Showing posts with label Kashmir. Show all posts
Showing posts with label Kashmir. Show all posts

Monday, August 19, 2019

காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகி இருக்கிறது



இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக
காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலாகி இருக்கிறது
-பூர்ணிமா எஸ். திரிபாதி
பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால் கற்பனை செய்யப்பட்டுள்ள இந்து ராஷ்ட்ரத்தை நம் நாட்டில் நிறுவிட வேண்டும் என்கிற வெறித்தனத்துடன் மோடி-2 அரசாங்கத்தால் அசூசையான உணர்வினை எடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5 அன்று உண்மையாகிவிட்டது. ஆம், அன்றையதினம் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்டிவிட்டது. மேலும் அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலம் அம்மாநிலத்தின் உரிமையையும் சூறையாடியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ். 1952இல் தன்னுடைய மத்திய நிர்வாகப் பிரிவு (Kendriya Karyakari Mandal) என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானமானது, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உதவி தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமான பாகிஸ்தான்-அமெரிக்கா திட்டத்தை (Pak-American Pact) கண்டித்தது. மேலும் அந்தத் தீர்மானத்தில்  காஷ்மீரில் வெளிப்படையான வன்தாக்குதல் தொடர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமான பாரதிய ஜன சங்கம், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு விசுவாசியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த சமயத்தில், முகர்ஜி 1953 மே மாதத்தில் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் எவரேனும் செல்ல விரும்பினால் மத்திய அரசின் அனுமதி (பர்மிட்) பெற வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் எதையும் பெறாது அரசின் விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார்.
இவ்வாறு அம்மாநிலத்திற்குள் சென்றதுமே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் ஒரு மாதம் சிறையிலிருந்தார். சிறையிலிருந்தபோது ஜூன் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார்.
1964இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முடிவுகளைத் தீர்மானித்திடும் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா (Akhil Bharatiya Pratinidhi Sabha) ‘பாரதத்தின் காஷ்மீர் கொள்கை’ என்னும் தலைப்பில் ஒரு  தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் காஷ்மீர் மீது தற்காலிக ஷரத்தாக சேர்க்கப்பட்டுள்ள 370ஆவது பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். மற்றும் அம்மாநிலம் இதர மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டுவரப்பட வேண்டும்,என்று கூறியது.   
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள முஸ்லீம்கள் திரும்பி வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தும் அவ்வாறு வருவார்களெனில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியபின்னர், 1982இல் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal) என்னும் அமைப்பும் இதே கோரிக்கையை மீளவும் எழுப்பியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறி மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டிவிட 370ஆவது பிரிவு அம்மாநில அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்துவருவதாகவும், எனவே அப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கூறி வந்தது.
இதே கோரிக்கை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளாலும் 1984, 1986 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளிலும் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது.
1995இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக, ஜம்மு பிராந்தியம் தனி சுயாட்சி கவுன்சிலாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது. இதற்கு, இந்தப் பகுதியை மாநில அரசாங்கம் புறக்கணித்துக்கொண்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 1996இல் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal), ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 370ஆவது பிரிவு தற்காலிகமான ஒன்றே என்றும் எனவே அதனை முழுமையாக செயலிழக்கச் செய்திட வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
2000இல் மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பாஜக அரசாங்கம் அமைந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றியது.  அதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரதிய நிர்வாகப் பிரிவும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தால் அம்மாநில அரசுக்கு இந்த அளவிற்குத் துணிவு வந்திருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஜம்மு தனி மாநிலக் கோரிக்கை
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரிவினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,என்று கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை.
2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் துணிச்சலான நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் கூறி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறியிருக்கிறார். 
370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது, பாஜக, 1980 ஏப்ரலில் உருவான காலத்திலிருந்தே அவர்களின் தேர்தல் அறிக்கையின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அங்கம். அதன் செயல்பாடுகள் அனைத்தும் சங்பரிவாரத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது. இது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஜம்முவிற்குப் பொறுப்பு வகித்துவந்த பிரேம் நாத் டோக்ரா என்பவரால் இந்து மகாசபையைச் சேர்ந்த பால்ராஜ் மதோக்குடன் இணைந்து நிறுவப்பட்டது. பால்ராஜ் மதோக்கும் சங் பரிவாரத்தின் சித்தாந்தங்களுக்கு உட்பட்டவர்தான்.
ஜம்முவில் உள்ள இந்துக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ளும் பிரஜா பரிசத் கட்சி, ஷேக் அப்துல்லா அரசாங்கத்தின் கீழ் ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆட்பட்டார்கள் என்றும், எனவே மத்திய அரசாங்கம் 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தையும் இதர மன்னர் சமஸ்தானங்களை இணைத்ததுபோன்று இந்தியாவுடன் இணைத்திட முடியும் என்றும் கூறிவந்தது.
ஷியாமா பிரசாத் முகர்ஜி முதன்முதலாக 1952இல் நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தில்லியிலிருந்து  ஒரு பாரதிய ஜனதா சங்க வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டு வெற்றிபெற்றபோது, கட்சியின் கோரிக்கை,  தெளிவாக முன்வைக்கப்பட்டது.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்திருக்கிறார். எனினும் 370ஆவது பிரிவு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் தத்துவார்த்தரீதியாக வேறுபாடுகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். முகர்ஜி, ஜம்மு மக்களின் குரலுக்கு நேருவும் ஷேக் அப்துல்லாவும் செவி சாய்த்திட வேண்டும் என்று கோரிப்பார்த்தார். எனினும் பயனேதும் இல்லை.
அவர் 1953 ஜனவரி 9க்கும், பிப்ரவரி 23க்கும் இடையே, ஜம்முவில் இந்துக்கள் கிளர்ச்சி நடத்தி வருவதாகவும், மாநில அரசாங்கம் அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாகவும் கூறி, நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து, பத்து கடிதங்கள் எழுதினார். இந்தக் கடிதங்களுக்கு அநேகமாகப் பதிலேதும் இல்லை.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜனவரி 9 அன்று நேருவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், பிரஜா பரிசத் தலைமையிலான இயக்கம் கோரிவந்தபடி, ஜம்மு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடக்குமுறை மக்களின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலாகிவிடாது. இந்தியாவில் பிறபகுதிகளில் வாழும் மக்களுக்குள்ள அரசமைப்புச் சட்டமே ஜம்முவில் வாழும் தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் கோருவது, அவர்களின் இயல்பால உரிமை (inherent right) இல்லையா? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வேறுவிதமாக நினைத்தால், அதற்காக ஜம்மு மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? ஏனெனில் காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் விருப்பமில்லை. ஜம்மு மக்கள் தங்கள் போராட்டத்தின்போது எழுப்பிடும்,  ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்பது மிகவும் உயர்ந்த தேசப்பற்று மிக்க மற்றும் உணர்ச்சிகரமான கோஷமாகும். நீங்களோ அல்லது ஷேக் அப்துல்லாவோ இந்தக் கேள்விக்குப் சிறையில் அடைத்தல் அல்லது புல்லட்டுகளால்  பதில் சொல்ல முடியாது,  என்று அவர் எழுதினார்.
இவ்வாறு அன்றையதினம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்று எழுப்பிய கோஷத்தை அடிப்படையாக வைத்துத்தான இந்தத் தேசத்தில் இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள், இரண்டு தலைவர்கள் ஏன்? அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்என்று இன்று பாஜகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகைளைத் தீர்த்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நேரடியாகவே ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார். அவ்வாறு செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி  (பர்மிட்) பெற வேண்டும் என்பதை மீறினார். அங்கே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருக்கும்போது இறந்துபோனார். எனவே, 370ஆவது பிரிவின்மீதான பிரச்சனை என்பது பாஜக-விற்கு மிகவும் புனிதமான ஒன்றாக மாறிப்போனது. 
வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும், இதில் தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. அப்போது வாஜ்பாயி, நமக்குப் பெரும்பான்மை இல்லாததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, என்று ஒப்புக்கொண்டார்.
இப்போது, மோடி அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது. ஆயினும் இப்போது அனைவர் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட, மோடி அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறதா என்பதாகும்.
பாஜக தலைவர்கள் எப்போதுமே மதச்சார்பின்மை என்கிற வார்த்தை மீதும், இந்திரா காந்தியால் ஒரு திருத்தத்தின்மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட வழியின்மீதும் அவநம்பிக்கை கொண்டவர்கள். இப்போது,  நேரு-காந்தி மரபினை கிஞ்சிற்றும் ஈவிரக்கமின்றி இடித்துத்தள்ள மோடி-அமித்ஷா இரட்டையர் மேற்கொண்டிருக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், மேலும் இவர்கள் மனதில் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச.வீரமணி)



இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலா இருக்கிறது -பூர்ணிமா எஸ். திரிபாதி
















இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி முதல் அடியாக
காஷ்மீர் மீதான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அமலா இருக்கிறது
-பூர்ணிமா எஸ். திரிபாதி
பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால் கற்பனை செய்யப்பட்டுள்ள இந்து ராஷ்ட்ரத்தை நம் நாட்டில் நிறுவிட வேண்டும் என்கிற வெறித்தனத்துடன் மோடி-2 அரசாங்கத்தால் அசூசையான உணர்வினை எடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5 அன்று உண்மையாகிவிட்டது. ஆம், அன்றையதினம் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்டிவிட்டது. மேலும் அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலம் அம்மாநிலத்தின் உரிமையையும் சூறையாடியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ். 1952இல் தன்னுடைய மத்திய நிர்வாகப் பிரிவு (Kendriya Karyakari Mandal) என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானமானது, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உதவி தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமான பாகிஸ்தான்-அமெரிக்கா திட்டத்தை (Pak-American Pact) கண்டித்தது. மேலும் அந்தத் தீர்மானத்தில்  காஷ்மீரில் வெளிப்படையான வன்தாக்குதல் தொடர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமான பாரதிய ஜன சங்கம், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு விசுவாசியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த சமயத்தில், முகர்ஜி 1953 மே மாதத்தில் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் எவரேனும் செல்ல விரும்பினால் மத்திய அரசின் அனுமதி (பர்மிட்) பெற வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் எதையும் பெறாது அரசின் விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார்.
இவ்வாறு அம்மாநிலத்திற்குள் சென்றதுமே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் ஒரு மாதம் சிறையிலிருந்தார். சிறையிலிருந்தபோது ஜூன் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார்.
1964இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முடிவுகளைத் தீர்மானித்திடும் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா (Akhil Bharatiya Pratinidhi Sabha) ‘பாரதத்தின் காஷ்மீர் கொள்கை’ என்னும் தலைப்பில் ஒரு  தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் காஷ்மீர் மீது தற்காலிக ஷரத்தாக சேர்க்கப்பட்டுள்ள 370ஆவது பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். மற்றும் அம்மாநிலம் இதர மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டுவரப்பட வேண்டும்,என்று கூறியது.   
ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள முஸ்லீம்கள் திரும்பி வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தும் அவ்வாறு வருவார்களெனில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியபின்னர், 1982இல் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal) என்னும் அமைப்பும் இதே கோரிக்கையை மீளவும் எழுப்பியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறி மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டிவிட 370ஆவது பிரிவு அம்மாநில அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்துவருவதாகவும், எனவே அப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கூறி வந்தது.
இதே கோரிக்கை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளாலும் 1984, 1986 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளிலும் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது.
1995இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக, ஜம்மு பிராந்தியம் தனி சுயாட்சி கவுன்சிலாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது. இதற்கு, இந்தப் பகுதியை மாநில அரசாங்கம் புறக்கணித்துக்கொண்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 1996இல் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு (Akhil Bharatiya Karyakari Mandal), ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 370ஆவது பிரிவு தற்காலிகமான ஒன்றே என்றும் எனவே அதனை முழுமையாக செயலிழக்கச் செய்திட வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
2000இல் மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பாஜக அரசாங்கம் அமைந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றியது.  அதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரதிய நிர்வாகப் பிரிவும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருந்தால் அம்மாநில அரசுக்கு இந்த அளவிற்குத் துணிவு வந்திருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஜம்மு தனி மாநிலக் கோரிக்கை
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரிவினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,என்று கூறப்பட்டிருந்தது.
ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை.
2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் துணிச்சலான நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் கூறி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறியிருக்கிறார். 

370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது, பாஜக, 1980 ஏப்ரலில் உருவான காலத்திலிருந்தே அவர்களின் தேர்தல் அறிக்கையின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அங்கம். அதன் செயல்பாடுகள் அனைத்தும் சங்பரிவாரத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது. இது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஜம்முவிற்குப் பொறுப்பு வகித்துவந்த பிரேம் நாத் டோக்ரா என்பவரால் இந்து மகாசபையைச் சேர்ந்த பால்ராஜ் மதோக்குடன் இணைந்து நிறுவப்பட்டது. பால்ராஜ் மதோக்கும் சங் பரிவாரத்தின் சித்தாந்தங்களுக்கு உட்பட்டவர்தான்.
ஜம்முவில் உள்ள இந்துக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ளும் பிரஜா பரிசத் கட்சி, ஷேக் அப்துல்லா அரசாங்கத்தின் கீழ் ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆட்பட்டார்கள் என்றும், எனவே மத்திய அரசாங்கம் 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தையும் இதர மன்னர் சமஸ்தானங்களை இணைத்ததுபோன்று இந்தியாவுடன் இணைத்திட முடியும் என்றும் கூறிவந்தது.
ஷியாமா பிரசாத் முகர்ஜி முதன்முதலாக 1952இல் நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தில்லியிலிருந்து  ஒரு பாரதிய ஜனதா சங்க வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டு வெற்றிபெற்றபோது, கட்சியின் கோரிக்கை,  தெளிவாக முன்வைக்கப்பட்டது.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்திருக்கிறார். எனினும் 370ஆவது பிரிவு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் தத்துவார்த்தரீதியாக வேறுபாடுகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். முகர்ஜி, ஜம்மு மக்களின் குரலுக்கு நேருவும் ஷேக் அப்துல்லாவும் செவி சாய்த்திட வேண்டும் என்று கோரிப்பார்த்தார். எனினும் பயனேதும் இல்லை.
அவர் 1953 ஜனவரி 9க்கும், பிப்ரவரி 23க்கும் இடையே, ஜம்முவில் இந்துக்கள் கிளர்ச்சி நடத்தி வருவதாகவும், மாநில அரசாங்கம் அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாகவும் கூறி, நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து, பத்து கடிதங்கள் எழுதினார். இந்தக் கடிதங்களுக்கு அநேகமாகப் பதிலேதும் இல்லை.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜனவரி 9 அன்று நேருவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், பிரஜா பரிசத் தலைமையிலான இயக்கம் கோரிவந்தபடி, ஜம்மு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடக்குமுறை மக்களின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலாகிவிடாது. இந்தியாவில் பிறபகுதிகளில் வாழும் மக்களுக்குள்ள அரசமைப்புச் சட்டமே ஜம்முவில் வாழும் தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் கோருவது, அவர்களின் இயல்பால உரிமை (inherent right) இல்லையா? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வேறுவிதமாக நினைத்தால், அதற்காக ஜம்மு மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? ஏனெனில் காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் விருப்பமில்லை. ஜம்மு மக்கள் தங்கள் போராட்டத்தின்போது எழுப்பிடும்,  ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்பது மிகவும் உயர்ந்த தேசப்பற்று மிக்க மற்றும் உணர்ச்சிகரமான கோஷமாகும். நீங்களோ அல்லது ஷேக் அப்துல்லாவோ இந்தக் கேள்விக்குப் சிறையில் அடைத்தல் அல்லது புல்லட்டுகளால்  பதில் சொல்ல முடியாது,  என்று அவர் எழுதினார்.
இவ்வாறு அன்றையதினம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர் – என்று எழுப்பிய கோஷத்தை அடிப்படையாக வைத்துத்தான இந்தத் தேசத்தில் இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள், இரண்டு தலைவர்கள் ஏன்? அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்என்று இன்று பாஜகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகைளைத் தீர்த்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நேரடியாகவே ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார். அவ்வாறு செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி  (பர்மிட்) பெற வேண்டும் என்பதை மீறினார். அங்கே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருக்கும்போது இறந்துபோனார். எனவே, 370ஆவது பிரிவின்மீதான பிரச்சனை என்பது பாஜக-விற்கு மிகவும் புனிதமான ஒன்றாக மாறிப்போனது. 
வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும், இதில் தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. அப்போது வாஜ்பாயி, நமக்குப் பெரும்பான்மை இல்லாததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, என்று ஒப்புக்கொண்டார்.
இப்போது, மோடி அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது. ஆயினும் இப்போது அனைவர் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிட, மோடி அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறதா என்பதாகும்.
பாஜக தலைவர்கள் எப்போதுமே மதச்சார்பின்மை என்கிற வார்த்தை மீதும், இந்திரா காந்தியால் ஒரு திருத்தத்தின்மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட வழியின்மீதும் அவநம்பிக்கை கொண்டவர்கள். இப்போது,  நேரு-காந்தி மரபினை கிஞ்சிற்றும் ஈவிரக்கமின்றி இடித்துத்தள்ள மோடி-அமித்ஷா இரட்டையர் மேற்கொண்டிருக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், மேலும் இவர்கள் மனதில் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச.வீரமணி)



Thursday, January 3, 2019


காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது
மாநிலங்களவையில் டி.கே. ரெங்கராஜன் பேச்சு
புதுதில்லி, ஜன. 4-
காஷ்மீரில் பதற்றநிலைமை நீடிப்பதையே பாஜக விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2018 டிசம்பர் 19 அன்று குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டிருப்பதற்கு ஏற்பளிப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்மீது டி.கே. ரெங்கராஜன் பேசியதாவது:
இந்தத் தீர்மானம், காலம் கடந்த ஒன்றாக மாறியிருக்கிறது. மத்திய அரசின் கட்டளைக்கிணங்க, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை, சட்டவிரோதமான ஒன்று என்றும் மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையே என்றும் நான் கருதுகிறேன். ‘எதிரெதிர் தத்துவங்களை’க் கொண்ட கட்சிகள் ஒரு பொருத்தமான அரசாங்கத்தை அமைத்திட முடியாது என்று தீர்மானிக்கிற வேலை ஆளுநருக்குக் கிடையாது. ஆனால், இந்த அளவுகோலின்படி பார்த்தால், பிடிபி-பாஜக அரசாங்கம் அமைந்திடவும் அங்கே அனுமதித்திருக்கக் கூடாது. ஏனெனில் இவ்விரண்டுமே வெவ்வேறான தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுபவைகளாகும். ஆனாலும், எப்படியாவது பாஜக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பியது. எல்லா விஷயங்களிலும் நீங்கள் நுழைவதற்கு விரும்புகிறீர்கள். அங்கிருந்த நிலைமையை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்? பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் அரசியல் கட்சியின் தலைவரிடம் அவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அதைத்தான் ஆளுநர் செய்ய முடியும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்திடுங்கள். இந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் பொம்மை தீர்ப்பு ஏற்கனவே உங்களுக்கு அறிவுரை நல்கியிருக்கிறது. நீங்கள் சட்டமன்றத்தை மதித்திருக்க வேண்டும்.
மோடி அரசாங்கம், இவ்வாறு எதேச்சாதிகார நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், அம்மாநிலத்தில் உள்ள நிலைமையை மேலும் சிக்கலானதாகவும் மோசமானதாகவும் மாற்றியிருக்கிறது. இது தொடர்பாக இந்தப் பக்கத்தையோ அல்லது அந்தப் பக்கத்தையோ குறைகூறுவதில் பொருளேதுமில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது காஷ்மீர் மக்கள்தான். கடந்த மூன்றாண்டுகளில் 300 பேர் இறந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எவரும் இதற்குப் பொறுப்பாக்கப்படவில்லை. இத்தகைய நிலைமை, அங்குள்ள மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கே இட்டுச்சென்றிருக்கிறது.
பாஜக, மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற தங்களுடைய பெரிய அளவிலான அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு உதவுவதற்காக, இதேபோன்று நிலைமை அங்கே நீடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. அங்கே எப்போது தேர்தல் நடத்த இருக்கிறீர்கள்? மக்களவைத் தேர்தலுடனா? அல்லது அதற்கு முன்பா? மாண்புமிகு உள்துறை அமைச்சர் இதுகுறித்து எங்களுக்குக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து தேதியைக் கூறுங்கள். கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா என்றும் எங்களுக்குக் கூறுங்கள். கடந்த மூன்றாண்டுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை தொடர்பாக பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்படுமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து உண்மையைக் கூறுங்கள். அங்கே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு எவரும் அரசியல்ரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. காஷ்மீர் பிரச்சனைகளைத் தவறாகக் கையாண்டிருப்பது இந்தியாவையே புண்படுத்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை நீங்கள் கையாண்ட விதத்திற்கு எங்கள் கட்சி கண்டனம் செய்திருக்கிறது.
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
(ந.நி.)


SHRI T.K. RANGARAJAN (TAMIL NADU): Now, this Resolution has become here a fait accompli. The action of Jammu and Kashmir Governor, dissolving the Legislative Assembly at the behest of the Centre, in my opinion, is an illegal and unconstitutional step. The Governor has no business to decide that parties with 'opposing ideologies' cannot form a suitable Government. But by this yardstick, the PDP-BJP Government has got different ideologies. These different ideologies Government should not have been allowed to be formed after the elections. But somehow or the other, the BJP wanted to capture power. You want to infiltrate in everything. You used that situation. What happened? All that the Governor can do is to ask the leader who is staking claim with a majority support to prove that majority on the floor of the House. You please respect the Supreme Court Judgements. The Bommai Judgement has already given you how to do this job. You have to respect the Assembly. Sir, the Modi Government has, by taking this authoritarian measure, further complicated and worsened the situation in the State. There is no meaning in blaming this side or that side. The real sufferers are the Kashmiri people. Over 300 civilians have died in the last three years. Unfortunately, no enquiry has been conducted into these deaths and no one responsible has been held accountable. This situation has only led to further alienation of the people. Sir, the BJP is interested in the continuation of the situation to aid their larger political agenda of communal polarization in view of the General Elections. Here, I request the Home Minister to tell us when you are going to conduct the elections, with the Parliamentary elections or before that. Please tell us the date. Please tell us whether you are going to conduct an enquiry into the deaths of those who are killed. Innocent people have been killed in the past three years. I want to know whether you would conduct an enquiry with a sitting Supreme Court Judge. Please tell us the fact. There is no political accountability, no responsibility for the mess it has created. The gross mishandling of these issues is hurting India. Our Party is condemning the way you have handled the Kashmir issue. With this, I request you to conduct the enquiry. Please also tell us when you are going to conduct the elections. Thank you. (Ends)


Saturday, September 3, 2016

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைகளை துவக்குக: சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லி, செப். 3-ஐம்பது நாட்களுக்கு மேலாக பதற்றத்தின் பிடியில் இருக்கும் காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழு ஞாயிறன்று செல்கிறது. இக்குழு செல்வதைத் தொடர்ந்து காஷ்மீரின் அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக தலையிட்டு தீர்வுகாண அரசை நிர்ப்பந்திக்கும் நோக்கில் அனைத்துக் கட்சி தூதுக்குழு ஒன்று ஞாயிறன்று காஷ்மீர் செல்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகள் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பாக, சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா ஆகியோரும் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.இதனைத் தொடர்ந்து இக்கூட்ட முடிவுகளை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் கலந்து கொண்டனர்.அப்போது சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அங்கே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் தூதுக்குழு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இரண்டு மாதங்கள் கடந்தபின் இப்போது அரசு அதற்கு முன்வந்திருக்கிறது.கடந்த இரண்டு மாதங்களாகவே காஷ்மீர் மிகவும் மோசமான கொதிநிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல்கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதிலிருந்தே மக்கள் வீதிகளில்இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2 மாதங்களில் 59 பேர்கொல்லப்பட்டதாகவும், சில ஆயிரம் பேர் காயம் , அடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் 2 பேர் கொல்லப் பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவலின்படிஇறந்தவர்கள் 70 பேர் ஆவர்.
அங்கே போராட்டத்தை மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் இளைஞர்கள். தற்சமயம் இந்தியாவுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை மிகவும் ஆழமான முறையில் அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இடதுசாரிகளின் நிலைப்பாடு
ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவெனில் காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். கடந்த சில ஆண்டுகளாக இதில் அரசுத்தரப்பில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மீண்டும் வழங்கிட வேண்டும். 1948இல்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அதற்கு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்,
5 முக்கிய அம்சங்கள்
காஷ்மீர் பிரச்சனைக்கு மிக முக்கியமாக ஐந்து அம்சங்களில் முடிவு எடுக்கவேண்டியது அவசியம் என்று இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன.முதலாவதாக, பெல்லட் குண்டுகள் சுடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். மாற்று ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறார். மிளகு மற்றும் மிளகாய் கலந்த தூள் வீசப்படும் என்று கூறியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.இரண்டாவதாக, ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம், மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.மூன்றாவதாக, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அனைத்து அத்துமீறல்கள் தொடர்பாகவும் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்.நான்காவதாக. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் பட வேண்டும்.ஐந்தாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும், ஸ்ரீநகரில் ஐஐஎம், ஐஐடி திறக்கப்பட வேண்டும்,
அனைவருடனும் நிபந்தனையின்றி பேச்சு நடத்துக!
அடுத்ததாக அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல் சக்திகளுடனும் எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். 2010இல் இதுபோன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண 370ஆவது பிரிவு உளப்பூர்வமாக அமல்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் மூன்று பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பிராந்தியங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அடுத்து பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், அங்கிருந்து எல்லை தாண்டிய அத்துமீறல்கள் வரலாம். ஆனாலும் பாகிஸ்தானுடன் பேச வேண்டியதும் அவசியமாகும்.காஷ்மீர் மக்கள் குறித்து நாட்டின் இதர பகுதி மக்களிடம் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் அனைவருமே பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதுபோன்று சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். காஷ்மீர் இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாவது தடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சுதாகர் ரெட்டி கூறுகையில், தூதுக்குழுவினர் காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, காஷ்மீர் மக்களின் நம்பிக்கைகளைப் பெறக்கூடிய விதத் தில் அமைந்திட வேண்டும் என்றும் இறுதி அரசியல் தீர்வுக்குவழிவகைகள் கண்டிட வேண்டும் என்றும் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது து.ராஜா மற்றும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹன்னன்முல்லா ஆகியோர் உடன் இருந்தனர். (ந.நி.)



Friday, September 2, 2016

இப்போதும் காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை


 (ஆகஸ்ட் 5 அன்று புட்காமைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உமர் சூசுப் பெல்லட்
குண்டுத் தாக்குதலில் இடது கண் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காட்சி)

நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரொம்ப நாட்களாயிற்று,’ என்று ஐந்து வயதேயான அஃப்சா கூறினான். அவர்களுடைய வீட்டிற்கு வெளியே பெல்லட் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததால், அவன் தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தான். உள்ளூர் மக்களுக்கு எதிராக துணை ராணுவப் படையினர் தங்கள் தாக்குதலை மூர்க்கமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சமயத்தில் மக்கள் தங்கள் பணிகளை மாலை 6 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்வார்கள். 6 மணிக்கு மேல் மின் விளக்குகளையும் அணைத்து விடுவார்கள். இருட்டிலேயே ஒருவருக்கொருவர் கிசுகிசு குரலில் பேசிக் கொள்வார்கள்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி ஜூலை 8 அன்று கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் கொதிநிலையில் இருந்து வந்தது.
ஊரடங்கு உத்தரவு 51 நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 29 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. காஷ்மீரின் ஒட்டுமொத்த வரலாற்றில் இவ்வாறு நீண்ட நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது இதுதான் முதல் முறையாகும். இந்தத் தடவை ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி என்பது தலைநகருக்கு வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களிலும் நடந்திருக்கிறது. முன்பெல்லாம் கிளர்ச்சி குறித்து அம்மக்கள் காதால் கேட்பதுதான். இப்போதுதான் அவர்களும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான், ஹூரியத்
ஊரடங்கு உத்தரவு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதிலும், அவ்வப்போது சில இடங்களில் அது தளர்த்தப்பட அனுமதிக்கப்படும். ஹூரியத் தலைமையின் முன்மொழிவிற்கிணங்க அது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஒவ்வொரு நாளும், மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதன்பிறகு, கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்திருக்கும். ஆனாலும், திடீரென்று இந்திய துணை ராணுவப் படையினரின் கொடி அணி வகுப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து தாக்குதல்களும் மேற்கொள்ளப்படும். துணை ராணுவத்தினர் கண்ணாடி ஜன்னல்களை எல்லாம் அடித்து நொறுக்கி, மக்களை நோக்கி திட்டிக்கொண்டே செல்வார்கள். அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அனைத்துக் கடைகளின் ஷட்டர்களும் இறக்கி, கடைகள் மூடப்பட்டுவிடும். வீதிகளில் மயான அமைதி மீண்டும் தொடங்கிவிடும். சில சந்துகளிலிருந்து திடீரென்று விடுதலை முழக்கங்கள் எழும். துணை ராணுவத்தினரையும், மீண்டும் ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்குவார்கள். துணை ராணுவத்தினரும் நேரடியாக துப்பாக்கியால் சுடுவார்கள். வீடுகள் அனைத்தும் இருட்டாகிவிடும். இருட்டறைகளில் உள்ள மக்கள் தங்களுடைய மொபைல் போன் வெளிச்சத்தில்தான் இயங்கிக் கொண்டிருப்பார்கள். மத்திய துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு சத்தமும், அவர்கள் கடைகளின் ஷட்டர்களில் குண்டாந்தடியால் தட்டிக்கொண்டே செல்வதும் இரவு முழுவதும் தொடரும். இவ்வாறு மக்களின் அமைதியின்மைக்கு முடிவே இல்லாமல் இருந்தது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சமயத்தில் காஷ்மீரில் சுமார் 6,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. காஷ்மீர் மக்களில் பெரும்பாலானவர்கள், நடந்து வரும் சம்பவங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையுமே குறை கூறினார்கள். இந்த நெருக்கடிக்கு ஹூரியத் தலைமையையும் அவர்கள் குறைகூறினார்கள்.
ஸ்ரீநகரில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவராக செயல்படும் டாக்டர் டார் என்பவர், நிலைமைகள் குறித்து மிகவும் நேர்மையாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவர், ஆவேசமடைந்த சில இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியைக் காண்பித்தது என்பது காஷ்மீர் கலாச்சாரத்திற்கே இழுக்கு என்றார். காஷ்மீரில் உள்ள பலரும் இதேபோன்ற கருத்துக்களையே கொண்டிருந்தார்கள்.
பிரச்சனைக்கு முக்கியக் காரணம், புர்ஹான் வானி கொல்லப்பட்டதுதான். அவரை அவ்வாறு கொல்லாமல் கைது செய்திருந்தார்கள் என்றால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது என்று ஸ்டேட் பேங்க் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தன் பெயரைப் போட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் இதனைத் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சனை கொழுந்துவிட்டெரிவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே காரணம் என்றும் தங்கள் சொந்த நலன்களுக்காக இப்பிரச்சனையை கொதி நிலையில் இவ்விரு நாடுகளும் வைத்திருக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
தூக்கமும் இல்லை 
அமைதியும் இல்லை
ஊரடங்கு உத்தரவு சமயத்தில் மனித உரிமை மீறல்களும் ஏராளமாக நடந்திருக்கின்றன. பெல்லட் குண்டுகளை வீசுவதில் மிகவும் பிரசித்திபெற்ற சிஆர்பிஎப்யியைச் சேர்ந்த ஒருவர், தனக்கு மிகவும் அலுத்துவிட்டதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக தூக்கமும் இல்லை, அமைதியும் இல்லை, மாறாக பயம்தான் இருக்கிறது. பெல்லட் குண்டுகள் கொண்ட துப்பாக்கிகளை தரையில்தான் சுட வேண்டும் என்றும் அது அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்று கும்பலைத் தாக்கும் என்றும் சொல்லப்பட்டாலும், உண்மையில் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.
காஷ்மீரில் உள்ள மக்கள், முதலில் நகரிலிருந்து துணை ராணுவப்படையினர் வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இவர்கள் வெளியேறிவிட்டால், கல்லெறிபவர்கள் குறி வைப்பதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடும் என்றார்கள். நடந்துள்ள சம்பவங்கள் இளம் தலைமுறையினரிடையே இந்தியாவிற்கு எதிராக வெறுப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாபாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது காஷ்மீர் இளைஞர்களில் அதிகமானவர்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரித்தார்கள். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத் தங்களிடம் இருக்கும் கோபத்தை இவர்கள் அப்படித்தான் காட்டினார்கள்.
பள்ளிக்குழந்தைகள் கூட நெருக்கடி குறித்து விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் விடுதலை முழக்கம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கி இருக்கிறது. உள்ளூரைச் சேர்ந்த வேலையில்லா இளைஞன் ஒருவர், கிளர்ச்சிகளில் வழக்கமாகப் பங்கேற்பவர், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டில் வாழ்வதைவிட சாவது மேல் என்று கூறினார்.
ஆயினும், காஷ்மீரில் உள்ள பலர் ஓர் அமைதித் தீர்வு ஏற்படும், இயல்பு வாழ்க்கைத் திரும்பிவிடும் என்று இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
ஷோம் பாசு
(நன்றி: தி ஒயர், இணைய இதழ்)
(
தமிழில்: . வீரமணி)