Sunday, May 26, 2013

சீனப்பிரதமரின் இந்திய விஜயம்


சீன மக்கள் குடியரசின் பிரதமர் லீ கேகி யாங் அரசுமுறைப் பயணமாக இந்தியா விற்கு வந்து சென்றிருக்கிறார். அநேக மாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் ஒருவர் தன்னுடைய தூதுக்குழு வுடன் முதன்முதலாகப் பயணம் செய் திடும் அயல் நாடு இந்தியாதான். உண் மையில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. சீனப் பிரதமர் வருகையையொட்டி இந்தியப் பிரதமர் ஊடகங்களுக்கு அளித் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சீனப் பிரதமர் பொறுப்பேற்றபின் விஜ யம் செய்யும் முதல் அயல்நாடாக இந்தி யாவைத் தேர்ந்தெடுத்து வந்திருப்பதற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள் கிறேன். ‘‘நேற்று மாலையிலிருந்து தொடங்கி, பிரதமர் லீயும் நானும் பரஸ்பரம் நலம் பயக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் மிகவும் விரிவான அளவிலும், திறந்த மனதுடனும் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். நமக்கிடையே பல்வேறு அம்சங்களில் ஒத்த கருத்து ஏற்பட்டிருப்பதனைக் கண்டு நான் மிக வும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அதிலும் மிகவும் முக்கியமாக, நம் இரு நாடு களுக்கும் இடையிலான உறவு என்பது அமைதியான முறையில் நம்முடைய வளர்ச்சிக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் அதேபோன்று நம் பிராந் தியத்திலும் உலகத்திலும் ஸ்திரத்தன் மையையும் வளமான வாழ்க்கையையும் கொண்டுவருவதற்கும் மிகவும் முக்கியம் என்பதையும் நாம் இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறோம். ‘‘இந்தியாவும் சீனாவும் முதிர்ந்த நாகரிகங்களைக் கொண்ட இரு அண்டை தேசத்தவர்கள், காலங்காலமாக அமைதி யுடன் வாழ்ந்து வந்திருப்பவர்கள், நம்மி டையே கருத்துவேறுபாடுகளை சமீப காலங்களில்தான் நாம் பெற்றிருக்கி றோம். ஆயினும் கடந்த 25 ஆண்டு களில் பரஸ்பரம் பயன் அளிக்கக்கூடிய முறையில் உறவுகளைப் படிப்படியாகக் கட்டி எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்த வளர்ச்சி மற்றும் நம் உறவுகள் விரி வாக்கப்படுவதற்கான அடிப்படை என் பது நம்முடைய எல்லைகளில் அமை தியைக் கொண்டுவருவதுதான். எல் லைப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டிய அதே சமயத்தில் பிர தமர் லீயும் நானும் இத்தகைய உறவி னைத் தக்கவைத்துக்கொண்டுத் தொடர் வது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறோம்.‘‘மேற்கத்திய பகுதியில் (western sector), சமீபத்தில் நடந்த நிகழ்விலி ருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை யும் நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். எல்லைப் பிரதேசங்களில் அமைதியை யும் சுமுக நிலைமையையும் நிலைநிறுத்தித் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அங்கே செயல்பட்டு வரும் சிறப்புப் பிரதிநிதிகளைப் பணித் திருக்கிறோம்.
சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் கூடி விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, நியாயமானதும் இரு தரப்பினரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலும் எல்லைப் பிரச்ச னைக்கு நிரந்தரமாகத் தீர்வுகாணக் கூடிய விதத்தில் ஓர் ஒப்பந்தத்தை வடி வமைத்துத் தந்திடவும் இருவரும் ஒப் புக்கொண்டிருக்கிறோம். ‘‘அதேபோன்று இரு நாடுகளுக்கு இடையிலே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரைப் பங்கிடுவதில் நமது நாட் டில் கடைமடைப்பகுதிகளில் போதிய அளவிற்கு நீர்வரத்து இல்லாதது குறித்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து பிர தமர் லீ கவனத்திற்கு மீளவும் வலி யுறுத்திக் கூறி இருக்கிறோம். இரு நாடு களுக்கும் இடையே ஓடும் ஆறுகள் தொடர்பாக ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்ளவும் இரு நாடுகள் தரப்பிலும் ஒப்புக் கொண்டிருப்பதற்கு என் மகிழ்ச் சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இமயமலைப் பகுதியில் உள்ள உயிரினங்கள் செயல்படும் முறை (நஉடிளலளவநஅ) குறித்து மேலும் சிறந்த முறையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இரு நாடுகளும் ஒத்து ழைத்திட முடிவு செய்திருப்பதும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திடும். ‘‘சீனாவும் இந்தியாவும் முன்னேறு வது, உலகத்திற்கே நல்லது என்கிற என் கருத்தை பிரதமர் லீயுடன் பகிர்ந்து கொள்கிறேன். வளர்ந்து கொண்டிருக்கும் நம் இரு நாட்டு மக்களின் விருப்பங்க ளுக்கும் இடமளித்திட உலகில் போது மான அளவிற்கு இடம் உண்டு.
இதனை எதார்த்தமாக்கிட நம் இரு நாட்டு மக் களுக்கு இடையேயும் புரிந்துணர்வை உருவாக்குவது முக்கியம். மக்கள் மத்தி யில் பரஸ்பரம் நம்பிக்கையை வலுப் படுத்திட இருதரப்பிலும் செயல்படவும் நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். இதற்கு மிகப்பெரிய அளவில் இரு நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை.’’இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் சார்பாகவும் இரு தரப்பு மற்றம் பலதரப்பு பிரச்சனைகளையும் உள்ள டக்கி முழுமையான அளவில் 35 அம்சக் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட் டிருக்கிறது. அதாவது சீனப்பிரதமரின் வருகையின் வெளிப்பாடானது, பரஸ் பரம் இரு நாடுகளுக்கும் இடையே மட் டும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகள் மீது மட்டும் அல்லாது இப் பிராந்தியம், தெற்காசியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இரு நாடுகளின் கருத்துக் களும் பரிமாறிக் கொள்ளப் பட்டிருக் கின்றன. கூட்டு அறிக்கையில் ‘‘21ஆம் நூற் றாண்டில் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே முழுமை யாகவும் வேகமாகவும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை திருப்தியுடன் ஆய்வு செய்திருப்பதாக’’க் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அத்தகைய உறவுகள் சமாதான சகவாழ்வு  அல் லது பஞ்சசீலக் கொள்கையின் அடிப்ப டையில் வரவிருக்கும் காலங்களில் கெட்டிப்படுத்தப்பட வேண்டும் என்று மீளவும் வலியுறுத்திக் கூறப்பட்டிருப் பதோடு, அறிக்கையில் மேலும் ‘‘இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்று மற்றொன் றுக்கு உதவக்கூடிய பங்காளிகளாகத் தான் கருதப்பட வேண்டுமேயொழிய, எதிராளிகளாகவோ அல்லது போட்டி யாளர்களாகவோ கருதக்கூடாது’’ என் றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதில், ‘‘இரு தரப்பிலும் தங்கள் நாட்டின் எல்லைகள் மற்றொருவரின் நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப் பட மாட்டாது’’ என்றும் கூறியிருக்கிறது.
அநேகமாக பல்வேறு உலக ஊடக விமர்சகர்களின் விமர்ச னங்களை மனதில் கொண்டே கூட்டு அறிக்கையானது, ‘‘இரு தரப்பினரும் இரு நாடுகளும் நட்புறவு கொண்டுள்ள இதர நாட்டினரையும் நட்புறவுடன் ஆத ரிக்கவும் அவற்றுடன் ஆக்கபூர்வமான அணுகுமுறையைக் கையாளவும் உறுதி பூண்டிருக்கிறது’’ என்றும் கூறியிருக் கிறது. இரு நாடுகளுமே தங்கள் நாட்டு அரசு அதிகாரிகளுக்கிடையேயும் முக் கியமான பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கு இடையேயும் அடிக் கடி முறையாக பயணங்களை மேற் கொள்வது என்றும் தீர்மானித்திருக் கின்றன. கூட்டு அறிக்கையின் முக்கியமான பகுதி, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மிகப் பெரிய அளவில், அதாவது வர்த்தகத்தை குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள் அளவுக்கு மேம்படுத் திக்கொள்வதுதான். இது தற்போது கிட் டத்தட்ட 70 பில்லியன் அமெரிக்க டாலர் கள் அளவிற்கே இருக்கிறது. ஆயினும், இதில் சீனாவிற்கு ஆதரவாக அதிக அள வில் ஒப்பந்தங்கள் ஆகி இருக்கின்றன. அதாவது இந்தியாவிற்கு அதன் ஏற்றுமதி 53 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் அதே சமயத்தில் இந்தியாவி லிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி என்பது வெறும் 17 பில்லியன் டாலர்கள் அளவிற் குத்தான் இருக்கும்.
இந்தியாவில் உள்ள முதலாளிகளின் அமைப்புகளானசிஐஐ, எப்ஐசிசிஐ மற்றும் அசோசெம் ஆகியவை மும்பையில் கூட்டாக ஏற் பாடு செய்த வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய சீனப் பிரதமர் இந்த சமநிலையின்மை சரிசெய்யப் படும் என்றும் சீனா அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும் என்றும் உறுதி கூறியிருக் கிறார். இந்தியாவும் சீனாவும் தம்மைச் சுற்றி யுள்ள நாடுகளுடனான கூட்டுறவை வலுப்படுத்திக்கொள்ளவும் போதுமான கவனம் செலுத்தும் என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. இரு நாடுகளும் நம்மைச் சுற்றி யுள்ள மற்ற நாடுகளுடனும் வர்த்தக முறைகளை விரிவாக்கிக்கொள்ள ஆவ லுடன் இருப்பதாக அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதன் அவ சியமும் அறிக்கையில் வலியுறுத்தப்பட் டிருக்கிறது. மேலும் கூட்டு அறிக்கை யில் வங்க தேசம், சீனா, இந்தியா, மியான் மர் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகவும் இந்நாடுகள் அனைத்தும் இணைந்து கூட்டாய்வுக் குழு ஒன்றை நிறுவி, அதன்மூலம் மிக வும் நெருக்கமான முறையில் பொரு ளாதார வர்த்தகம் மற்றும் மக்களிடையே இணைப்புகளை ஏற்படுத்தவும் தீர் மானித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக் கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக இரு தரப்பிலும் ‘‘விசா வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திட வும்’’ ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இரு தரப்பிலும், தெற்காசியா வில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்ளவும், ஒருவர்க் கொருவர் நட்புறவுகளை மேலும் வளர்த் துக்கொள்ளவும் ஆதரிக்கவும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதில் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு, மண்டல ஒத்துழைப் புக்கான தெற்கு ஆசிய சங்கம் மற்றும் ஆசிய - ஐரோப்பிய சந்திப்பு ஆகியவையும் அடங்கும். உலக நிலைமையைப் பொறுத்த வரை, தற்போது முக்கியமாக உள்ள அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒரு பொதுவான நிலைபாட்டிற்கு வருவது என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது. ‘‘உலகப் பிரச்சனைகளைப் பொறுத் தவரை இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடு களும் சேர்ந்தே ஐ.நா. உட்பட பல்வேறு உலக அளவிலான மன்றங்களில் பிரச்ச னைகளைக் கூட்டாக எழுப்புவதென் றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. சீனா சர்வதேச விவகாரங்களில் ஒரு பெரிய வளர்முக நாடு என்ற முறையில் இந்தியாவின் நிலைபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, பாது காப்புக் கவுன்சில் உட்பட ஐ.நா. மன் றத்தின் அமைப்புகளில் மிகப்பெரிய பங் கினை ஆற்றுவதற்கு இந்தியாவின் அபி லாசைகளைப் புரிந்து கொள்கிறது மற் றும் ஆதரிக்கிறது,’’ என்று மிகவும் குறிப் பிடத்தக்க முறையில் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
உலக விவகாரங்களில் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பல் துருவ உலகை மேம்படுத்துதல் உட்பட பல பிரச்சனைகளில் இரு நாடுகளுக் கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட் டிருக்கிறது. உலக அளவில் முக்கியத்து வம் உடைய இதர பல பிரச்சனைகள் குறித்து, கூட்டறிக்கையில், ‘‘இந்தியா வும் சீனாவும் வளர்முக நாடுகள் என்ற முறையில், புவி வெப்பமயமாதல், உலக வர்த்தக அமைப்பில் தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தை, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, சர்வதேச நிதி நிறு வனங்களையும், உலக அளவிலான நிதி நிறுவனங்களையும் சீர்திருத்தம் செய்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித் தும் பொதுவான நலனைப் பகிர்ந்துகொள் கிறோம். இது பிரிக்ஸ்மற்றும் ஜி-20 நாடுகளுக்குள் இரு தரப்பினரிடையேயும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பை யும் மிகவும் நெருக்கமாகப் பிரதிபலிப்பதி லிருந்தே புரிந்து கொள்ள முடியும். புவி வெப்பமயமாதல் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகள் மற்றும் 2015ஆம் ஆண்டு வளர்ச்சி நிகழ்ச்சிநிரலுக்குப் பிந்தைய காலங்களில் நடைபெறும் விவாதங்களிலும், நிலையான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டிலும் ஒருங் கிணைப்பை அதிகரித்திட இரு தரப் பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ‘‘பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தா லும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகளில் ஒத்துழைத்திடவும் இரு தரப்பிலும் உள்ள உறுதியான நிலை யினை மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட் டிருக்கிறது.
இவை தொடர்பாக ஐ.நா. தீர் மானங்கள், குறிப்பாக 1267, 1373, 1540 மற் றும் 1624 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.’’ஒட்டுமொத்தத்தில் சீனப் பிரதமரின் இக்குறுகிய கால பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் மிக ஆழமான முறையிலும் மிகவும் உண்மையாகவும் சுமுகமான சூழ்நிலை யிலும் தெற்காசிய மற்றும் உலக அளவி லான பிரச்சனைகள் குறித்தெல்லாம் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள் ளப்பட்டிருப்பதானது தெற்காசியாவில் மாபெரும் ஜாம்பவான்களாகத் திகழும் இரு அண்டைநாட்டவருக்கிடையே உற வுகளை மேம்படுத்திக் கொள்வதற்கும், அதன் மூலம் உலக நிலைமைகளிலும் ஆக்கபூர்வமான முறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழிகோலி இருக் கிறது என்ற உறுதிபடக் கூறிடலாம்.

தமிழில்: ச.வீரமணி



No comments: