Sunday, October 25, 2009

அமைச்சர் ஆ.ராசா ஏன் பதவி விலக வேண்டும்? - ‘பயனீர்’ நாளேடு தரும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்




அமைச்சர் ஆ. ராசா பொறுப்பு வகிக்கும் அமைச்சகத்தின் கீழான பல்வேறு அலுவலகங்களிலும் மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முக்கியமான பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளனர். ஆயினும் அமைச்சர் ஆ.ராசா, தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதி முறைகளைச் சரியாகத்தான் கடைப் பிடித்துள்ளதாகவும் எனவே தான் பதவி விலகப் போவதில்லை என்றும் கூறி யிருக்கிறார்.

புதுதில்லியிலிருந்து வரும் ‘தி பயனீர்’ நாளேடு அவர் ஏன் பதவி விலக வேண் டும் என்பதற்கான ஆதாரங்களை அடுக் கியுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:

“2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக் கீடு தொடர்பாக, நடைபெற்றுள்ள முறை கேடுகள் குறித்தும், அதில் அமைச்சர் ஆ. ராசாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து ‘தி பயனீர்’ நாளேடு ஆதாரங் களை வெளியிட்டு வந்திருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரவை ஏற்பளிப்பு தரப்படவில் லை என்பதிலிருந்து இது தொடங்கு கிறது. அமைச்சர் ஆ.ராசாவின் கட்ட ளைக்கிணங்கவே இது தரப்பட்டிருக் கிறது.

2007 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தொலைத் தொடர் புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அமைச்சர் பொறுப்பிலிருந்து கழற்றிவிடப்பட்ட பிறகு, அமைச்சர் ஆ.ராசா அந்த இடத்திற்கு வந்தார்.

இதனை அடுத்து, இவ்வாறு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக விண்ணப் பித்த புதிய நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அனைவருமே அதுநாள்வரை அமைச்சர் ராசாவின் ஆளுகையின் கீழிருந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ‘ரியல் எஸ்டேட் துறை’யின் கீழ் பதிவு செய்திருந்த நபர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கு விண் ணப்பிப்பதற்கான கெடு நாள் 2007 அக் டோபர் 1 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆ. ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் தரப்படும் என்று அறிவித்தார். அப்போது டெலிகாம் செய லாளராக இருந்த டிஎஸ் மதுர் மற்றும் ட்ராய் சேர்மன் நிரூபேந்திரா மிஷ்ரா இந்த முறைக்குக் கடும் ஆட்சேபணை தெரி வித்தனர், ஏலம் விட்டுத் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத் தினர்.

மதுர் ஆட்சேபித்ததால், அவர் 2007 டிசம்பர் 31ல் ஓய்வு பெறும் வரை, இது தொடர்பான கோப்புகளை ஆ.ராசா, கிடப் பில் போட்டார். பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியாற்றிவந்த, ராசாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சித்தார்த் பெஹுரா, புதிய டெலிகாம் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற ஒருசில நாட்களி லேயே, ஒரு பத்திரிகைக் குறிப்பின் மூல மாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கோரு வதற்கான கெடு நாளை 2007 அக்டோபர்1 லிருந்து, ஆறு நாட்கள் முன்தேதியிட்டு, 2007 செப்டம்பர் 25 என்று எவரும் எதிர்பாராத விதத்தில் ஓர் ஆணையை வெளியிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட ஸ்டெல் என்னும் நிறுவனம், தில்லி உயர்நீதி மன்றத்தில் இந்த ஆணையை ஆட்சே பித்து வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற ‘ஒரு நபர் பெஞ்சு’, இந்த ஆணையை ரத்து செய்தது. உயர்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய டெலிகாம் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து, அது நிலுவையில் இருந்து வருகிறது. ஆயினும் உயர்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ‘இடைநிறுத்த ஆணை’ (ஸ்டே) வழங்கிட மறுத்துவிட்டது.

அமைச்சர் ஆ.ராசா இவ்வாறு சித் தார்த் பெஹுரா மூலமாக உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும், அப் போது பதவி யிலிருந்த ‘ட்ராய்’ சேர்மன் மேற்படி உத்த ரவுகளை ஆட்சேபித்து, அமைச்சகத் திற்குப் பல்வேறு பரிந்துரைகளையும், வழி காட்டும் நெறிமுறைகளையும் அளித்துள் ளார். ஆனால் அவை அனைத்தும் அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள் ளன. அனைவரும் போட்டி போடக்கூடிய ஏல முறையை வலியுறுத்திய ட்ராய் பரிந் துரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, ராசா, வெளிப்படையற்ற மற்றும் பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்கிற முறையையே பின்பற்றினார்.

‘ட்ராய்’ மட்டுமல்ல, ப.சிதம்பரம் தலைமையிலிருந்த நிதி அமைச்சகமும் கூட, ‘முதலில் வருவோருக்கு முன் னுரிமை’ என்னும் கொள்கையை வெளிப் படையாகவே எதிர்த்தது. இந்தப் பிரச் சனை தொடர்பாக அப்போது நிதிச் செய லாளராக இருந்த டி.சுப்பாராவுக்கும் (இப் போது ரிசர்வ் வங்கி கவர்னர்) பெஹுரா வுக்கும் இடையில் கடிதங்கள் பரிமாற்றம் வாயிலாக சண்டையே நடந்தது.

ராவ், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை, 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, 2008இல் தரக்கூடாது என்று கூறி இதனை ஆட்சேபித்தார். நிதிச் செயலாள ரும் கூட, விலைகள் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், இந்த முறையை ரத்து செய்திடுமாறு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். தற்போதுள்ள சந்தை விலைக்கேற்ப ஏலம் மூலமாக விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ராசாவின் கேள்விக்குரிய இத்தகைய நடவடிக்கைகளினால் பலன் அடைந் தவை அதுநாள்வரை ரியல் எஸ்டேட் கம்பெனிகளாக இருந்த ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள்தான். பெஹுரா இந்தக் கம்பெனிகளுக்கு ஆதரவாக, இந்தக் கம்பெனிகள் தங்கள் பங்குகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மாற்றக் கூடிய வகையில் வசதிகள் செய்து கொடுத்து, உத்தரவுகளைப் பிறப்பித்தார். மூன்றாண்டுகளுக்குள் ஒரு நிறுவனம் தங்கள் உரிமையாளர்களை மாற்றக் கூடாது என்கிற நிபந்தனைகள் கூட இந்தக் கம்பெனிகளுக்காக கைவிடப் பட்டன.

இவ்வாறு சித்தார்த் பெஹுரா பல்வேறு வழிகளிலும் உதவியதற்காக, அவர் ஓய்வுபெற்ற பின்னரும் கூட நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து 2009 அக் டோபர் 1 அன்று பெஹுரா சென்னையில் உள்ள பொதுத்துறை - தனியார் துறைக் கூட்டு நிறுவனமான ஆல்கடேல் ஆராய்ச்சி மையத்தின் சேர்மனாக நியமிக்கப் பட்டார்.

இவ்வாறு பயனீர் நாளேடு தெரிவித் துள்ளது.

1 comment:

ராஜா வாயிஸ் said...

பயனீர் மட்டுமல்ல இன்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியா தலையங்கமும் அவர் பதவி விலக வேண்டும் என்று தான் சொல்லுகிறது