Wednesday, November 30, 2016

செல்லாத 100 ரூபாய்களை அனுப்பிவைக்கும் ரிசர்வ் வங்கி! அதிகாரிகள் கூட்டமைப்பு அம்பலப்படுத்துகிறது


ரிசர்வ் வங்கியின் தவறுகளே பண முடக்கம் பிரச்சனைக்கு காரணம் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ் புதனன்று (நவ. 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 8ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது நாட்டின் பெரும்பாலான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பெருமுதலாளிகளும், பெரிய நிறுவனங்களும் பாதித்ததாகத் தெரியவில்லை. 2 நாட்களில் ஏடிஎம் மையங்கள் செயல்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் இன்னும் பல ஏடிஎம் மையங்களில் 2,000 ரூபாய் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4,500 ரூபாயாக இருந்ததை 2,000 ரூபாய் வரை தான் எடுக்க முடியும் என்று மாற்றியது சாதாரண மக்களை பாதித்துள்ளது.அரசும், ரிசர்வ் வங்கியும் போதுமான ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாக தவறான செய்திகளை தெரிவிக்கின்றன. ஆனால் போதுமான 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. புதிய 500 ரூபாய் நோட்டு போதுமான அளவு வரவில்லை. வரலாற் றில் முதன்முறையாக அழுக்கடைந்த செல்லாத 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் 20, 50 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன.
மை வழங்காமலே மை வைக்கச் சொன்னது வங்கிகளில் பிரச்சனையை ஏற்படுத்தியது. கூட்டம் அலை மோதியதால் மை வைக்காமலே பணம் கொடுக்க நேர்ந்தது. இதில் சாதாரண மக்களே பாதிக் கப்பட்டனர்.திருமண செலவுக்கு 2.5 லட்சம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடனே பொதுமக்கள் திருமண பத்திரிகைகளு டன் வங்கிக்கு வந்து விட்டனர். 3 நாட்களுக்கு பிறகு வந்த சுற்றறிக்கையைப் பார்த்தால் யாருக்கும் பணம் கொடுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களிடம் சண்டை போடுகின்றனர்.
தற்போது 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கலாம் என்று விதிகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கி புதிய 500, 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டியவர்களுக்கே பொருந்தும் என்று கூறுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏதோ வங்கிகள்தான் தர மறுப்பதாக தவறாக நினைக்கிறார்கள். நிதித் துறை சம்மந்தமான அறிவிப்புகளை நிதிச் செயலாளர்கள் வெளியிடாமல் பொருளாதாரத்துறை செயலர் வெளியிடுவதால்அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியின் தவறுகளே பிரச்சனைக்கு காரணம்
20 நாட்களுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர், முனைவர் உர்ஜித் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் போதுமான அளவு பணம் உள்ளது என்றும் அதை வங்கிகள் எடுத்து பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது உண்மையல்ல. சென்னை ரிசர்வ் வங்கியே போதுமான பணம் இல்லை என பலமுறை தெரிவித்துள் ளது. பொறுப்புள்ள ஆளுநர் இப்படி மக்களை திசை திருப்பி வங்கிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது. பல இடங்களில் வாய்த் தகராறு, கை கலப்பு, தாக்குதல்கள் நடக் கின்றன. ரகசியமாக வைக்க வேண் டும் என்பதால் போதுமான புதிய ரூபாய் நோட்டுக்கள் நவ. 8க்கு முன் அச்சடிக்க முடியவில்லை எனக் கூறுகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுக் களை வங்கிக்கு அனுப்ப முடியும் போது, ஏன் 500 ரூபாய் நோட்டுக் களை அனுப்ப முடியாது? ரகசியம் தேவையில்லை. ஏற்கனவே மாதம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் கணக்கில் வரவு வந்தால் அந்த அறிக்கை அனுப்பப்ப டுகிறது. அதேபோல் 2 லட்ச ரூபாய்க்கு மேல் யார் செலுத்தி னார்கள் என்ற அறிக்கையை கேட்டு பெறமுடியும்.1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது, பொதுத் துறை வங்கிகளில் ஒரு அதிகாரிகள் பிரதிநிதியும், ஊழியர் பிரதிநிதியும் இருக்க வேண்டும் எனக் கூறப் பட்டது. ஆனால் கடந்த 2 வருடமாக அரசு இந்த இடங்களை காலியாக வைத்துள்ளது.
நிர்வாகத்தில் என்ன தவறு நடக்கிறது, யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என வெளியே தெரியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வாங்கி வைத்து விட்டு,ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பது வங்கிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமான வங்கிக் கணக்குகளை பொதுத்துறை வங்கிகளே பராமரிக்கின்றன. ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கிகளே அதிகமான கிளைகளை கொண்டுள்ளன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற தனியார் வங்கிகளுக்கே அதிகமான பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது. இது வாடிக்கையாளர் களை தனியார் வங்கிகளை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சி.
அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள் ளது. அதற்கு உறுதுணையாகவே இந்த முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.அக்டோபர் 1 முதல் எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதை மாநில வாரியாக வெளியிட வேண்டும், அடுத்த 3 மாத திட்டம் குறித்து அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பணம் வழங்க வங்கிக் கிளைகளுக்கு போதுமான பணத்தை அனுப்பி வைக்க வேண் டும், நவ. 8ம் தேதிக்கு பிறகு இறந்த வங்கி ஊழியர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக் குழு 9 மாதங்களுக்கு முன் சமர் பித்த வாராக் கடன் குறித்த பரிந்துரையை அமலாக்க வேண்டும், கடந்த ஓராண்டில் அம்பானி, அதானி போன்ற பெரிய குழுமங் கள் நடத்தியுள்ள பண பரிமாற்றம் குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்க ளுக்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். தற்போது வங்கிகளில் 3 ஆயிரம் கோடி மட்டுமே உள்ளது என்றார். ஏடிஎம் மையங்கள் எப்போது முழுமையாக செயல்படும் என்ற கேள்விக்கு, இன்னும் ஒரு மாத காலமாகும் என்றார்.இந்தச் சந்திப்பில், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.சேகரன், கனராவங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மஞ்ரேக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments: