைந்தாலும் அவை மனித குல விடியலுக்கான தடைக்கற்களே என்ற உயர்வோடும், அதற்கான புரிதலோ டும் முன்னேறுவோம்! இலக்குகளை எட்டுவோம்! என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.

No comments: