Monday, March 23, 2009

brinda video


அமோக விளைச்சல் இருந்தும் மக்களை பட்டினியால் துடிக்க வைத்த பாஜக, காங். அரசுகள் பிருந்தா காரத் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 23-‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமானிய மக்களுக்கு காங்கி ரஸ் தலைமையிலான அரசாங் கத்தின் பரிசுகள்’ என்னும் தலைப்பிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பிரசுரத்தை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் பிருந்தாகாரத் எம்.பி., திங்களன்று வெளியிட்டார்.டில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவ லகமான ஏ.கே.கோபாலன் பவனில், நடைபெற்ற செய்தியா ளர்கள் கூட்டத்தில் இப்பிரசு ரத்தை வெளியிட்டு, பிருந்தா காரத் பேசியதாவது:பதினைந்தாவது மக்கள வைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல் வெளியீடாக, ‘விலைவாசி உயர்வு, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைவு: சாமா னிய மக்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத் தின் பரிசுகள்’ என்னும் தலைப் பிலான பிரசுரத்தை வெளியிடு கிறோம். இதைப் போல் மேலும் பதினான்கு பிர சுரங்கள் அடுத்தடுத்து சில நாட்களில் வெளியிடப்பட இருக்கின்றன. உலகில் பசி-பஞ்சத்துடன் உள்ள நாடுகளில் முக்கியமான ஒன்றாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. இதனை ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாமானிய மக்கள் பட்டினி யிலும் பஞ்சத்திலும் உழன்று கொண்டிருப்பதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சியாளர்கள், ‘ஜெய்ஹோ’ என முழங்கிக் கொண்டிருக் கின்றனர். ஐ.மு.கூட்டணி அரசாங்கத் திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் கீழ்தான் ஆதரவு அளிக்க முன்வந்தன. அப்போது பொதுவிநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும், போலியான, மோசடியான ‘வறுமைக்கோட் டிற்குக் கீழ்’ என்றும் ‘வறுமைக் கோட்டிற்கு மேல்’ என்றும் மக்களைப் பிரிக்கும் முடிவை ரத்து செய்துவிட்டு, அனைவ ருக்கும் பொதுவான பொது விநியோக முறையை அமல் படுத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தினோம். ஆட்சியாளர் கள் வறுமைக்கோட்டுக்கு நிர் ணயித்திருக்கிற கணக் கீட்டின்படி கிராமப்புறங்களில் 11 ரூபாய்க்கு மேலும், நகர்ப் புறங்களில் 17 ரூபாய்க்கு மேலும் ஊதியம் பெறும் அனைவரும் வறுமைக்கோட் டுக்கு மேலே வந்து விடுகிறார் கள். எனவே இவர்களுக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. என்னே கொடுமை? இதனை மாற்ற வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டு காலமாகக் கோரி வருகிறோம். ஆட்சியாளர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இன்றைய நிலைமை என்ன? விளைச்சல் அமோகமாக இருந் தும், மக்கள் பட்டினியால் துடித்துக் கொண்டிருக்கிறார் கள். இத்தகைய அரசின் கொள் கைகளில் மாற்றத்தை ஏற் படுத்தி, சாமானிய மக்களை வாழ வைத்திட வேண்டும் என் பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம். இதனை, முன்பு ஆட்சியிலிருந்த பாஜகவும் செய்யாது, இப்போது ஆட்சி யிலிருக்கும் காங்கிரசும் செய் யாது. இவர்களுக்கு மாற்றாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் தலைமையிலான மாற்று மதச்சார்பற்ற அரசாங் கம் மத்தியில் அமைந்தால்தான் இது சாத்தியம். (ந.நி.)

No comments: