உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம், சிகாகோவில் 1886ஆம் ஆண் டின் வீரஞ்செறிந்த மே தினப் போராட்டங் களின் புரட்சிகரமான சாதனைகளை எந்த விதத்திலும் மறந்திட முடியாது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எட்டு மணி நேர வேலை உரி மையும், ஒரு நாளின் மீதமுள்ள 16 மணி நேரத்தை ஓய்வு, கலாச்சார நடவடிக்கை கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுப வித்திடப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையையும் மே தினப் போராட்டங் களின் விளைவாக நடைமுறைப் படுத்தப் பட்டவைகளாகும்.
ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலைமை கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை உரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிட, தனியார் நிறுவனங்களுக்கு நடைமுறையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
எட்டு மணி நேர வேலை என்பதும், நாளின் மீதமுள்ள 16 மணி நேரம் ஓய்வு, மனமகிழ் நிகழ்வுகள் மற்றும் குடும்பத்தாரு டன் மகிழ்வுடன் இருப்பதற்கு என்கிற விதி படிப்படியாக அரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற் றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, உலகில் கடைப்பிடிக் கப்படும் நவீன தாராளமய உலகமயக் கொள் கைகளின் காரணமாகவும், உலக முதலா ளித்துவ நெருக்கடியின் விளைவாகவும் சுமார் ஐந்து கோடி தொழிலாளர்கள் வேலை களை இழந்துள்ளார்கள்.
கொள்ளை லாபமீட்டுவதே
கொள்கையாகிப் போனது
நவீன தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஆட்சிகளினுடைய, லாப மீட்டும் கொள்கை மனித சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தோற்றத்தையே மாற்றிவிட் டது. அதனால்தான் எட்டு மணி நேர வேலை குறித்தோ, வேலையில் இருப்பவர் கள் வேலை யிலிருந்து வெளியேற்றப் படுவது குறித்தோ ஆட்சியாளர்கள் கவ லைப்பட வில்லை.
நவீன தாராளமயக் கொள்கை கடைப் பிடிக்கப்படும் ஓர் ஆட்சியில், வணிகம் நன்று, அரசாங்கங்கள் தீது. பெரும் வணிகம் மிகவும் நன்று, பெரும் அரசாங்கங்கள் மிக வும் தீது. பணக்காரர்கள் மீதான வரிகள் தீது, ஏழைகளுக்கும், தொழிலாளர் வர்க்கத்திற் கும் சமூக நலத் திட்டங்களுக்குச் செல விடுவதென்பது மிக மிகத் தீது. சமூகத்தில் மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு அதிகரிப் பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அவசியமானதும் கூட. சமூகத்தில் பணக்காரர்களாக இருப்பவர் கள் மேலும் பணக்காரர்களாகக்கூடிய வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் முதலீடுகளை அதிகரிப்பதற்கு அவை தூண்டுகோலாக அமையும். அதே போன்று ஏழைகள் கடின உழைப்பினை மேற்கொள்ள எப்போதும் ஆர்வத்துடன் முன்வரவேண்டும். சந்தைகள் தவறிழைக் காது. மனித சமூகத்தை ஒழுங்குபடுத்தும் உயர்ந்த மார்க்கம், சந்தைகள்தான். இவை தான் அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படையாகும். அரசாங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் மூலமாக இதில் தலை யிடுவது - அது என்னதான் நல்ல நோக்கத் துடன் இருந்தபோதிலும் - நீண்டகால ஓட்டத்தில் விஷயங்களை அவை மிகவும் மோசமாக்கிவிடும். ஏனெனில், இவை சந்தைத் தீர்விலிருந்து பிரச்சனைகளை வேறு வழிகளில் இழுத்துச் சென்று விடு கின்றன. சுதந்திர சமூகத்தில் அரசாங்கம் என்பது சந்தையின் அதிகாரத்தை உயர்த் திடவே முன்வர வேண்டும். சமூகத்தில் உள்ள எவரும் தங்கள் சொத்துக்களை எந்த விதத்தில் வேண்டுமானாலும் - அது நேர்மையாக வேண்டுமானாலும் இருக்க லாம் அல்லது மிகவும் இழிவான முறையில் வேண்டுமானாலும் இருக்கலாம் - பெருக் கிக்கொள்ள சுதந்திரம் உண்டு. இந்த வகை யில்தான், நவீன தாராளமயக் கொள்கை என் பது மூலதனத்திற்கு ஆதரவாக கூச்ச நாச்சமின்றி வாதிடுகிறது.
நவீன தாராளமயக் கொள்கை 1980 களில் ரீகன் - தாட்சர் காலத்தில் தலை தூக்க ஆரம்பித்தது. 1990களின் முந்தைய ஆண்டுகளில் சோசலிச நாடுகளில் பின் னடைவு ஏற்பட்ட சமயத்தில் இக் கொள்கை வேகமாக வளரத் தொடங்கியது. அப்போது, ‘‘வரலாறு முடிந்துவிட்டது என்று கூறி முதலாளித்துவம் புளகாங்கிதம் அடைந்தது. மார்கரெட் தாட்சர், ‘‘இனி மாற்று எதுவுமில்லை என்று கொக்கரித்தார்.
நவீன தாராளமயத்தின் தத்துவம்
நவீன தாராளமயத்தின் தத்துவமானது வசதிபடைத்தவர்கள் கைகளில் அதிகா ரத்தை ஒப்படைப்பதை நியாயப்படுத்து கிறது. ஆயினும் நவீன தாராளமயத்தின் திவாலாகிப்போன தன்மையும், முரண் பாடுகளும் 1990களின் இறுதியில் வெட்ட வெளிச்சமாயின. உலகமயத்திற்கு எதிரான இயக்கம், உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் களில் நவீன தாராளமயக் கொள்கைகள் மிகவும் விரிவான வகையில் நிராகரிக்கப் பட்டன. அதிலும் குறிப்பாக லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ‘‘வரலாறு முடிந்துவிட்டது’’ என்று கொக் கரித்தவர்களின் கூற்றுக்களைத் தரைமட் டமாக்கின. இந்த சமயத்தில்தான் முதலா ளித்துவம் பொதுவாகவும், ஊடக அமைப் புகள் குறிப்பாகவும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களைப் பெரும் அளவில் சார்ந் திருக்க வேண்டும் என்பதனைப் புரிந்து கொண்டன. நவீன தாராளமயம் அரசின் பாத் திரத்தை அழிப்பதற்கு முயலவில்லை. மாறாக அரசு என்பது முதலாளித்துவத்தின் நலன்களுக்கு அல்லது ஊடக கார்ப்ப ரேஷன்களின் நலன்களுக்கு மட்டுமே முழுமையாகச் செயல்பட வேண்டும் என்கிற முறையில் நவீன தாராளமயம் தன் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தகைய தத்துவார்த்தக் கண்ணோட்டத்துடன் ஊட கங்களின் அரசியல் பொருளாதாரம் புத்துயிர் பெற்றன. இந்த அடிப்படையில் அமெரிக் காவிலும், இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் ஊட கங்களால் பெருமளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டன. இன்றைய கால கட்டத் தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சிப் போக்காகும்.
ஊடகங்களின் பங்கு
நவீன தாராளமய சமூகத்தில் கார்ப்பரேட் டுகளின் ஊடகங்கள் முதலாளித்துவத் திற்கு மாற்று சாத்தியமே இல்லை என்கிற கருத்தை மக்கள் மத்தியில் நம்பும் அள விற்கு எடுத்துச் சென்றுள்ளன.
சர்வதேச மூலதனத்திற்கு சேவகம்
இன்றைய தினம் அமெரிக்காவில் மட் டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்கள் தங் கள் ஆளுகையை விரிவாக்கி இருக்கின் றன. அதீத அளவில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடக்கூடிய விதத்தில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மாறி யிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தாராளமயவாதிகள், தங்கள் சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்வதற்காக வகைதொகையின்றி ஊடகங்களுக்கு லஞ் சம் தர தயாராக இருக்கின்றனர்.
1880களில் சிகாகோவில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றபோது உலக முத லாளித்துவத்தின் நிலைமை வேறாக இருந் தது. அதன்பின்னர் உலக முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடைந்து, இன்றைய காலகட்டத்தில், நவீன தாராள மய உலகமயமாக உருவெடுத்து, மிக உக்கி ரமான வடிவத்தினைப் பெற்றுள்ளது.
உலக அளவில், இன்றைய தினம், தொழிலாளர் வர்க்கம் மிகவும் வஞ்சிக்கப் பட்ட வர்க்கமாக, பல்வேறு உரிமைகள் பறிக் கப்பட்ட வர்க்கமாக மாறியிருக்கிறது. பணக் காரர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத் தங்கள் உழைப்புச் சக்தியைக் கட்டாயமாகக் குறைந்த கூலிக்கு அளிக்கக்கூடிய அள வுக்கு மிகவும் மோசமானதாகத் தொழிலா ளர் வர்க்கம் மாறியிருக்கிறது. பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்திருக்கிறது. ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பதென்பதும், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, குறைந்த கூலிக்கு வேலை செய்வ தென்பது போன்ற மே தின சகாப்தத்திற்கு முந்தைய நிலைமை இப்போது ஏற்பட்டி ருக்கிறது.
உலக அளவில், ஊடகங்களின் வெறித் தனமான பிரச்சாரங்கள், மக்களின் சிந்த னைகளையும் செயல்பாடுகளையும் மழுங் கடித்து வருகின்றன. அமெரிக்காவும், பல முதலாளித்துவ நாடுகளும் மிகவும் மோச மான முறையில் பொருளாதார நெருக்க டிக்கு ஆளாகிய பின்னர், அவை தொழிலா ளர் வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்தன. இருபதாம் நூற்றாண்டில் சமூக உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங் களை நடத்தி பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்த தொழிலாளர் வர்க்கம் படிப்படி யாக அவற்றை இழக்கக்கூடிய நிலை ஏற் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிக ரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையிலிருக்கும் தொழிலாளர்களையும் கடுமையான முறையில் பாதித்திருக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூல மாக பெற்றிட்ட எண்ணற்ற உரிமைகள் ஒவ் வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின் றன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமானது, வேலை இழப்புகள், வேலையிலிருப்போரை அதிக மணி நேரத் திற்கு வேலை வாங்குதல், பணிப் பாது காப்பின்மை, நியமனங்களில் ஒப்பந்தமுறை அமல், தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப் படுதல் போன்ற நிலைமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.
சோசலிசத்திற்காக
போராடுவது ஒன்றே மாற்று
இன்றைய தினம் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட் டுள்ள விளைவுகளை முற்றிலுமாகத் துடைத்தெறியக் கூடிய வகையில் அணி திரளாமல், துண்டு துண்டான சில அற்பக் கோரிக்கைகளுக்காக நடத்திடும் போரா ட்டங்களால் மட்டும் வலுவடைந்து விடாது.
தொழிலாளர் வர்க்கம், தன்னுடைய புரட்சிகர லட்சியத்தையும் (ளவசயவநபல) அதனை அடைவதற்கான உத்திகளையும் (வயஉவiஉள) அறிந்திருந்தால் மட்டுமே அத னால் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறிட முடியும்.
இல்லாவிடில், இவர்களது போராட்ட அனுபவங்கள் அப்போதைக்கு அவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள முதலாளித் துவக் கழிசடை சித்தாந்தங்களின் செல் வாக்கால் மழுங்கடிக்கப்பட்டு, அவர்களை சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாத நிலைகளை எடுக்க வைத்திடும். முதலா ளித்துவ அமைப்பை, தொழிலாளர்களுக்கு ஆதரவான ஓர் அமைப்பாக சீர்திருத்தி டவோ அல்லது நவீனப்படுத்திடவோ முடி யாது. முதலாளித்துவ அமைப்பு முறையா னது சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத சக்திகளின் கூட்டணிகளோடு தனக்குச் சாதகமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும். ஆயினும், முதலாளித்துவ அமைப்பு முறையை உறுதியாகவும் விடாப் பிடியாகவும் ஆதரிக்கும் ஒரு முதலாளித் துவ அரசாங்கத்தைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, தொழிலாளர்கள் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மீதுள்ள பிரேமைகளை அகற்றிட வெளிப்படையாக வும், ஒளிவுமறைவற்ற முறையிலும், நடை முறை நடவடிக்கைகளுடன் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட் டத்திற்கு மாற்று இல்லை என்பதை உறுதி யுடன் ஏற்றுக்கொண்டு, அதனை அடை வதற்கான போராட்டத்தில் தன்னை முழு மையாக இணைத்துக் கொள்ள தொழிலாளர் வர்க்கம் முன்வர வேண்டும். அது ஒன்று தான் வீரம் செறிந்த மே தினத் தியாகிகளின் கனவை நனவாக்கும் விதத்தில் மே தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடிட தொழிலாளர் வர்க்கத்திற்குப் பொருத்தமான செயலாக அமைந்திடும்.
தமிழில்: ச.வீரமணி
Saturday, April 30, 2011
Wednesday, April 20, 2011
இடதுமுன்னணிக்கு பெருகும் ஆதரவு -பிரகாஷ் காரத்
தற்சமயம் நாட்டில் நடைபெறும் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களைப் பொறுத்த வரை, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடைபெறும் தேர்தல்கள் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறேன். அவற்றின் வெற்றி நாடு முழுதும் உள்ள இடதுசாரிகள் தேசிய அளவில் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகப் பாதையில் முன்னேறுவதற்கு உதவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
கொல்கத்தாவில், தேர்தலையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள cpimwb.org/vote இணையதளத்திற்கு பிரகாஷ் காரத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:
* தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்கள் குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?
கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் ஏற் கனவே முடிந்துவிட்டன. அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தி யில் கசப்புணர்வு வலுவாக இருப்பதை தெளி வாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது. அஸ்ஸாமில், காங்கிரஸ் கட்சியானது போடோ மக்கள் முன் னணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டி ருக்கிறது. கேரளாவில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. குறிப் பாக, கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான போக்கு (யவேi-inஉரஅநெnஉல வசநனே) எதுவும் இல்லை. எனவே மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே அமையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வாக் குப் பதிவு முடிந்தபின் உள்ள நிலைமைகள், அஇஅதிமுக தலைமையிலான முன்னணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்ஸாமில் சென்ற முறைகூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திடவில் லை. இந்தத் தடவையும்கூட அதேபோன்று எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் தேர்தல் முடிவுக்குப்பின் அமையும் கூட்டணியைச் சார்ந்தே ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன்.
* சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தட வை லஞ்சஊழலும் விலைவாசி உயர் வும் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறி யிருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் தாக்கம் கேரளாவில் எப்படி இருந்தது?
லஞ்சஊழலும் பணவீக்கமும் தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவற்றின் விளைவுகளை நன்றாகவே காண முடிந்தது. உண்மையில், இவ்விரண்டு பிரச்சனைகளும் மக்கள் மத்தி யில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் அனு கூலமான முறையில் நிலை கொண்டிருக் கிறது. லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை, காங் கிரசின் சித்திரம் (iஅயபந), அதிலும் குறிப் பாக மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக் கிருந்த மதிப்பு, பல்வேறு பெரும் லஞ்ச ஊழல் களினால் மிகவும் தாழ்ந்து போய் கிடக்கிறது.
* மேற்கு வங்கத்திலும் இப்பிரச்சனைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று கருதுகிறீர்களா?
விலைவாசி உயர்வும் லஞ்ச ஊழலும், மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கத்தை ஏற் படுத்திடும். ஏனெனில் நாடு முழுதும் மக்கள் ஊழலின் காரணமாக விளைந்துள்ள கேடு கெட்ட விளைவுகளை நன்கு உணர்ந்திருக் கிறார்கள். அதிலும் குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு சுதந்திரம் பெற்றபின் நடைபெற் றுள்ள ஊழல்களிலேயே பிரம்மாண்டமான ஊழலாகும். உதாரணமாக, தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஆண் - பெண் - குழந்தை கள் என அனைவரும் 2ஜி ஊழல் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். வங்கத்திலும் கூட, லஞ்ச ஊழல் சம்பந்தமாக நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் பதை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நிச் சயமாக நான் நம்புகிறேன். இங்குள்ள இடது முன்னணியும் லஞ்ச ஊழல் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் குறித்தும், அதில் ஓர் அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் வங்க மக்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருது கிறேன்.
* வங்கத்தில் ஆட்சியிலிருந்த ஏழாவது இடது முன்னணி அரசாங்கம் அதிக மாக ஒன்றும் சாதித்திடவில்லை என் றும், குறிப்பாக நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் அதன் ஆட்சிமீது களங்கத் தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குறைகூறப்படுகிறதே, அவ்வாறு குறைகூறுகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மேற்கு வங்க ஏழாவது இடது முன்னணி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சாதனைக ளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், இடது முன்னணி அரசாங்கமானது நிலமற்ற விவசா யிகளுக்கு 20 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களை மறுவிநியோகம் செய்திருக்கிறது. விவசாய வளர்ச்சியையும் தொடர்ந்து உறுதியாக மேற் கொண்டு வந்திருக்கிறது. அகில இந்திய மட் டத்தில் விவசாய வளர்ச்சி என்பது தேக்க நிலையை அடைந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் என்பது தேசிய சராசரியைவிட பன்மடங்கு அதிகமாகும்.
* மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான் மை இனத்தவரின் வளர்ச்சிக்கு இடது முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பங்கள் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கும் நிலத்தை விநி யோகம் செய்திருக்கின்றன. இவற்றில் முஸ் லிம் இனத்தவரும் அடங்குவர். வங்கத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங் களில் 18 விழுக்காடு முஸ்லிம் குடும்பங் களுக்குச் சென்றிருக்கிறது. முஸ்லிம் சிறு பான்மை இனத்தவருக்கு வேலைகளில் ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று ரங்க நாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந் துரைகளை அமல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் பெரிய அள வில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கி றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட் டில் உள்ள சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு களை எல்லாம் கணக்கில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கிறோம். முஸ்லிம் சிறு பான்மை இனத்தவரில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக் கீடு அளித்திருக்கிறோம். இதன் மூலம் மாநி லத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 1 கோடியே 72 லட்சம் மக்கள் பயன் அடைந் திருக்கிறார்கள். இவ்வாறு வேறெந்த அரசாங் கமும் - மத்திய அரசாங்கமும் சரி அல்லது வேறெந்த மாநில அரசாங்கமும் சரி - நடவடிக்கை எடுத்திட வில்லை.
* திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவர் வங்கத்தில் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்களில் சிலவும் மற்றும் அறிவு ஜீவிகளில் சிலரும் கருதுகிறார்களே, இதனை எவ்வாறு நீங்கள் விளக்கு கிறீர்கள்?
வங்கத்தில் இது தொடர்பாக ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கு முன்பும்கூட பலதடவை கள், அதிதீவிர இடதுசாரிகள் பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கைகோர்த் தது உண்டு. மேற்கு வங்கத்தில் இந்த நிலை மை வருவதற்குப் பிரதானமான காரணம், இங்கே இடதுசாரிகள் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதேயாகும். வலதுசாரி சக்தி கள், இடதுசாரிகளை முறியடிக்க சூழ்ச்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் இடது அதி தீவிரவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள் கிறார்கள். மீண்டும் அதேதான் இப்போதும் நடைபெற்றிருக்கிறது. திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்டுகளுடனும், மாவோ யிஸ்ட்டுகள் திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர் மத்தியில் பிரதிபலிக்கிறது.
* மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்த லில் நாட்டின் பிரதான தேசியக் கட்சி களான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் பங்களிப்பு என்ன வென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மிகவும் வலுவாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றாகக் குவிவதைப் பார்க்க முடியும். இதனை வெகு காலமாகவே கேரளாவில் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில், கேரளா வில், பாஜக-வினர் தங்கள் வாக்குகளை விற் கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றுவதில்லை, மாறாக உண்மையில் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயகக் முன்னணிக்கு விற் கிறார்கள். இங்கே, மேற்கு வங்கத்திலும் கூட, கிராமப்புறங்களில் விவசாயிகள் வர்க்க ரீதியாக அணிசேர்ந்திருப்பதன் காரணமாக பிற்போக்கு சக்திகளும் முன்னாள் நிலவுடை மையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார் கள். இவர்களில் சிலர் காங்கிரசில் இருக் கிறார்கள், சிலர் பாஜக-வில் இருக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் வருவதை விரும்ப வில்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத சக்திகள் இடதுசாரிகள் தலைமையில் அணிசேருவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இடது முன்னணியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கை கோர்ப்பது உசிதமானது என்பதே பாஜக-வினரின் அரசியலாகும். நரேந்திர மோடி இங்கே வந்திருந்தபோது அவர் மம்தா பானர்ஜியை வானளாவப் புகழ்ந் ததிலிருந்து இதனை நாம் பார்க்க முடிந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, இடது முன்னணிக்கு மாற்றாக பாஜக குறிப்பிடத் தக்க பங்கு எதனையும் ஆற்றப் போவதில் லை. எனவே அது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஆற்றிய உரைகளிலிருந்து பார்த்தோம்.
* கடந்த ஈராண்டுகளில் மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங் களின் பின்னணியில், இடது முன் னணி அமைதியைக் கொண்டுவர எவ் வாறு திட்டமிட்டிருக்கிறது?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சில இடங்களில் இடது முன்னணிக்குப் பின் னடைவு ஏற்பட்டதைக் கண்ட வலதுசாரி எதிர்க்கட்சிகள், இடதுசாரிகளைப் பின்னுக் குத் தள்ளிவிட வாய்ப்பு உண்டு என்று கருதி, வன்முறைகளில் ஈடுபட்டன. மிகவும் ஜன நாயக விரோதமாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட் டனர். இவ்வாறு நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வன் முறைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட வேண் டியவைகளாகும். இந்தத் தேர்தலின்போதும், இந்தக் கும்பல் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாம். இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், பின், மாநிலத்தில் அமைதியை மீள ஏற்படுத்துவ தும் இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை நடைபெற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை யை மீள ஏற்படுத்துவதும் எளிதாக இருந்திடும்.
* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் வாய்ப்பு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? 2009-இல் இருந்த நிலைமையைவிட மாற்றம் இருக்கிறதா?
2009-இல் இருந்த நிலைமையுடன் ஒப் பிடும்போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் 2009இல் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஆனால், இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் நிலைமைகள் மாறி இருக்கின்றன. நான் முன்பே கூறியதுபோல, மக்களை இன்றைய தினம் கடுமையாகப் பாதித்துள்ளவை விலைவாசி உயர்வு போன்ற பிரதான பிரச்சனைகளாகும். இவ்வாறான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரசும் - காங்கிரசும் நேரடியான காரணங்களாகும். இது ஓர் அம்சம். மற்றொன்று, 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் - ஸ்தாபன அம்சங்களி லும், அரசாங்கத்திலும் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு கடந்த ஈராண்டுகளில் அவை சரி செய்யப்பட்டிருக் கின்றன. எனவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது இருந்த நிலைமைகள் மாறும். இடது முன் னணி மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கை யைப் பெற்று வரவிருக்கும் தேர்தல் முடிவிலும் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.
* தேர்தலுக்குப்பின்னர் உள்ள நிலை மைகள் எப்படி இருக்கும்? தேசிய அளவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?
ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் தேர் தல்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டோமானால், இவற்றில் மேற்கு வங்கமும் கேரளமும் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமானவை களாகும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் வெற்றி என்பது தேசிய அளவில் இடது ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல் வதற்கான போராட்டப் பாதையில் இடதுசாரி களுக்கு உதவிடும். இவ்வாறு மேற்கு வங்கம் மற்றும் கேரள தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உத் வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந் திடும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் ஐமுகூட்டணி அரசாங்கம் இப்போது பிரதிநிதித்துவப்படுத் தும் நவீன தாராளமய - ஊழல் இடையே யான தொடர்பு மீது நேரடியான சம்மட்டி அடி யாக அது அமைந்திடும். ஊழல் தொடர்பு, தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமை யிலான மாநில அரசாங்கத்தில் நேரடியாகவே பிரதிபலித்தது. எனவே, தமிழ்நாட்டு முடிவும் தேசிய அளவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழில்: ச.வீரமணி
கொல்கத்தாவில், தேர்தலையொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள cpimwb.org/vote இணையதளத்திற்கு பிரகாஷ் காரத் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:
* தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள தேர்தல்கள் குறித்து தங்கள் மதிப்பீடு என்ன?
கேரளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் ஏற் கனவே முடிந்துவிட்டன. அனைத்து மாநி லங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட் டணிக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தி யில் கசப்புணர்வு வலுவாக இருப்பதை தெளி வாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட் டைப் பொறுத்தவரை அது திமுக-காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறது. அஸ்ஸாமில், காங்கிரஸ் கட்சியானது போடோ மக்கள் முன் னணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டி ருக்கிறது. கேரளாவில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. குறிப் பாக, கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியிலிருந்த இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான போக்கு (யவேi-inஉரஅநெnஉல வசநனே) எதுவும் இல்லை. எனவே மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமே அமையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வாக் குப் பதிவு முடிந்தபின் உள்ள நிலைமைகள், அஇஅதிமுக தலைமையிலான முன்னணி வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஸ்ஸாமில் சென்ற முறைகூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திடவில் லை. இந்தத் தடவையும்கூட அதேபோன்று எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என்றும் தேர்தல் முடிவுக்குப்பின் அமையும் கூட்டணியைச் சார்ந்தே ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன்.
* சட்டமன்றத் தேர்தல்களில் இந்தத் தட வை லஞ்சஊழலும் விலைவாசி உயர் வும் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறி யிருப்பதுபோல் தோன்றுகிறது. இதன் தாக்கம் கேரளாவில் எப்படி இருந்தது?
லஞ்சஊழலும் பணவீக்கமும் தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவற்றின் விளைவுகளை நன்றாகவே காண முடிந்தது. உண்மையில், இவ்விரண்டு பிரச்சனைகளும் மக்கள் மத்தி யில் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில்தான் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் அனு கூலமான முறையில் நிலை கொண்டிருக் கிறது. லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை, காங் கிரசின் சித்திரம் (iஅயபந), அதிலும் குறிப் பாக மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்களுக் கிருந்த மதிப்பு, பல்வேறு பெரும் லஞ்ச ஊழல் களினால் மிகவும் தாழ்ந்து போய் கிடக்கிறது.
* மேற்கு வங்கத்திலும் இப்பிரச்சனைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று கருதுகிறீர்களா?
விலைவாசி உயர்வும் லஞ்ச ஊழலும், மேற்கு வங்கத்திலும் அதன் தாக்கத்தை ஏற் படுத்திடும். ஏனெனில் நாடு முழுதும் மக்கள் ஊழலின் காரணமாக விளைந்துள்ள கேடு கெட்ட விளைவுகளை நன்கு உணர்ந்திருக் கிறார்கள். அதிலும் குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு சுதந்திரம் பெற்றபின் நடைபெற் றுள்ள ஊழல்களிலேயே பிரம்மாண்டமான ஊழலாகும். உதாரணமாக, தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஆண் - பெண் - குழந்தை கள் என அனைவரும் 2ஜி ஊழல் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். வங்கத்திலும் கூட, லஞ்ச ஊழல் சம்பந்தமாக நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் பதை அறிந்து வைத்திருப்பார்கள் என்று நிச் சயமாக நான் நம்புகிறேன். இங்குள்ள இடது முன்னணியும் லஞ்ச ஊழல் பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலை மையிலான அரசாங்கம் குறித்தும், அதில் ஓர் அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் வங்க மக்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருது கிறேன்.
* வங்கத்தில் ஆட்சியிலிருந்த ஏழாவது இடது முன்னணி அரசாங்கம் அதிக மாக ஒன்றும் சாதித்திடவில்லை என் றும், குறிப்பாக நந்திகிராமம் போன்ற நிகழ்வுகள் அதன் ஆட்சிமீது களங்கத் தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் குறைகூறப்படுகிறதே, அவ்வாறு குறைகூறுகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மேற்கு வங்க ஏழாவது இடது முன்னணி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சாதனைக ளை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், இடது முன்னணி அரசாங்கமானது நிலமற்ற விவசா யிகளுக்கு 20 ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களை மறுவிநியோகம் செய்திருக்கிறது. விவசாய வளர்ச்சியையும் தொடர்ந்து உறுதியாக மேற் கொண்டு வந்திருக்கிறது. அகில இந்திய மட் டத்தில் விவசாய வளர்ச்சி என்பது தேக்க நிலையை அடைந்திருக்கக்கூடிய அதே சம யத்தில், மேற்கு வங்கத்தில் மட்டும் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி விகிதம் என்பது தேசிய சராசரியைவிட பன்மடங்கு அதிகமாகும்.
* மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான் மை இனத்தவரின் வளர்ச்சிக்கு இடது முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச் சீர்திருத்தங்கள் மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பங்கள் மற்றும் நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கும் நிலத்தை விநி யோகம் செய்திருக்கின்றன. இவற்றில் முஸ் லிம் இனத்தவரும் அடங்குவர். வங்கத்தில் இதுவரை விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங் களில் 18 விழுக்காடு முஸ்லிம் குடும்பங் களுக்குச் சென்றிருக்கிறது. முஸ்லிம் சிறு பான்மை இனத்தவருக்கு வேலைகளில் ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று ரங்க நாத் மிஸ்ரா ஆணையம் அளித்திட்ட பரிந் துரைகளை அமல்படுத்துவதில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் பெரிய அள வில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கி றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட் டில் உள்ள சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு களை எல்லாம் கணக்கில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கிறோம். முஸ்லிம் சிறு பான்மை இனத்தவரில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக் கீடு அளித்திருக்கிறோம். இதன் மூலம் மாநி லத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் 1 கோடியே 72 லட்சம் மக்கள் பயன் அடைந் திருக்கிறார்கள். இவ்வாறு வேறெந்த அரசாங் கமும் - மத்திய அரசாங்கமும் சரி அல்லது வேறெந்த மாநில அரசாங்கமும் சரி - நடவடிக்கை எடுத்திட வில்லை.
* திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவர் வங்கத்தில் மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஊடகங்களில் சிலவும் மற்றும் அறிவு ஜீவிகளில் சிலரும் கருதுகிறார்களே, இதனை எவ்வாறு நீங்கள் விளக்கு கிறீர்கள்?
வங்கத்தில் இது தொடர்பாக ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கு முன்பும்கூட பலதடவை கள், அதிதீவிர இடதுசாரிகள் பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கைகோர்த் தது உண்டு. மேற்கு வங்கத்தில் இந்த நிலை மை வருவதற்குப் பிரதானமான காரணம், இங்கே இடதுசாரிகள் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதேயாகும். வலதுசாரி சக்தி கள், இடதுசாரிகளை முறியடிக்க சூழ்ச்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் இடது அதி தீவிரவாதிகளுடனும் கைகோர்த்துக் கொள் கிறார்கள். மீண்டும் அதேதான் இப்போதும் நடைபெற்றிருக்கிறது. திரிணாமுல் காங் கிரஸ், மாவோயிஸ்டுகளுடனும், மாவோ யிஸ்ட்டுகள் திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினர் மத்தியில் பிரதிபலிக்கிறது.
* மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்த லில் நாட்டின் பிரதான தேசியக் கட்சி களான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் பங்களிப்பு என்ன வென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் மிகவும் வலுவாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திக ளும் ஒன்றாகக் குவிவதைப் பார்க்க முடியும். இதனை வெகு காலமாகவே கேரளாவில் நாம் பார்த்து வருகிறோம். உண்மையில், கேரளா வில், பாஜக-வினர் தங்கள் வாக்குகளை விற் கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு மாற்றுவதில்லை, மாறாக உண்மையில் தங்கள் வாக்குகளை காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயகக் முன்னணிக்கு விற் கிறார்கள். இங்கே, மேற்கு வங்கத்திலும் கூட, கிராமப்புறங்களில் விவசாயிகள் வர்க்க ரீதியாக அணிசேர்ந்திருப்பதன் காரணமாக பிற்போக்கு சக்திகளும் முன்னாள் நிலவுடை மையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார் கள். இவர்களில் சிலர் காங்கிரசில் இருக் கிறார்கள், சிலர் பாஜக-வில் இருக்கிறார்கள். தேசிய அளவில் உள்ள பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் வருவதை விரும்ப வில்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல் லாத சக்திகள் இடதுசாரிகள் தலைமையில் அணிசேருவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே இடது முன்னணியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கை கோர்ப்பது உசிதமானது என்பதே பாஜக-வினரின் அரசியலாகும். நரேந்திர மோடி இங்கே வந்திருந்தபோது அவர் மம்தா பானர்ஜியை வானளாவப் புகழ்ந் ததிலிருந்து இதனை நாம் பார்க்க முடிந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, இடது முன்னணிக்கு மாற்றாக பாஜக குறிப்பிடத் தக்க பங்கு எதனையும் ஆற்றப் போவதில் லை. எனவே அது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணிக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஆற்றிய உரைகளிலிருந்து பார்த்தோம்.
* கடந்த ஈராண்டுகளில் மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங் களின் பின்னணியில், இடது முன் னணி அமைதியைக் கொண்டுவர எவ் வாறு திட்டமிட்டிருக்கிறது?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சில இடங்களில் இடது முன்னணிக்குப் பின் னடைவு ஏற்பட்டதைக் கண்ட வலதுசாரி எதிர்க்கட்சிகள், இடதுசாரிகளைப் பின்னுக் குத் தள்ளிவிட வாய்ப்பு உண்டு என்று கருதி, வன்முறைகளில் ஈடுபட்டன. மிகவும் ஜன நாயக விரோதமாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் வன்முறைச் செயல்களில் ஈடுபட் டனர். இவ்வாறு நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் மார்க்சிஸ்ட்டுகளைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வன் முறைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட வேண் டியவைகளாகும். இந்தத் தேர்தலின்போதும், இந்தக் கும்பல் இடது முன்னணிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கலாம். இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால், பின், மாநிலத்தில் அமைதியை மீள ஏற்படுத்துவ தும் இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை நடைபெற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை யை மீள ஏற்படுத்துவதும் எளிதாக இருந்திடும்.
* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணியின் வாய்ப்பு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்? 2009-இல் இருந்த நிலைமையைவிட மாற்றம் இருக்கிறதா?
2009-இல் இருந்த நிலைமையுடன் ஒப் பிடும்போது நிச்சயமாக மாற்றம் இருக்கிறது. மாநிலத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் 2009இல் நடைபெற்ற நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஆனால், இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல் நிலைமைகள் மாறி இருக்கின்றன. நான் முன்பே கூறியதுபோல, மக்களை இன்றைய தினம் கடுமையாகப் பாதித்துள்ளவை விலைவாசி உயர்வு போன்ற பிரதான பிரச்சனைகளாகும். இவ்வாறான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரசும் - காங்கிரசும் நேரடியான காரணங்களாகும். இது ஓர் அம்சம். மற்றொன்று, 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் - ஸ்தாபன அம்சங்களி லும், அரசாங்கத்திலும் இருந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு கடந்த ஈராண்டுகளில் அவை சரி செய்யப்பட்டிருக் கின்றன. எனவே, 2009 மக்களவைத் தேர்தலின்போது இருந்த நிலைமைகள் மாறும். இடது முன் னணி மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக் கை யைப் பெற்று வரவிருக்கும் தேர்தல் முடிவிலும் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்.
* தேர்தலுக்குப்பின்னர் உள்ள நிலை மைகள் எப்படி இருக்கும்? தேசிய அளவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்?
ஐந்து மாநிலங்களிலும் நடைபெறும் தேர் தல்களைக் கணக்கில் எடுத்துக் கொண் டோமானால், இவற்றில் மேற்கு வங்கமும் கேரளமும் நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமானவை களாகும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் வெற்றி என்பது தேசிய அளவில் இடது ஜனநாயக மாற்றை முன்னெடுத்துச் செல் வதற்கான போராட்டப் பாதையில் இடதுசாரி களுக்கு உதவிடும். இவ்வாறு மேற்கு வங்கம் மற்றும் கேரள தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரிகளுக்கும் உத் வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந் திடும் என்று கருதுகிறேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஏனெனில் ஐமுகூட்டணி அரசாங்கம் இப்போது பிரதிநிதித்துவப்படுத் தும் நவீன தாராளமய - ஊழல் இடையே யான தொடர்பு மீது நேரடியான சம்மட்டி அடி யாக அது அமைந்திடும். ஊழல் தொடர்பு, தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமை யிலான மாநில அரசாங்கத்தில் நேரடியாகவே பிரதிபலித்தது. எனவே, தமிழ்நாட்டு முடிவும் தேசிய அளவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழில்: ச.வீரமணி
Sunday, April 17, 2011
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைக் கேலி செய்வதை அனுமதிக்க முடியாது

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மற்றும் லோக்பால் சட்ட முன்வடிவு ஆகியவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு இருந்து வந்த முட்டுக்கட்டை கடைசியாக நீங்கி விட்டதுபோல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் வரைவுச் சட்ட முன்வடிவை ஏற்படுத்துவதற்காக, கூட்டுக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தபோதிலும், சமீப காலங்களில் மாபெரும் மெகா ஊழல்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இவை ஏற்படுத்தியுள்ளன.
லோக்பால் சட்டத்திற்கான கருத்தாக்கம் 1969இல் மறைந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவால் பரிந்துரைக்கப் பட்டது. மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா நிறுவனங்களுடன் இது இணைக்கப்படுவதாக இருந்தது. ஆயினும், பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் வந்த நிலையில் இச்சட்டமுன்வடிவானது மிக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
1996இல் தேவகவுடா தலைமையில் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் அதனை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்தன. இதற்கான ஒரு சட்டமுன்வடிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் அது பல அம்சங்களில் முழுமையாக அமையாமல் இருந்தது. மிகவும் ஆட்சேபத்திற்குரிய அம்சம், இதன் அதிகார வரம்பெல்லைக்குள் பிரதமரின் அலுவலகத் தையும் சேர்க்காமல் இருந்ததாகும். பிரதமரின் அலுவலகத்தையும் சேர்த்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆயினும், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களின் ஸ்திரமற்ற தன்மைகளின் காரணமாக, இந்தச் சட்டமுன்வடிவானது வெளிச்சத்திற்கு வரவேயில்லை. பின்னால் ஆறாண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் இதன்மீது நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டமுன்வடிவைக் கொண்டு வராமல் நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைத்தது.
மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, ‘‘லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதிமொழி, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கத்திற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், ஒரு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகளுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டது. ஆயினும் இதுவும் கூட திருப்திகரமாக அமைந்திடவில்லை. ஒரு பொருள்பொதிந்த சட்டமாக இதனை மாற்றக்கூடிய விதத்தில் பல முக்கியமான ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதே சமயத்தில், பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு ஜன் லோக்பால் சட்டமுன்வடிவு என்கிற ஒரு வரைவினை உருவாக்கினார்கள். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு இவ்வரைவுதான் அடிப்படையாக அமைந்திருந்தது. இப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வரைவுக் குழுவானது இவ்விரு சட்டமுன்வடிவுகளின் வரைவுகளையும் நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், குறைந்தபட்சம் சமீப காலத்தில் முன்வந்துள்ள இரு முக்கிய அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்திட வேண்டியதும் அவசியமாகும்.
நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடமான நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஏன் நுழையவில்லை என்று அண்ணா ஹசாரேயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர், மக்களை மிகவும் கேலி செய்யும் விதத்தில் மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்திருக்கிறார். அதாவது, தான் ‘‘எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்றும், தான் ‘‘போட்டியிட்டால், ஜாமீன்தொகையை இழந்துவிடுவேன்’’ என்றும், ஏனெனில், ‘‘சாதாரண வாக்காளர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள்’’ என்றும், ‘‘அவர்கள், வேட்பாளர்கள் அளித்திடும் நூறு ரூபாயையோ அல்லது ஒரு பாட்டில் மதுவையோ அல்லது ஒரு புடiவையோ பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குரிமையை அவர்களுக்கு அளித்துவிடுவார்கள்’’ என்றும் கூறி சாமானிய மக்களை அவமதித்திருக்கிறார். வாக்காளர்கள் மீதான இத்தகைய ஏளனமான வசவுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை அவர் அவமதித்திருப்பதானது உண்மையில் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும்.
நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புக்கு ஆபத்து ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், இதே வாக்காளர்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடித்து, நவீன இந்தியாவின் மாண்பினைக் கண்ணின் கருவிழியைக் காப்பதுபோல் காத்து நின்றிருக்கிறார்கள். இந்திராகாந்தியின் அவசரகால ஆட்சியைத் தோற்கடித்து, நாட்டில் ஜனநாயகத்தை வீறார்வத்துடன் மீண்டும் நிறுவியது இதே வாக்காளர்கள்தான். மக்கள் மத்தியில் உள்ள இத்தகைய ஜனநாயக உணர்வானது
இந்தியாவின் எதார்த்த நிலைமைகளுடன் பின்னிப்பிணைந்ததாக இப்போது மாறியிருக்கிறது. இவ்வாறான ஜனநாயக அமைப்புமுறைதான் நாட்டில் சமூக ஆர்வலர்கள் செயல்படுவதற்கும், இவ்வாறு உண்ணாவிரதங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
நமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயத்தில், 2004இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் அவர்களால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட ‘‘ஒளிரும் இந்தியா’’ என்கிற கருத்தாக்கத்தை இதே வாக்காளர்கள் தரைமட்டமாக்கி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள். இத்தகைய வாக்காளர்கள் இன்றி, இன்றைய இந்தியா நிச்சயமாகக் கிடையாது. இவர்கள்தான் நாட்டில் மகத்தான போராட்டங்களும் உண்ணா விரதங்களும் நடைபெறுவதற்கு உந்துசக்தியாக இருந்து வருகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட நெடிய விவாதங்களின்போது, நவீன இந்தியாவின் மூலவர்கள் இந்தியாவானது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் மூலம் ஆளப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்மூலம் அவர்கள் ‘‘ஒரு நபர் - ஒருவாக்கு, ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’’ என்னும் விதியை உருவாக்கினார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தின் மையக்கருவாகவே அமைந்திருக்கிறது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, ‘‘இந்திய மக்களாகிய, நாம்,...’’ என்று தொடங்கி, ‘‘இதன்மூலம் நாமே இயற்றி, சட்டமாக்கி, நமக்கு நாமே அளித்துக்கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம்’’ என்று மிகவும் செம்மாந்து வரையறுத்துள்ளது. இதன்மூலம் பிரகடனப் படுத்தப்படும் முக்கியமான செய்தி என்ன வெனில், நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்திற்கும் மேலானவர்கள், முதன்மையானவர்கள் மக்கள்தான் என்பதேயாகும். இத்தகைய மக்களை ஏளனமாகக் குறிப்பதும், அவமதிப்பதும் நம் அரசியலமைப்புச் சட்டத்தையே கீழறுக்கும் அபாயங்களுக்கு இட்டுச்செல்லும். இதனை அனுமதித்திட முடியாது.
அண்ணா ஹசாரே இவ்வாறு மக்களை மட்டமாகக் கருதி கருத்துக்கூறியுள்ள அதே சமயத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சரோ லோக்பால் சட்டமுன்வடிவிற்கு எதிராக அதற்கிணையாக ஏளனமான கருத்து ஒன்றினை உதிர்த்திருக்கிறார். ‘‘ஓர் ஏழைக் குழந்தை கல்விக்காக எவ்விதமான வசதியும் இல்லாதிருந்தால், பின் அதற்கு லோக்பால் சட்டமுன்வடிவு எவ்விதத்தில் உதவிடும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டுள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்டிருந்தால், நம் நாட்டில் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கக்கூடிய விதத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க முடியும். உண்மையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் இதுதான். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் மத்திய மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தங்களிடம் போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லையென்று கூறிவருவதால் இது எவ்வித அசைவுமின்றி நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே வெறும் தாளாகவே இன்னமும் இருந்து வருகிறது.
கல்விக்கான திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய நிலையம், நம் நாட்டில் தேவையான பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கும், மதிய உணவு, பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்குவதற்கும் ஓராண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விதத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செலவிட வேண்டி யிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுத்தி நிறுத்தியிருந்தோமானால், நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்க முடியும். நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை சிறந்த முறையில் ஏற்படுத்த முடியாத வண்ணம் நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அவர்களின் வாழ்க்கையையே கொள்ளை கொண்டு விட்டன.
இதேபோன்றுதான், தேசிய ஆலோசனைக் கவுன்சில், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் - வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துக் குடும்பத்தினருக்கும் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தான்யங்களை கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய் வீதம் அளித்திட வேண்டுமானால் அரசுக்குக் ஓராண்டிற்குக் கூடுதலாக 88 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறது. (காங்கிரஸ் கட்சியானது சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, உணவு தான்யங்களை கிலோ ஒரு ரூபாய் என்ற வீதத்தில் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது வேறு விஷயம்.) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தடுத்து நிறுத்தப் பட்டிருக்குமாயின், அரசுக்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படாமல் சரிசெய்யப்பட்டிருக்குமாயின், பின்னர் அடுத்த ஈராண்டுகளுக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி இருக்க முடியும். இவ்வாறு ஊழல்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட்டிருந்தால் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கியிருக்க முடியும்.
ஆயினும், லோக்பால் சட்டமுன்வடிவிற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு தன் வரைவை நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டங்களை உருவாக்கும் இடம் நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். லஞ்ச ஊழல்களை அனைத்து முனைகளிலும் தடுக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான சட்டத்தை நிறைவேற்றிட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபூண்டிருக்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
Subscribe to:
Posts (Atom)