Sunday, June 9, 2013

உணவுப் பாதுகாப்பு: தேவை சிறப்பு உறுதியே



சத்தீஸ்கரில் சமீபத்தில் மாவோயிஸ்ட் டுகள் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, ஓர் அரசியல் கருத் தொற்றுமையை ஏற்படுத்திடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டிடலாம் என்று அரசாங்கம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மூலமாக பரிந்துரைத்துள்ள அதே சமயத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர் வையும் கூட்டிடலாம் என்றும் மிகப்பெரிய அளவில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின் றன, ஆயினும் ஊடகங்களில் வெளி வந்துள்ள தக வல்களின் அடிப்படையில், உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவை நிறைவேற்று வதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்றும் தெரிகிறது. ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் நாடாளுமன்றத்தின் இரு அவை களின் கூட்டுக் கூட்டத்தொடரில் உரையாற் றுகையில் அரசாங்கம் தன்னுடைய முதல் நூறு நாட்களில் அமல்படுத்தவிருக்கும் பல் வேறு நடவடிக்கைகள் குறித்துக் கூறி னார். அவ்வாறு அவர் பட்டியலிட்டதில் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவும் பிரதானமான ஒன்றாகும்.

அவ்வாறு அவர் கூறி நான்கு ஆண்டு கள் கழிந்து விட்டன. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக் கும், ஏற்புக்கும் கொண்டு வர அரசாங்கத்தால் இன்னமும் முடியவில்லை. அவ்வாறு அர சாங்கம் கொண்டு வருவதை எவரும் தடுத் திடவில்லை. அத்தகையதொரு சட்டமுன் வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந் தால் அதனை எவராலும் தடுத்திருக்கவும் முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதா னால், அரசாங்கம் நாட்டுக்கும், நாட்டு மக்க ளுக்கும் கொடுத்த உறுதிமொழியை நிறை வேற்றாததற்காகத் தமக்குத் தாமே தான் குறை சொல்லிக் கொள்ள முடியுமே தவிர வேறு எவ ரையும் குறை சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர்தொடர் பாக எவ்விதமான வரையறையையும் ஏற்படுத் திடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 85(1)ஆவது விதி கூறுவதாவது: ‘‘குடியரசுத் தலைவர் அப்போதைக்கப்போது நாடாளுமன் றத்தின் ஒவ்வொரு அவையையும் கூட்டு வதற்கு, அவர் உசிதமெனக் கருதும் காலத் தையும், இடத்தையும் நிர்ணயம் செய்து அழைப் பாணை அனுப்பிடுவார். ஆனால், ஓர் அமர் வின் கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கும்,

அடுத்த அமர்வுக்காக நிர்ண யிக்கப்படும் கூட் டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையே ஆறு மாதங்கள் குறுக்கிடக்கூடாது.’’ எனவே அமைச்சரவையின் அறிவுரையின்படி, குடி யரசுத் தலைவர் வழக்கமாக காலங்காலமாகச் செய்துவருவதைப்போன்று, பட்ஜெட் கூட் டத்தொடர், மழைக்காலக் கூட்டத் தொடர் மற் றும் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆகிய மூன்று கூட்டத்தொடர் களுக்கும் கூடுதலாக, நாடாளுமன்றத் தைக் கூட்ட அழைப்பாணை அனுப்பிட லாம். ஆனால் மழைக்காலக் கூட் டத் தொடர் வழக்கமாக ஜூலையில் கூட்டப் படுமாதலால், அதற்கு முன் ஒரு கூட்டத் தொடர் என்பதில் அர்த்தமேதுமில்லை.ஊடகங்களின் வாயிலாக சிறப்புக் கூட் டத்தொடரை நடத்தவிருப்பதாக செய்திகளைக் கசியவிடுவதன் மூலம் ஐ.மு. கூட்டணி-2 அர சாங்கமானது மக்களுக்கு உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்திட மிகவும் உறுதி பூண்டிருப்பதுபோல் காட்டி அரசியல் ஆதா யம் தேட முயற்சித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. மாறாக, அரசாங்கத்திடம் கேட் கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில், இத னைக் கொண்டுவர நான்கு ஆண்டுகளாகக் காலம் கடத்தியது ஏன் என்பதுதான். எனவே இந்த விஷயத்தில் மக்களுக்கு இரண்டகம் செய்திருப்பது அரசாங்கம்தானேயொழிய வேறு யாருமல்ல

.அரசாங்கத்திற்குள் கணிசமான அள விற்கு குடுமிபிடிச்சண்டை நடைபெற்றபின் னர்தான் அரசாங்கம், அனைவருக்கும் 25 கிலோ கிராம் உணவு தானியங்கள் - அரிசி கிலோ 3 ரூபாய் என்ற வீதத்திலும் கோதுமை கிலோ 2 ரூபாய் என்ற வீதத்திலும், இதர தானி யங்கள் கிலோ 1 ரூபாய் என்ற வீதத்திலும் வழங்கிட முன்மொழிவினை ஏற்படுத்தி இருப் பதாகக் கடைசியாகத் தெரிய வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் (கிராமப்புறங்களில் 75 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 50 விழுக் காடும் என்கிற முறையில்) நாட்டு மக்களில் 67 விழுக்காட்டினரைச் சென்றடையக் கூடிய விதத்தில் முன் மொழிவு உருவாக்கப்பட்டிருக் கிறது. கடந்த காலங்களில் இப்பகுதியில் நாம் திரும்பத் திரும்ப பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, நம் நாட்டிலிருந்து பசி - பஞ்சம் - பட்டினியை ஒழித்துக்கட்ட இது போதுமானதல்ல. ஓர் அர்த்தமுள்ள விதத்தில் உணவுப் பாதுகாப்பு அமைந் திட வேண்டு மானால் நாட்டிலுள்ள அனைத்துக் குடும் பத்தினருக்கும் - குறைந்தபட்சம் 90 விழுக் காட்டினர் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய்க்கு மிகைப் படாத வீதத்தில் அளித்திட வேண்டும். இதற் குக் குறைந்த எவ்வித நடவடிக்கையாலும் நாட்டுமக்களுக்கு முழுமையான அளவில் உணவுப் பாதுகாப்பை அளித்திட முடியாது. ஆயினும் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் இதனை ஏற்க மறுக்கிறது.மேலும் உணவுப்பாதுகாப்பு என்பது உண் மையிலேயே மக்களைச் சென்றடைய வேண் டுமானால் அதனை பொதுவிநியோக முறையை அனைவருக்குமான ஒன்றாக மாற்றி, நாட்டு மக்கள் அனைவ ரையும் அதன் கீழ் கொண்டு வருவதன் மூலமே செய்திட முடியும். இவ் வாறு செய்வதற்குப் பதிலாக, நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் நேரடி பணப் பட்டுவாடா என்னும் திட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது. ஆனால் இத்திட்டம் அமல்படுத்தப் பட்டால், இதன்மூலம் பொது விநியோக முறை என்பதே அவசியமற்ற ஒன்றாக மாறிப்போகும்.

ஏனெ னில் அரசாங்கம் மக்களிடம் பொருள்களைத் தாங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு வெளிச்சந்தையில்தான் வாங்குமாறு கேட் டுக்கொள்கிறது. பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கு மிகச்சிறந்த வழிமுறை இதைவிட வேறெதுவும் கிடையாது.மேலும் பணவீக்கம் அதிகரித்துக் கொண் டிருப்பதால், மக்களுக்குத் தரப் படும் பணத் தின் உண்மையான மதிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும். விளைவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள் ளப்படுவார்கள். பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்பட்டு, மக்கள் மேலும் மிகப்பெரிய அளவில் வறுமைக் குழிக்குள் தள்ளப்படுவது என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும். இவ்வாறு பொது விநியோகமுறை ஒழித் துக் கட்டப்படுவதென்பது மற்றுமொரு மோச மான பாதிப்பை ஏற்படுத் திடும். தற்சமயம் உணவு தானியங்களை அரசாங்கமே நிர்ண யம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயி களிடமிருந்து கொள் முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய் யப்படும் உணவுதானியங்கள் பின்னர் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிர் ணயிக்கப்பட்ட விலையில் விநியோகிக் கப்படுகின்றன. பொது விநியோக முறை ஒழித் துக்கட்டப்பட்டபின்பு அரசாங்கம் இவ்வாறு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை எழப்போவதில்லை. இவ் வாறாக விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தரவேண்டிய பொறுப்பிலிருந் தும் அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள் கிறது. அதன்மூலம் அரசாங்கம் விவசாயிக ளுக்கு இதுவரை மிகக் குறைந்த அளவில் என்ற போதிலும் அளித்து வந்த பொருளா தாரப் பாதுகாப்பையும் பறித்துக் கொள்கிறது. மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி அதன்மூலம் அவர்களை பசி - பஞ்சம் - பட் டினிக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து நேரடி பணப் பட்டுவாடா திட்டத் தின் மூலமாக, அரசாங்கம் தன்னைக் கழட்டிக் கொள்வது மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்பதிலிருந்தும் தன்னைக் கழட்டிக் கொள்கிறது.
இத்தகைய நடவடிக்கை மூலமாக அர சாங்கமானது மக்களைக் கொஞ்சமா வது பசி - பஞ்சம் - பட்டினியிலிருந்துக் காப்பாற்றும் வண்ணம் அளித்து வந்த மிகச் சொற்ப அள விலான மானியங்க ளையும் கொஞ்சம் கொஞ் சமாகத் தொடர்ந்து குறைக்கத் திட்டமிட் டிருக்கிறது. விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்காக அளித்து வந்த மானியங்களையும் இனி கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறது.வேறுவார்த்தைகளில் சொல்வதானால், தற்போது அரசாங்கம் மக்களின் கண்களைக் கட்டி வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அர சாங்கம் கொண்டுவரவி ருக்கும் உணவுப் பாது காப்புச்சட்ட முன்வடிவோ அல்லது பணப் பட்டுவாடா திட்டமோ மக்களுக்குத் தேவை யான நிவாரணத்தை அளித்திட முடியாது. மாறாக காலம் செல்லச் செல்ல விலைவாசி கள் உயர்ந்துகொண்டே செல்லும்போது, இத் தகையப் பணப் பட்டுவாடாக்கள் குடும்பத் தின் உணவு ஊட்டத்திற்குரிய தேவைகளை எதிர்கொள்ள போதாததாக மாறிவிடும். இவ் வாறு ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர் களை வறுமைக்குழிக்குள் தள்ள திட்டமிட்டி ருக்கிறது.

எனவே இப்போது நமக்குத் தேவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் அல்ல. மாறாகத் தேவைப்படுவது என்னவெ னில் மக்களுக்கு உண்மை யான முறையில் உணவுப் பாதுகாப்பை அளிப்பதற்கான உறுதி யேயாகும். மக்கள் முதலில் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பின்னர் தங் கள் வாழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கேற்ற முறையில் அனை வருக்குமான பொது விநியோக முறையை உத் தரவாதப்படுத்திட வேண்டும், அதற்குத் தேவையான அளவு ஒதுக்கீடுகளையும் செய் திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


No comments: