Tuesday, May 14, 2013

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பு



நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக் கீடு செய்தது தொடர்பான மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணையில் அரசாங் கம் தலையிட்டிருப்பதற்கு உச்சநீதி மன்றம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப் படுத்தி இருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறையின் முழுமையான, தரமான புல னாய்வு குறித்தும் மற்றும் அதன் நம்பகத்தன் மையையும் உச்சநீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அரசாங்கத்திடம் சிபிஐ பாரபட்சமற்றதாகவும், அது ‘‘வெளிநிர்ப்பந் தங்களுக்கு உட்பட்டு செயல்படாத விதத் தில் சுதந்திரமாகச் செயலாற்ற’’ அனுமதிக்கு மாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள் ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தன்னுடைய அதிருப்தியைத் தெரிவிக்கையில், ‘‘அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி சிபிஐயின் இதயம் போன்ற அறிக்கையே மாற்றப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளது.
சிபிஐ செயல்பாடுகள் குறித்துக் கடுமை யான முறையில் பதிவுசெய்துள்ள உச்சநீதி மன்றம், ‘‘பல எஜமானர்களும் ஒரு கிளியும் என்ற பஞ்ச தந்திரக்கதையை’’க் குறிப்பிட்டு அதில் வருவதுபோல சிபிஐ ‘‘எஜமானர் களின் குரலைப் பேசும் கூண்டுக்கிளியாக மாறி இருக்கிறது’’ என்று கடும் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் தொடர்ந்து பதவி யில் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது (தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்) என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்ற அமர்வாயம், அமைச்சர் சிபிஐயிடமிருந்து அறிக்கை கோரலாம் ஆனால் நீதிமன்றத்துடன் தலை யிட முடியாது என்று கூறியுள்ளது. சட்ட அமைச்சரைப் பாதுகாக்கும் ஒரு முயற்சி யில், அரசு வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் (முதலில் இவர் சிபிஐ அறிக்கையில் அரசாங்கம் தலையிட வில்லை என்று நீதிமன்றத்தில் கூறியிருந் தார்), ‘‘நான் சிபிஐ அதிகாரிகளுடன் நடத்திய கூட்டமானது சட்ட அமைச்சரின் ஆலோ சனையின்கீழ்தான் நடந்தது’’ என்று கூறி யுள்ளார். உச்சநீதிமன்றத்திடமிருந்து இத்தகைய விமர்சனங்களை எதிர்பார்த்துத்தானோ என்னவோ, அரசாங்கம் நடந்து கொண் டிருந்த பட்ஜெட் கூட்டத்தொடரையே முழு மையாக நடத்திடாமல் முன்கூட்டியே அவ சர அவசரமாக, காலவரையறையின்றி ஒத்தி வைத்து விட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி முழுமையாகப் பயனேது மின்றி முடிக்கப்பட்டுவிட்டது. பதினோரு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் மக் களவை ஒருநாள்கூட செயல்பட முடிய வில்லை. மாநிலங்களவையில் ஏப்ரல் 22 அன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், தில்லியில் சிறுகுழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம் குறித்தும் விவாதத்தைத் தொடங்கியது. ஆனால் அதுவும்கூட முழுமையாக நடை பெறமுடியவில்லை. பதினோரு நாட்களில் பத்து நாட்களை அது இழந்துவிட்டது.ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இத்த கைய நடவடிக்கைகளின் காரணமாக ஒன் றன்பின் ஒன்றாக ஒவ்வொருவர் தலையும் மிகவும் பரிதாபகரமான முறையில் உருளத் தொடங்கியுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கையில், கேரள சூர்யாநெல்லி பாலியல் வழக்கில் மாநிலங்களவைத் துணைத் தலைவரது பங்களிப்பு குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வந்தபோது ஐ.மு. கூட்டணி-2, அரசாங்கமானது மிகவும் வெட் கங்கெட்ட முறையில் அவரைப் பாதுகாக்க முன்வந்தது. (உண்மையில் அவர் அரசாங் கத்தின் ஓர் அங்கம் கிடையாது.) 2ஜி ஸ்பெக் ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நடைபெற்ற கூட்டு நாடாளுமன் றக் குழுத்தலைவர் தன் அறிக்கை மூலமாக அரசாங்கத்தின் ஊழல்களை முழுமையாக மூடிமறைக்க முன்வந்ததன் மூலம் அரசாங் கத்தின் இத்தகு நாணய மற்ற செயல்பாடுகள் தொடர்ந்தன. நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அவரது அறிக்கை சுற்றுக்கு விடப்படுவதற்கு முன்பேயே ஊட கங்களுக்கு அது கசிய விடப்பட்டுள்ளது. கடைசியில், மக்களவைத் தலைவர் அறிக் கையை முறையாகத் தாக்கல் செய்வதற்காக, கூட்டு நாடாளுமன்றக் குழு வின் காலத்தை மழைக்காலக் கூட்டத் தொடர்முடியும் வரைக்கும் நீட்டித்துள்ளார்.ஊழல்கள் வெளியாகும் அனைத்துப் பிரச்சனைகளிலுமே, அது நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அல்லது ரயில்வேயில் உயர்மட்ட அதிகாரி களின் நியமனமாகஇருந்தாலும் சரி, அவற் றில் சம்பந்தப்பட்ட சட்ட அமைச்சரும் ரயில்வே அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நியாயமான கோரிக்கை எழுந்த போது அரசாங்கம் அவற்றை ஏற்க மறுத்தது. (தற்போது இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.) புலனாய்வு நடைபெறுவதால் இக்கோரிக்கையை ஏற்கமுடியாது என்று அரசுத்தரப்பில் காரணங்கள் கூறப்பட்டன.
அமைச்சகத்தில் ரயில்வே அமைச்சர் தொடர்ந்து நீடிப்பாரானால் முறையான புல னாய்வு எப்படி நடைபெற முடியும்? எந்த வொரு புலனாய்வுமே நடுநிலையுடன் நடை பெறுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் நடைபெற வேண் டும். இத்தகைய மக்களின் நம்பிக்கையைப் பற்றி காங்கிரஸ் கட்சி கொஞ்சம்கூட கவ லைப்படவில்லை. ரயில்வே அமைச்சரின் அக்கா மகன் ரயில்வேயின் உயர் அதிகாரிகளை நியமிப் பதில் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று செய் திகள் வெளியான சமயத்தில், ரயில்வே அதி காரிகள் சங்கங்களின் சம்மேளனம் மத்திய அமைச்சரவை செயலாளருக்கும், பிரதமரின் முதன்மை செயலாளருக்கும் இந்திய ரயில் வேயில் உயர் அதிகாரிகள் நியமனங் களில் நடைபெற்றுள்ள தில்லுமுல்லுகள் குறித்து மிகவும் விவரமாக கடிதங்கள் எழுதி, இந்திய ரயில்வேயின் பழைய புகழை மீளவும் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் காரண மாக சில ராஜினாமாக்கள் நடைபெறலாம். ஆயினும், அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வகுத்துத்தந்துள்ள விதத்தில் நாட்டின் அனைத்து அமைப்புகளும் - அதாவது அர சாங்கம் - நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் - நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளுமே சரிவிகித அதிகாரங்களுடன் செயல்படுவ தாகக் கூறிட முடியாது. அவை ஆட்சியாளர் களின் நடவடிக்கைகள் காரணமாக சிதைக் கப்பட்டிருக்கின்றன. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்சபட்ச இறையாண்மை என்பது மக்களிடமே இருக்கிறது. ‘‘மக்க ளாகிய நாம்’’தான் இவ்வாறு இறையாண் மையை பிரயோகிக்கிறோம். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அரசாங்கங்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக் குப் பதில்சொல்லக் கடமைப்பட்டிருக் கின்றன. இத்தகைய சங்கிலித்தொடர் போன்ற ஒருவர் மற்றவர்க்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு அரசாங் கத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக மிகவும் மோசமானமுறையில் சிதைக்கப் பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் நட வடிக்கைகள் முடமாக்கப்படும்போது, நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண் டிய ஆட்சியாளர்கள் அவ்வாறு பதில் சொல் லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். தொடர்ச்சி யாக இவ்வாறு நாடாளுமன்றம் நடைபெறாத தன் காரணமாக, நாடாளுமன்றம் மக்களுக் குப் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பி லிருந்து சிதைக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தத் தின் இது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே அரித்து வீழ்த்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை அமல் படுத்த வேண்டிய அமைப்புகளே அதனை நிலைகுலையச்செய்யக்கூடிய விதத்தில் ஏன் செயல்படுகின்றன? நாடாளுமன்றத் தில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இத்தகைய அடிப்படைக் கேள்வியை எழுப்பியிருக்கிறது. நாடாளுமன்றம் தன் பணிகளைச் செய்யாது ஒதுங்கிக்கொள்ளும் பட்சத்தில், ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப் புகளை முறையாக நிறைவேற்றாதுஅவற்றை மீறும் பட்சத்தில், பின்னர் நீதித் துறையைமட்டும் ‘‘அது தன் வரம்பை மீறி செயல்படுகிறதுஎன்று குறை காண்பதில் அர்த்தம் ஏதுமில்லை.நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்ப தானது நம்முடைய அரசியலமைப்புச் சட் டத்தின் மைய அம்சங்களுடன் இருக்கின்ற கண்ணிகளையே உடைத்தெறிந்துள்ளது. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி பாஜக நாடாளுமன்றத்தின் நடவடிக் கைகளை சீர்குலைத்ததன் மூலம், அர சாங்கம் மிகவும் வசதியாக மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தன்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொண்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்லது நிலக்கரிச் சுரங்கப் படுகைகளை ஒதுக்கீடுகள் செய்த தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பலவற்றில் முந்தைய தே.ஜ.கூட்டணி அரசாங்கமும் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்துள் ளது. ஊழல் புரிவதில் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் நடந்து கொண்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இது மிகவும் ஆழமான ஒரு விஷய மாகும். அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத் திற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பொது விவகாரங்களை மேலாண்மை செய்திட பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின் றன. இறுதி ஆய்வின்போது இரு தரப்பி னருமே மக்களுக்குப் பதில் சொல்லக் கட மைப்பட்டவர்களாவார்கள். உண்மையில் இவ்வாறு ஒருவருக்கொருவர் பதில் சொல் லக்கூடிய விதத்தில் ஆட்சி அமைப்புகள் வகுக்கப்பட்டிருப்பதுதான் ஜனநாயக அமைப்பினை மற்ற அமைப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவ்வாறு ஒருவர்க்கொருவர் பதில் கூறும் பொறுப் புக்கள் சிதைக்கப்பட்டிருப்பதைத்தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் திட் டக்கூறுகள் இவ்வாறு மோசமாகச் சிதைக் கப்படுவது உடனடியாகச் சரிசெய்யப்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத் திற்குப் பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள் வது தொடர்வது அனுமதிக்கப்பட முடியாத தாகும்.
இதற்கு நாடாளுமன்றம் முறையாக செயல்பட்டாக வேண்டும். இதற்கு எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது ராஜினாமா செய்துள்ள அமைச் சர்கள் நாடாளுமன்றம் நடைபெறும்போதே ராஜினாமா செய்திருந்தால், நாடாளுமன்றம் நடைபெறாமல் முடக்கப்பட்டதைத் தவிர்த் திருக்க முடியும். அதே சமயத்தில், எதிர்க்கட் சியினர் கோரும் எதார்த்தத்திற்கு ஒவ்வாத அநியாயமான கோரிக்கைகளுக்காகவும் நாடாளுமன்றம் முடக்கப்படுவதும் அனு மதிக்கப்பட முடியாததாகும். உண்மையில், ஓராண்டில் குறைந்தபட்சம் நூறு நாட் களாவது நாடாளுமன்றம் நடைபெற்றாக வேண்டும் என்கிற முறையில் நம் அரசி யலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்குரிய திருத்தத்தைக் கொண்டுவர ஆழமாக நாம் பரிசீலித்திட வேண்டும்.நாடாளுமன்றம் இவ்வாறு சீர்குலைக்கப் பட்டதன் விளைவாக, அரசாங்கமானது தன்னுடைய மிகவும் மோசமான மக்கள் விரோத பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் விவாதம் எதுவுமின்றியும் உறுப்பினர்களின் ஆட்சேபணை எதுவு மின்றியும் நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் பலவற்றை எழுப்பி, விவா தித்து, தீர்வு காண முடியவில்லை. மக்களின் வாழ்வாதாரங்களில் நேரடியாகச் சம்பந்தப் பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் னுடைய மாற்றுப் பாதைக்கான போர்முழக்கப் பயணத்தை மேற்கொண்டபோது முன் வைத்த கோரிக்கைகள் எதனையும் நாடாளு மன்றத்தில் எழுப்ப முடியவில்லை. முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு மகாராஷ் டிரம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங் களில் வறட்சி தாண்டவமாடக்கூடிய இன் றைய நிலையில் அங்குள்ள லட்சக்கணக் கான விவசாயிகள் வாழ்வாதாரங்களைத் தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ள கொடு மைகள் குறித்து எதுவும் நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியவில்லை. மிகவும் முக்கியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, தனி யார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி கள், ரயில்வே மற்றும் பொதுப் போக்கு வரத்துக்கு மானிய விலையில் அளிக்கப்பட்ட டீசல் விலையை ரத்து செய்ததன் மூலம் எழுந்துள்ள பிரச்சனைகள், சீட்டுநிதி நிறு வனங்கள் மற்றும் பல்வேறு சிறுநிதி நிறு வனங்களின் மோசடிகள், இவற்றால் லட் சக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டு, பலர் தற்கொலை புரிந்துகொண்டுள்ளமை, அயல் துறைக் கொள்கையிலும் அரசாங்கம் மேற் கொண்டுள்ள பல்வேறு குளறுபடிகள் - இப்படி எந்தப் பிரச்சனை குறித்தும் நாடாளு மன்றத்தின் முன்கொண்டுவந்து, தீர்வு காண முடியவில்லை.
நாட்டு மக்களின் பெரும்பான்மையான வர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தக் கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் முடிவு களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கக்கூடிய விதத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மன்றத்தின்முன் மிகவும் வலுவான முறையில் மக்கள் பிரச்சனைகளை எடுத் துச் செல்ல வேண்டிய நிலையில் இப்போது நாம் இருக்கிறோம். மே மாதத்தின் இறுதிப் பாதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலுக்கிணங்க நடைபெறவிருக் கும் நாடு தழுவிய அளவிலான வெகுஜன மறியல் போராட்டம், அத்தகைய மகத்தான மக்கள் போராட்டங்களின் அடையாளமாக அமைந்திட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: