Sunday, May 4, 2014

மாக்கியவெல்லியின் தந்திரம்!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
16வது மக்களவைக்கான தேர்தல் களில் மொத்தம் உள்ள 9 கட்டங்களில் ஏழு கட்டங்களுக்கான தேர்தல்கள் முடிவடைந்துவிட்டது. ஏழாவது கட்டத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங் கிரஸ் மிகவும் விரிவான அளவில் வன்முறையில் இறங்கி, வாக்குச் சாவடி களைக் கைப்பற்றி மோசடிகளில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மோசடி நடந்தவாக்குச்சாவடிகளில் மத்திய பாது காப்பு படையினரின் முறையான மேற்பார்வையுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறோம். தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுகளுக்காகக் காத்திருப்போம். அடுத்து, இன்னும் இரு கட்டத் தேர்தல்கள் நடைபெறவேண்டிய சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ்/பாஜக திட்டமிட்டமுறையில் மதவெறித் தீயை கிளறிவிடத் தொடங்கி இருக்கிறது.

இதற்குக் காரணம், மீதம் உள்ள இரு கட்டத் தேர்தல்களில் மிகப்பெரும்பாலான தொகுதிகள் உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் நடைபெறவிருக் கின்றன. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பக்கூடிய மாநிலங்களாக இவ்விரு மாநிலங்களும் விளங்குவதோடு, மதவெறி சக்திகளுக்கும் மிக முக்கியமான மாநிலங்களாக, அவற்றின் வலுவான அடித்தள மாக இவை விளங்குவதுமேயாகும். பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் விதத்தில் மதவெறித் தீ விசிறிவிடப் படுகிறது. பாஜகவின் பிரதமர் வேட் பாளரே மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் வங்கதேசவாசிகள் மே 16க்குப்பின் இந்தியாவைவிட்டு வெளியேற தங்கள் மூட்டை முடிச்சு களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்திருப்பதன் மூலம் இத்தகைய வாக்குவங்கி அரசியலுக்கு நெருப்பை வைத்துத் துவக்கி வைத் திருக்கிறார்.

கடந்த காலங்களிலும், அவர்கள் வங்க மொழி பேசும் மெய்யான இந்தியப் பிரஜைகளை, அதிலும் குறிப்பாக மேற்குவங்கத்திலிருந்து தில்லி, மும்பை போன்ற மாநகரங்களில் வந்து வசிப் போரைக் குறிவைத்து, துன்புறுத்தி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் இவ்வாறு கூறியிருப்பதானது, இந்துத்துவா வெறியர்கள் தங்கள் மத வெறித் தீயை நாடு முழுவதும் பற்ற வைத்து தங்கள் தாக்குதலைத் தொடுப் பதற்கான சமிக்ஞையே தவிரவேறல்ல. இதனைத் தொடர்ந்து ஆர் எஸ்எஸ் ஆக்டோபஸின் கொடுக்குகள் இந்த வேலையில் இறங்கியுள்ளன. குஜராத் மாடல் என்பதன் உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் தொகாடியாவின் பேச்சு அமைந்திருக்கிறது. குஜராத்தில் சில முஸ்லிம்கள் இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலம் வாங்கியதை மிகவும் கேவலமான முறையில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் பேசியிருக்கும் பேச் சானது, இன்றைய தினம் குஜராத்தில் இந் துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியே வாழக்கூடிய காலனிகளை உருவாக்கி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தை பிரிட்டி ஷார் பிரித்ததில் உத்வேகம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது குஜராத் மதரீதியாக, நாட்டின் பிரதமராக வரத்துடிக்கும் இன்றைய குஜராத் முதலமைச்சரால், மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பாஜக கூடாரத்திற்கு ஏதோ கொஞ்சம் தேர்தலில் ஆதாயம் கிடைத்திடலாம். ஆனால் அதற்காக நாட்டு மக்கள் இத்தனை ஆண்டு காலம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் அனைத்தையும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாஜக இரண்டகமான முறையில் பேசத்துவங்கியிருப்பதிலிருந்து இது தெளி வாகிவிட்டது. நாட்டில் எங்கேயெல்லாம் மதவெறித் தீயை விசிறி அதன்மூலம் தாங்கள் ஆதாயம் அடைய முடியாது என்ற நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக கூடாரம் தன்னுடைய உண்மை யான மதவெறி நிகழ்ச்சிநிரலை மூடி மறைத்து வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

இப்போது முதல் ஏழு கட்டங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மீதம் உள்ள இரு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தன் மதவெறிப் பற்களைக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ள பொரு ளாதார சுமைகளிலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களோ மக்களின் கவனத்தை இதிலிருந்து திசைதிருப்பும் நோக் கத்துடன், உணர்ச்சிபூர்வமான (sensational) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. `இளவரசர் தன்ஆட்சியை ஒருமுகப் படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்என்று மாக்கியவெல்லி அறி வுறுத்தினாரோ அதையெல்லாம் பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரம் மிக அற்புதமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு மோசமாக மக்களை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துங்கள். பின்னர் கொஞ்ச காலம் கழித்து அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மக்கள் உங்களையும், உங்கள் ஆட்சியையும் புகழத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் இதன்பொருள்.அதேபோன்று பாஜக சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக் களை’’ தங்கள் தலைவர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடும். பின்னர் அதனை சமாதானப்படுத்தக்கூடிய விதத்தில் அதன் `வல்லுநர்கள்பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை 41 மற்றும் 42ஆம் பக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்றும் அதற்கு அது அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பூசி மெழுகுவார்கள்.அடுத்த இரு கட்டத் தேர்தல் களின்போதும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் ஒரு பக்கத்தில் ஹிட்லரின் பாசிச பாணி பிரச்சார முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடிய அதே சமயத் தில், மறுபக்கத்தில் இத்தகைய மாக்கிய வெல்லி தந்திரத்தையும் கையாளும் என்பது தெளிவாகி இருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியக் குடியரசை, வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட் ரமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் மிக ஆபத்தான நிகழ்ச்சிநிரல் இது. இத்தகையதொரு நிகழ்ச்சிநிரல் வெற்றி பெற அனுமதித்தோமானால், பின், நாடு இன்றுள்ளதுபோல் இருக்காது. எண்ணற்றோர் உயிரிழக்க வேண்டி யிருக்கும், இதுநாள் வரை ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடலுக்குள் மதவெறி விஷம் ஏற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் கடித்துக் குதறி உயிர் துறக்க வேண்டிய கொடூரம் நிகழும்.

இந்தியா இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த நாகரீக சமுதாயம் தடம்மாறி நிலை குலைந்து நின்றுவிடும். எனவே, நடைபெறும் தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை, மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய விதத்தில் அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். அதுதான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சிறந்ததோர் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டி எழுப்புவதற்கும் உதவிடும்.

தமிழில்: ச.வீரமணி


No comments: