Monday, September 21, 2015

தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி





தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி

தில்லியில் டெங்கு நோய்க்கு ஆளாகிஏழு வயது சிறுவன் இறந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவனது பெற்றோர் களும் துயரார்ந்த முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது, நம்நாட்டில் பொது சுகாதார அமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறதுஎன்பதனை மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் நமக்கு நினைவூட்டி இருக்கிறது. ஒவ்வோராண்டும் 30 மில்லியன் (3 கோடி) மக்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுகிறார்கள். இவர்களில் 80 சதவீதத்தினருக்கு மருத்துவப் பாதுகாப்பு என்பதுகிடையாது. அதாவது மருத்துவமனை களில் படுக்கை வசதி இல்லை என்று கூறி இவர்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாட்டில் பொது சுகாதார நெருக்கடி எந்த அளவிற்கு வியாபித்திருக்கிறது என்பதை இது நன்கு சித்தரிக் கிறது.
சுகாதார நிதி வெட்டிக் குறைப்பு
டெங்கு தொற்றுநோய் தில்லியை அடிக்கடித் தாக்குகிறது. ஆனால் அரசாங் கமோ பொது சுகாதார அமைப்போ இதனை எதிர்கொள்ளக்கூடிய திராணியற்ற நிலை யிலேயே இருந்து வருகின்றன. நாட்டின் தலைநகராக உள்ள தில்லியிலேயே இந்த நிலைமை என்றால், இதர மாநிலங்களில் பொது சுகாதாரப் பாதுகாப்பு எந்த அள விற்கு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும். பொது சுகாதார அமைப்பு என்பது ஆட்சியாளர்களால் படிப்படியாக தரம் தாழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஒவ்வோ ராண்டும் ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும் குறைக்கப்பட்டு வந்துள்ளது. இன்றைக்குப் போதுமான அளவிற்கு நிதி இல்லாமல் அது திண்டாடுகிறது. நவீன தாராள மயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு, அனைத்து அடிப்படைச் சேவைகளும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டபின் நிலைமைகள் மிகவும் மோசமாகி விட்டன. இதன் காரணமாகத்தான் உலகத்திலேயே தனியார் சுகாதாரப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் தற்சமயம் கோலோச்சிக் கொண்டிருக் கிறது. அரசுத்தரப்பில் பொது சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்படும் செலவினம் என்பது மிகவும் வெட்கக்கேடான முறை யில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9சதவிகிதமாக இருக்கிறது. மோடி அரசாங்கமும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை சென்ற பட்ஜெட்டில் மேலும் வெட்டிக் குறைத்திருக்கிறது.
சிகிச்சையளிக்க மறுத்ததனியார் மருத்துவமனைகள்
ஏழே வயதான அவினாஷ் என்கிற சிறுவனும், ஒருசில நாட்களுக்கு முன்பு ஆறு வயது அமன் என்ற குழந்தையும் இறந்ததற்கான காரணம், இவர்களைத் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்த்துக் கொள்ள மறுத்ததேயாகும். அவினாஷ் வழக்கைப் பொறுத்தவரை, மிகவும் ஆபத் தான நிலையில் இருந்த அக்குழந்தையை ஐந்து தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்திருக்கின்றன. இது அனைத்து மருத்துவ மாண்புகளுக்கும் எதிரானதும், குற்றமுறு (கிரிமினல்) உதாசீன நடத்தையுமாகும். இந்த மருத்துவ மனைகளுக்கு எதிராக தில்லி அரசாங்கம் நடவடிக்கையைத் தொடங்கிட வேண்டும். கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் பல்வேறு மருத்துவமனைகளும் மற்றும் பல்வேறு தனியார் நர்சிங் ஹோம்களும் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக அல்லது மிக மலிவான விதத்தில் நிலம் கையகப்படுத்தல் மற்றும் சலுகைகள் உட்பட பல்வேறு வகைகளில் மிகப்பெரிய அளவில் மானியங்கள் பெற்று வருகின்றன. இவற் றுக்குப் பதிலாக அவை ஏழைகளுக்கு இலவசமாக படுக்கைகளை அளித்திட வேண்டும். ஆனால் இத்திட்டத்தை இவைகள் பல்வேறு வழிகளிலும் மீறிச் செயல்பட்டு வருகின்றன. ஏழை நோயாளிகளை ஏமாற்றிட உரிமம் பெற்றவை போன்றே அவை செயல்பட்டு வருகின்றன. ஒரு விரிவான பொது சுகாதார அமைப்புக்கு மாற்றாக தனியார் சுகாதார அமைப்பு எந்தக் காலத்திலுமே இருந்திடாது, இருக்கவும் முடியாது.
வெற்றுப் பிரச்சாரம்
நகரின் மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவற்ற நிலைதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகும். இந்நோயைத் தடுத்திடப் பிரதானமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது நகரைச் சுத்தமாகவும், துப்புரவாகவும் வைத்திருப்பதாகும். கொசுஉற்பத்தி ஏற்படாது தடுத்திட, கொசு ஒழிப்பு மருந்தினை தொடர்ந்து தெளித் துக் கொண்டிருக்க வேண்டும். டெங்கு வியாதி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருப்பது என்பது ஆட்சியாளர்கள் ஓராண்டுக்குமுன் மிகவும் தம்பட்டம் அடித்து மேற் கொண்ட தூய்மை இந்தியா பிரச்சாரம் வெற்றுப் பிரச்சாரமே என்பதை உலகிற்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டது. ஆட்சியாளர் களின் இத்திட்டத்தின் மூலமாக நாட்டின் தலைநகரான தில்லியிலேயே இவர்களால் சுத்தமான சூழலை உத்தரவாதப்படுத்த முடியவில்லை. மேலும், தில்லியில் உள்ளமாநகராட்சிகள் தங்கள் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் அவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டமும் இப்பிரச்சனைக்குக் கூடுத லாகக் காரணமாகி விட்டது.டெங்குக் காய்ச்சலை சமாளிக்க முடியாது அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதி லிருந்து என்ன முடிவுக்கு நாம் வரவேண்டி யிருக்கிறது என்றால், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை விரிவாக்கி, வலுப்படுத்த வேண்டியதே உடனடியான அவசியத் தேவை என்பதாகும். அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு உரிமையை உத்தரவாதப்படுத்திட இது ஒன்றே வழியாகும்.
தமிழில்: ச.வீரமணி

No comments: