Monday, January 9, 2017

மதச்சார்பின்மை தொடர்பான தீர்ப்பின் சாரம்



People’s Democracy தலையங்கம்
தேர்தல் நடைமுறையில் மதத்தை முன்வைத்து வாக்கு கேட்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வாயத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்து தீர்ப்பு அளித்திருப்பதுடன், தேர்தல்களில் மதத்திற்கு எந்த இடமும் கிடையாது என்றும், வாக்காளர்களுக்கு மதம், சாதி, இனம் அல்லது மொழியின் அடிப்படையில் வாக்கு கோருவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்123(3)ஆவது பிரிவு குறித்து தெளிவுபடுத்து வதற்காகவே இந்த அரசியலமைப்புச்சட்ட அமர்வாயம் அமைக்கப்பட்டது.
அடிப்படை அம்சம்
123(3) ஆவது பிரிவு கூறுவதாவது: ‘வேட்பாளரால் அல்லது அவரது முகவரால் அல்லது வேட்பாளரின் சம்மதத்துடன் வேறெவராலுமோ அவருடைய மதத்தை,நிறத்தை (race). சாதியை, இனத்தை அல்லது மொழியை அல்லது மத அடை யாளங்களையோ அல்லது தேசியக்கொடி, தேசிய சின்னம் போன்ற தேசிய அடை யாளங்களையோ பயன்படுத்தி அல்லது எந்தவொரு வேட்பாளரையும் தவறான அபிப்பிரா யத்துடன் பாதிக்கக்கூடிய விதத்திலோ வாக்கு கேட்கக்கூடாதுஇந்தப் பிரிவின்அவர்என்பது வேட்பா ளரைக் குறிக்கிறதா அல்லது அவருடைய முகவரைக் குறிக்கிறதா அல்லது வாக்கா ளர்களைக் குறிக்கிறதா என்பது குறித்தும் அமர்வாயம் பிரச்சனை எழுப்பி முடிவு செய்துள்ளது.
அமர்வாயத்தில் பெரும்பான்மை நீதிபதி களின் தீர்ப்பு மிகவும் பரந்த அளவிலும், குறிக்கோளுடனும் அமைந்துள்ளது. இத்தீர்ப்பானது, வேட்பாளரின் மதம், சாதி அல்லது மொழி அடையாளத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பதை மட்டுமல்ல, வாக்காளரின் மதம், சாதி அல்லது இனத்தின் அடிப்படையிலும் வாக்கு கேட்பது இச்சட்டப் பிரிவை மீறிய செயலாகும் என்கிற தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வேட்பாளர் அல்லது அவரது முகவரின் அடையாளத்திற்கும் வாக்காளர்களின் மதம், சாதி அல்லது மொழிக்கும் இடையே எவ்விதமான வித்தியாசத்தையும் பெரும்பான்மை தீர்ப்பு ஏற்படுத்திடவில்லை.
அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமே மதச்சார்பின்மை யை உயர்த்திப்பிடிப்பதே என்பதை மிகவும் விரிவானவிதத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் அவர்கள் மற்ற பெரும்பான்மையான நீதிபதிகளுடன் ஒத்துப்போவதுடன் தனியாகவும் தீர்ப்பினை அளித்திருக்கிறார். மத அடிப்படையிலான வேண்டுகோள்கள் எந்தவடிவத்தில் இருந்தாலும் அது தேர்தல் நடைமுறையைப் பாழ்படுத்திடும் என்று 123(3)ஆவது பிரிவை பெரும்பான்மை நீதிபதிகள் விளக்கி இருப்பது தூய்மையானது போலத்தோன்றுகிற அதே சமயத்தில், இந்தத் தீர்ப்புபிரச்சனையுடன்தான் இருக்கிறது. இந்திய சமூகத்தின் எதார்த்த நிலைகளுடன் பார்க்கும் போது, திட்டமிடாத விளைவுகளையும் அது அளிக்கக்கூடிய விதத்திலேயே இருக்கிறது.
மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை
அமர்வாயத்தின் நீதிபதிகளில் சிறுபான்மை தீர்ப்பு வழங்கியுள்ள நீதியரசர் டி.ஒய். சந்திரசூட், எழுப்பியிருக்கும் பிரச்ச னைகள் சில மிகவும் ஆழமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். பெரு ம்பான்மை தீர்ப்புரையோடு ஒத்துப் போகாது அதற்கு எதிராக அபிப்பிராயபேதத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ள சிறுபான்மை நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவின்கீழ் மதம், நிறம்(race). சாதி, இனம் (community) அல்லது மொழி ஆகியவற்றின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான வடிவங்கள் குறித்தும் ஆய்வு செய்திடும் சமயத்தில், சில சாதியினர்,இனத்தினர் அல்லது மொழிச் சிறுபான்மை யினர் ஊழல் நடைமுறைகளின் விளைவாகசமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாவதையும் விரிவான முறையில் ஆய்வு செய்திட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மதரீதியாக, சாதிய ரீதியாக அல்லது இனரீதியாக எழுப்பப்படும் சமூக ஒடுக்குமுறை அல்லது பாகுபாடு குறித்துப் பேசிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலுவானமுறையில் சிறுபான்மை தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களின் தீர்ப்பில், ‘தேர்தலில் போட்டியிடும் நபர், தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள், நிறத்தைச் சேர்ந்தவர்கள், சாதியைச் சேர்ந்தவர்கள், இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மொழியைச் சேர்ந்த வர்கள் சமூகப் பழக்கவழக்கங்களின் அடிப்ப டையில் அநீதிக்கு உட்படுத்தப்படும்போது அவைகுறித்து அவர் பேசுவதற்குத் தடை விதித்தால் அது ஜனநாயக ரீதியாக பரிகாரம் காண்பதையே சுருக்கிவிடும்’’ என்று கூறி யிருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்ட மைய குறிக்கோள்
மேலும் அவர்கள், ‘பலநூறு ஆண்டுகால மாக சமூகரீதியாகவே சமூகத்தில் பெரும் பகுதியினரின் மதம், சாதி மற்றும் மொழி ஆகியவை சமூகப் பாகுபாடுகளின் அடை யாளமாக இருந்து வருகின்றன. இவற்றை எவரும் மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. இத்தகு மக்கள் பிரிவினருக்கும் ஒரு நியாயமான சமூக அமைப்பை உருவாக்குவதுதான் அரசமைப்புச்சட்டத்தின் மையமான குறிக்கோளாகும் (central theme).
ஜனநாயகத்தில் தேர்தல் அரசியல் என்பது மக்களைத் திரட்டுவதுதான் என்றும் சமூகரீதியாகத் திரட்டுவது என்பதும் தங்களு க்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பயன்களை, பலன்களைத் தேடுவதற்கான ஒருபிரிக்கமுடியாத அடிப்படைக்கூறுதான் என்றும்கூறியிருக்கிறார்கள்.நாடாளுமன்றத்தில், 1961ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)ஆவது பிரிவின்கீழ் திருத்தம் கொண்டுவருவதற்காக, விவாதம் நடைபெற்றபோது, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணு சக்ரவர்த்தி, திருத்தத்தை முன்மொழிய இருந்த தெரிவுக் குழுவிற்கு ஓர் ஆட்சேபணைக் குறிப்பை அளித்து, பின்னர் அது தெரிவுக்குழுவால் ஏற்றுக்கொள்ளவும் பட்டது.
இந்தத் திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அவர் பேசுகையில், ‘இந்தத்திருத்தமானது, சாதி அல்லது இனத்தின் அடிப்படையில் சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ளவர்கள், அத்தகையஅநீதியான நடைமுறைகளை விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்திரு த்தம் பாயுமோ என்றும் தங்கள் சாதியினர், இனத்தினர் அல்லது சிறுபான்மைக் குழுவினர் மீது ஏவப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டினால் அவர்கள் ஊழல் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படு வார்களோ என்று நான் அஞ்சுகிறேன்.’
பரிசீலிக்கப்படாத அம்சம்
இந்த அரசமைப்புச்சட்ட அமர்வாயம் பகர்ந்துள்ள தீர்ப்பின் மற்றுமோர் அம்சம், இது 1995ஆம் ஆண்டு நீதியரசர் ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பு குறித்து பரிசீலிக்கவில்லை என்பதாகும். அந்தத் தீர்ப்பில், ‘இத்துணைக் கண்டத்தில் இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மக்களின் வாழ்க்கை வழிமுறை (‘Hindutva or Hinduism is a way of life of the people in the sub-continent’)’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்துத்துவா அடிப்படையில் வாக்காளர்களுக்கு வேண்டு கோள்விடுத்ததற்காக தகுதி இழந்த சிவசேனைத் தலைவரின் மீதான வழக்கு ரத்துசெய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்குப்பின்னர்தான் தேர்தலில் மதவெறி இந்துத்துவா வேண்டுகோள் மூர்க்கத்தன மாகப் பயன்படுத்தப்பட்டது.
123ஆவது பிரிவிற்கு 1961ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, 3(A)என்று ஒரு புதிய உட்பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, தேர்தலில் மதவெறி மற்றும் பிளவுவாத வெறியைப் பயன்படுத்துவது தொடர்பாக விரிவான விதத்தில் குறிப்பிடுகிறது. 3(A) பிரிவு, ‘நாட்டு மக்களின் பல்வேறுபிரிவினரிடையே, ஒரு வேட்பாளரால் அல்லதுஅவருடைய தேர்தல் முகவரால் வேட்பாளரு டைய தேர்தல் ஆதாயங்களுக்காக அல்லது எந்த வேட்பாளரின் தேர்தல் வாய்ப்புகளையும் பாதிக்கும் விதத்தில், மதம், நிறம், சாதி, இனம், அல்லது மொழி, ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு வகுப்பினரிடையே பகைமைஅல்லது வெறுப்பை விளைவித்தல் அல்லதுவிளைவிக்க முயற்சித்தல்என்று குறிப்பிடுகிறது.
சட்ட அமல் எப்படியுள்ளது?
உச்சநீதிமன்றம் என்னதான் அற்புதமான விதத்தில் தீர்ப்புகளைப் பகர்ந்தபோதிலும், மதவெறியைக் கிளப்பிடும் பிரச்சாரத்திற்கு எதிராக சட்டத்தை பிரயோகிப்பது என்பது அநேகமாக எங்கும் இல்லாத நிலையே இருந்து வருகிறது. இன்றைய அமைப்புமுறையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழான எந்தக் குற்றமாக இருந்தாலும், தேர்தலுக்குப் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என் றால் அதனை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்திட முடியும். இவற்றின்மீது தீர்ப்பு வழங்குவதற்கு நீண்டகாலமாகின்றது. பல சமயங்களில் இவற்றின் மீது தீர்ப்பு வருவதற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி யின் பதவிக்காலமே முடிவடைந்து விடுகிறது.
இந்தத் தீர்ப்பானது, தேர்தல் அரசியலில் மதவெறிக் கருத்துக்களை பயன்படுத்துவதற்கு எதிரான ஒன்று என்பதில் ஐயமில்லை. எனினும், மதவெறி அரசியலுக்கு எதிராகவும், மக்களைப்பிளவுபடுத்தும் ஜனநாயகவிரோத சீர்குலைவு சக்திகளுக்கு எதிராகவும் மக்கள் விழிப்புடன் இருக்கும்போதுதான், அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள மதச்சார்பின்மை கொள்கையை வலுவாக அமல்படுத்துவது சாத்தியமாகும். அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம், மதரீதியாகவோ, சாதி அல்லது மொழி, இனஅடிப்படையிலோ ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது அதற்கு எதிராகப் பிரச்சனைகளை எழுப்புவதில் தடையேதும் இருக்க முடியாது.
(ஜனவரி 5, 2017)
(தமிழில்: . வீரமணி)

No comments: