Sunday, October 25, 2009

விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வி மன்மோகன் அரசு மீது பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு




புதுதில்லி, அக். 25-

ஆசியான் நாடுகளுட னான தாராள வர்த்தக உடன்பாட்டில் இந்திய விவசாயிகளை பாதிக்கும் விதத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரி விக்கிறது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிர காஷ் காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அக்டோபர் 23 - 25 தேதிகளில் புதுதில் லியில் ஏ.கே. கோபாலன் பவனில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவு களை விளக்கி ஞாயிறு மாலை நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறியதாவது:

கடந்த ஐந்து மாதங் களில், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐமுகூ அரசு, முன்பு கடைப் பிடித்த அதே தாராளமய, தனியார்மய உலகமயக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மேலும் அது கூடுதலாக அமெரிக்காவுட னான தன் கேந்திர உறவு களை வலுப்படுத்திக் கொள்வதிலும் முகப்பு காட்டுகிறது.

ஐமுகூ அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை, லாபத்தை அள்ளித்தரும் என்டிபிசி போன்ற நவரத்தினா பொதுத் துறை நிறுவனங்களின் பங் குகளைக் கூட தனியாருக் குத் தாரை வார்க்க நடவ டிக்கைகளை எடுத்து வரு கிறது. லாபம் ஈட்டும் நவ ரத்தினா பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கமாட்டோம் என்று முன்பு ஐமுகூ அர சாங்கம் சொல்லி வந்தது. ஆனால் தற்சமயம் உலக வங்கியிடமிருந்து 2 பில் லியன் டாலர்கள் கடன் வாங்கியதை அடுத்து,உலக வங்கியின் நிபந்தனைக ளுக்கு கட்டுப்படும் விதத் தில் நவரத்தினா பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்த் திட இருக்கிறது.

ஆசியன் நாடுகளுட னான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கும் எங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தி ருக்கிறோம். இதன் அடிப்ப டையில் இன்சூரன்ஸ், வங் கிகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிக ரிக்க அரசு முயற்சித்து வரு கிறது.

அத்தியாவசியப் பொருள் களின், குறிப்பாக உணவுப் பொருள்களின், விலை வாசியைக் கட்டுப்படுத் துவதிலும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந் திருக்கிறது. எதிர் காலத்தில் நிலைமைகள் சரியாகி விடும் என்று அரசு உறுதி கூறியது. ஆனால் இப் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. விலைவாசியைக் கட்டுப் படுத்துவதில் அரசாங்கத் தின் செயலற்ற தன்மை சாமானிய மக்களைக் கடும் துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிக ளில் வெள்ளம், வறட்சி இவற்றால் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சி, தொடர்ந்து அத்தியாவசியப் பண்டங்க ளின் விலை உயர்வு இவற் றால் மக்களின் வாழ்வா தாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண் டிருக்கிறது. அரசின் இத்த கைய செயலற்ற தன்மையை எதிர்த்தும், விலைவாசி யைக் கட்டுப்படுத்தக்கோரி யும், வெள்ளம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி யும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இடது சாரிக் கட்சிகள் மாநில அள வில் சிறப்பு மாநாடுகள், பேரணிகள்/ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருகின்றன.

ஐமுகூ அரசாங்கமா னது மிக வேகமாக உலக வர்த்தக அமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர் பான தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரதம ருக்கு எழுதிய கடிதம் அதிர்ச் சியளிக்கிறது. அரசின் இத் தகைய மாற்றத்திற்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக் கிட தீர்மானித்திருக்கி றோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக விரிவான வகையில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறோம்.

மத்தியக் குழுக் கூட்டத் தில் கட்சியில் நெறிப்படுத் தும் இயக்கம் குறித்த ஆவ ணம் இறுதிப்படுத்தப் பட் டிருக்கிறது. அரசியல் ரீதி யாக, தத்துவார்த்த ரீதியாக, ஸ்தாபன ரீதியாக நெறிப் படுத்தும் இயக்கம் அமைந் திடும். அதன் மூலம் கட் சியை மேலும் உருக்கு போன்று உருவாக்கிடக் கூடிய வகையில் இது அமைந்திடும். இந்த ஆவ ணத்தின் அடிப்படையில் கட்சியை வலுப்படுத்திட, நடவடிக்கைகள் மேற் கொள்ள இருக்கிறோம்.

சில வழிகாட்டும் நெறி முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற் றின் அடிப்படையில் அது அமைந்திடும். முதலில் மத்தி யக் குழுவில் இது தொடங் கும். அடுத்து மாநில அள வில், அதற்கடுத்து மாவட்ட, வட்ட, மண்டல அளவில் அது அமைந்திடும்.

No comments: