Monday, March 23, 2009

மதவெறி அரசியலை வீழ்த்துவோம்!



பாஜகவினருக்கு ஒரு சிறு துளியாவது அரசியல் நாகரிகம் இருக்குமானால், உடனடியாக வருண்காந்தியை, தேர்தல் கூட்டங் களில் மதவெறி நஞ்சைக் கக்கிய குற்றத்திற் காக, மக்களவைத் தேர்தலில் பிலிபித் தொகு தியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதிலிருந்து விலக்கிக் கொள்ள உடனடியாக முன்வரவேண்டும். தேர்தல் ஆணையம் மிகவும் சுறுசுறுப் புடன் வருண்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திட உள்ளூர் காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள் ளது. இந்தியத் தண்டனைச் சட்டமும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிதுவச் சட்ட மும் ‘‘மதவெறித் துவேஷத்தை ஏற்படுத்து பவர்கள்’’ அல்லது ‘‘வேட்பாளரின் மதத்தின் அடிப்படயில் வாக்குகளைக் கோருவது’’ ஆகிய இரண்டையுமே இழிந்த, ஊழல் அரசி யல் நடைமுறைகள் என்று தெள்ளத்தெளி வாக வரையறுத் திருக்கின்றன. தேர்தல் நடைபெறும் சமயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டத் தைப் பொறுத்தவரை, அதன் 153ஏ பிரிவின்படி, ‘‘பல்வேறு குழுக்களுக்கி டையே மதத்தில் பெயராலோ, இனத்தின் பெயராலோ, பிறப்பிடத்தின் பெயராலோ அல்லது இருப்பிடத்தின் பெயராலோ, அல் லது மொழியின் பெயராலோ, அல்லது வேறேதேனும் ஒருவிதத்திலோ பகைமை யை ஏற்படுத்தும் விதத்தில் பேசினாலோ, நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ, மூன்றாண் டுகள் வரை சிறைத் தண்டனையும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை யும், அல்லது இரண்டும் சேர்த்தே தண் டனை விதிக்கக்கூடிய’’ கைது செய்தற் குரியதோர் குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும், 125ஆவது பிரிவின்படி, ‘‘தேர்தலையொட்டி வகுப்பினருக்கிடையே பகைமையை ஏற் படுத்துவோருக்கு’’ இதேபோன்றதோர் தண்டனையை விவரித்திருக்கிறது. இந்தப் பிரிவின்கீழ், மதத்தின் அடிப்படையில் பகை மையை அல்லது வெறுப்பை ஏற்படுத்து வோர் இதேபோன்று தண்டிக்கப் படுவார்கள் என்று குறிப்பிட்டே விவரித்திருக்கிறது. வருண்காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாஜக இப் போது, ‘‘சட்டம் அதன் கடமையைச் செய்யட் டும்’’ என்று கூறியிருக்கிறது. ஆனால் அது போதாது. சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே வழக்கில், அவரது வாக்குரிமை ஆறாண்டு காலத்திற்குப் பறிக்கப்பட்டது மற்றும் அந்தக் காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட போதி லும், இவ்வாறு ஆணை வருவதற்கு வெகு நீண்ட காலமானது. பால் தாக்கரே, 1987இல் வெலிபார்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலின்போது, இதே போன்று அவதூறு பொழிந்து, மதவெறி நஞ் சைப் பரப்பினார் என்பதற்காக குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவ்வாறான மதவெறித்தீயை உருவாக்கிய அவரது பேச்சுக்கு எதிராக, உயர் நீதிமன்றம் அளித்த மேற்படி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம், 1999இல் இறுதியாக உறுதிசெய்த போதுதான், அமலுக்கு வந்தது. சட்டவிதி முறைகளின்படி, அப்போது குடியரசுத் தலை வராக இருந்த மறைந்த கே.ஆர்.நாராயணன், உச்சநீதிமன்றத்தின் ஆணையை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, தண்டனையின் அளவு குறித்து தீர்மானிப்பதற்காக அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையமானது, அதன் மீது, பால்தாக்கரேயை ஆறாண்டு காலத் திற்கு வாக்குரிமையைப் பறித்து ஆணை பிறப்பித்தது.இப்போது, வருண்காந்தி வழக்கில், இவ் வாறு சட்டம் தம் கடமையைச் செய்திட நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கக் கூடாது. வருண்காந்தியால் காக்கப் பட்ட மதவெறி நஞ்சு தொடர்பான வீடியோக் கள் ‘‘போலியானவை’’ என்று கூறப்படுபவை எல்லாம் ‘‘யு ட்யூப்’’ (லடிர வரநெ) போன்ற இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல்வேறு ஒளிபரப் புகளின் மூலம் தூள் தூளாக்கப்பட்டு விட் டன. வருண்காந்தி, தான் பேசியதன் காரண மாக எங்கும் எவ்வித வன்முறைச் செயலும் நடைபெறவில்லை என்பதால், தான் குற்ற வாளி அல்ல என்று விசித்திரமானதோர் விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கக்கிய நஞ்சுப் பேச்சுக்களை மீண்டும் ஒருமுறை நம் இதழில் வெளியிட்டு அருவருப்புகொள்ள நாம் தயாரில்லை. எந்த ஒரு நாகரிகமுடைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்வாதி யாலும் அவரது பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய நடவடிக்கையைத் தொடரும் அதே சமயத் தில், பாஜகவானது வாக்காளர்கள் மத்தி யில், தங்களுடைய நிலைபாட்டைத் தெளிவு படுத்தக்கூடிய விதத்தில், வருண்காந்தியை, தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் இதுபோன்றெல்லாம் பாஜக போன்ற ஒரு கட்சியிடம் எதிர்பார்ப்பது, அதீத மான ஒன்றுதான். ஆர்எஸ்எஸ் அமைப்பா னது, “அயோத்தியில் தாவாவுக்குரிய இடத் தில் ராமர் கோவிலைக் கட்ட யார் உறுதி மொழி அளிக்கிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்போம்” என்று கூறியுள்ள நிலை யில், பாஜக, 2009 பொதுத் தேர்தலுக்கு தன்னுடைய வெறித்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய் துள்ளது. சமீபத்தில், கர்நாடகாவில், இருப தாம் நூற்றாண்டின் இணையற்ற கலைஞ ரான சார்லி சாப்ளின் சிலையை வைத்திட அனுமதிக்காமல் இழுத்தடித்திருப்பதி லிருந்து, தேர்தல் ஆதாயங்களுக்காக பாஜக, மதவெறித் தீயை விசிறிவிட முன்வந்திருப்ப தைத் தெளிவாகக் காண முடிகிறது. இவ் வாறாக, ஒரு சமயத்தில் பாஜக-வின் கூட் டணிக்கட்சிகளாக இருந்தவை - குறிப்பாக கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் அதன் அணியில் இருந்த கட்சிகள் - அதனை அநாதையாகக் கைவிட்டுவிட்டு, விலகிக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகதூரம் போக வேண்டிய தில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடிப்படை முரண்பாடு என்பது - பாஜக எந்த அளவிற்குத் தன்னுடைய வெறித்தன மான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் செயல்படுத்திட முயற்சிக்கிறதோ அந்த அளவிற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் அதனைக் கைவிட்டுவிட்டு விலகி ஓடு வதும் தவிர்க்கமுடியாதது.இத்தகைய சூழ்நிலைமைகளில், வாக்கா ளர்கள், வரவிருக்கும் தேர்தலில் இத்தகைய மதவெறி நஞ்சைக் கக்கும் கிரிமினல் அரசி யல்வாதிகளை மறுதலித்திடக் கூடிய வகை யில் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி

No comments: