Wednesday, December 31, 2008

2009: மாற்றுக்கொள்கைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்





வாசகர்கள் அனைவருக்கும் 2009ஆம் ஆண்டு புதிய புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள் கிறோம்.

2008ஆம் ஆண்டு, உலகிற்கும் நம் நாட்டிற்கும் மிகவும் சிரமமான ஓர் ஆண்டாக இருந்திருக்கிறது. 1930களில் ஏற்பட்ட மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலைமைக்கு அடுத்து இந்த ஆண்டு மிகவும் மோசமான நெருக்க டியை உலக முதலாளித்துவம் சந்தித்தது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட் டிருக்கிறது. ‘மனிதர்களைச் சுரண்டு வதை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் என்னும் அமைப் பானது, எந்தக்காலத்திலும் நெருக்கடிக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்துவிட முடியாது’ என்கிற உண்மையை இந்த நெருக்கடியானது மீண்டும் ஒருமுறை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது முதலாளித்துவம் குறித்த மார்க்சிய ஆய்வுமூலம் மெய்ப்பித்துக்காட்டப்பட்ட ஒன்று மட்டுமல்ல, முதலாளித்துவ அமைப்பு முறையானது சோசலிச அமைப்பு முறையாக மாற்றி யமைக்கப்பட வேண்டிய மார்க்சிய வழிகாட்டுதலையும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிக் கட்சிகள் எழுச்சி பெற்று வருவதும் மற்றும் பல நாடுகளில் ஏகாதிபத்தியத் தின் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட் டங்கள் நடைபெற்று வருவதும், இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. நாம் 2008ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து அனுப்பும் அதே சமயத்தில், சோசலிசத்திற்கு ஆதரவாக - உலக அளவிலும் சரி; நம் நாட்டிலும் சரி - வர்க்கச் சேர்மானங் களை வலுப்படுத்திட நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிப்பாட்டை இரட்டிப் பாக்கிடுவோம். பல முக்கியமான குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிப் போக்குகள் 2008ஆம் ஆண்டில் நம் நாட்டில் நடைபெற்றிருக் கின்றன. அவற்றுள், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பல்கிப் பெருகியிருப்பது ஆழ்ந்த கவலையளிக்கக்கூடியதாகும்.
அரசின் அதிகாரபூர்வ பட்டியல்களின் படியே மும்பை தாக்குதல் மற்றும் காபூ லில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது உட்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள ஏழு தாக்கு தல்களில் மொத்தம் 377 பேர் பலியாகி யுள்ளனர். இத்தாக்குதல்களில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந் துள்ளனர். மேலும் 2008ஆம் ஆண்டானது, இதற்குமுன் இருந்திடாத அளவிலான இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண் டது. இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், சமீப காலத்தில் ஏற்பட்ட வெள்ளக் கொடுமைகளில் மிகவும் மோசமானது, நேபாளத்திலிருந்து வரும் கோசி ஆற்றில் ஏற்பட்ட திசைமாற்றமானது பீகார் மற்றும் வட இந்தியமாநிலங்களில் பல பகுதி களில் பல்லாயிரக்கணக்கானோரைப் பலி கொண்டு பேரழிவினை ஏற்படுத் தியுள்ளது. 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக மாறிப் போயுள்ளார்கள். வெள்ளப் பெருக்கானது அஸ்ஸாம், ஒரிசா போன்ற வேறு பல மாநிலங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டில் இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளதையும் பார்த்தோம். இந்திய - அமெரிக்க போர்த்தந்திரக் கூட்டணியை வலுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய பாது காப்பு மற்றும் போர்த்தந்திர நடவடிக்கை களின் ஓர் அங்கமாக மாற்றிவிட்டார்கள். இது நம் நாட்டின் இறையாண்மை மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை இரண்டின் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தவே இட்டுச் செல்லும். மேலும் நாட்டில் நம் பாரம்பரிய முறைகளின் மூலமாகவே நம் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றபோதிலும், அதனை விடுத்து, அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதானது, நம் நாட்டின் மிக அரிதான நம் வள ஆதா ரங்களை வற்றச் செய்திடவே வழி வகுக் கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம் படப்போவதைவிட, அணு உலைகளை அளித்திட இருக்கும் அமெரிக்கக் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்து கொழுப்பதற்கே உதவிடும். 2008ஆம் ஆண்டில் ஏழை - பணக் காரர் இடையேயான இடைவெளி மேலும் விரிவடைந்ததையும் பார்த்தோம். ‘ஒளிர் கின்ற’ இந்தியனுக்கும், ‘உழல்கின்ற’ இந்தியனுக்கும் இடைவெளி மேலும் ஆழமானதையும், அதன்மூலம் ஒரு பக் கத்தில் உலக அளவிலான பில்லிய னர்கள் இந்தியாவில் அதிகரிப்பதற்கும், அதே சமயத்தில் மறு பக்கத்தில் நம் மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் நான்கு பங்கினர் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட வருமானமின்றி வாடுவதற்கும் இட் டுச் சென்றது. விவசாயிகள் தற்கொலை செய்வது கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றபோதிலும், 2007ஆம் ஆண்டில் இது 16,632 ஆக இருந்திருக் கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள், ஒவ்வொரு நாளிலும் 46 பேர், அல்லது ஒவ் வொரு மணி நேரத்திலும் 4 பேர் என்கிற ரீதியில் தற்கொலை செய்து கொள்கி றார்கள் என்பது இதன் பொருள். ஐந்து வய துக்குக் குறைவான நம் குழந்தைகளில் 58 சதவீதத்தினர் போதிய ஊட்டச்சத்து உணவின்றி வாடுவதாக ‘யுனெஸ்கோ’ கூறுகிறது. ஊட்டச்சத்தின்மையாலும் அதன்மூலம் தாக்கக்கூடிய வியாதிக ளுக்குக்கூட மருந்து உட்கொள்ள முடி யாமலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக, இத்தகைய நிலைமை களைத் தொடர்ந்திட அனுமதிக்கக் கூடாது. ஆயினும், இதற்கு முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யகக் கூட்டணி அரசோ அல்லது தற் போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசோ பின்பற்றும் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான மாற்றுக் கொள்கை களைப் பின்பற்றுவது தேவை. இந்த நிலையில் மக்களின் எண்ணத் தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்ற மானது, ஆளும் வர்க்கத்தினரால் வேண் டுமென்றே முழுமையாகச் செயல்பட விடாமல் மிகவும் துயரார்ந்த முறையில் அதன் நாட்கள் வெட்டிச் சுருக்கப்பட் டன. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசானது நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை மெய்ப்பிக்க மிகவும் கேவலமான முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது. நாட்டில் அரசியல் அறநெறி இந்த அளவிற்குக் கீழ்த்தரமாக இதற்கு முன் சென்றதில்லை. சுதந்திரத்திற்குப் பின், 2008ஆம் ஆண்டில்தான் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு நூறு நாட்க ளாவது நாடாளுமன்றத்தின் அமர்வு நடந் திட வேண்டும் என்று கோரிய போதிலும், 2008இல் வெறும் 46 நாட்கள் மட்டுமே கூடியிருக்கிறது. அதேபோன்று 2008 மற்றோர் விதத்திலும் ‘பெயர்’ வாங்கி யிருக்கிறது. நாடாளுமன்ற வரலாற்றி லேயே மிக நீண்ட அமர்வு நடைபெற்றி ருப்பதும் 2008இல்தான். மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜூலை 21 அன்று கூட்டப்பட்ட அமர்வு, டிசம்பர் 23 வரைக் கும் தொடர்ந்தது. ஆயினும் இடையில் 18 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திபோடப்பட்டிருக்கிறது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரோ அல்லது குளிர்காலக் கூட்டத்தொடரோ இல்லாமல் இருந்ததும் 2008ஆம் ஆண்டுதான்.நம்முடைய அரசியலமைப்புச் சட்டத் தின்படி, நாடாளுமன்றம் என்பது சட்டங் களை இயற்றும் ஓர் அங்கமாக மட்டும் இருந்திடவில்லை, அது மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்து, மக்களின் சார்பில் கேள்வி கேட்கும் ஓர் அமைப்பாகவும் செயல்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை இவ்வாறு வேண்டுமென்றே வெட்டிச் சுருக்கியதன் மூலம், அரசு தன்னுடைய செயல்பாடின்மை குறித்து மக்களுக்குப் பதில் சொல்லாமல் சாதுரியமாகத் தப்பித்துக் கொண்டுவிட்டது.
உண்மையில் ஐமுகூ அரசாங்கம் இதற்காகத்தான் நாடாளுமன்றத்தின் நாட் களை வெட்டிச் சுருக்கியுள்ளது. ஆயினும், எந்த ஒரு அரசு இருந்தாலும் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டேயாக வேண்டும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் பல சட்டங்களை நிறைவேற் றியுள்ளது.
நாடாளுமன்றம் நடைபெற்ற கடைசி நாளன்று என்ன நடந்தது? நாடாளுமன்றத்தில் முழுமையாக அமளி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பதினோரு சட்டமுன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு, பத்தே நிமிடங்களில் அனைத்தும் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டன. இதுபோன்றதொரு நிலை, இதற்கு முன் கேட்டிராத ஒன்று.
இத்தகைய சூழ்நிலையில்தான் இன்சூரன்ஸ் துறையை அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்ப தற்கான முக்கிய திருத்தங்கள் முன்மொழி யப் பட்டிருக்கின்றன. உலகப் பொரு ளாதார நெருக்கடியிலிருந்து பாடங்கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, உலக ஊக வர்த்தகச் சூதாடிகளிடமிருந்து இந்திய நிதிச் சந்தையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ஐமுகூ அரசானது இன்சூரன்ஸ் துறையில் தற்போதுள்ள 26 சதவீதத் திலிருந்து 49 சதவீதமாக அந்நிய முதலீட் டை அதிகரிப்பதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. இன்றைய தினம் ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். இந்தியப் பொருளாதாரத்தில் அதன் முதலீடு என்பதும் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாயா கும். அவற்றால் சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யத்தக்க உபரியை அதிகரித்திட முடியும். 2007-08ஆம் ஆண்டில் அவற்றின் லாபம் சுமார் 2,800 கோடி ரூபாய். அவை சுமார் 450 கோடி ரூபாயை அரசுக்கு ஆதாயப் பங்காக (டிவிடண்ட்) அளித்திருக்கிறது. இந்தத் தொகை என்பது அரசாங்கத்தின் பங்குத் தொகைக்கு (equity) சமமாகும்.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சேமிப்புக் களஞ்சியமாகத் திகழும் இன் சூரன்ஸ் துறையானது, இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நாட் டின் பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதானமான மூலா தாரமாக இருந்து வருகிறது. இவற்றின் மீது அந்நிய மூலதனத்தை கொள்ளை யடித்துச் செல்வதற்காக அனுமதிப்பது என்பது, அடிப்படையில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மறுதலிப்பது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உலக அளவில் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், சர்வதேச நிதி மூலதனத்திற்கு நம்நாட்டின் வளங் களைக் கொள்ளையடித்துச் செல்வதற் காக, நம் நாட்டின் மக்களால் உருவாக் கப்பட்ட நம் நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுப்பது என்பதே இதற்குப் பொருளாகும். அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்துவதன் மூலம் நம் நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங் களை அதிகரித்திட முடியும் என்று அர சுத்தரப்பில் கூறப்படுவது யதார்த் தத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றா கும். இன்சூரன்ஸ் துறை 1999இல் அன் றைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது. அதன்பின் 21 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டைத் துவக்கின. அவர்கள் முதலீடு செய்துள்ள மூலதனப் பங்கிற்கு மேல், ஒரு ரூபாய் அளவிற்குக் கூட இந்தியாவிற்குள் அவை இதுவரை கொண்டுவரவில்லை. தற்போதைய உலக முதலாளித்துவ நெருக்கடியானது, நவீன தாராளமய சித்தாந்தம் திவாலாகிப்போன ஒன்று என்று மெய்ப்பித்தப்பின்னரும்கூட, ஐமுகூ அரசானது மேற்படி நவீன தாராளமயப் பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட, இத னை எதிர்த்து, முறியடித்திட வேண்டும். எனவேதான், வரவிருக்கும் 2009ஆம் ஆண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடுவதற்கான, வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து வதற்கான போராட்டங்களைத் தீவிரப் படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கும். இந்தப் போராட்டங்களின் குறிக்கோள் கள் இயற்கையாகவே ஆளும் வர்க்கங் களை மாற்றுக் கொள்கைகளைப் பின் பற்ற வளைந்து கொடுக்க நிர்ப்பந்திக்கும். ஆயினும், அத்தகைய வளைவானது, ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றும் காங்கிரஸ் மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிராக ஒரு மாற்று அரசியல் சேர்மா னத்தைக் கொண்டு வர முடியும். 2009இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், இந்திய அரசியலில் அத்தகையதோர் தீர்மானகரமான மாற்றத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையைக் கொண்டுவரக் கூடிய வகையில் 2009ஆம் ஆண்டை செம்மையாக அமைத்திடுவோம்.2009ஆம் ஆண்டின் வெற்றியை உத்தரவாதப்படுத்த நாம் அனைவரும் உறுதியேற்போம்.தமிழில்: ச. வீரமணி

1 comment:

மணி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !